சேதுபாவா சத்திரத்தில் உள்ள விசாலாட்சி சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதர் ஆலயம் அருகில் மிகப்பழமையான பெரிய வளாகத்துடன் உள்ள அன்ன சத்திரம் வேதணையான நிலையில் உள்ளது. கருவரையில் ஜெயவீர ஆஞ்சனேயருடன் ஆலயம் ஒன்றும் சிதைந்து சிர் செய்ய வேண்டிய நிலையில் காணப்படுகிறது.
இது பெரிய சத்திரமாக இருந்ததாகவும், இதன் காலத்தில் மிகச்சிறப்பாக பராமரிக்கப்பட்டு பத்தர்கள் தங்கி செல்ல வசதியாக அன்னதான சத்திரமாக இருந்ததாகவும் வரலாறு. 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தானமாக பிரதாப் சிம்ம மகராஜா கொடுத்ததாகவும், அதைக் கொண்டு ஸ்ரீ சேதுபாவா சுவாமிகள் ராமேஸ்வரம் செல்லும் பக்தர்கள் தங்கி செல்ல நித்ய அன்னதானம் செய்து வந்த வரலாறும், உள்ளது. வருமாணம் கொண்டு, அன்னதானமும், ஆலய பராமரிப்பும், ஆலய விழாக்களும் நடைபெற்று வந்ததாகவும் குறிப்புகள் உள்ளன. 1739 ம் ஆண்டு முதல் 1949 வரை சுற்றிலும் உள்ள பல்வேறு கிராமங்களிலிருந்தும் பிற இடங்களில் இருந்தும் நெல் வருவாய் பெற்று சீரோடு விளங்கியதற்கு குறிப்புகள், இதற்கான ஆவனங்கள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இருக்கின்றன என்ற குறிப்புகள் ஆலயத்தில் காணப்பெறுகிறது.
பெரிய வளாகம் நான்கு புறமும் மண்டபம் நடுவில் சிறிய கருவரை கிழக்கு நோக்கியது அதில் வீர ஆஞ்சநேயர் உள்ளார்
ஆலயமுன்புறமும் மன்டபம் கலை நுட்பத்துடன் வாசல் அமைப்புடன் அமைந்த தூன்கள் சிதைவுற்று உள்ளது.
12.04.2026
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
ECR - தலங்கள் - பேராவூரணி அருகில்
No comments:
Post a Comment