விளங்குளம் அட்சயபுரீசுவரர் கோயில் என்பது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.
அமைவிடம் ⛳
இக்கோயில் ECR சாலையில் சேதுபாவா சத்திரம் அடுத்து கட்டுமாவடிக்குமுன்னதாக பிரதான சாலைக்கு மேற்கில் 2 கிமீ தூரத்தில் உள்ளது.
பேராவூரணிக்கு தென் கிழக்கில் 12 கி. மீ. தொலைவில் உள்ளது.
💥ஆலய சிறப்பு
விளா மரங்கள் அதிகம் காணப்பட்டதால் இவ்வூர் விளாங்குளம் என்றழைக்கப்படுகிறது.
இறைவன், இறைவி
திருவிளாமுடைய தம்பிரான் என்றும் அட்சயபுரீசுவரர் என்றும் இறைவன் அழைக்கப்படுகிறார். குறையாத செல்வத்தை அருளச் செய்கின்ற இறைவனோடு மென்மேலும் பெருக வைக்கின்ற அபிவிருத்திநாயகி என்ற பெயரில் இறைவி உள்ளார்
📚தல வரலாறு
சூரியனின் இரு மகன்களான சனீச்சுரனுக்கும், எமதருமனுக்கும் இடையே ஏற்பட்ட பகையின் காரணமாக சனீசுவரனை எமன் அடிக்கவே, எமனின் காலில் ஊனம் ஏற்பட்டது. இதனால் சனீசுவரன் மனித உருவெடுத்து பிச்சையெடுக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது இப்பகுதியைக் கடந்து சென்றார். ஒரு விளாமரத்தின் வேர் இடறியது. அப்போது ஒரு பள்ளத்தில் விழுந்தார். அவர் விழுந்த நாள் சித்திரை வளர்பிறை, பூசம் நட்சத்திரம், சனிக்கிழமை அனைத்தும் ஒன்று சேர்ந்த நாளாக அமைந்தது. சனீசுவரன் விழுந்த பள்ளம் பூசஞானவாவி என்னும் புனித தீர்த்தமானது. இறைவன் அருளால் கால் ஊனம் நீங்கியது.
ஆலய அமைப்பு:🛕
கிழக்கு நோக்கிய ஆலயம்
மூன்று நிலை ராஜகோபுரம் கடந்து உள்ளே நந்தி தனி மன்டபத்தில் ஆலயம் நோக்கியுள்ளார்.
சுவாமி அட்சயபுரீஸ்வரர், அர்த்தமண்டபம் உள்மன்டபம் மற்றும் கிழக்குநோக்கிய கருவரையில் அருள் பாலிக்கிறார்.
அம்பாள் அபிவிருத்தி நாயகி வெளி மண்டபத்தில் தனி கருவரையுடன் தெற்குப்பார்த்த சன்னதியில் உள்ளார்.
மிகவும் பழமையான கற்றளி அமைப்பில் ஆலயம் உள்ளது.
ஏகப்பிரகாரம் கோஷ்ட்டத்தில் நர்த்தன விநாயகர் தட்சினாமூர்த்தி உள்ளனர்
கன்னிமூலையில் தனி விநாயகர் சிற்றாலயம் மேற்கு கோஷ்ட்டத்தில் லிங்கோத்பவர்
வள்ளி தெய்வாணையுடன் முருகர் தனி சிற்றாலயம் வடமேற்கில்
வடக்கு கோஷ்ட்டத்தில் பிரும்மா, துர்க்கை மற்றும் தனி சண்டிகேஸ்வரர் சன்னதியும் உள்ளன.
வடகிழக்கு மூலையில் பைரவர் ஸூரியன் சன்னதிகள் உள்ளன.
சனிபகவான் தனது துணைவியர் இருவருடனும் தெற்கு நோக்கிய அமைப்பில் தனி சிற்றாலயமாக உள்ளது இவ்வாலயத்தின் சிறப்பு
மகாலெட்சுமி ஆலய முன் பகுதியில் வைத்து உள்ளனர்
வண்ணி மரம்தென்கிழக்கில் அமைந்துள்ளது.
தென் பிரகாரத்தின் அம்மன் நேர் எதிர் ஞானவாவி தீர்த்த குளம் செல்ல வாயில் உள்ளது.
தீர்த்தம் குளம் மிகவும் புனிதமானது சனி கீர்த்தி பெற்றதாக ஐதீகம்.
இக்குளம் ஆலயத்தின் தென்பகுதியில் உள்ளது.
திருவிழாக்கள்
அட்சய திருதியை இக்கோயிலில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பூச நட்சத்திர நாள்கள் சிறப்பு பெற்ற நாளாக இக்கோயிலில் அமைகின்றன.
#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
#சுப்ராம்🔱🇮🇳
ஆலயம் பராமரிப்பில் உள்ளது. சனிக்கிழமை மற்றும் விஷேச நாட்களில் பக்தர்கள் வருகை மிகவும் அதிகம்
ஆலயம் முன்புறம் நிறைய இடம் உள்ளது வாகனங்கள் நிறுத்தலாம்.
குளமும் சுற்றி மரங்களும் உள்ளதால் குளுமையாக உள்ளது.
மிகப்பழமையான புகழ்பெற்ற ஆலயம் புனரமைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது
பூசை காலங்களில் அன்றி சாதாரன நாட்களில் முன் தகவல் கொடுத்து ஆலயம் தரிசிக்கலாம்.
கிராமத்தின் தனி பகுதியில் இருப்பதால் அருகில் வீடுகள், கடைகள் எதுவும் கிடையாது.
தென் தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த பூச நட்சத்திர பரிகார தலமாக மிகவும் பிரபலமாக விளங்குகிறது இவ்வாலயம்
12.04.2026 சுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#ECRதலங்கள் - #பேராவூரணிஅருகில்
No comments:
Post a Comment