ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ சுயம்பு லிங்க சோமநாத சுவாமி ஆலயம்
அமைவிடம்⛳
இக்கோயில் ECR சாலையில் சேதுபாவா சத்திரம் அடுத்து கட்டுமாவடிக்கு முன்னதாக பிரதான சாலைக்கு மேற்கில் 2 கிமீ தூரத்தில் உள்ளது. புகழ்பெற்ற சிவஸ்தலம் விளாங்குளம் அருகில் உள்ளது.
(2) தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியிலிருந்து தென்கிழக்கே ரெட்டவயல் என்னுமிடத்தின் வழியாக வர வேண்டும் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
⭐மூலவர் சிறப்பு
தாமரைத்தண்டு லிங்கம்
#பெருமகளூர் #ஸ்ரீசோமநாதர்
அதிபழமை வாய்ந்த மிகவும் அற்புத சக்திகள் வாய்ந்த ஸ்ரீ சோமநாதர் ஆலயம்.
இங்கு அருளாட்சி புரியும் ஸ்ரீசோமநாதரின் சிவலிங்கம் கல்லால் அமையப் பெறவில்லை. தாமரைத் தோண்டினால் ஆன சிவலிங்கம் இது. பாணலிங்கமே தாமரைத் ' தண்டினால் வடிக்கப்பெற்ற இத்தகைய அபூர்வமான சிவலிங்கத்தைப் போல் இப்புவியில் எங்கும் காண இயலாது.
இக்கோயிலில் மூலவர் விடங்க வடிவாக உள்ளார். ’விடங்கன்’ என்றால் சிற்பியால் உளி கொண்டு செதுக்கப்படாத வடிவமாகும். உளிபடாத மூர்த்தியை சுயம்புலிங்க மூர்த்தி என்றழைப்பர். இக்கோயிலில் மூலவராய் உள்ள சோமநாத சுவாமி தாமரைத்தண்டாக இருந்து இறைவனாக மாறியவர் என்பது தொன் நம்பிக்கை.
ஆலய அமைப்பு⛳
முன்பு இருந்த பழமையான ஆலயம் முற்றிலும் புதிய ஆலயமாக பொலிவுடன் தற்போது விளங்குகிறது.
கிழக்கு நோக்கிய ஆலயம் காட்சி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
உள்ளே பலி பீடம் அடுத்து சிறிய நந்தி தனி மன்டபத்தில் உள்ளார்.
சுவாமி கிழக்கு நோக்கிய கருவரையிலும் அம்பாள் தெற்கு நோக்கிய கருவரையிலும உள்ளனர். முன்புறம் பெரிய மண்டபம் ஆலயம் இணைக்கப்பட்டுள்ளது.
மண்டபத்தின் இரு பகுதிகளிலும் பழைய ஆலயத்தில் இருந்த சிறிய சுவாமிகளை அமைத்துள்ளனர்.
சுவாமி கருவரை வாசல் முன்பு சிறிய நந்தி மற்றும் இருபுறமும் விநாயகர் தண்டபாணி சிறிய உருவம் வைத்துள்ளனர்.
பிரகாரங்களின் இருபுறமும் Shed போடப்பட்டுள்ளது
நால்வர் மற்றும் கிழக்குப் பார்த்த தனி விநாயகர் சன்னதியும் உள்ளது
சுவாமி கருவரை கோஷ்ட்டத்தில் தட்சிணாமூர்த்தி லிங்க மூர்த்தி பிரும்மா, துர்க்கை மற்றும் தனி சன்னதி சண்டிகேஸ்வரர் அமைந்துள்ளனர்.
மேற்கு பிரகாரத்தில் தனி மண்டபத்தில் நந்தியுடன் பெரியலிங்கம் ஒன்றும், அம்பாள் ஒன்றும் உள்ளது. பழைய ஆலயத்தில் இருந்து எடுக்கப்பட்டு தற்போது இங்கு வைத்திருக்க வேண்டும்.
வடமேற்கில் முருகன் வள்ளி தெய்வானையுடன் தனி சன்னதியில் உள்ளார்.
வடக்குபிரகாரத்தில் சுவாமி உற்சவ வாகனங்கள் வைக்கப்பட்டுள்ளது
வைக்கப்பட்டு உள்ளன.
வடகிழக்கில் கிழக்கு நோக்கி தனி மகாலெட்சுமி சன்னதியும் முன்புறம் வன்னி மரமும் அமைக்கப்பட்டுள்ளது.
தெற்கு நோக்கி சிறிய சனீஸ்வரர் துணையுடன் தனி சன்னதி அமைத்துள்ளனர்.
நவகிரகங்கள் தனி மண்டபம் மற்றும் பைரவர், சூரியன் உள்ளனர்.
புராதான தலம் புனரமைக்கப்பட்டு விட்டது
கல்வெட்டு
இக்கோயிலில், தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய மன்னரான பிரதாபசிம்மன் காலத்தில் கொடை அளித்த செய்தியைக் கொண்ட மராத்திய மொழி மற்றும் மோடி எழுத்தில் அமைந்த கல்வெட்டு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மற்றொரு சிறப்பு
இக்கோயிலின் தென் பிரகாரத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தென்னங்கன்றை பயிரிட நட்டுவைத்தனர். கன்று வளரத்தொடங்கியது. பின்னர், சில மாதங்களில் அதே இடத்தில் இன்னொரு கன்று பூமிக்கு மேல் துளிர்த்து வளரத் தொடங்கியது. சில மாதங்கள் கடந்ததும் மேலும் ஒரு தென்னங்கன்று அதே இடத்தில் வளரத்தொடங்கியது. இவ்வாறாக அங்கு ஒரே இடத்தில் ஐந்து தென்னை மரங்கள் ஒரே இடத்தில் வளர்கின்றன.
கோயில் வளாகத்தின் பின்புறம் ஒரு விநாயகர் கோயிலும், பிடாரி கோயிலும் உள்ளன.
#பயணஅனுபக்குறிப்புகள் 🕊️
#சுப்ராம்🔱🇮🇳
ஆலயம் பராமரிப்பில் உள்ளது. எப்போதும் திறந்து இருக்கும் என்று கூறுகிறார்கள்
ஆலயம் முன்புறம் வாகனங்கள் நிறுத்தலாம்.
பெரிய குளம் ஒன்று உள்ளது.
மிகப்பழமையான புகழ்பெற்ற ஆலயம் புனரமைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது
பூசை காலங்களில் மட்டுமின்றி சாதாரன நாட்களில் எப்போதும் தரிசிக்கலாம்
மிகச்சிறிய சிற்றூர் அதிக கடைகள் வீடுகள் ஆலயம் அருகில் ஏதும் இல்லை.
12.04.2026 சுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#ECRதலங்கள் - #பேராவூரணிஅருகில்
No comments:
Post a Comment