பேராவூரணி நகருக்கு கிழக்கில் சுமார் 2 கி.மி. தூரத்தில் உள்ள ஆத்தாளூர் என்ற ஊரில் உள்ள பிரபலமான காளியம்மன் ஆலயத்துடன் இணைந்த ஆலயம்
ஆலய அமைப்பு🛕
கிழக்குப்பார்த்த ஆலய அமைப்பு இராஐகோபுரம் கிடையாது. சுற்றுச்சுவர் உள்ளது.
உள்ளே நந்தி மன்டபத்தில் ஆலயம் நோக்கியுள்ளார். முன்மண்டப முகவாசல் மேல் பகுதியில் காட்சி நாயனார் சுதை சிற்பம் உள்ளது.
சுவாமி திருக்காளநாதர் கிழக்கு நோக்கி உள்ளார். கருவரை அர்த்த மண்டபம் உள் மண்டபம் முன் மண்டபத்துடன் உள்ளது.
தெற்கு நோக்கிய தனி கருவரையில் ஸ்ரீ பிரகன்நாயகி உள்ளார்
முன்மன்டபத்தின் தென்புறம் உள்ள வாசல் வழியாக ஆலய பிரகாரம் செல்லலாம்
தென் பகுதி கோஷ்ட்டத்தில் சிறிய அழகிய நர்த்தன விநாயகர் சிற்பமாக உள்ளார்.
தட்சினாமூர்த்திக்கு முன் முகப்பு மாடம் அமைக்கப்பட்டுள்ளது.
தனிவிநாயகர் கன்னி மூலையில், மேற்கு கோஷ்ட்டத்தில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மர் துர்க்கை அமைக்கப்பட்டுள்ளது
வடமேற்கில் வள்ளி தெய்வாணையுடன் முருகர் தனி சன்னதி மற்றும் மகாலட்சுமி உள்ளனர்
கிழக்கில் பைரவர், மற்றும் நவகிரகங்கள் மண்டபத்துடன் அமைந்துள்ளது.
வரிசையாக சில நாகர்கள் ஆலயம் உள்ளே வைத்துள்ளனர்
பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
ஆத்தாளூரில் உள்ள புகழ்பெற்ற காளியம்மன் ஆலயம் முன்புறம் ஒரு பெரிய குளம் உள்ளது. கிழக்குப்பகுதியில் இந்த சிவன் ஆலயம் உள்ளது. இரண்டுக்கும் ஒரே குருக்கள் ஆலயம் தூய்மையுடன் பராமரிப்பில் உள்ளது.
வாகனங்கள் நிறுத்த வசதி உள்ளது.
அருகில் பெரிய கடைகள் ஏதும் இல்லை.
சிற்றூர் என்பதால் நெருக்கடிகள் இல்லை பெரியவளாகம் மரங்கள் உள்ளது. அமைதியான இடமாக உள்ளது
12.04.2026 சுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#ECRதலங்கள் - #பேராவூரணிஅருகில்
No comments:
Post a Comment