Wednesday, July 3, 2024

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13
நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம்
Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms. 
9 - 10 hrs.
நாள் - 7
01.06.24 - சனி
காலை 6.30 காலை டீ, மற்றும்  குன்ஞ்ஜியில் KMVN  Camp ல் காலை டீ, காலை உணவு முடித்து, Bolero Camper ஜீப் மூலம் புறப்படுதல்.

 வழியில் நபி, Kutti, கிராமங்கள் கடந்து, பிரம்மபர்வத் தரிசனம் அங்கிருந்து,
ஜியோலிங்காங் சென்று ஆதிகைலாஷ், பார்வதி சரோவர், பார்வதி முகுட்,  பாண்டவர் பர்வத்,
கெளரி குண்ட், 
தரிசனம் செய்து
Jyolingkong (ஜியோலிங்காங்)  KMVN yatra Campல்  மதிய உணவு.

மாலை 5.00  திரும்பி வந்து #BUDHI  #புந்தி  KMVN Yatra Camp வந்து இரவு தங்குதல்.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

காலை 7.00 மணிக்கு ஜீப்பில் புறப்பட்டு வழியில்  நபி - மலைகிராமம், அடுத்து குட்டி
Kutti. 
இதுவே, இந்தியாவின் கடைசி கிராமம் என்று குறிப்பிடப்படுகிறது.
இங்கு Indo-Tibetian Border Security  Police Camp உள்ளது
நம்முடைய  Permit Checking இங்கு உண்டு.

பிரம்மபர்வத் ( மலை சிகரம்) தரிசனம் பிரதான சாலையில் செல்லும்போது, நின்று தரிசனம் செய்கிறார்கள்.

ஜியோலிங்காங்.

இந்த இடமே பாரத எல்லையில் கடைசிப்பகுதியாகும்.

🌟இந்துக்களுக்குப் புனிதமான,
கௌரி குண்ட் (ஜோலிங்காங் ஏரி) மற்றும் பார்வதிதால் பனிப்பாறை ஏரிகள் ஆதி பர்வத்தின் அடிவாரத்தில் உள்ளன. 

🏝️பல வழிகளில் திபெத்தில் உள்ள கைலாஷ் மலையின் பிரதியாகும்,
குறிப்பாக தோற்றத்தில். 

🇮🇳ஆதி-கைலாஷ், இந்தோ-திபெத்திய எல்லைக்கு அருகில் உள்ள இந்தியப் பகுதியில் உள்ளது, 

🏝️இது இயற்கை அழகு, அமைதி மற்றும் அமைதியின் ஒரு பகுதியாகும். நகர்ப்புற வாழ்க்கையின் இடைவிடா பிரச்சனைகளில்,  சோர்வடைந்த ஆண்களும் பெண்களும் இங்கே ஒரு குணப்படுத்தும் அமைதியைக் காண்பார்கள்.

💥உள்நோக்கிப் பார்ப்பதற்கும் ஒருவரின் உள்நிலையுடன் உரையாடுவதற்கும் உகந்தது. 

💧கைலாஷ் மலையின் அடிவாரத்தில் கௌரி குண்ட் உள்ளது, அதன் நீர் மலையையே பிரதிபலிக்கிறது. 

🏞️அருகில் பார்வதி சரோவர் உள்ளது, 
இது 'மானசரோவர்' என்றும் அழைக்கப்படுகிறது,  சரோவரின் கரையின் மீது உள்ளூர் மக்கள் சிவன் மற்றும் மாதா பார்வதியின் கோவிலைக் கட்டியுள்ளனர். 

🌼சீனர்கள் திபெத்தை ஆக்கிரமித்த பிறகு, குஞ்சியில் உள்ள இந்திய சாதுக்கள் அல்லது யாத்ரீகர்கள் இங்கு சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்து, இந்த புனித மலையை தரிசனம் செய்வதற்காக 14,364 அடிக்கு மேல் உயரத்தில் உள்ள குட்டியைத் தொடர்ந்து ஜியோலிங்காங்கிற்குச் சென்றனர்.

🌟ஆதி கைலாஷ் அல்லது சிவ கைலாஷ் ஓம் பர்வத்திலிருந்து வேறுபட்ட திசையில் அமைந்துள்ளது. ஆதி கைலாஷ் சின் லா கணவாய்க்கு அருகில் மற்றும் பிரம்ம பர்வத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

 🌼ஆதி கைலாஷின் அடிப்படை முகாம் குத்தி பள்ளத்தாக்கில் உள்ள குத்தி (குடி) கிராமத்திலிருந்து 17 கி.மீ தொலைவில் புனித ஜோலிங்காங். உலகெங்கிலும், இமயமலையின் உத்தரகாண்ட் பகுதி மட்டுமே பாரம்பரியமாக ஆன்மீக விழிப்புணர்வைத் தேடி மனிதகுலத்தை ஈர்த்தது. உள்ளது.

🌼 ஆதிகைலாஷ் மலையை ஜோங்லிங்கோங் கொடுமுடி என்றும் அழைப்பர்.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

💥ஜியோலிங்காங்  (4630 mts.)
சென்று ஆதிகைலாஷ், சென்ற பிறகு  பார்வதி சரோவர், பார்வதி முகுட், கெளரி குண்ட்,  பாண்டவர் பர்வத் தரிசனம் செய்ய குதிரைகள் ரூ 3000/- வாடகைக்குக் கிடைக்கின்றன. வயதானவர்கள், நேரம் குறைவாக இருக்கும் சூழல் பொறுத்து குதிரையில் சென்று வரலாம்.

💥பார்வதி சரோவர் 3 கி.மீ தூரம் ஒரு பக்கமும், வேறுபுறம் 3 கி.மீ. கெளரி குண்ட் செல்ல வேண்டும். குதிரையில் சென்றால், இரண்டு இடங்களையும் விரைவாக தரிசனம் செய்து விடலாம்.

💥பார்வதி சரோவர் வரை நடந்து சென்று, அங்கு சிறிய முன்மண்டபத்துடன் கூடிய கருவரையில் சுவாமி அம்பாள் சிலை வைத்து பூசை செய்கிறார்கள்.

💥 தரிசனம் செய்து பின் திரும்ப வந்து, ஒரு மலை குன்று கடந்து ஆதிகைலாஷ் முன்பு உள்ள கெளரி குண்ட் அருகில் உள்ள சிறு ஆலயம் (லிங்கம் + சூலம்) உள்ள இடம் வரை சென்று திரும்புகிறார்கள். 

💥நாங்கள் இவ்வாறு மலையில் நடந்து சென்று, குன்றின் மீது ஏரி கெளரி குண்ட் ஆலயம் அடைந்தோம். சிலர் குதிரையில் சென்று தரிசித்து வருகிறார்கள்.

💥குதிரையில் செல்பவர்கள் கௌரி குண்ட் வரை சென்று திரும்புகிறார்கள்.
இந்த இடங்களில் தட்ப வெட்ப நிலைக்கு தக்கவாறு மட்டுமே  செல்ல அனுமதிக்கின்றனர்.

🌼இங்கும் Indo-Tibetian Border Security  Police Camp உள்ளது

💥நாங்கள் ஜியோலிங்காங் ஜீப்பில் சென்று இறங்கியதும், அங்கிருந்தே Chota Kailash என்ற அந்த இடத்தில் வெளிமாநிலத்தில் இருந்து வந்த இந்து சாது ஒருவரின் அமைப்பை சார்ந்தவர்களால்,  இலவச குடிநீர் - Tea Bisaits- Snakes வழங்கப்பட்டு வருகிறது. அங்கு கொடுத்த Snaks மற்றும் Tea குடித்தோம்.
🛐நாங்கள் இந்த இடங்களுக்கு சென்று வந்த போது, மிக அருமையான வானிலை இருந்ததால், தரிசனம் மிகவும் நன்றாக அமைந்தது, இறைவனின் பேராற்றலே.

💥அந்த இடம் எங்கள் Camp Room உள்ள இடத்திலிருந்து 50 மீட்டர் உள்ளே இருந்தது. இங்கிருந்து இரண்டு இடங்களையும் காணலாம். பொதுவாக இந்த இடங்கள், வெட்டவெளியாகும். மனிதர்கள் தொடர்ந்து வசிக்கவில்லை. மழை குளிர்காலத்தில் கீழே இறங்கி விட வேண்டும். ராணுவ பிரிவு ஜவான்கள் மட்டுமே இங்கே தொடர்ந்து காவல் பணியில் உள்ளார்கள்.

💥பெரிய அளவில்  எந்தவித கட்டிங்களும் கிடையாது. ITBP Camp மற்றும் KVMN ன் Rest house மற்றும் Camp Tent மட்டும் உள்ளது.

💥நாங்கள் இங்குள்ள, ஆதிகைலாஷ், பார்வதி சரோவர், பார்வதி முகுட், கெளரி குண்ட்,  பாண்டவர் பர்வத் முதலிய இடங்களை சென்று நன்றாக, தரிசித்த பிறகு, ஜியோலிங்காங் பகுதியில் அனைவரும் இந்த யாத்தரா ஏற்பாட்டாளரும், SUJANA TOUR Admin ஆகிய,  எங்கள் பாசத்துக்குரிய பாலு அண்ணா என்ற S.R.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பூசைவழிபாட்டில் ஒருங்கிணைந்து கலந்து கொண்டு உண்மையான வழிபாட்டை செய்து கொண்டோம். இதற்கென பூசைப்பொருட்கள் முன்னதாக ஏற்பாடுகள் செய்து எடுத்து சென்றிருந்தோம். 

💥இதற்கு பின், KMVN Camp சென்று மதிய உணவு உட்கொண்டு புந்தி புறப்பட்டோம்.
நன்றி🙏🏻
🛐💚🤎💜❤️💙
பயணம் தொடருகிறது...... .....
#Uttarakhand   #ADIKAILASH  #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ்  #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை 
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻

பதிவு - 12 ஓம்பர்வத் தரிசனம் நாள் - 6 குன்ஞ்ஜி - நாபிடாங் - குன்ஞ்சி

பதிவு - 12
#ஓம்பர்வத் தரிசனம்
 0m Parvat  செல்லும் வழியில் உள்ள சில முக்கிய இடங்கள் குறித்து முன்பதிவில் குறிப்பிட்டோம். 

இந்த பதிவில், இந்திய எல்லையின், கடைசி இடமாகிய நபிடாங் மற்றும் OMPARVAT தரிசனம் மற்ற அனுபவங்கள்.

நாள் - 6 குன்ஞ்ஜி - நாபிடாங் - குன்ஞ்சி
22 + 22 Kms. 6-7 hrs.
31.05.24- வெள்ளி

காலை 7.00 - குன்ஞ்ஜியில் காலை உணவு முடித்து, Bolero/Camper மூலம் புறப்பாடு.
நபிடாங் (4266 mts.)  சென்று ஓம்பர்வத்  தரிசனம்.
மதியம் 12.00 உணவு நபிடாங் 

மாலை - 4.00 மாலை டீ, இரவு உணவு & இரவு தங்குதல் at
KMVN  Yatra Campaign in Gunji.

நாள் - 6
இந்த பயணத்தின் முக்கிய நாள். இன்று ஓம் பர்வத், தரிசனம்.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🛐குன்ஞ்ஜியிலிருந்து, காலை 7 மணிக்குள் காலை உணவு முடித்துக் கொண்டு அவரவர் ஜீப்பில் கிளம்பினோம். நல்ல பருவநிலை. வெய்யில் இருந்தாலும், இமயமலையின் குளிர் காற்று வீசிக் கொண்டு இருந்ததால், Swetter, மற்றும் கம்பளி உடைகளுடனும் Shoeம் அனிந்து இருந்தோம்.  மேலே செல்ல செல்ல குளிர் இருந்தாலும், இறையருள் துணையிருந்ததால், அருமையான வெய்யிலும், Clear Blue Sky ஆக அமைந்து இருந்ததால், பயணம் மிகச்சிறப்பாக அமைந்தது.

🛐குன்ஞ்ஜி பள்ளத்தாக்கிலிருந்து மெல்ல உயரம் சென்றோம். சில இடங்கள் சாலை மிக நன்றாகவும், சில இடங்கள் மிக மிக மோசமாகவும் இருந்தது.  சாலைப்பணி வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது.

🕉️குன்ஞ்ஜியிலிருந்து நடைபாதையாக மட்டுமே இருந்த மலைப் பாதையை, அரசாங்கம், BRO மூலம் சிறிது சிறிதாக மலைக்கற்களை வெட்டி அகற்றியும், மன் சரிவுகளை கெட்டிப்படுத்தியும், தற்போது Bolero /Camper /ஜீப் செல்லும் வழியாக்கி சவால் நிறைந்த பணியை மிகச் சிறப்பாக செய்து வருகிறார்கள். மிகவும் போற்றத்தக்க காரியங்கள்.

💥வழியில் இரு இடங்களில் INNER PERMIT Check செய்து பயணம் தொடர அனுமதி தருகிறார்கள்.

 🕉️ஒரு புறம் காளி நதி நம்மோடு கூட வந்து கொண்டே இருக்கிறது. காளி என்ற சாரதா நதி பாரதத்திற்கும், நேப்பாள நாட்டிற்கும் எல்லைப்பகுதியாக உள்ளது.

🕉️செல்லும் வழியிலேயே கனேஷ்பர்வத்,ஷீஷ் நாக் பர்வத் என்ற நாகபர்வத், காலபாணி, வியாசர் குகை  இருந்தாலும், OM Parvat தரிசித்துப் பிறகு திரும்ப வரும் போது காளி ஆலயம் தரிசித்தோம். 

🕉️நபிடாங் அருகில் உள்ள 0m Parvat View point சென்றோம். ஒரு தனியார் Tent Shop ல், Tea, சமோசா சாப்பிட்டோம். சிறிய கடையில் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்கிறார்கள்.
வேறு மக்கள் வசிப்பிடங்கள் அருகில் எங்கும் கிடையாது. தற்காலிக வசிப்பிடங்கள் தான் ஒன்றிரண்டு உள்ளன. பருவநிலை மாறியதும், கீழே வந்து விடுகிறார்கள். 

🕉️அருகில் சில தங்கும் இடங்கள் உள்ளன. எங்களைப் போன்று ஒம்பர்வத் யாத்தாரா, சில தனியார் அமைப்பின் மூலம், சுற்றுலா வந்து இருந்தனர், தனி நபர்கள், இருசக்கர வாகனம் மூலம் இங்கெல்லாம் வந்து தரிசனம் செய்கிறார்கள்.

🕉️ நபிதாஸ் பகுதியில், ஓம்பர்வத் மலைக்காட்சி மிகவும் அற்புதமாகத் தெரிந்தது.  நல்ல கால சூழல் இருந்ததால், எல்லோரும் மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் பிரார்த்தனை செய்து நல்ல தரிசனம் செய்தோம்.

🕉️நபிதாங் என்ற இடம், மலைகளுக்கு இடையில் ஒரு திருப்பமான இடத்தில் உள்ள பகுதியாக இருக்கிறது.
பாதை மேற்கிலிருந்து கிழக்கு சென்று வளைந்து வடக்கில் திரும்புகிறது. இந்த முனையில் இருந்து om Parvat தரிசனம் காணலாம்.
🕉️கிழக்குப் புறத்தில் ஓம்பர்வத்மலை சிகரம் இந்திய பகுதியில் இருந்துப் பார்த்தால் இந்தி எழுத்து ஓம் போன்று மிக அற்புதமாகத் தெரிகிறது.

🕉️எதிர்புறமலையின் அடுத்த பகுதி நேப்பாள் நாட்டிற்கு சொந்தம் என்று கூறுகிறார்கள். அங்கிருந்து பார்த்தால் சாதாரண உயரமான மலையாக மட்டுமே காட்சியளிக்கிறது.

🕉️இந்த இடம், பாரதம், நேப்பாள், திபெத் மூன்றுக்கும் இடையில் எல்லைப்பகுதியாக உள்ளது.

🛐#நபிதாங்

🗻கைலாஷ் - மாசைரோவர் பயண சாலையில், இந்தியா பகுதியின் கடைசி Camp உள்ள நபிதாங் சென்றோம்.

🏔️வடக்கில், நபி பர்வத் என்ற மலை சிகரம் தெரிகிறது. முன்புறம் உள்ள இந்த கனவாய் பாதை வழியே சென்று, இந்த மலையைக் கடந்தால், திபெத்தில் உள்ள தார்ச்சன் - புறாங் என்ற நகர்  வந்துவிடும். அங்கிருந்து, மானசரோவர் ஏரியும் கைலாச மலையின் தென்புறம் சென்று அடையலாம்.

🗻பாரதப் பகுதியில் உள்ள நபியாங், நேப்பாள் பகுதியில் உள்ள ஹில்சா,  திபெத் பகுதியில் உள்ள தக்லாகோட் என்ற புறாங் இந்த மூன்று இடங்களும்  ஒரு Triangle போல உள்ளன. இயற்கையான மலைகளால் பிரிக்கப்பட்டுள்ளது.

🏔️நாங்கள், 2018 ல் கைலாச யாத்திரையில் நேப்பாளின் சிமிகோட் பகுதி வந்து, அங்கியிருந்து மேற்கில் சிறிய ஹெலிகாப்டர் மூலம் 
எல்லாப் பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட ஒரு பள்ளத்தாக்கில் உள்ள  சிறிய பகுதியான ஹில்சா என்ற இடம் வந்து அங்குள்ள நதியைக் கடந்து திபெத் பகுதிக்கு வந்து, தக்லாகோட் - தார்ச்சன் அடைந்து கைலாஷ் அடைந்தோம்.

🗻 திபெத் தனித்துவும் பெற்று விட்டால்,  நாம் வாகனத்திலேயே நபியாங் கனவாய் வழிப்பாதையிலேயே, தக்லா கோட் - தார்ச்சன் சென்று பின், மானசரோவர், மற்றும், கைலாயம் சென்று தரிசித்து வரும் காலம் விரைவில் வந்து விடும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. திபெத் - சீனா அரசியல் சூழல் தற்போது உலக நாடுகள் பக்கம் கவனம் பெற்றுள்ளது. இதின் பாரதத்தின் பங்கு மிகக் கனிசமானது. 

🏔️நல்ல பாதை வசதி இந்திய பகுதிகளில் செய்யப்பட்டு வருகிறது. மிக உயரமான, நபிதாங் மலையின் அடுத்த பகுதி சென்றால், கைலாய மலை மிக நன்றாகத் தெரியும்.

🗻நாம்,  நபிதாங் பகுதியில் இருந்து ஓம்பர்வத் மலை தரிசனம் நன்றாக செய்ய முடிகிறது. மேலும், நம் பகுதியில் உள்ள மலையில் உயரம் சுமார் 200 mts  தூரம் treking சென்றால், கைலாய மலையின் சிகரம் தெரியும் என்று கூறுகிறர்கள். அங்கு வாகனங்கள் செல்ல தனிப் பாதை வசதிகளும் ஏற்படுத்தும் வேலைகள் நடைபெறுகிறது என்றும் கூறுகிறார்கள்.  இது அமைக்கப்பட்டால் கூட, நம் பாரத பூமீயில் இருந்து கொண்டே கைலாயமலையின் சிகரத்தைத் தரிசனம் செய்து விடலாம் என்பதால், அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன என்றும் கூறுகிறார்கள்.

🏔️நபிதாங் பகுதியில் பாரத ராணுவப் பிரிவான ITB Camp உள்ளது.  

🛕Camp பகுதியின் முன்புறம் ஒரு சிறிய குன்று போல உள்ள இடத்தில், ஒரு கோவில் உள்ளது. கல்கட்டிடம் ஆன்மீக குரு ஒருவரின் அமைப்பின் மூலம் பூசை நடத்தப்பட்டு வருகிறது. நாங்கள் இந்த ஆலயம் சென்று வணங்கி வந்தோம். கருவரையும், ஒரு முன் மண்டபமும் உள்ளது.
கருவரையில், சிவன் - பார்வதி ஒரு சிறிய லிங்கம் உள்ளது.

🏔️ நபியாங் ரானுவ Camp தாண்டி கைலாஷ் பாதை இருந்தாலும்,   நாம் போக அனுமதி கிடையாது.

🏔️சுமார் 14400 அடி உயரத்தில், 
நபிதாங்கில், KMVN சார்பில் ஒரு Tent Camp அமைக்கப்பட்டு உள்ளது. அதில் சென்று சிலர் தங்கி ஓய்வு எடுத்தார்கள். எங்களுக்கு, ஜூஸ், காபி / டீ வழங்கப்பட்டது. மதிய உணவும் இங்கே எங்களுக்கு கிடைத்தது.

🏔️நாங்கள் KVMN சார்பில், Pithoragarh என்ற இடத்தில் வழங்கப்பட்ட மரக்கன்றுகளை இங்கே நட்டோம்.

🕉️ நபி தாங் பகுதியில் இருந்து
Om Parvat மலை தரிசனம்; நபி பர்வத் மலை தரிசனம், மற்றும், வழியில் இருந்த  கனேஷ்பர்வத், (ஷீஷ்)நாக் பர்வத் என்ற நாகபர்வத், காலபாணி - காளி ஆலயம் - ,  வியாசர் குகை  இவையெல்லாம், தரிசித்தோம். அருமையான,  அற்புதமான வானிலையில் இந்தக் காட்சிகள்  கிடைத்தது இறைவரின் பேரருளே.

🎆மாலை குன்ஞ்சி திரும்பி KMVN Camp வந்து,  மாலை டீ, மற்றும் இரவு உணவு முடித்து, TENT ல் தங்கிக் கொண்டோம். மறுநாள் ஆதிகைலாஷ் தரிசனம் என்ற உற்சாகத்தில் இரவுப் பொழுது கழிந்தது.

🛐💚🤎💜❤️💙
பயணம் தொடருகிறது...... .....
#Uttarakhand   #ADIKAILASH  #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ்  #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை 
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻

Saturday, June 29, 2024

பதிவு: 11 இந்த பதிவில் 0m Parvat செல்லும் வழியில் உள்ள சில முக்கிய இடங்கள் பற்றியது .கணேஷ் பர்வத், Mt. Ape Darshan from Gunji, Nagparvat, வியாசர் குகை , காளிமாதாக்கோவில் - காலாபாணி.நாள் - 6 குன்ஞ்ஜி - KALAPANI -நாபிடாங் - குன்ஞ்சி

பதிவு: 11
இந்த பதிவில் 0m Parvat செல்லும் வழியில் உள்ள சில முக்கிய இடங்கள் பற்றியது .
கணேஷ் பர்வத், Mt. Ape Darshan from Gunji, Nagparvat, 
வியாசர் குகை , காளிமாதாக்கோவில் - காலாபாணி.
நாள் - 6  குன்ஞ்ஜி - KALAPANI -நாபிடாங் - குன்ஞ்சி
22 + 22 Kms. 6-7 hrs.
31.05.24- வெள்ளி
காலை 7.00 - குன்ஞ்ஜியில் காலை உணவு முடித்து, Bolero/Camper மூலம் புறப்பாடு.
நபிடாங் (4266 mts.) சென்று ஓம்பர்வத் தரிசனம்,
மதியம் 12.00 உணவு நபிடாங் 
மாலை - 4.00 மாலை டீ, இரவு உணவு & இரவு தங்குதல் at
KMVN Yatra Campaign in Gunji.
பார்க்கும் இடங்கள்.
கணேஷ் பர்வத், Mt. Ape Darshan from Gunji, Nagparvat, 
வியாசர் குகை , காளிமாதாக்கோவில் - காலாபாணி, நபி பர்வத், மற்றும் OM PARVAT, at Nabihdhang is the Last Camp of KMVN, for Kailash - Mansarovar Yatra மீண்டும் குன்ஞ்ஜி வந்து இரவு உணவு முடித்து தங்குதல்.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🕉️காலை 7 மணிக்குள் காலை உணவு முடித்துக் கொண்டு அவரவர் ஜீப்பில் கிளம்பினோம். நல்ல பருவநிலை. வெய்யில் இருந்தாலும், இமயமலையின் குளிர் காற்று வீசிக் கொண்டு இருந்ததால், Swetter, மற்றும் கம்பளி உடைகளுடனும் Shoe ம் அனிந்து இருந்தோம். மேலே செல்ல செல்ல குளிர் இருந்தாலும், இறையருள் துணையிருந்ததால், அருமையான வெய்யிலும், Clear Blue Sky ஆக அமைந்து இருந்ததால், பயணம் மிகச்சிறப்பாக அமைந்தது.

🛐குன்ஞ்ஜி பள்ளத்தாக்கிலிருந்து மெல்ல உயரம் சென்றோம். சில இடங்கள் சாலை மிக நன்றாகவும், சில இடங்கள் மிக மிக மோசமாகவும் இருந்தது. சாலைப்பணி வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது.

🕉️குன்ஞ்ஜியிலிருந்து நடைபாதையாக மட்டுமே இருந்த மலைப் பாதையை, அரசாங்கம், BRO மூலம்
சிறிது சிறிதாக மலைக்கற்களை வெட்டி அகற்றியும், மன் சரிவுகளை கெட்டிப்படுத்தியும், தற்போது Bolero Camper ஜீப் செல்லும் வழியாக்கி சவால் நிறைந்த பணியை மிகச் சிறப்பான செய்து வருகிறார்கள். மிகவும் போற்றத்தக்க காரியங்கள்.

💥வழியில் இரு இடங்களில் INNER PERMIT Check செய்து பயண அனுமதி தருகிறார்கள்

 🕉️ஒரு புறம் காளி நதி நம்மோடு கூட வந்து கொண்டே இருக்கிறது. காளி நதி பாரதத்திற்கும், நேப்பாள நாட்டிற்கும் எல்லைப்பகுதியாக உள்ளது.

🕉️செல்லும் வழியிலேயே கனேஷ்பர்வத்,ஷீஷ் நாக் பர்வத் என்ற நாகபர்வத், காலபாணி, வியாசர் குகை இருந்தாலும், OM Parvat தரிசித்துப் பிறகு வரும் போது காளி ஆலயம் தரிசித்தோம். 

🛐கனேஷ் பர்வத் 
வழியில் பெரிய பணி சிகரம் கண்டோம் அதை கனேக்ஷ் பர்வத் என்று கூறுகின்றார்கள். இது போன்ற பல மலைசிகரங்களைப் பார்த்துக் கொண்டே சென்றோம். சில புல்வெளி இடங்கள், அருமையான மிக உயரமான மலையின் அற்புதக் காட்சிகள்.

🛐ஷீஷ் நாக் பர்வத்: நாகபர்வத்

நாக் பர்வத் ஓம் பர்வத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. மற்றும், மலை நாகின் வடிவத்தை உருவாக்குகிறது. நாக் என்பது சிவபெருமானுடன் எப்போதும் காணப்படும் பாம்பின் கடவுளைக் குறிக்கிறது.

🛐மிகவும் அற்புதமான கால சீதோஷண நிலை, Blue Sky மேகங்களின் விளையாட்டு மிக ரம்மியமாக இருந்தது.

🛐#காலாபாணி காளி மாதா மந்திர்:

🏞️குன்ஞ்சி - நபிதாங் பாதையில், 
காலாபாணி உள்ளது. ஓம் பர்வத் தரிசித்து,
திரும்ப வரும் போது காலா பாணி என்ற இடம் வந்தோம். காளி மந்திர், காலாபானி காளி நதி தோன்றிய இடம் இது.
இங்கே காளி நதி உற்பத்தி ஆகிறது. இதை ஒட்டி ஒரு சிறிய ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

🏞️ஆலயத்தில் இரண்டு கருவரை உள்ளது.
ஒன்றில், காளி உருவம் உள்ள சிலையும், நீர் உற்பத்தியாகும் சிறிய தொட்டியும் உள்ளது. அதிலிருந்து நீர் எடுத்து தெளித்து விடுகிறார்கள். 

🏞️இன்னொரு கருவரைப் பகுதியில், சிவலிங்கம் ஒன்றும், சிவ பார்வதி உருவமும் உள்ளது. முன்புறம் ஒரு மண்டபம் உள்ளது. அதில் அமர்ந்து பஜணை, பூசை செய்ய இடம் உள்ளது.
வெளிப்புறம்.

🏞️நீர் தொட்டி குளம்போல அமைத்து அதில், சிவன் பார்வதி சிலை அழகாக வைத்து அமைத்துள்ளனர்.

🌼அருகில் ITB ராணுவ Camp ஒன்றும் உள்ளது. அருகில் ஒரு Refreshment Shop உள்ளது.

🛐வேத் வியாஸ் குஃபா (குகை): 

🏵️ஓம் பர்வத்துக்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ளது, _ இங்கு வியாஸ் முனி (மஹரிஷி வேத் வியாஸ் என்று பிரபலமாக அறியப்படுகிறார்) மகாபாரதத்தை விநாயகப் பெருமானுக்குக் கட்டளையிட்டார்.

🏵️காலாபாணி ஆலயம் எதிர்புறம் உள்ள உயரமான மலையின் மிகஉயரமான இடத்தில் இந்த குகை உள்ளது. கீழே இருந்து நன்றாக பார்க்க முடிகிறது. உள்ளது.

🛐💚🤎💜❤️
பயணம் தொடருகிறது...... .....
#Uttarakhand #ADIKAILASH #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ் #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை 
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻

Thursday, June 27, 2024

பதிவு: 6#Uttarakhand #ADIKAILASH #OMPARVAT_YATRA_2024#ஆதிகைலாஷ் #ஓம்பர்வத்யாத்திரை26.05.2024 முதல் 6.06.24 வரை #ஜாகேஸ்வரர்.#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️28.05.24- செவ்வாய்

பதிவு: 6
#Uttarakhand   #ADIKAILASH  #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ்  #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை 
#ஜாகேஸ்வரர்.
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
28.05.24- செவ்வாய் 

ஜாகேஸ்வரர் என்ற ஊரில் இருக்கும் KUMAN MANDAL VIKAS NIGAM Tourists Home  சென்றதும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு மதிய உணவும் வழங்கப்பட்டது. 
அங்கேயே சற்று ஓய்வு எடுத்துக் கொண்டோம்: பிறகு, அங்குள்ள மிகவும் பிரசித்தி பெற்ற   ஸ்ரீ ஜாகேஸ்வரர், ஸ்ரீ மிருதுஞ்சிய சிவன் ஆலயம், மற்றும், ஆலய வளாகத்தில் உள்ள  சன்னதிகள் நிறைந்த 120 சிவலிங்கங்களை தரிசித்தோம்.

இந்த ஆலயத்திற்கு 2022 ல்  ஏற்கனவே
வந்து தரிசனம் செய்து உள்ளோம். மீண்டும் மீள் தரிசனம் செய்ய இன்று
(28.05.24- செவ்வாய்)இறையருள் கூட்டியது

🏵️💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮🏵️
இது பற்றிய நம்முடைய பயன அனுபவக் குறிப்புகள் தனி பதிவில் உள்ளது.
LINK:
https://www.facebook.com/share/p/HaoonzoZv5E5NdGD/?mibextid=oFDknk

மீள் பதிவு :
https://www.facebook.com/share/p/HaoonzoZv5E5NdGD/?mibextid=oFDknk
#uttrakant_tour_2022 
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
🛕#ஜாகேஸ்வரர். 1
(9 &10.04.2022)
பயண அனுபவக் குறிப்புகள்

🛕ஜாகேஸ்வரர் என்ற புனித தலம் உத்தரகாண்ட் மாநிலத்தில், Kumaon பகுதியில் Almora மாவட்டத்தில் அமைந்துள்ளது.

🏔️இந்த இடம் சுமார் 6140 அடி 1870mts உயரத்தில் இமாலயத்தில் உள்ளது.
நயினிட்டால், நகரிலிருந்து, சுமார் 100 கி.மீ. மற்றும், Almora நகரிலிருந்து 36 கி.மீ. தூரம்,  வட கிழக்கில் உள்ளது.

🔱மத்திய இமயமலைப்பகுதியில், பன்னெடுங்காலமாக கைலாசமலை தரிசனம் செய்ய செல்லும் பாதையில் இப்பகுதி உள்ளது.

⚜️இவ்வாலயங்கள் இப்பகுதியின் ஜோதிர்லிங்கங்கள் என்றே வழங்கப்படுகிறது.

🛕வைத்திநாதர் என்ற மற்றொரு புகழ் பெற்ற ஆலயம் இங்கிருந்து 100 கி.மீ. தூரத்தில் உள்ளது.

🛕மிக மிக புராதானமாக ஆலயங்கள் நிறைந்த பகுதி. 
எப்போது இந்த ஆலயங்கள் எழுப்பப்பட்டன என்பதை உறுதிப்படுத்துவதற்கான வரலாற்று, அல்லது  கல்வெட்டு மற்ற உறுதியான சான்றுகளை இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை.

🏯எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் கிடைக்காவிட்டாலும், இவ்வாலயங்கள் சுமார் 1400 வருடங்களுக்கு முற்பட்டதே என்று நம்பப்படுகிறது.

🌟சிலர் கருத்துப்படி ஆதி சங்கரர் ஸ்தாபித்தார் என்றாலும், 
கட்டிட அமைப்புகள், அவருடைய காலத்திற்கு 100 வருடத்திற்கு முன்பே கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று ஊர்ஜிதம் செய்கிறார்கள்..

🛕இமயமலையின் இந்தப் பகுதியில் சுமார் 151 ஆலயங்கள் உள்ளன அனைத்தும் இந்திய தொல்லியல் துறையால் அடையாளம் காணப்பட்டு, இவைகள் 7ம் நூற்றாண்டு முதல் 10ம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்டத்தைச் சேர்ந்தவைகள் தான் என்று உறுதிப்படுத்தப்படுள்ளது. 

🛕இவைகள் Group of Temples எனப்படும் ஒரே இடத்தில் பல ஆலயங்களைக் கொண்ட அமைப்பாகும்.

🌼இந்த ஆலயங்கள், பல நூறு வருடத்திற்கு முன்பு இந்தியாவின் பகுதிகளிலிருந்து இந்த இடங்களுக்கு வந்து இவ்வாலயங்களை அமைத்து வழிபட்டதால், இதை உத்திரகாசி என்றும் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.

🍁சில ஆலய அமைப்புக்கள், கட்டிடக் கலை நுட்பங்களைக்கொண்டு 7ம் நூற்றாண்டு முதல் 12 நூற்றாண்டுகளிலும், சில ஆலயங்கள், பிற்காலத்திலும் கட்டப்பட்டது.
என்று நம்பப்படுகிறது. பல  நூற்றாண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டுள்ள இவ்வாலயங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவைகள். 

🥀இது போன்று Group of temples இந்தியாவில் மத்திய பிரதேசம், மற்றும் மத்தியப்பிரதேசத்தில் உள்ள புவனேஸ்வரர் அருகில் உள்ள ஆலயங்கள் அமைப்பை ஒப்புநோக்கத்தக்கது.

⚜️வடஇந்திய நாகரா கட்டிடக்கலை அமைப்பையும், சில ஆலயங்கள் மத்திய மற்றும் தென் இந்திய கட்டிடக்கலை அமைப்பையும், பிரமிடு போன்ற கட்டிட அமைப்பையும்  சார்ந்த கற்கோவில்கள்,
இங்கே சுமார் 200 ஆலயங்கள் உள்ளன. 
சிவன், சக்தி, விஷ்ணு ஆலயங்கள் உள்ளன.

🌟அனைத்து ஆலயங்களும் ASI இந்திய தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

🛕#ஜாகேஸ்வரர்ஆலயங்கள் :

🛕இரண்டு முக்கிய ஆலயப் பகுதிகள் ஜாகேஸ்வரில் உள்ளன.

1. ஜாகேஸ்வரர் ஆலயங்கள்.
2. தான்டேஸ்வரர் ஆலயங்கள். 
இரண்டுக்கும் சுமார் 2 - 3 கி.மீ.தூரம் உள்ளது.

🛕ஜடாகங்கா என்ற நதிக்கரையில் இவ்வாலயங்கள் அமைந்துள்ளன. 

🥀தேவதாரு, பைன் மரக்காடுகள், மலைகள் சூழ்ந்த இப்பிரதேசம் காண மிக ரம்மியமாக உள்ளது.
 
🛕மேலும் சில பிரசித்திப் பெற்ற ஆலயங்களும் அருகில் உள்ளன.

🛕இங்கு மேலும், சில ஆலயங்கள் இருப்பினும் மிகவும் அதிகமாக சுமார் 124 ஆலயங்களைக் கொண்டு பிரசித்துப் பெற்றது ஜாகேஸ்வரர் ஆலயமே.

 🛕தண்டிஸ்வரர் ஆலயத்தில் பல ஆலயங்கள் பழமையால் சிதலமடைந்து மூடப்பட்டுவிட்டன எனக் கூறப்படுகிறது.

#ஜாகேஸ்வரர்_மகாதேவர்_ஆலயம்
🛕இவ்வாலயத்திற்கு உள்ளே நுழைய, பிரதான சாலையை ஒட்டியே இரண்டு நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டு உள்ளன.  உள்நுழைந்ததும், இவ்வாலயங்களை தரிசிக்கும் வழிகளும், முறைகளும், படங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

🛕சுமார் 124 சிவலிங்கங்கள் ஒரே ஆலயத்துள் தனித்தனியாக  அமைக்கப்பட்டு உள்ளன. இவைகள் பல்வேறு சன்னதிகள், கோபுர அமைப்புகளுடன் உள்ளன. முழுவதும் கற்றளிகள். அடுக்குக் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.

தண்டி ஆலயம்,
குபேரர் ஆலயம்,
மிருத்யுஞ்சயர் ஆலயம்
நந்தாதேவி ஆலயம்
நாகதுர்க்கா ஆலயம்
நவகிரக ஆலயம்

🛕ஜாகேஸ்வரர் ஆலயத்தில், சிறியதும், பெரியதும், பலவகைகளில் சதுர அமைப்பில் அடிப்பகுதி காணப்படுகின்றது. 

🛕அடிப்பகுதி நான்குபுரமும் உயர்ந்த சுவர்கள்.  மேல் பகுதி பிரமீடு அமைப்புகள். உச்சிப் பகுதியில் தாமரை பீடமும், கலசமும் கற்றளிகளாக உள்ளன. 

 🛕சில முக்கிய  கோபுரங்கள் தனி சிங்கம் அல்லது தனி ரிஷபம் காவல் தெய்வம் போல  அமைத்துள்ளமை சிறப்பு.  எல்லாமே கற்றளிகள். 

🛕ஆலய முன் கோபுர  பகுதிகளிலும்,  நிலைப் படிகளிலும், பல்வேறு  கலைநுட்பமான சிலைகள் அமைக்கப்பட்டுள்ள. சிறிய சிறிய அளவுகளில்  நுட்பமான சிலை அமைப்புகள் நம்மை வியக்க வைக்கின்றன.

🛕இவைகளில்  வீனாதார சிவன், கனேசர், மகாலெட்சுமி, சப்தமாதார்கள், யோக தட்சினாமூர்த்தி, உருவங்கள், முன்று முகம் கொண்ட சிவவடிவம், எல்லாம் கற்களால் வடிக்கப்பட்டுள்ளது.

🛕இவைகள் 7,8ம் நூற்றாண்டுகளை ஒட்டிய காலம் என்று கூறுகிறார்கள்.

#ஜாகேஸ்வரர் ஆலயம்:

🛕இங்குள்ள அணைத்து ஆலயங்களுக்கும் நடுநாயகமாக, மிக முக்கிய இடத்தில் பெரிய ஆலயமாக உள்ளது. கருவறை மேற்கு பார்த்து அமைந்துள்ளது. இவ்வாலயம் ஜோதிர்லிங்கமாக வழிபடப்படுகின்றது.

🛕ஆலயம் முன்புறம் சிறிய நந்தி. 
நுழைவு பகுதியில், இருபுறமும் உயரமான, பெரிய அளவிலான துவார பாலகர்கள்.

🛕இடது துவார பாலகர் கரத்தில் கபாலம் ஏந்தியுள்ளார். மற்ற கரங்களில் சில ஆயுதங்கள் தாங்கியுள்ளார்.
வலது துவாரபாலகர், பெரிய நாகத்தைப் பிடித்துள்ளர். மற்ற காரங்களில் ஆயுதங்கள். உள்ளன.

🛕மனித வாழ்வுநிலையற்றது, மரணத்தை வெல்லவும், வினை நீங்கவும், இவ்வாலயத்தில் உள்ள சிவனை நாம் வணங்க வேண்டும் என்பது இவை உணர்த்தபடுகிறது.

🛕அடுத்து உள் மண்டபம் சற்று பெரிது. பக்தர்கள் இருந்து வழிபாடு செய்வதற்கு மிகவும் வசதியாக அமைந்துள்ளது.

🛕உள் மன்டபம் தாண்டினால், மேற்கு பார்த்த சிவன் கருவறை,
சற்று விஸ்த்தாரமாக உள்ளது.
சிறிய ஜோதிர்லிங்கம். ஆவுடைப்பகுதி, தரையுடன் ஒட்டி உள்ளது. நாம் அருகில் உள்ள பாத்திரத்தில் உள்ள நீரை மொண்டு, சிவனை அபிஷேகம் செய்யலாம்.

🛕நமது ஊர்களில் உருத்திராட்சங்களைப் பயன்படுத்தி, சிறிய அளவில் பந்தல் போல; உருத்திராட்சத்தைக் கொண்டு, லிங்கம் அமைப்பார்கள் அது போல. அழகாக நாகாபரணம் மற்றும். அலங்கரங்கள், மேலிருந்து ஒரு தாமரை மலர் மூடி போல வெள்ளியால், அமைத்துள்ளார்கள். லிங்க சிவனை பாதுகாத்து வருகிறன,  இவைகள்.

🛕இந்த ஆலய கருவரையின் அமைப்பு மட்டும்  நான்குபுறமும் பலகனி உடையது. 

🛕மத்திய இமாலயப் பகுதியில் உள்ள முக்கிய ஜோதிர்லிங்கமாகக் வணங்கப்படுகிறது.  ஆதியிலிருந்து, கைலாசமானசரோவர், பத்திரி, கேதார், ஆதி கைலாச யாத்திரையில் இவ்வாலயம்  முக்கியத்துவம் உடையது என்கிறார்கள்.

🏯ஆலய நாற்புர சுற்று சுவர்கள் சற்று உயரமானது. மேல்பகுதி பிரமீடு அமைப்பில் உள்ளது. உச்சிக் கோபுரம் மரத்தினால் மூடி போன்று அமைத்து பாதுகாக்கப்படுகிறது.  இந்த அமைப்புகள் பிற்காலத்திய அரசர்கள் செய்துள்ளார்கள் என்ற குறிப்புள்ளது. 

🛕இவ்வாலயம் சுற்றிலும் சிறிய, நடுத்தர லிங்கங்களை வைத்து சிறுசிறு கற்கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளது.

🛕இவ்வாலயத்தில் உள்ள ஜாகேஸ்வரர் என்னும் யோகேஸ்வரரை உளமார வணங்கினால், என்றும்  யோகத்தையும் தந்து, நமது வாழ்வின்  வினை நீக்கம் தந்து, மகிழ்வான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.

🛕இவ்வாலயத்தின் முன் பண்டாக்கள் அமர்ந்து கிரியைகள் /  யாகங்கள் ... முதலியவைகள் செய்து தருகிறார்கள். 

🛕ஜாகேஸ்வரா ஆலய தென் பகுதியில் இவ்வாலயம் பின்புறம் (கிழக்கு புறம்) இரண்டு தனி தனி ஆலயங்கள் ஒவ்வொன்றிலும், தனித்தனியாக லிங்கங்கள்.  தென்புறம் ஒரு ஆலயமும் இருக்கிறது. அனைத்து ஆலயத்தின் முன் பகுதிகளிலும்,  சிறிய அளவில் மகாலெட்சுமி, விநாயகர், தெட்சினாமூர்த்தி முதலிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

🛕தென்கிழக்கு மூலையில் மிகப்பெரிய தேவதாரு மரம் உள்ளது. அதைச் சுற்றி பீடம் அமைத்துள்ளார்கள்.

🛕அனைத்து ஆலயங்களின் கோபுர உச்சிப் பகுதிகள் தாமரைமலர் பீடம் மற்றும் கற்கலசங்களுடனும் இருக்கிறது.  முக்கிய கோபுரங்களில் ரிஷபம் அல்லது சிங்கம் போன்ற ஒரு அமைப்பும் உள்ளது.

🛕ஜகேஸ்வரர் ஆலயம் தென் பகுதியில்,
ஜடாகங்கா என்ற ஆறு உள்ளது. ஆலயத்திலிருந்து, ஆற்றுக்குச் செல்ல சிறிய படிகளுடன் ஒரு வழியும் இருக்கிறது.

🛕ஆலயத்தின் தென் பகுதியில், ஒரு சிறிய குளம் கருங்கற்கள் படிகளால் அமைக்கப்பட்டுள்ளது. இதைப் புன்னியகுளமாகக் கருதுகிறார்கள்.  குளம் நீர் அபிஷேகத்திற்கு பயன்படுகிறது.

🛕ஜாகேஸ்வரர் ஆலயம் எதிரில் ஒரு அனுமன் ஆலயம், இன்னும், பல்வேறு முனிவர்கள், ரிஷிகள் பெயரில் பல ஆலயங்கள் இருக்கின்றன.

🔱மிருத்யுஞ்சயர் மகாதேவர் ஆலயம் :

இந்த ஆலயம், ஜாகேஸ்வரர் ஆலய அடுக்கில் ஜாகேஸ்வரர் ஆலயத்திற்கு அடுத்து. மிகப்பெரிய ஆலயமாக உள்ளது.

🛕மிகப் பெரியது. கிழக்குப் பார்த்த ஆலயம். முன்புறம் சிறிய மண்டபத்துடன் கூடிய  நந்தியுடன் 4 கற்றூன்களுடன் கூடிய முன்மண்டபம், அடுத்து சற்று பெரிய உள் மண்டபம் அதில் வலது புறம், ஒரு விநாயகர் சிலை அடுத்து உள் கருவரை மண்டபத்தில் நல்ல கம்பீரமான உருவத்தில் சிவலிங்கம். ஆவுடைப்பகுதி  தரைமட்டத்திலிருந்து சிறிதே உயரமானது.
சிவபெருமானுக்கு நாக அலங்காரத்துடன் அம்சமாக காட்சி தருகிறார். நாம் மிக அருகில் சென்று தரிசனம் செய்யலாம்.
தினம்தோறும் மிக அருமையாக பூசைகள் முறையாக நடைபெற்று வருகிறது. 

🙏மிருத்யுஞ்சய மகாதேவர் எமபயம் போக்குபவர், மரண அவஸ்த்தை தவிர்க்கவும், ஆயூள் யோகத்திற்கும், மிருத்யுஞ்சய மகாதேவரே காரணகர்த்தாவாக இருப்பதால், இவரை வழிபட வேண்டியது மிகச் சிறப்பு.

🛕முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆலயம் ஜாகேஸ்வரர் ஆலங்களில் பெரியது ஆகும், இதன் அமைப்பைக் கொண்டே இவரின் முக்கியத்துவம் தெரியும்.

🛕இவ்வளவு சிறப்பு மிக்க புராதான ஆலயத்தில்  மிருத்யுஞ்சய ஹோமம் செய்து வழிபட்டால் மிகமிக நல்லது என்பதால், சுற்றுலா இயக்குநர் திரு பாலு சார் அவர்களின் முயற்சியால்,  எல்லோரும் சேர்ந்து 10.04.2022 அன்று விடியற்காலையில் இவ்வாலத்திலேயே அனைவரும் இணைந்து மிருதயுஞ்சய ஹோம பூசை செய்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. 

 🛕#ஸ்ரீபுஷ்டிதேவி ஆலயம்:

🌟இவ்வாலயம் கிழக்கு நோக்கி மிருத்யுஞ்சயர் ஆலயத்திற்கு பின்னாலும் அமைந்துள்ளது. இவ்வாலயம் கருவரை கிழக்கு நோக்கியது. ஸ்ரீபுஷ்டிதேவி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இதுவும் கற்கோவில் ஆலய கோபுரம் வித்தியாசமாக இருந்தது. பொதுவாக, தேவி ஆலயங்கள் முன்புறம் பட்டையாகவும் கோபுர உச்சிப் பகுதி நீண்ட பகுதியாகவும் இருபுறமும், சிங்கம் அல்லது ரிஷபம் போன்ற சிலை அமைப்பும் உடையதாக இருக்கிறது.

🌟மேலும், தன்டேஸ்வரர், நயினா தேவி, நவகிரக ஆலயம், எல்லாம் தனித்தனியாக உள்ளது.
ஆலயம் உள்நுழைவுப் பகுதி தாண்டி மிருத்யுஞ்சர் ஆலயம் முன்புறம் காலதேவர் (பைரவர்) ஆலயமும் உள்ளது.

🌼பல ஆலயங்கள், புனரமைப்பு இல்லாமல், சிதைந்தும் உள்ளது, வெட்டவெளியில் சில சிவலிங்கங்கள், சில ஆலயங்களில், எவ்வித சிலைகள் இல்லாமலும் உள்ளது.

🛕#குபேரர் ஆலயம்:

💥ஜாகேஸ்வரர் ஆலயம் தரிசித்தப்பின், 
சற்று தூரத்தில் கிழக்கே சுமார் 100 மீட்டர் தூரத்தில் சற்று உயரத்தில், ஜடாகங்கா ஆற்றின் மீது குறுக்கே அமைந்துள்ள பாலத்தை தாண்டினால், இவ்வாலயம் உள்ளது. குபேரர் ஆலயம் மேற்கு பார்த்த சன்னதி கொண்டது.  வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது. பராமரிப்பில் உள்ளன.

🍁ஜடாகங்கா ஆற்றின்கரையில், திதி, தர்ப்பனம் செய்வது மிகப் புண்ணியம் என்பதால், பலர் வந்து செய்துகொண்டு இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் செய்வதற்கும், பக்தர்கள் வசதியை முன்னிட்டும் Toilet வசதியுடன், சிறிய மண்டபம் உள்ளது.

🛕இவ்வாலயங்கள் அனைத்தும் பிரதான சாலையை ஒட்டியே உள்ளன. ஒரு புறம் மலைப்பகுதியை ஓட்டி வீடுகள், கடைகள், மறுபுறம், ஜடாகங்கா ஆறும், அதை ஒட்டி ஆலயங்களும், ஆற்றின் மறுகரையில் அடர்த்தியான, தேவதாரு, பைன் மரங்கள் ஏராளமாக உள்ளன.

💥இவ்வூர் ஆலயங்கள் பற்றிய ஒரு MUSEUM ஒன்றும் தனியாக அமைத்துள்ளனர் பிரதான சாலையில் உள்ளது.

2022 ...ல்..
🌼நாங்கள் பிரதான சாலையை ஒட்டிய வசதியான HOTEL MANUDEEP வந்து  தங்கியிருந்தோம்.  9.4.2022 அன்று மாலை இவ்வூருக்கு வந்து உடனடியாக ஆலயம் சென்றோம். அன்று மாலை பூசை முழுவதும் கண்டு தரிசித்தோம். 
இரவு Hotel வந்து தங்கினோம்.

🙏🏻10.04.2022 விடியற்காலையில் சுமார் 5 மணிக்கு மிருத்யுஞ்சயர் ஆலயத்திற்கு அனைவரும் சென்று, மிருத்யுஞ்ச பூசை செய்து கொண்டோம்.  மேலும், 
ஜாகேஸ்வரர், ஆலயம் முழுதும் வணங்கி பின்பு குபேரர் ஆலயம் சென்று தரிசித்துவிட்டு, Hotel MANUDEEP வந்து காலை உணவுக்குப் பிறகு பாதால் புவனேஸ்வரர் என்ற முக்கிய ஸ்தலம் தரிசனத்திற்குப் புறப்பட்டோம்.

🛕புராதானமான, பாதால்புவனேஸ்வரர் என்ற ஆலயம் .... அடுத்து ..வரும் ...பதிவுகளில்....

9-10.04.2022
🙏🏻நன்றி🙏🏻 

#ஆலயதரிசனம் 
#UTTRAKANT_TOUR_2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்.
https://whatsapp.com/channel/0029Va5eOh59Bb67425WOR1A
💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮
❤️🤎💛💙💚💜
28.05.24- செவ்வாய் 

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

💥ஜாகேஸ்வரர் ஆலயம் தரிசித்து , பிறகு K M V N Tourists Home வந்து, பிறகு எங்கள் சிற்றுந்தில் புறப்பட்டு பித்தோராகார் (Pithoragarh) என்ற ஊர் சென்று சேர்ந்தோம். அங்குள்ள KMVN Tourists Rest Home சென்றோம்.

💥 இங்கும் மிகச்சிறந்த வரவேற்பும், ஒவ்வொருவருக்கும், மாலை மரியாதை, உபசரிப்பும், உணவும் அளிக்கப்பட்டு, சிறந்த தங்கும் வசதியும் செய்யப்பட்டிருந்தது.

💥இரவு நமது யாத்திரையின் முக்கியத்துவம் பற்றியும், இமாலய புனித பயணம் பற்றியும், செய்ய வேண்டிய செய்யக்கூடாத விஷயங்கள், நமது கவனங்கள், நாம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பற்றி மிகவும் உபயோகமாகவும், உணர்வுபூர்வமாக KMVN - Manager நெடும் விளக்கம் அளித்தார்.

🌼இரவு உணவுக்குப் பிறகு எமக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த வசதியான அறைகளில் தங்கினோம்.

பயணம் தொடருகிறது...... .....
#Uttarakhand   #ADIKAILASH  #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ்  #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை 
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...