Saturday, June 27, 2026

நல்லூர்: விஸ்வேஸ்வர சுவாமி (விஸ்வநாதர்) திருக்கோயில்திருப்பூர் 13.06.2026

நல்லூர்: 
விஸ்வேஸ்வர சுவாமி (விஸ்வநாதர்) திருக்கோயில்
திருப்பூர் அருகில் நல்லூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி (விஸ்வநாதர்) திருக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சிவன் கோயிலாகும். 
கோயில் விவரங்கள்:
மூலவர்: விஸ்வேஸ்வர சுவாமி
அம்மன்: விசாலாட்சி (மற்றும் சிவகாமி)சிறப்பம்சங்கள்: இத்திருக்கோயிலின் தூணில் கஜசம்ஹார மூர்த்தியின் உருவம் அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள சிலையில் கங்கை நதி பிரவாகம் எடுப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆலயம் கிழக்கு நோக்கியது 5 நிலை ராஜகோபுரம் உள்ளது பிரதான சாலையில் ஆலயம் உள்ளது.
ஆலயம் முன் பட்டி விநாயகர் அரசமரத்தின் அடியில் தனியாக உள்ளது
3 தனித்தனி கருவரை சன்னதிகளில் அமைந்துள்ள சுப்பிரமணியர் அம்பாள் மற்றும் சுவாமி சன்னதிகள் ஒரே மன்டபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
சுவாமி சன்னதி முன்புறம் கொடி மரம் நந்தி பலிபீடம் உள்ளது. அடுத்துள்ள அம்பாள் சன்னதி எதிரில் தனி நந்தி மன்டபத்தில் உள்ளது.
ஒவ்வொரு கருவரையும் தனித்தனியாக அதனதன் கோஷ்ட்ட தெய்வங்களுடன் உள்ளது.
பிரகாரத்தில் தனியாக திருவாசக மண்டபம் மற்றும் நந்தவனம் அமைக்கப்பட்டுள்ளது
ஆலயம் மிகவும் பொலிவுடன் விளங்குகிறது. 
திருவிழா: தமிழ் மாதமான சித்திரை மாதத்தில் தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. பிரதோஷம் மற்றும் சிவராத்திரி போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
அமைவிடம்: திருப்பூர் பகுதியில் திருப்பூரிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் நல்லூர் என்னும் பகுதியில் அமைந்துள்ளது.
வழிபாட்டு நேரம்:இந்த ஆலயம் தினமும் காலை 07:00 மணி முதல் 11:00 மணி வரையிலும், மாலை 05:00 மணி முதல் இரவு 08:00 மணி வரையிலும் திறந்திருக்கும்

நன்றி🙏
13.6.2026 சுப்புராம் மீள் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#கொங்குத்தலங்கள்


No comments:

Post a Comment

பெருந்தலையூர் -பிரகன்நாயகி சமேத மகிழீஸ்வரர் சிவன் ஆலயம் 14.06.2026

பெருந்தலையூர் - பிரகன்நாயகி சமேத மகிழீஸ்வரர் சிவன் ஆலயம் கோபிச்செட்டிப்பாளையம் - ஈரோடு பிரதான சாலையில் உள்ள கவுந்தப்பாடிக்கு வடக்கில் உள்ள ...