Monday, March 30, 2026

எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

7.எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

⛳ இருப்பிடம்
திருவாரூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, எண்கண் திருத்தலம். 

📚தலவரலாறு - 1.
சபீப வனம் எனும் வன்னி மரக்காட்டின் நடுவே தவம் செய்து கொண்டிருந்தார் பிருகு முனிவர். 

அப்போது அரசன் தன் படையுடன் வந்து சிங்க வேட்டையாடி முனிவரின் தவத்தை கலைக்க , அரசன் சிங்க முகத்துடன் காட்டில் அலையுமாறு சாபம் இடப்படுகிறான்.

இதையடுத்து, சிம்மவர்மன் என்ற அந்த மன்னன் சிங்க முகத்தைப் பெற்றான் அந்த மன்னன், தினமும் விருத்த காவேரியில் (வெட்டாற்றில்) நீராடி, சிவனையும், எண்கண் வேலவனையும் தரிசித்து வந்தான். 

அரசனும் தை பூசமும் பௌர்ணமியும் சேரும் நாள் வரை காத்து நீராடி இறைவனை வணங்க நாராயணன் தன் கருட வாகனத்திலும், முருகன் தன் மயில் வாகனத்திலும் தோன்றி அருள் புரிகின்றனர்.

📚தல வரலாறு 2.
 படைப்பின் மறைபொருளான பிரணவத்திற்கு பொருள் தெரியாததால், பிரம்மனை முருகப்பெருமான் சிறையில் அடைத்தார். அதோடு படைக்கும் தொழிலையும் தானே ஏற்றார். சிவபெருமான், பிரம்மனை விடுவித்து படைப்புத் தொழிலை அவரிடமே ஒப்படைக்கக் கூறினார். ஆனால் பிரணவப் பொருள் தெரியாமல் படைப்புத் தொழில் செய்யலாகாது என்று முருகன் மறுத்து விட்டார். இதையடுத்து சிவன், “அப்படியானால், பிரணவத்தின் பொருளை நீயே பிரம்மனுக்கு எடுத்துரைத்து, படைப்புத் தொழிலை அவரிடம் ஒப்படைத்து விடு” என்று கூறினார். இதையடுத்து பிரம்மனுக்கு பிரணவப் பொருளை உபதேசித்து, படைப்புத் தொழிலை அவரிடம் ஒப்படைத்தார், முருகப்பெருமான். இதையடுத்து பிரம்மதேவன், தன்னுடைய எட்டு கண்களைக் கொண்டு முருகனுக்கு பூஜை செய்து வழிபட்டார். இதனால் இத்தலம் ‘எண்கண்’ என்றானது.

எண் என்பது 8 என்ற கணக்கை குறிக்கின்றது. நான்கு தலைகளை கொண்ட பிரம்மனுக்கு எட்டு கண்கள். பிரம்மன் சிவனை நினைத்து இத்தலத்தில் வழிபட்டதால் இதற்கு எண்கண் என்ற பெயர் வந்தது.

⭐ஆலய சிறப்பு

இந்த கோவிலில் ஈஸ்வரன் ப்ரஹ்மபுரீஸ்வரர், அம்பாள் ப்ரஹன் நாயகி. ஈஸ்வரன் கிழக்கு நோக்கியும், அம்பாளும் முருகனும் தெற்கு நோக்கியும் அமர்வு.
சோமஸ்கந்தர் அமைப்பு.
சிவனும், திருமாலும், மால் மருகனாகிய முருகனும் அருள் தரும் ஆலயம்.
தெற்கு வாயிலில் ஸ்ரீஆதி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு பெருமாள் கருடன் மீது அமர்ந்த கோலத்தில் அருள் புரிகிறார். நித்திய கருட சேர்வை.

பிரம்மபுரிஸ்வரர்:
பிரம்மா தன் எட்டு கண்களால் இறைவனை பூஜித்ததால் இத்தலம் எண்கண் என அழைக்கப்படுகிறது. 

கண் பிரச்சனை உள்ளவர்கள் இந்த கோவிலில் உள்ள சிவனை வழிபட்டு வந்தால் கண் நோய் நீங்கும் என்பது ஐதீகம்.

பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள், இத்தல பிரம்மபுரீஸ்வரர் மீது சூரிய ஒளி விழும். 

சுப்பிரமணியர் அருள் சிறப்பு
இந்த ஆலயம், சிவனுக்கானது என்றாலும், இங்கு முருகப்பெருமானே பிரதான தெய்வமாக இருக்கிறார்.
தெற்கு நோக்கி அருள் புரிகிறார் சண்முகர். 

அருணகிரி பாடிய திருப்புகழ் தலம். 

🛕ஆலய அமைப்பு
இரண்டாம் குலோத்துங்கச் சோழ மன்னனால் கட்டப்பட்ட ஆலயம் இது.

கிழக்கு நோக்கிய ஆலயம்.

ஆலயம் முன்புறம் வன்னிமரம் சில்ப முனிவர் மற்றும் விநாயகர் வணங்க வேண்டும்.
கண் நோய் நீக்கும் கவலைப் போக்கும் ஆலயம். 5 நிலை ராஜகோபுரம் கடந்து நீண்ட உள் மண்டபம் உள்ளது.
மூலவர் பிரம்மபுரிஸ்வரர் கிழக்கு நோக்கிய கருவரை, அடுத்து சுப்பிரமணிய சுவாமி வள்ளிதெய்வானையுடன் முருகன் மயில் மீது தெற்கு நோக்கி அமர்ந்த கோலம்.
முருகன் உற்சவர் தெற்கு நோக்கிய தனி சன்னதி. அம்பாள் பெரிய நாயகி தெற்கு நோக்கிய தனி கருவரைமேலும், அம்பாள் சன்னதி முன்புறம் உத்திராபுரிஸ்வரர் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளார்.

கோஷ்ட்டத்தில், நர்த்தன விநாயகர், தட்சினாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சன்டிகேஸ்வரர் அமைந்துள்ளனர். சுற்றுப் பிரகாரத்தில், மேற்கில் பிரதான விநாயகர், பிரகார மண்டபத்தில்
பஞ்ச லிங்கங்கள் தனித்தனியாக, மற்றும், பாலசுப்பிரமணியர், மகாலெட்சுமி.
வடக்கில் உள்ள மிகப்பெரிய மிக நீளமான வெளவால் நெற்றி மண்டபம் .
கிழக்கில் விஸ்வநாதர், விசாலாட்சி, நவகிரகங்கள், பைரவர். இன்னும் லிங்கோத்பவர் முதலிய சிலைகள் வைத்துள்ளனர்.
வலது புறம் தனியாக ஆதிநாராயணப் பெருமாள் இணைந்துள்ள ஆலயம்

💥இங்கு உள்ள முருகனின் சிற்பம் 
அற்புத சிற்பியின் கலைப்பொக்கிஷம்.
தனி சிறப்பு பெற்றது. இறைவனின் முழு எடையை யும் மயிலின் கால்கள் தங்கி நிற்கிறது. சிக்கல் ( பொரவாச்சேரி) எட்டுக்குடி, எண்கண் ஆகிய மூன்று தலங்களிலும் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் ஆறுமுகப்பெருமான் சிலைகள், ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டவை. முருகப்பெருமான் ஆறு முகங்களுடன் அருள்கிறார். முன்புறம் மூன்று முகம், பின்புறம் மூன்று முகம் கொண்டிருக்கிறார். பன்னிரு கரங்களில், வேல், அம்பு, கத்தி, சக்கரம், பாசம், சூலம், வில், கேடயம், சேவல்கொடி, அங்குசம் தாங்கியிருக்கிறார்.
மூலவரான ஆறுமுகப்பெருமான், மயில் வாகனத்தில் தனியாக அமர்ந்த கோலத்தில் அருள்கிறார். அவருக்கு இருபுறமும் வள்ளி-தெய்வானை இருவரும் தனித்தனியாக வீற்றிருக்கின்றனர்.

💥ஆறுமுகன் சிற்பத்தின் கதை :

பொருள்வாய்த்த சேரி, எட்டுக்குடி சிற்பங்களை அமைத்த சிற்பி முதலில் தன் விரலையும், பின்னர் கண் பார்வையும் இழந்த பின் அமைத்த சிற்பம். 

 முத்தரச சோழன் என்ற மன்னனின் உத்தரவுப்படி, சிக்கல் (பொரவாச்சேரி) என்ற ஊரில் உள்ள முருகப்பெருமானின் சிலையை வடித்தார் ஒரு சிற்பி. அதன் அழகில் மயங்கிய மன்னன், இதுபோல் வேறு ஒரு சிலையை செய்துவிடக்கூடாது என்பதற்காக, சிற்பியின் வலது கட்டை விரலை வெட்டிவிட்டான். கட்டை விரலை இழந்த நிலையிலும் கூட, அந்த சிற்பி எட்டுக்குடியில் மற்றொரு முருகன் சிலையை சிக்கலில் (பொரவாச்சேரி) உள்ளது போலவே வடித்தார். இதனால் கோபம் கொண்ட மன்னன், சிற்பியின் இரண்டு கண்களையும் பறித்து விட்டான். சமீவனம் என்ற இத்தலத்திற்கு வந்த சிற்பி, ஒரு சிறுமியின் உதவியுடன், மீண்டும் ஒரு முருகன் சிலையை வடித்தார். சிற்பம் அமைக்கும்போது உளி பட்டு ஒரு பொறியால், அவரது கையில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. அந்த ரத்தம் கண்களில் பட்டுபார்வை மீண்டும் பெற்ற.சிற்பிக்கு கண்பார்வை வந்ததும், என்கண், என்கண் என்று பரவசத்துடன் கூற இத்தலம் என்கண் என பெயர்பெற்றதாக கூறுவர்.

💫விழாக்கள் /பிரார்த்தனைகள்

இந்த ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா, 14 நாள் பிரம்மோற்சவமாக நடைபெறும்.

இத்தலத்தில் கண்நோய் பார்வை குறை உள்ளவர்கள், ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் விசாக நட்சத்திரம் அன்றும், குமார தீர்த்தத்தில் நீராடி முருகப்பெருமானுக்கு ‘சண்முகார்ச்சனை’ செய்து வழிபட வேண்டும். இப்படி தொடர்ந்து 12 மாதங்கள் வழிபட்டால் கண் குறைபாடு நீங்கும் என்பது ஐதீகம்.
 
வியாழக்கிழமை தோறும் இங்குள்ள குரு பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி விரதம் இருந்து வழிபட்டால் குரு தோஷம் இருந்தால் நீங்கிவிடும்.
மாணவர்களுக்கான கல்வி தடைகளும், தோஷங்களும் இத்தலத்தில் உள்ள குரு பகவானால் நீக்கப்படுகிறது.

செவ்வாய் கிழமையில் இங்குள்ள முருகனை தரிசித்து வந்தால் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 
Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026 
மீள் தரிசனம் 8.3.2026.
பிரும்மபுரீஸ்வரர் ஆலயம் 1991, 2010ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது திருப்பணிகள் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
அருகில் உள்ள நாராயணப்பெருமாள் ஆலயம் 2000, 2012, மற்றும் (இன்று) 8.3.2026 ல் சம்ப்ரோஷணம் நடைபெற்றுள்ளது.

ஆலயம் முன்புறம் வாகனங்கள் நிறுத்தலாம்.
பேருந்து வசதிகள் உண்டு. ஆலயம் தென்புறத்தில் சில கடைகள் உண்டு. தெற்கில் 2 கி.மீ யில் முகுந்தனூர் நாகை - தஞ்சை பிரதான சாலை.
வடக்கில் 3 கி.மீ. திருவாரூர் - குடவாசல் பிரதான சாலை. உள்ளது.
சிவனும், மாலும், மருகனும், அருளும் ஆலயம். தமிழகத்தின் மிக சிறப்பு பெற்ற முருகன் தலங்களின் ஒன்று. வாழ்வில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய ஆலயங்களில் ஒன்று.

8.03.2026 ல் மீள்தரிசனம்.
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#அம்மாப்பேட்டைஅருகில் உள்ள தலங்கள்8.3.26

தஞ்சை புன்னைநல்லூர் மகாமரியம்மன் ஆலயம்.

6.தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம்.

தஞ்சை புன்னைநல்லூர் மகாமரியம்மன் ஆலயம்.

⛳ இருப்பிடம்
தஞ்சை - நாகை பிரதான சாலையில் உள்ள புகழ் பெற்ற ஊர்.

🏵️ஆலய சிறப்பு.
புன்னை வனம் என்ற புன்னை நல்லூர் என்னும் கிராமத்தில் முத்துமாரியம்மன் புற்று வடிவில் அருள்பாலிக்கிறார்
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.
தமிழ்நாட்டில் புராதான புகழ் பெற்ற அம்மன் கோவில் வரிசைகளில் முதன்மையானது. இது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது.

📚ஆலய வரலாறு.
சிறு கோயிலுள் குடிகொண்டிருந்த முத்துமாரியம்மனுக்கு, சோழர் காலத்தில் சோழ மன்னர்களால் சிறிய கோவிலாக அமைக்கப்பட்டது. பின்னர் வழிபட்ட மராட்டிய மன்னர்கள் நேரடியாக அருள் . பெற்றளால் மூலஸ்தான கோபுரம் மற்றும் ராஜகோபுரத்துடன் பிரம்மாண்ட கோவில் எழுப்பப்பட்டது.

தற்போது இக்கோயில், இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ளது. 

சூலை 2014இல் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இக்கோயிலுக்கு வருகை தந்து முத்துமாரியம்மனையும், துர்கையையும் வழிபட்டுச் சென்றார்.

சிறப்பு திருவிழாக்கள்:
ஆடி முத்துப்பல்லக்கு, ஆவணி தேர், புரட்டாசி தெப்பம் திருவிழாக்கள் சிறப்பானவை.

தல விருட்சம் : வேம்பு, புன்னை மரம்

தீர்த்தம் : வெல்லகுளம்
உற்சவர் முத்து மாரியம்மன்

🛕ஆலய அமைப்பு
பிரதான சாலைக்கு வடபுறம் சிவன் கோவில் அடுத்து ஒரு பெரிய குளம். அதை அடுத்து
கிழக்கு நோக்கிய ஆலயம்.
5 நிலை ராஜகோபுரம் மற்றும் நீண்ட மண்டபம், நிலை கோபுரம்
ஆலயம் உள்பகுதியில் ஒரு சிறிய குளம்
அதையடுத்து நீண்ட உள் மண்டபமும், கிழக்கு நோக்கிய கருவரையும் உடையது.
முத்துமாரியம்மன் அழகு தரும் கம்பீர தோற்றத்துடன் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் அருள் தருகிறார்.

கருவரை முன் பகுதியில், 
மூலவர், முத்துமாரியம்மன் சன்னதி அருகில், துர்க்கை அம்மன் வடக்கு நோக்கி, தனி சன்னதி உள்ளது. இரு அம்மன்களும், அருகருகே எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பு. 

அம்பாள் சன்னதியின் வலப்புறம் பேச்சியம்மன் தனி சன்னதியாக பிரகாரத்தில் உள்ளது. கோயிலின் கருவரை பிரகாரம் தவிர மேலும் 2 பிரகாரங்கள் உள்ளன. வெளிப் பிரகாரமேற்கு பகுதியில் தல மரங்களும் உள்ளன.

வழிபாடு

சோழ தேசமக்களுக்கு மட்டுமல்லாது பொதுவான குல தெய்வக் கோவிலாக இன்றும் இருந்து வருகிறது.
 வேண்டுபவர்களுக்கு அருளும் நோய்தீர்க்கும் கண்கண்ட தெய்வமாகப் போற்றி வணங்கப்படும் தெய்வம்.
எந்த காரியத்தையும் செய்யும் போது அம்மனை எண்ணி செயல்படும் பழக்கம் தொன்று தொட்டு உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்தவர். எளிமையான வேண்டுதல்கள் ஏராளமான பக்தர்கள்.

வழிபாட்டு முறைகள்
ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் மாவிளக்கு எடுப்பது, உப்பு, மிளகு இடுவதும், வேப்பஞ்சேலையை உடுத்தி, அக்கினி சட்டி எடுப்பதும், கோயில் தீர்த்தமான வெல்லக்குளத்தில் வெல்லம் வாங்கி போடுவதும் பக்தர்களால் செய்யப்படுகின்றது. மேலும் பக்தர்கள் நோய்களுக்கு, புற்று மண்ணை பிரசாதமாகக் வழங்கப்படுகின்றது.

⭐குடமுழுக்கு
பொ.ஊ. 1727 முதல் 1735 வரை தஞ்சாவூரை ஆண்ட துளஜா மகாராஜாவினால் சிறிய அளவில் கோயில் கட்டப்பட்டது. 

பொ.ஊ. 1798 முதல் 1832 வரை ஆண்ட இரண்டாம் சரபோஜி மகாமண்டபம், நர்த்தன மண்டபம், முன் கோபுரம், பெரிய இரண்டாவது திருச்சுற்று முதலியவற்றைக் கட்டி கும்பாபிஷேகம் செய்தார்.1950இல் தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 6.7.1987இல் குடமுழுக்கு நடைபெற்றது. இறுதியாக 27.06.2004இல் குடமுழக்கு நடத்தப்பட்டது . அதனை தொடர்ந்து சுமார் 21 ஆண்டுகள் கழித்து 10-02-2025 அன்று குடமுழக்கு நடைபெற்றது.

விழாக்கள்
ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிகிழமை அம்மனுக்கு பூச்சோரிதல் விழா நடைபெறும்.
ஆடி கடை ஞாயிற்றுக்கிழமை முத்துப்பல்லக்கு பெருவிழா நடைபெறும்.
ஆவணி மாதம் தேரேட்டம் நடைபெறும்.
புரட்டாசி மாதம் தேப்பம் விழா நடைபெறும்.

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 
Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026 

தஞ்சை நாகையின் பிரதான சாலையின் வடபுறம் ஆலயம். வாகன நிறுத்துமிடங்கள், ஓய்வு அறைகள், கடைகள் உள்ளன. வருடம் முழுதும் எப்போதும் பக்தர்கள் கூட்டம் இருந்தாலும், விழாநேரங்களில் அதிகரிக்கும்.

தற்போது ஆலய பிரகாரங்கள், புறப் பகுதிகள் விரிவுபடுத்தப்பட்டு, பக்தர்களுக்கான வசதிகளும் செயல்பட்டு வருகின்றன.
காலையிலிருந்து இரவு வரை ( 6-8 )நடை சாத்தப்படாமல் தரிசிக்கும் வகையில் அமைந்த திருக்கோவில்களில் ஒன்று.

வாழ்வில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய ஆலயங்களில் ஒன்று.

8.03.2026 ல் மீள்தரிசனம்.
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#பஞ்சபூததலங்கள்அம்மாப்பேட்டை8.3.26
#Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026

வாளமர்கோட்டை, சுந்தர நாடு, சௌந்தரநாயகி சமேத சுந்தரேஸ்வரர் ஆலயம்.

5. வாளமர்கோட்டை, சுந்தர நாடு, சௌந்தரநாயகி சமேத சுந்தரேஸ்வரர் ஆலயம்.

⛳இருப்பிடம்
சுந்தரவள நாடு, வாளமர் கோட்டை
தஞ்சாவூர் - நாகப்பட்டினம் பெருவழி சாலையில், புகழ்பெற்ற தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் ஆலயத்திலிருந்து தென்கிழக்கில் 8 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது. 
பிரதான சாலையில் வையச்சேரி என்ற ஊரிலிருந்து தெற்கில் வர வேண்டும்.

📚தலபுராணம் - 1.
ராஜராஜ சோழன் ஒரு மரத்தின் அடியில் தன் வாளை வைத்துவிட்டு, பின்னர் எடுக்க முடியாமல் போனதால், அந்த இடத்தில் சிவனுக்குக் கோவில் கட்டினார். "வாள் அமர்ந்த கோட்டை" என்பது காலப்போக்கில் வாளமர்கோட்டை என மருவியது.
வரலாற்றுச் சிறப்பு: இக்கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பூர்ணாம்பிகா ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. 

📚தல புராணம் - 2
முன்னொரு காலத்தில் ஸ்ரீ விக்கிரம சிங்க பாண்டியன் என்னும் மன்னன் சீரும் சிறப்புமாக இந்தப் பகுதியில் உள்ள நாடுகளை ஆண்டு வந்தான் அவன் சிறந்த சிவ பக்தன் ஆவான் அவனுக்கு ஒரு நீண்ட நாள் ஆசை இருந்தது அது என்னவென்றால் சிறந்ததொரு சிவன் ஆலயம் கட்டி கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதே ஆகும். அதே நினைப்புடன் இந்த மன்னன் நாடு முழுவதும் வலம் வரும் பொழுது ஆலங்காட்டில் கல்லால மரத்தின் மரத்தின் அடியில் சிவலிங்கம் ஒன்று காட்சியளித்தது உடனே மன்னன் விக்கிரம சிங்க பாண்டியன் தனது உடைவாளை எடுத்து கீழே வைத்து சிவ லிங்கத்தை தரிசித்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தான். பிறகு தன்னுடைய உடைவாளை எடுக்க முயன்றபோது எடுக்க முடியவில்லை மன்னன் இது சிவனுடைய வேலை என்று அறிந்து சிவனை மனதார நெஞ்சு உருக வேண்டினான். உடனே சிவபெருமான் இடப உருவமாகி காட்சியளித்து இவ்விடத்திலேயே கோயில் எழுப்பு என ஆசீர்வதித்தார் மன்னன் இத்தல மூர்த்தியான சுந்தரேஸ்வரர் எனவும் அம்மை சௌந்தரநாயகி எனவும் பெயரிட்டு திருக்கோயில் எழுப்பி வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.

📚ஆலய வரலாறு.

இந்த சுந்தர நாட்டில் வசித்து வந்த தவத்திரு மாதவமணி காத்தையா சுவாமிகள் அவர்கள் 1901ம் ஆண்டு பிறந்தவர். அவர் இந்தத் திருக்கோயிலை அடைந்து, அரன் திருவருளால், அன்பர்கள் உதவியுடன், கிராமங்கள் தோறும் சென்று தாய்மார்கள் பெரியோர்களிடத்தில் வாழ்த்தும், ஆசியும், பெற்று, 1915ம் ஆண்டு திருப்பணி தொடங்கி 96 வருடம் பல சீர்த்திருத்தங்களும், புதிய மண்டபங்கள், மற்றும் பல்வேறு பணிகள் செய்து, பல குடமுழுக்குகளை செய்து தனக்குப் பிறகு இவ்வாலயத்தைத் தொடர்ந்து செம்மையாக பராமரித்து வர வேண்டி தமக்கு உதவியாக இருந்த நாட்டார்களை அங்கீகாரம் செய்து 28.10.1996 ல் முக்தி அடைந்தார். 
அவர் காலத்தில் 1938லும், 1963லும், 1986லும், குடமுழுக்கு செய்துவிக்கப்பட்டுள்ளது.

அவரிக் கட்டளைப்படி தொடர்ந்து 
அவரின் நினைவுகளைப் போற்றி தனி அறக்கட்டளை ஏற்படுத்திய சுந்தர நாட்டார்கள், அங்கு அவருக்கு தனியாக மணி மண்டம், ஆலய வளர, பல வசதிகள், மண்டபம், மற்றும் திருமண மண்டபம், அன்னதான வசதிகள், ஆஸ்ரமம், அமைத்தும், பக்த பொதுமக்களுக்கு பல வசதிகளை செய்தும் 2008 மற்றும் 2025 முதலிய ஆண்டுகளில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. ஆலயம் முழுமையாக சிறப்பாக தற்போதும் பராமரிக்கப்ட்டு வருகிறது.

தமிழக அரசின் மூலம் இவ்வாலயத்தில் தவத்திரு காத்தையா சுவாமிகள் மடம் ஒரு கால பூசை செய்ய ஏற்பாடுகளும் செய்துள்ளது.

🛕ஆலய அமைப்பு
ஆலயவளாகம் மிகப்பெரியது. ஆலயம், மணி மண்டம், சுவாமிகள் மடம், திருமண மண்டபம், இவற்றுடன் பெரிய குளம் ஒன்றும் கிழக்கில் அமைந்துள்ளது.

கிழக்கு நோக்கிய பெரிய ஆலயம்.
முன்புறம் அழகாக அமைந்துள்ள குளம். குளக்கரையில் சிறிய விநாயகர், அடுத்து 
மிகப்பழமையான அரசமரம் ஒன்றும் அதனையில் ஒரு சிவலிங்கம் ஒன்றும் உள்ளது.

அடுத்து புதிய அமைப்புடன் அமைக்கப்பட்ட ஆலய நுழைவு வாயில் உள்ளது.

இடது புறம் திருமண மண்டபம் வலதுபுறம் தவத்திரு காத்தையா சுவாமிகள் மணி மண்படம் ஆசிரம வளாகம்.

கிழக்கில் உள்ள 5 நிலை ராஜகோபுரம் முன்புறம் இரண்டு புறங்களிலும், விநாயகர், பாலமுருகன் சிறிய சன்னதிகள் மற்றும் தென்புறம் 3 நிலை ராஜகோபுரம் உடையது. 

ராஜகோபுரம் கடந்து நீண்ட மண்டபத்தில் கணபதி, கொடிமரம், பலிபீடம், நந்தி.

தென்புறம் நோக்கிய சன்னதியில் ஸ்ரீ பூர்ணாம்பிகை. 

அடுத்து ஆலயம் உள்ளே துவார பாலகர்கள் மற்றும், கிழக்கு நோக்கிய கருவரை அமைப்பில் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் அருள் பாலிக்கிறார்.
ஸ்ரீ சௌந்தரநாயகி தெற்கு நோக்கிய தனி கருவரையில் உள்ளார்.

சுவாமி கோஷ்ட்டத்தில், தட்சிணாமூர்த்தி,லிங்கோத்பவர், வடக்கில் பிரும்மா, பைரவர், உள்ளனர்.
 63 நாயன்மார்களும் உள்ளனர். வள்ளிதெய்வானையுடன் முருகர், மற்றும் சேக்கிழார், மாணிக்கவாசகர் முதலியோர்கள் உள்ளனர்.

அடுத்துள்ள பிரகாரத்தில், மேற்கில், ஸ்ரீ கணபதி, கருடாழ்வார், ஶ்ரீதேவி, மகாவிஷ்ணு, பூதேவி சன்னதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் தனி சன்னதி, வன்னி மரம், கெஜலெட்சுமி தனி சன்னதி உள்ளது.

மற்றும் துர்க்கா பரமேஸ்வரி, ஆஞ்சநேயர் தனி சன்னதி, கிழக்கில்
நவகிரகங்கள், பைரவர், சூரியன், 

ஆலயம் கற்றளியாக அமைந்துள்ளது பொலிவுடன் உள்ளது.
சிறப்பான அமைப்பு.

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 
Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026 
ஆலயம் மிகவும் முறையான பராமரிப்பில் பூசைகளில் உள்ளது. நாட்டார்கள் அமைப்பு பராமரிப்புடன் நடத்தி வருகிறது.

எல்லா விஷேச கால நடைமுறைகளும் நடைபெற்று வருவதாக கூறுகிறார்கள்.

ஆலயம் வளாகம் பெரியதாக உள்ளதால்
வாகனங்கள் நிறுத்த வசதிகள் உண்டு. பூசா காலங்களில் தரிசனம் செய்யலாம். 

ஆலயம் அருகில் வேறு எந்த கடைகள், குடியிருப்புகள் ஏதும் அருகில் இல்லை.
சிறப்பான ஆலயம், பக்தி உணர்வுடன் கூடிய அமைதி, இயற்கையான மரம், சோலை அமைப்புகளுடன் கூடியது. அற்புத உணர்வுகள் தரும் தலமாக விளங்குகிறது.

8.03.2026 ல் தரிசனம்.
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#பஞ்சபூததலங்கள்அம்மாப்பேட்டை8.3.26
#Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026

பூண்டி - புஷ்பவனேஸ்வரர்புஷ்பவனநாயகி உடனுறை புஷ்பவனேஸ்வரர் ஆலயம்.

4.பூண்டி - புஷ்பவனேஸ்வரர்
புஷ்பவனநாயகி உடனுறை புஷ்பவனேஸ்வரர் ஆலயம்.
பூண்டி வாண்டையர் குடும்பத்தாருக்குச் சொந்தமான ஆலயம். நல்ல பராமரிப்பில் பாதுகாப்பில் உள்ளது.

⛳ இருப்பிடம்

தஞ்சாவூர் - நாகை பிரதான சாலையில்,
அம்மாப்பேட்டைக்கு மேற்கே உள்ளது. சாலைக்கு வடக்கில், பூண்டி என்ற ஊரில் ஈசான பாகத்தில் உள்ள பெரிய ஆலயம்.

🛕ஆலய அமைப்பு

கிழக்கு நோக்கிய ஆலயம். தென்புறம் ஒரு குளம் உள்ளது. 
கிழக்குப்புறம் 5 நிலை ராஜகோபுரம் ஒன்றும், தென்புறம் 3 நிலை ராஜகோபுரம் ஒன்றும் உள்ளது.
வசந்தமண்டபம், கொடிமரம், நந்தி அமைக்கப்பட்டுள்ளது.  

 நுழைவில், மேல் பகுதியில், சிவக்குடும்ப சிற்பங்கள் அழகிய முறையில் பாதுகாப்புடன் உள்ளது. நுழைவு அடுத்து, சுவாமி கிழக்குப் பார்த்து தனி பிராகாரத்துடன் அமைந்துள்ளார். 

அம்பாள் தென் திசை நோக்கி தனி கருவரை அமைப்புடன் உள்ளார்.

தெற்கு பிரகார மண்டபத்தில், 63 வர் உள்ளார்.

கோஷ்ட்டத்தில் தட்சினாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரும்மா, துர்க்கை, தனி சண்டிகேஸ்வரர்.

மேற்கு பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகர், மகாலெட்சுமி, முதலியோர் அமைக்கப்பட்டுள்ளனர்.

கிழக்குப் புறத்தில் தனி நவகிரகம், பைரவர் முதலியோரும் இருக்கின்றனர்.

தென்புறம் தேரடி மண்டபம், மற்றும் பெரிய குளம் ஒன்றும் உள்ளது.

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 
Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026 
இவ்வாலயம் பூண்டி வாண்டையார் குடும்பத்தினருக்குச் சொந்தமானது.
இராவ்பகதூர் அ. வீரைய்யா வாண்டையார் அவர்கள் முதன் முதலாக 1948 ல் ஆலயத்தை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் செய்துவித்தார்கள், தொடர்ந்து, ஆலயம் வளர்ச்சி அடைந்து அடுத்ததடுத்த ஆண்டுகளில் முறையாக கும்பாபிஷேகம் நடத்தி பராமரிப்பில் வைத்துள்ளார்கள்.

ஆலயம் மிகவும் முறையான பராமரிப்பில் பூசைகளில் உள்ளது. 6 கால பூசை ஸ்ரீ புஷ்பவனேஸ்வர ஸ்வாமி தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

எல்லா விஷேச கால நடைமுறைகளும் நடைபெற்று வருவதாக கூறுகிறார்கள்.

ஆலயம் வளாகம் பெரியதாக உள்ளதால்
வாகனங்கள் நிறுத்த வசதிகள் உண்டு. பூசை குருக்கள் வீடும் ஆலயம் அருகிலேயே உள்ளது. தெரிவித்து தரிசனம் செய்யலாம்.

ஆலயம் அருகில் வேறு கடைகள் ஒன்றும் அருகில் இல்லை.

8.03.2026 ல் தரிசனம்.
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#பஞ்சபூததலங்கள்அம்மாப்பேட்டை8.3.26
#Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026

தீபாம்பாள்புரம்.வன்மீகநாதர் - மங்களநாயகி ஆலயம்.⛳அம்மாப்பேட்டை பகுதி ஆலயங்கள்

தீபாம்பாள்புரம்.
வன்மீகநாதர் - மங்களநாயகி ஆலயம்.

⛳ இருப்பிடம்
அம்மாப்பேட்டைக்கு, வடமேற்கில், 3 கி.மீ.யில் உள்ளது.
வன்மீகநாதர் - மங்களநாயகி ஆலயம்.

🛕 ஆலய அமைப்பு
கிழக்கு நோக்கிய ஆலயம்.
3 அடுக்கு ராஜகோபுரம் முன்பு
நந்தி மன்டபம், பலிபீடத்துடன்
கொடி மரம் இல்லை.
மிகப்பெரிய பழமையான, புராதானமான ஆலயம்.
 முன்மண்டபத்தில், விநாயகர், பாலமுருகன், நர்த்தன விநாயகர் உள்ளனர். சுவாமி கிழக்கு நோக்கியுள்ளார். முன் மன்டபத்தில் பெரிய துவாரபாலகர்கள் .
அம்பாள் தனி கருவறையுடன், தெற்குநோக்கியும் அருள் தரும் ஆலயம்.
தியாகராஜர் தனி சன்னதி கிழக்கு நோக்கி உள்ளார்.

உள் சுற்றில், தெட்சிணாமூர்த்தி.
தற்போது பிரகார மண்டபத்தில் தனித் தனி சன்னதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், மகாலெட்சுமி, மற்றும் அனைத்து சுவாமிகளும் தட்சினாமூர்த்திக்கு அருகில், தியாகராஜர் சன்னதிக்கு பின்புறம் வைத்து பூசை செய்யப்பட்டு வந்தது. தற்போது பிரகாரங்களில் வைக்கப்பட்டு ஆலயம் முழுவதும் சீரமைப்பு பணியில் உள்ளது.
உள் பிரகாரம் முழுதும் உள்ள அனைத்து மண்டபங்களும் வெளவால் நெத்தி அமைப்பு சிதலமடைந்துள்ளது. புனரமைப்பு நடைபெற்று வருகிறது.

தனி சன்டிகேஸ்வரர், மற்றும், கோஷ்ட்ட துர்க்கை.

வடகிழக்கில் தீர்த்தக் கினறும் உள்ளது.
முன் ராஜகோபுரம் உள்ளிட்ட பெரிய வெளிப்பிரகாரம், மதில் சுவர்கள், தேர்மண்டபம், ஆலயத்தின் பெருமையும்
புராதானத்தையும் சுட்டிக்காட்டுகின்றது.

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026 
அம்மாப்பேட்டையிலிருந்து ஆலயம் வரை நல்ல சாலை வசதி உள்ளது.
நல்ல பராமரிப்புடன் உள்ளது. பூசை காலங்களில், சென்று தரிசிக்கலாம். மற்ற நேரங்களில், முன் தகவல் கொடுத்து தரிசிக்கலாம். ஆலயம் அருகில்
வேறு எந்த கடைகளும் இல்லை. வாகனங்கள் ஆலயம் முன்புறம் நிறுத்தலாம்.

மிக சிறப்பாக ஒரு காலத்தில் எல்லா விழாக்களுடன் திகழ்ந்திருந்த ஆலய பழமை நன்றாகத் தெரிகிறது.

15.11.2002ல், திருப்பணி செம்மல் கோவை வசந்தக்குமார் அய்யா அவர்களால், பெரும் சிலவில், ஆலயம் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. கல்வெட்டு ஒன்றும் இருந்தது.
தற்போது இந்தப் பெரிய ஆலயம் முழுதும் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் திருப்பணிகள் முடித்து கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
தரிசித்துப் பலன் பெற வேண்டிய பழமையான ஆலயம்.

#சிற்றூர்ஆலயங்கள் 18.02.2023 #மகாசிவராத்திரி சனிமகாபிரதோஷம் ஆலயதரிசனம் 
8.03.2026 ல் மீள்தரிசனம்.
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#அம்மாப்பேட்டை அருகில் உள்ள தலங்கள்8.3.26
#Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026

அம்மாப்பேட்டை - புத்தூர்புற்றிடம் கொண்டீஸ்வரர் - செளந்தரநாயகியம்மன் ஆலயம்⭐அப்பர் பாடிய வைப்புத்தலம்.

2.அம்மாப்பேட்டை - புத்தூர்
புற்றிடம் கொண்டீஸ்வரர் - செளந்தரநாயகியம்மன் ஆலயம்

⭐அப்பர் பாடிய வைப்புத்தலம்.

⛳இருப்பிடம்
தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில், அம்மாபேட்டை அருகில் அம்மாப்பேட்டையின் தென்புறத்தில் புத்தூர் என்ற இடத்தில் உள்ளது.

அம்மாப்பேட்டை - புத்தூர்-
அம்மாப்பேட்டை புதிய பேருந்து நிலையம் எதிரில், உள்ள சாலை வழியாக வந்தால் உட்புறம் உள்ள பெரிய ஏரி கரையில், ஏரியின் தென்புறத்தில் உள்ள ஆலயம்.
அல்லது
அம்மாப்பேட்டை நகரிலிருந்து தென்புறம்  வடுவூர் செல்லும்  சாலையில் வந்து கிழக்கில் திரும்பி பின் ஆலயம் சென்று அடையலாம்.

🛕 ஆலய அமைப்பு: 

ஆலயம் வடபுறத்தில்  மிகப்பெரிய ஏரி உள்ளது.  ஆலயத்திற்கு இராசேந்திர சோழர் காலத்தில் திருபுவனமாதேவி சதுர்வேதி மங்கலம் என்ற பெயர் உள்ளது.

ஆலயம் முன்புறம் ஒரு விநாயகர் ஆலயம், ஏரிக்கரை முன் புத்தூர் படியரிசி மாரியம்மன் முதலிய ஆலயங்கள் உள்ளன.
புற்றிடம் கொண்டீஸ்வரர் - செளந்தரநாயகியம்மன் ஆலயம்
முன்புறம் 3 நிலை ராஜகோபுரம் உள்ளது.
மேற்கு நோக்கிய ஆலயம்.
ஆலய முன் பகுதி பெரிய மண்டபத்தில், தென்மேற்குப் பகுதியில் தனி விநாயகர் உள்ளார்.  கொடிமரம், பலிபீடம், நந்தி அடுத்து,  காட்சி கோபுரத்துடன் கூடிய சுவாமி அம்பாள் கருவரைகள் கொண்ட உள் மண்டபம்.  நுழைவாயிலில் துவர பாலகர்கள்; சுவாமி மேற்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் தனித்தனிக் கருவறையில் உள்ளார்கள். உள் மண்டபத்திலேயே கிழக்கு நோக்கிய வள்ளி, தெய்வானையுடன் முருகன் சன்னதியும் உள்ளது.

பிரகாரத்தில், துர்க்கை, தனி சன்டிகேஸ்வரர், கிழக்கில், நவகிரகங்கள் அமைத்துள்ளனர்.

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026 
ஆலயம் வரை சாலை வசதி உள்ளது.
நல்ல பராமரிப்புடன் உள்ளது. பூசை காலங்கள் தவிர மற்ற நேரங்களில், தகவல் கொடுத்து சென்று தரிசிக்கலாம்.
வேறு எந்த கடைகள், வீடுகள் அருகில் இல்லை.  வாகனங்கள் ஆலயம் முன்புறம் நிறுத்தலாம்.

தெய்வத்திரு ஸ்ரீமான் சா.காசிநாத பாண்டியர் அவர்களால், இக்கோவில் முதல் கும்பாபிஷேகம் 1946 ல் செய்யப்பட்டுள்ளது.  அவர் படமும் தகவலும் உள் மண்டபத்தில் உள்ளது.

1960ல் உயர்திரு A. உத்தண்டராமப் பிள்ளை, சென்னை மாநில இந்துமத அறநிலையப் பாதுகாப்புத்துறை ஆணையர் அவர்களால் குடமுழுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றுள்ளது.

24.01.2011ல் கிராமப் பெரியோர்களால் சிறப்பான முறையில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.
பராமரிப்பில் உள்ள ஆலயம்

ஆலயம் அமைதியான சூழ்நிலையில் உள்ளது. பக்தி பூர்வமான சூழலில் வணங்கலாம்.

சுப்ராம் தரிசனம் 18.02.2023 (மகாசிவராத்திரி / சனி மகாபிரதோஷம்)  மற்றும் 8.3.26 ல் ஆலயம் மீள் தரிசனம்

8.03.2026 ல் மீள்தரிசனம்.
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#பஞ்சபூததலங்கள்  அம்மாப்பேட்டை பகுதி 8.3.26


கோவில்வெண்ணி,ஸ்ரீ வெண்ணீஸ்வரர் ஆலயம்ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத ஸ்ரீ கரும்பீஸ்வரர் ஆலயம். (அம்மாப்பேட்டை பகுதி) திருமுறை தலம்

கோவில் வெண்ணி
கோயில் வெண்ணி வெண்ணி கரும்பேஸ்வரர் கோயில் (Venni Karumbeswarar Temple) 
கோவில்வெண்ணி,
ஸ்ரீ வெண்ணீஸ்வரர் ஆலயம்
ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத ஸ்ரீ கரும்பீஸ்வரர் ஆலயம்.

⛳இருப்பிடம்
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
நீடாமங்கலம் - தஞ்சாவூர் பிரதான சாலையில் கல்லூரிக்கு எதிர்புறம் - வடபுறம் தனி சாலை 500 மீட்டர் தூரத்தில் ஆலயம். 

🏵️சிறப்பு
 சர்க்கரை நோய் (Diabetes) தீர்க்கும் பரிகாரத் தலமாகப் போற்றப்படும், தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலமாகும். கரும்புகளைக் கட்டியது போன்ற லிங்கத் திருமேனி கொண்ட இத்தலம், கரிகால் சோழன் வெண்ணிப் போரில் வென்ற சிறப்பு வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாகும். 
🛐மிகவும் பழமை வாய்ந்த இத்தலத்து இறைவனை, நான்கு யுகங்களிலும் பலரும் வழிபட்டதாக தலவரலாறு சொல்கிறது. 
💫இத்தலம் முசுகுந்த சக்கரவர்த்தி திருப்பணி செய்த தலமாகும். சங்ககாலப் புலவர் வெண்ணிக் குயத்தியார் இங்கு வாழ்ந்துள்ளார்.

கோயில் சிறப்பம்சங்கள்:
மூலவர்: வெண்ணிகரும்பேஸ்வரர் (திரயம்பகேஸ்வரர், வெண்ணிநாதர்).
அம்மன்: அழகிய நாயகி (சவுந்தர நாயகி).
தல விருட்சம்: நந்தியாவர்த்தம்.
சிறப்பு: சர்க்கரை நோய் உள்ளவர்கள் வழிபட்டால் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில் சூரிய மற்றும் சந்திர தீர்த்தங்கள் உள்ளன. கரும்பும் நந்தியாவர்த்தமும் செழித்திருந்த இடமாதலால் 'வெண்ணி' எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. 

பங்குனி மாதம் 2, 3, 4, ஆகிய நாட்களில் இறைவன் திருமேனியை, சூாியன் தீண்டுகிறது.

🛕ஆலய அமைப்பு :
ஆலயம் கிழக்கு நோக்கியது. முன்புறம் அழகிய குளம் அமைந்துள்ளது.

3 நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கியது.
உள் நுழைந்தவுடன், பலிபீடம், நந்தி மண்டபத்துடன் உள்ளது.

⚡ஆலயம் முன்மண்டபத்துடன், சுவாமி அம்பாள் கருவரைகளுடன் உடையது.
சுவாமி கிழக்குப் பார்த்து அமைந்துள்ளார்.
கருவரை அர்த்தமண்டபத்தின் முன் ⚡துவாரபாலகர்கள் சுதையில் அமைக்கப்பட்டுள்ளது. சிறிய விநாயகரும் உள்ளார். முன் மன்டபத்தில் ஒரு உலோக நந்தியும் சுவாமி நோக்கியுள்ளது.
அம்பாள் தெற்கு நோக்கிய தனி கருவரை.

🏵️பிரகாரம் முழுதும் புதிய கல் தரை அமைப்பு. பிரகாரத்தில், வண்ணி மரத்துடன் ஒரு விநாயகர், கோஷ்ட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, தனி சண்டிகேஸ்வரர். 
மேற்கு பிரகாரமண்டபம் முழுதும் வெளவால் நெத்தி மண்டபம்
தனித்தனியாக, விநாயகர், வள்ளிதெய்வானை சுப்பிரமணியர், மகாலெட்சுமி அமைந்துள்ளனர்.
கிழக்கில், பைரவர், சூரியன், நவகிரகங்கள் உள்ளனர்.
⚡நகரத்தார் கட்டிய கற்றளி ஆலய அமைப்பு.

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026 
தற்போது நல்ல சாலை வசதி உள்ளது.
2025 ல் திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேகம் செய்யப்பட்டு ஆலயம் தற்போது பொலிவுடன், நல்ல பராமரிப்புடன் உள்ளது.
ஏராளமான பக்தர்கள் - பரிகாரம் செய்வதற்கும், அர்ச்சனை வழிபாடு செய்வதற்கும் வருகிறார்கள்.
காலை 9 மணிக்குத்தான் ஆலயம் திறக்கப்படுகிறது.
ஒரே ஒரு பூசை பொருட்கள் விற்கும் கடையைத் தவிர வேறு எந்த கடைகள், வீடுகள் அருகில் இல்லை.
வாகனங்கள் ஆலயம் முன்புறம் நிறுத்தலாம்.
தனியார் பராமரிப்பில் உள்ள ஆலயம்.
மீள் தரிசனம் 8.3.24 ல் மற்றும் 8.3.26 ல் தரிசனம் கிடைத்தது.
#திருமுறைதலம்
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#அம்மாப்பேட்டை பகுதியில் சில தலங்கள்8.3.26
#Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026

5. உடையார்கோவில்கரவந்ததீஸ்வரர் - தர்மவல்லி ஆலயம்(நீர் தலம்) பஞ்சபூததலங்கள்அம்மாப்பேட்டை8.3.26

5. உடையார்கோவில்
கரவந்ததீஸ்வரர் - தர்மவல்லி ஆலயம்
(நீர் தலம்) பஞ்சபூததலங்கள்அம்மாப்பேட்டை8.3.26
⛳ இருப்பிடம்
தஞ்சாவூரிலிருந்து நாகை செல்லும் சாலையில் தஞ்சையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ள ஆலயம்.
அம்மாப்பேட்டைக்கு முன் (அருகில்) உள்ளது. பிரதான சாலையில் இருந்து ஆலயத்திற்கு செல்ல பழமையான ஆலய வளைவு ஒன்றும் உள்ளது.

தெற்கில் செல்லும் அந்த சாலையில் சென்றால், பெரிய ஏரி வரும், ஏரியின் மேற்கில் ஆலயம் அமைந்துள்ளது.

⭐ பஞ்சபூததலம் - நீர்
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை நகர் மற்றும் சுற்றிலும் சில புராதான தலங்களை பஞ்ச பூத தலங்களாக எண்ணி வணங்குகிறார்கள்.

💫முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த வந்த சிவனடியர் ஒருவர், சிவனடியார்கள் ஒரே நாளில் சமுத்திர நீராடி, பஞ்ச பூத ஸ்தலங்களை கண்டு சிவனை மனமுருகி வணங்கினால், வேண்டிய அருள் பெறலாம். எண்ணியது திண்ணம் பெறலாம். என்பதை உணர்ந்தார். இருந்தாலும், எவ்வாறு ஒரே நாளில் பஞ்ச பூத தலங்கள் சென்று வணங்குவது என்று எண்ணி மயங்கியபோது அடியார் முன் முனிவர் ஒருவர் வந்து வழிகாட்ட, அவ்வாரே சடையான் மேடு என்ற இடம் துவங்கி தஞ்சையின் மாரியம்மன் கோவில் வரை பெரிய ஏரி வெட்டி, அருகிலேயே பஞ்ச பூத தலங்களை அமைத்தார்.
பஞ்சபூத தலங்கள்: 
1. கீழக்கோவில் பத்து (அம்மாப்பேட்டை) - பூலோக நாதரை பூமித் தலமாகவும்,

2. அம்மாப்பேட்டை அருணாசலேஸ்வரரை நெருப்புத் தலமாகவும்,

3. காலஸ்தீஸ்வரன்பட்டி (சாலியமங்கலம்) காலஹஸ்த்திஸ்வரரை வாயு தலமாகவும்

4. நெல்லித்தோப்பு, பிரம்ம ஞானபுரீஸ்வரர் -வான் தலமாகவும்,

5. உடையார் கோயில் கரவந்தீஸ்வரர் ஆலயம், - நீர் தலமாகவும் அமைத்து வழிபடத் தெடங்கினார்கள்.

⭐ஆலய சிறப்பு
சுவாமி : கரவந்தீஸ்வரர் -
காளா செடியை தலவிருட்சமாக கொண்டதால், திருக்காளாவுடையார் என்பர். கரவிந்தம் என்பது களா மாரத்தைக் குறிக்கும். களா என்பது கரவிந்தம் என்றும் கரவிந்தேஸ்வரர், மருவி கரவந்தீஸ்வரர் என்பதும், களாவுடை பெருமான், என்றும் சுவாமியை குறிப்பிடுகின்றனர்.
சதய நட்சத்திரக்காரர்களுக்கு உகந்ததலம்.

இந்த ஆலயம் சுற்றிலும் தீவு போல திரிபுவனமாதேவி பேரேரி அமைந்துள்ளது. இதை வேத தீர்த்தம் எனப்படுகிறது.

பிரம்மன் சாபம் நீக்கியது, மலையத்துவசன் மன்னன் குருசாபம் போக்கியது, பூமாதேவி வழிபட்டது.
சுவரதன் என்ற மன்னன் சாபம் நீங்கியது.
வீரசோழ மன்னன், பசுவைக்கொன்ற சாபத்தை நீக்கியது.

🛕ஆலய அமைப்பு

கிழக்கு நோக்கிய ஆலயம். 
10ம் நூற்றாண்டு ஆலயம்..
தீர்த்தம் வேத தீர்த்தம் படித்துரை உள்ளது. ஒரு விநாயகர் ஆலயம் உள்ளது.

முதலில் ஒரு காட்சி கோபுரம் உள்ளது. 10.07.1959 ல் மதுரை ஆதீனகர்த்தாவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பலிபீடம் நந்தி மண்டபத்துடன், அடுத்து கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரம்.

உள்வெளி பிரகாரங்கள். முன், வெளி உள் மண்டபங்கள்.
மூலவர் சுயம்புமூர்த்தி கிழக்கு நோக்கியருளுகிறார்.
சுயம்பு உயரமான லிங்கம். அர்த்த, நிருத்த மண்டபங்கள். மண்டத்தில் சுவாமி முன் நந்தி. துவார பாலகர்கள்
அம்பாள்.தர்மவல்லி தனி கருவரை தெற்கு நோக்கிய அமைப்பு.
முன் மண்டபத்தில் சந்திரன்,சூரியன், நால்வர், நவகிரகங்கள், நர்த்தன விநாயகர் கிழக்கு நோக்கி தனிசன்னதியில் உள்ளனர்.

கோஷ்ட்டத்தில், விநாயகர், தட்சினாமூர்த்தி, அண்ணாமலையார் (லிங்கோத்பவர்) இருபுறமும் பிரும்மா, விஷ்ணு தனித்தனியாக உள்ளனர்.
கோமுக பிரும்மா, விஷ்ணு துர்க்கை,
தனி சன்டிகேஸ்வரர் சன்னதியுடன்.

பிரகாரத்தில்,
தென்கிழக்கில், கிழக்கு நோக்கிய தனி பிரதான விநாயகர் சன்னதி ; மேலும், ஆலய சிறப்பாக விநாயகர் சன்னதியில் அனுராதா க்ரமன சரஸ்வதி தெற்குப் பார்த்து அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கும் சிறப்பு.
அருகில் சிறிய அளவில் ராகு கேதுவும் வைத்துள்ளனர்.

மேற்கு பிரகாரம் முழுவதும் வெளவால் நெத்தி மண்டபம் தனித்தனி சன்னதிகளில், குருணி அரிசி விநாயகர், 
பிரம்மபுரீஸ்வரர், ஆனந்தபுரீஸ்வரர், காசிவிஸ்வநாதர், வள்ளிதெய்வானையுடன் சுப்பிரமணியர், மற்றும் வேதபுரீஸ்வரர், சதூர்வேதபுரிஸ்வரர், பூலோக நாதர்,
மகாலெட்சுமி உள்ளனர்.
கிழக்கில், பைரவர், சேக்கிழார் சன்னதிகளும் உள்ளது.

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 
Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026 
 ஆலயம் வரை நல்ல சாலை வசதி உள்ளது.
நல்ல பராமரிப்புடன் உள்ளது. பூசை காலங்களில், சென்று தரிசிக்கலாம். மற்ற ஆலயம் அருகில் வேறு எந்த கடைகளும் இல்லை. சிறிய வாகனங்கள் ஆலயம் முன்புறம் நிறுத்தலாம்.
எல்லா விழாக்களுடன் சிறப்பாக ஆலயம் பராமரிப்பில் உள்ளது. 
தரிசித்துப் பலன் பெற வேண்டிய பழமையான ஆலயம்.

கும்பாபிஷேகம்:
12.07.1959 ஞாயிறு நடைபெற்றுள்ளது
20.05.2013 திங்கள் நடைபெற்றுள்ளது.

நாலுகால பூசைகள் நடைபெறுகிறது.

மிகச்சிறப்புவாய்ந்த புராதானத்தலம்.
தரிசிக்க வேண்டிய அற்புத ஆலயங்களின் ஒன்று.

18.02.2023 #மகாசிவராத்திரி
சனிமகாபிரதோஷம்
மற்றும் 28.10.23 அன்னாபிஷேகம்
#ஆலயதரிசனம் 
8.03.2026 ல் மீள்தரிசனம்.
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#பஞ்சபூததலங்கள்அம்மாப்பேட்டை8.3.26
#Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026

4.கோவிலூர் :நெல்லித்தோப்பு பஞ்சபூத தலம் (வான் தலம்)ஸ்ரீ ஞானபுரீஸ்வரர், ஸ்ரீசெளந்தரநாயகி ஆலயம்.பஞ்சபூததலங்கள்அம்மாப்பேட்டை8.3.26

4.கோவிலூர் :
நெல்லித்தோப்பு 
பஞ்சபூத தலம் (வான் தலம்)

⛳ இருப்பிடம்

தஞ்சாவூர் - நாகை பிரதான சாலையில்,

அம்மாப்பேட்டையிலிருந்து மேற்கே 15 கி.மீ தூரத்தில், சாலைக்கு வடக்கில், பூண்டி -சாலியமங்கலம் அருகில் உள்ள ஆலயம்.

⭐ஆலய சிறப்பு - பஞ்சபூத தலங்களில் இது ஆகாயதலம்.
ஸ்ரீ ஞானபுரீஸ்வரர், ஸ்ரீசெளந்தரநாயகி ஆலயம்.

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை நகர் மற்றும் சுற்றிலும் சில புராதான தலங்களை பஞ்ச பூத தலங்களாக எண்ணி வணங்குகிறார்கள்.

💫முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த வந்த சிவனடியர் ஒருவர், சிவனடியார்கள் ஒரே நாளில் சமுத்திர நீராடி, பஞ்ச பூத ஸ்தலங்களை கண்டு சிவனை மனமுருகி வணங்கினால், வேண்டிய அருள் பெறலாம். எண்ணியது திண்ணம் பெறலாம். என்பதை உணர்ந்தார். இருந்தாலும், எவ்வாறு ஒரே நாளில் பஞ்ச பூத தலங்கள் சென்று வணங்குவது என்று எண்ணி மயங்கியபோது அடியார் முன் முனிவர் ஒருவர் வந்து வழிகாட்ட, அவ்வாரே சடையான் மேடு என்ற இடம் துவங்கி தஞ்சையின் மாரியம்மன் கோவில் வரை பெரிய ஏரி வெட்டி, அருகிலேயே பஞ்ச பூத தலங்களை அமைத்தார்.
பஞ்சபூத தலங்கள்: 
1. கீழக்கோவில் பத்து (அம்மாப்பேட்டை) - பூலோக நாதரை பூமித் தலமாகவும்,

2. அம்மாப்பேட்டை அருணாசலேஸ்வரரை நெருப்புத் தலமாகவும்,

3. காலஸ்தீஸ்வரன்பட்டி (சாலியமங்கலம்) காலஹஸ்த்திஸ்வரரை வாயு தலமாகவும்

4. நெல்லித்தோப்பு, பிரம்ம ஞானபுரீஸ்வரர் -வான் தலமாகவும்,

5. உடையார் கோயில் கரவந்தீஸ்வரர் ஆலயம், - நீர் தலமாகவும் அமைத்து வழிபடத் தெடங்கினார்கள்.

🛕ஆலய அமைப்பு.

கிழக்குப் பார்த்த ஆலயம். ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள ஆலயம்.

முன்புறம் கிழக்கில் சற்று பெரிய குளத்துடன் அமைந்துள்ளது.

கிழக்குப் பார்த்த 3 நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது.

தெற்குப் பக்கம் ஒரு வாசலும் உள்ளது.
ராஜகோபுரம் அடுத்து நந்திபகவான் தனி மண்டபத்துடன் உள்ளார்.
சுவாமி, அம்பாள் இணைந்துள்ள மண்டப முன்முகப்பில் அழகான காட்சி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
அம்பாள் தெற்கு பார்த்து தனியாக உள்ள அமைப்பு; முன்மண்டபமும் உள்ளது.

சுவாமி உள் மண்டபத்துடன் தனி கருவரையில் கிழக்கு நோக்கியுள்ளார்.

உள் மன்டபத்தில், சித்தி விநாயகர், பாலமுருகன், விஸ்வநாதர் விசாலாட்சி உள்ளார்கள். 

கோஷ்ட்டத்தில், நர்த்தன கணபதி, தெட்சிணாமூர்த்தியும், லிங்கோத்பவர்,
பிர்மா, தனி சண்டிகேஸ்வரர், துர்க்கை உள்ளனர்.

பிரகாரத்தில், விநாயகர், வள்ளிதெய்வானையுடன் முருகர், மகாலெட்சுமி தனித்தனி சன்னதிகளுடன் உள்ளனர்.
தலவிருஷம் நெல்லிமரம் உள்ளது.

வடக்குப் பிரகாரத்தில் ஞானலிங்கம் நந்தியுடன் உள்ளது. 

கிழக்கு மூலையில், பைரவர், சனீஸ்வரர், ஹரி ஹர புத்திரர் உள்ளனர்.
நவகிரகம், சந்திரன், சூரியன், உள்ளனர்.

பிரகாரம் முழுவதும் பாதுகாப்புடன் மேற்கூரை அமைக்கப்பட்டது. தரைமுழுதும் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் சார்ந்த நகரத்தார் சமூகத்தினரின் உதவியால், புனரமைப்பு செய்யப்பட்டும்,

நித்திய கால பூசைக்காக, நிலம் தருமம் செய்யப்பட்டுள்ளதற்கும் பழைய கல்வெட்டு உள்ளது.

தற்காலத்தில், 2008ல் மதில் சுவர் கட்ட இந்து அறநிலையத்துறை உதவியுள்ள குறிப்பும் காணப்படுகிறது.

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 
#Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026 
ஆலயம் அருகில் உள்ள வீட்டில் தெரிவித்து, ஆலயம் தரிசனம் செய்யலாம்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு 18.02.2023 அன்று நாங்கள் முதன்முறை தரிசித்தோம். சிவராத்திரி விழாவும் நாட்டியாஞ்சலியும் நடைபெற்றது.

நல்ல பராமரிப்பில் உள்ள ஆலயம்.
சமீபத்தில் குடமுழுக்கு ஆனது. ஆலயம் தற்போது மிகவும் பொலிவுடன் உள்ளது.
2008 ல் ஒரு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
18.02.2023 #மகாசிவராத்திரி சனிமகாபிரதோஷம் #ஆலயதரிசனம்
8.03.2026 ல் மீள்தரிசனம்.
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#பஞ்சபூததலங்கள்அம்மாப்பேட்டை8.3.26
#Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026

3.சாலியமங்கலம்ஸ்ரீஞானாம்பிகை உடனுறைஸ்ரீகாளகஸ்த்தீஸ்வரர் ஆலயம்வாயு தலம்

3.சாலியமங்கலம்
ஸ்ரீஞானாம்பிகை உடனுறை
ஸ்ரீகாளகஸ்த்தீஸ்வரர் ஆலயம்
வாயு தலம்

⛳ இருப்பிடம்
 இது மிகப்பழமையான ஆலயம்.
(சாலியமங்கலத்தில் ஊருக்குள் மேலும் ஒரு சிவன் ஆலயமும் உண்டு).
திருவாரூர் - தஞ்சாவூர் பிராதான சாலையில் (பைபாஸ் சாலை அல்ல அதற்கும் தெற்கில் பழைய சாலைக்கு தென்புறம். FCI குடோனுக்கு பின்புறம் வாய்க்கால் ஒட்டிய கப்பி சாலையில் 500 மீட்டர் செல்ல வேண்டும்.

⭐ஆலய சிறப்பு - பஞ்ச பூததலம் (வாயு தலம்)
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை நகர் மற்றும் சுற்றிலும் சில புராதான தலங்களை பஞ்ச பூத தலங்களாக எண்ணி வணங்குகிறார்கள்.

💫முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த வந்த சிவனடியர் ஒருவர், சிவனடியார்கள் ஒரே நாளில் சமுத்திர நீராடி, பஞ்ச பூத ஸ்தலங்களை கண்டு சிவனை மனமுருகி வணங்கினால், வேண்டிய அருள் பெறலாம். எண்ணியது திண்ணம் பெறலாம். என்பதை உணர்ந்தார். இருந்தாலும், எவ்வாறு ஒரே நாளில் பஞ்ச பூத தலங்கள் சென்று வணங்குவது என்று எண்ணி மயங்கியபோது அடியார் முன் முனிவர் ஒருவர் வந்து வழிகாட்ட, அவ்வாரே சடையான் மேடு என்ற இடம் துவங்கி தஞ்சையின் மாரியம்மன் கோவில் வரை பெரிய ஏரி வெட்டி, அருகிலேயே பஞ்ச பூத தலங்களை அமைத்தார்.
பஞ்சபூத தலங்கள்: 
1. கீழக்கோவில் பத்து (அம்மாப்பேட்டை) - பூலோக நாதரை பூமித் தலமாகவும்,

2. அம்மாப்பேட்டை அருணாசலேஸ்வரரை நெருப்புத் தலமாகவும்,

3. காலஸ்தீஸ்வரன்பட்டி (சாலியமங்கலம்) காலஹஸ்த்திஸ்வரரை வாயு தலமாகவும்

4. நெல்லித்தோப்பு, பிரம்ம ஞானபுரீஸ்வரர் -வான் தலமாகவும்,

5. உடையார் கோயில் கரவந்தீஸ்வரர் ஆலயம், - நீர் தலமாகவும் அமைத்து வழிபடத் தெடங்கினார்கள்.

🛕 ஆலய அமைப்பு
ஸ்ரீஞானாம்பிகை உடனுறை
ஸ்ரீகாளஹஸ்த்தீஸ்வரர் ஆலயம்.
கிழக்கு பார்த்த ஆலயம்
காட்சி கோபுரம் உள்ளது.
உள்ளே பலிபீடம், நந்தி மண்டபம் அடுத்து, முன்மண்டப நுழைவில் மேல் பகுதியில் விநாயகர், சுவாமி அம்பாள் நந்தியுடன் அமர்ந்த கோலம், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் சுதை அமைப்பு.

உள் மண்டபம் வெளவால் நெற்றி அமைப்பு. சுவாமி, அம்பாள் கருவரைகள் இணைப்பு. மண்டபத்தின் தென்புறத்தில் அடியார்களால் 2002 ல் அமைக்கப்பட்ட நால்வர் சிலைகள். மற்றும், கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அமைந்த கருவரைகள்.

ஏகப்பிரகாரம், கோஷ்ட்ட தட்சினாமூர்த்தியும், தனி விநாயகர், வள்ளிதெய்வானையுடன் முருகர் சண்டிகேஸ்வரர், துர்க்கை உள்ளனர்.
வடபுறத்தில் சிறிய ஆஞ்சனேயர் சன்னதி. மேலும், சூரியர், நவகிரகம் உள்ளன.

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 
Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026 

சாலை வசதி சுமாராக உள்ளது.
பூசை காலங்களில், மட்டும் சென்று தரிசிக்கலாம். ஆலயம் அருகில் வேறு எந்த கடைகளோ, குடியிருப்புகள் ஏதும் இல்லை. சிறிய வாகனங்கள் ஆலயம் முன்புறம் நிறுத்தலாம். தரிசித்துப் பலன் பெற வேண்டிய பழமையான ஆலயங்களின் ஒன்று. மிகச்சிறப்பு வாய்ந்த புராதானத்தலம்.

ஒரு கால பூசை ஆலயம்.
அர்ச்சகருக்கு முன் தகவல் கண்டிப்பாக
கொடுத்து செல்ல வேண்டும்.
பல முறை முயன்றும் முதன்முறையாக 08.3.2024 (சிவராத்திரி) அன்று ஸ்ரீ காளஹஸ்த்தீரர் ஆலயம் தரிசனம் கிடைத்தது.

(இந்த ஊருக்கு வடகிழக்குப் பகுதியில் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள அ/மி சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் ஆலய குடமுழுக்கு 12.02.2020ல் நடைபெற்றுள்ளது. ) ஊரில் உள்ள இரண்டு ஆலயங்களுக்கும், ஏகக் குருக்கள்.

8.03.2026 ல் மீள்தரிசனம்.
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#பஞ்சபூததலங்கள்அம்மாப்பேட்டை8.3.26
#Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026

அம்மாப்பேட்டைஅருணாசலேஸ்வரர் -தர்மசவர்த்தினி அம்பாள் (அபிதகுஜாம்பாள்). நெருப்புத்தலம்

2.அம்மாப்பேட்டை
அருணாசலேஸ்வரர் -
தர்மசவர்த்தினி அம்பாள் (அபிதகுஜாம்பாள்). நெருப்புத்தலம்

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை நகர் மற்றும் சுற்றிலும் சில புராதான தலங்களை பஞ்ச பூத தலங்களாக எண்ணி வணங்குகிறார்கள்.

💫முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த வந்த சிவனடியர் ஒருவர், சிவனடியார்கள் ஒரே நாளில் சமுத்திர நீராடி, பஞ்ச பூத ஸ்தலங்களை கண்டு சிவனை மனமுருகி வணங்கினால், வேண்டிய அருள் பெறலாம். எண்ணியது திண்ணம் பெறலாம். என்பதை உணர்ந்தார். இருந்தாலும், எவ்வாறு ஒரே நாளில் பஞ்ச பூத தலங்கள் சென்று வணங்குவது என்று எண்ணி மயங்கியபோது அடியார் முன் முனிவர் ஒருவர் வந்து வழிகாட்ட, அவ்வாரே சடையான் மேடு என்ற இடம் துவங்கி தஞ்சையின் மாரியம்மன் கோவில் வரை பெரிய ஏரி வெட்டி, அருகிலேயே பஞ்ச பூத தலங்களை அமைத்தார்.
பஞ்சபூத தலங்கள்: 
1. கீழக்கோவில் பத்து (அம்மாப்பேட்டை) - பூலோக நாதரை பூமித் தலமாகவும்,

2. அம்மாப்பேட்டை அருணாசலேஸ்வரரை நெருப்புத் தலமாகவும்,

3. காலஸ்தீஸ்வரன்பட்டி (சாலியமங்கலம்) காலஹஸ்த்திஸ்வரரை வாயு தலமாகவும்

4. நெல்லித்தோப்பு, பிரம்ம ஞானபுரீஸ்வரர் -வான் தலமாகவும்,

5. உடையார் கோயில் கரவந்தீஸ்வரர் ஆலயம், - நீர் தலமாகவும் அமைத்து வழிபடத் தெடங்கினார்.
பஞ்சபூத தலங்களில் இது நெருப்புத்தலம்.

⛳இருப்பிடம்
தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில், அம்மாப்பேட்டை நகரில், வட கிழக்கு பகுதியில், அவளிவநல்லூர் (பாடல் தலம்) செல்லும் வழியில் உள்ளது.

கிழக்குப் பார்த்த ஆலயம்

🛕 ஆலய அமைப்பு: 
ஆலயம் தென்புறம் ஒரு குளம் உள்ளது.
வடகரையில் கிழக்கு நோக்கிய பழம்பெருமை மிக்க ஆலயம்.
 3 நிலை ராஜகோபுரம் தற்போது புதிதாக 2025 கும்பாபிஷேகம் போது கட்டப்பட்டுள்ளது.

ராஜகோபுரம் முன் கோபுரம் அருகில் இருபுறமும் ஒரு சிறிய விநாயகர், மற்றும் முருகர். உள்ளனர்.
ராஜகோபுரம் கடந்தவுடன் பலிபீடம் மற்றும் முன் மண்டபம். 
மன்டபத்தின் முகப்பில் விநாயகர், முருகர், சுவாமி அம்பாள் ரிஷபத்துடன் காட்சி தரும் அமைப்பும் உள்ளது.

மண்டபத்தில் சுவாமி நோக்கி ஒரு நந்தியும் உள்ளது. உள்நந்தி சுவாமி கருவரை அர்த்தமன்டபத்திலும் உள்ளது.

சுவாமி கிழக்கு நோக்கியும் அம்பாள் தெற்கு நோக்கியும் தனித்தனி (கருவரை களுடன்) சன்னதிகள் உண்டு.
சுவாமி கருவரை இடது புறம் தனி சன்னதியில் வீரமா காளியம்மன் சன்னதி சிறப்பு ஒன்றும் உள்ளது.

பிரகாரத்தில், நால்வர் சன்னதி , மேற்கு கன்னிமூலையில் தனி விநாயகர், மேற்கில் வள்ளி, தெய்வானையுடன் முருகர் சன்னதி, மேலும், காசிலிங்கம், மகாலெட்சுமி, ராமலிங்கம் மூன்றும் சேர்த்து, ஒரு சன்னதியும் உண்டு.

கோஷ்ட்டத்தில், நர்த்தன விநாயகர், தட்சினாமூர்த்தி, லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், துர்க்கையம்மனுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.  

வடகிழக்கு பகுதியில், மேற்கு நோக்கியவாறு, தனி பைரவர், மற்றும், சனிஸ்வரர், பைரவர், சிவ சூரியன் மூவரைக் கொண்டு தனி சன்னதியும் உள்ளது.

🏵️ஆலய சிறப்பு:
அம்பாள் திருமுடிக்கு மேல், ஸ்ரீசக்கர பிரதிஸ்டை உள்ளது சிறப்பு.
வித்ரமாதித்ய மன்னன் வழிபட்ட வீரமாகாளியம்மன்,
ஸ்தலவிருஷம் வண்ணி மரம், மற்றும் விநாயகர், மேலும் வில்லேந்திய வேலவர், சோமஸ்கந்தர். இவர்களை
தனித்த சிறப்புகளால், பிரார்த்தனை செய்து பக்தர்கள் பரிகாரம் செய்து அருள் பெற்று வருகிறார்கள்.

 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#Subbram🔱🇮🇳
ஆலயம் வரை சாலை வசதி உள்ளது.
நல்ல பராமரிப்புடன் உள்ளது. பூசை காலங்களில், சென்று தரிசிக்கலாம்.
வேறு எந்த கடைகள், வீடுகள் அருகில் இல்லை. வாகனங்கள் ஆலயம் முன்புறம் நிறுத்தலாம்.

அம்பாள் சன்னதி தெற்கு புறவாசல் வழியாக ஆலயம் உள்நுழைவு .

கும்பாபிஷேகம் 2025ல் நடைபெற்றவுடன், 15.09.2025ல் ஸ்ரீ அருணாசலேஸ்வரர் அருட்பணி மன்றத்தின் கடும் முயற்சியால், பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஆலயம் புணரமைப்பு செய்யப்பட்டு, புதியராஜகோபுரம் ஏற்படுத்தப்பட்டு, ஆலயம் சீரமைக்கப்பட்டும் கும்பாபிஷேகம் பெருஞ்சிறப்பாக நடைபெற்றது.
10.07.25 பெளர்னமி முதல் ஆலயம் சுற்றி கிரிவலம் செல்கிறார்கள்.

18.2.2023 சிவராத்திரி / சனிபிரதோஷம் தரிசனம். மேலும், 28.10.23 அன்னாபிஷேகம். மற்றும் 8.3.26 ல் தரிசனம் செய்துள்ளோம்.

8.03.2026 ல் மீள்தரிசனம்.
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#பஞ்சபூததலங்கள்அம்மாப்பேட்டை8.3.26

பஞ்சபூத தலங்கள் தஞ்சை -அம்மாப்பேட்டை அருகில்.அம்மாப்பேட்டை -கீழக்கோவில்பத்துஸ்ரீ பூலோகநாதர் - ஸ்ரீ பூலோகநாயகி ஆலயம். - பூமி தலம்

பஞ்சபூத தலங்கள்  
தஞ்சை -அம்மாப்பேட்டை அருகில்.
அம்மாப்பேட்டை -
கீழக்கோவில்பத்து
ஸ்ரீ பூலோகநாதர் - ஸ்ரீ பூலோகநாயகி ஆலயம். - பூமி தலம்
பயண அனுபவக் குறிப்புகள்
சுப்ராம்.அருணாசலம்
8.3.2026
💫தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை நகர் மற்றும் சுற்றிலும் சில புராதான தலங்களை பஞ்ச பூத தலங்களாக எண்ணி வணங்குகிறார்கள்.

💫முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த வந்த சிவனடியர் ஒருவர், சிவனடியார்கள் ஒரே நாளில் சமுத்திர நீராடி, பஞ்ச பூத ஸ்தலங்களை கண்டு சிவனை மனமுருகி வணங்கினால், வேண்டிய அருள் பெறலாம். எண்ணியது திண்ணம் பெறலாம். என்பதை உணர்ந்தார். இருந்தாலும், எவ்வாறு ஒரே நாளில் பஞ்ச பூத தலங்கள் சென்று வணங்குவது என்று எண்ணி மயங்கியபோது அடியார் முன் முனிவர் ஒருவர் வந்து வழிகாட்ட, அவ்வாரே சடையான் மேடு என்ற இடம் துவங்கி தஞ்சையின் மாரியம்மன் கோவில் வரை பெரிய ஏரி வெட்டி, அருகிலேயே பஞ்ச பூத தலங்களை அமைத்தார்.
பஞ்சபூத தலங்கள்: 
1. கீழக்கோவில் பத்து (அம்மாப்பேட்டை) - பூலோக நாதரை பூமித் தலமாகவும்,

2. அம்மாப்பேட்டை அருணாசலேஸ்வரரை நெருப்புத் தலமாகவும்,

3. காலஸ்தீஸ்வரன்பட்டி (சாலியமங்கலம்) காலஹஸ்த்திஸ்வரரை வாயு தலமாகவும்

4. நெல்லித்தோப்பு, பிரம்ம ஞானபுரீஸ்வரர் -வான் தலமாகவும்,

5. உடையார் கோயில் கரவந்தீஸ்வரர் ஆலயம், - நீர் தலமாகவும் அமைத்து வழிபடத் தெடங்கினார்.

💫இந்த செய்தி சாலியமங்கலம் காலஹஸ்தீஸ்வர் ஆலயத்திலும், வேறு சில ஆலய குறிப்புகளிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றும்கூட இந்த வழிபாடுகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.

💫நாங்கள் 8.03. 2026 ஞாயிறு அன்று இவ்வாலயங்களை மையமாக வைத்து, அம்மாப்பேட்டை அருகில் உள்ள மற்ற சில புராதான தலங்களையும் சேர்த்து தரிசிக்கும் வாய்ப்பு பெற்றோம்.
💫💻 இந்த ஆலங்களை தரிசனம் செய்ய விரும்புபவர்களுக்கு உதவலாம் என்ற நம்பிக்கையில் சில வலைதள செய்திகளுடன், எமது பயண அனுபவக் குறிப்புகளுடன் தந்துள்ளேன்.
அம்மாப்பேட்டை -
கீழக்கோவில்பத்து
ஸ்ரீ பூலோகநாதர் - ஸ்ரீ பூலோகநாயகி ஆலயம். - பூமி தலம்
⛳ இருப்பிடம்
தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில், அம்மாபேட்டை நகரின் மேற்குப் பகுதியில் உள்ள கீழ்க்கோவில்பத்து என்ற பகுதியில் உள்ள பழமையான ஆலயம்.
இறைவன்/இறைவி: பூலோகநாதர் / பூலோக நாயகி.

⭐ஆலய சிறப்பு - பஞ்சபூத தலங்களில் பூமித்தலம்.

ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்த இந்த ஆலயம், சொந்த வீடு/நிலம் அமையவும், வாஸ்து தோஷங்கள் நீங்கவும் வழிபடப்படும் சிறப்புமிக்க சிவாலயமாக இத்தலம் போற்றப்படுகிறது. 

மேற்கு நோக்கிய ஆலயம்.
ஆயிரம் ஆண்டு பழமையும், புராதனமும் உள்ள ஆலயம். வாஸ்து பரிகார ஆலயம்.

🛕ஆலய அமைப்பு
3 நிலை ராஜகோபுரம் மேற்கில் உள்ளது. உள் நுழைந்தவுடன், ஒரு நந்தி சிறிய மண்டபத்துடன் உள்ளது.
சுவாமி அம்பாள் ஆலய பொது மண்டபம் முகப்பில் கைலாயக்காட்சியுடன் சிவகுடும்பமாக காட்சி தருகிறார்கள்.

சுவாமி மேற்கு நோக்கிய கருவரை, அர்த்த மண்டபம், நிருத்தமண்டபம், சுவாமி உள் மண்டபத்தில் சிறிய நந்தியும் உள்ளது.

அம்பாள் தெற்குநோக்கி உள்ளார்கள்.
அம்பாள் கருவரை உள்ள வெளி மண்டபத்தில் விசாலாட்சி, விஸ்வநாதர், சனிஸ்வரர் ஒரு சன்னதியிலும், பைரவர் மற்றும் சூரியன் ஒரு சன்னதியிலும், அமைக்கப்பட்டுள்ளது.

பிரகாரத்தில் கன்னி மூலையில் வன்னி விநாயகர் உள்ளார். வட மேற்கு மூலையில் மகாலெட்சுமியும், வள்ளிதெய்வானையுடன் சுப்பிரமணியரும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளார்கள்.
வடக்கில் தனி துர்க்கை தனி சன்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.
தெற்கில் தட்சினாமூர்த்தி, 

அம்பாள் சன்னதி தெற்கு புறவாசல் வழியாக ஆலயம் உள்நுழைவு.
தெற்கு பக்கம் பிரதான சாலையிலிருந்து ஆலயம் செல்லும் வழியில் அம்பாள் சன்னதி நோக்கி ஒரு சிறிய ராஜகோபுரம் ஒன்றும் உள்ளது. பிரதான சாலையில் இருந்து ஆலயம் வரலாம்.

ஆலயம் அடுத்து, தென்திசையில் பெரியகுளம் ஒன்றும் உள்ளது.

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
ஆலயம் வரை சாலை வசதி உள்ளது.
நல்ல பராமரிப்புடன் உள்ளது. பூசை காலங்களில், சென்று தரிசிக்கலாம். மற்ற நேரங்களில், முன் தகவல் கொடுத்து தரிசிக்கலாம். ஆலயம் அருகில்
வேறு எந்த கடைகளும் இல்லை. வாகனங்கள் ஆலயம் முன்புறம் நிறுத்தலாம்.

கும்பாபிஷேகம் 2025ல் நடைபெற்றவுடன், உள்ளூர் வெளியூர் பக்தர்கள் கடும் முயற்சியால், ஆலயம் புணரமைப்பு செய்யப்பட்டு, புதியராஜகோபுரம் ஏற்படுத்தப்பட்டு, முழுவதுமாக ஆலயம் சீரமைக்கப்பட்டு திருப்பனி வேலைகள் முடிந்து 100 ஆண்டுகளுக்குப் பிறகு 
 14.09.2025ல் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. தற்போது பராமரிப்பில், பூசையில் உள்ளது.

18.02.2023 மகாசிவராத்திரியில் தரிசனம்
8.03.2026 ல் மீள்தரிசனம்.
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#பஞ்சபூததலங்கள்அம்மாப்பேட்டை8.3.26
பஞ்சபூத தலங்கள் தஞ்சை -அம்மாப்பேட்டை 

மாசிமகம் - ஆலய தரிசனம் - திருவிடைமருதூர், குடந்தை நாகநாதர், ஆதி கும்பேஸ்வரர் 2.3.26

திருவிடைமருதூர் - ஸ்ரீ மகாலிங்கஸ்வாமி ஆலயம்
2.3.2026 மீள் தரிசனம்
#subbramசுப்ராம் 
#என்றும்_அன்புடன் 
#சுப்ரம்அருணசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
மாசி மகம்
ஸ்ரீ பிரஹன்நாயகி சமேத ஸ்ரீ நாகநாதர் ஆலயம்
கும்பகோணம்
2.03.2026 தரிசனம்
#subbramசுப்ராம்
#என்றும்_அன்புடன் 
#சுப்ரம்அருணசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
ஆதி கும்பேஸ்வரர் ஆலயம்
மாசி மகம்
கும்பகோணம்
2.03.2026 தரிசனம்
#subbramசுப்ராம்
#என்றும்_அன்புடன் 
#சுப்ரம்அருணசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

கும்பகோணம் ஸ்ரீ வரதராஜபெருமாள் ஆலயத்தில், 12 ஆண்டு களுக்கு ஒரு முறை காட்சி தரும் அத்திவரதர் தரிசனம்.

கும்பகோணம் ஸ்ரீ வரதராஜபெருமாள் ஆலயத்தில், 12 ஆண்டு களுக்கு ஒரு முறை காட்சி தரும் அத்திவரதர் தரிசனம்.
2.03.2026
#subbramசுப்ராம் 
#என்றும்_அன்புடன் 
#சுப்ரம்அருணசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

கும்பகோணம் ஸ்ரீ வரதராஜபெருமாள் ஆலயத்தில், 12 ஆண்டு களுக்கு ஒரு முறை காட்சி தரும் அத்திவரதர் தரிசனம்.

கும்பகோணம் ஸ்ரீ வரதராஜபெருமாள் ஆலயத்தில், 12 ஆண்டு களுக்கு ஒரு முறை காட்சி தரும் அத்திவரதர் தரிசனம்.
2.03.2026
#subbramசுப்ராம் 
#என்றும்_அன்புடன் 
#சுப்ரம்அருணசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
https://www.facebook.com/share/p/1EDoA9BrU4/

தாத்தையங்கார்பேட்டைஅருள்மிகு காசி விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாத சுவாமி திருக்கோயில்.தாத்தையங்கார்பேட்டை, முசிறி வட்டம், திருச்சி மாவட்டம்.

தாத்தையங்கார்பேட்டை
அருள்மிகு காசி விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாத சுவாமி திருக்கோயில்.
தாத்தையங்கார்பேட்டை, முசிறி வட்டம், திருச்சி மாவட்டம்.

திருச்சியிலிருந்து சுமார் 57 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் சிம்ம வாகனத்தில் சம்ஹார மூர்த்தியாக பஞ்சமுக பைரவர் எழுந்தருளியிருப்பது போன்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டு, எதிரிகளின் தொல்லை நீக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டையிலுள்ள அருள்மிகு காசி விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாதர் திருக்கோயில்.

🛕கோயில் அமைப்பு
இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் கிழக்குப் பகுதியின் உள் நுழைவு வாயிலாகவும் உள்ளது.  

முன்மண்டபத்தில் சூரியன், சந்திரன் மேற்கு நோக்கியுள்ளார்கள். விநாயகர், கொடிமரம் பலிபீடம் அடுத்து நந்தி.

நந்தியெம்பெருமானின் சிறப்பு: இத்திருக்கோயிலில் கொடிமரத்துக்கு அருகில் அமைந்துள்ள நந்தியெம்பெருமான், சற்று வித்தியாசமான கோணத்தில் எழுந்தருளியுள்ளார்; அதாவது இறைவன் காசி விசுவநாதரையும், பஞ்சமுக பைரவரையும் ஒரே நேரத்தில் பார்த்தவாறு, திரும்பிய கோணத்தில் நந்தியெம்பெருமான் காட்சித் தருகிறார். இந்த நந்தியெம்பெருமானுக்கு பிரதோஷ காலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இவர் நன்மைகளைத் தரும் நந்தியெம்பெருமானாக பக்தர்களால் போற்றப்படுகிறார்.

அடுத்துள்ள உள்மன்டபத்திலிருந்து, கிழக்கு நோக்கிய இறைவர் சன்னதியும், தெற்கு நோக்கிய இறைவி சன்னதியும் ஒருங்கே தரிசிக்கலாம்.

இறைவன் காசி விசுவநாத சுவாமி: இத்திருக்கோயில் இறைவன் காசி விசுவநாத சுவாமி என்றழைக்கப்படுகிறார். மற்ற கோயில்களில் இல்லாத வகையில், இங்குள்ள இறைவன் கருவறை சன்னதி சற்று வித்தியாசமான முறையில் காணப்படுகிறது. இந்த சன்னதியைச் சுற்றி மூன்று புறங்களிலும் திறந்த நிலையைக் கொண்டு (ஜன்னல் போன்றது) காணப்படுகிறது.

குழந்தை வரம் வேண்டிய தம்பதியர், காசியிலிருந்து லிங்கத்தைக் கொண்டு வந்து இங்கு பிரதிஷ்டை செய்ததாக செவிவழிச் செய்திகள் கூறப்படுகின்றன. இதனாலேயே இத்திருக்கோயில் இறைவனுக்கு காசி விசுவநாதர் என்று  
பெயர் வந்ததாகக் கூறுவர். 

கிழக்கு நோக்கிய திசையில் சன்னதியைக் கொண்டுள்ள இறைவன், பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றித் தரும் நாயகராகத் திகழ்கிறார்.
இறைவி காசி விசாலாட்சி: தெற்குத் திசை நோக்கிய நிலையில் காசி விசாலாட்சி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. நின்ற கோலத்தில் சாந்த சொரூபியாகக் காட்சியளிக்கும் காசி விசாலாட்சி அம்மன், தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வருபவராகத் திகழ்கிறார்.

ஆறடி உயரத்தில் அனைத்துவித அம்சங்களையும் கொண்டு, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி அருளுகிறார் காசி விசாலாட்சி அம்மன்.

கோஷ்ட்டத்தில், விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்னு, பிரும்மா, துர்க்கை, மற்றும் சண்டிகேஸ்வரர் தனி சன்னதிகளும் உள்ளன. 

பிரகாரம்
தென்புற பிரகாரத்தில் 63 நாயன்மார்களும் உள்ளனர். காசிவிஸ்வநாதர், விசாலாட்சி சன்னதிகளும், உள்ளன.

ராஜ விநாயகர்: 
இக்கோயிலில் ராஜ விநாயகர் என்ற பெயரில் சிறப்பு வாய்ந்தவராக எழுந்தருளியுள்ளார். இந்த விநாயகர் சிற்பத்தில் அவரது கை, கால்கள் நுணுக்கமாக தெரியும் வகையில் அமைந்துள்ளது. தன்னை நாடி வரும் பக்தர்களின் வினைகளைத் தீர்த்து வைக்கும் வல்வவராக இத்திருக்கோயில் ராஜ விநாயகர் திகழ்கிறார்.

வள்ளி-தெய்வசேனா சமேத . முருகப்பெருமான்: இக்கோயில் தனி சன்னதி கொண்டு வள்ளி-தெய்வசேனா சமேதராய் அருள்மிகு முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். இங்கு அமைந்துள்ள முருகப்பெருமான் தனது நெஞ்சில் திரிசூலம் ஏந்தியவாறு, மயில் வாகனத்தில் காட்சியளிப்பதும் மற்ற கோயில்களில் இல்லாத வகையில் அமைந்துள்ள தனிச் சிறப்புக்குரியதாகும்.

கல்யாண சுப்பிரமணியர் தனி சன்னதியில் உள்ளார். மேலும், ஐய்யப்பன் சன்னதி, சுவாமி சன்னதி, கஜலட்சுமி அம்மன் தனி சன்னதி, அருள்மிகு சரசுவதி அம்மன் வீணை ஏந்திய கோலத்திலும், காட்சியளிக்கின்றனர். நடராஜர் சன்னதியில் ஓவியமாக உள்ளார்.

பஞ்சமுக பைரவர்: 
பொதுவாக சிவன் கோயில்களின் காவலராகக் கருதப்படுவர் பைரவர். ஒவ்வொரு கோயிலும் பைரவர் சன்னதி தனிச் சிறப்பைக் கொண்டிருக்கும். கால பைரவர், சொர்ண ஆகர்ஷண பைரவர், ஞான பைரவர் போன்ற பெயர்களைக் கொண்டிருப்பார்.

ஆனால், பஞ்சமுகங்களைக் கொண்டு சம்ஹார மூர்த்தியாக சிம்ம வாகனத்தில் பைரவர் காட்சியளிப்பது இந்தியாவிலேயே தமிழகத்தின் திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டையில் அமைந்துள்ள காசி விசுவநாதசுவாமி திருக்கோயிலில்தான். இவரே எதிரிகளின் தொல்லை நீக்கும் மற்றும் திருமணத் தடை நீக்கும் பரிகார அதிபதியாகவும் திகழ்கிறார்.
பைரவரின் வாகனம் நாயாகும். ஆனால், இக்கோயில் தனிச் சிறப்புடன் சிம்ம வாகனத்தில் பஞ்சமுக பைரவர் காட்சியளிக்கிறார்.
பூசை/ பரிகாரங்கள்
வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி நாள்களில் பூசணிக்காய், தேங்காய், மிளகுத் தீபமேற்றி, பக்தர்கள் வழிபட்டு தங்களது பரிகாரப் பிரார்த்தனைகளை மேற்கொள்கின்றனர். தங்களது பிரார்த்தனைகள் நிறைவேறிய பின்னர், பைரவருக்கு சிறப்பு வழிபாடுகளையும் அவர்கள் மேற்கொள்கின்றனர்.

திருமணத் தடை நீக்குதல், தொழிலில் ஏற்படும் கண் திருஷ்டிகளைக் களைதல், ராகு திசை பாதிப்பிலிருந்து நீங்குதல், எதிரிகளின் தொல்லை நீங்குதல் போன்றவற்றின் பரிகார அதிபதியாக இத்திருக்கோயில் பஞ்சமுக பைரவர் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

தல விருட்சம்: இக்கோயிலின் தல விருட்சமாக வில்வமரம் அமைந்துள்ளது. 
மேலும், வடகிழக்கு மூலைப் பகுதியில், 
நவக்கிரக நாயகர்களின் தனி சன்னதியும் உள்ளன.
பூசைகள் / திருவிழாக்கள்
இக்கோயிலில் காரணாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆடி மாதம் ஆடி கிருத்திகை, சங்கடஹரசதுர்த்தி, தைத் திருநாள் போன்றவை நடைபெறுகின்றன. பங்குனி மாதம் பங்குனி உத்திரம் திருவிழாவாக நடைபெறுகிறது.
மாதத்தில் வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி தினங்களில் பஞ்சமுக பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் இக்கோயிலில் பள்ளியறை பூஜையும் தனி விசேஷமானது. 

குடமுழுக்கு: 1994, ஜனவரி 26 ஆம் தேதி இக்கோயிலில் குடமுழுக்கு நடத்தப்பட்ட நிலையில், சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது..

கோயில் நடைதிறப்பு: தாத்தையங்கார்பேட்டை அருள்மிகு காசி விசுவநாத சுவாமி திருக்கோயில் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.45 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

எப்படிச் செல்வது? 
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 57 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், நெ.1.டோல்கேட், மண்ணச்சநல்லூர், துறையூர் வழியாக இக்கோயிலுக்கு வரலாம்.

பெரம்பலூர், துறையூர் வழியாகவும்,
 தாத்தையங்கார்பேட்டைக்கு வந்து கோயிலை அடையலாம்.

குன்னம் வழியாக பெரம்பலூர், துறையூர் வழியாகவும்,

குளித்தலை, முசிறி வழியாகவும்,
வந்து, அங்கிருந்து தாத்தையங்கார் பேட்டைக்கு வந்து சேரலாம்.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
ஆலயம் மிகவும் பழமையானது. சமீபத்திய கும்பாபிஷேகத்திற்குப் பிறகு பொலிவாக உள்ளது. நகரில் உள்ளதால், வழிபாடுகள் சிறப்பாக உள்ளது. ஆலயம் தெற்குப்பக்கமும் ஒரு வழி உள்ளது. கிழக்குப்புறம் வாகனங்கள் நிறுத்தலாம்.
பக்தர்கள் சபை உள்ளது. வழிபாடுகள் பூசைகள் நடைபெற்று வருகின்றன.
அமைதியும், ஆன்மீக உணர்வும் தரும் புராதான ஆலயம்.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
வலைதள தகவல்களுடன் 💻📡📚 
#Subbramசுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏 22.02.2026
#சுப்ரம்அருணசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🛕🛐
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🔱 22.02.2026
#கொல்லிமலை

காருகுடி கைலாசநாதர் கோயில்🪷திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முசிறி வட்டத்தில், தாத்தையங்கார்பேட்டை அருகில் அமையப் பெற்றுள்ளது; காருகுடி அருள்மிகு கருணாகரவள்ளி அம்மன் உடனுறை கைலாசநாதர் சுவாமி திருக்கோயில்.

காருகுடி கைலாசநாதர் கோயில்
🪷திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முசிறி வட்டத்தில், தாத்தையங்கார்பேட்டை அருகில் அமையப் பெற்றுள்ளது; காருகுடி அருள்மிகு கருணாகரவள்ளி அம்மன் உடனுறை கைலாசநாதர் சுவாமி திருக்கோயில்.
ஆகும்.

🌿திருச்சியிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

🍁சுவாமி : கைலாசநாதர்
🪷அம்பாள்: கருணாகரவல்லி

🍀நவக்கிரக நாயகர்களில் ஒருவரான சந்திரபகவான், 27 நட்சத்திரங்களில் கடைசி நட்சத்திர தேவியான ரேவதி ஆகியோர் வழிபட்ட தலமாகும். சந்திர பகவான் ரேவதி நட்சத்திர தேவியை மணந்த பின்னர், இருவரும் சிவபெருமானை தரிசித்து அருள் வேண்டியதால், சந்திரனோடு 27 நட்சத்திர பத்தினிகளையும் ஒருசேர, மூன்றாம் பிறைச் சந்திரனைச் சூடிய கைலாசநாதப் பெருமானை சூரிய ஹோரை நேரத்தில் வணங்குவதற்குக் கருணை புரிந்த திருக்கோயில் என்ற சிறப்புக்குரியது காருகுடி. இறைவன் கைலாசநாதர், இறைவி கருணாகரவல்லியுடன் அவர்களுக்கு காட்சி தந்த இடமே இத்திருத்தலம் ஆகும்.

🍀ரேவதி என்ற பெயரைக் கொண்ட பெண்கள், ரேவதி நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது காருகுடி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து இறைவன், இறைவியை வழிபட்டால், அவர்களின் சுமங்கலித்துவம் பெருகும் என்பது ஐதீகம். மேலும், கார் எனப்படும் ஏழுவகை மேகங்களும் ரேவதி நட்சத்திர நாளில் இங்கு வழிபாடு செய்கின்றன என்பதும் ஐதீகமாக உள்ளது. 

🍀ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு ஏற்படும் தோஷங்களை நிவர்த்தி செய்யும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது தோசம் நீங்க இக்கோயிலில் வழிபாடு செய்கின்றனர். மேலும், கண், நீர் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் இக்கோயிலில் பரிகார பூசைகள் நடைபெறுகின்றன.
🌟கோயில் வரலாற்றுச் சிறப்பு

சுமார் 1800 வருடங்களுக்கு முன்பு கொல்லிமலைப் பகுதியை வல்வில் ஓரி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் இக்கோயிலைப் புனரமைத்துக் கட்டியுள்ளான்.‌ அதன் பின்னர் கி. பி. 1266ஆம் வருடங்களில் கருநாடக அரசன் போசல வீரராமநாதன் இக்கோயிலுக்கு நிறைய நிலங்களைத் தானமாகக் கொடுத்து பூசைகள் தடையின்றி நடைபெறுமாறு செய்துள்ளான். கி. பி. 1541 மற்றும் 1619ஆம் வருடங்களில் இராமச் சக்கரவர்த்தி என்னும் அரசன் நில தானங்கள் வழங்கியுள்ளது;
இக்கோயில் குறித்த வரலாற்றுத் தகவல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

💥காரிகுடி என்றழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், பின்னர் மருவி காருகுடியானது. 

🛕ஆலய அமைப்பு:
3 நிலை ராஜகோபுரம் தெற்குப்புறம் இருக்கிறது. ஆலய நுழைவு வாசலாக உள்ளது. உள்பிரகாரத்தில், தென்புறம் ஒரு காட்சி கோபுரம் உள்ளது.
கிழக்கு நோக்கிய ஆலயம். சுவாமி அம்பாள் கருவரைகளுக்கு முன்புறம் பெரிய முன் மண்டபம் உள்ளது.

🌾முன் மன்டபத்தில், போடி நாயக்கர் திருமேனியும் அமைந்துள்ளது. 
மேலும், பெரிய நந்தி சுவாமியின் கருவறை நோக்கியவாறு உள்ளார்.  
முன்மண்டபத்தின் வட கிழக்குப் பகுதியில் நவகிரகங்கள் உள்ளன.
மண்டபத்திலிருந்து கருவரை நுழைவு மண்டபத்தில் துவாரபாலகர்கள் சிலைகள் கம்பீரமான கல்சிலை அமைப்பு.

🍂அடுத்து உள் மண்டபம். சுவாமி கிழக்கு நோக்கிய கருவரை அமைப்பும், அம்பாள் தெற்கு நோக்கிய அமைப்பும் உடையது.

🛐கைலாசநாதர் சுவாமி
இறைவன் கைலாசநாதர் சுவாமி
கருவறையில் சிவலிங்க வடிவில் கைலாசநாதர் சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார். அழகான பெரிய லிங்க மூர்த்தத்தை இந்த இறைவன் கொண்டிருக்கிறார்.

❄️சந்திர பகவானுக்கும், ரேவதி நட்சத்திர தேவிக்கும் இக்கோயில் இறைவன், இறைவி கருணைக் கொண்டு காட்சியளித்த சிறப்புக்குரியதால், இறைவனுக்கு கைலாசநாதர் எனப் பெயர் ஏற்பட்டது. தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றித் தரும் கருணைமிக்க இறைவனாக கைலாசநாதர் எழுந்தருளியுள்ளார்,

🛐இறைவி கருணாகரவள்ளி அம்மன்
மிகுந்த வரப்பிரசாதியான கருணாகரவள்ளி அம்மன் பல்வேறு சிறப்புகளைக் கொண்டவர். சூரியன்-ரேவதி நட்சத்திர தம்பதி மீது கருணை கொண்டு, காருகுடிக்கு அழைத்து வந்து சுவாமியுடன் காட்சியளித்த சிறப்புக்குரிய கருணாகரவள்ளி அம்மன், தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைக்கும் இறைவியாகத் திகழ்கிறார்.

💢கருவரைக் கோஷ்ட்டத்தில் 
தட்சினாமூர்த்தி, பெருமான், பிரம்மன்,
மற்றும், கோமுக துர்க்கை என்னும் சிறப்பு வாய்ந்த துர்க்கை அம்மனாக எழுந்தருளியிருக்கிறார். அதாவது பசுவின் முகத்தின் மேல் (கோமுகம்) துர்க்கை எழுந்தருளி, காட்சியளிப்பது தனிச் சிறப்புக்குரியது. இந்த அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

✨தனிசன்னதியில் சன்டிகேஸ்வரரும் உள்ளார்கள்.

⚡பிரகார மன்டப உள் சன்னதிகளில்
 தனித்தனியாக, பெரிய விநாயகர், 
காசி விசாலாட்சி, பஞ்ச லிங்கங்கள் உள்ளனர். குங்குமவல்லி, மகாலெட்சுமி அமைந்துள்ளனர்.

⚡வள்ளி-தேவசேனா சமேத முருகப்பெருமான்
வள்ளி-தேவசேனா சமேதராய் மயில் வாகனம் கொண்டு இக்கோயிலில் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார்.

💫பழைமையான இத்திருக்கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. 

⭐கபால பைரவர், ராகு-கேது ஆகிய மூர்த்தங்கள் உள்ளன.

🌼சக்திவாய்ந்த பஞ்சமுக பைரவர் 
பைரவர் சன்னதி இல்லாத சிவாலயங்கள் இல்லை. ஒவ்வொரு திருக்கோயிலிலும் பைரவர் ஒவ்வொரு சிறப்பைக் கொண்டு எழுந்தருளியிருப்பார். ஆனால், காருகுடி கோயிலில் எழுந்தருளிய பைரவர் பஞ்சமுக பைரவர் என அழைக்கப்படுகிறார். பஞ்ச வக்தர பைரவர் எனவும் போற்றப்படுகிறார். சூலம், சக்கரம், மழு, கதை, கத்தி, கபாலம், டமருகம், சங்கு, பாசம், கேடயம் ஆகிய பத்துத் திருக்கரங்களுடனும், ஐந்து திருமுகங்களுடனும் கபாலமாலை அணிந்து, கம்பீரமாகக் காட்சி தருகிறார் பைரவர். இந்த சன்னதியில் பைரவருக்கு பின்னால் யாளி வாகனம் அமைந்திருப்பதும் சிறப்புக்குரியது.

🏵️தனி சன்னதியில் அகோர வீரபத்திரர் 
திருக்கோயில் உள் பிரகாரத்தில் அகோர வீரபத்திரர் தனி சன்னதி கொண்டு காட்சியளித்து வருகிறார்.

⚡இக்கோயில் கோபுரத்தையொட்டி விநாயகர் எழுந்தருளியுள்ள நிலையில், உள்ளே தனி சன்னதி கொண்டு பெரிய விநாயகர் காட்சியளித்து வருகிறார்.

🌿 தெற்கு பிரகாரத்தில் நால்வர் திருமேனிகள் உள்ளன.
இக்கோயிலில் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய 4 சமயக் குரவர்களும் எழுந்தருளியுள்ளனர்
இவர்களின் திருநட்சத்திரத்தன்று சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

🌴மேலும் கோயில் திருக்கோயிலின் தல விருட்சமாக வில்வம் மரம் அமைந்துள்ளது. .

பரிகாரம் / பிரார்த்தணை

🍂ரேவதி நட்சத்திரம் முடிந்து அசுவினி நட்சத்திரம் தொடங்கும் முன்பாகவுள்ள 12 நிமிஷங்களின்போது, காருகுடி கைலாசநாத சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
🍂மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்றும், ரேவதி நட்சத்திரத்தன்றும் இங்கு வருண பகவானுக்கு ஹோமம் செய்தால், மழை பெய்யும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

🍂ரேவதி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்திருக்கோயில் இறைவனை வழிபடுகின்றனர். நீர், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், நாள்பட்ட நோய்கள் குணமாக இக்கோயிலில் சிறப்பு அர்ச்சனை செய்யப்படுகிறது. 

🍂எந்த நட்சத்திரக்காரர்கள் வேண்டுமானாலும் இத்திருக்கோயிலில் வழிபடலாம். இங்குள்ள இறைவனை வணங்கி, கோயிலை பிரதட்சிணம் செய்தால் பாவங்கள் விலகும், சிவனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

⛳வழித்தடம் :
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவு கொண்ட இக்கோயிலுக்கு, பெரம்பலூர் வந்து, அங்கிருந்து துறையூர் வழியாக தாத்தையங்கார்பேட்டை வர வேண்டும். தொடர்ந்து இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலுள்ள காருகுடி கோயிலைச் சென்றடையலாம்.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
நாமக்கலிலிருந்து கிழக்கில் தாத்தையங்கார்பேட்டை வரும் வழியில் தாத்தையங்கார்பேட்டைக்குச் சற்று வடமேற்கில் உள்ளது. சிற்றூர்.
திருச்சி - தாத்தையங்கார்ப்பேட்டை வந்தும் வரலாம்.
நாங்கள் கொல்லிமலை சென்று வரும் போது இந்த ஆலயம் தரிசித்தோம்.
ஆலயம் மிகவும் பழமையானது.
ஊரின் வடகிழக்குப் பகுதியில் அமைதியான சூழ்நிலையில் உள்ளது.
தெற்குப்பக்கம் சாலை வசதி உள்ளது. ராஜகோபுரமும் உள்ளது. வாகனங்கள் நிறுத்த இடவசதிகள் உள்ளது. மேலும் வசதிகள் செய்யப்பட வேண்டும்.
பெரும்பாலும் கற்றளி மண்டபங்கள், பிரகாரங்கள். சில பகுதிகள் பழுதடைந்து உள்ளன. சீர்திருத்தி கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும்.  
பக்தர்கள் சபை உள்ளது. வழிபாடுகள் பூசைகள் நடைபெற்று வருகின்றன.
அமைதியும், ஆன்மீக உணர்வும் தரும் புராதான ஆலயம்.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
வலைதள தகவல்களுடன் 💻📡📚 
#Subbramசுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏 22.02.2026
#சுப்ரம்அருணசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🛕🛐
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🔱 22.02.2026

கொல்லிப்பாவை எட்டுக்கை அம்மன் ஆலயம் - கொல்லிமலை - பதிவு - 2.

கொல்லிப்பாவை 
 எட்டுக்கை அம்மன் ஆலயம்
பயண அனுபவக் குறிப்புகள்🕊️
சுப்ராம்.அருணாசலம், காரைக்கால் 🔱🇮🇳

கொல்லிமலை - பதிவு - 2.

கொல்லிப்பாவை 
 எட்டுக்கை அம்மன் ஆலயம்

🪔தேவர்களும், மகரிஷிகளும் கொல்லிமலை பகுதியில் தவமிருந்தபோது அசுரர்கள் அவர்களை தொந்தரவு செய்தனர் எனவே, அசுரர்களின் கவனத்தை திசை திருப்ப, ரிஷிகள் விஸ்வகர்மாவின் உதவியுடன் ஒரு தெய்விகச் சக்தி வாய்ந்த பெண் சிலை செய்து, அதற்கு சக்தியூட்டினர். 
இப்பாவை பெண் உருவமுடையது. உடல் உறுப்புகள் அசையும் தன்மையன. அரக்கர்களின் வாடை பட்டதும் இப்பாவை பெருஞ்சிரிப்பு செய்து, அவர்களை இழுத்துக் கொன்றுவிடுமாம். காற்று மழை முதலிய இயற்கைச் சீற்றங்களால் இப்பாவை எந்த பாதிப்பும் அடையாது என்பது வரலாறு. அதற்கு 'கொல்லிப்பாவை' என்ற பெயர் ஏற்பட்டது அதன் மீது மோகம் கொண்டு அசுரர்கள் அருகில் நெருங்கினர். அவர்களை அந்த அம்பிகை வதம் செய்தாள். எட்டு கைகளுடன் இருப்பதால் இவளை, "எட்டுக்கை அம்மன்" என்று அழைக்கிறார்கள்.

🪔முனிவர்கள், தங்கள் தவத்திற்கு இடையூறு நேராதவாறு காத்துக் கொள்ள 
கொல்லிப்பாவையை அமைத்தார்கள் என்று சொல்லப்படுகிறது. 

🪔இக் கொல்லிப் பாவையால் இன்றும் இம்மலை காக்கப்படுவதால் இது கொல்லிமலை எனப் பெயர் பெற்றதென்பர். 

🪔சிந்தாமணி, குறுந்தொகை, சிலப்பதிகாரம், நற்றிணை மற்றும் புறநானூறு ஆகியவை வாயிலாக இப்பாவையின் சிறப்புக்களை அறிகிறோம்..

🪔கொல்லிப் பாவையை இம்மலை வாழ் மக்கள் "எட்டுக்கை அம்மன்" என்று கூறுகின்றனர்.

🪔கொல்லி எனப்படும் வானலாவிய மரங்களை உடையதாலும், மும்மலங்களையும் முனைப்பையும் கொல்வதாலும் இம்மலை கொல்லிமலை எனப்பட்டது என்றும் சொல்லுவதுண்டு.

🪔கொல்லி மலையில் கருநெல்லி, கருநொச்சி ஜோதிப்புல் போன்ற எண்ணற்ற மூலிகைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. எனவே சித்த மருத்துவர்கள் இந்த மலைக்கு குறிப்பிட்ட நாட்களில் மூலிகைகளை சேகரிப்பதற்காக வருகிறார்கள்.

 🪔இவர்கள் முதலில் கொல்லி பாவை கோவிலுக்குச் சென்று அவளிடம் அனுமதி பெற்று மந்திரம் சொல்லி பின்னரே மூலிகைகளைச் சேகரிக்கின்றனர் . அவ்வாறு சேகரித்த மூலிகைகளை கொல்லி பாவை சன்னதியில் வைத்து வழிபடுகின்றனர்.

# பயண அனுபவக் குறிப்புகள்🕊️
✨அறப்பளீஸ்வரர் ஆலயத்திலிருந்து மேற்கில் 4 கி.மீ. தூரத்தில் கொல்லிப்பாவை ஆலயம், பிரதான சாலையிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் உள்ளது.
✨பிரதான சாலையில் வாகனம் நிறுத்துமிடம் உள்ளது.
✨கீழே இறங்கி ஏற நல்ல சாய்தள சிமிண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. முதியோர்களும் எளிதாக சென்று வரும் வகையில் உள்ளது.
✨கட்டன வரிசை இல்லை. உள்நுழைவு கட்டணம் எதுவும் வசுல் இல்லை. பிரதான சாலையில் ஒரு பழமையான போர்டு எட்டுக்கை அம்மன் ஆலயம் என்று உள்ளது. அம்மன் மண்டபத்திற்கு சில படிகள் ஏறி செல்லும் முகப்பிலும் போர்டு உள்ளது.
✨ஆலயம் உள்ள பகுதி பெரிய இயற்கை வெட்ட வெளி பகுதியில் உள்ளது. ஒரு காலத்தில் ஆழமானக்காட்டுப்பாதையாக இருந்திருக்கக்கூடும். 
✨உயரமான மலைகளில் இடையே நல்ல பள்ளமான இடம் பெரிய குளம் போன்ற இடத்தின் மேட்டுப்பகுதியில் கிழக்குப் பார்த்து அமைக்கப்பட்டுள்ள சிறிய கருவரை சன்னதி அமைப்பு, முன்புறம் மண்டபத்தில் கூரை அமைக்கப்பட்டுள்ளது.
✨மிக அழகான தேஜஸான முக அமைப்பில் அம்பாள் அலங்கரிக்கப்பட்டுள்ளார். பூசாரிகள் பூசை செய்து தருகிறார்கள். 
✨மலைவாழ் மக்களின் வாழ்க்கையின் ஒரு ஆன்மீக அங்கமாக இந்த அம்மன் அமைந்துள்ளதை நாம் கண்டு உணரலாம்.
✨பக்தர்கள் காப்புக்கயிறு கட்டிக் கொள்கிறார்கள். 
🌟பெரிய வெட்டவெளியாக பசுமையான மலைப்பகுதி. நேர்த்திக்கடன், வழிபாடுகள் செய்தும், மாலை போட்டுக் கொள்வதும், பிரார்த்தனைகளும் நடைபெறுகிறது. 
✨ஏராளமான பக்தர்கள் வந்து வணங்கி செல்கிறார்கள். 
✨முடிகாணிக்கை பல்வேறு பிரார்தனைகள், நேர்த்திக்கடன்கள் செய்து கொள்கிறார்கள்.
✨வழியில் பத்ரகாளியம்மன் சிலை ஒன்றும் வைக்கப்பட்டு பக்தர்களால் பூசிக்கப்பட்டு வருகிறது.
✨படிகளில் செல்லும் போது எளிய வியாபாரிகளால், மலைப்பகுதியில் விளையும் பழங்கள், மூலிகைப் பொருட்கள், மூலிகை பானங்கள் விற்பனையும் நடைபெறுகிறது.
✨ஒரு கட்டண கழிப்பறையும் வைத்து பராமரிக்கிறார்கள்.

கொல்லிமலை அனுபவங்கள் 
⭐பொதுவாக, கொல்லிமலை சிறந்த அருமையான ஆன்மீக உணர்வுகள் தரும் அற்புதமான சுற்றுலா தலம்.

⭐கடல் மட்டத்திலிருந்து சுமார் 4000 அடிகள் (1400 மீட்டர்) உயரத்தில், சுமார் 20 கிமீ. பரப்பளவில் மலைப்பகுதி சாலை வசதிகளுடன் உள்ள பகுதி.
ஆலயம் தவிர, நிறைய அருவிகள் பல இடங்களில் உள்ளன. அரசும் தங்குமிட வசதிகள் ஏற்பாடுகள் செய்துள்ளது. தனியார் ஹோட்டல்கள் தங்கும்மிடங்களும் இந்தப் பகுதியில் உள்ளன.

⭐அறப்பளீலவரர் ஆலயம் அமைத்துள்ள மலைப்பகுதி சிறந்த ஆன்மீக உணர்வுகளை தரும் இடம்.

⭐ஆலயம் சுற்றி மூலிகை சாமான்கள் நிறைய கிடைக்கிறது. மலையின் கீழ் உள்ள சிற்றூராகிய பேளுக்குறிச்சியில் இது போன்ற பொருட்கள் விற்பனை செய்ய சந்தை அமைப்பு செயல்படுகிறது. வெள்ளிக்கிழமை தொடங்கி சனிக்கிழமை காலை வரை விடியவிடிய சந்தை நடைபெறுகிறது.

⭐பல்வேறு பொருட்கள் பழங்கள் முதலிய மலைப்பொருட்கள் மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கிறது.
படிகள் தான் அளவு முறை, 5 விதமான பொருட்கள், ஒவ்வொன்றும் 2 படி அளவில் ரூ 1000 லிருந்து ரூ1800 வரை அளவு, தரம் பொருத்து விற்பனை செய்கிறார்கள்.

⭐சந்தை நாட்கள் / நேரம் தவிர, இந்தப்பகுதிகளில் மூலிகைப்பொருட்கள் விற்பனை செய்து வரும் கடைகள் அதிகம் உள்ளன. 

⭐✨அருமையான அமைதியாக இயற்கை சூழலில் அமைந்த அற்புத ஆன்மீக உணர்வு தரும் சக்திமிக்க இடம்.

🏵️தமிழகத்தில் உள்ள, இயற்கையுடன் இணைந்த ஆன்மீக சுற்றுலாவுக்கு
மிகமுக்கியமான இடம் அவசியம் ஒரு முறையாவது சென்று அனுபவித்து உணர வேண்டிய இடம்.

வலைதள தகவல் 💻📡📚 
பயண அனுபவக் குறிப்புகள்🕊️
#Subbramசுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏 22.02.2026
#சுப்ரம்அருணசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🛕🛐
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🔱 22.02.2026

எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

7.எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் ⛳ இருப்பிடம் திருவாரூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூரில் இருந்து...