Saturday, January 17, 2026

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு.

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு.

⛳தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது;

 🏵️இங்கு முருகன், தந்தைக்கு பிரணவ மந்திரம் (ஓம்) உபதேசித்ததால் சுவாமிநாதன் எனப் பெயர் பெற்றார்; இது குரு அம்சமாகத் திகழ்வதாலும், தகப்பனுக்கே உபதேசம் செய்ததால் இத்தலம் சுவாமிமலை என அழைக்கப்படுகிறது. 
60 படிகள் கொண்டது.

🔱கீழ்க்கோவில் ஶ்ரீ மீனாட்சிசுந்தரேஸ்வரர் அம்மையும், அப்பனுமாக இருந்து அருள் புரிகிறார். தனி சிவன் ஆலய அமைப்பில உள்ளது.

🔱தந்தைக்கு உபதேசம் செய்த முருகன் மலைக்கோவிலில் தனி அமைப்பில் உள்ளார்.
கிழக்கு நோக்கிய தனி விநயகர் சிறப்பு அம்சம்.

🔱 வாழ்வில் தரிசிக்க வேண்டிய சிறப்பான அற்புத பலன் தரும் ஆலயம்.

🛕தல வரலாறு & சிறப்பு அம்சங்கள்:

🌟குரு-சிஷ்ய உறவு: சிவபெருமானுக்கு 'ஓம்' மந்திரத்தை உபதேசித்ததால், முருகன் 'சுவாமிநாதன்' (குரு) ஆனார்; சிவன் 'சுவாமி' ஆனார்.
அறுபடை வீடு: முருகனின் நான்காவது படைவீடு.

 🌟இங்குள்ள மலை, உண்மையில் மண் குன்றே, ஆனால் கட்டுமலையாக உருமாறியது.

🌟திருப்படி பூஜை: 60 தமிழ் ஆண்டுகளின் பெயரால் அமைந்த 60 படிகளைக் கடந்து செல்வது சிறப்பு.

🌟பிரம்மகத்தி தோஷ நிவர்த்தி: பதினாயிரம் பிரம்மகத்தி தோஷங்களை நீக்கும் வல்லமை கொண்டது.

🌟ஐராவதம்: தேவேந்திரன் வழங்கிய வெள்ளை யானையான ஐராவதத்தின் சிலை மூலவர் சன்னதி முன் உள்ளது. 

⛳அமைவிடம் & நேரம்:
இடம்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து சுமார் 6-8 கி.மீ தொலைவில் உள்ளது.

🍀பூஜைகள்:
விபூதி அபிஷேகத்தில் ஞானியாகவும், சந்தன அபிஷேகத்தில் பாலசுப்ரமணியனாகவும் காட்சி தருவார்.

🔰பல்வேறு அபிஷேகங்கள், அர்ச்சனைகள் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். 

பல தகவல்கள் வலை தளத்தில் வந்தது.

🛐எமக்கு எம் குலதெய்வமான சுவாமிநாதர் என்றும் துணையிருப்பார்🙆🏼

🛐வாய்ப்பு கிட்டும் போது எல்லாம் தரிசனம் செய்ய வேண்டிய ஆத்மார்த்த ஆலயம்🙇

5-01-2026
28.12.2025 தரிசனம்.
# சுப்ராம் அருணாசலம்.
#சுப்ராம் 
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

கத்தரிநத்தம் - காளஹஸ்தீஸ்வரர் ஆலயம்

கத்தரிநத்தம் - காளஹஸ்தீஸ்வரர் ஆலயம்

🔱கத்தரிநத்தம்

⛳தஞ்சை - அம்மப் பேட்டை பிரதான சாலையில், புன்னைநல்லூர் அடுத்து பிரதான சாலையிலிருந்து தென்புறம் பிரியும் சாலையில் ரயில்வேலையன் தாண்டினால் வரும் சிற்றூரில், கிழக்கில் ஆலயம் உள்ளது.
🛕ஆலயம் முன்பு குளம். கிழக்கு நோக்கிய ஆலயம். ராஜகோபுரம்
 ஏக பிரகாராம்.

🛕காளஹஸ்தீஸ்வர் - ஞானம்பிகை ஆலயம்

🍀புராதான பிரார்த்தனை தலம்.
🍀ராகுகேது பரிகார தலம்.
🍀பல முனிவர்களுக்கு சாபம் தீர்த்த இடம்.

🌼ஏராளமான பக்தர்கள் தோஷ நீக்கம் வேண்டி பிரார்த்தனைக்கு வருகிறார்கள்.

🌟சப்தரிஷிகள் வழிபட்ட ஆலயம்

🌟ஆலயம் புனருத்திரானம் செய்யப்பட்டு, வண்ணங்கள் தீட்டப்பட்டு குடமுழுக்கு நாளுக்காக தயாராக உள்ளது.

🌼அரசு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயம்.

28.12.2025 தரிசனம்.

#சுப்ராம் 
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
https://www.facebook.com/share/p/14TioCLsx58/

புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம், தஞ்சாவூர்:

புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம், தஞ்சாவூர்:

💥புராதானமும், பக்தியும் நிறைந்த வழிபாட்டு ஸ்தலம். தஞ்சை அரண்மனை தேவஸ்த்தானத்திற்கு சொந்தமான ஆலயம். தமிழ்நாட்டின் தலைசிறந்த, புகழ்வாய்ந்த, புராதானமான மாரியம்மன் ஆலயம் இது. சிறந்த பிரார்த்தனை தலம். தஞ்சாவூர் நகருக்கு கிழக்கில் 6 கி.மீ. தூரத்தில் உள்ளது.

💥கருவரையில், அம்மன் கிழக்குப் பார்த்து அமைந்து அருள் புரிகிறார்கள்.
3 பிரகாரங்கள் உள்ளன. ஏராளமான தமிழர்களுக்கு, குல தெய்வமாக இருப்பவர் இந்த மாரியம்மன்.
பல முறை தரிசனம் செய்யும் ஆலயம்.
புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம்
ஆகமபுரானமும், பக்தியும் நிறைந்த வழிபாட்டு ஸ்தலம்.

🌼தஞ்சை அரண்மனை தேவஸ்த்தானத்திற்கு சொந்தமான ஆலயம். தமிழ்நாட்டின் தலைசிறந்த, புகழ்வாய்ந்த, புராதானமான மாரியம்மன் ஆலயம் இது. சிறந்த பிரார்த்தனை தலம்.

28.12.25 மீள் தரிசனம்.
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மிகபாரதம்அகிலத்தின்சிகரம்
https://www.facebook.com/share/p/1aCmBMK2st/

கூடலூர் - தஞ்சை வெண்ணாற்றங்கரை வடகரையில் ..கூடலூர் - காசிவிஸ்வநாதர் விசாலாட்சி ஆலயம்.

🔰கூடலூர் - தஞ்சை வெண்ணாற்றங்கரை வடகரையில் ..
கூடலூர் - காசிவிஸ்வநாதர் விசாலாட்சி ஆலயம்.

⛳கூடலூர் சேர்ந்த பகுதியில்,  தனியார் பரமரிப்பில் கிழக்கு நோக்கிய காசி விசுவநாதர் ஆலயம் ஒன்றும், வெண்ணற்றங்கரை வட கரையில் உள்ளது. 

🔱ஆலயம் கிழக்கு நோக்கியது.
சுவாமி, கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் தனித்தனியாக கருவரை அமைப்பில், மிக சிறிய ஆலயமாக உள்ளது. ஆலய வளாகம் பெரியதாக வெற்று இடமாக உள்ளது.

வெளிப்புறம் சுற்று சுவர் ஒன்றும் உள்ளது.

🌼சிறிய ஆலயம் மிகவும் சீர்கெட்டு உள்ளது. முழுவதுமான திருப்பணிகளைத் தொடங்கி ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். 

🌼பழமையான ஆலயம், புனரமைப்பு செய்யப்பட வேண்டிய அவசியத்தில் / அவசரத்தில் உள்ளது.
கிழக்குப் பார்த்த சிவன் மற்றும் தெற்கு நோக்கிய அம்மனும் சிறிய கருவரை மண்டபத்துடன்  உள்ளது. 

⛳விநாயகர் மற்ற சில சிலைகள் கருவறைமுன் மண்டபத்திலேயே உள்ளது.

வேறு தனி சன்னதிகள் எதும்   இல்லை.

 கூடலூர் மீனாட்சி சொக்கநாதர் ஆலயக் குருக்கள்,  இந்த ஆலயம் வந்து பூசை செய்கிறார்.

வழி:  வெண்ணாற்றங்கரை வடகரையில் உள்ள பாதையில் ஓரத்தில்  ஒரு கால பைரவர் ஆலயம்  உள்ளது. அருகில்  கரை ஓரம் கிழக்கில்பிரிந்து செல்லும் மன் சாலையில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் ஆலயம் உள்ளது.

28.12.2025 #சுப்ராம்தரிசனம் 
#சுப்ராம் 
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

https://www.facebook.com/share/p/1JyQTQntdV/
கூடலூர் - விஸ்வநாதர் ஆலயம்

அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்,திட்டை-613003 தஞ்சாவூர் மாவட்டம்.

அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்,
திட்டை-613003      தஞ்சாவூர்  மாவட்டம்.

*மூலவர்:
வசிஷ்டேஸ்வரர்

*தாயார்:
உலகநாயகியம்மை

*தல விருட்சம்:
முல்லை, வெண்செண்பகம், செவ்வந்தி

*தீர்த்தம்:
சக்கர தீர்த்தம்.

*பாடல் பெற்ற தலம்:
தேவாரம்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர்.

*பிரளய காலத்தில் இவ்வுலகம் நீரால் சூழப்பட்டபோது திட்டை மற்றும் சீர்காழி ஆகிய சிவதலங்கள் பாதிக்கப்படாமல்  திட்டாகத் தோன்றியபடியால் சீர்காழியை வட திட்டை எனவும் வசிஷ்டேஸ்வரர் கோயில் பகுதியை தென் திட்டை அல்லது தென்குடித்திட்டை எனவும் அழைக்கலானார்கள்.

*திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் பஞ்சலிங்கத் தலமாக விளங்குகிறது. இங்கு நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் அமைந்து  நடுவில், மூலவராக வசிஷ்டேஸ்வரர் அருள்கிறார்.

*ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளில் காலையில் சூரிய ஒளிக்கதிர்கள்  இறைவன் மீதுபடுகிறது.

*கருவறை விமானத்தின் உட்புறத்தில் சந்திர காந்தக் கல் வைத்து கட்டப்பட்டுள்ளது.  இந்த சந்திர காந்தக்கல் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி 24 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சொட்டு நீராய் இறைவன் வசிஷ்டேஸ்வரர் மீது விழச்செய்கிறது. சந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கிய சிவபெருமான் தன்னுடைய தலையில் சந்திரனை வைத்துக்கொண்டார். அதற்கு நன்றிக் கடனாக சந்திரன் இவ்வாறு 24 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சொட்டு நீரை  இறைவன் மீது விழுமாறு செய்கிறார்.

*அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் மும்மூர்த்திகளுக்கு சக்தியையும், ஞானத்தையும் அருளியவர். கால பைரவரின் பிரம்மஹத்தி தோஷம் நீக்கியவர். குரு பகவானுக்குத் தேவகுரு என்ற பதவியை அருளியவர்.

*அன்னை சுகந்த குந்தளாம்பிகை தெற்கு நோக்கி நின்ற வடிவில்         வசிஷ்டேஸ்வரருக்கு  இணையாக உயர்ந்த பீடத்தில்  உள்ளார் . மகாப்பிரளய காலத்தில் உலகைக் காக்க இறைவனுடன் ஓடம் ஏறி வந்ததால், இத்தலத்தில் உள்ள இறைவியை "லோகநாயகி" என்றும், சகல மங்களங்களையும் தருவதால் "மங்களாம்பிகை" என்றும்  அழைக்கிறார்கள்.

*கும்பகோணத்தில் சோமநாதன் என்பவர் குடும்பத்துடன் தனது வாழ்ந்து வந்தார். ஒரு நாள் இவரது வீட்டுக்கு வந்த ஜோதிடர் ஒருவர், ‘உங்கள் மகள் மங்களா 16-வது வயதில் விதவையாகி விடுவாள்’ எனக் கூறினார். அதைக்கேட்டு சோமநாதன் வருந்தினார். சிறிது காலத்தில் தஞ்சைக்கு அருகே உள்ள திட்டையில் உள்ள ஒருவருக்கும், மங்களாவிற்கும் திருமணம் நடைபெற்றது. திட்டைக்கு வந்த நாள் முதல் மங்களா, தனது கணவன் நீண்டநாட்கள் வாழ வேண்டும் என திட்டையில் உள்ள லோகநாயகி அம்மனை வணங்கி வந்தாள். ஒரு பவுர்ணமி தினத்தன்று மங்களா, லோகநாயகி அம்மனை சரணடைந்து, ‘எமனிடம் இருந்து என் கணவனின் உயிரை காப்பாற்றி, எனக்கு மாங்கல்ய பிச்சை கொடு’ என கண்ணீர் மல்க வேண்டினாள். அவளது பிரார்த்தனைக்கு மனம் இரங்கிய லோகநாயகி, மங்களாவின் கையில் விபூதியை கொடுத்து ‘இதை எமன் மீது இடு. உன் கணவன் நீண்ட ஆயுளுடன் இருப்பான். நீயும் நீண்ட நாட்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாய்’ என ஆசி கூறி மறைந்தார். மங்களாவும், இறைவியின் ஆணைப்படியே செய்தாள். வந்த எமன் மறைந்தான்.  மாங்கல்ய பிச்சை கொடுத்ததால் இத்தலத்தில் அன்னை மங்களாம்பிகா, மங்களேஸ்வரி என அழைக்கப்படுகிறார்.

*அம்மன் சந்நிதிக்கு எதிரே மேல் கூரையில் 12 ராசிகளுக்குரிய சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் இங்கு நின்று அம்மனை பிரார்த்தனை செய்து கொண்டால், தோஷங்கள் நீங்கி நலம் பெறுவார்கள்.

*வசிஷ்டேஸ்வரர், சுகந்தகுந்தளாம்பிகை சந்நிதிக்கு இடையே குரு பகவான் ராஜகுருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் அருள்பாலிக்கிறார்.             நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குருபகவான்.  மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் "குரு பார்க்க கோடி நன்மை" என்ற பழமொழி ஏற்பட்டது.      நவகிரகங்களில் சுபகாரகராக, நவக்கிரகங்களின் வரிசையில் ஐந்தாவதாக இருக்கும் குருபகவான் வியாழன், என்றும் பிரகஸ்பதி என்றும் வணங்கப்படுபவர்.
*குரு பகவானை வேண்டினால் ராஜயோகம் கிடைக்கும். மேலும் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும்.  இத்தலத்தில் ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடக்கிறது.

*குரு தலங்களாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் ஆகியவை விளங்குகின்றன.

(தெற்குப் பிரகாரத்தில் அருள்புரியும் தென்திசைக் கடவுளான தட்சிணாமூர்த்தி  "ஞான குரு" ஆவார். நவகிரகத்தில்  உள்ள குரு தேவகுரு ஆவார். இருவரும் வேறு வேறு. குருபெயர்ச்சி அன்று இடம் பெயர்பவர் நவகிரகத்தில் உள்ள குருபகவானே)

மீள் தரிசனம் 28.12.2025
# 28.12.2005
#சுப்ராம் அருணாசலம்
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மிகபாரதம்அகிலத்தின்சிகரம்
https://www.facebook.com/share/p/1ZM7vRKut7/

அன்னப்பன்பேட்டை ஸ்ரீ தாயுமானவர் குருமூர்த்தம்

அன்னப்பன்பேட்டை ஸ்ரீ தாயுமானவர் குருமூர்த்தம்.

அண்ணப்பன் பேட்டையில் அமைந்துள்ள தாயுமானவர் குருமூர்த்தும் பீடம் உள்ளது.
மற்றும்,
10வது பட்டம் ஸ்ரீமீனாட்சிசுந்தர சுவாமிகள் குருமூர்த்தமும் அமைக்கப்பட்டுள்ளது.

எதிரில் ஒரு குளம் உள்ளது. மிக மிக அமைதியான இடம்.
அருகில், திருவாடுதுறை ஆதீனம் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள தாயுமானவர் மடம் உள்ளது.
குருமூர்த்தங்கள்  அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மிக மிக அமைதியான இடம். தியானம் செய்ய அருமையான இடமாக உள்ளது.

28.12.2025 தரிசனம்
சுப்ராம் அருணாசலம்
#சுப்ராம் 
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
https://www.facebook.com/share/p/1D626aPWBL/

அன்னப்பன்பேட்டை - ஸ்ரீ கைலாசநாதர் - ஸ்ரீ அன்னபூரனியம்மன் ஆலயம்.

அன்னப்பன்பேட்டை
அன்னப்பன்பேட்டை - ஸ்ரீ கைலாசநாதர் - ஸ்ரீ அன்னபூரனியம்மன் ஆலயம்.

திருக்கருகாவூர் - மெலட்டூர் - திட்டை பிரதான சாலையில் சாலையை ஒட்டி தென்புறத்தில், அமைந்துள்ளது.

பழமையான சிவ ஆலயம் முழுவதும் சிதைந்து விட முழு திருப்பணிகளும் செய்யப்பட்டு, தற்போது நல்ல பராமரிப்பில் உள்ளது. 2011ல், கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்குநோக்கியும், தனித்தனி கருவரை சன்னதியாக அமைந்துள்ளது.

நீண்ட பெரிய முன்மண்டபம் உள்ளது.

தனி விநாயகர், முருகர், சன்டிகேஸ்வரர், ஆலய சுற்றில் உள்ளனர்.

வடகிழக்கில் பைரவர், சூரியன், சனிஸ்வரர் உண்டு. ஆலயம் நீண்ட சுற்றுச்சுவர் ஒன்றும் இருக்கிறது.
ஆலயம் தென்பகுதியில் ஒரு தனி வ
2011 ல் கும்பாபிஷேகம் நடை பெற்றுள்ளது.

ஆலயத்தின் தென் பகுதியில் 32 அடி உயர அனுமன் சிலை வைத்து பூசிக்கின்றார்.

ஆலயம் பூசை வழிபாடுகள் முறைகளக நடைபெறுகின்றன. 
|
குருக்கள் தகவல் தந்தால் வந்து தரிசனம் செய்து வைக்கிறார்.

இந்த சிவஆலயம் பிரான சாலையில் உள்ளது. அருகில், அன்னப்பன்பேட்டை சிற்றூரில் திருவாடுதுறை ஆதினம் மடத்தின் சார்பில்
 ஸ்ரீ தாயுமானசுவாமிகள் குருமூர்த்தம் உள்ளது. அதையும் தரிசிக்கலாம்.

மீள் தரிசனம்
28.12.2025
#சுப்ராம்அருணாசலம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மிகபாரதம்அகிலத்தின்சிகரம்
https://www.facebook.com/share/p/19iC6F1g5o/

மெலட்டூர் - உண்ணதபுரீஸ்வரர் ஆலயம் வைப்புத்தலம்

மெலட்டூர் - உண்ணதபுரீஸ்வரர் ஆலயம்

⛳மெலட்டூர்
திட்டை - திருக்கருக்காவூர் சாலையில், உள்ள ஊர்.
ஊரில் உள்ள பிரதான சாலையிலிருந்து,  தென்புறத்தில் உள்ள ஊரின் பெரிய சிவன் ஆலயம்.
வைப்புத்தலங்களின் ஒன்று. 

🛐ஸ்ரீ உன்னதபுரீஸ்வரர்
ஸ்ரீசிவப்பிரியாம்பிகை - ஸ்ரீசிவகாமி அம்பாள்

🛕கிழக்கு நோக்கிய ஆலயம்.

🛕5 நிலை ராஜகோபுரம் உள்ளது.

🔱கொடிமரம், பலிபீடம், நந்தி கடந்து
முன் மண்டபம்.
உள் மண்டபம் சுவாமி கிழக்கு நோக்கிய தனி கருவரையும், அம்பாள் தனி கருவரையில், தெற்கு நோக்கியும் அருள் புரிகிறார்கள்.

🔱கோஷ்ட்டம் - பிரகாரத்தில், கிழக்கு நோக்கிய தனி விநாயகர், தட்சினாமூர்த்தி,
பெருமள், பிரும்மா, துர்க்கை மற்றும், சண்டிகேஸ்வரர் அமைக்கப்பட்டுள்ளது.
பிரகாரமண்டபங்கள் வெளவால் நெற்றி மண்டபங்களாக உள்ளது.

🔱சுப்பிரமணியர், மகாலெட்சுமி அமைந்துள்ளது.

💦ஆலயம் முன்பு சற்று தூரத்தில் மிகப்பெரிய குளம் உள்ளது
'சப்தசாகர  ஷேத்திரம். அரசனுக்காக சப்தசாகரங்களும் வந்ததாக ஐதீகம்.
வெட்டாற்றின் தென்கரையில் உள்ள தலம்.
பராசக்தி, சப்தமாதாக்கள், ஆதி மூல துவாரபாலகிகள் இருவர் நவராத்திரியின் போது வழிபடும் சிவபெருமான் இவர் ' என்கிறர்கள்.

🌴'வன்னி, பனைமரங்கள் தலவிருட்சம்''

🏵️'கி.பி.12ம் நூற்றாண்டில் விக்ரம சோழன் காலத்தில் இருந்த ஊர் என்பது கல்வெட்டு. நிருத்தவிநோத வளநாடு என்பது பழைய பெயர்.
சுவாமியின் பெயரால், உன்னதபுரி
என்றயாயிற்று.

🌟விஜயநகரப் பேரரசின் அபிமானியாக இருந்த அச்சுதப்ப நாயக்கர் என்கிற தஞ்சைத் தலைவர் குச்சிப்புடி நடனக் கலைஞர்களுக்கு இந்த உன்னதபுரியை இனாமாகத் தந்தார். அவரது மந்திரி கோவிந்த தீக்ஷதரால் திருப்பணி செய்யப்பட்டிருக்கிறது.
பின்னர் 1888 ல் உதயமான புகழ்பெற்ற பாகவத மேளா என்கிற நாட்டிய மரபுக்கலையை உருவாக்கிய ஊர்.'

🔰'துக்காஜி மகராஜ் காலத்தில் காஞ்சியிலிருந்து முற்கால அத்தி (தற்கால திவ்ய தேசம்) இவ்வூரின், வடமேற்கு அக்ரஹாரத்தில், வரதராஜப் பெருமாள் கோயிலாக் கட்டினார்கள் என்பது வரலாறு'.

🔰'மேல ஊர் என்பதே மெலட்டூர் ஆனது.
உன்னபுரி, அச்சுதாப்தி, அச்சுதபுரி என்பது இதர பெயர்கள்'.

🙏🏼நன்றி.🏵️-(வேண்டுவன வழங்கும் வைப்புத்தலங்கள்  - கே. சாய்குமார்)

🛐இவ்வூரில் உள்ள சித்தி புத்தி சமேத தெட்சினாமூர்த்தி விநாயகர் ஆலயம் - 'விவாஹ வரமருளும் விநாயகர்' ஆலயம் இவ்வாலத்திற்கு மேற்கில் சற்று தூரத்தில் உள்ளது.
நல்ல பராமரிப்புடன் உள்ள அற்புத ஆலயம்.

⛳இவ்வூர், வடக்கில் அய்யம்பேட்டை கிழக்கில், திருக்கருக்காவூர், தெற்கில் இருப்பு தலை, சாலியமங்கலம்,
மேற்கில் திட்டை முதலிய சிறப்புவாய்ந்த தலங்கள் அருகில் உள்ளன.

28.12.2025 மீள் தரிசனம்

4-03-2023 - தரிசனம்
#பிரதோஷம் சனி மகாபிரதோஷம்
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மிகபாரதம்அகிலத்தின்சிகரம்
https://www.facebook.com/share/p/17pubf784n/

இரும்புதலைஇரும்புதலை ஸ்ரீ திருலோகநாதர் ஆலயம். வைப்புத்தலம்

இரும்புதலை
இரும்புதலை ஸ்ரீ திருலோகநாதர் ஆலயம்.

⛳சாலியமங்கலம் - (திருக்கருக்காவூர்) - பாபநாசம் செல்லும் சாலை, தெற்கு வடக்கு சாலையில் வரும் ஊர்.

🛕கிழக்குப்புறம் சாலை அடுத்து ஆலயம்  உள்ளது.

🔱ஸ்ரீ திருலோகநாதர், ஸ்ரீ திருலோகநாயகி அம்பாள் ஆலயம்.

🔰அப்பரின் திருத்தாண்டகத்தில் இடம்பெற்ற வைப்புத்தலம்.

🛐சம்பந்தர், மற்றும் அப்பர் பெருமானின் பாடல்பெற்று கிடைக்காமலிருக்கலாம்.
என்று நம்பப்படுகிறது.

🍃⛳திருவிரும்புதல் - சொல் மருவி திரு இரும்புதல் ஆனது. திரு = மகாலெட்சுமியைக் குறிப்பது.
இங்கு மகாலெட்சுமி விசேசம் என்கிறார்கள்

🍃வில்வாரண்ய    க்ஷேத்திரமாகவும் விளங்குகிறது.

🔱அம்பாள் ஜடாமகுடி ரூபமாக, இரண்டு கரங்களில் தாமரையுடன்,
மற்றிருகைகள் அபய வரதம்..
நின்ற கோலம்.

🔱சுவாமி கிழக்கு நோக்கி உள்ளார்.
அர்த்த மண்டபம், வெளி மண்டபம் உள்ளது.

🔱அம்பிகை தனி சன்னதி தெற்கு பார்த்து உள்ளார்.

🔱ஏக பிரகாரம் உள்ளது.

🔱கோஷ்ட்டத்தில் தட்சினாமூர்த்தி, பெருமாள்,
வாராஹி, சனி, சூரியன், பைரவர், விநாயகர், துர்க்கை. உள்ளனர்.

ஆலயம் கிழக்குப் பகுதியில் தீர்த்தக்குளம் ஒன்றும் உள்ளது.

ஆலயத்திற்குள் நுழைய தென்புறம் வாசல் உள்ளது.

💥பராமரிப்பில் உள்ள ஆலயம்.

28.12.2025மீள் தரிசனம்
(18.02.2023 ல்சிவராத்திரி தரிசனம்)
மீள் தரிசனம் 
#சுப்ராம் 
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#இறையருள்என்றும்துணையிருக்கும்
https://www.facebook.com/share/p/1GX5Mnbgry/

திருக்கருகாவூர்சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 81 வது தேவாரத்தலம் ஆகும்.*அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர்.

திருக்கருகாவூர்
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 81 வது தேவாரத்தலம் ஆகும்.*
அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர்.
இது ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரப்பாடல் பெற்ற சிவதலம்
சுவாமி : முல்லைவனநாதர்
அம்பாள் : கர்ப்பகரஷட்சம்பிகை
கருகாத்த நாயகி

*தல விருட்சம்:முல்லை*
*தீர்த்தம்:பால்குளம், ஷீரகுண்டம், பிரம்மதீர்த்தம்*
*புராண பெயர்:கருகாவூர், திருக்களாவூர்*
.*கி.பி. ஏழாம் நூற்றாண்டு கோயில் இது.

**பிரார்த்தனை**மகப்பேறு:*
*திருமணம் ஆகி பல ஆண்டுகள் கழித்தும் குழந்தை வரம் இல்லாதவர்கள் இத்தலத்தில் வந்து வழிபடுவதற்கும்,கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக செய்யும் பிரார்த்தனைக்கும் புகழ்பெற்றது இத்தலம்.*

*மேலும் மாதவிடாய் கோளாறு உள்ள பெண்கள் , கர்ப்பப்பை சம்பந்தமான நோயுள்ள பெண்கள், திருமணம் தடைபடும் பெண்கள் ஆகியோரும் இத்தலத்திற்கு பெருமளவில் வந்து வழிபட்டு தங்கள் பிரச்சினைகள் நீங்க பெறுகின்றனர்*

*தீராத நோய் உடையவர்கள், குறிப்பாக சரும நோய் உள்ளவர்கள் சுவாமிக்கு புனுகுச் சட்டம் சாத்தி தம் நோய் நீங்கப் பெற்று வருகிறார்கள்.இது இன்றளவும் நடைபெற்று வரும் கண்கூடான உண்மையாகும்.*

*இத்தலத்து முல்லைவனநாதனை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
முல்லைக்காடாக இருந்த இந்த இடத்தில் சிவலிங்கத்திருமேனியை முல்லைக் கொடிகள் தழுவிப்படர்ந்திருந்தன. குழைவான இத்திருமேனியில் இன்றும் முல்லைக் கொடி படர்ந்து இருந்த வடுவை காணலாம்.*

வைகாசி – வைகாசி விசாகம் – 10 நாட்கள் – பிரம்மோற்சவம் – கொடி ஏற்றி தீர்த்தவாரி திருவிழா *புரட்டாசி – நவராத்திரி – அம்பாளுக்கு லட்சார்ச்சனை – 10 நாட்கள் திருவிழா*

*ஆடிபூரம் – பிரகாரம் வருவார் – 10 ம் நாள் காவேரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறும்.*

*இவை தவிர நடராஜருக்கு ஆறு அபிசேகங்கள், நிறைபணி அன்னாபிசேகம் , கந்தர் சஷ்டி, கார்த்திகை சோமவார நாட்கள் அனைத்து கார்த்திகை ஞாயிறுகளில் தீர்த்தவாரி, கார்த்திகை தீபம் மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் விழாக்கள்.

*இத்திருத்தலம் மிகப்பழைய காலந்தொட்டு கருவுற்ற மகளிருக்கு, மிகச்சிறந்ததோர் ஆரோகியஸ்தலமாக இருந்து வந்துள்ளது. இத்திருக்கோயிலில் மூர்த்தியும், அம்பாளும் மகளிரின் கருச்சிதையா வண்ணம் காத்து, அவர்கள் எளிதில் மகப்பேறு எய்தி திருவருள் பாலித்த வண்ணம் உள்ளனர்.*

*சுவாமி, விநாயகர், நந்தி மூன்றுமே இத்தலத்தில் சுயம்பு மூர்த்திகள்.இதில் சுவாமி மட்டும் மண்ணால் ஆனது.மற்ற இரண்டும் சிலா அம்சங்கள்.*

*சுவாமிக்கும் அம்பாளுக்கும் நடுவில் சுப்ரமணியர்(சோமாஸ்கந்தர்) உள்ளார்.இவரை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.*
*நவகிரகங்களில் எல்லா கிரகங்களும் சூரியனை நோக்கியே இருக்கும்.சூரியனுக்கு எதிரில் குரு.எல்லாமே அனுகிரக மூர்த்தி.*
*வக்கிர மூர்த்திகள் கிடையாது.*
*அம்பாள் இடது கையை இடுப்பில் வைத்தபடி கர்ப்பத்தை தாங்கியபடி உள்ளது சிறப்பம்சம்.

*சுவாமி சுயம்பு மூர்த்தியாக இங்குள்ளார் என்பது சிறப்பு. லிங்கம் புற்று மண்ணினால் ஆகியதாகும்.*
*எனவே சுவாமியின் திருமேனியில் சுவாமிக்கு நேரடியாக அபிசேகம் செய்வது இல்லை.சுவாமியின் திருமேனியில் புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது*

*சுவாமி, விநாயகர், நந்தி மூன்றுமே இத்தலத்தில் சுயம்பு மூர்த்திகள்.இதில் சுவாமி மட்டும் மண்ணால் ஆனது.மற்ற இரண்டும் சிலா அம்சங்கள்.*

*சுவாமிக்கும் அம்பாளுக்கும் நடுவில் சுப்ரமணியர்(சோமாஸ்கந்தர்) உள்ளார்.இவரை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.*
*நவகிரகங்களில் எல்லா கிரகங்களும் சூரியனை நோக்கியே இருக்கும்.சூரியனுக்கு எதிரில் குரு.எல்லாமே அனுகிரக மூர்த்தி.*
*வக்கிர மூர்த்திகள் கிடையாது.*
*அம்பாள் இடது கையை இடுப்பில் வைத்தபடி கர்ப்பத்தை தாங்கியபடி உள்ளது சிறப்பம்சம்.*
மீள் தரிசனம்.
18.03.2023 மகாசிவராத்திரி/ சனி மகா பிரதோஷம்.
மேலும் பல முறை தரிசித்த ஆலயம்.
28.12.2025 மீள் தரிசனம்.

#சுப்ராம் தரிசனம்
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
https://www.facebook.com/share/p/1GVowcdWsN/

கொறுக்கை கொறுக்கை: புஷ்பவல்லியம்மன் சமேதபிரம்மஞானபுரீஸ்வரர் ஆலயம்.

கொறுக்கை 
கொறுக்கை: புஷ்பவல்லியம்மன் சமேத
பிரம்மஞானபுரீஸ்வரர் ஆலயம்.

அவிட்ட நட்சத்திர பரிகார கோவில்.
கிழக்குப் பார்த்த ஆலயம். 
இராஜ கோபுரம் இல்லை. மிகவும் புராதான தலம். சிதைந்து போய் மீட்டு தற்போது புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.

சுவாமி கிழக்கு நோக்கியது. அர்த்த மண்டபம், நிருத்த மண்டபம் மற்றும் முன் மண்டபம் கொண்டது.

அம்பிகை தனியாக தெற்கு நோக்கி அமைப்பில் உள்ளார்.

ஏகபிரகாரம். கோஷ்ட்டத்தில் தட்சினாமூர்த்தி, அர்த்த நாரீஸ்வரர், பிரும்மா, துர்க்கையும்.

மேற்கில் பிரகார விநாயகர், சுப்பிரமணியர், மகாலெட்சுமி, சண்டிகேஸ்வரர் அமைந்துள்ளனர்.

கிழக்கில், பைரவர், சூரியன்

தகவல் தெரிவித்து தரிசனம் செய்யலாம்.
வழி: 1. பட்டீஸ்வரம் கிழக்கில், 3 கி.மீ.
2. குடந்தை - ஆலங்குடி வழியில், சாக்கோட்டை அடுத்து மருதாநல்லூர் வந்து மேற்கில் பட்டீஸ்வரம் செல்லும் சாலையில் 2 கி.மீ.தூரத்தில் கொறுக்கை உள்ளது. பிரதான சாலையில் வரும் சிற்றூரில் நடுவில் உள்ளது.

28.12.2025- #மீள் தரிசனம்
#சுப்ராம் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மிகபாரதம்அகிலத்தின்சிகரம்
https://www.facebook.com/share/p/1PUG3LMVeK/

சாக்கோட்டை - கலயநல்லூர்ஶ்ரீ அமிர்தகலேசர் - ஸ்ரீ அமிர்தவல்லி அம்மன் ஆலயம்.

சாக்கோட்டை - கலயநல்லூர்
ஶ்ரீ அமிர்தகலேசர் - ஸ்ரீ அமிர்தவல்லி அம்மன் ஆலயம்.

கும்பகோணம் - ஆலங்குடி பிரதான சாலையில், குடந்தையிலிருந்து 5 கி.மீ.
பிரதான சாலை ஒட்டி, மேற்கில் பிரியும் சிறிய சாலையில் கிழக்கு நோக்கிய ஆலயம்.
3 நிலை ராஜகோபுரம் உடையது.

மிக மிக பழமையன ஆலயம்.
சுந்தரர் திருமுறை பாடல் தலம்

பிரளய காலத்தில் உயிர்களை கலசத்தில் வைத்து அந்த கலசம் ஒரு பகுதி லிங்கமாக மாறிய இடம்.

முன் நீண்ட மண்டபம், சுவாமி கிழக்கு நோக்கி, அர்த்தமண்டபம், முன் மண்டபம்.
அதற்கு முன்னே தெற்கு நோக்கிய தனி கருவரையில் அம்பிகை.

ஏக பிரகார அமைப்பு. கோஷ்ட்டதட்சினாமூர்த்தி, பெருமாள், பிரும்மா. துர்க்கை. சண்டிகேஸ்வரர்.

வன்னி தலவிருட்சம்.
சுப்பிரமணியர் மகாலெட்சுமி மேற்கு பகுதியில் உள்ளனர்.

ஆலய சிறப்பாக, தவசு அம்மன் சுப்பிரமணியர் சன்னதி அடுத்து உள்ளார்.

பராமரிப்பில் உள்ள ஆலயம்.

ஆலயம் முன்புறம், சிறிய தோட்டம் உள்ளது.

28.12.2025- #மீள் தரிசனம்
#சுப்ராம் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மிகபாரதம்அகிலத்தின்சிகரம்
https://www.facebook.com/share/p/1A9v5CCWPq/

தஞ்சை: பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்கள்:5. சுரைக்காயூர் :ஸ்ரீபுஜபதீஸ்வரர் ஆலயம்

தஞ்சை: பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்கள்:

5. சுரைக்காயூர் :
ஸ்ரீபுஜபதீஸ்வரர் ஆலயம்

💥சுரைக்காயூர்:
திருக்கருகாவூர் - திட்டை சாலையில் வரும் வெட்டாறு பாலம் கடந்து வடக்குகரையில் செல்லும் பாதையில் ஒன்பத்து வேலி, கொடுகிழி என்ற சிற்றூர்கள் கடந்துள்ளது. வடக்குப்புறம் உள்ளது. அருகில் தெற்கில், வெட்டாறு பாலம் கடந்து 2 கி.மீ.தூரத்தில் திட்டை செல்லும் வழியில் மெலட்டூர் வைப்புத்தலம் உள்ளது.

🌼வெட்டாறு வட கரையில் உள்ளது
🌼கிழக்கு நோக்கிய ஆலயம்.

🌼சுவாமி ஸ்ரீபுஜபதீஸ்வரர் - ஸ்ரீ ஒளடதாம்பாள்
நந்தி, அடுத்துள்ள மண்டபம் பெரியது, சுவாமி, அம்பாள் சன்னதிகளை இணைத்து கட்டப்பட்டுள்ளது.

🔰சுவாமி கிழக்கு நோக்கியும்
அம்பாள் தெற்கு நோக்கியும் உள்ளார்கள்.

⛳சுற்று பிரகாரத்தில், விநாயகர், தெட்சினாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், துர்க்கை உள்ளனர்.
⛳கிழக்கில் பைரவர், சனிஸ்வரர், முதலிய தெய்வங்களும் உள்ளது.

🔱புராதானமான தலம், இராமாயண தொடர்புள்ளது. ராமர் வழிபட்டத்தலம்.

🔱ஆயுஷ் தேவி தஞ்சை மாவட்டத்தில் உள்ள இரண்டு ஆலயங்களில் இதுவும் ஒன்று. மற்றொன்று இவ்வூர் அருகில் உள்ள அரிமங்கை ஆலயத்தில் உள்ளது.

🌼புனரமைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது.
ஒரு காலம் மட்டும் நடைபெறுகிறது.

ஆலயம் எப்போதும் திறந்திருக்கிறது.
அருகில் அய்யனார் ஆலயம். ஒரு குளம் ஒன்றும் உள்ளது.

🌼தஞ்சாவூர் சுற்றியுள்ள பஞ்சவைத்தியதலங்களில் இதுவும் ஒன்று
நவராத்திரி அம்மன் ஆயூஷ் தேவியை தசமி திதியில் இங்கு தரிசிக்க வேண்டும்
சுரைக்காய் சித்தர் திருவடிபட்ட புண்ணியதலம்.

🌼ஆலயம் நல்ல பராமரிப்பில் உள்ளது.  அருகில் உள்ள பெரிய தலம் - மெலட்டூர்.
தனித்தனி சன்னதிகளில், விநாயகர், வள்ளிதெய்வானையுடன் முருகன்,
கிழக்குப்புறத்தில் ஒரு குளம் மற்றும் ஒரு அய்யனார் ஆலயமும் உள்ளது.

#சுப்ராம்அருணாசலம்
28.12.25 மீள் தரிசனம்
(17.10.2021 - தரிசனம்)
4.3.2023 பிரதோஷம் தரிசனம்.
#பிரதோஷம் - சனி மகாபிரதோஷம்
https://www.facebook.com/share/p/1BsNErLSJp/
(சுரைக்காயூர்)
#சுப்ராம்தரிசனம் 
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

தஞ்சை:: பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்கள்:4.🛕மாத்தூர் - ஸ்ரீ வைத்தீஸ்வரர் (எ) மருந்தீஸ்வரர் ஆலயம் :

தஞ்சை:: பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்கள்:
4.
🛕மாத்தூர் - ஸ்ரீ வைத்தீஸ்வரர் (எ) மருந்தீஸ்வரர் ஆலயம் :

🔱தஞ்சைக்கு வடக்கே 12 கி.மீ. திருப்புள்ளமங்கை என்னும் பசுபதி கோவில் அடுத்து வரும் அய்யம்பேட்டை பிரதான சாலைக்குத் தெற்கில் உள்ள புராதான தலம்.  முழுவதும் செங்கல் தளி . 

🌟ஆலயம் கிழக்கு நோக்கியுள்ளது.
சில நூற்றாண்டுகளுக்கு முன் சிதலமடைந்து தரைமட்டமாகி பிறகு புனரமைப்பு செய்யப்பட்டு 2002 ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
காட்சி கோபுர அமைப்புடன் நுழைவு வாயில் முன்மண்டபம் வெளவால் நெற்றி அமைப்பு.

🔱கருவரை கோபுரம் மிகவும் உயரமானது. மிக மிக வித்தியாசமான அமைப்புடையது.
ஆலயம் சுற்றுச் சுவர் உள்ளது. 

🌟ஸ்ரீமருந்தீஸ்வரர் , கிழக்கு நோக்கியும், 
ஸ்ரீ பிருஹன்நாயகி தெற்கு நோக்கியும் அமைந்த ஆலயம்.

🏵️புராதான தலம். சுந்தரர் வைப்புத்தலம்.

🏵️தன்வந்திரி அகத்தியர் பிரதிஷ்ட்டை செய்துள்ளனர்.

🏵️குபேரலிங்கம் முற்காலத்திலிருந்து உள்ளது.

🏵️சனி பகவான் காகத்தின் மீது காலை மடக்கியுள்ளார்.

🏵️இங்குள்ள காயத்திரி சக்கரம், மனம், உள்ளத்திற்கு நலம் தரும்.

🏵️கோமுக சிறப்பு: பகீரதன் அமிர்த கங்கை தீர்த்த சிறப்புடையது. 

🏵️ஸ்ரீ பிரஹன் நாயகியம்மனை பிரார்த்தனை செய்தால், சுப மங்களம்

🏵️நெற்றிக்கண்ணுடைய நந்தி, சூரியன், பைரவர், சண்டேஸ்வரர் வழிபட மிகவும் நலமும் வளமும் பெறலாம்,

🏵️தன்வந்திரி, அகத்தியர், - நோய் தீர்த்தருளுபவர்.

🏵️குபேரர் வழிபட்டது.

28.12.2025 #சுப்ராம்தரிசனம் 
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
https://www.facebook.com/share/p/17nPhr82xN/
(மாத்தூர்)

தஞ்சை: பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்கள்:3. வீரசிங்கம்பேட்டை . ஸ்ரீ ஆதி வைத்திநாத சுவாமி ஆலயம்.

தஞ்சை: பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்கள்:

3. வீரசிங்கம்பேட்டை . ஸ்ரீ ஆதி வைத்திநாத சுவாமி ஆலயம்.

🛕கண்டியூர் - பசுபதி கோவில் பிரதான வழியில் வரும், கல்யாணபுரம் அருகில் தென்புறம் சுமார் 700 மீட்டர் உட்புறம் உள்ளது ஸ்ரீ வைத்திநாத சுவாமி ஆலயம்,
276 சிவலிங்கங்கள் உள்ள ஆலயம்.

🛕தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இருந்து 14 கிமீ தொலைவில், வீரசிங்கம்பேட்டையில் ஸ்ரீ ஆதி வைத்தியநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது வீரசிங்கம்பேட்டை ஆதி வைத்திநாதஸ்வாமி ஆலயம். 

🏵️மூலவர்: ஆதி வைத்தியநாதர்; அம்பாள் : வாலாம்பிகை. இரண்டுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. 

🏵️வரலாற்றுப்படி அகஸ்தியர் முனிவரால் நிறுவப்பட்ட தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்கள்:
 1.வைத்தியநாதர், பூமாலை. கீழவாசல், தஞ்சாவூர்.
2.ஆதி வைத்தியநாதர், வீரசிங்கம்பேட்டை, 3.ஔஷதபுரீஸ்வரர், மாத்தூர்
4.ராஜராஜேஸ்வரர், கடகடபை,
(தற்போது கூடலூர் - மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் உள்ளது)
5.பூஜாபதீஸ்வரர், சொரைக்காயூர் 

🏵️ஐந்து கோவில்களில் மிக தொன்மையானது வீரசிங்கம்பேட்டையில் உள்ள ஆதி வைத்தியநாதர் கோவில். இது 1000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கோவில்

🛕கோயில், கிபி 8ஆம் நூற்றாண்டின் மத்தியில் இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்டதால், இதற்கு முன்பு நந்திபுரம் என்று அழைக்கப்பட்டது. இக்கோயிலில் உள்ள பல்லவர் பாரம்பரியத்தின் சான்றாக, வழக்கமான பல்லவர் பாணியில், மகா மண்டபத்தின் நுழைவாயிலில் உள்ள விநாயகர் உள்ளது.

🍀கிபி 750 இல் கட்டப்பட்ட இந்த கோயில், 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் காலம் வரை பல்லவர்கள், சோழர்கள் மற்றும் பாண்டியர்களிடமிருந்து வலுவான ஆதரவைக் கண்டுள்ளது.

🌟 பாண்டியர்களின் காலத்தில் இந்த கோவிலுக்கு அருகில் ஒரு அரண்மனை இருந்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் 1311 இல் மாலிக் கஃபூர் தலைமையிலான முகலாயர்களின் படையெடுப்பின் போது இடிக்கப்பட்டது.

🛕 கோவிலுக்கு கிழக்கிலிருந்து ஒரு நுழைவாயில் உள்ளது, ஆனால் இது சிறப்பு சந்தர்ப்பங்களைத் தவிர மற்ற நேரங்களில் பூட்டப்பட்டுள்ளது. அரிதாகவே திறக்கப்படுகிறது. 

🍀மாறாக கோயிலின் வடக்குப் பகுதியில் சிறிய நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. எளிய மகா மண்டபம் - வவ்வால்- நெத்தி கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது 

🌼பல்லவர் கால விநாயகர் மற்றும் இரண்டு துவாரபாலகர்கள் உள்ளனர். உள்ளே சிவன் மற்றும் பார்வதி சன்னதிகள் உள்ளன. மகா மண்டபத்தின் தெற்குப் பக்கத்தில் ஒரு சிறிய வாயில் உள்ளது, அது நேராக அம்மன் சன்னதிக்கு செல்கிறது - பாண்டியர்களின் சீர் செய்து இருக்கலாம்.

🌼தனி தட்சிணாமூர்த்தி உள்ளது. வெளி கோஷ்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள விஷ்ணு துர்கைக்கான சந்நிதி, பின்னர் சேர்க்கப்பட்ட அமைப்பு.  

🌼 பிரகாரத்தில் விநாயகர், முருகன், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், கால பைரவர், சூரியன், சந்திரன் ஆகிய சன்னதிகளும், வட்ட வடிவ பீடத்தில் தனி நவக்கிரகம் சன்னதியும், அதனை அடுத்து பால தண்டாயுதபாணியாக முருகனுக்கு மற்றொரு சன்னதியும் உள்ளன.

🏵️கோவில் உள்ள மேற்குப் பகுதியில் உள்ள ஒரு மாடவீதியில் 276 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.

 🛕இந்த 276 லிங்கங்கள் எல்லாம், கோவில் தென்புறத்தில் உள்ள கிராமத்தில் தோண்ட தோண்ட கிடைத்து அதை இங்கு வைத்து வழிபடுகிறார்கள்.

🔱இவை சிவபெருமானின் 276 பாடல் பெற்ற ஸ்தலங்களைக் குறிக்கும். பூமிக்கு அடியில் மொத்தம் 1000 லிங்கங்கள் புதைந்திருப்பதாக நம்பப்படுவதால், இது வடிவமைப்பா அல்லது தற்செயலானதா என்பது தெரியவில்லை, 

🔱மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, இந்த கோயில் கட்டப்பட்டபோது இந்த இடத்தை தோண்டியபோது, ​​​​ இந்த லிங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

🏵️மேற்கில் விநாயகர் மற்றும் முருகன் சன்னதிகளுக்கு இடையே ஒரு நீண்ட நடைபாதை உள்ளது, இதில் 3 செட் லிங்கங்கள் உள்ளன. முதலாவது 12 ராசிகளைக் குறிக்கும் 12 லிங்கங்களின் தொகுப்பு. இரண்டாவது, ஒரு பெரிய லிங்கம் - நடுநாயகமாக விஸ்வநாதர், மற்றும் 14 லிங்கங்களின் மற்றொரு தொகுப்பு. 276 லிங்கங்களைக் கொண்ட மேற்கு மண்டபத்தின் மற்ற பகுதியிலிருந்து இது தனித்தனியாக உள்ளது.

🍀மருத்துவத்துடன் தொடர்புடைய கோயில் என்பதால் தென்கிழக்கில் சந்திரனுக்குப் பக்கத்தில் தன்வந்திரி, போகர் சித்தர், அகஸ்திய முனிவர் ஆகியோர் தனிச் சந்நிதி உள்ளது. இவை மூன்றும் பொதுவாக மூலிகைகள் மற்றும்/அல்லது மருத்துவத்துடன் தொடர்புடையவை.

🪴 அவற்றை அடுத்து கோயிலின் ஸ்தல விருட்சம் - ஒரு வில்வம் மரம். 
 ஒரு கிளையில் 9, 13 அல்லது 16 இலைகள் கொண்ட வில்வம் இலைகளை துளிர்ப்பது மகா வில்வம் என்று அழைக்கப்படுகிறது.

🔰தற்போது இங்கு ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது.

💥இக்கோயிலுக்கு அருகில் (2 கி.மீ. தொலைவில்) புகழ்பெற்ற பாடல் பெற்ற ஸ்தலங்கள் உள்ளன - திருக்கண்டியூர், திருச்சோற்றுத்துறை, திருவையாறு போன்ற தலங்கள் உள்ளன.

# 28.12.2025 மீள் தரிசனம்
#சுப்ராம் 
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
https://www.facebook.com/share/p/17gR3nwvNF/
வீரசிங்கம் பேட்டை

தஞ்சை: பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்கள்:🛕 2.1.கடகடப்பை: ஸ்ரீ ராஜராஜேஸ்வரர்

தஞ்சை: பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்கள்:

🛕 2.1.கடகடப்பை: ஸ்ரீ ராஜராஜேஸ்வரர்

🏵️ புராண வரலாற்றுப்படி அகஸ்தியர் முனிவரால் நிறுவப்பட்ட தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்கள்:

 1.வைத்தியநாதர், பூமாலை. கீழவாசல், தஞ்சாவூர்.
2.ஆதி வைத்தியநாதர், வீரசிங்கம்பேட்டை, 3.ஔஷதபுரீஸ்வரர், மாத்தூர்
4.ராஜராஜேஸ்வரர், கடகடபை,
(தற்போது கூடலூர் - மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் உள்ளது).
5.பூஜாபதீஸ்வரர், சுரைக்காயூர் 

கடகடப்பை: ஸ்ரீ ராஜராஜேஸ்வரர் ஆலயம்

🛐தஞ்சை புறவழி சாலையில் வெண்ணாற்றங் கரையில் கிழக்கில் 2 கி.மீ.வந்து, கொளமங்கலம் பிரிவுப்பாதையில் (கரையில் ஒரு அய்யனார் ஆலயம் உள்ளது - அதன் அருகில்) பிரியும் பாதையில் மேலும் 1 கி.மீ சென்றால், வரும் கூடலூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் கருவரை அருகில் தனியரையில் கடகடப்பை ஆலய மூர்த்தங்கள் உள்ளது.

🛐 கூடலூர் - கடகடப்பை கிராமத்தில் அஹ்ரகாரத்தில் இருந்த சிவாலயம் முற்றிலும் சிதைந்து விட, அங்குள்ள மூலவர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரர் மற்றுமுள்ள மூர்த்தங்கள் கூடலூரில் வைத்து வணங்கப்பட்டு வருகிறது.

🛕 2.2. கூடலூர் - சொக்கநாதர் - மீனாட்சியம்மன் ஆலயம்

🛐தஞ்சாவூர்...வெண்ணற்றங்கரை வடகரையில் உள்ள சிற்றூர். புண்னைநல்லூர் வழியில் வந்து கும்பகோணம் By Pass வழியில் சிறிது தூரத்தில் வரும் வெண்ணாற்றங்கரையில் வடகரையில் 2 கிமீ. அய்யனார் ஆலயம் எதிரில் வடகிழக்கில் இறங்கும் பாதையில் சென்றால் கூடலூர் அடையலாம்.

🛐 தஞ்சாவூர் வட்டத்தில் உள்ள பழமையானசிவாலயங்களில் ஒன்று. திருப்பணிகளை எதிர்நோக்கியுள்ளது. இத்திருத்தலத்தில் மேற்கு நோக்கி சுவாமியும், தனி சன்னதியில் அம்பிகை தெற்கு நோக்கியும் காட்சியளிக்கின்றனர்.

🏵️ஆனித்திருமஞ்சனம் நடைபெறுகின்ற
பஞ்ச ஆதித்ய தலங்களில் ஒன்றானஇச்சிவன் கோயில், சூரிய தோஷம் போக்கிடும் தலம் என்பதும், இங்குள்ள பைரவருக்கு ஒவ்வொரு அஷ்டமியிலும், சூரிய அஸ்தமனத்திற்குப் பின்விசேஷ வழிபாடுகள் நடைபெறுவதும் தலச்சிறப்புக்களில் முதன்மையானதாகும்.

🏵️மாசி மாதம் 27,28,29 -தேதி நாட்களில், சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள்
இறைலிங்க திருமேனியில் படர்ந்து வழிபட்டு செல்வது மற்றுமொரு சிறப்பு.

🏵️தஞ்சை பெருவுடையாரின் ஆணைப்படி,அநபாய சோழர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட இத்தலத்திற்கு, மதுரை சொக்கநாதர்
ஒரு ஆனி மாதம் உத்திர நாளில் வருகை தந்து அருள்புரிந்ததாக தலவரலாறு கூறுகிறது.

🏵️நம் ஈசன் தம்பதியருக்கு உகந்த அத்தனை விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படும் இத்தலத்தில், சித்திரை தமிழ் வருடப்பிறப்பும், சித்ரா பவுர்ணமியும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

🏵️இரண்டு பிரகாரம் முழுதும் வெளவால் நெற்றி மண்டபம் கொண்டது.

🌟நுழைவு வாசல் தெற்கு புறம் காட்சி கோபுரத்துடன் அமைந்துள்ளது.

💥திருப்பனி வேலைகள் நடைபெற்று வருகிறது.

🏵️சுவாமி மேற்கு நோக்கியும், அம்பாள் தெற்கு பார்த்தும் தனி தனி சன்னதிகளில் 
முழுவதும் செங்கற்கள் கொண்ட திருச்சுற்று மதில் சுவரும் உள்ளது. அலங்கார மண்டபம், உள் மண்டபம். அனைத்தும் உடையது.

https://www.facebook.com/share/p/1DciRQvGWa/
#சுப்ராம் - 28.12.2025
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

தஞ்சையின் பஞ்ச வைத்திநாதர் ஆலயங்கள்.வைத்தியநாதர், பூமாலை. கீழவாசல், தஞ்சாவூர்.

தஞ்சையின் பஞ்ச வைத்திநாதர் ஆலயங்கள்
வைத்தியநாதர், பூமாலை. கீழவாசல், தஞ்சாவூர்
ஆலயம் - 1
🏵️ புராண வரலாற்றுப்படி அகஸ்தியர் முனிவரால் நிறுவப்பட்ட தஞ்சாவூரைச் சுற்றியுள்ள  பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்கள்:

 1.வைத்தியநாதர், பூமாலை. கீழவாசல், தஞ்சாவூர்.
2.ஆதி வைத்தியநாதர், வீரசிங்கம்பேட்டை, 3.ஔஷதபுரீஸ்வரர், மாத்தூர்
4.ராஜராஜேஸ்வரர், கடகடபை,
(தற்போது கூடலூர் - மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் உள்ளது). 
5.பூஜாபதீஸ்வரர், சுரைக்காயூர் 
https://www.facebook.com/share/r/17pbLYCvX4/

🛕தஞ்சை கீழவாசல் :
ஸ்ரீ பாலம்பிகை சமேத பூமாலை வைத்தீஸ்வரர் ஆலயம் 

தஞ்சையின்   பஞ்ச வைத்திநாதர் க ஆலயங்களில் ஒன்று.

🔱இது அரன்மணை தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயம்.
சிறிய ஆலயம். கிழக்குப் பார்த்த சுவாமி கருவரையும், அம்பாள் கருவரை தெற்கு பார்த்த அமைப்பும் கொண்டது. 

🔱ஆலயம் பண்டைய கால வெளவால் நெற்றி  மண்டபத்துடன் உள்ளது. மிக அழகிய புராண கருத்துகள் உள்ள வரலாற்று ஓவியங்கள் சிறப்பாக அமைந்துள்ளது.

🔱முன்புறம் வாயில் மண்டபம் உண்டு.

🔱ஆலயமேற்கு புறத்தில் உள்ள வடபத்ர காளியம்மன் மிகவும் பிரசித்தமாக உள்ளது. சிறப்பு பூசைகள் நடைபெற்று பிரசித்தமாக உள்ளது.

🔱சுற்றுப்பிரகாரங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. இருப்பினும், நகர்புறத்தில் ஆலயம் உள்ளதால், ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள்.

https://www.facebook.com/share/p/1DrGZ3nWgu/
கீழவாசல் 

#சுப்ராம் - 28.12.2025
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

தஞ்சை பஞ்ச வைத்திநாதர் ஆலயங்கள் 28.12.25 பதிவு - 1

💥தஞ்சை:
   
💥 ⛳பஞ்ச வைத்திநாதர் ஆலயங்கள் ⛳💥
பதிவு -1
புராண வரலாற்றுப்படி அகஸ்தியர் முனிவரால் நிறுவப்பட்ட தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்கள்:

இவ்வாலயங்கள் அனைத்தும் தஞ்சைப் பகுதியில் உள்ளன. புராண புகழ்பெற்ற இவ்வாலயங்கள் சென்று வழிபடும் முறைகள், கால சூழலில் மறைந்து பின் அருணாசல சத்ருவேங்கட ராமசுவாமி என்னும் ஆன்மீக பெரியவர் அவர்களால் புராணம் மீண்டும் எடுத்துரைக்கப்பட்டது. பூசை வழிபாட்டு முறைகள் மீண்டும் பின்பற்றப்படுகிறது.

🌟இவ்வைந்து ஆலயங்களையும் பஞ்ச வைத்திலிங்க ஆலயங்கள் என்று போற்றி, நடைபயணமாகவும் கூட சுற்றி வந்தார்கள் என்று கூறுகிறார்கள்.

🌟கற்கடேஸ்வரர் ஆலய தேவாரப்பதிகங்கள்
 ( 'மருந்து வேண்டின்.. ' ) இங்கு மருந்தாக வைத்து செவ்வாய், அஸ்வினி, சஷ்டி, பிரதோஷத்தில் வணங்கி பராயணம் செய்தால், நோய் நீங்கும் என்பதாக ஐதீகம். 

🛐ஒரே நாளில் இவ்வைந்து தலங்களையும் தரிசித்து பலன் பெறுகிறார்கள் என்பது, சிறப்பு.

வழி | இருப்பிடங்கள்.

1. 🛕தஞ்சாவூர் கீழவாசல்,பூமாலை ராவுத்தர் வீதியில் உள்ள ஸ்ரீ வைத்திநாத சுவாமி ஆலயம்.
(அரண்மனை ஆலயம்)

2. 🛕கடகடப்பை: (தற்போது கூடலூரில் உள்ளது) .
தஞ்சை புறவழி சாலையில் வெண்ணாற்றங் கரையில் கிழக்கில் 2 கி.மீ.வந்து, கொளமங்கலம் பிரிவுப்பாதையில் (கரையில் ஒரு அய்யனார் ஆலயம் உள்ளது - அதன் அருகில்) பிரியும் பாதையில் மேலும் 1 கி.மீ சென்றால், வரும் கூடலூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி ஆலயத்தின் கருவரை ஒட்டியுள்ள தனியரையில் கடகடப்பை சுவாமி மூர்த்தங்கள்உள்ளது.
(குருந்தளூர் - கடகடப்பை கிராமத்தில் அஹ்ரகாரத்தில் இருந்த)
 சிவாலயம் முற்றிலும் சிதைந்து விட, அங்குள்ள மூலவர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரர் மற்றுமுள்ள மூர்த்தங்கள் இங்கு வைத்து வணங்கப்பட்டு வருகிறது.

3.🛕 வீரசிங்கம்பேட்டை : கண்டியூர் - பசுபதி கோவில் பிரதான வழியில் வரும், கல்யாணபுரம் அருகில் தென்புறம் உள்ளது ஸ்ரீ வைத்திநாத சுவாமி ஆலயம்,
276 சிவலிங்கங்கள் உள்ள ஆலயம். வைப்புத்தலம்.

4.🛕 மாத்தூர் :
தஞ்சை அருகில் கும்பகோணம் சாலையில் வரும் அம்மாப்பேட்டைக்குத் தெற்கில் அமைந்துள்ள, சிற்றூர். இவ்வூரில் உள்ள ஸ்ரீ வைத்திநாத சுவாமி ஆலயம். வைப்புத்தலம்.

5.🛕 சுரைக்காயூர்:
 திட்டை - மிலட்டூர் - திருக்கருகாவூர் சாலையில், மெலட்டூர் தாண்டி வெட்டாற்றங்கரை வடகரையில் உள்ள சுரைக்காயூர் என்ற சிற்றூரில் உள்ள ஸ்ரீ புஜபதீஸ்வரர் ஆலயம்.

🛐 நாங்கள் மேற்கண்ட 5 தலங்களையும் மேலும் சில ஆலயங்களையும் இணைத்து, 28.12.2025 அன்று தரிசித்து வந்தோம்.

தொடரும்......

#சுப்ராம் 
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு.

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு. ⛳தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காவிரி ...