Sunday, June 13, 2021

மடக்கணி சம்பந்தர் அமுதம் - பதிவு - 6 பாடல்: 12

#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#மடக்கணி
பதிவு : ஆறு. (பாடல் 12.)
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🙏🏻
💠நம் பக்தி இலக்கியத்தில்
ஒப்பற்ற நம் தமிழ் மொழியின்
அற்புத யாப்பமைந்த சிறப்பான ஒரு பதிகப் பாடல் அமைப்புக் குறித்து 
ஒரு துளியேனும் நாம் சிந்திக்க முயலலாமே என்ற வகையில் பதிவிடப்படுகிறது.
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🛐
❇️சீர்காழிப்பதியில் அவதரித்து, இறைவரால் அமுது ஊட்டப்பெற்ற 
   தமிழ் ஞானசம்பந்தர் தமிழுக்கு அணி     
   செய்தவர்.  
செந்தமிழினால் இறைவனை
   எண்ணித் துதி செய்தவர். பக்தி இசைப்     
    பாடல்கள் அருளிச் செய்தவர். 

✳️தமிழ் ஞானி திருஞானசம்பந்தர் என்னும் இந்த ஞான பிள்ளையாரின் பாடல்களில் 
நமக்கு தற்போதுவரை கிடைத்துள்ளவை;
226 தலங்களைப் பற்றிய, 386 பதிகங்களில் உள்ள 4146 பாடல்கள் மட்டுமே.
இவர் பாடல்களை முதல் மூன்றுத் திருமுறைகளாகத் தொகுத்துள்ளார்கள்.

🌟தமிழுக்கு புதிய புதிய யாப்பு வகைகளை இவரே முதன் முதலாகக் கையாண்டார் என்பது மிகச் சிறப்பு.
#சம்பந்தர்தூது  
#ஏகபாதம் 
என்ற தலைப்பின் கீழ் தூது பாடல்களும் ஏகபாதம் என்ற யாப்பு வகைப் பாடல்களை ப்பற்றி ஏற்கனவே சிந்தித்து வந்தோம்.
☀️தற்போது #மடக்கணி யாப்பு பற்றிய பதிவு.

 🙇🏻‍♀️மடக்கணி பாடல்கள்:

மடக்கு' என்பது வந்த சொல்லோ, சொற்றோடரோ மீண்டும் வந்து பொருள் வேறுபட்டு நிற்பதாகும்.
⚜️ யமகம் என்றாலும் மடக்கு என்றாலும் ஒரு பொருளையே குறிக்கும். 
யமகம் என்பது வடசொல் இதை இயமகம் என்பர்.

🎆தமிழ் ஞானசம்பந்தர் அருளிச் செய்த இந்த வகைப் பாடல்களைப் பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.

🏔️இந்த வகை யாப்பு அமைந்த பதிகங்கள்
தேவாரம் - மூன்றாம் திருமுறைகளில்
பதிகம் - 371 - திருக்கழுமலம்  
பதிகம் - 372 - திருக்கச்சியேகம்பம்
பதிகம் - 373 - திரு ஆலவாய்
பதிகம் - 374 - திருவீழிமிழலை
முதலிய பதிகங்களில் காணக் கிடைக்கிறது.
இதில் நாம் பதிகம் 371 - திருக்கழுமலம் தலத்தில் அருளிய 12 பாடல்களைப் பற்றி சிந்தித்து வருகிறோம்.

🔷இந்த பதிகத்தில் சீர்காழியின் 12 பெயர்களைப் பாடல்களில் குறிப்பிட்டு போற்றியுள்ளமை கருதத்தக்கது.

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🙏🏻

தேவாரம். - மூன்றாம் திருமுறை 
பாடல் 1223
பதிகம். 371 தலம் - திருக்கழுமலம்
பாடல் - 12
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇

பருமதில் மதுரைமன் னைவை எதிரே
      பதிகமது எழுதிலை அவைஎதிரே

வருநதி யிடை மிசை வருகரனே
      வசையொடும் அவர் கெட வருகரனே

கருதலில் இசைமுரல்தரும் அருளே
      கழுமலம் அமர்இறை தரும் அருளே

மருவிய தமிழ்விர கனமொழியே
      வல்லவர் தம்மிடர் திடமொழியே
      
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பாடல் பொருள் விளக்கம்:
1. பெரிய மதில்களையுடைய மதுரை நகரின்கண் அரசனது அவைமுன்னர்த், திருப்பதிகத்தை ஓலையில் எழுதி
🔰
பருமதில் மதுரை மன் அவை எதிரே - பருத்த மதில்களை உடைய மதுரை அரசன் சபையின் முன்.
பதிகம் அது எழுது இலை அவை - பனை ஏடும் அதில் எழுதிய பாடலும் ஆகியவைகள். ( அவை - என்று பன்மையால் கூறினமையால் இங்ஙனம் கூறப்பட்டது.) 

 2.வைகை நதியின் மீது செலுத்த 
அதனை எதிர் நோக்கிச் செல்லுமாறு செய்த கரத்தையுடையவர் சிவபெருமான். 
🔰
வருநதி இடை - வரும் வைகையாற்றில்.
 மிசை - மேலே எதிரே 
வரு - எதிரேவரச் செய்த. 
கரன் - செய்கையை உடையவன்.
 வரு - என்பதில் பிற வினை விகுதி தொக்கு நின்றது. 
வசையொடும் அலர்கெட - சைவர்களுக்குவந்த பழியும், பழிதூற்றலும் கெடுமாறு. 
அருகு அரன் சமணர்களை அழித்தவன். 
அருகு - அருகர். 
அரன் - ஹரன் ; அழித்தவன்.

3. அவர் சைவர்கட்கு வந்த பழியும், பழிதூற்றலும் கெடுமாறு சமணர்களை அழித்தவர்.
நினைக்கவும் முடியாதபடி சைவர்களின் புகழ் உலகம் முழுவதும் ஒலிக்கும்படி செய்த வியப்பான செயல்.
🔰
கருதலில் - நினைக்கவும் முடியாதபடி.
இசை - சைவர் அடைந்த புகழ். 
முரல்தரும் - உலகம் முழுவதும் ஒலிக்கும்படி செய்த.
 மருள் - வியப்பு. 
கழுமலம் அமர் இறைதரும் அருளே - கமுமலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் செய்த திருவருட் பெருக்கே யாகும்.
 4.திருக்கழுமலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனின் அருளே. 
அவ்வருளைப் பெற்ற முத்தமிழ் விரகரது பாடல்களை ஓதவல்லவர்கள் இடர் ஒழிதல் நிச்சயம்.
🔰
 மருவிய - அவ்வருளைப் பெற்ற.
 தமிழ் விரகன - முத்தமிழ் விரகரது.
 மொழி - இப்பாடல்களை. 
வல்லவர் - வல்லவர்களது.
 இடர் திடம் ஒழி - இடர் ஒழிதல் நிச்சயம். ஒழி - முதனிலைத் தொழிற் பெயர்.
⛰️தலம் குறிப்பு: கழுமலம் :
உரோமச முனிவர் பூசித்து ஞானோபதேசம் பெற்று, உலகில் உள்ள உயிர்களின் மலங்களைக் கழுவும் (நீக்கும்) வரம் பெற்றதால் இப்பெயர்.

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த 
ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம்; இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 

வணக்கம்.
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
முதல் பதிவில் பாடல் 1. விளக்கம்
1.
https://m.facebook.com/story.php?story_fbid=5711134088961801&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=3991943280880899&id=100001957991710

பதிவு : இரண்டு பாடல். 2,3. விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=5716695178405692&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=3995772097164684&id=100001957991710

பதிவு : மூன்று. பாடல் 4, 5 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=5721422241266319&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=4000232066718687&id=100001957991710

பதிவு : நான்கு : பாடல் 6,7, 8 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4004194352989125&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=5725240914217785&id=100001957991710

பதிவு: ஐந்து: பாடல்கள் 9,10, 11 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4010118565730037&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=5731450300263513&id=100001957991710
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...