Sunday, June 13, 2021

மடக்கணி - சம்பந்தர் அமுதம் - பதிவு - 5. பாடல்:9, 10, 11

#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#மடக்கணி
பதிவு : ஐந்து  (பாடல் 9, 10, 11)
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🙏🏻

 🙇🏻‍♀️மடக்கணி பாடல்கள்:
மடக்கு' என்பது வந்த சொல்லோ, சொற்றோடரோ மீண்டும் வந்து பொருள் வேறுபட்டு நிற்பதாகும்.  தமிழ் ஞானசம்பந்தர் அருளிச் செய்த இந்த வகைப் பாடல்களைப் பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🙏🏻

தேவாரம். - மூன்றாம் திருமுறை 
பாடல் 1220
பதிகம். 371 தலம் - திருக்கழுமலம்
பாடல் - 9
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
நின்மணி  வாயது  நீழலையே
     நேசம  தானவர்   நீழலையே

உன்னி   மனத்தெழு    சங்கமதே
       ஒளியத  னோடுரு  சங்கமதே

கன்னிய  ரைக்கவ   ருங்களனே
        கடல்விடம்   உண்டக   ருங்களனே

மன்னிவ   ரைப்பதி   சண்பையதே
        வாரி  வயல்மலி  சண்பையதே
      
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பாடல் பொருள் விளக்கம்:

1. சிவபெருமானே! மணிகட்டிய உன் கோயில் வாசலின் நிழலையே அருளிடமாகக் கொண்ட நேசமுடைய அடியவர்களிடமிருந்து நீங்கமாட்டாய்.

நின்மணிவாயது - உமது ஆராய்ச்சி மணிகட்டிய, கோயிலின் திருவாயிலினுடைய. 
நீழலையே - நிழலையே. 
நேசமது ஆனவர் - விருப்பமாகக் கொண்டவர் ; என்றது திருக்கோயிலில் வழிபாடுசெய்து வாயிலில் காத்திருக்கும் அடியர் என்றபடி. `
வாய் - வாயில்.
 நீளலை ( அவ்வடியவரினின்றும் ) நீங்கமாட்டாய்

2.மனத்தில் தொழுகின்ற  அடியவர்கள் விளங்குகின்ற இடமே,  அடியவர்  திருக்கூட்டம் எனத் தக்கதாகும்.

உன்னி மனத்து - மனத்தில் உம்மை நினைத்து.
 எழு - எழுகின்ற.
 சங்க ( ம ) ம் - அடியார். 
ஒளியதனோடு - சைவ தேஜஸோடு. 
உறு - வருகின்ற. 
சங்கமது - கூட்டமாகும். 
சங்கம் ; சங்கமம் என்பதன் மரூஉ. கடவுள் வெளிப்படும் நிலைகளாகிய குரு, லிங்க, சங்கமங் களில் ஒன்று. 

3.தாருகாவனத்தில் மேவிய மகளிரின் உள்ளத்தைக் கவர்ந்த கள்வர்;
 கரிய விடத்தைக்  கண்டத்தில் திகழுமாறு செய்தவர்.  

கன்னியரை - முனிபத்தினியரை.
கவரும் - மனம் கவர்ந்த. 
களன் - கள்ளன். 
கடல் விடமுண்ட, கருங்களன் - கரிய கழுத்தை உடையவன்

4.அப்பெருமான் நிலையாக விரும்பி வீற்றிருந்தருளும் வரையறுத்தலை உடையபதி
 சண்பைப்புல்லாலே அழகாகச் சூழப் பட்டதாகிய. கடல்வளமும், வயல் வளமும் உடைய சண்பை நகராகும்.

🛐தல குறிப்பு:  சண்பை:
கபிலர் சாபத்தால் யாதவன் ஒருவன் வயிற்றில்  உதித்த  இருப்பு உலக்கையைப் பொடியாக்கிக் கொட்டினான்.  அத்தூள்கள்  சண்பைப் புற்களாய் முளைத்தன.  அப்புற்களைக் கொண்டு  யாதவர்கள்  சண்டையிட்டு  மாய்ந்தனர். இப்பழி நீங்கும் பொருட்டுக்  கண்ணனும்  கபில முனிவரும் இந்தத் தலத்தை வழிபட்டு உய்ந்தனர்.  இதனால் சீர்காழிக்கு சண்பை எனப் பெயர் வந்தது.

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
தேவாரம். - மூன்றாம் திருமுறை 
பாடல் 1221
பதிகம். 371 தலம் - திருக்கழுமலம்
பாடல் - 10
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
இலங்கை  அரக்கர்  தமக்குஇறையே
       இடந்து கயிலை எடுக்க  இறையே

புலன்கள்  கெடஉடன்  பாடினனே
        பொறிகள்  கெடஉடன்  பாடினனே

இலங்கிய  மேனி  இராவணனே
         எய்து பெயரும்   இராவணனே

கலந்தருள் பெற்றது   மாவசியே
          காழி  அரனடி   மாவசியே
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇

பாடல் பொருள் விளக்கம்:
1. இலங்கையில் அரக்கர்களின் வேந்தனாகிய இராவணன்  
கயிலை  மலையை பெயர்த்தெடுக்க,  நொடிப் பொழுதில்  அவ்வரக்கனைஅடர்த்தவர், 

இலங்கை அரக்கர் தமக்கு, இறை - அரசனாகிய இராவணன்.

2.இறைவன் திருப்பாத விரலை ஊன்றக் கயிலையின் கீழ் நடுக்குண்டு, இந்திரியங்கள் மயங்கச் சோர்ந்து
 தான் பிழைக்கும் வண்ணம் இறையருளை வேண்டி உடனே பாடினன்.
பழைய செருக்கு நீங்கி, பொறிகள் பக்தி நிலையில் செல்ல அவனுடைய பாடலுக்கு இறைவன் உடன்பட்டு அருளினன்.

புலன்கள் கெட - இந்திரியங்கள் எல்லாம் மயங்கச் ( சோர்ந்து ).
 உடன் பாடினனே - ( தான் பிழைக்கும் வண்ணம் ) உடனே பாடினன். 
பொறிகள் - ஐம்பொறி முதலிய கரணங்கள். 
கெட - பழைய செருக்கு நிலைகெட்டு ( பத்தி நிலையில் செல்ல ).
 உடன்பாடினனே - அவனுடைய பாடலுக்கு இறைவர் உடன்பட்டவராகி.

3.இரவு போன்ற கரிய நிறத்தை உடைய அவன் கயிலைமலையின் கீழ்   நடுக்குண்டு அழுததனால் உண்டான பெயரே இராவணன் என்பதாம். 

இலங்கியமேனி இராவணன் - விளங்கின உடம்பையுடைய இராவணனுக்கு. 
எய்தும் பெயரும் இராவணனே - அதனால் உண்டான பெயரும் அழுதவன் என்பதாம்.

4. இறைவனின் அருளில் கலந்து அவன் பெற்றது சிறந்த கூர்மையான வாட்படையைப் பெற்றனன்.
பெருமான்  மேவி விளங்கும் இடம், காழி.
 ஆங்கு வீற்றிருக்கும் ஈசன்  திருவடியே வசீகரம்  உடையது.

கலந்து அருள்பெற்றதும் மாவசியே - அருளிற் கலந்து அவன் பெற்றதும் சிறந்த வாளாயுதமாம். 
( வசி - வாள் ) ` வசி கூர்மை வசியம் வாளே ` என்பது நிகண்டு. 
காழி அரன் அடி, மாவசி - சிறந்த வசீகரத்தை உடையதாகும். 
வசி - முத்திபக்ஷாரம் என செந்திநாதையர் உரைப்பர்

🛐தலக்குறிப்பு: காழி:
காளிதன் என்னும் பாம்பும், நடனத்தில் தோல்வியுற்ற காளியும் இத்தலத்துப் பெருமானாரை வழிபட்டதால் இப்பெயர்.

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
தேவாரம். - மூன்றாம் திருமுறை 
பாடல் 1222
பதிகம். 371 தலம் - திருக்கழுமலம்
பாடல் - 11
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇

கண்ணிகழ்  புண்டரி  கத்தின னே
       கலந்து இரி  புண்டரி  கத்தினனே

மண்ணிக ழும்பரிசு  எனமதே
       வானகம்  ஏய்வகை  சேனமதே

நண்ணி அடிமுடி  எய்தலரே
        நளிர்மலி  சோலையில்  எய்தலரே

 பண்ணியல் கொச்சை  பசுபதியே
         பசுமிக   ஊர்வர்   பசுபதியே

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பாடல் பொருள் விளக்கம்:
1. தாமரை போன்ற கண்ணுடைய திருமாலும், 
தாமரை மலரின்மேல்  விளங்கும்  பிரமனும் 

கண் நிகழ் புண்டரிகத்தினனே - கண்ணானது பொருந்திய தாமரையாக உள்ளவன் ; தாமரைக் கண்ணனாகிய திருமாலும்.
 கலந்து - அவனோடு சேர்ந்து. 
இரி - திரிந்த. 
புண்டரீகத் தினன் - ( உந்திக்கமலத்தில் தோன்றியவனாகிய ) பிரமனும். 

2.பூமியைக் குடைந்து செல்லும் ஏனமாகவும் 
வானத்தில் பறந்து செல்லும் பருந்தாகவும்  முனைந்து சென்றும் 
ஈசனின் திருவடியும் முடியும் எய்த, இயலாதவராயினர்.  

மண் நிகழும் பரிசு - பூமியைத் தோண்டும் தன்மையை உடைய. 
ஏனம் அதே - பன்றியாகவும். 
வானகம் ஏய் - ஆகாயத்தில் பறக்கின்ற.
 சேனம் அது - கழுகாகவும். பிரமன் வானிற் பறக்க எடுத்த வடிவம் அன்னமாகவும் எமது ஆளுடையபிள்ளையார் வானிற் பறக்கும் கழுகாகவே அதனைக் கூறினர்.

3.குளிர்ச்சி மிக்க சோலைகளில் உள்ள மலர்கள் சிவபூசை பண்ணப் பயன்படத் திருக்கொச்சை வயம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்,

 நண்ணி அடிமுடி எய்தலரே - சேர்ந்து அடி முடியையும் அடையாதவர் ஆயினர்.
 நளிர்மலி சோலையில் எய்து அலர் - குளிர்ச்சிமிக்க சோலையில் உள்ள மலர்கள். 

4. உயிர்கட்கெல்லாம் தலைவரான பசுபதி எனப்படும் சிவபெருமான். அவர் ஆனேற்றில் ஏறுவதால் பசுபதி என்னும் பெயர் படைத்தவரும் ஆவார்.

பண் இயல் - சிவபூசை பண்ணுதற்குப் பொருந்திய.
 கொச்சை - கொச்சைவயம் என்னும் தலத்திலுள்ள. 
பசுபதியே - ஆன்மவர்க்கங்களுக்குத் தலைவராய், அதனால் பசுபதி என்னும் பெயர் படைத்தவர். 
பசு - ஆனேற்றை. 
மிக - என்றும். 
ஊர்வர் - ஏறுவார் ; அதனால் பசு பதியே - பசுபதி என்னும் பெயர் படைத்தவரும் ஆவர்.
 பசுபதி - என்ற சொல் பசுக்களுக்கு ( ஆன்மாக்களுக்கு ) ப் பதியாம் தன்மையாலும்,
   பசு ஏறுதலாலும், எய்திய பெயர் என்பது    
    இங்குத் தெளிவிக்கப்பட்டது

⛰️தலம் குறிப்பு:   கொச்சைவயம் : பராசர முனிவர் தமது உடலின் துர்நாற்றமும், பழியும் போகும் பொருட்டுப் பூசித்துப் பேறு பெற்றதால் இப்பெயர்.
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த 
ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம்; இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 

வணக்கம்.
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
முதல் பதிவில் பாடல் 1. விளக்கம்
1.
https://m.facebook.com/story.php?story_fbid=5711134088961801&id=100001957991710

2.
https://m.facebook.com/story.php?story_fbid=3991943280880899&id=100001957991710

பதிவு : இரண்டு பாடல். 2,3. விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=5716695178405692&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=3995772097164684&id=100001957991710
பதிவு : மூன்று. பாடல் 4, 5 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=5721422241266319&id=100001957991710

2.
https://m.facebook.com/story.php?story_fbid=4000232066718687&id=100001957991710

பதிவு : நான்கு : பாடல் 6,7, 8 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=5725240914217785&id=100001957991710

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...