Wednesday, June 30, 2021

வழிமொழிதிருவிராகம் - சம்பந்தர் இசையமுதம் பதிவு - 5 பாடல் 5

#வழிமொழிதிருவிராகம்
பதிவு : 5 பாடல் 5

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.

📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 
🌀ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.
இத்தகைய பாடல்கள் தமிழரின் இசை பொக்கிஷம்:
#திருவிராகம், 
🅾️ #வழிமொழிதிருவிராகம்
⏺️இலக்கணம் :
⏏️குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத் தொடுப்பது இவ்வகையாம்.
(முடுகிய என்பது வேகமாக ஓடும் தாள அமைப்பு எனக் கொள்ளலாம்)

🔸இதன் ஓசை அமைப்பில் பாடல் 

தனனதன  தனனதன  தனனதன  
              தனனதன    தனனதனனா

என அமைகிறது.

 🧿இப்பதிகத்தின் திருக்கடைக்காப்பில் (இறுதிப் பாடலில்) திருஞானசம்பந்தர் 'வழிமொழிகள் மொழி தகையவே' என்று குறிப்பிட்டு சிறப்பிப்பதாலே இந்தப் பதிகம் வழிமொழி திருவிராகம் என்னும் பெயர் சூட்டப்பட்டது.
🔵
🌟ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.

🔹சம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை: தலம்: திருப்பிரமபுரம்:
பதிகம்: 325  (67) 
பாடல்: 1-12 (714-725)
இந்தப் பதிகம் 12 பாடல்கள் கொண்டது.

🌟சீர்காழிப்பதியின் 12 பெயர்கள் வந்த வழியை -  வரலாற்றிணை - விளக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.

🌀சாதாரி என்ற பண் வகையினது.
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
🗣️வாய்பேச்சுக் கோளாறு இன்றி நல்ல உரையாடல், குரல் வளம் நிச்சயம் கிடைக்க இப்பதிகம் உதவும்.
👱குழந்தைகளுக்கு அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டிய பாடல்
📚தமிழ் மொழி வளம் உயர்வு உணர்ந்து அறிய உதவும் அற்புத பதிகம் இது.

பாடல் : 5
💠தோணிபுரம் : அர்ச்சுனன் வழிபட்ட இடம்.
பிரளய காலத்தில் தோனி போல் விளங்கி காத்ததால் இத்தலம் தோணிபுரம் என விளங்கிற்றது.
✳️'ண'  சீர் அமைப்பில் உள்ள பாடல்.

பாடல். 718

ஆணியல்பு  காணவன  வாணவியல் பேணியெதிர்  பாணமழைசேர்
தூணியற  நாணியற  வேணுசிலை  பேணியற  நாணி   விசயன்
பாணியமர்   பூண அருள்   மாணுபிர மாணியிடம்   ஏணிமுறையில்
பாணியுல   காளமிக   ஆணின்மலி தோணிநிகர்   தோணிபுரமே.
         
                                        -03.325:05 (718)
பொருள் :
ஈசன், வீரம் மிகுந்த ஆண் மகன் என்னும் தன்மையில், யாவரும் காணுமாறு காட்டில் வாழும் வேட்டுவ வடிவத்தைக் கொண்டு, விசயனின் அம்புறாத் துணியும் வில்லின் நானும் அறுந்து விழுமாறு செய்து, வளைந்த மூங்கிலால் வடிவமைத்த வில்லையும் துணித்தவர். இவற்றால் நாணம் உற்ற விசயன் மற்போர் செய்ய, அவனுக்கு அருள் புரிந்தவர் அவர். அத்தகைய தெய்வத் தன்மை வாய்ந்தவரின் இடமாவது, பிரளய காலத்தில் நீர் சூழ்ந்து உலகம் யாவும் மூழ்கும் தன்மை கண்டாலும் ஆற்றல் பெருகுமாறு தோணியென விளங்கி, அழியாமை காணும் தோணிபுரமே.

விளக்கம்:
ஆண் இயல்புகாண ( விசயனுடைய ) வீரத்தன்மையை உமைகாண.
வன வாணஇயல் - வனத்தில் வாழ்பவர்களாகிய வேடர் வடிவம். 
பேணி - கொண்டு, 
எதிர். அவனுக்கு எதிராக. ( போர் தொடங்கி ) 
பாணமழை - ( அவன் சொரியும் ) மழைபோன்ற அம்புகளும்.
சேர் - அவ்வம்புகள் தங்கிய. 

தூணி - அம்பறாத் தூணியும். 
அற - நீங்கவும். 
நாணி அற - வில்நாண் அறுபடவும். வேணுசிலை பேணி - அவனது மூங்கிலால் ஆகிய வில்லின் வளைவு. அற - நீங்கவும். 
விசயன் - அவ்வர்ச்சுனன். 
நாணி - நாணமுற்று. 

பாணி அமர் பூண - கையால் அடித்துச் செய்யும் மற்போரைச் செய்ய வர. 
அருள் மாணு - அவனுக்கு மிகவும் அருள் புரிந்த, 
பிரமாணி இடம் - கடவுட்டன்மைக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் சிவபெருமானின் இடம். 
ஏணி முறையில் - மிக்கது என்ற முறையினால். 

பாணி - பிரளயகால வெள்ளமானது. உலகு ஆள - உலகம் முழுதும் மூழ்கச் செய்ய. 
மிக ஆணின் - அதனின் மிகவும் பொருந்திய ஆண்மை வலிமையினால். மலி - சிறந்த. 
தோணி நிகர் - அதனைக்கடக்கவல்ல தோணியை யொத்த ( தோணிபுரம் ஆம் ).
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪
🎶மிக அற்புதமான பாடல். மிக மிக முக்கியமானது. 

🌟இப்பாடலை திரும்பத் திரும்ப ஒதிக்கொண்டுவந்தால் நாவிற்கும் உள்ளத்திற்கும் அருமருந்து. 

⏺️சந்தப்பாக்களின் சீர்களில் ஒவ்வொர் உயிரும் ஓரசை என்பதால் ஓசை நயமும் தாளமும் நிறைய அமைத்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.
⏺️ ஒவ்வொறு பாடலிலும் சீர்காழி பதியின் பெயரில் வரும் ஒரு தமிழ் எழுத்தை  பாடல் முழுதும் சிறப்புடன் சீர்  அமைத்துள்ளது மிகவும் அற்புதமானது. 

🔷இது போன்ற சந்தப் பாடல்களை கற்றுணர்ந்து அருணகிரியார் தம்முடைய திருப்புகழ் பாடல்களை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

🔹திருஞானசம்பந்தப்பிள்ளையாரை முருகனின் திரு அவதாரமாகக் கொண்டவர் அருணகிரிநாதர். இதைக் குறிப்பிட்டு தம்பாடல்களில் சிறப்பு செய்துள்ளார். 

✔️இராமலிங்கசுவாமிகளும் இக்கருத்தை ஏற்கிறார்.

💠பிற்கால இசைத் தமிழ் இலக்கியத்தின் அடிப்படையாக அமைந்தப் பாடல்கள்

♦️அருட் செல்வர் தமிழ் விரகனார், திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற இப் பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

📚பாடல்,பொருள்,விளக்கம் பல நூல், தரவுகளிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

🛡️சிந்தனைக்கும் எட்டாத ஞானசம்பந்தரின் அற்புதத் தமிழின் இசைப்பாடல் சிறப்பை உணருவோம். இதுவே,  தமிழரின்பொக்கிஷம்.

🙇‍♂️நன்றி🙏
🛐💚🕉️🧡☸️💜⚛️💙🔯💛🙏🙆🏼🙇🏼‍♂️
என்னமும் தகவல் ஆக்கமும், தொகுத்தும் வழங்குவது:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾
#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்இசைஅமுதம்


Tuesday, June 29, 2021

வழிமொழி திருவிராகம் - சம்பந்தர் இசையமுதம் - பதிவு - 4 பாடல் 4

#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்இசைஅமுதம்
#வழிமொழிதிருவிராகம்
பதிவு : நான்கு
பாடல் : 4.

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

🗣️வாய்பேச்சுக் கோளாறு இன்றி நல்ல உரையாடல், குரல் வளம் நிச்சயம் கிடைக்க இப்பதிகம் உதவும்.
👱குழந்தைகளுக்கு அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டிய பாடல்
📚தமிழ் மொழி வளம் உயர்வு உணர்ந்து அறிய உதவும் அற்புத பதிகம் இது.

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.

📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 

🛐🙏
🌀ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.
இத்தகைய பாடல்கள் தமிழரின் இசை பொக்கிஷம்:
#திருவிராகம், #வழிமொழிதிருவிராகம்,
#வண்ணகம் #முடுக்கியல் #அடுக்கியல் 
இவை பற்றி முன்பதிவுகளில் சிந்தித்தோம்.
#வழிமொழிதிருவிராகம் பதிகப் பாடலையும் அதன் விளக்கங்களயும், சிறப்புகளையும் தொடர்ந்து இப்பதிவில் பார்ப்போம்.

🅾️#வழிமொழிதிருவிராகம்:
⏺️இலக்கணம் :
⏏️குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத் தொடுப்பது இவ்வகையாம்.
(முடுகிய என்பது வேகமாக ஓடும் தாள அமைப்பு எனக் கொள்ளலாம்)

🔸இதன் ஓசை அமைப்பில் பாடல் 

தனனதன  தனனதன  தனனதன  
              தனனதன    தனனதனனா

என அமைகிறது.

 🧿இப்பதிகத்தின் திருக்கடைக்காப்பில் (இறுதிப் பாடலில்) திருஞானசம்பந்தர் 'வழிமொழிகள் மொழி தகையவே' என்று குறிப்பிட்டு சிறப்பிப்பதாலே இந்தப் பதிகம் வழிமொழி திருவிராகம் என்னும் பெயர் சூட்டப்பட்டது.
🔵
🌟ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.

🔹சம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை: தலம்: திருப்பிரமபுரம்:
பதிகம்: 325  (67) 
பாடல்: 1-12 (714-725)
இந்தப் பதிகம் 12 பாடல்கள் கொண்டது.

🌟சீர்காழிப்பதியின் 12 பெயர்கள் வந்த வழியை -  வரலாற்றிணை - விளக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.

🌀சாதாரி என்ற பண் வகையினது.
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
பாடல்:04 - வெங்குரு  =
💠குருபகவான் வழிபட்ட இடம்.
✳️('ங்' - சீர் அமைப்பில் பாடல்)

பாடல்: 717

அங்கண்மதி   கங்கைநதி    வெங்கண்அர
வங்கள்எழில்  தங்கும்  இதழித்
துங்கமலர்        தங்குசடை    அங்கிநிகர்
எங்கள்இறை   தங்கும்  இடமாம்
வெங்கதிர்வி   ளங்குலகம்    எங்கும்எதிர்
பொங்கெரிபு    லன்கள் களைவோர்
வெங்குருவி     ளங்கிஉமை   பங்கரசர
ணங்கள்பணி  வெங்குருவதே.

                                    -03.325:04 (717)
பொருள் :
அழகிய சந்திரனும், கங்கை நதியும், அரவமும் எழில் கொண்டு மேவும் கொன்றை மலரும் நெருப்புப் போன்ற சடைமுடியின்கண் பொருந்த விளங்குகின்றவர் எங்கள் சிவபெருமான்.  அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, இவ்வுலகின்கண், சூரியனை விஞ்சுமாறு வெம்மையைத் தருகின்ற புலன்களால் நேரும் துன்பத்தைக் களைபவர்கள் பணியும் வெங்குரு ஆகும். அது குருபகவான் விருப்பத்துடன் நண்ணி உமை பங்கராகிய பரமனைப் பணிந்துபேறு பெற்ற தலமாகும்.

விளக்கம்:
இதழி=கொன்றை மலர்
வெங்குரு விளங்கி = குருபகவானைச் சுட்டியது.
வெம்மை = விருப்பம் என்னும் பொருள்.

அங்கண்மதி - அழகிய ஆகாயத்தினிடத்தில் உள்ள சந்திரனும், வெங்கண் அரவங்கள் - கொடிய பாம்புகளும். 
எழில் தங்கும் இதழித் துங்கமலர் - அழகு தங்கிய கொன்றையின் தூயமலரும். தங்கு சடை - பொருந்திய சடையானது. 
அங்கி நிகர் - தீயையொக்கும். 
எங்கள் இறை - எங்கள் தலைவன்.  

வெங்கதிர் - சூரியனால், 
விளங்கும் - விளங்குகின்ற. உலகமெங்கும் - உலகில் உள்ள அனைவரும். 
எதிர் - நல் வழிக்குமாறாக. 
பொங்கு - மிக. எரி - வருத்துகின்ற. புலன்கள் - மனம் முதலிய அந்தக் கரணங்களின் சேட்டையை. 
களைவோர் - நீக்க விரும்புவோர். 

வெங்குரு - கொடிய தேவ குருவினால். விளங்கி - தமது துயர் களைதற்கிடமிதுவேயென்று தெளிந்து. உமைபங்கர் - சிவபெருமானின் - சரணங்கள் பணி - பாதங்களைப்பணிந்த. 
வெங்குரு அது - வெங்குரு என்னும் அத்தலமாம்.
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
🎶மிக அற்புதமான பாடல். மிக மிக முக்கியமானது. 

🌟இப்பாடலை திரும்பத் திரும்ப ஒதிக்கொண்டுவந்தால் நாவிற்கும் உள்ளத்திற்கும் அருமருந்து. 

⏺️சந்தப்பாக்களின் சீர்களில் ஒவ்வொர் உயிரும் ஓரசை என்பதால் ஓசை நயமும் தாளமும் நிறைய அமைத்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.
⏺️ ஒவ்வொறு பாடலிலும் சீர்காழி பதியின் பெயரில் வரும் ஒரு தமிழ் எழுத்தை  பாடல் முழுதும் சிறப்புடன் சீர்  அமைத்துள்ளது மிகவும் அற்புதமானது. 

🔷இது போன்ற சந்தப் பாடல்களை கற்றுணர்ந்து அருணகிரியார் தம்முடைய திருப்புகழ் பாடல்களை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

🔹திருஞானசம்பந்தப்பிள்ளையாரை முருகனின் திரு அவதாரமாகக் கொண்டவர் அருணகிரிநாதர். இதைக் குறிப்பிட்டு தம்பாடல்களில் சிறப்பு செய்துள்ளார். 

✔️இராமலிங்கசுவாமிகளும் இக்கருத்தை ஏற்கிறார்.

💠பிற்கால இசைத் தமிழ் இலக்கியத்தின் அடிப்படையாக அமைந்தப் பாடல்கள்

♦️அருட் செல்வர் தமிழ் விரகனார், திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற இப் பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

📚பாடல்,பொருள்,விளக்கம் பல நூல், தரவுகளிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

🛡️சிந்தனைக்கும் எட்டாத ஞானசம்பந்தரின் அற்புதத் தமிழின் இசைப்பாடல் சிறப்பை உணருவோம். இதுவே,  தமிழரின்பொக்கிஷம்.

🙇‍♂️நன்றி🙏
🛐💚🕉️🧡☸️💜⚛️💙🔯💛🙏🙆🏼🙇🏼‍♂️
என்னமும் தகவல் ஆக்கமும், தொகுத்து வழங்குவது:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
பதிவு: ஒன்று பாடல் 1
https://m.facebook.com/story.php?story_fbid=5787884447953431&id=100001957991710
பதிவு : இரண்டு : பாடல் 2
https://m.facebook.com/story.php?story_fbid=5795841430491066&id=100001957991710
பதிவு : மூன்று : பாடல் 3
https://m.facebook.com/story.php?story_fbid=5800911013317441&id=100001957991710

Monday, June 28, 2021

வழிமொழி திருவிராகம்: சம்பந்தர் இசையமுதம் பதிவு: 3 பாடல் 3.

#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்இசைஅமுதம்
#வழிமொழிதிருவிராகம்
பதிவு : மூன்று பாடல் 3.

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

🗣️வாய்பேச்சுக் கோளாறு இன்றி நல்ல உரையாடல், குரல் வளம் நிச்சயம் கிடைக்க இப்பதிகம் உதவும்.
👱குழந்தைகளுக்கு அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டிய பாடல்
📚தமிழ் மொழி வளம் உயர்வு உணர்ந்து அறிய உதவும் அற்புத பதிகம் இது.

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.

📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 

🛐🙏
🌀ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.
இத்தகைய பாடல்கள் தமிழரின் இசை பொக்கிஷம்:
#திருவிராகம், #வழிமொழிதிருவிராகம்,
#வண்ணகம் #முடுக்கியல் #அடுக்கியல் 
இவை பற்றி முன்பதிவுகளில் சிந்தித்தோம்.
#வழிமொழிதிருவிராகம் பதிகப் பாடலையும் அதன் விளக்கங்களயும், சிறப்புகளையும் தொடர்ந்து இப்பதிவில் பார்ப்போம்.

🅾️#வழிமொழிதிருவிராகம்:
⏺️இலக்கணம் :
⏏️குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத் தொடுப்பது இவ்வகையாம்.
(முடுகிய என்பது வேகமாக ஓடும் தாள அமைப்பு எனக் கொள்ளலாம்)

🔸இதன் ஓசை அமைப்பில் பாடல் 

தனனதன தனனதன தனனதன  
              தனனதன தனனதனனா

என அமைகிறது.

 🧿இப்பதிகத்தின் திருக்கடைக்காப்பில் (இறுதிப் பாடலில்) திருஞானசம்பந்தர் 'வழிமொழிகள் மொழி தகையவே' என்று குறிப்பிட்டு சிறப்பிப்பதாலே இந்தப் பதிகம் வழிமொழி திருவிராகம் என்னும் பெயர் சூட்டப்பட்டது.
🔵
🌟ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.

🔹சம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை: தலம்: திருப்பிரமபுரம்:
பதிகம்: 325 (67) 
பாடல்: 1-12 (714-725)
இந்தப் பதிகம் 12 பாடல்கள் கொண்டது.

🌟சீர்காழிப்பதியின் 12 பெயர்கள் வந்த வழியை - வரலாற்றிணை - விளக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.

🌀சாதாரி என்ற பண் வகையினது.
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
பாடல் :3. சீர்காழி பதியின் 12 பெயர்களில் ஒன்றான புகலி பற்றியது:
🛐புகலி :  
சனகாதி முனிவர்களுக்கு அருள குருமுகமாய் அருளிய இடம். தேவர்கள் புகலிடமான இடம்.

🌟புகலி என்று வருவதால் "ல' கர சீரில் பாடல் வருமாறு அமைத்துள்ளார்.

பாடல் : 716

பகல்ஒளிசெய் நகமணியை முகைமலரை
        நிகழ்சரண அகவு முனிவர்க்கு
அகலமலி சகலகலை மிகவுரைசெய்
        முகமுடைய பகவன்இடமாம்
பகைகளையும் வகையில்அறு  
முகஇறையை
          மிகஅருள நிகரில் இமையோர்
புகவுலகு புகழஎழில் திகழநிகழ்
           அலர்பெருகு புகலிநகரே.

                               -03:325:03 (716)
பொருள் :
சூரியனுடைய ஒளியை நிகர்த்த, மலையில் தோன்றும் மணிகளும், செந்தாமரை மலரின் மணமும் பெருக விளங்கும் ஒளி போன்ற திருவடியைச் சரண் அடைந்த சனகாதி முனிவர்களுக்கு, விரிந்து மேவும் எல்லாக் கலைகளும் நன்கு உணருமாறு உரை செய்தருளிய குருமூர்த்தமாக விளங்குபவர், சிவபெருமான். அத்தகைய பெருமானின் இடமாவது, பகை கொண்ட அசுரர்களை வேரறுக்கும் வகையில் ஆறுமுகமுடைய குமாரக் கடவுளை மிகுந்து விளங்குமாறு முகிழ்த்தருளிய காலத்தில், தேவர்கள் எல்லாம் புகலிடமாக விழைந்து மேவிய எழில் திகழும் புகலிநகரே.

விளக்கம்:
நகம் = மலை
முகை மலர் = தாமரை மலர்
பகவன் = சிவபெருமான்

பகல் ஒளி செய் - சூரியனைப்போற் பிரகாசிக்கும். 
நகம் மணியை - மலையிற் பிறக்கும் பத்மராக மணிகளையும். 
முகை மலரை - அரும்பு விரிந்த செந்தாமரை ( நாண் ) மலரையும். 
நிகழ் - போன்ற. 
சரண - திருவடிப் பேற்றுக்குரிய. 
அகவு - விருப்பம் மிக்க. 
முனிவர்க்கு - சனகாதி முனிவர்களுக்கு,

அகலம்மலி - விஸ்தார மாகிய, 
சகலகலை - கலைகளனைத்தையும். 
மிக - ( தெளிவு ) மிகும்படி. 
உரை செய் - உபதேசித்தருளிய. 
முகம் உடைய - திருவருள் நோக்கம் உடைய. 
பகவன் இடமாம் - சிவபெருமானின் இடம் ஆகும். 
முகை மலர்ந்த மலர் - புதுப்பூ. பகவன் - சிவபெருமான் 
 முகம் - என்னும் சொல் திருவருள் நோக்கம் என்னும் பொருளில் வந்தமை காண்க. 

பகை - தேவர் பகைவர்களாகிய அரக்கர் முதலாயினோரை. ` பகை ` பகைவருக்கு ஆயினமையின் பண்பாகுபெயர்.
இறை - கடவுள். 
மிக - அறச்செயல்கள் அதிகரிக்க. 
அருள - தர. அதனால். 
நிகரில் இமையோர் - மகிழ்ச்சியில் நிகர் இல்லாத தேவர்கள். 

புக - சரண்புக, 
எழில் திகழ - அழகு விளங்க. 
நிகழ் - ( இவற்றால் ) நேர்ந்த ( புகலியெனும் பெயர் ). 
அலர்பெருகு - அனைத்துலகினும் மிக்குப் பெருகிய ( புகலி நகர் என்க.)

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪
🎶மிக அற்புதமான பாடல். மிக மிக முக்கியமானது. 

🌟இப்பாடலை திரும்பத் திரும்ப ஒதிக்கொண்டுவந்தால் நாவிற்கும் உள்ளத்திற்கும் அருமருந்து. 

⏺️சந்தப்பாக்களின் சீர்களில் ஒவ்வொர் உயிரும் ஓரசை என்பதால் ஓசை நயமும் தாளமும் நிறைய அமைத்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.
⏺️ ஒவ்வொறு பாடலிலும் சீர்காழி பதியின் பெயரில் வரும் ஒரு தமிழ் எழுத்தை பாடல் முழுதும் சிறப்புடன் சீர் அமைத்துள்ளது மிகவும் அற்புதமானது. 

🔷இது போன்ற சந்தப் பாடல்களை கற்றுணர்ந்து அருணகிரியார் தம்முடைய திருப்புகழ் பாடல்களை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

🔹திருஞானசம்பந்தப்பிள்ளையாரை முருகனின் திரு அவதாரமாகக் கொண்டவர் அருணகிரிநாதர். இதைக் குறிப்பிட்டு தம்பாடல்களில் சிறப்பு செய்துள்ளார். 

✔️இராமலிங்கசுவாமிகளும் இக்கருத்தை ஏற்கிறார்.

💠பிற்கால இசைத் தமிழ் இலக்கியத்தின் அடிப்படையாக அமைந்தப் பாடல்கள்

♦️அருட் செல்வர் தமிழ் விரகனார், திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற இப் பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

📚பாடல்,பொருள்,விளக்கம் பல நூல், தரவுகளிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

🛡️சிந்தனைக்கும் எட்டாத ஞானசம்பந்தரின் அற்புதத் தமிழின் இசைப்பாடல் சிறப்பை உணருவோம். இதுவே, தமிழரின்பொக்கிஷம்.

🙇‍♂️நன்றி🙏
🛐💚🕉️🧡☸️💜⚛️💙🔯💛🙏🙆🏼🙇🏼‍♂️
என்னமும் தகவல் ஆக்கமும், தொகுத்து வழங்குவது:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
பதிவு: ஒன்று பாடல் 1
https://m.facebook.com/story.php?story_fbid=5787884447953431&id=100001957991710
பதிவு : இரண்டு : பாடல் 2
https://m.facebook.com/story.php?story_fbid=5795841430491066&id=100001957991710

Sunday, June 27, 2021

வழிமொழி திருவிராகம் - சம்பந்தர் இசையமுதம் பதிவு - 2. பாடல் 2.

#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்இசைஅமுதம்
#வழிமொழிதிருவிராகம்
பதிவு : இரண்டு பாடல் 2.

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

🗣️வாய்பேச்சுக் கோளாறு இன்றி நல்ல உரையாடல், குரல் வளம் நிச்சயம் கிடைக்க இப்பதிகம் உதவும்.
👱குழந்தைகளுக்கு அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டிய பாடல்
📚தமிழ் மொழி வளம் உயர்வு உணர்ந்து அறிய உதவும் அற்புத பதிகம் இது.

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.

📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 

🛐🙏
🌀ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.
இத்தகைய பாடல்கள் தமிழரின் இசை பொக்கிஷம்:
#திருவிராகம், #வழிமொழிதிருவிராகம்,
#வண்ணகம் #முடுக்கியல் #அடுக்கியல் 
இவை பற்றி முன்பதிவுகளில் சிந்தித்தோம்.
#வழிமொழிதிருவிராகம் பதிகப் பாடலையும் அதன் விளக்கங்களயும், சிறப்புகளையும் தொடர்ந்து இப்பதிவில் பார்ப்போம்.

🅾️#வழிமொழிதிருவிராகம்:
⏺️இலக்கணம் :
⏏️குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத் தொடுப்பது இவ்வகையாம்.
(முடுகிய என்பது வேகமாக ஓடும் தாள அமைப்பு எனக் கொள்ளலாம்)

🔸இதன் ஓசை அமைப்பில் பாடல் 

தனனதன  தனனதன  தனனதன  
              தனனதன    தனனதனனா

என அமைகிறது.

 🧿இப்பதிகத்தின் திருக்கடைக்காப்பில் (இறுதிப் பாடலில்) திருஞானசம்பந்தர் 'வழிமொழிகள் மொழி தகையவே' என்று குறிப்பிட்டு சிறப்பிப்பதாலே இந்தப் பதிகம் வழிமொழி திருவிராகம் என்னும் பெயர் சூட்டப்பட்டது.
🔵
🌟ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.

🔹சம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை: தலம்: திருப்பிரமபுரம்:
பதிகம்: 325  (67) 
பாடல்: 1-12 (714-725)
இந்தப் பதிகம் 12 பாடல்கள் கொண்டது.

🌟சீர்காழிப்பதியின் 12 பெயர்கள் வந்த வழியை -  வரலாற்றிணை - விளக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.

🌀சாதாரி என்ற பண் வகையினது.
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
பாடல் 2
🔹இரண்டாவது பாடலில் வேணுபுரம் என்ற பெயர் வருவதால் 'ண' கரவரிசை வருமாரு அமைத்துள்ளார்.

பாடல் : 02. (வேணுபுரம்): 

💠இந்திரனுக்காக, விநாயகரைப் படைத்து
கஜாசுரனை அழித்து, இறைவன் அருளியதால், மூங்கில் உருவம் கொண்டு இந்திரன் தவம் செய்த தலம்.

பாடல் : 715

தாணுமிகு  ஆணிசைகொடு   ஆணுவியர்
பேணுமது    காணுமளவிற்
கோணுநுதல்  நீள்நயனி       கோணில்பிடி
மாணிமது    நாணும்  வகையே
ஏணுகரி       புணழிய     ஆணியல்கொண்
மாணிபதி    சேண்அமரர்      கோன்
வேணுவினை  யேணிநகர்   காணிதிவி
காணநடு  வேணுபுரமே.
               
                                  -03.325.02 (715)
பொருள் :
இனிமையாக அன்பு செலுத்தி வணங்கும் தேவர்கள், கொடுமை புரியும் அசுரர்களால் நலிவடைந்து, அஞ்சியும் வியர்த்தும் வணங்கி ஏத்திய நிலையில், ஈசன் வலிமை மிகுந்த ஆண்யானயின் வடிவத்தைக் கொண்டருளினார். வளைந்த நெற்றியும் நீண்ட விழியும் உடைய உமாதேவியானவர் குற்றம் இல்லாத பெண் யானையாகத் தோன்றினார். அந்நிலையில் மது என்னும் அசுரன் நாணுமாறும், வலிமை கொண்டு தீமை செய்த கயமுகாசுரன் அழியுமாறும் ஆற்றல் மிக்க அழகிய விநாயகக் கடவுளைத்தோன்ற செய்வித்த பெருமைக்கு உரிய ஈசன் விளங்கும் பதியாவது, தேவர்களின் தலைவனாகிய இந்திரன் மூங்கிலின் மேலிருந்து தனது பதியை நோக்கும் வேணுபுரமே. 

ஆணவமலத்தின் இயல்புதனை யானையாக உருவகப்படுத்தப்படும் போது 3 வகை சிறப்பு நோக்கத்தக்கது.
கோண் இல் பிடி=குற்றம் இல்லாத யானை = ஈசன்.

விளக்கம்:
தாணு - சிவபெருமான்
ஆணு - ( தன் ) அன்பர்களாகிய தேவர்கள். 
வியர் பேணு மது - (கயமுகாசுரனால்) அச்சம் கொள்வதை. 
காணும் அளவில் - அறிந்ததும்.
மிகு - வலிமை மிகுந்த. 
ஆண் இசைகொடு - ஆண் யானையின் வடிவைக்காண இசைந்து. ( நிற்க - அதற்கேற்ப.) 

கோணுநுதல் - வளைந்த நெற்றியை. நீள்நயனி - நீண்ட கண்ணையுமுடையவளாகிய அம்பிகை. கோண்இல் - குற்றமில்லாத படி. 
பிடி - பெண் யானையின் உருவை. 
மாணி - பெருமையையுடையவளாய்க் காண. 
மது - மது என்ற அசுரனும். 
நாணும் வகை ஏணு - வெட்கும்படி வலிமைகொண்ட. 

கரி - கயமுகாசுரன். 
பூண் - தான் மேற்கொண்ட தீய தொழில்கள். 
அழிய - அழியும்படி. 
ஆண் - ஆண் தகையாகிய விநாயகக் கடவுள். ( கயமுகாசுரனுக்குப் பேடியர் போல் அஞ்சிய தேவர் துயரந் தவிர்த்த வீரம் குறிக்க ஆண் என்றனர் ) 
இயல் - ( அன்பர்க்கு அனுக்கிரகிக்கும் ) அருளை, 
கொள் - கொள் வித்த. 
மாணி - பெருமையுடையோனாகிய சிவபெருமானின். 
பதி - இடம். 
சேண் - வானுலகில் உள்ள, 
அமரர்கோன் - இந்திரன். 

வேணு வினை - மூங்கிலை. 
ஏணி - ஏணியாகக்கொண்டு. 
காண்இல் - தான் நேரேகாண முடியாத. திவி - தேவலோகத்தின் நிலையைக் காண - ஒளிந்து காணும் பொருட்டு. 
நடு - நட்ட, 
வேணுபுரம் - வேணுபுரமாம் 
ஆணு - அன்பு

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
🎶மிக அற்புதமான பாடல். மிக மிக முக்கியமானது. 

🌟இப்பாடலை திரும்பத் திரும்ப ஒதிக்கொண்டுவந்தால் நாவிற்கும் உள்ளத்திற்கும் அருமருந்து. 

⏺️சந்தப்பாக்களின் சீர்களில் ஒவ்வொர் உயிரும் ஓரசை என்பதால் ஓசை நயமும் தாளமும் நிறைய அமைத்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.
⏺️ ஒவ்வொறு பாடலிலும் சீர்காழி பதியின் பெயரில் வரும் ஒரு தமிழ் எழுத்தை  பாடல் முழுதும் சிறப்புடன் சீர்  அமைத்துள்ளது மிகவும் அற்புதமானது. 

🔷இது போன்ற சந்தப் பாடல்களை கற்றுணர்ந்து அருணகிரியார் தம்முடைய திருப்புகழ் பாடல்களை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

🔹திருஞானசம்பந்தப்பிள்ளையாரை முருகனின் திரு அவதாரமாகக் கொண்டவர் அருணகிரிநாதர். இதைக் குறிப்பிட்டு தம்பாடல்களில் சிறப்பு செய்துள்ளார். 

✔️இராமலிங்கசுவாமிகளும் இக்கருத்தை ஏற்கிறார்.

💠பிற்கால இசைத் தமிழ் இலக்கியத்தின் அடிப்படையாக அமைந்தப் பாடல்கள்

♦️அருட் செல்வர் தமிழ் விரகனார், திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற இப் பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

📚பாடல்,பொருள்,விளக்கம் பல நூல், தரவுகளிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

🛡️சிந்தனைக்கும் எட்டாத ஞானசம்பந்தரின் அற்புதத் தமிழின் இசைப்பாடல் சிறப்பை உணருவோம். இதுவே,  தமிழரின்பொக்கிஷம்.

🙇‍♂️நன்றி🙏
🛐💚🕉️🧡☸️💜⚛️💙🔯💛🙏🙆🏼🙇🏼‍♂️
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
முதல் பதிவு : பாடல் 1.
https://m.facebook.com/story.php?story_fbid=5787884447953431&id=100001957991710

Friday, June 25, 2021

வழிமொழிதிருவிராகம் - சம்பந்தர் இசையமுதம் - பதிவு - 1 - பாடல் - 1

#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்இசைஅமுதம்
#வழிமொழிதிருவிராகம்
பதிவு : ஒன்று. 

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

🗣️வாய்பேச்சுக் கோளாறு இன்றி நல்ல உரையாடல், குரல் வளம் பெறுவதற்கு, ஆர்வமும், பயிற்சியும் கொண்டு முயற்சி செய்தால், 
இப்பதிகம் பலன் தருவது நிச்சயம்.

👱குழந்தைகளுக்கு அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டிய பாடல்

📚தமிழ் மொழி வளம் உயர்வு உணர்ந்து அறிய உதவும் அற்புத சந்தமும், தாளமும் நிறைந்த பாடல்கள் உடைய பதிகம் இது.

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.

📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 

🛐🙏
🌀ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.
இத்தகைய பாடல்கள் தமிழரின் இசை பொக்கிஷம்

#திருவிராகம், #வழிமொழிதிருவிராகம்,
#வண்ணகம் #முடுக்கியல் #அடுக்கியல் 
இவை பற்றி முன்பதிவுகளில் சிந்தித்தோம்.
#வழிமொழிதிருவிராகம் பதிகப் பாடலையும் அதன் விளக்கங்களயும், சிறப்புகளையும் தொடர்ந்து இப்பதிவில் பார்ப்போம்.

🅾️#வழிமொழிதிருவிராகம்:
⏺️இலக்கணம் :
⏏️குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத் தொடுப்பது இவ்வகையாம்.
(முடுகிய என்பது வேகமாக ஓடும் தாள அமைப்பு எனக் கொள்ளலாம்)

🔸இதன் ஓசை அமைப்பில் பாடல் 

தனனதன தனனதன தனனதன  
              தனனதன தனனதனனா

என அமைகிறது.

 🧿இப்பதிகத்தின் திருக்கடைக்காப்பில் (இறுதிப் பாடலில்) திருஞானசம்பந்தர் 'வழிமொழிகள் மொழி தகையவே' என்று குறிப்பிட்டு சிறப்பிப்பதாலே இந்தப் பதிகம் வழிமொழி திருவிராகம் என்னும் பெயர் சூட்டப்பட்டது.
🔵
🌟ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.

🔹சம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை: தலம்: திருப்பிரமபுரம்:
பதிகம்: 325 (67) 
பாடல்: 1-12 (714-725)
இந்தப் பதிகம் 12 பாடல்கள் கொண்டது.
🌀சாதாரி என்ற பண் வகையினது.

🌟சீர்காழிப்பதியின் 12 பெயர்கள் வந்த வழியை - வரலாற்றிணை - விளக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
பாடல்: 01 -
💠 திருப்பிரமபுரம்: படைப்புத் தொழில் வேண்டி, பிரம்மன் தங்கி வழிபட்டு இறையருளைப் பெற்றதால் இப்பெயர்.

🔹இந்தப் பதிகத்தின் முதல் பாடல் பிரம்மபுரம் என்ற சீர்காழி பதியின் பெயர் வந்த வழியை சொல்லும்.

✳️பாடலில் 'ர' கரமாக சீர் அமைத்துள்ளார்.

சுரர்உலகு நரர்கள்பயில் தரணிதல
           முரன் அழிய அரணமதில்முப்

புரம்எரிய விரவுவகை சரவிசைகொள்
           கரமுடைய பரமன் இடமாம்

வரம்அருள வரன்முறையின் 
     நிரைநிறைகொள்
           வருசுருதி சிரவுரையினாற்

பிரமன்உயர் அரன்எழில்கொள் 
      சரணஇணை
              பரவவளர் பிரமபுரமே.

                                             - 0:3:325:01
பொருள் :
ஈசன், தேவர்கள் உறைகின்ற விண்ணுலகமும், நரர்கள் எனப்படும் மனிதர்கள் வாழும் இப்பூவுலகமும் மாறுபட்டு அழியுமாறு செய்த கோட்டை மதில்களை உடைய முப்புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு, ஒரு சரத்தை விரைவாகச் செலுத்தும் ஆற்றலுடையவர். அப்பெருமானுடைய இடமாவது, பிரமன், தலையாய வேத வாசகங்களால் அரனாரின் எழில் மிகுந்த புகழை ஒதிச் சரணடைந்து இணை மலரடியைப் பரவத் திகழும் பிரமபுரமே.

விளக்கம்:.
சுரர் உலகும் - தேவலோகமும்
நரர்கள் பயில் - மனிதர் வாழும்.
தரணி தலம் - பூலோகமும், 
முரண் அழிய - வலிமை அழியும்படி. ( அதனால்,) 
அரணம் - காவலாகிய. 

முப்புரம் - முப்புர முடிய. 
விரவுவகை எரிய - கலந்து பல இடமும் எரியும்படி. 
சரவிசை - அம்பின் விசையால்
கொள் - ( அவ்அம்பைக் ) கொண்ட, 
கரம் உடைய, பரமன் இடமாம். 

நிரை - வரிசையாக, 
வரன்முறையின் வரு - வரன்முறையில் ஓதிவருகின்ற. 
நிறைகொள் - நிறைவையுடைய.
சுருதி சிரம் - வேத முடிவாகிய உபநிடதங்களின், 
உரையினால் - வசனங்களினால். 

உயர் - எவரினும் உயர்ந்த, 
அரன் - சிவபெருமானின். 
எழில் கொள் - அழகையுடைய, 
சரண இணை - இரு திருவடிகளையும். வரம் அருள - தனக்கு வரம் அருள்வான் வேண்டி, (பிரமன்)
பரவ - துதிக்க. 
வளர் - புகழால் ஓங்கிய. 
பிரமபுரமே - பிரமபுரம் என்னும் பெயர்பெற்ற தலமாம்.
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐

🎶மிக அற்புதமான பாடல். மிக மிக முக்கியமானது. 

🌟இப்பாடலை திரும்பத் திரும்ப ஒதிக்கொண்டுவந்தால் நாவிற்கும் உள்ளத்திற்கும் அருமருந்து. 

⏺️சந்தப்பாக்களின் சீர்களில் ஒவ்வொர் உயிரும் ஓரசை என்பதால் ஓசை நயமும் தாளமும் நிறைய அமைத்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.
⏺️ ஒவ்வொறு பாடலிலும் சீர்காழி பதியின் பெயரில் வரும் ஒரு தமிழ் எழுத்தை பாடல் முழுதும் சிறப்புடன் சீர் அமைத்துள்ளது மிகவும் அற்புதமானது. 

🔷இது போன்ற சந்தப் பாடல்களை கற்றுணர்ந்து அருணகிரியார் தம்முடைய திருப்புகழ் பாடல்களை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

🔹திருஞானசம்பந்தப்பிள்ளையாரை முருகனின் திரு அவதாரமாகக் கொண்டவர் அருணகிரிநாதர். இதைக் குறிப்பிட்டு தம்பாடல்களில் சிறப்பு செய்துள்ளார். 

✔️இராமலிங்கசுவாமிகளும் இக்கருத்தை ஏற்கிறார்.

💠பிற்கால இசைத் தமிழ் இலக்கியத்தின் அடிப்படையாக அமைந்தப் பாடல்கள்

♦️அருட் செல்வர் தமிழ் விரகனார், திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற இப் பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

📚பாடல்,பொருள்,விளக்கம் பல நூல், தரவுகளிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

🛡️சிந்தனைக்கும் எட்டாத ஞானசம்பந்தரின் அற்புதத் தமிழின் இசைப்பாடல் சிறப்பை உணருவோம். இதுவே, தமிழரின்பொக்கிஷம்.

🙇‍♂️நன்றி🙏
🛐💚🕉️🧡☸️💜⚛️💙🔯💛🙏🙆🏼🙇🏼‍♂️
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

Thursday, June 24, 2021

சம்பந்தர்இசையமுதம் திருவிராகம் #வழிமொழிதிருவிராகம் #வண்ணகம்#முடுக்கியல்#அடுக்கியல் தேவார இசைப்பாடல்கள் பற்றியதுபதிவு : இரண்டு.

#சம்பந்தர்இசையமுதம்
பதிவு : இரண்டு

#திருவிராகம்   
#வழிமொழிதிருவிராகம் 
#வண்ணகம்
#முடுக்கியல்
#அடுக்கியல் 

தேவார இசைப்பாடல்கள் பற்றியது
பதிவு : இரண்டு.

பக்தியும், தமிழ் ஆர்வமும் உள்ளவர்கள் தொடரலாம்.

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾

ஞானசம்பந்தரின்  தமிழ் இசை மற்றும் தாள சந்தங்கள் சிறப்புக்கள்
கொண்டு அமைந்த பதிகப் பாடல்களைப் பற்றி மேலும் சிந்திக்கலாம்.

#வண்ணகம்
#முடுகியல்
#அடுக்கியல் 

 🔽இவ்வுறுப்பு இசை, இனிமை, உடையது. அதனால் #வண்ணகம் எனவும் பெயர் பெறும். 

🔼விரைந்து செல்லும் ஓசையுடையது என்பதனால் #முடுகியல் எனவும் பெயர் பெறும். 

குறில் அல்லது நெடில் கலந்த விரைவு நடைப் பாடல்வரிகளில் அமைந்தது. இதில் குறில் தாளச் சிறப்பையும் நெடில் ஓசை நயத்தையும் உணர்த்தும்.

 🔽ஓசை அடுக்கி வருவது என்பதனால் #அடுக்கியல் எனவும் பெயர் பெறும்.

♦️சந்தவாய்பாடுகளைக் கொண்டு அமையும் பாடல்கள். இந்த வகைப் பாடல்களுக்குரிய சந்தவாய்ப்பாடுகள் பல சேர்ந்து துள்ளலாகவும் வரும்.

இந்த சந்த அமைப்புப் பாடல்களை
 #வண்ணகம் - வண்ணப்பாக்கள் என்கிறார்கள் இசை இலக்கண ஆராய்ச்சியாளர்கள்*.

⚜️ #வண்ணகம் : சந்தத்துடன் தொடர்புடையது. 
'எந்தக் கவியினும் சந்தக் கவி மேல்'
வல்லிசை, மெல்லிசை, நெடுஞ்சீர், குறுஞ்சீர், அமைப்பு வண்ணம், இயைபு வண்ணம் என்றல்லாம் வகைப்படுத்துகிறார்கள்; இசையிலக்கணவிலார்கள்.

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

🎶இந்த வகையில் சந்தப்பாடல்களுக்கு எடுத்துக்காட்டாக,

'பிறையணி   படர்சடை    முடியிடை
பெருகிய    புலனுடை    யவனிறை'
                  01.19.01
எனும் பாடலில்வரும் சந்தம் :

தனதன   தனதன   தனதன
        தனதன   தனதன   தனதன

என்று வருகிறது.

💠இந்த வகையில் இன்னோரு பாடல்
மூன்றாம் திருமுறையில் பதிகம்: 326 தலம்: திருக்கைலாயம். பாடல் 1.

💠 (தயவு செய்து ஒரு முறையாவது திரு சம்பந்தம் குருக்கள் அய்யாவின் 'கயிலைப் பதிக'த்தில் வரும் இந்தப் பாடல்களைக்  அவசியம் கேட்டு உணர வேண்டும்).

✳️பாடலில் 'ள' கரத்தை வைத்து அமைத்துள்ள திறன் சிந்திக்கத்தக்கது.

வாளவரி  கோளபுலி  கீளதுரி
     தாளின்மிசை   நாளுமகிழ்வர்

ஆளுமவர்  வேளநகர்  போளயில
       கோளகளிறு   ஆளிவரவில்

தோளமரர்  தாளமதர்  கூளியெழ
        மீளிமிளிர்  தூளிவளர்பொன்

காளமுகில்  மூளும் இருள்  கீளவிரி
         தாளகயி  லாய  மலையே.

🔸மூன்றாம் திருமுறை பாடல்: -726- (3.326.1).

🎶பொருள் :

சிவபெருமான் ஒளிபொருந்திய வரிகளையுடைய புலியின் தோலை உடுத்தவர். அது பாதத்தில் பொருந்த எக்காலத்திலும் ஆனந்தமாய் இருப்பவர். அடியவர்களை ஆட்கொள்பவர். எதிரிட்ட விலங்குகளைக் கிழிக்கும் கூரிய பற்களை யுடைய திரண்ட வடிவுடைய யானையை அடக்கியாண்டவர். சிறந்த வில்லினை ஏந்திய தோளர். கூளிகள் தாளமிட நடனம் புரிபவர். திருவெண்ணீற்றினை அணிந்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் கயிலாய மலையானது கரிய மேகங்களால் மூண்ட இருட்டை ஓட்டும் வெண்பொன்னாகிய ஒளியை விரிக்கும் அடிவாரம் உடையதாகும்.

🎶பொருள் விளக்கம்:

வாள - ஒளி பொருந்திய. 
வரி - கீற்றுக்களையுடைய. 
கோள - கொலைபுரிவதாகிய. 
புலி - புலியை. 
கீளது - கிழித்ததாகிய. 
உரி - தோல் ( உடுப்பதால் ) 
தாளின் மிசை - ( அது ) பாதத்தில் பொருந்த. 
நாளும் மகிழ்வர் - என்றும் மகிழ்வர்.

வேள் - கண்டவர் விரும்பும். 
அநகர் - தூயோர். 
ஆளுமவர் - ஆள்பவர். 
போள் - ( எதிரிட்ட விலங்குகளை ) கிழிக்கும்படியான. 
அயில - கூரிய பற்களையுடைய. 
கோள - திரண்டவடிவையுடையதான. களிறு - யானையை. 
ஆளி - அடக்கியாண்டவர். 
வர வில் - சிறந்த வில்லைத் தாங்கிய.

தோள் - தோளையுடைய. 
அமரர் - தேவராவர். 
மதர் - செருக்கிய. 
கூளி - கூளிகள். 
தாளம் எழ - தாளத்தை எழுப்ப. 
மீளி - ( நடனமாடும் ) வலியர். 
மிளிர் - பிரகாசிக்கின்ற. 
தூளி - திருநீற்றைப் பூசியவர். 

காளமுகில் - கரிய மேகங்களாய். 
மூளும் - மூண்ட. 
இருள் - இருட்டை. 
கீள - ஓட்ட. 
பொன் - வெண்பொன்னாகிய. 
விரி - ஒளியை விரிக்கும். 
தாள - அடிவரையையுடைய கயிலாயமலை. 
போழ் - போள் என எதுகை நோக்கி நின்றது.

♦️இந்தப் பாடலின் சந்த அமைப்புமுறையும் மிக அற்புதமானது.

தானதன  தானதன  தானதன  
      தானதன   தானதன  தானதனன.

🔶#வழிமொழிதிருவிராகம் இலக்கனமும் பொருந்தியிருக்கிறது.

🔸பல்வேறு பண், தாளம், இராகத்தில் சுமார் 40 பதிகங்களை திருவிராக அமைப்பில் அருளிச்செய்துள்ளார்.  இவை எல்லாம் திருஞானசம்பந்தர் அருளிய புதிய இசை வடிவம்.

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

#திருவிராகம் - இதன் இலக்கணம்:

⏺️வழியெதுகை பெறாது முடுகியல் மட்டும் பெற்ற திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகங்கள் திருவிராகம் எனப்படும்.

💠#திருவிராகப்பதிகங்களில் இசைத்தன்மையும் தாளச் சிறப்பும் 
பெற்ற சில பாடல்களை மிகவும் சிறப்பானதாக இசை நூல் ஆராய்ச்சியாளர்கள்* குறிப்பிட்டு     சிறப்பித்துள்ளார்கள்.

திருவிராக பதிகங்கள் :

முதலாம் திருமுறை : 

பதிகங்கள்   தலம்
      பண் : நட்டப்பாடை
19                 திருக்கழுமலம்
20                 திருவிழிமிழலை
21                 திருச்சிவபுரம்
22                 திருமறைக்காடு

      பண் :  வியாழக்குறிச்சி
120               திருவையாறு
121               திருவிடைமருதூர்
122               திருவிடைமருதூர்
123               திருவலிவலம்
124               திருவிழிமிழலை
125               திருச்சிவபுரம்

இரண்டாம் திருமுறை:

       பண் : இந்தளம்
165               திருப்புகலி
166               திருப்புரம்பயம்
167               திருக்கப்பறியலூர்
168               திருவையாறு
169               திருநள்ளாறு
170               திருப்பழுவூர்

       பண்: நட்டராகம்
233               சீர்காழி
234               திருத்துருத்தி
235               திருக்கோவிலூர் வீரட்டானம்
236               திருஆரூர்

மூன்றாம் திருமுறை :
       பண் : கௌசிகம்
310               திருஆலவாய்
311               திருவாணைக்காக்கா

        பண் : சாதாரி
325               திருபிரம்மபுரம்*
(இது #வழிமொழிதிருவிராகம் எனப்படும்; இது பற்றி தனிப் பதிவில் விளக்கம் பெறலாம்)
326                திருக்கயிலாயம்
327                திருக்காளத்தி
328                திருமயிலாடுதுறை
329                திருவைக்காவூர்
330                திருமாறகல்
331                திருப்பட்டிஸ்வரம்
332                திருத்தேவூர்
333                திருசண்பைநகர்
334                திருவேதவனம்
335                திருமாணிக்குழி
336                திருவேதிக்குடி
337                திருக்கோகரணம்
338                திருவிழிமிழலை
339                திருத்தோணிபுரம்
340                அவளிவனல்லூர்
341                திருநள்ளாறு
342                திருப்புறவம்
343                திருவிழிமிழலை
344                திருச்சேறை
345                திருநள்ளாறு
346                திருவிளமர்

⏹️மேற்கண்ட பதிகங்கள் திருவிராகப் பதிகங்கள் என்று வகைப் படுத்தப்பட்டுள்ளது. இவைகள் தமிழ் இசைப்பாடல்களுக்குப் பொக்கிஷமாகத் திகழ்கின்றன.

🔹தமிழ் மொழியில் - இது போன்ற அமைப்பில் - இவ்வகை சந்த இசை அமைப்பில் - பல்வேறு பண்களில் இசைப் பாடல்களை அமைத்து முதன் முதலாக ஏராளமான பதிகங்களை இயற்றியவர் கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ஞானசம்பந்தரே. 

✳️இதனால் இவரை இசைத்தமிழ் இறைவர் என்று போற்றுகிறார்கள்;
   அவ்வழி நின்று நாமும் போற்றுவோம்.

🙏நன்றி.

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
பதிவு : ஒன்று.
https://m.facebook.com/story.php?story_fbid=5772553902819819&id=100001957991710
2.
பதிவு : ஒன்று
https://m.facebook.com/story.php?story_fbid=4163567850385107&id=100001957991710

Tuesday, June 22, 2021

சம்பந்தர்இசையமுதம் திருவிராகம் #முடுகியல் #அராகம் பற்றிய பதிவு. தேவார இசைப்பாடல்கள் பற்றியது பதிவு : 1.

#சம்பந்தர்இசையமுதம்
#திருவிராகம் 

#முடுகியல்  

  #அராகம்           பற்றிய பதிவு.

தேவார இசைப்பாடல்கள் பற்றியது
பதிவு : 1.

பக்தியும், தமிழ் ஆர்வமும் உள்ளவர்கள் தொடரலாம்.

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾

'இசைத்தமிழ் ...  நீ செய்த பெருஞ்சாதனை .....'

ஏழாம் நூற்றாண்டில் வேத நெறி தழைத்தோங்க, அவதாரம் செய்த ஆளுடையப் பிள்ளையாம் அருள் ஞானசம்பந்தர் இயற்றிய திருக்கடைக் காப்பு என்னும் தேவாரத் திருமுறைகளே தமிழரின் பிற்கால சிற்றிலக்கியத்திற்கு  அடிப்படையாய் அமைந்திருக்கிறது.

சம்பந்தர் , புதிய புதிய பாவகைகளை அமைத்து அருளிய பல பதிகங்கள், தமிழின் சிறப்புக்கு மகுடமாய் ஒளிர்கிறது.

சம்பந்தர் இசைத்தமிழுக்குச் சிறப்பான பதிகங்கள் பல அருளிச் செய்துள்ளார். அவரின் சிறப்புகளை, சாதனைகள் பற்றி இப்பதிவில் தொடர்ந்து சிந்திப்போம்.

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

🔷 #திருவிராகம், #அராகம், #முடுகியல்

#அராகம்
#திருவிராகம்:

❇️விளக்கம்:

முதல் திருமுறையில் வரும் ...
123 வது பதிகம். தலம்: திருவலிவலம்
'பூவியல் புரிகுழல்' எனத் தொடங்கும் பதிகத்தில் வரும் 5வது பாடல்

பிடியதன் உருஉமை  கொளமிகு  கரியது
வடி கொடு  தனதடி  வழிபடும் அவர்இடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி  வலம்உறை     
              இறையே.
                                              01.123.05
(முதல் திருமுறை - 1330).

❇️ மேல எடுத்துக்காட்டப்பட்டுள்ள பாடல்
அமைப்பு திருவிராகம் எனப்படும்.
வியாழக் குறிஞ்சி என்னும் பண்ணில் அமைந்துள்ள பாடல்.

✴️பிடியதன் என்று ஆரம்பித்து, தொடர்ந்து வரும் வார்த்தைகள் சந்த அமைப்பில் ஓசையும் நயமும் கொண்டு வேகமாக கடகடவென அடுத்தடுத்த வார்த்தைகள் வந்து பாடல் இனிமை தருகிறது அல்லவா?

🔼இது போன்றுவிரைந்து செல்லும் ஓசையும் நடையும் கொண்ட பாடல்கள் அராகம் என்று பழந்தமிழ் இலக்கணத்தில் இருந்தாலும்,  இதுவே பின் இராகம் எனப்பட்டது என்பார்  அறிஞர்*

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

#திருவிராகம்:

🔼திருஞானசம்பந்தரால் இவ்வகைப் பதிகங்கள், இயற்றப்பெற்றதால் திருவிராகம் எனப்பட்டது.

♦️ #திருவிராகம்: இதன் இலக்கணம்:

⏺️வழியெதுகை பெறாது முடுகியல் மட்டும் பெற்ற திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகங்கள் திருவிராகம் எனப்படும்.

#முடுகியல்:

🔷#முடுகியல் அல்லது முடுகியல் ராகம் என்பது விரைவு நடையும், ஓசையும் அமைந்த சந்தப்பாடல்.

🔼நெகிழ்ந்த ஓசையாகிய நெட்டெழுத்துக்கள் விரவாது குற்றெழுத்துக்களால் இயன்று இடையறவு படாது பாடப்படுவது.

🔸இசை நீட்டத்திற்கு இடமின்றிப் பாடலுக்குரிய நடையில் ஒரு வகைச் சந்த ஓசையுடன்  விரைந்து செல்லுமாறு அமைக்கப்பட்ட சீர்களை உடையது முடுகியல் அடியாகும்.

🔷 பின்னாளில் தோன்றிய திருப்புகழ் போன்ற சந்த விருத்தங்கள் தோன்றக் காரணமாயிற்று என்பது அறிஞர் கூற்று*

♦️இவ்வாறு இசையும், தாளமும் இணைந்து சந்த வேகத்துடன் பாமரரும் சேர்ந்து பாட பதிகங்கள்  அமைத்து அருளியவர் நம் தமிழ் ஞானசம்பந்தரே,

🔹இவையே திருவிராகப் பதிகங்கள் என்று அழைக்கப்படுகிறது.

⚜️திருவிராகப் பதிகங்களில்
     இசைத்தன்மையும்,
     தாளச் சிறப்பும்
பெற்ற சில பாடல்களை  
     மிகவும் சிறப்பானதாக இசை நூல்   
     ஆராய்ச்சியாளர்கள்* குறிப்பிட்டு    
     சிறப்பித்துள்ளார்கள்.

🎵இசைத்தன்மை  மிகவும் சிறப்புப் பெற்றதாக குறிக்கப்படும் பாடல்கள்*....

🎼முதல் திருமுறை :

🎶பதிக எண்: 19.  தலம் : திருக்கழுமலம் பாடல் :  05
பாடல் :  தலைமதிபுனல்...
பண்   :  நட்டபாடை
இராகம் : கம்பீர நாட்டை
தாளம்   : ஆதி (சதுச்சர நடை)

பாடல் :

🎼இரண்டாம் திருமுறை :

🎶பதிக எண்: 165 .  தலம் : திருப்புகலி
பாடல் : 04
பாடல்  : மை தழுவும்...
பண்     : இந்தளம்
இராகம் : மாயாமாவை கெளவ
தாளம்   : கண்ட சாபு

🎶பதிக எண்: 236 . 
தலம்  : திருக்கோவலூர் வீரட்டம்
பாடல் : 09
பாடல் : ஆறுபட்ட ...
பண்    : நட்டராகம்
இராகம் :  பந்துவராளி
தாளம்   :  ஆதி (திசர நடை)

🎼மூன்றாம் திருமுறை :

🎶பதிக எண்: 310  தலம்: திரு ஆலவாய்
பாடல் : 07
பாடல்: கறையிலங்கு...
பண் : கெளசிகம்
இராகம் : பைரவி
தாளம் : ரூபகம்

🎶பதிக எண்: 345  தலம் : திருநள்ளாறு பாடல் : 05
பாடல் : பண்ணியல்...
பண்    : சாதாரி
இராகம் : பந்துவராளி
தாளம்    : சதுச்ர நடை

🥁தாள ரீதியில் சிறப்பு பெற்ற சில பாடல்கள் **..

⚜️முதல் திருமுறை :

🎶பதிகங்கள்: 120 - 125
பண் : வியாழக்குறிச்சி
ஜதி :  தக  திமி
            தக ஜூனு
நடை: சதுச்ர நடை

பதிகம்: 01:123: (திருவையாறு)
பாடல் :  05
பாடல் :  பிடியதன் ...

⚜️இரண்டாம் திருமுறை :

🎶பதிகங்கள்: 165 - 170
பண் : இந்தளம்
ஜதி  : தக  தகிட
            தக  தகிட
நடை: கண்ட நடை

பதிகம்: 165     தலம்: திருப்புகலி
பாடல் : 01
பாடல் : 
முன்னிய காலை ...

🎶பதிகங்கள்: 233 - 237
பண் : நட்டராகம்
ஜதி  : தகிட தகிட
நடை: திச்ர  நடை

பதிகம்: 236   தலம்: திருக்கோவலூர்.
பாடல் :01
பாடல் : 
படைகொள்கூற்றம்    வந்துமெய்ப்
பாசம்விட்ட    போதின்கண்

இடைகொள்வா    ரெமக்கிலை
யெழுகபோது  நெஞ்சமே

குடைகொள்வேந்தன்    மூதாதை
குழகன்கோவ    லூர்தனுள்

விடையதேறுங்   கொடியினான்
வீரட்டானஞ்   சேர்துமே.

⚜️மூன்றாம் திருமுறை :

🎶பதிகங்கள்: 310 - 311
பண் :  கெளசிகம்
ஜதி  :  தகிட தகிட
நடை:  திச்ர  நடை

பதிகம்: 310   தலம்: திருஆலவாய்
பாடல்  : 01

வீடலால    வாயிலாய்   விழுமியர்கள்
நின் கழல்
பாடலால   வாயிலாய்    பரவநின்ற பண்பனே
காடலால   வாயிலாய்    கபாலிநீள்க டிம்மதில்
கூடலால    வாயிலாய்    குலாயதென்ன
கொள்கையே.

🎶பதிகங்கள்: 325 - 346
பண் : சாதாரி
ஜதி  : தகதகிட  தகதகிட
நடை: கண்ட  நடை

பதிகம்: 325  தலம்: திருப்பிரமபுரம்
பாடல்  : 01
பாடல்  : சுரர் உலகு🔹....
இந்தப்பதிகப் பாடல்கள் பற்றியும் இதன்  சிறப்புகள் பற்றி மிக விரிவாக வேறு வேறு பதிவில் காணுவோம்*

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

மேற்கண்ட பதிகங்கள் திருவிராகப் பதிகங்கள் என்று வகைப் படுத்தப்பட்டுள்ளது.

🔹தமிழ் மொழியில் - இது போன்ற அமைப்பில் - இவ்வகை சந்த இசை அமைப்பில் - பல்வேறு பண்களில் இசைப் பாடல்களை அமைத்து முதன் முதலாக ஏராளமான பதிகங்களை இயற்றியவர் கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ஞானசம்பந்தரே.

✳️இதனால் இவரை இசைத்தமிழ் இறைவர் என்று போற்றுகிறார்கள்;
அவ்வழி நின்று நாமும் போற்றுவோம்.

🙏பல்வேறு வலைதளத்தில் உள்ள இணைப்பில் உள்ள செயலிகள் மற்றும்

🙏இசை பேரறிஞர்களாகிய,  வீ.ப.கா.சுந்தரம்,  ஞானகுலேந்திரன், சுப்பிரமணியன், அங்கையர்கண்ணி, மு.கவிதா  முதலிய ஒப்பற்ற பேராசிரியர்கள் நூல்களிலிருந்தும் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டு வழங்கப்பெறுகிறது.
🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி நூல்களையும் தொடர் கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு உணர்வோம்.

🙏நன்றி.
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
#திருமுறைகளில்_தமிழமுதம்:
#சம்பந்தர்_அமுதம்
#தமிழரின்பொக்கிஷம்

https://m.facebook.com/story.php?story_fbid=5772553902819819&id=100001957991710

Monday, June 21, 2021

திருமுறைக்காட்சிகள் - சம்பந்தர் அமுதம் - ஆலயவழிபாடு

#திருமுறைக்காட்சிகள்
#சம்பந்தர்_அமுதம்
#ஆலயவழிபாடு:

"கற்றதனால் ஆய பயன் என் கொல் நற்றாள் தொழார் எனின்''
என்றும்,
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று"

என்றும் நமது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள் அல்லவா?
நடைமுறையில் மக்கள் எவ்வாறு?
🙏
🗣️நாங்க வருடம் குடும்பத்துடன் ஒரு முறை தவறாமல் திருச்செந்தூர் சென்று சாமி கும்பிட்டு வருவோம். அப்படியே, குற்றாலம் முதலிய இடங்களுக்கும் சென்று வருவோம்.

: 🗣️மாங்கனித்திருவிழாவில் சுவாமி பார்க்க செல்வோம்.

:🗣️ திருவாரூரில் தேர் திருவிழா கண்டிப்பாக அன்று சென்று வருவோம்.

: 🗣️நாங்க சார் மாதம் ஒருமுறை திருவண்ணாமலை கிரிவலம் சென்று வருவோம்.

:🗣️ கார்த்திகை அன்று மட்டும் சுவாமிமலை அல்லது வைத்தீஸ்வரன் கோவில் சென்று வழிபடுகிறோம்.

: 🗣️பெளர்ணமி, அஷ்டமி பூசைக்கு நாங்க உபயம் கொடுத்துவருகிறோம். அப்பொழுது கோவில் சென்று வருகிறோம்.

: 🗣️வாரம் ஒரு முறை சனிக்கிழமை மட்டும் திருநள்ளாறு சென்று வருவோம்.

: 🗣️ஜோசியர் கூறியதால், பிரார்த்தனை செய்ய திருவெண்காடு சென்றோம்.

:🗣️எல்லா பிரதோஷம் நாட்களிலும் ஏதேனும் சிவன் ஆலயம் கண்டிப்பாக செல்கிறேன்.

: 🗣️எப்பவாது ஒரு முறை நேரம் கிடைக்கும் போது தான் ஆலயம் செல்ல முடிகிறது.

:🗣️ எங்க சார் நேரம் இருக்கிறது. கிடைக்கும் அவகாசத்தில் மனதில் வழிபட்டு ஓடவேண்டியிருக்கிறது என்று அலுத்த குரல்கள்.

🛐
இப்படிப்பட்ட பக்தர்கள் தான் மிக அதிகம். சுற்றுலா, திருவிழா, சிறப்பு நாட்கள், பிரார்த்தனை, பரிகாரம், இவற்றிற்காக செல்பவர்கள்தாம் அதிகம்.
🕉️
:அம்மாவாசை, பெளவுர்ணமி, அஷ்டமி, நவமி, கார்த்திகை, பிரதோஷம், செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு என்று வாரத்தில் சில நாட்களில் மட்டுமே ஆலயம் செல்லும் பழக்கம் உள்ளது. 
🛐
: ஏதேனும், வாழ்க்கையின் வசதி தேடி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருள் சேர்க்கை குறித்தும், சுயதேவைக்காக மட்டுமே ஆலயம் செல்வது.
🛐
:நோய், பிணி, எதிரிகள் சூழ்ச்சி, என்ற வாழ்க்கையின் முன்னேற்றத் தடை நீக்கவும், ஆண்டவனை ஆலயம் சென்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும் என்ற பழக்கமே மிகுந்துள்ளது.
🛐
நடைமுறையில், நாள்தோறும் ஆலயம் சென்று வழிபடும் முறை குறைந்து, இந்த அளவில்தான் நம் பக்தியும் வழிபாடும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; இது தான் உண்மை. இல்லையா?
🛐
இந்த அளவில் தான் பெரும்பாலோருக்கு நமது பக்தியும்,ஆலய பிரவேசமும் உள்ளது.
🛐
: வேலை, பிழைப்பு, வருமானம், புகழ் இவைதான் நம் வாழ்வில் மிக முக்கியம் என்று கருதுவதால்,
ஆலய வழிபாட்டின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது.
🛐
பொருளும், புகழும் தேடும் உலகில் ஆண்டவர் அருள்தேடல் முக்கியம் இல்லாமல் சென்றுவிட்டதோ.
🛐
உண்மையில், எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி, நம்மை இவ்வுலகில் படைத்து நம் உயிர்காத்து, முற்பிறவி பாவ புன்னியம் நீக்கி, இகபர சுகம் அளித்து, நம் உயிர் இப்பிறவியில் செய்ய வேண்டிய கடமையை உணர்த்தி, அதை செம்மையாக வழி நடத்தி நமக்கு அருள் புரியும் இறைவனை நாம் எப்போதும் நினைத்து வாழ வேண்டும். இதுதான் நமது பிறப்பின் பலன் என்று முன்னோர்கள் அருளுரைத்திருக்கின்றனர்.
🛐
இவ்வுயிரை இவ்வுடலில் படைத்து, உலகில் பெற்ற அறிவைக் கொண்டு இறைவனை உணர்ந்து பிறவி அறுக்க முயல வேண்டும்.
இதுவே மனித பிறப்பின் பலன்.
அதற்கு நாம் செய்ய வேண்டியது, இமைப்பொழுதும் இறை சிந்தனையுடன் இருக்க வேண்டும்.
வாழ்வின் அனைத்து செயல்களும்
இறையின் செயல், முன் வினை நீக்கம் என்று உணர்தல் அவசியம்.
🛐
கானும் ஆலயம் சென்று காலையும், மாலையும், இருபொழுதும், இறைவனைத் துதித்து வணங்கித் தொழுதால், கிடைத்தற்கு அரிதான புண்ணியம் சேரும். நல்வழியில் நம் வாழ்வும் திகழும்.
🛐
இறை ஆலயங்களுக்கு எந்த வேலையில் சென்று தொழுவது சிறப்பு என்பதை அருமையான திருமுறை பாடலில் அறிவுருத்தும் தமிழ் விரகனர் அருளியுள்ளதை உணர்ந்து மற்றவர்களுக்கும் பகர்ந்து செயல்படுவோமா? 
🙏🕉️1️⃣
💙💚💛💜❤️❤️🤍💛💚💛💜❤️❤️🤍💛
தேவாரம் - முதல் திருமுறை - 
தலம்: திரு ஆரூர்
பதிகம்: 105 - பாடல் 2. (1134)
🛐🙏
💙💚💛💜❤️❤️🤍💛💚💛💜❤️❤️🤍💛காலையும், மாலையும், ஆலயம் சென்று இறைவரை வணங்க வேண்டும்
💙💚💛💜❤️❤️🤍💛💚💛💜❤️❤️🤍💛
சோலையில் வண்டினங்கள் கரும்போடு
இசை முரலச் சூழ்ந்த

ஆலையின் வெம்புகை போய்
முகில்தோயும் ஆரூரில்

பாலொடு நெய்தயிரும் பயின்றாடும்
பரமேட்டி பாதம்

காலையும் மாலையும் போய்ப்
பணிதல் கருமமே
🕉️
பொருள் :
சோலைகளில் சுரும்பு முதலான வண்டினங்கள் இசையெழுப்ப, சூழ்ந்துள்ள ஆலைகளிலிருந்து வெளியேறும் புகையானது, மேகம் போல் பரவும் ஆரூரில், பால், நெய், தயிர் ஆகியவற்றால் பூசைகள் பயின்றாடும் பரமனின் திருக்கழலை, காலை, மாலை ஆகிய இரு காலங்களிலும் சென்று வணங்குதல் கடமையாகும்.
💙💚💛💜❤️❤️🤍💛💚💛💜❤️❤️🤍💛
🛐இருபொழுதும், ஆலயம் சென்று இறைவரை வணங்க வேண்டும்🙏
💙💚💛💜❤️❤️🤍💛💚💛💜❤️❤️🤍💛
2️⃣
தேவாரம் - முதல் திருமுறை - 
தலம்: திரு ஆரூர்
பதிகம்: 105 - பாடல் 3. (1135)

உள்ளமோர் இச்சையினால் உதந்தேத்தித்
தொழுமின் தொண்டீர் மெய்யே

கள்ளம் ஒழிந்திடு மின்கரவாது
இருபொழுதும்

வெள்ளம்ஓர் வார்சடைமேல் கடந்திட்ட வெள்ளேற்றான் மேய

அள்ளல் அகன்கழனி ஆரூர்
அடைவோமே.

🛐
பொருள் : தொண்டு செய்பவர்களே! உள்ளத்தில் மிகுந்த வேட்கை கொண்டு, மகிழ்ந்து போற்றித் தொழுவீராக. உண்மையாகவே உம்முடைய அஞ்ஞான இருள் ஒழிந்துவிடும். தடையில்லாது, காலை, மாலை ஆகிய இரு பொழுதும், கங்கைவார்சடையும், இடபமும் கொண்ட ஈசனை, அகன்ற வயல்கள் சூழ உள்ள ஆரூர் நாடிச் சென்று வணங்குவோம்.
நன்றி, 
வணக்கம்
🛐
💙💚💛💜❤️❤️🤍💛💚💛💜❤️❤️🤍💛
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
💙💚💛💜❤️❤️🤍💛💚💛💜❤️❤️🤍💛

Sunday, June 20, 2021

மொழிமாற்று - சம்பந்தர் அமுதம் பகுதி - 6 பாடல் 10,11,12

#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#மொழிமாற்று
பதிவு : ஆறு  (பாடல் 10, 11 மற்றும் 12)
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🙏🏻

👂மொழிமாற்று என்றால் என்ன?  அதன் அமைப்பை பற்றியும் கூறவும்.

👄தமிழ் இலக்கியத்தில் 20 க்கும் மேற்பட்ட அமைப்பில் பாடல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.  இவை
யாப்பு வகைகள் என்று அறியப்படும்.
இவற்றின் ஒரு வகையே மொழிமாற்று எனப்படுகிறது. ஒரு பாடலில்

💠ஒரே அடியில் மாறியிருக்கின்ற சொற்களைப் பொருளுக்கேற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளுதல் மொழிமாற்று எனப்படும். இதனை இலக்கண நூலார் “மொழிமாற்றுப் பொருள்கோள்” என்பர்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

⚜️ நாம் திருஞான சம்பந்தரின் தேவாரத் திருமுறைப் பாடல்களில்

#சம்பந்தர்தூது  
#எண்ணலங்காரம்  
#ஏகபாதம் 
#மடக்கணி

என்ற தலைப்பின் கீழ் தூது பாடல்களும், எண்ணலங்காரம், ஏகபாதம் மற்றும் மடக்கணி என்னும் இயமகம் முதலிய யாப்பு வகைப் பாடல்களைப் பற்றி ஏற்கனவே சிந்தித்து வந்தோம்.

 #மொழிமாற்று  என்ற வகை யாப்பு அமைப்பு பாடல்கள் பற்றி தொடர்ந்து சிந்திக்கலாம்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
👂இந்த வகை அமைப்பில் சம்பந்தர் அருளிய பதிகம் எது? இதன் சிறப்பு யாது?

👄 தேவாரம் - முதல் திருமுறையில் வரும் ஞானசம்பந்தர் பதிகம் - 117 
தலம் திருப்பிரமபுரம்
பாடல் - 1259 முதல் 1270 வரையில் உள்ளது. 12 பாடல்கள் அடங்கியுள்ளது.

❇️பதிகத்தின் சிறப்பு:

☸️சிறு குழந்தையாகிய அருள் ஞானசம்பந்தர் சொற்களை மாற்றி மாற்றி வைத்து விளயாட்டுப் போல அமைந்த பாடல்கள்.
🔯அப்படியே படித்தால் பொருள் விளங்காது.
✡️முதலில் முழு பாடலையும் உணர்ந்து படித்து பின்பு பொருளுக்கு ஏற்ப முன் பின்னாக வார்த்தைகளை மாற்றிக் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.

💠இதை மிறை கவி என்றும் கூறுவர்.
மிறைக்கவி என்பது எளிதில் பொருள் புரியாமல் மூளையைக் கசக்கி, சிந்தித்து சொற்களை மாற்றி அமைத்து தான்
பொருள் உணர வேண்டும்

🛡️அத்தகைய சிறப்பு பாடல்கள் கொண்டது இப்பதிகம்.

🏔️மொத்தம் 12 பாடல்கள். சீர்காழிப் பதியின் 12 பெயர்கள் சிறப்பும் ஒவ்வொரு பாடல்களிலும்  வருவது போல அமைத்துள்ளது மேலும் சிறப்பு.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
பாடல் - 10
அடியிணை கண்டிலன்  தாமரை
             யோன்மால்   முடிகண்டிலன்

கொடியணி   யும்புலி  யேறுகந்து
             ஏறுவர்   தோலுடுப்பர்

பிடியணி   யும்நடை   யாள்வெற்பு
             இருப்பதோர்    கூறுடையர்

கடியணி   யும்பொழில்  காழியுள்
              மேய   கறைக்கண்டரே.

1268.             திருமுறை 01.117.10
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

🔰இதை பொருளுக்கு ஏற்றவாறு இப்படி மாற்றி அமைத்துக் கொண்டு பொருள் காண வேண்டும்.

கடி அணியும் பொழில் காழியுள் மேய  கறைக்கண்டர்
அடியிணை    மால்   கண்டிலன்; 
தாமரையோன்  முடி கண்டிலன்; 
கொடியணியும்  ஏறு உகந்து ஏறுவர்; 
புலித்தோல் உடுப்பர்; 
பிடியணியும் நடையாள் கூறுடையர்; 
வெற்பு இருப்பது.

✳️✍️பொருள் குறிப்பு:

🔽 கடி =மணம். 
🔼 ஏறு - ரிஷபம்    
🔹 கொடியணியும்=கொடியை     
      அலங்கரிக்கும், 
🔸 பிடி அணியும் நடையாள் =பெண் 
       யானையையொத்த நடையினைய     
       உடைய பார்வதி. 
🔼  கூறுடையர் = பாகமாக உடையவர்.
 ⏺️ வெற்பு = கைலை.

💠📝பாடல் விளக்கம்:

மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த சீகாழிப் பதியுள் விளங்கும்

 கறைக்கண்டராகிய சிவபெருமானின்
 அடி இணைகளைத் திருமால் கண்டிலன்.

 தாமரை மலரில் எழுந்தருளியுள்ள  
 பிரமன் முடியைக் கண்டிலன்.

 அவ்விறைவன் கொடிமிசை இலச்சினையாகவுள்ள ஏற்றினை உகந்து ஏறுவர். 

புலித்தோலை உடுத்தவர்.

 பிடி போன்ற அழகிய நடையினை உடைய உமையம்மையை ஒரு கூறாகக் கொண்டவர். 
அவர் இருப்பதோ கயிலை மலையாகும்.

🏔️தலக்குறிப்பு:     காழி:
காளிதன் என்னும் பாம்பும், நடனத்தில் தோல்வியுற்ற காளியும் இத்தலத்துப் பெருமானாரை வழிபட்டதால் இப்பெயர்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
பாடல் : 11

கையது  வெண்குழை  காதது
          சூலம்  அமணர்புத்தர்

எய்துவர்  தம்மை  யடியவர்
           எய்தார்  ஓர்  ஏனக் கொம்பு

மெய்திகழ்  கோவணம்  பூண்பது
           உடுப்பது   மேதகைய

கொய்தலர்  பூம்பொழிற்  கொச்சையுள்
           மேவிய  கொற்றவரே.

1269.            திருமுறை   01.117.11

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

🔰இதை இப்படி பொருளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டு பொருள் காண வேண்டும்

கொய்து அலர் பூம்பொழில் 
மேதகைய கொச்சையுள் மேவிய கொற்றவர் 
கையது சூலம்:    
காதது வெண்குழை;
அமணர் புத்தர்   தம்மை  எய்தார்; 
அடியவர் எய்துவர்; 
ஓர் ஏனக்கொம்பு  மெய்திகழ் பூண்பது;
கோவணம் உடுப்பது

✳️✍️பொருள் குறிப்பு:

⏺️ கொய்து அலர் பூம்பொழில் 
       மேதகைய கொச்சையுள்  =   
       சிறந்தனவாய்க் கொய்யக் கொய்ய   
       மலர்வனவாய அழகிய பொழில்கள் 
       சூழ்ந்த கொச்சையுள்.
 🔸 ஏனக் கொம்பு = பன்றி

💠📝பாடல் விளக்கம்:

சிறந்தனவாய்க்  கொய்யக் கொய்ய மலர்வனவாய் அழகிய பொழில்கள் சூழ்ந்த கொச்சையுள் எழுந்தருளிய கொற்றவராகிய சிவபிரான் கையில் சூலமும் காதில் வெண்குழையும் கொண்டவர். அப்பெருமானை அமணர் புத்தர் எய்தார்;  அடியவர் எய்துவர். பன்றியின் கொம்பை அவர் அணியாகக் கொண்டவர்.   திருமேனிமேல் கோவண ஆடையை  உடுத்தி விளங்குபவர். அவரைத் துதிப்பீராக.

🏔️தலக்குறிப்பு:  
               கொச்சைவயம்:
பராசர  முனிவர்  தமது  உடலின்
தூர்நாற்றமும், பழியும் போகும் பொருட்டுப் பூசித்துப் பேறு பெற்றதால் சீர்காழி தலத்திற்கு இப்பெயர்.

  🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
பாடல்: 12

கல்லுயர்  கழுமல  விஞ்சியுள்
        மேவிய  கடவுள்தன்னை

நல்லுரை  ஞானசம் பந்தன்
         ஞானத்  தமிழ்  நன்குணரச்

சொல்லிடல்  கேட்டல்  வல்லோர் 
தொல்லை
          வானவர் தங்களோடும்

செல்குவர்   சீரரு  ளாற்பெற
          லாம்சிவ   லோகமதே.

1270.           திருமுறை   01.117.12.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

🔰இதை இப்படி பொருளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டு பொருள் காண வேண்டும்.

கல்லுயர் கழுமல விஞ்சியுள்
மேவிய  கடவுள்தன்னை
நல்லுரை  ஞானசம் பந்தன்
ஞானத்  தமிழ்  நன்குணரச்
சொல்லிடல்  கேட்டல்  வல்லோர் 
தொல்லை வானவர்
தங்களோடும் செல்குவர்  
சீரருளாற்பெறலாம் 
சிவலோகமதே.

✳️✍️பொருள் குறிப்பு:

⏺️கல்லுயர் (கல் + உயர்) கழுமல (= 
     கல்லால் ஆன மதில்களை உடைய 
     கழுமல நகரில்)
🔸கழுமலநகர்க் கடவுளை 
     ஞானசம்பந்தன் சொன்ன 🔹ஞானத்தமிழ் நல்லுரைகளைச் 
     சொல்லவும் கேட்கவும் வல்லார் 
     தேவரோடு சிவலோகம் பெறுவர்
      என்கின்றது. 
🔼புண்ணியஞ் செய்து தேவராய்ப்    
     பதவியில் நிற்பாரை விலக்கத் 
     தொல்லை வானவர் என்றருளினார்.
🔹சீர் அருள் = கடவுள் அருள், 
     ஞானசம்பந்தர் அருளால் தேவர்    
      உலகும், பின்னர் கடவுள் அருளால் 
      சிவலோக வாழ்வும் கிடைக்கும் 
      என்பதாம்.

💠📝பாடல் விளக்கம்:

உயர்ந்த மதில்களை உடைய கழுமலக் கோயிலுள் விளங்கும் கடவுளை நல்லுரைகளால் ஞானசம்பந்தன் பாடிய ஞானத்தமிழை நன்குணர்ந்து சொல்லவும் கேட்கவும் வல்லவர் பழமையான தேவர்களோடும் அமருலகம் சென்று சிவலோகத்தைப் பெறுவர்.

🏔️தலக்குறிப்பு:  
                      கழுமலம்:
🌟உரோமச முனிவர் பூசித்து  ஞானோபதேசம் பெற்று, உலகில் உள்ள உயிர்களின் மலங்களைக் கழுவும் (நீக்கும்) வரம் பெற்றதால் சீர்காழி தலத்திற்கு இப்பெயர்.

  🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

திருஞானசம்பந்தர் செந்தமிழ்ப் பாடல்களினால் இறைவனை அருச்சித்து, தமிழ் மொழிக்கு புத்துணர்வு ஏற்படுத்தி
புதிய எழுச்சியை ஊட்டியவர்.
இருண்ட காலத்திலிருந்து மீட்டவர். தமிழுக்கு புதிய புதிய யாப்பு வகைகளை இவரே முதன் முதலாகக் கையாண்டார் என்பது மிகச் சிறப்பு.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
நம் பக்தி இலக்கியத்தில்
ஒப்பற்ற நம் தமிழ் மொழியின்
அற்புத யாப்பமைந்த சிறப்பான ஒரு பதிகப் பாடல் அமைப்புக் குறித்து 
ஒரு துளியேனும் நாம் சிந்திக்க முயலலாமே என்ற வகையில் பதிவிடப்படுகிறது.

🌟இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 

வணக்கம்
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பதிவு: ஒன்று    பாடல் 1 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4018811291527431&id=100001957991710

பதிவு : இரண்டு பாடல் 2, 3 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4022950417780185&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=5743615612380315&id=100001957991710

பதிவு : மூன்று, பாடல் 4, 5 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4027196434022250&id=100001957991710
2...
https://m.facebook.com/story.php?story_fbid=5747920088616534&id=100001957991710

பதிவு : நான்கு - பாடல் 6,7 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4031282306946996&id=100001957991710
2...
https://m.facebook.com/story.php?story_fbid=5753286161413260&id=100001957991710
பதிவு: ஐந்து - பாடல் 8, 9 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4036563763085517&id=100001957991710
2.....
https://m.facebook.com/story.php?story_fbid=5757040607704482&id=100001957991710

Saturday, June 19, 2021

மொழிமாற்று - சம்பந்தர் அமுதம் - 5 பாடல்கள் 8,9

#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#மொழிமாற்று
பதிவு : ஐந்து  (பாடல் 8, 9)
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🙏🏻

👂மொழிமாற்று என்றால் என்ன?  அதன் அமைப்பை பற்றியும் கூறவும்.

👄தமிழ் இலக்கியத்தில் 20 க்கும் மேற்பட்ட அமைப்பில் பாடல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.  இவை
யாப்பு வகைகள் என்று அறியப்படும்.
இவற்றின் ஒரு வகையே மொழிமாற்று எனப்படுகிறது. ஒரு பாடலில்

💠ஒரே அடியில் மாறியிருக்கின்ற சொற்களைப் பொருளுக்கேற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளுதல் மொழிமாற்று எனப்படும். இதனை இலக்கண நூலார் “மொழிமாற்றுப் பொருள்கோள்” என்பர்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

⚜️ நாம் திருஞான சம்பந்தரின் தேவாரத் திருமுறைப் பாடல்களில்

#சம்பந்தர்தூது  
#எண்ணலங்காரம்  
#ஏகபாதம் 
#மடக்கணி

என்ற தலைப்பின் கீழ் தூது பாடல்களும், எண்ணலங்காரம், ஏகபாதம் மற்றும் மடக்கணி என்னும் இயமகம் முதலிய யாப்பு வகைப் பாடல்களைப் பற்றி ஏற்கனவே சிந்தித்து வந்தோம்.

 #மொழிமாற்று  என்ற வகை யாப்பு அமைப்பு பாடல்கள் பற்றி தொடர்ந்து சிந்திக்கலாம்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
👂இந்த வகை அமைப்பில் சம்பந்தர் அருளிய பதிகம் எது? இதன் சிறப்பு யாது?

👄 தேவாரம் - முதல் திருமுறையில் வரும் ஞானசம்பந்தர் பதிகம் - 117 
தலம் திருப்பிரமபுரம்
பாடல் - 1259 முதல் 1270 வரையில் உள்ளது. 12 பாடல்கள் அடங்கியுள்ளது.

❇️பதிகத்தின் சிறப்பு:

☸️சிறு குழந்தையாகிய அருள் ஞானசம்பந்தர் சொற்களை மாற்றி மாற்றி வைத்து விளயாட்டுப் போல அமைந்த பாடல்கள்.
🔯அப்படியே படித்தால் பொருள் விளங்காது.
✡️முதலில் முழு பாடலையும் உணர்ந்து படித்து பின்பு பொருளுக்கு ஏற்ப முன் பின்னாக வார்த்தைகளை மாற்றிக் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.

💠இதை மிறை கவி என்றும் கூறுவர்.
மிறைக்கவி என்பது எளிதில் பொருள் புரியாமல் மூளையைக் கசக்கி, சிந்தித்து சொற்களை மாற்றி அமைத்து தான்
பொருள் உணர வேண்டும்

🛡️அத்தகைய சிறப்பு பாடல்கள் கொண்டது இப்பதிகம்.

🏔️மொத்தம் 12 பாடல்கள். சீர்காழிப் பதியின் 12 பெயர்கள் சிறப்பும் ஒவ்வொரு பாடல்களிலும்  வருவது போல அமைத்துள்ளது மேலும் சிறப்பு.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
பாடல் - 8

நெருப்புரு  வெள்விடை  மேனியர்
                  ஏறுவர்  நெற்றியின்கண்

மருப்புறு  வன்கண்ணர்  தாதையைக்
                  காட்டுவர்   மாமுருகன்

விருப்புறு  பாம்புக்கு  மெய்த்தந்தை
                  யார்விறன்  மாதவர்வாழ்

பொறுப்புறு  மாளிகைத்   தென்புற
                  வத்தணி   புண்ணியரே.

1266.             திருமுறை 01.117.08
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

🔰இதை பொருளுக்கு ஏற்றவாறு இப்படி மாற்றி அமைத்துக் கொண்டு பொருள் காண வேண்டும்

நெருப்புரு      மேனியர், 
வெள்விடை   ஏறுவர், 
நெற்றியின்    கண்ணர், 
மருப்புருவன்    தாதை(யை)க், 
மா முருகன் விருப்புறு    தந்தையார்,
பாம்புக்கு மெய் (யைக்)   காட்டுவர் 

விறல் மாதவர்வாழ் 
பொருப்புறு மாளிகைத் 
தென்புறவத்து அணி புண்ணியர், 

✳️✍️பொருள் குறிப்பு:

🔸மருப்புறு  வன்கண்ணர்  தாதையைக் =
கொம்புடைய விநாயகர்
🔹தாதையை என்பதிலுள்ள ஐகாரத்தைப் பிரித்து மெய் என்பதனோடு கூட்டி மெய்யை எனப்பொருள் கொள்க. 
இது உருபு பிரித்துக் கூட்டல்.

🔽விறல் மாதவர்வாழ் = பெருமையும், வீரமும் மிக்க சிறந்த தவமுனிவர்கள்

⏺️பொருப்புறு மாளிகைத் = மலை போன்று உயர்ந்த மாளிகை

🔼புறவத்து அணி புண்ணியர் = அழகிய புறவம் என்னும் நகரில் அணியாக விளங்கும் புண்ணியராகிய ஈசன்.

🔹மருப்புருவன்    தாதை = யானையின் தந்தம் உடைய விநாயகரின் தந்தை.

💠📝பாடல் விளக்கம்:

வீரர்கள் மிக்க தவத்தினை உடைய தவமுனிவர்கள் வாழ்வதும் 

மலை போன்ற மாளிகைகளை உடையதுமான அழகிய புறவநகருக்கு

அணிசேர்க்கும் புண்ணியராகிய இறைவர் 

நெருப்புப் போலச் சிவந்த மேனியை உடையவர்.

வெண்மையான விடைமீது ஏறி வருபவர்.

நெற்றியின் கண் விழி உடையவர்.

தந்தத்தை உடையவராகிய   விநாயகருக்குத் தந்தையாராவார்.

பாம்புக்குத் தம் மெய்யில் இடம் தந்து அதனைச் சூடுபவர். 

சிறப்புக் குரிய முருகனுக்கு உகப்பான தந்தையார் ஆவார்.

🏔️தலக்குறிப்பு:      புறவம்:  சிபிச்சக்கரவர்த்தியிடம் இந்திரன் பருந்தாகவும், அக்கினி தேவன் புறாவாகவும் சென்று சோதித்தார்கள்.
சிபி புறாவின் எடைக்குத் தனது உடல் தசையை அறுத்து ஈடு செய்தான். 

 இப்பாவம் நீங்கப்  புறவாகிய அக்கினி தேவன் இத்தலத்தை வழிபட்டதால் புறவம் எனப்பட்டது
பேறு பெற்றதால் சீர்காழிக்கு இப்பெயர்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
பாடல் :09

இலங்கைத்   தலைவனை  யேந்திற்று
             இறுத்தது  இரலையின்னாள்

கலங்கிய  கூற்றுயிர்   பெற்றது
              மாணி   குமைபெற்றது

கலங்கிளர்  மொந்தையின்  ஆடுவர்
               கொட்டுவர்  காட்டகத்துச்

சலங்கிளர்   வாழ்வயல்   சண்பையுள்
                மேவிய   தத்துவரே.

1267.            திருமுறை   01.117.09.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

🔰இதை இப்படி பொருளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டு பொருள் காண வேண்டும்

சலம் கிளர் வாழ் வயல் சண்பையில் 
மேவிய தத்துவர் 
இலங்கைத் தலைவனை இறுத்தது; 
இரலை    ஏந்திற்று; 
கலங்கிய   இல் நாள்   மாணி
கூற்றுயிர்   குமை பெற்றது; 
இல் நாள் மாணி உயிர்பெற்றது; 
மொந்தை யின் கொட்டுவர்; 
காட்டகத்து ஆடுவர்.

✳️✍️பொருள் குறிப்பு:

🔹சலம் கிளர் வாழ் வயல் =
      நீர் நிறைந்து விளங்கும் வயல்களை   
      உடைய சண்பைப் பதியில்.
🔸இரலை =மான். 
🔹இல் நாள் மாணி = வாழ்நாள் இல்லை      
     எனும் மார்க்கண்டன், 
🔸கூற்றுயிர் = காலன்
🔹குமை பெற்றது = அளிந்தழிந்தது.
🔸மொந்தை யின் கொட்டுவர் =
       வாத்தியமாக இலங்கும் மொந்தை      
        என்ற தோற்கருவி

💠📝பாடல் விளக்கம்:

நீர் நிறைந்து விளங்கும் வயல்களை  
உடைய சண்பைப் பதியில்          எழுந்தருளிய இறைவர் 

இலங்கைத் தலைவனாகிய     
இராவணனை நெரித்தவர். 

மானைக் கையில் ஏந்தியவர். 

கலக்கத்தோடு வந்த காலனை உயிரைக் கவந்தது.

வாழ்நாள் முடிவுற்ற மார்க்கண்டேயருக்கு உயிர் கொடுத்துப் புது வாழ்வருளியவர்.

வாத்தியமாக இலங்கும் மொந்தை 
என்ற தோற்கருவியைக் கொட்டுபவர். 

 இடு காட்டின்கண் ஆடுபவர்.

அப்பெருமானை வணங்குக.

🏔️தலக்குறிப்பு:   
                     சண்பை:
கபிலர் சாபத்தால் யாதவன் ஒருவன்  வயிற்றில்  உதித்த இருப்பு  உலக்கையைப்  பொடியாக்கிக் கொட்டினான்.   அத்தூள்கள்  சண்பைப் புற்களாய் முளைத்தன.  அப்புற்களைக் கொண்டு யாதவர்கள் சண்டையிட்டு  மாய்ந்தனர்.  இப்பழி  நீங்கும் பொருட்டுக்  கண்ணனும் கபில முனிவரும்  இந்தத் தலத்தை  வழிபட்டு உய்ந்தார்கள்.  இதனால்  சீர்காழி, சண்பை எனப் பெயர் பெற்றது.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

திருஞானசம்பந்தர் செந்தமிழ்ப் பாடல்களினால் இறைவனை அருச்சித்து, தமிழ் மொழிக்கு புத்துணர்வு ஏற்படுத்தி
புதிய எழுச்சியை ஊட்டியவர்.
இருண்ட காலத்திலிருந்து மீட்டவர். தமிழுக்கு புதிய புதிய யாப்பு வகைகளை இவரே முதன் முதலாகக் கையாண்டார் என்பது மிகச் சிறப்பு.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
நம் பக்தி இலக்கியத்தில்
ஒப்பற்ற நம் தமிழ் மொழியின்
அற்புத யாப்பமைந்த சிறப்பான ஒரு பதிகப் பாடல் அமைப்புக் குறித்து 
ஒரு துளியேனும் நாம் சிந்திக்க முயலலாமே என்ற வகையில் பதிவிடப்படுகிறது.

🌟இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 

வணக்கம்
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பதிவு: ஒன்று    பாடல் 1 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4018811291527431&id=100001957991710

பதிவு : இரண்டு பாடல் 2, 3 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4022950417780185&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=5743615612380315&id=100001957991710

பதிவு : மூன்று, பாடல் 4, 5 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4027196434022250&id=100001957991710
2...
https://m.facebook.com/story.php?story_fbid=5747920088616534&id=100001957991710

பதிவு : நான்கு - பாடல் 6,7 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4031282306946996&id=100001957991710
2...
https://m.facebook.com/story.php?story_fbid=5753286161413260&id=100001957991710

Friday, June 18, 2021

மொழிமாற்று - சம்பந்தர் அமுதம் பதிவு 4. பாடல் 6,7

#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#மொழிமாற்று
பதிவு : நான்கு  (பாடல் 6, 7)
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🙏🏻
⚜️ நாம் திருஞான சம்பந்தரின் தேவாரத் திருமுறைப் பாடல்களில்

#சம்பந்தர்தூது  
#எண்ணலங்காரம்  
#ஏகபாதம் 
#மடக்கணி

என்ற தலைப்பின் கீழ் தூது பாடல்களும், எண்ணலங்காரம், ஏகபாதம் மற்றும் மடக்கணி என்னும் இயமகம் முதலிய யாப்பு வகைப் பாடல்களைப் பற்றி ஏற்கனவே சிந்தித்து வந்தோம்.

தற்போது #மொழிமாற்று  என்ற வகை யாப்பு அமைப்பு பாடல்கள் பற்றி தொடர்ந்து சிந்திக்கலாம்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

👂மொழிமாற்று என்றால் என்ன?  அதன் அமைப்பை பற்றியும் கூறவும்.

👄தமிழ் இலக்கியத்தில் 20 க்கும் மேற்பட்ட அமைப்பில் பாடல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.  இவை
யாப்பு வகைகள் என்று அறியப்படும்.
இவற்றின் ஒரு வகையே மொழிமாற்று எனப்படுகிறது. ஒரு பாடலில்

💠ஒரே அடியில் மாறியிருக்கின்ற சொற்களைப் பொருளுக்கேற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளுதல் மொழிமாற்று எனப்படும். இதனை இலக்கண நூலார் “மொழிமாற்றுப் பொருள்கோள்” என்பர்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
👂இந்த வகை அமைப்பில் சம்பந்தர் அருளிய பதிகம் எது? இதன் சிறப்பு யாது?

👄 தேவாரம் - முதல் திருமுறையில் வரும் ஞானசம்பந்தர் பதிகம் - 117 
தலம் திருப்பிரமபுரம்
பாடல் - 1259 முதல் 1270 வரையில் உள்ளது. 12 பாடல்கள் அடங்கியுள்ளது.

❇️பதிகத்தின் சிறப்பு:

☸️சிறு குழந்தையாகிய அருள் ஞானசம்பந்தர் சொற்களை மாற்றி மாற்றி வைத்து விளயாட்டுப் போல அமைந்த பாடல்கள்.
🔯அப்படியே படித்தால் பொருள் விளங்காது.
✡️முதலில் முழு பாடலையும் உணர்ந்து படித்து பின்பு பொருளுக்கு ஏற்ப முன் பின்னாக வார்த்தைகளை மாற்றிக் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.

💠இதை மிறை கவி என்றும் கூறுவர்.
மிறைக்கவி என்பது எளிதில் பொருள் புரியாமல் மூளையைக் கசக்கி, சிந்தித்து சொற்களை மாற்றி அமைத்து தான்
பொருள் உணர வேண்டும்

🛡️அத்தகைய சிறப்பு பாடல்கள் கொண்டது இப்பதிகம்.

🏔️மொத்தம் 12 பாடல்கள். சீர்காழிப் பதியின் 12 பெயர்கள் சிறப்பும் ஒவ்வொரு பாடல்களிலும்  வருவது போல அமைத்துள்ளது மேலும் சிறப்பு.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
பாடல் - 6

சாத்துவர்  பாசம்   தடக்கையில்
      ஏந்துவர்   கோவணம்தம்

கூத்தவர்  கச்சுக்குலவி  நின்று
       ஆடுவர்   கொக்கிறகும்

பேர்த்தவர்   பல்படை   பேயவை
        சூடுவர்    பேரெழிலார்

பூத்தவர்    கைதொழு   பூந்தராய்
         மேவிய   புண்ணியரே.

1264.             திருமுறை 01.117.06
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

🔰இதை இப்படி பொருளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டு பொருள் காண வேண்டும்

பாசம் தடக்கையில் ஏந்துவர்; 
கோவணம் சாத்துவர்; 
தம்கூத்தவர்; 
கச்சு குலவி நின்று ஆடுவர்; கொக்கிறகும் சூடுவர்;
பல்படைபேய் பேர்த்தவர்; 
பேர் எழிலார் 
தவர் பூ கைதொழுபூந்தராய் மேவிய புண்ணியர்

✳️✍️பொருள் குறிப்பு:

🔹கச்சு குலவி நின்று ஆடுவர் - அரையில்   
      கச்சு விளங்க நின்றாடுவர். 
🔹குலவி: குலவ எனத்திரிக்க. 
🔹பேர்த்தவர் - அடி பெயர்த்தாடல் 
      செய்தவர்  (காரணமாதல்)

💠📝பாடல் விளக்கம்:

மாதவ  முனிவர்கள் பூக்களைத் தூவி, கைகளால் தொழும் பூந்தராய் என்ற தலத்தில் எழுந்தருளிய புண்ணிய வடிவினராகிய பரமன்;

கோவணம் உடுத்தவர். 
நீண்ட கையில் பாசத்தை ஏந்தியவர். தமக்கே உரித்தான கூத்தினை உடையவர். 
கச்சணிந்து ஆடுபவர். 
கொக்கிறகு சூடுபவர். 
பல்வகைப் படைகளாகிய பேய்க் கணங்களை அடி பெயர்த்து ஆடல் செய்தவர். 
மிக்க அழகுடையவர்.

அவரைத் துதிப்பீராக.

🏔️தலக்குறிப்பு: பூந்தராய்: சங்கநிதி, பதுமநிதி என்னும் இரு நிதிகளின் அதிதேவதைகள் பூந்தாராய் இருந்து
 (தார் = மாலை) இத்தலத்தை வழிபட்டுப் பேறு பெற்றதால் சீர்காழிக்கு இப்பெயர்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
பாடல் : 7
 
காலது   கங்கை  கற்றைச்
          சடையுள்ளார்  கழல்சிலம்பு

மாவது   ஏந்தல்    மழுவது
          பாகம்  வளர்கொழுங்  கோட்டு

ஆலது   ஊர்வர்   அடலேற்று
          இருப்பர்   அணிமணி  நீர்ச்

சேலது  கண்ணியோர்  பங்கர்
           சிரபுர   மேயவரே.

1265:      திருமுறை   01.117.07

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

🔰இதை இப்படி பொருளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டு பொருள் காண வேண்டும்

காலது  கழல் சிலம்பு, 
கற்றைச்சடை உள்ளாற் கங்கை, 
மாலது   பாகம், 
ஏந்தல் மழுவது, 
வளர் கொழுங்கோட்டு ஆலது இருப்பர், 
அடல் ஏறு  ஊர்வர்
அணிமணி நீர்ச் 
சேலது கண்ணி  ஓர் பங்கர்
சிரபுரம் மேயவர்

✳️✍️பொருள் குறிப்பு:

🔹அணிமணி நீர்ச் சேலது கண்ணி =
     அழகிய நீலமணியின் நிறத்தையும்     
     சேல்மீன் போன்ற கண்களை உடைய       
      உமையம்மையை.
🔹ஓர் பங்கர் = ஒரு பாகம்
🔹மாலது பாகம் = திருமாலை ஒரு
      பாகமாகக் கொண்டவர்.
🔹வளர் கொழுங்கோட்டு ஆல்= வளர்ந்த 
     செழுமையான (கல்லால) கல்+ ஆல 
     மரம்
🔹அடல் ஏறு= இடபம்
🔹கோடு - மேருமலைத் தென் சிகரம். 
🔹ஆலது, சேலது, என்பனவற்றுள் அது
      பகுதிப்பொருள் விகுதி.

💠📝பாடல் விளக்கம்:

அழகிய நீலமணியின் நிறத்தையும் சேல்மீன் போன்ற கண்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரும் சிரபுரத்தில் எழுந்தருளியவரும் ஆகிய சிவபிரான்;

கழலையும் சிலம்பையும் காலில் சூடியவர். 
கற்றைச் சடையில் கங்கையை உடையவர். 
திருமாலைப் பாகமாகக் கொண்டவர். மழுவை ஏந்தியவர். 
வளர்ந்த செழுமையான கிளைகளைக் கொண்ட ஆலமரத்தின் கீழ் இருப்பவர். 
இடபத்தில் ஏறுபவர்

அவரை வணங்கி மகிழ்க.

🏔️தலக்குறிப்பு:   சிரபுரம் :  சிலம்பன் என்னும் அசுரன் வேற்று உருவுடன் அமுதம் பெற வந்தபொழுது திருமால் அவனது தலையை வெட்டினார்.  அவனது தலை (சிரம்) இராகுவாக நின்று பூசித்ததால் சீர்காழிப் பதிக்கு இப்பெயர்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
3 வயதில் இறைவன் அருள் பெற்று ஞானப்பால் உண்டு பாலகனாய் இருந்து தமிழ்ப் பாடல்களினால் இறைவனை அருச்சித்து, பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
நம் பக்தி இலக்கியத்தில்
ஒப்பற்ற நம் தமிழ் மொழியின்
அற்புத யாப்பமைந்த சிறப்பான ஒரு பதிகப் பாடல் அமைப்புக் குறித்து 
ஒரு துளியேனும் நாம் சிந்திக்க முயலலாமே என்ற வகையில் பதிவிடப்படுகிறது.

🌟இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 

வணக்கம்
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பதிவு: ஒன்று    பாடல் 1 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4018811291527431&id=100001957991710

பதிவு : இரண்டு பாடல் 2, 3 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4022950417780185&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=5743615612380315&id=100001957991710

பதிவு : மூன்று, பாடல் 4, 5 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4027196434022250&id=100001957991710
2...
https://m.facebook.com/story.php?story_fbid=5747920088616534&id=100001957991710