Monday, August 2, 2021

வினாவுரை பதிகம் - திருநள்ளாறும், திருவாலவாயும். பதிகம் 1.07.1

#வினாஉரை_பதிகங்கள் 
#திருமுறைகளில்தமிழமுதம்:
#சைவத்திருமுறைகள்:
🙏🏻🙆‍♀️⚛️❄️✡️🙇‍♂️🔱🕉️🔱🙇‍♀️⚛️🙆🏻‍♂️🙏🏻
#சம்பந்தர்அமுதம்:
💥பதிவு : 1.
4. #வினாஉரை_பதிகங்கள் : 
🙏🎪🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♀️🎪🙏
          🙆#ஆன்மீகமே_தமிழ்🙆🏼‍♂️
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🎎2.இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் தமிழின் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.                        
                    🙏🙇‍♂️நன்றி🙇‍♀️🙏🏻 
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
பதிவு:1.
🔱#வினாஉரை_பதிகங்கள் : 
திருஞானசம்பந்தரின் அற்புத பதிக அமைப்பைப்பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.
🔱பாடல் குறிப்புக்களையும், சிறப்புகளையும் மிகச் சுருக்கமாகவே தந்துள்ளேன். 
🔱ஒவ்வொரு பதிகமும் தனித்தனியாக  உணர்ந்து சிந்தித்தால் இறை பேராற்றலும், அருளும் உண்மை பொருளும், தமிழின் கவியின் உயர் சிறப்பும் அவரவர் திறனறிவுக்கு நிச்சயம் உணரலாம். 
🔱எனவே, இப்பதிவு ஒரு அறிமுகமே. பலன் பெற அன்புடன் வேண்டுகிறேன்.

🔱வினாஉரை பதிகங்கள் : 

 🔱பொருள் :

வினவுதல் வழி உரைத்தல்:
பாட்டுடைத் தலைவன் அருட்செயல்களை  பல்வேறு
கோணத்தில், கிண்டல், கேலி செய்வது போன்றும், எளிமை செய்தும் தலைவனின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் வெளியிட்டு அருளப்பட்ட பதிகங்கள்
மேலும், தலத்தின் சிறப்புடன்,  இறைவரின் சிறப்பு கோலம், பேரருட்டிரன் வெளிப்படுத்தும் பாங்கு வியப்பும், சிறப்பும் மிக்கது.

🔱இந்தத் தொடரில் நாம் சிந்திக்கவிருக்கும் பதிகம்.

🔱முதல் திருமுறை - பதிகம்:1.07.
தலம் : திருநள்ளாறும், திருவாலவாயும்
பண் : நட்டபாடை
பாடல் முதலடி : 'பாடக மெல்லடி'

🔱பதிக சிறப்பு:
மதுரையில் அனல் வாதத்தில் 'போகமார்த்த' என்னும் திருப்பதிகம் பெற்ற திருத்தலமாகிய திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை, ஆலவாயில் அமர்ந்தததை வினவும் வினா உரையாக உடையது.

'...நள்ளாறுடைய நம்பெருமான் இது என் கொல்சொல்லாய்'
என்றும்,
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே
என்றும்  ஒவ்வொரு பாடலிலும் அமைத்துள்ளார்.

🔱திருநள்ளாற்று சிறப்பும்,
 ஆலவாய் சிறப்பும் கூறி நள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை நோக்கி வினவுதல் போன்ற அமைப்பு.

🔱முதல் பாடல்:

பாடக மெல்லடிப் பாவையோடும்
படுபிணக் காடிடம் பற்றி நின்று

நாடகம்ஆடு  நள்ளாறுடைய
நம்பெருமான் இது என் கொல்சொல்லாய்.

சூடக முன்கை மடந்தைமார்கள்
துணைவரோடும் தொழுது ஏத்தி வாழ்த்த

ஆடகமாடம் நெருங்கு கூடல்
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே.

🔱பொருள் :
பாடகம் என்றும் அணியை திருப்பாதத்தில் அணியாய் கொண்ட இறைவியுடன், இடுகாட்டில் நடனம் புரியும் திருநள்ளாற்று இறைவா,

சூடகம் எனப்படும் வளையலை அணிந்த மகளிர் கனவர்களுடன் தொழுது போற்ற, பொன்மாளிகைகள் நெருக்கமாக உடைய கூடல் நகராகிய ஆலவாய் ஆலயத்தில் அமர்ந்த பாங்கு என் கொல் சொல்லாய் என்று வியப்பெய்து வினா எழுப்புகிறார்.

🛐தலச்சிறப்பு :
திருநள்ளாறு:
காவிரி தென்கரை தலம்.
சப்தவிடங்களில் ஒன்று.

சுவாமி : தர்பாரண்யேஸ்வரர்,
நள்ளாற்று ஈசர்.
அம்பிகை: போக மார்த்த பூண்முலையாள்.
தல மரம்: தருப்பை
தீர்த்தம் : நளதீர்த்தம்.

🟩ஞானசம்பந்தர் அனல் வாதத்தில்," போகமார்த்த பூண்முலையாள் " என்றெழுதியிட்ட பதிகம் அனலில் அழியாது, மீண்டதால், பச்சைப் பதிகம் என்று சிறப்பிக்கப்பட்ட பதிகம் இத்தலத்திற்குரியது
 (பதிகம் எண் 1.49)

🟪நளச்சக்கரவர்த்தி இத்தலத்தில் வந்து ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரரை தரிசிக்க, சனிக்கிரகத்தின் இடர் நீங்கிற்று. 

🟩ஸ்ரீ சனிபகவான் இவ்வாலய இறைவரின்  கோபுரத்தின் இடதுபுறம்,  அம்மன் ஆலயத்திற்கு முன்புறமாக இருந்து அருள் தருகிற கோல அமைப்பு.

🔆திரு ஆலவாய் :

சுவாமி : சோமசுந்தரக் கடவுள், சொக்கநாதர்.
அம்பிகை: மீனாட்சி
தலமரம்: கடம்ப மரம்
தீர்த்தம்: பொற்றாமரைத் தீர்த்தம்

🔺பாண்டிய நாட்டுத் தலம்
மதுரை என்பது தடாதகைப் பிராட்டியார் (மீனாட்சி அம்மை)
திருவவதாரம் செய்து பாண்டிய நாட்டை ஆண்டு ஈசனைத் திருமணம் செய்து கொண்ட திருத்தலம்.

♦️ஈசன் செளந்தர பாண்டியனாக வீற்றிருந்து அரசு புரிந்தார். 

💜ஐந்து சபைகளுள் இது வெள்ளிச் சபையுடையது. வெள்ளியம்பலம் எனப்படுகிறது. 

💚இறைவன் கால் மாறி ஆடியதலம்.

♾️சிவபெருமான் அறுபத்துநான்கு திருவிளையாடல்கள் புரிந்த இடம். மூன்றாம் (கடை) தமிழ்ச் சங்கம் இருந்த பதி. புலவர்களில் ஈசனும் ஒருவனாய் இருந்து தமிழ் ஆய்ந்த, சங்கத் தமிழ் கண்ட பதி.

💙திருஞானசம்பந்தர் அனல்வாதம் புனல்வாதம் புரிந்து இப்பதியில் சமணர்களை வென்றார். 

❤️கூன்பாண்டியனுடைய வெப்புநோய் திருஞானசம்பந்தரால் தீர்க்கப்பட்ட இடம் இதுவே. பின் அப்பாண்டிய மன்னன் நின்ற சீர் நெடுமாறனாய், கூன் முதுகு சீராகிய சிறப்பு உண்டு.

💚ஆலவாய், கூடல், கடம்பவனம், பூலோக கயிலாயம் என்றும் இவ்வூரைக் குறிப்பிடுவார்கள்.

🔱பல்வேறு நூல்களில் இருந்து தொகுத்து பகிர்கிறோம்.
நன்றி.
❤️🙏❤️🙏❤️🙏❤️
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
💙🙏💚🙏💜🙏❤️

No comments:

Post a Comment

கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - (குலசேகரமுடையார்) - பிரதோஷக்குழு யாத்ரா 17.8.2025

#கல்லிடைக்குறிச்சி -  குலசேகரமுடையார் ஆலயம் 17.8.25 #கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - குலசேகரமுடையார் அம்பாள் = தர்மசவர்த்தினி (அறம...