Saturday, August 23, 2025

கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - (குலசேகரமுடையார்) - பிரதோஷக்குழு யாத்ரா 17.8.2025

#கல்லிடைக்குறிச்சி - 
குலசேகரமுடையார் ஆலயம்

17.8.25 #கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - குலசேகரமுடையார்
அம்பாள் = தர்மசவர்த்தினி (அறம் வளர்த்த நாயகி)

திருநெல்வேலி - பாபநாசம் பிரதான சாலையில் ஆலயம் உள்ளது.

ராஜகோபுரம் - காட்சி கோபுரமாக அமைத்துள்ளனர்.

நீண்ட முன் மண்டபம். கொடிமரம், நந்தி உடையது.

சுவாமி கருவரை முன் வினாயகர், மற்றும் முருகர் உள்ளனர்.

அம்பாள் தனி கருவரையில்

பிரகாரத்தில் சன்டிகேஸ்வரர் நாகர் முதலிய சன்னதிகள் உள்ளன.

சிறப்பான பூசை வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

#பிரதோஷக்குழுயாத்ரா 

17.8.25 தரிசனம்.

#என்றும்_அன்புடன் 

#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 

#சுப்ராம்

கல்லிடைக்குறிச்சி மானேந்தியப்பர் - வடிவாம்பிகை ஆலயம் - பிரதோஷக்குழு யாத்ரா - 17.8.25

17.8.25 #கல்லிடைக்குறிச்சி

 மானேந்தியப்பர் - வடிவாம்பிகை ஆலயம்

கிழக்குப் பார்த்த ஆலயம் 3 நிலை ராஜகோபுரம், முன்மண்டபத்துடன் உள்ள ஆலயம்.

உள் நீண்ட மண்டபத்தில் கொடி மரம், நந்தி அமைந்துள்ளது.

உள் பிரகார நுழைவில் விநாயகர், சுப்பிரமணியர் துவாரபாலகர்கள்.

உள்பிரகாரத்தில் சுவாமி தன் கருவரை முன்மன்டபத்துடன் கிழக்கு நோக்கியும்,

அம்பாள் தெற்கு நோக்கிய கருவரையிலும் இருந்து அருள் தருகிறார்கள்.

தனி பள்ளியரை, நடராஜர் சன்னதிகள் உள்ளன.

உள் பிரகாரத்தில், சன்டிகேஸ்வரர் மற்றும் நாகர்கள் உள்ளனர்.

மிகப்பழமையான ஆலயம்.

கன்னுவ மகரிஷி வணங்கியது. புனரப்பை செய்து, பராமரித்து, பூசைகள் நடத்தி வருகின்றனர்.

பள்ளியரை பூசை சிறப்பு. மாலை 7.30 அளவில் துவங்குகிறது.

தரிசிக்க வேண்டிய ஆலயம்.
#கல்லிடைக்குறிச்சி 

#பிரதோஷக்குழுயாத்ரா 

17.8.25 தரிசனம்
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 

#சுப்ராம்

அந்தாளநல்லூர் - ஆகாயதலம் முன்றீஸ்வரமுடையார் - மரகதாம்பிகை17.8.2025 - பிரதோஷக்குழு யாத்ரா 17.8 2025

#அந்தாளநல்லூர் - 

ஆகாயதலம் முன்றீஸ்வரமுடையார் - மரகதாம்பிகை
17.8.2025

பஞ்ச குருதலங்களில் இது ஆகாய தலம்.

இரண்டு பிரகாரங்கள் உடைய கற்றளி

சுவாமி முன் மண்டபத்துடன் உள்ள தனி கருவரையில் உள்ளார்.

பிரகாரத்தில் உள்ள தட்சினாமூர்த்தி - பாதம் ஆகாயம் நோக்கி அமைந்துள்ளது.

வேறு எங்கும் காண முடியாதது.

பிரகார மண்டபங்களில், சனீஸ்வரர், லிங்கங்கள் தனித்தனியாக உள்ளன.

அடியார்கள் பராமரிப்பில் இந்த ஆலயம் உள்ளது. உடனடியாக சீர் செய்யப்பட வேண்டிய பழமையான ஆலயம்.

மிக அருகில் திருப்புடைமருதூர், முதலிய முக்கிய தலங்கள் உள்ளன.

#பிரதோஷக்குழுயாத்ரா 

17.8.25 

#என்றும்_அன்புடன் 

#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 

#சுப்ராம்

கன்னியாகுமரி - பிரதோஷக்குழு யாத்ரா 16.8.2025

கன்னியாகுமரி 16.8.25
16.8.2025 மீள் தரிசனம்

கிழக்கு பார்த்த கருவரை சன்னதியில் பகவதி அம்மன் நின்ற கோலம். மூக்குத்தி வெளிச்சம் கவனிக்கத் தக்கது. அம்மன் நின்ற கோலத்தில் தவம் புரிவதாக புராணம்.

பகவதி அம்மன் கிழக்கு நோக்கியவாறு அலங்காரத்துடன் சிறப்பு

3 பிரகாரங்கள்.
உள் பிரகாரத்தில்... விநாயகர், சூரியன், தியாக சௌந்தர்யம்மன், பால சௌந்தரியம்மன் உள்ளனர்.
ஆலயம் - கடல் சுற்றி 11 தீர்த்தங்கள் உள்ளன.
வைகாசி - விசாகம் - பிரம்மோட்சவம்
அன்னையே பிரதானம்.

முழுவதும் கற்றளி .

பைபொருட்கள் ரூ 20/- கொடுத்து Token பெற்றுக் கொள்ளலாம். ஆலயம் உள் பகுதியில் வசதி உள்ளது. செருப்பு ஆலய வெளியில் போட்டுவிட்டு உள்ளே செல்ல வேண்டும்.

காலையில் 7-9.30 வரை சிறப்பு ஹோமம் நடைபெற்ற போது பொது பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

ரூ20/- சிறப்பு தரிசன வரிசையும் உள்ளது.

பக்தர்கள் கூட்டம் அதிகம்.

பல மாநில மக்கள் வந்து தரிசனம் பெறுகிறார்கள். 

பிரதோஷக்குழுயாத்ரா
சுப்ராம்.

16.8.25
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

திருப்புடைமருதூர் கோமதி அம்மன் சமேத நாறும்பூநாதர் ஆலயம். - பிரதோஷக்குழு யாத்ரா 17.8.2025

#திருப்புடைமருதூர்

17.08.25 மீள் தரிசனம்

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள #திருப்புடைமருதூர் மிகப்புராணத்தலம்.

கோமதி அம்மன் சமேத நாறும்பூநாதர் ஆலயம்.

தல சிறப்பு

முன்னொரு சமயம்…. ‘காசிக்கு நிகரான தலத்தைக் காட்டுமாறு சிவனாரிடம் தேவர்கள் வேண்டினர். தேவர்களின் கையில் ஒரு பிரம்ம தண்டத்தைக் கொடுத்து அதைக் கீழே போடச் சொல்ல, தேவர்களும் போட்டனர். அது, தாமிரபரணி ஆற்றில் விழுந்தது. “இந்த பிரம்ம தண்டம் எங்கு கரை ஒதுங்குகிறதோ, அதுதான் காசிக்கு நிகரானது” என சொன்னாராம். அதே போல, அத்தண்டம், தட்சிண காசியான திருப்புடைமருதூர் ஆற்றங்கரையோரம் ஒதுங்க, அங்கு பிரம்ம தண்டத்துக்குப் பூஜை செய்து சிவனருளைப் பெற்றனர்.

ஆலயத்தில் சூரியன் அருகில் பிரம்மதண்டம் பிரதிஷ்டை தனி சன்னதியில் உள்ளது.

பிற்காலத்தில் களக்காடு பகுதியை ஆட்சி செய்த வீரமார்த்தாண்டவர்ம மன்னன், மருதமரங்கள் நிறைந்த வனமாக இருந்த இப்பகுதிக்கு வேட்டையாட வந்தான். அப்போது ஒரு மானைக் கண்டு அதனை வீழ்த்த அம்பு எய்தார். அப்போது அந்த மான், ஒரு மருதமரத்தின் அடியில் சென்று மறைந்தது. மானை, மீட்க அந்த மரத்தை வெட்டும்படி உத்தரவிட்டார் மன்னர். அதன்படி கோடாரியால் மரத்தை வெட்ட ரத்தம் பீறிட்டது. அங்கு வெட்டுபட்ட நிலையில் லிங்கத்திருமேனியாய் சிவனாரைக் கண்ட மன்னர் மனமுருகி வேண்டி, அந்த இடத்திலேயே ஆலயம் எழுப்பினார்.

சிவபக்தரான கருவூர் சித்தர், பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து விட்டு வந்தவர், தாமிரபரணியில் வடக்குக்கரை வழியாக வந்த போது மறுக்கரையில் இக்கோயிலைக் கண்டார். ஆனால், ஆற்றைக் கடக்க முடியாதபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இங்குக் கோயில் கொண்டுள்ள இறைவனின் பெயர் அறியாத கருவூர் சித்தர், அப்பகுதியிலிருந்து வந்த மலர்களின் மணத்தை முகந்து, “நாறும்பூவின் (மணக்கும் பூக்களின்) நடுவில் வீற்றிருக்கும் இறைவனே உன்னை தரிசிக்க அருள் புரிவாயா?” என இறைவனின் திருநாமத்தைச் சத்தமாகச் சொல்லி அழைத்து, “பரம்பொருளே.. உன்னை தரிசிக்க எனக்கு பாக்கியம் கிட்டவில்லையா? ஆற்றை, கடக்க முடியாதபடி வெள்ளமாகச் செல்கிறதே.. நான் சொல்லுவது உனக்கு கேட்கவில்லையா? உன் காதுகளில் விழவில்லையா?”என இருகரம் கூப்பிக் கேட்க, இறைவன் தனது திருமேனியை இடப்பக்கம் சரித்து செவிமடுத்துக் கேட்டாராம்.

வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும்படி சித்தர் வேண்டிக் கேட்க, வெள்ளம் குறைந்து கருவூர் சித்தர், நாறும்பூ நாதரை தரிசனம் செய்ததாகவும், ”தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளையும் செவி மடித்துக் கேட்க வேண்டும்” எனவேண்டியதாகவும் சொல்கிறது தலபுராணம்.

இதனால் இன்றும் சாய்ந்த நிலையிலேயே பக்தர்களுக்கு ஈசன் காட்சி கொடுக்கிறார். நாறும்பூ நாதரின் தலையில் வெட்டுப்பட்ட தடம் இருக்கிறது. காயத்தை ஆற்றும் விதத்தில் தினமும் சந்தனாதி தைலம் பூசிய பின்னரே அபிஷேகம் நடைபெறுகிறது. சுவாமிக்கு முன் வலதுபுறத்தில் பிரம்ம தண்டம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சுமார் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது இத்தலம். நீலக் கல்லில் உச்சி முதல் பாதம் வரை ருத்திராட்ச திருமேனியான கோமதி அம்பாள், அருளே வடிவாகக் காட்சியளிக்கிறார். பிரம்ம ஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்ட இந்திரன், தன் தோஷம் நீங்க இங்குள்ள தாமிரபரணி தீர்த்தக்கட்டத்தில் நீராடி நாறும்பூ நாதரை வழிபட்டதாக புராணம் கூறுகிறது. மருதபுரம், சுந்தரவனம், புடார்ச்சுனம், தட்சிணகாசி, சுரேந்திரபுரி என்ற பெயர்களும் இதற்கு உண்டு.

வசிஸ்டர், ஆதிமனுவுடன் இணைந்து இத்தல இறைவனின் திருமேனி மீது ’லேபனம்’ என்ற கஸ்தூரி மஞ்சள், புனுகு, சந்தனம் ஆகிய நறுமணக் கலவையைச் சாத்தி பூஜித்தனர். இதனால், இத்தல இறைவன் ‘லேபன சுந்தரர்’ என்றும் போற்றப்படுகிறார். இங்குள்ள நடராஜர் சிலை ஓம் வடிவ திருவாசியுடன் அமைந்துள்ளது. இங்குள்ள யோக தெட்சிணாமூர்த்தி இரு கால்களையும் மடக்கி அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார்.

இக்கோயிலின் கோபுரம் ஐந்து நிலைகளையும், பதினோரு கலசங்களையும் கொண்டுள்ளது. கோபுரத்தின் தளங்களில் மியூரல்- டெம்பரா வகைச் சுவரோவியங்கள் காணப்படுகிறது. இந்த ஓவியங்களில் திருவிளையாடற்புராணம், கந்த புராணம், பெரிய புராணம் தொடர்பான ஓவியங்களும் சீன நாட்டு வணிகர்களின் உருவங்களும் இடம் பெற்றுள்ளன. பாண்டியர்களால் கட்டப்பட்ட கருவறை, சோழர்கள், விஜயநகரப் பேரரசர்கள், நாயக்கர்களால் செய்யப்பட்ட திருப்பணிகள் என மிகப்பெரும் கோயிலாக காட்சியளிக்கிறது. தல விருட்சமான மருதமரம், தற்போது படித்துறையில் காய்ந்த நிலையில் உள்ளது. இம்மரத்தின் கீழ் சிவலிங்கமும், லிங்கத்தைக் கைகூப்பி வணங்கிய இந்திரனும் வடிக்கப்பட்டுள்ளார்கள். இங்குள்ள தாமிரபரணியில்தான் ராமநதியும், கடனாநதியும் கலக்கிறது.

ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீசைலத்தை ’உத்திரகாசி’ எனவும், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை ‘மத்திய காசி’ எனவும், திருப்புடைமருதூரை ‘தட்சிணகாசி’ என, இந்த மூன்று தலங்களின் விருட்சங்கள் மருதமரம் என்பதால் இவற்றை காசிக்கு இணையாக ஒப்பிடுகிறார்கள் பக்தர்கள்.

தலைசாய்த்து செவி மடுத்துக் கு றைகளைக் கேட்டு வரமளிக்கும் நாறும்பூநாதருக்கு வெள்ளை வஸ்திரம், வெண் தாமரை மலர் மாலை சாற்றி சுத்த அன்னம் நைவேத்யம் செய்து வழிபட்டால், எந்த வேண்டுதலானாலும் நிறைவேறும் என்கிறார்கள்.

.... இணையத்திலிருந்து .... நன்றி🙏

பல்வேறு சிறப்புகள் பெற்ற மிகவும் பெரிய ஆலயம் சிதைந்த நிலையில் இருந்ததை, உச்சநீதிபதி திரு ரெத்தினவேல் பாண்டியன் அவர்கள் முன்முயற்சியுடன், பல்வேறு ஆன்மீக பெரியவர்கள், மற்றும் ஆன்மீக அமைப்புகளும் இணைந்து ஆலயத்தை சீர்படுத்தி குடமுழுக்கு நடத்தி, பராமரித்து வருகிறார்கள்.

மூர்த்தி, தலம், தீர்த்தம், தலவிருஷ்ட்சம் என எல்லாமே சிறப்பு வாய்ந்த ஆலயம்.

5 பிரகாரங்கள் கொண்டது. 

உள்பிரகாரத்தில், கன்னி விநாயகர், சுப்பிரமணியர், சூரியன், 63 நாயன்மார்கள், அகத்தியர், சனீஸ்வரர், சரஸ்வதி, சகஸ்ரலிங்கம், மற்றும் நடராஜர் சன்னதிகள் உள்ளன.

தலவிருட்சம் - மருதமரம் தலமரம் 1200 வருடங்கள் பழமையான பாகம் தனி சன்னதியாக ஆலயம் பின்புறம் நதி ஓரம் வணங்கப்பட்டு வருகிறது.

பிரம்மஹத்தி தோஷம் நீங்க பிரம்மன், மருதமரம் அருகில் தவம் செய்து சிவன் அருள் பெற்றார்.

பிரம்மன் புதல்வர் சுயம்புமானு , சரஸ்வதி, திருமகள் , பூமிதேவி வழிபட்ட தலம்.

தைபூசம் பிரம்மோட்சவம். மிகவும் முக்கிய நாள் கொண்டாடப்படுகிறது.

நாள்தோறும் 6 காலம்

தாமிரபரணி உத்திரவாகினியாக இணை ஆறு கலந்து பிரவாகம். நீராடல் சிறப்பு.

வாழ்வில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய நெல்லை மாவட்டத்தலங்களின் ஒன்று.

#பிரதோஷக்குழுயாத்ரா 
17.8.25 மீள் தரிசனம்

#என்றும்_அன்புடன் 

#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#சுப்ராம்

அரிகேசவநல்லூர்அரியநாதர் - பெரியநாயகி அம்மன், ஆலயம் பிரதோஷக்குழுயாத்ரா 17.8. 25

#அரிகேசவநல்லூர்

அரியநாதர் - பெரியநாயகி அம்மன், ஆலயம்
பிரதோஷக்குழுயாத்ரா
17.8.20 25தரிசனம்.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ளது.
பஞ்சகுரு ஸ்தலங்களில் ஒன்று.
- இது குபேரதலம்

சுமார் 1600 ஆண்டுகள் பழமையானது.

கிழக்குநோக்கிய ஆலயங்கள்

சுவாமி அம்பாள் தனித்தனி ஆலயமாக அருகருகே அமைந்துள்ளது.

ராஜகோபுரம் இல்லை.

 முன்புறம் கல் மண்டபம் மற்றும் ஒரு அழகிய கற்குளம் அமைந்துள்ளது.

சுவாமி ஆலயம் அடுத்து இடது முன் புறம் அம்மன் பெரியநாயகி ஆலயம் தனியாக உள்ளது.

மிகப்பெரியவளாகமாக இருந்து பின் புனரமைக்கப்பட்ட வழிபாட்டுத்தலம்.

சிறப்பு பூசை பரிகாரம் முதலிய சிறப்புகள் நடைபெற்று வருகின்றன.

நல்ல பராமரிப்பில் உள்ள ஆலயம்.

சுவாமி கிழக்குப் பார்த்தும் அம்பாள் தனி ஆலயமாக கிழக்குப் பார்த்தும் தனித்தனி ஆலயமாக உள்ளது. 

முழுவதும் கற்றளி

சுவாமி ஆலயம் கருவரை பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி கால் மடக்கிய நிலையில் கம்பீரமான அமைப்பில் சிறப்பாக உள்ளார். 

எதிர்புறத்தில் சப்தமாதர்கள். மற்றும் கோஷ்ட்ட தெய்வங்கள்

வெளிப்பிரகாரத்தில் தென்புறம்

ஜேஷ்ட்டா தேவி - மகன் மாத்தியுடன் தனி சன்னதியுடன், மகன்கள் மாந்தியுடன் பக்தர்கள் வேண்டுதலுக்கு அருள் தருகிறார்.

மாந்தி பரிகார பூசை வழிபாடுகள் நடைபெறுகின்றன.

ஆலய வடபுறம் தனியா குபேரன் சன்னதி.

குபேரன் வழிபாடு செய்து சிறப்பு பெற்ற வரலாறு.

குபேரனுக்கு தனி சிறப்பு. தீபாவளி அன்று மிகவும் சிறப்பு பூசைகள் உண்டு.

பிரார்த்தனை வழிபாடுகளுடன் ஆலயம் சிறப்பாக உள்ளது.
#பிரதோஷக்குழுயாத்ரா 

 17.8.2025 தரிசனம்

#என்றும்_அன்புடன் 

#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#சுப்ராம்

வீரவநல்லூர் - பூமிநாதர் - மரகதாம்பிகை அம்மன் திருக்கோவில். பிரதோஷக்குழுயாத்ரா 17.8.25

#வீரவநல்லூர் - பூமிநாதர் - மரகதாம்பிகை அம்மன் திருக்கோவில்.
பிரதோஷக்குழுயாத்ரா 
17.8.25
17.8.25 தரிசனம்

மிகப் பழமையான சிவாலயம். எழுநிலை ராஜகோபுரம் அழிபட்டு, பின் சிறிய காட்சி கோபுரத்துடன் தற்போது காணப்படுகிறது. 

முக மண்டபம் பெரியது, நடராஜர் சபை, அலங்கர மண்டபத்துடன் கற்றளியாக உள்ளது.

உள் கோபுரம் பிரகாரம் சுவாமி கருவரை கிழக்கு நோக்கியும், அம்பாள் தனி கருவரையும் உள்ளது.

சிதலமடைந்து விட்டிருந்த பெரிய ஆலயம் தற்போது முழுவதுமாக மீட்டு பரமரிப்பும், பூசை நடைமுறைகளும் நடைபெற்று வருகிறது.

தலவிருட்சம் - புன்னைமரம்

இரண்டு பிரகாரங்கள் 

- கன்னி விநாயகர், முருகன், நாயன்மார்கள், சப்த கன்னியார், சூரியன், வைரவர், கலைமகள், காசிவிசுவநாதர் மற்றும் நவகிரகங்கள் உள்ளனர்.

உள் வெளி பிரகாரம், உள்ளடக்கிய சுற்று சுவர் உள்ளது.

புதிய தேர்கள் செய்யப்பட்டு ஆலயம் முன்பு உள்ளது.

ஆலயம் முன்புறம் பெரிய கற்குளம் தெப்ப மண்டபத்துடன் உள்ளது.

தேர் - தெப்பம் , திருக்கல்யாணம் முதலிய திருவிழாக்கள் சிறப்பாக நடை பெறுகிறது.

பூமிநாதர் பல்வேறு புராணங்களிலும், அரசர்களாலும் போற்றப்பட்டு வணங்கப்படுகிறார்.

எமன் சம்காரத்தால் எமன் கொடியாக மாறி இத்தலத்தில் கிடக்க, பூமி பாரம்தாங்க முடியாமல், பூமாதேவி இத்தலத்தில் சிவனை வழிபட்டு எமன் உயிர் பெற்றார். பூமாதேவிக்கும் அருள் கிட்டியது.

அதிவீர பாண்டிய மன்னன் கட்டிய ஆலயம் அதனால், இவ்வூர் அதி வீர நல்லூர் என்ற பெயர் பெற்றது.

   பூமி பிரச்சனைகள், குழந்தை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள். 

திருமண தடைகள் நீக்கம் முதலிய விஷயமாக தீர்த்து நல்லருள் பெற இவ்வாலயம் தொழுவீர்.

மார்கழி திருவாதிரை பிரம்மோட்சவம், ஐப்பசி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
#பிரதோஷக்குழுயாத்ரா 
17.8.25

#என்றும்_அன்புடன் 

#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#சுப்ராம்

அம்பாசமுத்திரம் - அகத்தீஸ்வரர் ஆலயம்17.08.25 அகத்தீஸ்வரர் - லோபமுத்திரை ஆலயம். பிரதோஷக்குழு யாத்ரா 17.8.25

#அம்பாசமுத்திரம் - அகத்தீஸ்வரர் ஆலயம்
17.08.25 அகத்தீஸ்வரர் - லோபமுத்திரை ஆலயம். தரிசனம். 

அம்பாசமுத்திரத்தில் பிரதான சாலையில் உள்ளது.

 கிழக்கு ராஜகோபுரத்துடன். வடக்குபுறம் காட்சிக் கோபுரம் உள்ளது.

கருவரையில் கிழக்கு நோக்கிய அகத்தியர், தெற்குப்பார்த்த சன்னதியில் லோபமுத்திரை. முழுவதும் கற்கோவில்

பிரகாரத்தில், தெட்சினாமூர்த்தி, சண்டிஸ்வரர், தனி நடராஜர் சன்னதி உள்ளது. விநாயர், சுப்பிரமணியர் பிரகாரத்தில்.

செங்குந்த முதலியார் பாத்தியப்பட்டது.

17.08.25 தரிசனம்.

#சுப்ராம்

இணையத்திலிருந்து .....

*அம்பாசமுத்திரம் அகத்தீசுவரர் சுவாமி கோவில் - அகத்தியர் பெருமான் தனி கோயில்*

*அன்னமிடுதல் உற்சவம் - அன்னப் படையலில் பதியும் அகத்தியரின்‌ பிரம்படி தடமும், காலடிச் சுவடும் தெரியும் அரிய காட்சி*

கருவறையில் அகத்தீசுவரரும், தெற்கு நோக்கிய கருவறையில் அகத்தியரின் மனைவி லோப முத்தரை அம்பாளும் அருள்கின்றனர். மூன்றடி உயர திருமேனியராய் நின்ற கோலத்தில் அருள்கிறார் அகத்தீசுவரர். வலக் கரம் சின்முத்திரை காட்ட, இடது கரத்தில் சுவடியை ஏந்தியிருக்கிறார்.

லோப முத்தரை அம்பாள் தனது கையில் மலர் ஏந்தி அருள்பாலிக்கிறாள்.

இந்தக் கோவிலில் பங்குனி 29-ம் நாள், பக்தர்கள் அகத்தியருக்குப் படையலிடுகின்றனர்.`அந்த அன்னப் படையலில், அகத்தியரின்‌ வாக்குப்படி அவரது காலடிச் சுவடும், பிரம்படி தடமும் பதிந்திருப்பது, இத்தலத்தில் நடைபெறும் அதிசய நிகழ்ச்சியாகும்.

சிவபெருமான் பார்வதி திருமணத்தைக் காண அகில உலகமும் கைலாயத்தில் கூடிய போது சிவபெருமான், உலகைச் சமன்படுத்த, அகத்தியரை தென்புலத்துக்கு அனுப்பினார்.

அம்பாசமுத்திரம் எனும் தலத்தை அடைந்த குறுமுனிவர், அங்கே ஒரு புளிய மரத்தடியில் தியானத்தில் ஆழ்ந்தார்.

அப்போது சிவ பக்தர்கள் பலரும் அகத்தியரை தரிசிக்க வந்தனர். தியானம் கலைந்த அகத்தியர், அவர்களுக்கு ஆசி வழங்கினார். மேலும் பக்தர்களில் ஒருவரிடம் 'எமக்குப் பசி எடுக்கிறது. அமுது அளித்து பசி தணிப்பீரா?' எனக் கேட்டார்.

அகத்திய முனிவருக்கு அன்னமிடுவது பெரும் பாக்கியம் எனக் கருதிய அந்த அன்பரும், தம் இருப்பிடத்துக்குச் சென்று அன்னம் தயார் செய்து எடுத்து வந்தார்.

ஆனால் அவர் வருவதற்குச் சற்று காலதாமதம் ஆகிவிட்டது. அகத்தியர் அந்த இடத்தில் இருந்து நகர்ந்துவிட்டார். அன்பர் மிகவும் மனம் கலங்கினார். அகத்தியரை மனதார துதித்து வழிபட்டார்.

அப்போது அவர் முன் தோன்றிய அகத்தியர், 'வருந்தாதே! தற்போது நேரமாகிவிட்டதால் நான் இங்கிருந்து புறப்பட வேண்டும். பங்குனி மாதம் வேடர் வடிவில் வருவேன்; நீ இடும் அன்னத்தைப் புசிப்பேன். அதற்கு அடையாளமாகப் படைக்கப் படும் அன்னத்தின்மீது என்னுடைய காலடிச் சுவடும், பிரம்படிச் சுவடும் தெரியும்!' எனக் கூறி மறைந்தார். அகத்தியர் தாம் வாக்களித்தபடி, பக்தர்கள் படைத்த அன்னத்தில் திருநடனமிட்டுப் பிரம்படிச் சுவடும் கால்சுவடும் காட்டி அருளினார்.

 இவ்வாறு அவர் அருள்புரிந்த இடத் தில், அகத்தியருக்கு அழகிய ஆலயம் அமைத்தனர் பக்தர்கள். 

தமிழகத்தில் அகத்தியருக்காக அமைந்த கோயில்களில் தனிச் சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது இந்த ஆலயம். 

ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் அன்னமிடுதல் உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெறுகிறது. பங்குனி 29-ம் நாள், பக்தர்கள் அகத்தியருக்குப் படையலிடுகின்றனர். '`அந்த அன்னப் படையலில், அகத்தியரின்‌ பிரம்படி தடமும், காலடிச் சுவடும் பதிந்திருப்பதைக் நாம் தரிசிக்கலாம். பின்னர் அந்த படையல் உணவு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

 இந்தத் தலத்துக்கு வந்து அகத்தியரைத் தியானித்து, `ஓம் அகஸ்தீஸாய நம!' என்ற மந்திரத்தை உச்சரித்து, நாம் உண்ண வேண்டிய மருந்தை உட்கொண்டால் நோய் விரைவில் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

 தோல் நோய், சுவாசக் கோளாறு, நரம்புப் பிரச்னைகள், மனநோய் பாதிப்பு ஆகிய பிரச்னைகளால் அவதிப்பட்ட அன்பர்கள் பலரும் இங்கு வந்து அகத்தியரை வழிபட்டு நலம் பெற்று உள்ளார்கள்.
#பிரதோஷக்குழுயாத்ரா 

நன்றி🙏

#சுப்ராம்

17.08.25

#என்றும்_அன்புடன் 

#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

அம்பாசமுத்திரம் காசிபநாதர் மரகதவல்லியம்மன் ஆலயம். பிரதோஷக்குழு யாத்ரா 17.8.2025

#அம்பாசமுத்திரம் 
காசிபநாதர் மரகதவல்லியம்மன் ஆலயம்.
அம்பாசமுத்திரம் 

காசிபநாதர் மரகதவல்லியம்மன் ஆலயம்.

தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள, மிக பழமையான ஆலயம்.

- கிழக்குப் பார்த்த ஆலயம் 7 நிலை ராஜகோபுரம்.

-சப்தரிஷிகளில் ஒருவரான காஷிபமுனிவர் யாக நெருப்பிலிருந்து தோன்றிய லிங்கம் - காசிப லிங்கம்.
- நெல்லிமரம் - தலவிருட்சம்
- இரண்டு பிரகாரங்கள்
உள்பிரகாரத்தில் கோகில விநாயகர், முருகப்பெருமான், விசுவநாதர், விசாலட்சி, உள்ளனர்.

- 1000 வருடத்திற்கு முன் உள்ள கல்வெட்டுகள் உண்டு.

- நடராஜர் புனுகு சபாபதி - தைப்பூசம் வியக்கிழமையுடன் வரும் நாளில் புனுகு காப்பு சாற்றப்படும்.

- ஐப்பசி உத்திரம் நட்சத்திரத்தில் திருக்கல்யாணம் - நடைபெறுகிறது.
- பங்குனி பிரம்மோட்சவம் நடைபெறுகிறது.

- தலபுராணம் - அரிகேசநல்லூர் அரிகரமையர் அவர்களால் 20 சருக்கம் 1221 திருவிருத்தம் கொண்டது.
- தவறு செய்த அர்ச்சகர், சுவாமியால் சுட்டெரிக்கப்பட்டதும், தவம் செய்த அந்தனாரல் வேண்டி சுவாமி அதை ஏற்று அர்ச்சகரை உயிர்ப்பித்தார். இதனால் இறைவர் எரித்தாட் கொண்டார் என்று வணங்கப்படுகிறார்.

- அம்பாள் மரகதாம்பாள் கருணைக் கடலாய் அருளை வாரி வழங்குவதால் இவ்வூருக்கு அம்பாசமுத்திரம் என்ற பெயர்.

- கொடுக்கல், வாங்கல் பிரச்சனைகளுக்கு இவ்வாலயம் சென்று வழிபட்டால் இறை அருளால் தீர்க்கப்படுகிறது.

-மிகப்பழமையான ஆலயம் -புணரமைக்கப்பட்டு, திருக்குட நீராட்டு நடைபெறவேண்டி திருப்பணிகள் நடந்து கொண்டுள்ளது.

-தாமிரபரணி ஆறு ஆலயத்தின் அருகில் உள்ளது. ஏராமானோர் நீராடி ஆலயம் வணங்குகிறார்கள்.

17.8.25 Sunday அன்று தரிசனம்
#சுப்ராம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 
#நெல்லை

சிவசைலம் - சிவசைலநாதர் கோவில்ஸ்ரீ சிவசைலநாதர் - ஸ்ரீ பரமகல்யாணி ஆலயம் பிரதோஷக்குழு யாத்ரா 17.8.25

#சிவசைலம்
17.8.25 ல் மீள் தரிசனம்:
சிவசைலம் - சிவசைலநாதர் கோவில்
ஸ்ரீ சிவசைலநாதர் - ஸ்ரீ பரமகல்யாணி மிகவும் புகழ்வாய்ந்த புராதான ஆலயம்.

சுவாமி அம்பாள் தனித்தனி சன்னதிகளில் மேற்கு நோக்கிய அருட்பார்வைகள்

🛕திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் வழியாகத் தென்காசி செல்லும் சாலையில் ஆழ்வார்குறிச்சியின் மேற்கே ஆறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
 (நெல்லைக்கு மேற்கே சுமார் 57 கி.மீ)
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கடனா நதிக்கரையில் அமைந்துள்ளது.

தேவார வைப்புத்தலம்.

🔱சடைமுடியோடு காட்சியளிக்கும் சிவபெருமான்

 இக்கோவிலின் புராணப் பெயர் 'அத்தீச்சுவரம்' ஆகும்.இறைவன் திருநாமம் சிவசைலநாதர். இறைவியின் திருநாமம் பரமகல்யாணி. இத்தலம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

 இத்தலத்தில் உறையும் மூலவர் சிவசைலநாதரை நான்கு திசைகளில் இருந்தும் வழிபடலாம். மேற்கு திசையில் கருவறை வாயில் வழியாகவும், மற்ற மூன்று திசைகளில் சுற்றுச்சுவரில் உள்ள சாளரங்களின் வழியாகவும் சுவாமியை தரிசிக்கலாம். இப்படி கருவறையின் மூன்று சுற்று சுவர்களிலும் சாளரம் உள்ள சிவாவயத்தை காண்பது அரிது.

சிவசைலம் திருக்கோவிலை கட்டியவன் சுதர்சன பாண்டிய மன்னன். ஒர் நாள் சிவசைலநாதரை தரிசிக்க சுதர்சன பாண்டிய மன்னன் கோவிலுக்கு வர, அப்போது கடனை ஆற்றில் வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடியது.

 இதனால் மன்னன் ஆற்றை கடந்து கோவிலுக்கு செல்ல முடியவில்லை. அதற்குள் இருட்டி விடவே அர்த்தசாம வழிபாடு முடிந்து கோவில் நடை சாத்தப்படுகிறது. எனவே மன்னனுக்கு, சுவாமிக்கு சாற்றிய பூ மாலை மற்றும் பிரசாதங்களை அர்ச்சகர் கொண்டு வந்து தருகிறார். அதனை பெற்று மகிழ்ந்த மன்னன் மாலையை கண்களில் ஒற்றிக் கொள்ள முற்பட்ட போது அதில் பெண்ணின் நீள தலை முடி ஒன்று இருப்பதை கண்டு சினம் கொள்கிறார். சுவாமிக்கு சாற்றிய மாலையில் கூந்தல் முடி எப்படி வந்தது என ஆவேசமாக கேட்க, செய்வதறியாத அர்ச்சகர் அது சிவசைலநாதரின் தலையில் உள்ள சடைமுடியே என கூறிவிடுகிறார். என்ன சுவாமியின் தலையில் சடைமுடியா? அந்த அதிசயத்தை நாளை எனக்கும் காட்ட வேண்டும் எனக் கூறி சென்று விடுகிறார்.

 மறுநாள் கோவில் திறக்கப்பட மீண்டும் மன்னன் தன் படைகளுடன் திருக்கோவிலுக்கு வருகிறார். தான் கூறிய பொய்யை நினைத்து பயந்து சிவசைலநாதரிடம் மன்னிப்பு கேட்டு தன்னை காத்து அருளும் படி அர்ச்சகர் மனதினுள் வேண்டிக் கொண்டே, மன்னன் முன்னிலையில் சுவாமி மீது சாத்தப்பட்டிருந்த நாகாபரணத்தை விலக்கி காட்டிட, சிவசைலநாத லிங்கத் திருமேனி சடை முடியோடு காட்சியளித்ததாம்

இதனைக் கண்டு அதிசயித்த மன்னன் சிவபெருமானை போற்றி துதித்து, அர்ச்சகருக்கும் வெகுமதி வழங்கி சிறப்பு செய்தான்.

எமனை நடுங்க வைத்து நமக்கெல்லாம் நல்ல அருள்பாலிக்கும் நாயகனை நாம் நான்கு திசைகளிலிருந்தும் தரிசிக்கக் கூடியதும் இத்தலத்தின் பெருமைகளில் குறிப்பிடத்தக்கது

 சிவசைலநாதர் சுயம்பு மூர்த்தி ஆவார். இவர் கருவறையில் சற்றே சாய்ந்த லிங்கத் திருமேனியாய் மேற்கு திசை நோக்கி காட்சியளிக்கிறார். இவர் அர்ச்சகரை காக்க சடைமுடியோடு காட்சியளித்ததால், இன்றும் இந்த லிங்கத் திருமேனியின் பின்புறம் சடைமுடிகளின் ரேகைகள் உள்ளன. இதனை நாம் பிரகார சுற்றுச்சுவரில் உள்ள சாளரம் வழியாக தரிசிக்கலாம்

🔱வீதி உலாவிற்கு தங்க கைக்கடிகாரம் அணிந்து வரும் அம்பிகை

இத்தலத்தில் அம்பிகைக்கு தனி சன்னதி கட்ட ஏற்பாடாகி கொண்டிருந்த வேளையில், சிவசைலத்திற்கு அருகே ஆழ்வார்குறிச்சிக்கு அருகில் உள்ள சிநேகபுரி (தற்போதைய ஆம்பூர்) என்னும் ஊரில் வாழ்ந்த அந்தணர் ஒருவரின் கனவில் தோன்றி அந்த ஊரில் உள்ள கிணறு ஒன்றில் அம்மையின் திருமேனி ஒன்று நான்கு கரங்களுடன் ஜலவாசமாக இருந்து வருவதாகவும், அந்த அம்பாள் திருமேனியை எடுத்து சிவசைலத்தில் கட்டப்படும் கோவிலுக்குள் பரமகல்யாணி என்ற பெயர் சூட்டி பிரதிஷ்டிக்கும் படி கூறியருள்கிறார் சிவபெருமான். 

அந்த அந்தணரும் தான் கண்ட கனவை ஊர் மக்களுக்கும், மன்னனுக்கும் தெரியப்படுத்தி, அந்த குறிப்பிட்ட கிணற்றில் தேடிட சிவபெருமான் கூறியது போலவே ஒரு நான்கு கரங்கள் கொண்ட அழகிய அம்மையின் திருவுருவ சிலை கிடைக்க பெற்றது. அந்த அம்மையின் திருவுருவை மங்கள வாத்தியங்கள் முழங்க அங்கிருந்து எடுத்து வந்து சிவசைலம் கோவிலில் பிரதிஷ்டை செய்ததாகவும் வரலாறு கூறுகிறது.

இங்குள்ள அம்பிகை நான்கு கரங்கள் கொண்டு அழகே உருவாக புன்முறுவல் பூத்த முகத்தவளாய் அளவில் சற்றே பெரிய உருவில் காட்சித் தருகிறாள். பாண்டிய நாட்டில் பிரசித்தி பெற்ற அநேக கோவிலின் அம்பிகைகள் இருகரம் கொண்டவர்களாக காட்சியளிக்க, இங்கு அம்பிகை பரமகல்யாணி, நான்கு கரங்கள் கொண்டு மேற்கு நோக்கி காட்சியளிப்பது சிறப்பம்சம் ஆகும்.

 இங்குள்ள உற்சவர் பரமகல்யாணி அம்பிகையும் நான்கு கரங்கள் கொண்டு காட்சியளிக்கிறாள்.

உற்சவர் பரமகல்யாணி அம்பிகைக்கு தங்கக் கை கடிகாரம் ஆபரணமாக அணிவிக்கப்படுவது சிறப்பம்சம்.

இக்கோயிலில் திருக்கல்யாணம் விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். இங்கு அருள்பாலிக்கும் கல்யாணி அம்மன் ஆழ்வார்குறிச்சி அடுத்துள்ள ஆம்பூரில் உள்ள கிணற்றில் பிறந்ததால் திருக்கல்யாணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பே ஆம்பூர் சென்று விடுவார்.

பின்பு கைலாசநாதர் ஆம்பூர் சென்று அங்குள்ள ஸ்ரீனிவாசன் பெருமாள் கோயில் வைத்து சீர்வரிசையுடன் திருக்கல்யாண வைபோகம் நடைபெறும். பின்பு அம்பாள் சுவாமியுடன் ஊர்வலமாக சிவசைலம் செல்வது பக்தர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது இக்கோயில்.

🔱இந்த கோயிலின் மற்றொரு சிறப்பம்சம் எழுந்து நிற்கும் நிலையில் உள்ள நந்திகேஸ்வரர். இந்த நந்திகேஸ்வரர் இந்திர சபையின் தலைமை சிற்பி மயனால் உருவாக்கப்பட்டதாக ஐதீகம்.

🛕தலபுராணம்:
புராணப்பெயர் அத்தீஸ்வரம்
திருமறைக்காலத்தில் திருக்கைலாயத்தில் அன்னை பார்வதிக்கும் பரமேஷ்வரனுக்கும் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தைப் பார்ப்பதற்காக முனிவர்களும், ரிஷிகளும், ஞானிகளும் வடக்கே சென்றதால் பூ உலகம் வடக்கே தாழ்ந்து தெற்கே உயர்ந்தது.

அதனால் உலகத்தில் சமன் செய்வதற்காக அகத்தியர் மற்றும் அத்திரி போற்ற முனிவர்களை தெற்கு அனுப்பினார் சிவபெருமான். அவ்வாறு அனுப்பப்பட்ட அத்திரி முனிவர் சுயம்புலிங்க தரிசனம் காண விரும்பினார். அவருடைய ஆசையை நிறைவேற்றும் வகையில் அகத்திய முனிவர், மேற்குத் தொடர்ச்சி மலையில் திரிகூட பர்வதம் சென்று தவம் செய்தால் சுயம்புலிங்க தரிசனம் கிடைக்கும் என்று கூறினார்.

அகத்திய முனிவரின் ஆலோசனையின்படி அத்திரி முனிவர், தன் துணைவியார் அனுசியா தேவி மற்றும் சீடர்கள் கோரற்றகள், தாந்த்ரீகர் முதலாளோடு திரிகூட பருவதம் வந்து தவம் செய்யத் தொடங்கினார்.

ஒருமுறை பௌர்ணமி தினத்தன்று பூஜை செய்வதற்குக் கடம்ப மலர்களைப் பறிப்பதற்காகக் கடம்பவனம் சென்று முனிவரின் சீடர்கள், அப்போது ஒரு பாறையின் மீது பசுக்கள் தாமாகவே பால் சொரிந்து செல்வதைக் கண்டு சீடர்கள் அந்தப் பாறையின் அருகில் சென்று பார்த்தனர்.

அப்போது ஒரு சிறிய சுயம்பு லிங்கத்தை அவர்கள் பார்த்து அத்திரி முனிவரிடம் தங்கள் கண்டதைத் தெரிவித்தனர். இதனை அடுத்து அத்திரி முனிவர் தனது துணைவியாருடன் வந்து சுயம்பு லிங்கத்தைக் கண்டு தரிசித்த தலம் இந்த சிவசைல நாதர் கோயில் என்று புராணங்கள் கூறுகின்றன.சிவசைலத்தில் அமைந்திருக்கும் சிவபெருமான் பூமிக்கு மேலே ஒரு பாகமும், பூமிக்குக் கீழே 15 பாகமும் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தக்கோயில் செந்தமிழ் பாண்டியனால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

( தகவல்கள்:இணையத்திலிருந்து.... நன்றி🙏)

ஆலயம் நல்ல பராமரிப்பில் உள்ளது.

ஆலயம் அருகில் உள்ள மேற்கு மலைத்தொடர் - பொதிகை மலை) காட்சி மிகவும் அற்புதமாக இருக்கும்.

ஆலயம் பெரிய மரங்கள், சோலைகளில் அமைதியாக இருக்கும். அருமையான சூழல் கொண்டது.
#பிரதோஷக்குழுயாத்ரா 

17.8.25 மீள் தரிசனம்
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#சுப்ராம்

விக்கிரமசிங்கபுரம் - பாபநாசம்17.8.25அருள்மிகுஶ்ரீ வழியடிமை கொண்ட நாயகி சமேத ஶ்ரீ சிவந்தியப்பர் சுவாமி திருக்கோயில்,விக்கிரமசிங்கபுரம், பிரதோஷக்குழு யாத்ரா 2025

#விக்கிரமசிங்கபுரம்
விக்கிரமசிங்கபுரம் - பாபநாசம்
17.8.25
அருள்மிகு
ஶ்ரீ வழியடிமை கொண்ட நாயகி சமேத ஶ்ரீ சிவந்தியப்பர் சுவாமி திருக்கோயில்,
விக்கிரமசிங்கபுரம்,
அம்பாசமுத்திரம் (பாபநாசம்) வட்டம்,
திருநெல்வேலி மாவட்டம்.

சமீப காலத்தில் சிறப்பாக திருப்பணிகள் செய்யப்பட்டுள்ள
இந்த பழமையான திருத்தலத்தில்
நம் இனிய ஈசன்,
ஸ்ரீ சிவந்தியப்பராக அருட்காட்சியளித்திட,
நம் பராசக்தி
ஸ்ரீ வழியடிமை கொண்ட நாயகி எனும் வித்தியாசமான திருப்பெயருடன்
நின்ற கோலத்தில் அழகுத்திருக்காட்சியளிக்கிறாள்.

(தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் இவளை உளமார பற்றிக்கொண்டால்,
வாழும் காலம் சிறப்பாகவும், வாழ்கைக்கு பிறகு மீண்டும் பிறப்பற்ற முக்திநிலையடையவும்
வழிகாட்டியாக இருப்பாள் என்பதின் பொருள்தான் ஸ்ரீவழியடிமை எனும் திருப்பெயராம்.
இந்த அம்பிகையை
"மார்க்க சம்ரக்ஷணி" என்றும் அழைப்பர்)

ஒரு வரலாற்று நிகழ்வின்படி;
தான் அரசாளும் நிர்வாகமும்,
தன் நாட்டு மக்களின் நலமும் சிறக்க வேண்டி,
சிவபெருமானின்மீது அதீத பக்தி கொண்டிருந்த
சிவந்தியப்ப நாயக்கர் என்ற குறுநில மன்னரால் 1625-ஆம் ஆண்டு கட்டப்பட்ட சிவாலயமாம். அதனாலேயே,
அம்மன்னரின் பெயரை
இறைவனுக்கு சூட்டியுள்ளனராம்..

ஸ்ரீ நடராஜர் தலைப்பாகை அணிந்து (நம்ம கொங்கு மண்டலத்து உருமாலைக்கட்டு போல) காட்சியளிப்பது
மற்றுமொரு தலச்சிறப்பாகும்.

(காண்பதற்கு அரியானா திருக்காட்சியாக,
ஆறு திருமுகங்களும் பன்னிரு திருக்கரங்களுடன் எம்பெருமான் முருகன்
நடுநாயகமாக வீற்றிருக்க ஸ்ரீவள்ளியும், தெய்வானையும்,
வலது பக்கமும்,
இடது பக்கமுமாக இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தபடி அருள்பாலிப்பது தலச்சிறப்புக்களில் ஒன்றாகும்)

உள்ளூர் மக்களைத் தவிர, வெளியூர் பக்தர்களால் அதிகம் அறியப்படாத பழமைவாய்ந்த தலங்களுள் ஒன்றான இத்திருக்கோவிலின்
அருகே உள்ள
பிரசித்தி பெற்ற
பாபநாசம் ஆலய இறைவன் போன்றே, இத்தல சிவந்தியப்பரும் சிறப்புவாய்ந்தவராக விளங்குவதால், பாபநாச கோவில் திருவிழாக்கள் அனைத்தும்,
இங்கும் சிறப்புற நடைபெறுமாம்.

நலமும், வளமும் சிறக்க
நடைபெறும் பிரதோஷ வழிபாடு தலவிசேஷம்.

சித்திரைத்தேர் திருவிழா தலபிரசித்தம்).
- இணையத்திலிருந்து ....
நன்றி🙏
ஆலயம் கிழக்குநோக்கி ராஜகோபுரத்துடன் மிக சிறப்பான உள் அமைப்புகளுடன் நிறைந்து விளங்குகிறது.
நல்ல பராமரிப்பில் உள்ளது.

சுவாமி முன்புறம் முககவசத்துடனும் உள்ளார் கிழக்கு நோக்கிய கருவரை, அம்பாள் தெற்கு நோக்கிய அழகிய அமைப்பு உள்னர்.
#பிரதோஷக்குழுயாத்ரா 
17.8.25
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

பாபநாசம் - பாபவிநாசகர் ஆலயம் - பிரதோஷக்குழு யாத்ரா 17.8.25

#பாபநாசம்
பாபநாசம். மீள் தரிசனம் 17.8.25

தாமிரபரணி உற்பத்தியாகி, முதன்முதலாக சமதளம் வரும் இடம்.

அகத்தியமா முனிக்கு சிவன் திருமண காட்சி கொடுத்த இடம்.

80 அடி உயரம் 7 அடுக்கு இராஜகோபுரம் கிழக்குப் பார்த்த ஆலயம்.

சுவாமி பாபவிநாசகர் சுயம்பு மூர்த்தி.

அம்பாள் உலகம்மன் கிழக்குப் பார்த்த தனி ஆலயம் சுவாமிக்கு வலது புறம் அமைந்துள்ளது.
இரண்டு பிரகாரங்கள்
உள்பிரகாரத்தில் நடராஜர், அகத்தியர், சுரதேவர், நாயன்மார்கள், கல்யாணசுந்தரர், உலகம்மை, முக்காள லிங்கர், ஆறுமுகம், சனிஸ்வரர், நவகிரகம், புனுகு சபாபதி உள்ளனர்.

வெளி பிரகாரத்தில், விநாயகர், அய்யனார் சன்னதிகள்.
பாண்டிய மன்னர் விக்கிரமசிங்கர் எழுப்பிய ஆலயம் என்பதால் இவ்வூருக்கு விக்கிரமசிங்கபுரம் என்றும் பெயர்.

தேவார வைப்புத் தலம். மற்றும் திருப்புகழ் தலம்.

கர்ப்பகிரக சுற்றுச் சுவர் மிக அழகிய அமைப்பில் தெய்வ சிற்பங்கள் ஏராளமாக உள்ளன.
ரிஷிகள், காளி, ஊர்த்துவ தாண்டவம், பிட்ஷாடனர், நிறுத்த கணபதி, திரிபுரசம்ஹாரம், திருமால், ஏகபாதமூர்த்தி, பிரம்மன், சுப்பிரமணியர், சங்குமாலையில் தேவி என பல நுணுக்கமான சிற்பங்கள் உள்ளன.

6 கால பூசை

ஆலய துண்களிலும் நிறைய சிற்பங்கள் உண்டு.

சூரியன் தலம்

ஆலயத்தில் எதிரில் தாமிரபரணி நதி தீர்த்தக்கட்டம் மிகவும் புனிதமான இடம்.

இங்கிருந்து மலைமேல் உள்ள அகத்தியர் அருவி முதலிய அருவிகளுக்குச் செல்ல வசதிகள் உண்டு.

உலகம்மன் சன்னதியில் மஞ்சள் இடித்து வழிபடும் முறை உண்டு.

பிரார்த்தனை ஸ்தலமாக உள்ளது.

தங்குவதற்கு தர்ம ஸ்தபனங்கள் தற்போது நிறைய.இடவசதி அமைத்துள்ளனர். தனியார் விடுதிகளும் உண்டு.
#பிரதோஷக்குழுயாத்ரா 

17.8.2025

#என்றும்_அன்புடன் 

#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 

#சுப்ராம்

திருக்குற்றாலம்பராசக்தி உடனுறை குற்றாலீஸ்வரர் ஆலயம் குற்றாலம் பிரதோஷக்குழு யாத்ரா 16.8.2025

#திருக்குற்றாலம்
பராசக்தி உடனுறை குற்றாலீஸ்வரர் ஆலயம்
#குற்றாலம்
சுமார் 1000-2000 வருடங்களுக்கு மேல் மிக பழமை வாய்ந்த,பாண்டியநாட்டு தலங்களில் 13 வது தலமாக விளங்கும்

திருக்கயிலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடக்கிறது. இதை தரிசிக்க பிரம்மா, விஷ்ணு, முப்பத்துமுக்கோடி தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோர் வந்துள்ளனர். இதனால் பூமியின் வடதிசை தாழ்ந்து, தென் திசை உயர ஆரம்பிக்கிறது. இதை சமப்படுத்த சிவன் அகத்தியரை அழைத்து,""நீ ஒருவன் மட்டும் தென்திசை சென்றால் போதும், உலகம் சமநிலைக்கு வந்துவிடும். அத்துடன் இதுநாள் வரை குற்றாலத்தில் விஷ்ணுவாக அருள்பாலித்து வந்த என்னை, சிவலிங்கமாக்கி மகுடாகமப்படி பூஜை செய்தால் எங்களது திருமணத்தை இங்கிருந்தபடியே தரிசிக்கலாம்,'' எனக்கூறி அனுப்பிவைக்கிறார்.

சிவனின் கட்டளைப்படி அகத்தியர் குற்றாலம் வந்து, விஷ்ணு வடிவில் அருள்பாலிக்கும் சிவனை தரிசிக்க செல்கிறார். ஆனால் அங்கிருந்த துவாரபாலகர்கள் சைவ சமயத்தை சேர்ந்த அகத்தியரை கோயிலுக்குள் விடவில்லை. இதனால் வருத்தமடைந்த அவர் இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள இலஞ்சிக்குமாரர் கோயிலுக்குச் சென்றார். அங்கு வெண்மணலில் லிங்கம் பிடித்து, சிவனை வழிபட்டார்.

தான் குற்றாலத்தில், சிவதரிசனம் செய்ய அருளும்படி வேண்டினார். அவருக்கு காட்சி தந்த முருகன், ""அகத்தியரே! தாங்கள் சிவக்கோலத்தை கலைத்துவிட்டு, வைணவக்கோலத்துடன் கோயிலுக்குள் சென்று பெருமாளை சிவலிங்கமாக்கி வழிபாடு செய்யுங்கள்,''என யோசனை கூறுகிறார்.

முருகனின் யோசனைப்படி அகத்தியரும் நெற்றியில் திருமண் இட்டு, கழுத்தில் துளசி மாலை அணிந்து கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்கிறார். உடனே திருமாலின் கையில் சங்கு இருந்த இடத்தில் மான், துளசி இருந்த இடத்தில் சந்திரன், பொட்டு இருந்த இடத்தில் நெற்றிக்கண், ரத்தினம் இருந்த இடத்தில் பாம்பு என அனைத்தும் மாறியது.

அத்துடன் உயரமாயிருந்த திருமாலின் தலையில் கைவைத்து, திருமேனி குறுக குறுக என சிவனை வேண்டி பிரார்த்தனை செய்ய, நெடிய திருமால் குறுகிய சிவனாக மாறி விடுகிறார். அந்த இடத்திலேயே அகத்தியருக்கு திருமண காட்சி கிடைக்கிறது. இன்றும் கூட இத்தலத்தில் பகலில் தேவர்களும், இரவில் அகத்தியரும் பூஜை செய்வதாக கூறப்படுகிறது. அகத்தியர் தன் கைவிரல்களால் சிவலிங்கத்தில் தலையில் வைத்து அழுத்தியதால் இன்றும் கூட லிங்கத்தின் மேல்பகுதியில் விரல்களின் தடம் இருப்பதை காணலாம்.

இலஞ்சியில் அகத்தியர் பூஜித்த சிவன், "இருவாலுக நாயகர்' என்ற பெயரில் அருளுகிறார். குற்றாலநாதரை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள், முதலில் இந்த சிவனை தரிசித்துவிட்டு இங்கு வருவது விசேஷ பலனைத் தரும். இக்கோயில் திருமால் தலமாக இருந்தபோது, சங்கு வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. தற்போதும் இக்கோயில் சங்கின் வடிவில் இருப்பதைக் காணலாம். திருக்குற்றால மலையிலுள்ள செண்பகாதேவி, கோயிலுக்குச் செல்லும் வழியில், அருவியின் மேற்பரப்பில் இருந்து இந்த வடிவத்தை பார்க்கலாம்.

மகாலட்சுமியின் அம்சமான சங்கு, ஆற்றலின் வடிவமாகும். இதன் ஒலி, சக்தியைத் தருவதாகும். எனவேதான், சிவபூஜையில் சங்கு ஒலிக்கும் வழக்கம் உண்டு. இதன் அடிப்படையிலும், இக்கோயில் சங்கின் அமைப்பில் அமைந்திருப்பதாகச் சொல்வர். இங்கு 8 கால பூஜையிலும், சிவன் சன்னதியில் சங்கு ஊதுகின்றதலமாக திகழும்

திருஞானசம்பந்தர், பட்டினத்தார், அருணகிரிநாதர் மற்றும் மாணிக்கவாசகரால் பதிகம் பாடப் பெற்ற தலமாகவும் விளங்கும்

... இணையத்திலிருந்து 🙏

#திருக்குற்றாலம்

மீள் தரிசனம் 16.8.25

குற்றாலநாதர், திரிகூடநாதர் - சுயம்பு லிங்கம்
கடல் மட்டத்திலிருந்து 5000 அடி உயரம்.

கிழக்குப் பார்த்த ஆலயம், சங்கு அமைப்பில் உள்ளது. 

அம்பாள் தனி சன்னதி
உள்பிரகாரத்தில் - வல்லப கனபதி, முருகர், தட்சிணாமூர்த்தி, சப்த கன்னியர், பஞ்சபூத லிங்கங்கள், அகத்தியர், ஆனந்தக் கூத்தர், 63 நாயன்மார்கள் முதலிய சன்னதி.

முழுவதும் கற்றளி . ஆலயத்தின் உள்பிரகாரத்தில் குறிப்பிட்ட இடத்திலிருந்து , விநாயகர், லிங்கம், , கோபுரம், மலை, அருவி ஆகிய பஞ்ச தரிசனம் செய்யலாம். 

தனி ஆலயமாக சித்திரசபை 1 கி.மீ. தூரத்தில் உள்ளது.
திருமுறை தலம் 13வது பாண்டி தலம்
சம்பந்தர் 2 பதிகம், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் பாடியது
கபிலர், பட்டினத்தார். திருப்புகழ் பாடல் பெருமையுடையது.
திரிகூடராசப்பகவி பாடியது.

86 கல்வெட்டுக்கள் உண்டு

மிகப் பழமையான ஆலயம்.

அர்த்தஜாமம் பள்ளியரை பூசை இரவு 8.00 மணி அளவில் நடைபெறுகிறது. (16.8.25 அன்று தரிசனம் கிடைக்கப்பெற்றது)

#பிரதோஷக்குழுயாத்ரா 

#சுப்ராம்

#என்றும்_அன்புடன் 

#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

தென்காசிதென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம் - பிரதோஷக்குழு யாத்ரா 16.8.25

#தென்காசி
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம்

மீள் தரிசனம் 16.8.2025

கிழக்குப் பார்த்த ஆலயம்.

மிகப்பெரிய ராஜகோபுரம்178 அடி 9 நிலை கொண்டது.

 உள் நுழைவில் காற்று வீசும் முறை மாற்றம் வியக்கதக்கது.

ஶ்ரீகாசிவிஸ்வநாதர், - சுயம்புலிங்கம்.
 ஸ்ரீ உலகம்மை

தல விருட்சம் - சென்பகம்

சுவாமி, அம்பாள், பாலகுமரன் நடுவில் தனித் தனி ஆலய சன்னதிகள் அனைத்தும் கிழக்கு நோக்கியது. சோமஸ்கந்தர் அமைப்பில் உள்ள ஆலயம்.

மிகப்பெரிய ஆலயம். முழுவதும் கற்றளி

உள்பிரகாரத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், சகஸ்ரலிங்கம், பைரவர், சூரியன், 4வர், 64 நாயன்மார்கள், சுரதேவர், விநாயகர், ஆறுமுகர், நடராஜர், முதலிய சன்னதிகள் உள்ளன.

வடக்கு பிரகாரத்தில் சகஸ்ரலிங்கம் கிழக்குப் பார்த்த தனி ஆலயம். 

பைரவர் தனி சன்னதி தெற்கு பார்த்தது.

உலகப்புகழ் பெற்ற சிற்பங்கள் அமைந்துள்ளது.
அகோவீரபத்திரர், அக்னி வீரபத்திரர், மன்மதன், காளிதேவி, சகாதேவன், துவாரபாலகர்கள், கர்ணன், மகாதாண்டவர், ரதிதேவி, மதனகோபாலன், தமிழனங்கு, முதலிய அழகிய சிற்பங்கள் உள்ளன.  

கருவறையில் உள்ள காசி விஸ்வநாதர் நீண்ட தூரத்திலிருந்து தரிசிக்கும் அமைப்பு.

6 கால பூசை. ஆனி அனுஷம் பிரும்மோட்சவம்.
ஐப்பசி உத்திரம் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

அவசியம் தரிசிக்க வேண்டிய சிறப்பு வாய்ந்த ஆலயம்.

#பிரதோஷக்குழுயாத்ரா 

16.8.2025

#என்றும்_அன்புடன் 

#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

சுசீந்தரம் -பிரதோஷக்குழு யாத்ரா 16.8.2025

#சுசீந்தரம் 
சுசீந்தரம் 
16.8.25 மீள் தரிசனம்.

தாணுமாலையன் - அறம் வளர்த்த நாயகி ஆலயம்.

கிழக்குப் பார்த்த 7 நிலை ராஜ கோபுரம்.
134 அடி

கொடி மரம் தெற்கு பகுதியில் மும்மூர்த்தி சன்னதி .
தாணு, மால், அயன் மூவரும் லிங்கவடிவில் கொன்றை மரத்தடியில் காட்சி தருகிறார்.

சிவன், பெருமாள், அம்மன் தனித்தனி சன்னதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

ஆலய தென் பிரகாரத்தில் சிறிய பாறை மேல் அமைந்துள்ள கைலாசநாதர் தனி சன்னதி அமைப்புடன்.

ஆலய வடமேற்கு மூலையில் ராமர், சீதா சன்னதி.

வடகிழக்கு மூலையில் மிக உயர்ந்த 18 அடி உயரத்துடன் மேற்கு நோக்கி நின்று காட்சி தரும் ஸ்ரீ ஆஞ்சனேயர் மிகவும் விஷேம்.

உள் பிரகாரத்தில் பரசிராம விநாயகர், முருகன், கைலாசநாதர், பள்ளி கொண்ட பெருமாள், பஞ்சபாண்டவர்கள், நீலகண்ட விநாயகர், இந்திர காந்த விநாயகர், காலபைரவர் தனி சன்னதிகள்.

மாக்காளை எனப்படும் 12 அடி உயர நந்தி சிறப்பு.
அலங்கார மண்டபத்தில், சங்கீத தூன்கள் 

மார்கழி, சித்திரை விழா சிறப்பு.

#பிரதோஷக்குழுயாத்ரா 
16.8.2025 மீள் தரிசனம்

# சுப்ராம்

#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 

#என்றும்_அன்புடன் 

#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

Sunday, February 16, 2025

KERALAYATRA2024பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள்பதிவு - 15.#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️11.08.2024 /குலசேகரபுரம்.18திருகுலசேகரபுரம் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில்,

#KERALAYATRA2024
பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள்
பதிவு - 15.
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
11.08.2024 /
குலசேகரபுரம்.
18
திருகுலசேகரபுரம் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில், 

கொடுங்கல்லூர் பகவதி கோயிலுக்கு தெற்கே 5 கிமீ தொலைவில் அமைந்துள்ள இது குலசேகரபுரம் ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. 

ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இது, பழங்கால கேரளாவின் முதல் வைஷ்ணவ கோவிலாக முக்கியத்துவம் பெறுகிறது. 

பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார்களால் கி.பி 800 இல் கட்டப்பட்ட இந்த கோயில், குலசேகர ஆழ்வாரால் இயற்றப்பட்ட புகழ்பெற்ற முகுந்தமாலைக்காக புகழ்பெற்றது, குலசேகரபுரத்தில் வழிபடப்படும் ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. 

இப்பகுதியில் விஷ்ணு கோவில் இல்லாததால், குலசேகர ஆழ்வார் அதைக் கட்ட முன்முயற்சி எடுத்தார். 

அவர் ஸ்ரீ கிருஷ்ணரின் மூர்த்தியை செதுக்க ஒரு புகழ்பெற்ற சிற்பியை நியமித்தார், பின்னர் அவர் நிறுவலை புகழ்பெற்ற தந்திரியான தாமரச்சேரி மைக்காட்டு நம்பூதிரியிடம் ஒப்படைத்தார். . 

நேரம்: காலை 5.00 முதல் 10.00 வரை & மாலை 5.30 முதல் இரவு 8.00 வரை.🛐

19
ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோவில்: 

குலசேகர ஆழ்வார் கோயில் அல்லது திருகுலசேகரபுரம் கோயில் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள திருவாஞ்சிக்குளத்துக்கு அருகில் கொடுங்கலூருக்கு தெற்கே அமைந்துள்ள 9ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் (800-825 CE) இந்துக் கோயிலாகும். 

இது விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது மற்றும் தனித்துவமான ஆழ்வார் பாரம்பரிய கோவில்களில் ஒன்றாகும். 

11 ஆம் நூற்றாண்டில் தளம் விரிவாக்கப்பட்டது. கோவிலின் 9 முதல் 11 ஆம் நூற்றாண்டு நினைவுச்சின்னங்கள் சேர வம்சத்தின் இந்து கட்டிடக்கலையின் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளாகும். 

நேரம்: காலை 5.00 முதல் 10.00 வரை & மாலை 5.00 முதல் இரவு 7.00 வரை.
 அருகிலுள்ள பேருந்து நிறுத்தம் கொட்டாபுரம்.🛐

20
உதயமங்கலம் சிவன் கோவில்: 

கொடுங்கல்லூர் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலும், உதயமங்கலம் சிவன் கோயிலும் இணைந்து அமைந்துள்ளது. பரிக்கிரமா சுவர்கள் பின்னர் சேர்க்கப்பட்டன.🛐

#பயணஅனுபவக்குறிப்புகள்

மூன்று ஆலயங்களும் அருகருகே உள்ளது.

நாங்கள் ஆழிக்கோடு பூசை பார்த்துவிட்டு Auto மூலம் இங்கே வந்தோம்.

மூன்று ஆலயங்களும் அடுத்தடுத்து உள்ளதால், நடந்து சென்றே தரிசித்தோம்.

நாங்கள் மாலை 7.30 மணி அளவில் சென்றதால், சீவேலி பூசை கிடைத்தது.

இதன் பிறகு திருவஞ்சைக்களம் ஆலயம் நடந்தே சென்றுவிட்டோம்.

இங்கு சென்று இரவு பூசை பார்த்துவிட்டு, இரவு உணவு முடித்துக் கொண்டு கொடுங்களுர் சென்று தங்கினோம்.
🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐
நன்றி🙏🏻
பயணங்கள் தொடரும்....
11.8.2024
நன்றி🙏🏻
#KERALAYATRA2024
11.8.24🛐#சுப்ராம்ஆலயதரிசனம் 
#KERALAYATRA2024
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐

Wednesday, February 12, 2025

கர்னாடகா2024 #karnataka2024 #பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️பதிவு - 48#ஹம்பிவிஜயநகர பேரரசுசில குறிப்புகள்.

கர்னாடகா2024 #karnataka2024 
#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
பதிவு - 48
#ஹம்பி
விஜயநகர பேரரசு
சில குறிப்புகள்.
⚜️ இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும், இது ஹம்பி (நகரம்), பல்லாரி மாவட்டத்தில் தற்போது விஜயநகர மாவட்டம், கிழக்கு-மத்திய கர்நாடகா, இந்தியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. 

⚜️ஹம்பி - விஜயநகரப் பேரரசுக்கு முந்தையது; இது ராமாயணம் மற்றும் இந்து மதத்தின் புராணங்களில் பம்பா தேவி தீர்த்த க்ஷேத்திரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 ⚜️ஹம்பி ஒரு இந்துமத மையமாகத் தொடர்கிறது, விருபாக்ஷா கோயில், ஆதி சங்கராச்சாரியார்-இணைக்கப்பட்ட மடம் மற்றும் பழைய நகரத்தைச் சேர்ந்த பல்வேறு நினைவுச்சின்னங்கள் தொடர்புடையது.

⚜️ஹம்பி விஜயநகரப் பேரரசின் தலைநகராக 1336 முதல் 1565 வரை (விஜயநகரமாக) இருந்தது.

⚜️ஒரு கோட்டை நகரமாகவும் சிறந்து இருந்தது. 

⚜️பாரசீக மற்றும் ஐரோப்பிய பயணிகள், குறிப்பாக போர்த்துகீசியர்கள் விட்டுச் சென்ற ஹம்பி துங்கபத்ரா ஆற்றின் அருகே ஏராளமான கோயில்கள், வர்த்தக பண்ணைகள் மற்றும் வர்த்தக சந்தைகளைக் கொண்ட ஒரு செழிப்பான, பணக்கார மற்றும் பிரமாண்டமான நகரமாக இருந்தது என்று கூறுகின்றன.

 ⚜️கிபி 1500 வாக்கில், ஹம்பி விஜயநகரம் பெய்ஜிங்கிற்குப் பிறகு உலகின் இரண்டாவது பெரிய நகரமாக இருந்தது.
 மேலும் அந்த நேரத்தில் இந்தியாவின் பணக்கார நகரமாக இருந்தது.

⚜️பெர்சியா மற்றும் போர்ச்சுகலில் இருந்து வணிகர்களை ஈர்த்தது. 

⚜️விஜயநகரப் பேரரசு முஸ்லிம் சுல்தான்களின் கூட்டணியால் தோற்கடிக்கப்பட்டது; அதன் தலைநகரம் ஹம்பி 1565 இல் சுல்தானியப் படைகளால் கைப்பற்றப்பட்டு, சூறையாடப்பட்டு, அழிக்கப்பட்டது, அதன் பிறகு ஹம்பி இடிபாடுகளில் இருந்தது. 

⚜️ஹம்பியின் சிறிய நவீன நகரமான ஹம்பிக்கு அருகில் 13 கிலோமீட்டர்கள் (8.1 மைல்) தொலைவில் அமைந்துள்ள ஹம்பியின் இடிபாடுகள் 4,100 ஹெக்டேர் (16 சதுர மைல்) பரப்பளவில் பரவியுள்ளன.

⚜️ மேலும் இது யுனெஸ்கோவால் "கடுமையான, பிரமாண்டமான தளம்" என்று விவரிக்கப்பட்டுள்ளது.

 ⚜️தென்னிந்தியாவின் கடைசி பெரிய இந்து இராச்சியத்தின் எஞ்சியிருக்கும் 1,600 க்கும் மேற்பட்ட எச்சங்கள் இதில் அடங்கும்.

⚜️ "கோட்டைகள், ஆற்றங்கரை அம்சங்கள், அரச மற்றும் புனித வளாகங்கள், கோவில்கள், தூண் மண்டபங்கள், மண்டபங்கள், நினைவு கட்டமைப்புகள், நீர் கட்டமைப்புகள் மற்றும் பிற".

⚜️இந்த பெயர் துங்கபத்ரா நதியின் பழைய பெயரான பம்பா என்பதிலிருந்து பெறப்பட்டது, எனவே ஹம்பி என்ற பெயர் ஹம்பே என்ற கன்னட பெயரின் ஆங்கில பதிப்பாகும். 

🔹வரலாறு

⚜️பாதாமி சாளுக்கியரின் கல்வெட்டுகளில் பாம்பாபுரா என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது 6 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டதாகும். 

⚜️10 ஆம் நூற்றாண்டில், இந்து மன்னர்கள் கல்யாண சாளுக்கியர்களின் ஆட்சியின் போது இந்து மத மற்றும் கல்வி நடவடிக்கைகளின் மையமாக மாறியது.

 ⚜️அதன் கல்வெட்டுகளில் மன்னர்கள் விருபாக்ஷா கோவிலுக்கு நில மானியங்களை வழங்கியதாகக் கூறுகிறது.

⚜️ 11 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரையிலான பல கல்வெட்டுகள் ஹம்பி தளத்தைப் பற்றியது, ஹம்பா-தேவிக்குக் கிடைத்த பரிசுகள் பற்றிய குறிப்பும் உள்ளது.

⚜️12 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில், தென்னிந்தியாவின் ⚜️ஹொய்சாளப் பேரரசின் இந்து மன்னர்கள் துர்கா, ஹம்பாதேவி மற்றும் சிவன் கோயில்களை கட்டியதாக கிபி 1,199 தேதியிட்ட கல்வெட்டு கூறுகிறது.

 ⚜️ஹம்பி இரண்டாவது அரச இல்லமாக மாறியது; ஹொய்சாள மன்னர்களில் ஒருவர் ஹம்பேயா-ஒடேயா அல்லது "ஹம்பியின் ஆண்டவர்" என்று அழைக்கப்பட்டார். 
பர்டன் ஸ்டெய்னின் கூற்றுப்படி, ஹொய்சலா கால கல்வெட்டுகள் ஹம்பியை அங்குள்ள பழைய விருபாக்ஷா (சிவன்) கோயிலின் நினைவாக விருபாக்ஷபட்டனா, விஜயா விருபாக்ஷபுரா போன்ற மாற்றுப் பெயர்களால் அழைக்கின்றன.

⚜️14 ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்குப் பிறகு :
ஹொய்சாளப் பேரரசு ->
கம்பீலீ இராஜ்ஜியம் ->
விஜயநகரப் பேரரசு 

ஹொய்சாளப் பேரரசு :
💠அலாவுதீன் கில்ஜி மற்றும் முகமது பின் துக்ளக் ஆகியோரின் டெல்லி சுல்தானகத்தின் படைகள் தென்னிந்தியாவை ஆக்கிரமித்து கொள்ளையடித்தன. 

💠ஹொய்சாளப் பேரரசும் அதன் தலைநகரான துவாரசமுத்திரமும் 14ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அலாவுதீன் கில்ஜியின் படைகளால் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டது,

💠மேலும் 1326 CE இல் முகமது பின் துக்ளக்கின் இராணுவத்தால் அழிக்கப்பட்டது. 

கம்பீலீ இராஜ்ஜியம்

💠ஹொய்சாளப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து வட-மத்திய கர்நாடகாவில் உள்ள கம்பிலி இராச்சியம். இது ஹம்பியிலிருந்து 33 கிலோமீட்டர் (21 மைல்) தொலைவில் அதன் தலைநகரைக் கொண்ட குறுகிய கால இந்து இராச்சியம்.

💠முஹம்மது பின் துக்ளக்கின் முஸ்லீம் படைகளின் படையெடுப்பிற்குப் பிறகு கம்பிலி சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.

💠துக்ளக்கின் இராணுவத்தால் கம்பீலி வீரர்கள் தோல்வியை எதிர்கொண்டபோது கம்பலீயின் இந்து பெண்கள் ஜவுஹர் (சடங்கு வெகுஜன தற்கொலை) செய்து கொண்டனர். 

விஜயநகரப்பேரரசு 

🌼கிபி 1336 இல், கம்பிலீ சாம்ராஜ்யத்தின் இடிபாடுகளிலிருந்து விஜயநகரப் பேரரசு எழுந்தது. 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த தென்னிந்தியாவின் புகழ்பெற்ற இந்துப் பேரரசுகளில் ஒன்றாக இது வளர்ந்தது. 

🌼விஜயநகரப் பேரரசு ஹம்பியைச் சுற்றி அதன் தலைநகரைக் கட்டியது, அதை விஜயநகரம் என்று அழைத்தது. பேரரசின் நிறுவனர்களான ஹரிஹர I மற்றும் புக்கா I ஆகியோர் வட இந்தியாவில் இருந்து முஸ்லீம் படையெடுப்புகளைத் தடுக்க துங்கபத்ரா பகுதியில் நிறுத்தப்பட்ட ஹொய்சாளப் பேரரசின் இராணுவத்தின் தளபதிகள் என்று வரலாற்றாசிரியர்கள் முன்மொழிகின்றனர். 

🌼ஹொய்சாளப் பேரரசின் வீழ்ச்சியின் போது அதன் வடக்குப் பகுதிகளைக் கைப்பற்றிய தெலுங்கு மக்கள் என்று சிலர் கூறுகின்றனர். 

🌼வித்யாரண்ய கலஜனம், வித்யாரண்ய விருதாந்தா, ராஜகாலநிர்ணயம், பிதாமஹாசம்ஹிதா, சிவதத்வரத்னாகரா போன்ற நூல்களின்படி, அவர்கள் காகதீய ராஜ்யத்தின் மன்னரான பிரதாப் ருத்திரனின் கருவூல அதிகாரிகளாக இருந்தனர்.

🌼முஹம்மது பின் துக்ளக் பஹா-உத்-தின் குர்ஷாஸ்பை (பிரதாப் ருத்ராவின் அவையில் தஞ்சம் புகுந்தவர்) தேடி வந்தபோது, ​​பிரதாப் ருத்ரா வீழ்த்தப்பட்டு காகதீயா அழிக்கப்பட்டது. இந்த நேரத்தில் ஹரிஹர I மற்றும் புக்கா I ஆகிய இரு சகோதரர்களும் ஒரு சிறிய படையுடன் தற்போதைய ஹம்பி விஜயநகரத்திற்கு வந்தனர்.

🌼சிருங்கேரி சாரதா பீடத்தின் 12 வது ஜகத்குருவான வித்யாரண்யா அவர்களைத் தனது பாதுகாப்பில் எடுத்து அரியணையில் அமர்த்தினார், மேலும் நகரம் கி.பி. 1336 இல் வித்யாநகரம் என்று அழைக்கப்பட்டது. 

🌼அவர்கள் உள்கட்டமைப்பு மற்றும் கோயில்களை விரிவுபடுத்தினர்.

 🌼நிக்கோலஸ் கியர் மற்றும் பிற அறிஞர்களின் கூற்றுப்படி, 
கிபி 1500 இல் ஹம்பி-விஜயநகரம் பெய்ஜிங்கிற்குப் பிறகு உலகின் இரண்டாவது பெரிய இடைக்கால நகரமாக இருந்தது, மேலும் இந்தியாவின் பணக்கார நகரமாக இருக்கலாம். அதன் செல்வம் டெக்கான் பகுதி, பெர்சியா மற்றும் போர்த்துகீசிய காலனியான கோவாவில் இருந்து 16 ஆம் நூற்றாண்டின் வணிகர்களை ஈர்த்தது.

🌼விஜயநகர ஆட்சியாளர்கள் அறிவார்ந்த நோக்கங்கள் மற்றும் கலைகளில் வளர்ச்சியை வளர்த்து, வலுவான இராணுவத்தை பராமரித்து, அதன் வடக்கு மற்றும் கிழக்கில் சுல்தான்களுடன் பல போர்களை நடத்தினர். 

🌼அவர்கள் சாலைகள், நீர்நிலைகள், விவசாயம், மத கட்டிடங்கள் மற்றும் பொது உள்கட்டமைப்பு ஆகியவற்றில் முதலீடு செய்தனர். இதில், "கோட்டைகள், ஆற்றங்கரை அம்சங்கள், அரச மற்றும் புனித வளாகங்கள், கோவில்கள், கோவில்கள், தூண் மண்டபங்கள், மண்டபங்கள் (மக்கள் அமர்வதற்கான அரங்குகள்), நினைவுக் கட்டமைப்புகள், நுழைவாயில்கள், சோதனைச் சாவடிகள், தொழுவங்கள், நீர் கட்டமைப்புகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியதாக யுனெஸ்கோ கூறுகிறது. 

🌼இந்த தளம் பல மதங்கள் மற்றும் பல இனங்கள்; அதில் இந்து மற்றும் ஜெயின் நினைவுச்சின்னங்கள் அடுத்தடுத்து இருந்தன. இந்தக் கட்டிடங்கள் பெரும்பாலும் தென்னிந்திய இந்துக் கலைகள் மற்றும் கட்டிடக்கலை ஐஹோல்-பட்டடகல் பாணியில் இருந்து வந்தன, ஆனால் ஹம்பி கட்டுபவர்கள் தாமரை மஹால், பொது குளியல் மற்றும் யானை தொழுவத்தில் இந்திய கட்டிடக்கலை கூறுகளையும் பயன்படுத்தினர். 

🌼போர்த்துகீசிய மற்றும் பாரசீக வணிகர்கள் ஹம்பிக்கு விட்டுச் சென்ற வரலாற்று நினைவுக் குறிப்புகளின்படி, நகரம் பெருநகர விகிதாச்சாரத்தில் இருந்தது; அவர்கள் அதை "மிக அழகான நகரங்களில் ஒன்று" என்று அழைத்தனர். 

🌼வளமான மற்றும் உள்கட்டமைப்பில் இருந்தபோது, ​​முஸ்லீம் சுல்தான்களுக்கும் விஜயநகரப் பேரரசுக்கும் இடையே முஸ்லிம்-இந்து போர்கள் தொடர்ந்தன. 1565 இல், தாலிகோட்டா போரில், முஸ்லீம் சுல்தான்களின் கூட்டணி விஜயநகரப் பேரரசுடன் போரில் இறங்கியது. 

🌼சனவரி, 1565ல் தக்காணச் சுல்தான்கள் ஒன்றிணைந்து, தலிகோட்டா சண்டையில், அலிய ராம ராயனின் விசயநகரப் பேரரசின் படைகளை தோற்கடித்தனர்.

🌼இப்போரில் விசயநகரப் பேரரசின் படையில் இருந்த இரு முசுலிம் படைத்தலைவர்கள் தங்கள் படையணிகளுடன் தக்காணச் சுல்தான்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால், போரில் விசயநகரப் பேரரசு தோற்றது என வரலாற்று அறிஞர்களான எர்மன குல்கே மற்றும் டயட்மர் ரோதர்மண்ட் கூறுகிறார்கள். போரில் கைதியாக பிடிபட்ட இடத்திலேயே, சுல்தான்கள் அலிய ராம ராயனின் தலையை கொய்தனர். மேலும் சுல்தான்கள் அம்பி எனும் விசயநகரத்தின் கோயில்களையும், கோட்டைகளையும் சிதைத்து அழித்தனர்

🌼அதைத் தொடர்ந்து ஹம்பி மற்றும் பெருநகர விஜயநகரத்தின் உள்கட்டமைப்புத் துறையையும் பெருமளவில் அழித்தார்கள். 

✨ முகலாய சுல்த்தான் போருக்குப் பிறகு ஆறு மாதங்களுக்கு நகரம் சூறையாடப்பட்டது, மற்றும் எரிக்கப்பட்டது, பின்னர் இடிபாடுகளாக கைவிடப்பட்டது, அவை இப்போது ஹம்பியில் உள்ள நினைவுச்சின்னங்களின் குழு என்று அழைக்கப்படுகின்றன.

🌼ஹம்பி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதி உள்ளூர் தலைவர்கள், ஹைதராபாத் முஸ்லீம் நிஜாம்கள், மராட்டிய இந்து மன்னர்கள் மற்றும் ஹைதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியோரால் 18 ஆம் நூற்றாண்டு வரை ஒரு போட்டி மற்றும் சண்டையிடப்பட்ட பிரதேசமாக இருந்தது. 

🌼1799 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் படைகளும் வாடியார் வம்சமும் இணைந்தபோது திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். 

🌼பின்னர் இப்பகுதி பிரிட்டிஷ் செல்வாக்கின் கீழ் வந்தது. 
ஹம்பியின் இடிபாடுகள் 1800 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் சர்வேயர் ஜெனரலான ஸ்காட்டிஷ் கர்னல் கொலின் மெக்கன்சியால் ஆய்வு செய்யப்பட்டது. ஹம்பி தளம் கைவிடப்பட்டு வனவிலங்குகள் மட்டுமே வாழ்கின்றன என்று மெக்கன்சி எழுதினார்.

🌼 மெக்கன்சியைப் பின்தொடர்ந்த வரலாற்றாசிரியர்களின் 19 ஆம் நூற்றாண்டின் ஊகக் கட்டுரைகள், ஹம்பி நினைவுச்சின்னங்களுக்கு சேதம் விளைவித்ததற்கு 18 ஆம் நூற்றாண்டின் ஹைதர் அலி மற்றும் மராட்டியர்களின் படைகளைக் குற்றம் சாட்டின.

✨19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஹம்பி தளம் புறக்கணிக்கப்பட்டது, 1856 ஆம் ஆண்டில் அலெக்சாண்டர் கிரீன்லா அந்த இடத்தை பார்வையிட்டு புகைப்படம் எடுத்தார். அவர் 1856 இல் நின்ற கோயில்கள் மற்றும் அரசியல் கட்டமைப்புகளின் 60 காலோடைப் புகைப்படங்களைக் கொண்ட ஒரு காப்பகத்தை உருவாக்கினார். இந்த புகைப்படங்கள் ஐக்கிய இராச்சியத்தில் ஒரு தனியார் சேகரிப்பில் வைக்கப்பட்டிருந்தன, அவை 1980 வரை வெளியிடப்படவில்லை. அவை 19 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மிகவும் மதிப்புமிக்க ஆதாரமாகும் 

 ஹம்பி நினைவுச்சின்னங்கள். 

✨இந்த தளத்தில் உள்ள நினைவுச்சின்னங்கள் இன்று தோன்றும் மணற்கல் நிறத்தை விட வண்ணங்களைக் கொண்டிருந்தன. 

✨1880 களின் முற்பகுதியில் வெளியிடப்பட்ட தேவராய II (1424-1446) நீதிமன்றத்தில் பாரசீக தூதரான அப்துல் ரசாக் எழுதிய நினைவுக் குறிப்புகளின் மொழிபெயர்ப்பு கைவிடப்பட்ட தளத்தின் சில நினைவுச்சின்னங்களை விவரிக்கிறது. இந்த மொழிபெயர்ப்பு, முதன்முறையாக, சில ஹம்பி நினைவுச்சின்னங்களை விவரிக்க "ஜெனானா" போன்ற அரபு சொற்களைப் பயன்படுத்துகிறது.
 
✨இவற்றில் சில சொற்கள் பின்னர் பெயர்களாக மாறியது. அலெக்சாண்டர் ரியா, பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள மெட்ராஸ் பிரசிடென்சியின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் அதிகாரி, 1885 ஆம் ஆண்டில் தனது ஆய்வை வெளியிட்டார். 

✨1900 ஆம் ஆண்டில் ராபர்ட் செவெல் தனது அறிவார்ந்த கட்டுரையான A Forgoten Empire ஐ வெளியிட்டார், இது ஹம்பியை அறிஞர்களின் பரவலான கவனத்திற்கு கொண்டு வந்தது. 

✨வளர்ந்து வரும் ஆர்வம், ரியா மற்றும் அவரது வாரிசான லாங்ஹர்ஸ்ட் ஆகியோரை ஹம்பி குழுமத்தின் நினைவுச்சின்னங்களை அழிக்கவும் சரிசெய்யவும் வழிவகுத்தது. 

🌟 #ஹம்பியில் உள்ள வரலாற்று நினைவுச்சின்னங்களின் தொகுப்பிடங்கள் (Group of Monuments at #Hampi )

✨ ஹம்பி : வரலாற்று ரீதியாகவும் தொல்லியல் ரீதியாகவும் விஜயநகர காலத்திலும் அதற்கு முந்தைய காலத்திலும் இத்தலம் குறிப்பிடத்தக்கது. 

✨இந்திய தொல்லியல் துறையினர் தொடர்ந்து அப்பகுதியில் அகழாய்வு நடத்தி வருகின்றனர்.

✨ஹம்பி கிரானைட் பாறைகளால் உருவாக்கப்பட்ட மலைப்பாங்கான நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தை உள்ளடக்கிய ஹம்பி நினைவுச்சின்னங்கள் விஜயநகர இடிபாடுகளின் துணைக்குழு ஆகும். ஏறக்குறைய அனைத்து நினைவுச்சின்னங்களும் 1336 மற்றும் 1570 CE இடையே விஜயநகர ஆட்சியின் போது கட்டப்பட்டன. 

✨இந்த தளம் சுமார் 1,600 நினைவுச்சின்னங்களைக் கொண்டுள்ளது மற்றும் 41.5 சதுர கிலோமீட்டர் (16.0 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. 

✨ஹம்பி தளம் மூன்று பரந்த மண்டலங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது; முதலாவது "புனித மையம்" என்று பர்டன் ஸ்டெய்ன் போன்ற அறிஞர்களால் பெயரிடப்பட்டது;  

 ✨இரண்டாவது "நகர்ப்புற மையம்" அல்லது "அரச மையம்" என்று குறிப்பிடப்படுகிறது;

 ✨மற்றும் மூன்றாவது - பொதுமைய இடங்கள் விஜயநகரத்தின் மற்ற பகுதிகளை உருவாக்குகிறது. 

🔷புனித மையம், ஆற்றங்கரையில், புனித யாத்திரை வரலாற்றைக் கொண்ட பழமையான கோயில்கள் மற்றும் விஜயநகரப் பேரரசுக்கு முந்தைய நினைவுச்சின்னங்களைக் கொண்டுள்ளது. 
🔷நகர்ப்புற மையமும் அரச மையமும் புனித மையத்தில் உள்ளவற்றைத் தாண்டி அறுபதுக்கும் மேற்பட்ட பாழடைந்த கோயில்களைக் கொண்டுள்ளன, ஆனால் நகர்ப்புற மையத்தில் உள்ள கோயில்கள் அனைத்தும் விஜயநகரப் பேரரசின் காலத்தைச் சேர்ந்தவை. நகர்ப்புற மையத்தில் சாலைகள், நீர்வழிப்பாதை, தண்ணீர் தொட்டிகள், மண்டபம், நுழைவாயில்கள் மற்றும் சந்தைகள், மடங்கள் போன்ற பொது பயன்பாட்டு உள்கட்டமைப்புகளும் அடங்கும். 

🔷இந்த வேறுபாட்டிற்கு சுமார் எழுபத்தேழு கல்வெட்டுகள் உதவியுள்ளன. 

🔷பெரும்பாலான நினைவுச் சின்னங்கள் இந்துக்கள்; கோயில்கள் மற்றும் தொட்டிகள் மற்றும் சந்தைகள் போன்ற பொது உள்கட்டமைப்புகளில் இந்து தெய்வங்களை சித்தரிக்கும் நிவாரணங்கள் மற்றும் கலைப்படைப்புகள் மற்றும் இந்து நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட கருப்பொருள்கள் ஆகியவை அடங்கும்.

 🔷ஆறு ஜெயின் கோவில்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் மற்றும் ஒரு முஸ்லீம் மசூதி மற்றும் கல்லறை உள்ளது. 

🔷ஏராளமான உள்ளூர் கல்லில் இருந்து கட்டிடக்கலை கட்டப்பட்டுள்ளது; ஆதிக்கம் செலுத்தும் பாணி திராவிடம், டெக்கான் பகுதியில் 1 ஆம் மில்லினியத்தின் இரண்டாம் பாதியில் இந்து கலைகள் மற்றும் கட்டிடக்கலை வளர்ச்சியில் வேர்கள் உள்ளன. 

🔷இது 11 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தெற்கில் ஹொய்சாள பேரரசின் ஆட்சியின் போது வளர்ந்த கலைகளின் கூறுகளை உள்ளடக்கியது, அதாவது ராமச்சந்திரா கோயிலின் தூண்கள் மற்றும் சில விருபாக்ஷா கோயில் வளாகத்தின் கூரைகள் போன்றவை.
ராணி குளியல் மற்றும் யானை தொழுவங்கள் போன்ற சில நினைவுச்சின்னங்களில் இந்தோ-இஸ்லாமிய பாணியை கட்டிடக் கலைஞர்கள் ஏற்றுக்கொண்டனர், "அதிக வளர்ச்சியடைந்த பல மத மற்றும் பல இன சமூகத்தை" பிரதிபலிக்கிறது. என்று யுனெஸ்கோ கூறுகிறது.

🔷இப்பேரரசு காலத்தில் தென்னிந்தியாவில் கன்னடம், தெலுங்கு தமிழ் மொழி இலக்கியம், இந்துக் கோயில் கட்டிடக் கலை, இந்து சமயம், நீர் பாசன முறை, தொழில், வணிகம் சிறப்பு விளங்கியது.

பகிர்வு: குறிப்புகள் வலைதளத்திலிருந்து பெறப்பட்டது.
நன்றி🙏🏻
நன்றி🙏🏼 #சுப்ராம்
#சுப்ராம்ஆலயதரிசனம்.
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கர்னாடகா2024 -7.10.2024 - 17.11.2024
🙏🏻🛐🔱🛕🙏🏻🔱🛐🙏🏻🛕🙏🏻🔱🛐🛕🙏🏻🛐🔱🛐

கர்னாடகா2024 #karnataka2024 #பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️நாள் - 9 - 15.11.24 - FRIDAYபதிவு - 46 - 10🌟 #ஹம்பியில் உள்ள வரலாற்று நினைவுச்சின்னங்களின் தொகுப்பிடங்கள் (Group of Monuments at #Hampi )

#கர்னாடகா2024 #karnataka2024 
#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
நாள் - 9 - 15.11.24 - FRIDAY
பதிவு - 46 - 10

🌟 #ஹம்பியில் உள்ள வரலாற்று நினைவுச்சின்னங்களின் தொகுப்பிடங்கள் (Group of Monuments at #Hampi )

✨ ஹம்பி : வரலாற்று ரீதியாகவும் தொல்லியல் ரீதியாகவும் விஜயநகர காலத்திலும் அதற்கு முந்தைய காலத்திலும் இத்தலம் குறிப்பிடத்தக்கது. 

✨இந்திய தொல்லியல் துறையினர் தொடர்ந்து அப்பகுதியில் அகழாய்வு நடத்தி வருகின்றனர்.

46 - 10
பிற இந்து கோவில்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் 

✴️துங்கபத்ரா ஆற்றின் தெற்குக் கரையில் உள்ள புனித மையத்தில் மற்றும் விட்டலா கோயில் வளாகத்திற்கு அருகில், நுழைவாயில்கள் மற்றும் ஒரு நினைவுச்சின்னம் இப்போது கிங்ஸ் பேலன்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. 

✴️பிந்தையது தென்னிந்திய இந்து கோவில்களின் நுழைவாயிலில் 
துலா-புருஷ்-தானம் அல்லது துலாபாரம் விழாக்களில் காணப்படுவதைப் போன்றது, இதில் ஒரு நபர் தனது உடல் எடைக்கு சமமான அல்லது அதிக எடை கொண்ட பரிசை வழங்குகிறார். 

✴️விஜயநகர ஆட்சியாளர்கள் தங்கள் வம்சம் போர் இடிபாடுகளில் இருந்து நிறுவப்பட்ட பின்னர் மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் மற்றும் படையெடுப்புகளில் இருந்து பாதுகாப்பிற்காக கோட்டைகள், மற்றும் கண்காணிப்பு கோபுரங்களை கட்டினார்கள். ஹம்பியின் பொதுவான நுழைவாயில்கள் மற்றும் காவற்கோபுரங்கள் இந்து பாணியில் கட்டப்பட்ட வளைவுகளாகும். 

✴️அத்தகைய ஒரு நுழைவாயில் கணகிட்டி ஜெயின் கோவிலுக்கு தென்கிழக்கே அமைந்துள்ளது;
இது ஒரு மத்திய பார்பிகன் சுவரை இணைத்து, ஆச்சரியத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு அந்நியரை சிக்க வைத்து குழப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் அடிக்கடி வருபவர்கள் நுழைவாயிலுக்கு முன் திசையின் மூன்று மாற்றங்களை அறிந்திருந்தனர். இந்த செயல்பாட்டு இந்து நினைவுச்சின்னங்கள், மகாபாரதத்தின் பாண்டவர் புகழ் பீமன் போன்ற ஒரு பழம்பெரும் இந்து பாத்திரத்தால் அடையாளம் காணப்படுகின்றன. 

✴️தலாரிகாட் இந்து நினைவுச்சின்னம் மற்றும் விட்டலா கோவிலுக்கு வடகிழக்கு சாலையில் இதுபோன்ற மற்றொரு வாயில் காணப்படுகிறது. 

✴️ஹம்பி தளத்தில் 1,600 க்கும் மேற்பட்ட எஞ்சியிருக்கும் இடிபாடுகள் உள்ளன-பெரும்பாலும் இந்துக்கள்-பரந்த பகுதியில் பரவியுள்ளது. 

❇️ சரஸ்வதி கோவில்: மற்ற குறிப்பிடத்தக்க நினைவுச்சின்னங்களில், அறிவு மற்றும் இசையின் இந்து தெய்வமான சரஸ்வதிக்கு எண்கோண குளியல் அருகே கோயில் உள்ளது; 

❇️அனந்தசயன விஷ்ணுவுக்கு புறநகரில் கோயில்; சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் உதான வீரபத்ரா கோவில்; 

❇️காளிக்கு ஒரு சன்னதி, துர்காவின் உக்கிரமான வடிவம் வழக்கத்திற்கு மாறாக அரிசி உருண்டை மற்றும் ஒரு கரண்டி (அன்னபூர்ணா) வைத்திருப்பதைக் காட்டுகிறது;

❇️அரச மையத்தில் ஒரு நிலத்தடி கோவில்; ஒரு சுக்ரீவ குகைக் கோயில்;
மாதங்கா மலை நினைவுச்சின்னங்கள்;

❇️ கர்நாடக சங்கீத மரபுக்குப் புகழ்பெற்ற அறிஞரான இசைக்கலைஞருக்கு அர்ப்பணிக்கப்பட்ட புரந்தரதாசர் கோயில்.

#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️

குறிப்பு: 1
🔸ஹம்பி -ஆனே குந்தி - கமலாப்பூர் - செல்பவர்கள் தங்கி இருந்து பார்க்க உதவலாம் என்பதால்; நாங்கள் செல்லாத சில இடங்களையும் இங்கு குறிப்பிட்டுள்ளேன். 

2. அடுத்த பதிவில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் வரலாற்றின் சில குறிப்புகள் வரும். கண்டிப்பாக
இந்தியர் அனைவரும் விஜய நகர சாம்ராஜ்யத்தின் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். பாரதத்தின் பெருமைகளும், அதன் பன்பாடு கலாச்சாரம் வீழ்ச்சி மற்றும் எழுச்சிகளுக்கு முன்னோர்கள் பாடுபட்ட விதம் தெரிந்து கொண்டால் நமது தேசிய ஒற்றுமைக்கு உத்வேகம் கொடுக்கும்.

3.கர்நாடகா - Hambi பயணம் இத்துடன் முடித்துக் கொண்டு Hosepet சென்று இரவு தங்கினோம்.

4.16.11.2024 காலை Hospet லிருந்து புறப்பட்டு பெங்களூர் வரும் வழியில் புவனகள்ளி என்ற ஊரில் உள்ள புதிய ஹனுமான் ஆலயம் தரிசித்தோம். அங்கேயே மதிய உணவு முடித்துக் கொண்டு. இரவு பெங்களூர் ரயில்நிலையம் வந்து சேர்ந்தோம். (அன்று அங்கு மத்திய அமைச்சர் புதிய மின் நடைபாதை துவக்கி வைத்திருந்த விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது)

நன்றி:
1. ஶ்ரீசுந்தராம்பாள்கைலாசநாதர் துணையருளால், இந்த பயணம் முழுமையாகவும் சிறப்பாகவும் அமைந்தது. முன்னோர்கள் ஆசியாலும், வினை பயனும் இணைந்து பயணம் மிக இனிதாகமுடிந்தது.

2. பயணம் மிக இனிதாக அமைய எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். குறிப்பாக திருவாளர்கள் அன்னாசாமி ஐயா, வெங்கட்டராமன் ஐயா, ஜானகிராமன் ஐயா, குப்புசாமி ஐயா, சேதுராமன் ஐயா மேலும் பயணம் வெற்றியாக அமைய துணையாகவும், மிகுந்த சகோதரத்துடன் பழகி உதவிய அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளும், வணக்கங்களும்.

3. இந்த பயணம் முழுமையாகவும், சிறப்பாகவும் துணை வந்து ஒவ்வொரு இடங்களின் சிறப்பை விளக்கி எங்களுக்கு உற்ற துணையாக இருந்து, உணவு, போக்குவரத்து, தங்குமிடம் அனைத்து வசதிகளையும் அருமையாக செய்த திரு ஜெயராமன் அய்யா, நிர்வாகி, விஜயலெட்சுமி டிராவல் மற்றும் அவர்கள் குழுவிற்கும் மிக மிக நன்றிகளும் வணக்கங்களும்.

நன்றி🙏🏻

⭐பயணங்கள் தொடரும்.....
நன்றி🙏🏼
15.11.2024 #சுப்ராம்
#சுப்ராம்ஆலயதரிசனம்.
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கர்னாடகா2024

கர்னாடகா2024 #karnataka2024 #பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️நாள் - 9 - 15.11.24 - FRIDAYபதிவு - 46 - 7, 8, 9🌟 #ஹம்பியில் உள்ள வரலாற்று நினைவுச்சின்னங்களின் தொகுப்பிடங்கள் (Group of Monuments at #Hampi )46- 7ஜெரானா வளாகம் / ராணி அரண்மனை வளாகம்

#கர்னாடகா2024 #karnataka2024 
#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
நாள் - 9 - 15.11.24 - FRIDAY
பதிவு - 46 - 7, 8, 9

🌟 #ஹம்பியில் உள்ள வரலாற்று நினைவுச்சின்னங்களின் தொகுப்பிடங்கள் (Group of Monuments at #Hampi )

46- 7
ஜெரானா வளாகம் / ராணி அரண்மனை வளாகம்

⛲என்பது உயரமான உறை சுவர்களைக் கொண்ட ஒரு கட்டமைப்பு வளாகம் மற்றும் சிறிய திறப்புகள் வழியாக அணுகப்படுகிறது. 

⛲கிழக்கு மற்றும் மேற்கு வாயில்களில் ஒவ்வொன்றும் வடக்கு சுவரில் மூன்று திறப்புகள் புனரமைக்கப்பட்டுள்ளன, தற்போது வடக்கு மற்றும் தெற்கில் ஒரு கதவு நுழைவாயிலாக செயல்படுகிறது, இது ஜெனானா (பெண்கள்) வளாகம் என்று பிரபலமாக அறியப்பட்டு வருகிறது.

⛲இந்த வளாகத்தில் கருவூலக் கட்டிடம் என அடையாளம் காணப்பட்ட கட்டமைப்புகள் உள்ளன.

 ஒரு அரண்மனையின் அடித்தளம், ஜல் மஹால், தண்ணீர் தொட்டி, லோட்டஸ் மஹால் மற்றும் மூன்று கண்காணிப்பு கோபுரங்கள். இந்த வளாகத்தில் உள்ள கட்டிடங்கள் பெரும்பாலும் இந்தோ-இஸ்லாமிய பாணியில் உள்ளன மற்றும் விஜயநகர மதச்சார்பற்ற கட்டிடக்கலையின் முன்மாதிரியான வெளிப்பாடாகும்.

46-8
வாட்ச் டவர்கள்

🕹️இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலை பாணியில் மூன்று கண்காணிப்பு கோபுரங்கள் ஜெனானா வளாகத்தில் காணப்படுகின்றன. அவை ஒழுங்கற்ற, இறுக்கமாகப் பொருத்தப்பட்ட தொகுதிகளால் கட்டப்பட்ட சுற்றுச் சுவர்களை ஒட்டிக் காணப்படுகின்றன, அவை சுவர்கள் உயரும் போது தடிமன் குறையும். வளாகத்தின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள எண்கோண கோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது மற்றும் ராயல் மையத்திற்கான அணுகுமுறைகளைக் கவனிக்கிறது. இரண்டாவது கோபுரம், சதுர வடிவில் வளாகத்தின் தீவிர வடமேற்கில் அமைந்துள்ளது. மற்றொரு சதுர கோபுரம், இப்போது இடிந்து கிடக்கிறது, வளாகத்தின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது.

46 - 9 யானையின் தொழுவங்கள்

💠இது விஜயநகரப் பேரரசின் மிகவும் சின்னமான கட்டமைப்புகள், அதன் கட்டிடக்கலை வல்லமையின் மகத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
இந்த ஈர்க்கக்கூடிய அமைப்பு அரச யானைகள் தங்குவதற்கு பயன்படுத்தப்பட்டது மற்றும் பேரரசின் இராணுவ மற்றும் சடங்கு நடவடிக்கைகளில் யானைகளின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. 

💠இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த அற்புதமான 15" ம் நூற்றாண்டு கட்டிடம். பட்டத்து யானைகளுக்கான நிலையானதாக கருதப்படுகிறது. இருப்பினும், இது ஒரு அரண்மனை செயலகம் என்றும் வாதிடப்படுகிறது.

💠இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலையின் கலவை, இஸ்லாமிய வடிவமைப்பு மற்றும் திராவிட கலைத்திறனை பிரதிபலிக்கும் சிக்கலான செதுக்கல்களால் தாக்கம் செலுத்தப்பட்ட தனித்துவமான குவிமாடங்கள்.

💠 இந்த நீண்ட செவ்வக அமைப்பு 85 x 10 மீ. இது மேற்கு நோக்கியிருக்கும் மற்றும் பதினொரு பெரிய குவிமாடம் கொண்ட அறைகளைக் கொண்டுள்ளது, அவை மூன்று பக்கங்களிலும் உள்ளடங்கிய இடங்களைக் கொண்டுள்ளன 

💠மேற்கில் ஒரு வளைவு நுழைவாயில், 8 வளைவு சிறிய திறப்புகளை கிழக்கு சுவரில் நான்கு அறைகள் இடையே இணைக்கும் வடக்கு மற்றும் தெற்கு சுவர்களில் காணப்படுகின்றன வளைவுகள் மேல் மூன்று சிறிய வளைவு இடங்கள் மற்றும் அறைகளின் மேல் குவிமாடங்களுடன் கூடிய சிறிய இடைவெளிகள் சமச்சீராக அமைக்கப்பட்ட மற்றும் பல்வேறு வகையான வட்ட, எண்கோண, விலா மற்றும் புல்லாங்குழல் போன்ற வடிவமைப்பு கொண்ட மத்திய அறைக்கு மேலே இரண்டு படிக்கட்டுகள் மூலம் அடையக்கூடிய ஒரு பாழடைந்த இரண்டு மாடி அமைப்பு உள்ளது. 

💠இது ஒரு காலத்தில் கட்டிடக்கலை மற்றும் கட்டிடத்தின் வடிவமைப்பின் ஒரு பகுதியாக இருந்தது.

💠கட்டிடத்தில் 11 குவிமாடம் அறைகள் உள்ளன, ஒவ்வொன்றும் யானைக்கு இடமளிக்கும் அளவுக்கு பெரியது, வளைந்த நுழைவாயில்கள் உள்ளன. 

💠இந்த அமைப்பு சுமார் 100 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் கல் மற்றும் சாந்துகளால் ஆனது.
யானைகளுக்கு போதுமான காற்றோட்டம் மற்றும் இடவசதியை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு அறையிலும் உயரமான உச்சவரம்பு உள்ளது.

மத்திய குவிமாடம்: 

💠மத்திய அறையானது ஒரு பெரிய மற்றும் மிகவும் அலங்கரிக்கப்பட்ட குவிமாடத்தைக் கொண்டுள்ளது, இது சடங்கு நோக்கங்களுக்காக அல்லது மிகவும் மதிப்புமிக்க பட்டத்து யானைகள் தங்கியிருப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

💠அறைகளின் பக்கவாட்டில் இணைக்கப்பட்ட சிறிய அறைகள் மஹவுட்கள் (யானை பராமரிப்பாளர்கள்) அல்லது காவலர்களால் பயன்படுத்தப்படலாம்.

நன்றி🙏🏻

⭐பயணங்கள் தொடரும்.....
நன்றி🙏🏼
15.11.2024 #சுப்ராம்
#சுப்ராம்ஆலயதரிசனம்.
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கர்னாடகா2024

கர்னாடகா2024 #karnataka2024 #பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️நாள் - 9 - 15.11.24 - FRIDAYபதிவு - 46 - 3,4,5,6.🌟 #ஹம்பியில் உள்ள வரலாற்று நினைவுச்சின்னங்களின் தொகுப்பிடங்கள் (Group of Monuments at #Hampi )46 - 3 ராயல் என்க்ளோசர்

#கர்னாடகா2024 #karnataka2024 
#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
நாள் - 9 - 15.11.24 - FRIDAY
பதிவு - 46 - 3,4,5,6.

🌟 #ஹம்பியில் உள்ள வரலாற்று நினைவுச்சின்னங்களின் தொகுப்பிடங்கள் (Group of Monuments at #Hampi )

46 - 3 ராயல் என்க்ளோசர் 

🌼பண்டைய நகரமான விஜயநகரத்தின் ஃப்ளோயல் மையத்தின் மையமாகும். இந்த மேடை மூன்று திறப்புகளுடன் கூடிய உயரமான சுவர்களால் பாதுகாக்கப்படுகிறது. 

🌼வடகிழக்கில் மகாநவமி திப்பாவை அணுகும் விதமாகவும், வடமேற்கில் கிங்ஸ் ஆடியன்ஸ் ஹாலை ஒட்டிய நுழைவாயிலாகவும் பயன்படும் படிகளின் விமானம் உள்ளது. இந்த நுழைவாயில் ஆறு நெடுவரிசைகள், கதவு ஜாம்ப்களின் துண்டுகள் மற்றும் வாசல் துண்டுகளால் வரையறுக்கப்படுகிறது. மேற்குப் பக்கத்தின் நடுவில் சிறிய வாசல் ஒன்றும் உள்ளது. சுற்றுச்சுவருக்கு வெளியே நேர்த்தியாக செதுக்கப்பட்ட ஒற்றைக்கல் கதவு மற்றும் மோட்டார் இயந்திரத்துடன் கூடிய இரண்டு கல் தூண்கள் உள்ளன.

🌼 ராயல் என்க்ளோஷரில் ஃபவுண்டேஷன் கோர்ஸ்கள், பேஸ்மென்ட் மோல்டிங்குகள் மற்றும் பல அடுக்கு பிளாஸ்டர் தரைகள் உள்ளன, இது பல்வேறு வகையான மற்றும் பரிமாணங்களின் கட்டமைப்புகளைக் குறிக்கிறது, இது பரந்த அளவிலான செயல்பாடுகளை வழங்குகிறது. தொட்டிகள், கிணறுகள், ஆழ்குழாய்கள் மற்றும் மதகுகள் உள்ளிட்ட சிக்கலான தொடர் நீர் அமைப்புகளுக்கும் இந்த அடைப்பு குறிப்பிடத்தக்கது. இந்த வளாகத்தின் குறிப்பிடத்தக்க கட்டமைப்புகள் மகாநவமி திப்பா, பார்வையாளர்கள் மண்டபம், நிலத்தடி அறை, பொது குளியல் நீர்த்தொட்டி (பெரிய தொட்டி) மற்றும் படிக்கட்டு தொட்டி. கட்டமைப்புகள் மறுகட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்பு பல தொடர்ச்சியான கட்டங்களுக்கு உட்பட்டுள்ளன.

🌼 விஜயநகரப் பேரரசின் வாழ்நாள் முழுவதும் இந்த மேடை தொடர்ந்து பயன்பாட்டில் இருந்ததாக நம்புவதற்கு இது வழிவகுக்கிறது.

46-4 கருப்பு கல் தொட்டி

💠இந்த சதுர வடிவிலான அழகிய கருங்கல்லாலான புஷ்கரணி ராயல் என்சியோசரில் அமைந்துள்ளது. மற்ற எல்லாவற்றிலும் இது ஒரு தனித்துவமான தொட்டியாகும். 
💠இதன் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பலகைகள் இந்தப் பகுதியிலோ அல்லது அதன் சுற்றுப்புறத்திலோ காணப்படவில்லை, எனவே இது வேறு இடத்திலிருந்து கொண்டு வரப்பட்டது என்ற முடிவுக்கு வரலாம். 
💠இந்த தொட்டியில் கமலாபூர் குளத்தில் இருந்து கல் மதகுகள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டது. இன்றும் கல் மதகு நல்ல நிலையில் உள்ளது. 

46 - 5 புஷ்கரணி
🔷புஷ்கரணி சதுர வடிவில் உள்ளது மற்றும் அதன் அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த அலங்கார பானைகள் இந்த நீர் மத சடங்குகளுக்கு பயன்படுத்தப்பட்டது என்று கூறுகிறது.

🔷இதன் கட்டுமானத்தில் பச்சை நிற சோப்பு கற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. புஷ்கரணியைச் சுற்றியுள்ள படிகள் சமச்சீராக அமைக்கப்பட்டுள்ளன.

🔷 கல்யாண சாளுக்கியர் மற்றும் ஹொய்சாளர் காலத்தில், சோப்புக் கல்லின் பயன்பாடு கட்டிடக்கலைக்கு இன்றியமையாததாக இருந்தது. 

🔷புஷ்கரணிக்குள் நுழைவதற்கு ஐந்து படிநிலைகள் கட்டப்பட்டன. ஹேல் கன்னடம் (பழைய கன்னடம்) வார்த்தைகள், ஒவ்வொரு படியிலும், அந்த படியின் தியா திசையை விவரிக்கிறது. 

🔷இந்த புஷ்கரணி 1988 ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையால் (ASI) அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது

46 - 6 ராணியின் குளியல் மண்டபம்
⛲இது இந்தோ-இஸ்லாமிய பாணியில் ஒரு கம்பீரமான சதுர அமைப்பு. குயின்ஸ் பாத் என்று பொதுவாக அடையாளம் காணப்பட்டாலும், அது எந்தெந்த சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்பட்டது அல்லது யாரால் பயன்படுத்தப்பட்டது என்பது தெரியவில்லை. இந்த அமைப்பு 15 மீ சதுர மற்றும் 1.8 மீ ஆழத்தில் உள்ள குளியல் மற்றும் அதைச் சுற்றியுள்ள தாழ்வாரங்களைக் கொண்டுள்ளது. 

⛲கிழக்கில் உள்ள ஒரு சரிவு, அமைப்பைச் சுற்றி ஓடும் ஒரு நீர் கால்வாயில் இருந்து குளியல் தண்ணீரை வழங்குகிறது. ஒரு படிகள் வடக்கில் குளிப்பதற்கு வழிவகுக்கிறது. தாழ்வாரங்களில் வளைவுகளால் வரையறுக்கப்பட்ட 24 வால்ட் விரிகுடாக்கள் உள்ளன. இது தெற்கில் ஒரு சிறிய நுழைவாயிலையும் மற்ற மூன்று பக்கங்களிலும் பெரிய வளைவு திறப்புகளையும் கொண்டுள்ளது. தாழ்வாரத்தின் தென்கிழக்கு பக்கத்தில் ஒரு படிக்கட்டு கட்டமைப்பின் கூரைக்கு வழிவகுக்கிறது. 

⛲இது எட்டு பால்கனிகளைக் கொண்டுள்ளது, ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு, குளியலறையில் விரிவடைகிறது. மற்றொரு பால்கனி தெற்கில் வெளிப்புற சுவரில் உள்ளது. இந்த பால்கனிகளின் வெளிப்புற மற்றும் உட்புற முகங்கள் வடிவியல், அரபு மற்றும் ஃபோலியேட் வடிவமைப்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பால்கனிகள் பக்கவாட்டுச் சுவர்களைச் சந்திக்கும் மூலைகளில் தாவும் யாளிகளைக் காணலாம். தாழ்வாரத்தின் உச்சவரம்பு பல்வேறு பூச்சுகளால் அலங்கரிக்கப்பட்ட குவிமாடங்கள் மற்றும் மையத்தில் தாமரை பதக்கத்துடன் கூடிய பெட்டகங்களைக் கொண்டுள்ளது. 

நன்றி🙏🏻

⭐பயணங்கள் தொடரும்.....
நன்றி🙏🏼
15.11.2024 #சுப்ராம்
#சுப்ராம்ஆலயதரிசனம்.
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கர்னாடகா2024

கர்னாடகா2024 #karnataka2024 #பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️நாள் - 9 - 15.11.24 - FRIDAYபதிவு - 46 - 1, 2🌟 #ஹம்பியில் உள்ள வரலாற்று நினைவுச்சின்னங்களின் தொகுப்பிடங்கள் (Group of Monuments at #Hampi )

#கர்னாடகா2024 #karnataka2024 
#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
நாள் - 9 - 15.11.24 - FRIDAY
பதிவு - 46 - 1, 2

🌟 #ஹம்பியில் உள்ள வரலாற்று நினைவுச்சின்னங்களின் தொகுப்பிடங்கள் (Group of Monuments at #Hampi )

✨ ஹம்பி : வரலாற்று ரீதியாகவும் தொல்லியல் ரீதியாகவும் விஜயநகர காலத்திலும் அதற்கு முந்தைய காலத்திலும் இத்தலம் குறிப்பிடத்தக்கது. 

✨இந்திய தொல்லியல் துறையினர் தொடர்ந்து அப்பகுதியில் அகழாய்வு நடத்தி வருகின்றனர்.

✨ஹம்பி கிரானைட் பாறைகளால் உருவாக்கப்பட்ட மலைப்பாங்கான நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தை உள்ளடக்கிய ஹம்பி நினைவுச்சின்னங்கள் விஜயநகர இடிபாடுகளின் துணைக்குழு ஆகும். ஏறக்குறைய அனைத்து நினைவுச்சின்னங்களும் 1336 மற்றும் 1570 CE இடையே விஜயநகர ஆட்சியின் போது கட்டப்பட்டன. 

✨இந்த தளம் சுமார் 1,600 நினைவுச்சின்னங்களைக் கொண்டுள்ளது மற்றும் 41.5 சதுர கிலோமீட்டர் (16.0 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. 

✨ஹம்பி தளம் மூன்று பரந்த மண்டலங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது; முதலாவது "புனித மையம்" என்று பர்டன் ஸ்டெய்ன் போன்ற அறிஞர்களால் பெயரிடப்பட்டது;  

 ✨இரண்டாவது "நகர்ப்புற மையம்" அல்லது "அரச மையம்" என்று குறிப்பிடப்படுகிறது;

 ✨மற்றும் மூன்றாவது - பொதுமைய இடங்கள் விஜயநகரத்தின் மற்ற பகுதிகளை உருவாக்குகிறது. 

🔷புனித மையம், ஆற்றங்கரையில், புனித யாத்திரை வரலாற்றைக் கொண்ட பழமையான கோயில்கள் மற்றும் விஜயநகரப் பேரரசுக்கு முந்தைய நினைவுச்சின்னங்களைக் கொண்டுள்ளது. 

🔷நகர்ப்புற மையமும் அரச மையமும் புனித மையத்தில் உள்ளவற்றைத் தாண்டி அறுபதுக்கும் மேற்பட்ட பாழடைந்த கோயில்களைக் கொண்டுள்ளன, ஆனால் நகர்ப்புற மையத்தில் உள்ள கோயில்கள் அனைத்தும் விஜயநகரப் பேரரசின் காலத்தைச் சேர்ந்தவை. நகர்ப்புற மையத்தில் சாலைகள், நீர்வழிப்பாதை, தண்ணீர் தொட்டிகள், மண்டபம், நுழைவாயில்கள் மற்றும் சந்தைகள், மடங்கள் போன்ற பொது பயன்பாட்டு உள்கட்டமைப்புகளும் அடங்கும். 

🔷இந்த வேறுபாட்டிற்கு சுமார் எழுபத்தேழு கல்வெட்டுகள் உதவியுள்ளன. 

🔷பெரும்பாலான நினைவுச் சின்னங்கள் இந்துக்கள்; கோயில்கள் மற்றும் தொட்டிகள் மற்றும் சந்தைகள் போன்ற பொது உள்கட்டமைப்புகளில் இந்து தெய்வங்களை சித்தரிக்கும் நிவாரணங்கள் மற்றும் கலைப்படைப்புகள் மற்றும் இந்து நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட கருப்பொருள்கள் ஆகியவை அடங்கும்.

 🔷ஆறு ஜெயின் கோவில்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் மற்றும் ஒரு முஸ்லீம் மசூதி மற்றும் கல்லறை உள்ளது. 

🔷ஏராளமான உள்ளூர் கல்லில் இருந்து கட்டிடக்கலை கட்டப்பட்டுள்ளது; ஆதிக்கம் செலுத்தும் பாணி திராவிடம், டெக்கான் பகுதியில் 1 ஆம் மில்லினியத்தின் இரண்டாம் பாதியில் இந்து கலைகள் மற்றும் கட்டிடக்கலை வளர்ச்சியில் வேர்கள் உள்ளன. 

🔷இது 11 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தெற்கில் ஹொய்சாள பேரரசின் ஆட்சியின் போது வளர்ந்த கலைகளின் கூறுகளை உள்ளடக்கியது, அதாவது ராமச்சந்திரா கோயிலின் தூண்கள் மற்றும் சில விருபாக்ஷா கோயில் வளாகத்தின் கூரைகள் போன்றவை.
ராணி குளியல் மற்றும் யானை தொழுவங்கள் போன்ற சில நினைவுச்சின்னங்களில் இந்தோ-இஸ்லாமிய பாணியை கட்டிடக் கலைஞர்கள் ஏற்றுக்கொண்டனர், "அதிக வளர்ச்சியடைந்த பல மத மற்றும் பல இன சமூகத்தை" பிரதிபலிக்கிறது. என்று யுனெஸ்கோ கூறுகிறது.

🔷இப்பேரரசு காலத்தில் தென்னிந்தியாவில் கன்னடம், தெலுங்கு தமிழ் மொழி இலக்கியம், இந்துக் கோயில் கட்டிடக் கலை, இந்து சமயம், நீர் பாசன முறை, தொழில், வணிகம் சிறப்பு விளங்கியது.

ஹம்பியின் குடியிருப்புகள். 

குறிப்பிடத்தக்க வரலாற்று சிறப்புமிக்க நினைவு சின்னக்கட்டிடங்களில் ஒன்று ஹம்பி - கமலாப்பூர் - ஆனேகுந்தி ஹம்பியின் குடியிருப்புகள் : இவை விஜயநகரப் பேரரசின் முதல் பண்டைய தலைநகரம் அல்லது நிர்வாக மையம். இது முதல் குடியேற்றம் அல்லது முதல் தலைநகரம் என்பதால், இந்த இடத்தில் பல நினைவுச்சின்னங்கள் அமைக்கப்பட்டன.

அரசமுற்றம் பகுதியில் உள்ள சில கட்டிடங்கள்.
46-1
கிங்ஸ் ஆடியன்ஸ் ஹால்
( அரசவை பார்வையாளர் முற்றம்)

🛡️இந்த மண்டபம் மஹாநவமி திப்பா (மண்டப வளாகம்) .விற்கு மேற்கே அரச மாளிகையில் அமைந்துள்ளது. பாரசீக தூதர் அப்துர் - ரசாக் மற்றும் போர்த்துகீசிய பயணி டொமிங்கோ பயஸ் ஆகியோரின் கணக்குகள் இந்த அற்புதமான அமைப்பைக் குறிப்பிடுகின்றன. 

🛡️அரசர் இங்கு நீதிமன்றத்தை நடத்தி தனது குடிமக்களைக் கேட்டறிந்தார், எனவே பார்வையாளர்கள் மண்டபம் நியாயகிரிஹா (நீதிமன்றம்) என்றும் அழைக்கப்படுகிறது. கிரானைட் கற்களால் கட்டப்பட்ட இந்த மாடிக் கட்டிடம், வடக்கு நோக்கியும், எந்தப் பக்கம் படிக்கட்டுகளையும் கொண்டுள்ளது.

 🛡️படிகளின் மையப் பறப்பு மூன்று பக்கங்களிலும் இயங்கும் ஒரு இடைநிலை தளத்திற்கு வழிவகுக்கிறது. கிழக்கு மற்றும் மேற்கு முனைகளில் உள்ள இரண்டு பெரிய படிகள் மேடையின் உச்சிக்கு இட்டுச் செல்கின்றன. இந்த மேடையில் 100 வழக்கமான இடைவெளியில் கல் நெடுவரிசைகள் உள்ளன, இது நூறு தூண்கள் கொண்ட மண்டபமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. 

🛡️ஒவ்வொரு அடிப்பகுதியும் 80-85 செமீ அளவுள்ள ஒரு உள்தள்ளப்பட்ட சதுரம் மற்றும் மர நெடுவரிசைகள் மற்றும் மேற்கட்டுமானங்களை வைத்திருக்கும் ஒரு சாக்கெட் உள்ளது, அது இப்போது இல்லை. தெற்கில் உள்ள படிகளின் ஒரு விமானம் ஒரு மேல் மாடிக்கு செல்கிறது, அங்கிருந்து ராஜா பொதுமக்களுக்கு பார்வையாளர்களைக் கொடுத்திருக்கலாம். மேற்கில், உயரமான கிரானைட் சுவர்களால் சூழப்பட்ட ஒரு பகுதி இடிந்து விழுந்த அமைப்பும் காணப்படுகிறது.

46-2 மகாநவமி மண்டபம் அல்லது மகாநவமி மேடை, - பொது சதுர வளாகம் 

♻️மனனவமி திப்பா அல்லது தசரா திப்பா, அரச அரண்மனையின் முக்கிய அமைப்பாகும், மேலும் இது மகாநவமி அல்லது தசரா பண்டிகையின் விழாக்களுடன் தொடர்புடையதாக அறியப்படுகிறது. 

♻️இது சிம்மாசன மேடை' அல்லது 'பெரிய மேடை' என்றும் அழைக்கப்படுகிறது. பாரசீக தூதர் அப்துர் ரசாக் மற்றும் போர்த்துகீசிய பயணி டொமிங்கோ பயஸ் ஆகியோரின் கணக்குகள் இந்த அற்புதமான கட்டமைப்பைக் குறிப்பிடுகின்றன, இது ஒரு அரச விழாவிற்கு சேவை செய்தது, 

♻️அநேகமாக மன்னர் விழாக்கள் மற்றும் கலாச்சார பொழுதுபோக்குகளை பார்த்த இடம். தற்போதுள்ள அமைப்பு மேற்கு நோக்கியவாறு, வெவ்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்ட, குறையும் அடுக்குகளில் ஒன்றின் மேல் ஒன்றாக அமைக்கப்பட்ட மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்குப் பக்கங்களில் உள்ள படிக்கட்டுகளின் விமானம், மூன்றாவது தளத்தின் மேல் மற்றும் தெற்கே முதல் தளத்தின் மேல் மட்டுமே செல்கிறது. கிழக்குப் பகுதியில், ஒரு பொதுவான அறையிலிருந்து அணுகக்கூடிய இரண்டு படிகள் உள்ளன.

🛡️சுவர்களில் விலங்குகள், அரச உருவப்படங்கள், போர்வீரர்கள், நடனக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், இராணுவ அணிவகுப்புகள், வேட்டையாடும் காட்சிகள் போன்றவை வெளிநாட்டு பிரதிநிதிகள், அநேகமாக சீன தூதரகம் மற்றும் அரேபிய குதிரை வியாபாரிகள் போன்ற சிற்பங்கள் விஜயநகர நீதிமன்றத்தில் வெளிநாட்டு இருப்பை பிரதிபலிக்கின்றன. 

மேடையின் உச்சியில், இந்த மேடையில் முதலில் ஒரு தூண் மண்டபம் அல்லது பந்தல் இருந்ததைக் குறிக்கும் நெடுவரிசை அடிவாரங்கள் தெரியும். 

☢️மகாநவமி மேடை, "பெரிய மேடை", "பார்வையாளர் கூடம்", "தசரா" அல்லது "மகாநவமி திப்பா" நினைவுச்சின்னம் என்றும் அழைக்கப்படும், அரச மையத்தின் உள்ளே உள்ள மிக உயரமான இடங்களில் ஒன்றில் 7.5 ஹெக்டேர் (19-ஏக்கர்) அடைப்பில் உள்ளது. நகர்ப்புற மையம்). இது சடங்கு அமைப்புகளைக் கொண்டுள்ளது. 

☢️விஜயநகரத்திற்குச் சென்ற வெளிநாட்டவர்களின் நினைவுக் குறிப்புகளில் இது குறிப்பிடப்பட்டுள்ளது, சிலர் அதை "வெற்றியின் வீடு" என்று அழைக்கிறார்கள். 

☢️இந்த வளாகத்தில் உள்ள மிகப்பெரிய நினைவுச்சின்னத்தில் மூன்று ஏறுவரிசை சதுர நிலைகள் உள்ளன, இது ஒரு பெரிய, சதுர மேடைக்கு வழிவகுக்கும், இது கிரானைட்டால் செய்யப்பட்ட ஒரு மண்டபம் / கட்டிடம்.

☢️இது 14 ஆம் நூற்றாண்டின் அரச நடவடிக்கைகளின் பட்டியல் மற்றும் யானைகள், குதிரைகள் மற்றும் ஒட்டகங்கள் உள்ளிட்ட அணிவகுப்பு விலங்குகளின் வரிசைகளைக் கொண்டுள்ளது. 

☢️தெற்கில் உள்ள வரிசை அமைப்பில் பெண் குச்சி-நடனங்கள் உட்பட இசைக்கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்களைக் காட்டுகின்றன. 

☢️மூன்றாம் நிலையில் போர் ஊர்வலம், தம்பதிகள் மற்றும் சாதாரண குடிமக்கள் ஒருவருக்கொருவர் தண்ணீரை வீசி ஹோலி (வசந்தோத்ஸவா) கொண்டாடும் காட்சிகளைக் காட்டுகின்றன.  

☢️சினோபோலி, ஹம்பி நீர் உள்கட்டமைப்பு பயணிகளின் பயன்பாடு, சடங்குகள், வீட்டு உபயோகம் மற்றும் பாசனத்திற்காக இருந்தது. 

☢️நீரூற்றுகள் மற்றும் சமூக சமையலறை
ஹம்பியில் உள்ள பல முக்கிய கோவில்களில் ஒரு உட்பொதிக்கப்பட்ட சமையலறை மற்றும் 100 அல்லது அதற்கு மேற்பட்ட தூண்கள் கொண்ட உணவு கூடங்கள் உள்ளன. 

☢️ஹம்பியில் ஒரு பிரத்யேக பொது போஜன ஷாலாவும் (உணவு வீடு) இருந்தது, அங்கு ஏராளமான தாலிகள் (உணவுகள்) நீர் கால்வாயின் இருபுறமும் உள்ள பாறையில் தொடராக செதுக்கப்பட்டன. 

☢️ஒரு உதாரணம் அரச மையத்தின் தெற்கில் ஒரு எண்கோண நீரூற்றுக்கு அருகில் காணப்படுகிறது; கல்வெட்டு ஆதாரங்களின்படி, இந்த ஹம்பி போஜன் ஷாலா ஒரு உதடா கலுவே அல்லது "உணவுடன் கூடத்துடன் இணைக்கப்பட்ட கால்வாய்" ஆகும்.
நன்றி🙏🏻
⭐பயணங்கள் தொடரும்.....
நன்றி🙏🏼
15.11.2024 #சுப்ராம்
#சுப்ராம்ஆலயதரிசனம்.
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கர்னாடகா2024
https://www.facebook.com/share/p/15zeuK9TbL/?mibextid=oFDknk

கர்னாடகா2024 #karnataka2024 #பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️நாள் - 9 - 15.11.24 - FRIDAYபதிவு - 45#ஹம்பி கமலாப்பூர்#ஹசாராராமர்கோயில்#ராமச்சந்திராகோயில்

#கர்னாடகா2024 #karnataka2024 
#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
நாள் - 9 - 15.11.24 - FRIDAY
பதிவு - 45
#ஹம்பி கமலாப்பூர்

#ஹசாராராமர்கோயில்
#ராமச்சந்திராகோயில்

🛕கல்வெட்டுகளில் ராமச்சந்திரா கோயில் என்று குறிப்பிடப்படும் ஹசாரா ராமர் கோயில், ஹம்பியின் - கமலாப்பூர் பகுதியில் உள்ள, சிதைந்த அரச மையப் பகுதியில் நகர்ப்புற மையத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.

🛕ராமாயணத்தின் பெரும் காவியத்தையும், பாகவதத்தின் சில அத்தியாயங்களையும் சித்தரிக்கும் சுவர் ஓவியங்களுக்கு பெயர் பெற்றது.

 🛕இது சுமார் 14"-15" நூற்றாண்டு CE தேதியிடப்பட்டது மற்றும் ராமர் வடிவத்தில் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இக்கோயிலின் ஆரம்பக் குறிப்பு கி.பி. 1416 இல் ராணி அன்னலாதேவியின் மானியத்தைக் குறிப்பிடும் ஒரு கல்வெட்டுக்கு முந்தையது. 

🛕இந்த கோவில் ராமாயண புகழ் ராமருக்கும், விஷ்ணுவின் அவதாரத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்டது. இது அரச குடும்பத்திற்கு ஒரு சடங்கு கோவிலாக இருந்தது. இந்த கோவில் 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உள்ளது மற்றும் தேவராய என்பவரால் கட்டப்பட்டது. 

🛕கோயிலின் வெளிப்புறச் சுவர்கள் இந்து மகாநவமி (தசரா) மற்றும் வசந்த ஹோலி விழா ஊர்வலம் மற்றும் கொண்டாட்டங்களை இணையான கலைப்படைப்புகளில் சித்தரிக்கின்றன.
மிகக் குறைந்த இசைக்குழு யானைகள் அணிவகுத்துச் செல்வதைக் காட்டுகிறது, அதற்கு மேலே குதிரை வீரர்கள் தலைமையிலான குதிரைகள் உள்ளன, பின்னர் பொதுமக்கள் கொண்டாடும் வீரர்கள், பின்னர் நடனக் கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள், பொது மக்களின் ஊர்வலத்தை சித்தரிக்கும் மேல் அடுக்குடன். 

🛕விஜயநகர தலைநகருக்கு விஜயம் செய்த பாரசீகர்கள் மற்றும் போர்த்துகீசியர்களின் எஞ்சியிருக்கும் நினைவுக் குறிப்புகளில் திருவிழாக்கள் மற்றும் ஊர்வலங்களின் விளக்கத்தை இந்த சித்தரிப்பு பிரதிபலிக்கிறது. 

🛕கோவிலின் உட்புறச் சுவர்களில் இந்து இதிகாசமான ராமாயணத்தின் விரிவான விவரிப்புகள் உள்ளன. 

🛕கோவிலில் ஒரு நுழைவு மண்டபம் மற்றும் ஒரு யாக விழா மண்டபம் உள்ளது, அதன் கூரை கூரை வழியாக புகை மற்றும் புகையை காற்றோட்டம் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.   

🛕பிரதான மண்டபத்தின் உள்ளே ஹொய்சாள பாணியில் நான்கு நுணுக்கமான செதுக்கப்பட்ட தூண்கள் உள்ளன; இந்தச் செதுக்கல்களில் வைஷ்ணவர்களின் ராமர், லட்சுமணன் மற்றும் சீதை, சக்தியின் மகிஷாசுரமர்த்தினியாக துர்க்கை மற்றும் சைவத்தின் சிவன்-பார்வதி ஆகியோரின் சித்தரிப்புகள் அடங்கும். 

🛕சதுர சன்னதியில் படங்கள் இல்லை. இந்த கோவிலில் விஷ்ணு அவதாரங்களின் புராணங்களை சித்தரிக்கும் பிரைஸ்கள் கொண்ட சிறிய சன்னதி உள்ளது. 

🛕இந்த பாழடைந்த கோயில் வளாகம் அதன் ஆயிரக்கணக்கான செதுக்கல்கள் மற்றும் கல்வெட்டுகளுக்கு பெயர் பெற்றது, இந்து மத தத்துவத்தை சித்தரிக்கும் விரிவான ஓவியங்கள் மற்றும் தோட்டங்களால் அமைக்கப்பட்ட அதன் பரந்த முற்றம் சிறப்பு.

ஆலய அமைப்பு
🛕இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.மற்றும் மூன்று நுழைவாயில்கள் மற்றும் ஒரு விசாலமான தூண் தாழ்வாரம் கொண்ட கர்ப்பகிரகம் (சந்நிதி), அந்தரளம் (முன் மண்டபம்), ரங்கமண்டபம் (தூண் மண்டபம்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பளபளப்பான கற்களால் ஆன ரங்கமண்டபத்தின் தூண்கள் விஷ்ணுவின் அவதாரத்தை சித்தரிக்கும் பன்னிரண்டு சிற்பப் பேனல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 

🛕வடமேற்கில் அம்மன் தனி ஆலயம் அமைந்துள்ளது. இது மிகவும் அலங்காரமானது மற்றும்
மேற்கிலும் வடக்கிலும் இரண்டு கர்ப்பகிரஹங்களையும், அந்தரலத்தையும் கிழக்கிலிருந்து ஒரு மண்டபத்தையும் கொண்டுள்ளது. 

🛕தனிச்சிறப்பு வாய்ந்த வழக்கமான திராவிட சிகரங்கள் (மேற்பரப்பு) பிரதான கோயிலையும் தேவி சன்னதியையும் அலங்கரிக்கின்றன. மேற்கு மற்றும் தென்கிழக்கில் தூண்கள் கொண்ட மாடங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒரு பிராகார சுவரில் மூடப்பட்டிருக்கும்; மற்றும் கிழக்கு மற்றும் வடக்கில் நுழைவாயில் மற்றும் தெற்கில் ஒரு வழியாக நுழைவாயில் உள்ளது. 

🛕பிரகாரத்தின் வெளிப்புறச் சுவர்களில் குதிரைகள் யானைகள், ஒட்டகங்கள், நடனமாடும் பெண்கள், குச்சி நடனம், இசைக் கலைஞர்கள் போன்ற உருவங்கள், ஆண்டியா நடனம், இசைக் கலைஞர்கள் போன்றவற்றின் சித்திரங்கள் உள்ளன. 

#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️

🌼இந்த ஆலயம். ஹம்பி - கமலாப்பூர் ன் அரசமைப் பகுதியின் நடுபகுதியில் அமைந்துள்ளது.

🌼அரண்மணைவளாகம் முழுவதுமே சிதைந்து விட்டதால், இந்தக் கோவிலும்
சிதைந்த நிலையில் தான் உள்ளது.

🌼ஹம்பி இந்தப் பகுதிக்கு சுற்றுலா வருபவர்கள் தவறாது இதையும் வந்து பார்த்துவிட்டு செல்கின்றனர்.

🌼விஷ்ணுவின் 10 அவதாரங்கள் மற்றும் 100 கணக்கான புராண சிலைகள் சுவற்றில் மிளிர்கின்றன.

🌼அரசர்கள் காலத்தில் முறையான வழிபாடுகள், விழாக்கள் நடைபெற்றிருந்திருக்கும். தற்போது பிரமிப்பாகவும் கண்காட்சியாகவும், உள்ளது மிக நெகிழ்ச்சியானது.

நன்றி🙏🏻
⭐பயணங்கள் தொடரும்.....
நன்றி🙏🏼
15.11.2024 #சுப்ராம்
#சுப்ராம்ஆலயதரிசனம்.
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கர்னாடகா2024

கர்னாடகா2024 #karnataka2024 #பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️நாள் - 9 - 15.11.24 - FRIDAYபதிவு - 44#மால்யவந்தரகுநாதர்கோயில்

#கர்னாடகா2024 #karnataka2024 
#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
நாள் - 9 - 15.11.24 - FRIDAY
பதிவு - 44
#மால்யவந்தரகுநாதர்கோயில்

சிறப்பு
🛕ராம-சீதா-லக்ஷ்மணன் மற்றும் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மால்யவந்த மலை

🛕புராணக் கதைகளின்படி, ராம்-லக்ஷ்மணன் சீதையைத் தேடும் போது கிசர்கியா பகுதியில் தங்கியிருந்தார்கள்.

*️⃣இராமனும் லக்ஷ்மணனும் மழைக்காலத்தில் தங்குமிடம் தேடிக்கொண்டிருந்தனர். இராமன் மால்யவந்த மலைத் திசையில் அம்பு எய்தினான். இந்தக் கதையின்படி, மால்யவந்த மலையின் மேல் உள்ள பாறாங்கல்லில் ஒரு பிளவு ஏற்பட்டிருக்கிறது. 

🔷ராமனும் லக்ஷ்மணனும் அனுமனின் படையுடன் இலங்கைக்கு அணிவகுத்துச் செல்வதற்கு முன், பருவமழை முடியும் வரை இங்கு தங்கியிருந்தனர் என்பது புராணம்.

அமைப்பு:

🛕16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மால்யவந்த் ரகுநாத் கோயில் ஒரு பெரிய பாறையைச்சுற்றி மூடி, பசுமையான குன்றின் மீது கட்டப்பட்டுள்ளது.

🛕விஜயநகர கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இக்கோயில், கர்ப்பகிரகம், அந்தரளம், தூண்கள் நிறைந்த மகாமண்டபம் மற்றும் விசாலமான சபாமண்டபத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. 

🛕ராமரின் சிற்பங்கள். கல்லில் சீதையும் லட்சுமணனும், ஹனுமான் அதன் மீது சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

🛕இக்கோயிலின் வடக்கே கிழக்கு மேற்கு திசையில் திருத்தம் செய்யப்பட்ட அம்மன் தனி ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
கோயிலின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் கோபுரத்துடன் கூடிய நுழைவு வாயில் உள்ளது. 

🛕இந்த மலையின் மேற்கு முனையிலிருந்து, பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கோட்டைகள் மற்றும் நகரத்தின் பாதுகாப்பிற்காக கட்டப்பட்ட நுழைவு வாயில்களின் பரந்த காட்சியைக் காணலாம்.

🛕இந்த மலையின் உச்சியின் மேற்கு விளிம்பில் கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள இரண்டு பெரிய கோபுர நுழைவாயில்கள் வழியாக கோயிலை அணுகலாம். 

🛕மால்யவந்த மலையில் ரகுநாதர் கோயில் மற்றும் கல்லில் செதுக்கப்பட்ட சிவலிங்கங்களின் வரிசை உட்பட பல சன்னதிகள் உள்ளன.

🛕தெய்வங்களின் உருவங்கள் ஒரு பெரிய பாறையின் முகத்தில் செதுக்கப்பட்டுள்ளன. 

*️⃣ராமனும் லக்ஷ்மணனும் அமர்ந்திருக்கும் தோரணையிலும், சீதை அவர்களுக்குப் பக்கத்தில் நிற்கிறார், மற்றும் அனுமன், மண்டியிட்ட தோரணையிலும் சிறந்த மனோபாவத்துடன் உள்ளனர். 
🔷இந்த பாறாங்கல்லைச் சுற்றி ஒரு பெரிய கோவில் வளாகம் கட்டப்பட்டுள்ளது, உள் சன்னதியில் உள்ள படங்களை வைத்து. மேலே நீண்டு நிற்கும் பாறாங்கல் பாறையின் மேல் கோபுர அமைப்புடன் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது பாறாங்கல் கட்டமைப்பு கூறுகளின் ஒருங்கிணைந்த பகுதியாக ஆக்குகிறது. 

🔷இதுபோன்ற பல நிகழ்வுகளை நீங்கள் ஹம்பியில் பார்த்திருப்பீர்கள். விஜயநகர கட்டிடக்கலையின் தனிச்சிறப்புகளில் இதுவும் ஒன்று.

*️⃣கோவில் வளாகம் மற்றபடி ஹம்பியில் உள்ள எந்த பெரிய கோவில் வளாகங்கள் போன்றதே. வெள்ளையடிக்கப்பட்ட தூண் மண்டபம் வளாகத்தின் மையத்தில் உள்ள பிரதான சன்னதியுடன் உள்ளது. 
🔷கோயில் வளாகத்தை எதிர்கொள்ளும் சுற்றுச்சுவருடன் ஒரு நீண்ட மண்டபம் உள்ளது. இது பக்தர்கள் தங்குமிடமாகவும், பிரார்த்தனை செய்யும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 🔷கல்யாண மண்டபம் (ஒரு பெரிய மண்டபம்) தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. அம்மனின் உபசன்னதி பிரதான சன்னதியின் வடக்குப் பகுதியில் உள்ளது.

 🔷கோவிலின் தெற்கே உள்ள சுவரில் (பாறாங்கல்) மேற்பரப்பில் செதுக்கப்பட்ட புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணரின் உருவத்துடன் கூடிய இயற்கையான கிணற்றைக் காணலாம்.

❇️கிழக்கில் உள்ள ஒரு கோபுரம் வழியாக நாம் கோவில் வளாகத்திற்குள் நுழையலாம்., அங்கு மலையடிவாரத்திலிருந்து சாலை முடியும். ஏறக்குறைய நுழைவாயிலை உள்ளடக்கிய ஒரு பெரிய பாறையை நீங்கள் காணலாம். பாறாங்கல் மீது சிறிது முன்னால் நீங்கள் ஒரு அனுமன் சன்னதியைக் காணலாம். நடந்து வருபவர்கள், தெற்கு கோபுரம் வழியாகவும் வருகிறார்கள்.

❇️கம்பிலி சாலையைக் காணும் வளாகச் சுவரின் தெற்குப் பகுதியில் மற்றொரு நுழைவாயில் கோபுரம் உள்ளது. உயரமான சுற்றுச்சுவரின் பின் பகுதியில் (மேற்கு) ஒரு சிறிய திறப்பு உள்ளது. இந்த திறப்புகளின் இருபுறமும், சுவரில் நீங்கள் ஏராளமான புரைமைப்பு பணிகளைக் காணலாம், பெரும்பாலும் நீர்வாழ் உயிரினங்கள். சற்று முன்னால் ஒரு பெரிய பாறையின் கீழ் கட்டப்பட்ட சிவன் குகைக் கோயில் உள்ளது. 

❇️கீழே உள்ள பள்ளத்தாக்கின் பரந்த காட்சியைப் பெற இது ஒரு சிறந்த தளமாகும். 

❇️ அருகில் எங்கோ முன்பு சொன்ன ராமரின் அம்பினால் ஏற்பட்ட பிளவு. மேலும் பாறையில் செதுக்கப்பட்ட சிவலிங்கங்கள் மற்றும் நந்தி உருவங்களின் வரிசைகள் பிளவுகளாக உள்ளன.

#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️

❇️நாங்கள் விட்டல் ஆலயம் தரிசித்துவிட்டு இந்த ஆலயம் வந்தடைந்தோம்.
புராதான சிறப்பு வாய்ந்த ஆலயம் என்பதால், தொடர்ந்து பூசைகளும், வாசிப்புகளும் நடைபெற்று வருகின்றன. 

✴️மிகவும் அமைதியான இடம். 
பிரதான சாலையிலிருந்து ஆலய குன்று வரை சுமார் 800 மீட்டர் நடந்தே வரலாம். Auto / வாகனங்கள் மூலமாகவும் ஆலயம் வந்து சேரலாம்.
பிரதான சாலையிலிருந்து தெற்கு ராஜ கோபுரம் தெரியும்.

❇️இந்த ஆலயம் தரிசித்து, Hambi - Kamalapur சென்று, விஜயநகர சாம்ராஜ்ய அரண்மனை, குடியிருப்புகள் முதலியவைகளை பார்த்தோம்.

⭐பயணங்கள் தொடரும்.....
நன்றி🙏🏼15.11.2024 #சுப்ராம்
#சுப்ராம்ஆலயதரிசனம்.
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கர்னாடகா2024

கர்னாடகா2024 #karnataka2024 #பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️நாள் - 9 - 15.11.24 - FRIDAYபதிவு - 43#விட்டலாகோயில் மற்றும் சந்தை வளாகம்

#கர்னாடகா2024 #karnataka2024 
#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
நாள் - 9 - 15.11.24 - FRIDAY
பதிவு - 43
#விட்டலாகோயில் மற்றும் சந்தை வளாகம்

#விட்டலாகோயில்

♦️விட்டலா கோயில் மற்றும் சந்தை வளாகம் துங்கபத்ரா ஆற்றின் கரையில் விருபாக்ஷா கோயிலுக்கு வடகிழக்கே 3 கிலோமீட்டர் (1.9 மைல்) தொலைவில் உள்ளது. 

♦️இது ஹம்பியில் உள்ள கலைநயமிக்க அதிநவீன இந்துக் கோயிலாகும், மேலும் இது விஜயநகரத்தின் புனித மையத்தின் ஒரு பகுதியாகும். 

♦️கோயில் வளாகம் எப்போது கட்டப்பட்டது, யார் கட்டினார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை; பெரும்பாலான அறிஞர்கள் இதை 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் நடுப்பகுதி வரையிலான கட்டுமான காலகட்டம் என்று குறிப்பிடுகின்றனர். 

♦️சில புத்தகங்களில் இதன் கட்டுமானம் இரண்டாம் தேவராயரின் காலத்தில் தொடங்கி கிருஷ்ணதேவராயர், அச்சுயதராயர் மற்றும் அநேகமாக சதாசிவராயர் ஆட்சியின் போது தொடர்ந்ததாகவும், 1565 இல் நகரம் அழிக்கப்பட்டதால் நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றன. 
♦️கல்வெட்டுகளில் ஆண் மற்றும் பெண் பெயர்கள் உள்ளன, இந்த வளாகம் பல ஸ்பான்சர்களால் கட்டப்பட்டது என்று கூறுகிறது. வித்தோபா என்றும் அழைக்கப்படும் கிருஷ்ணரின் வடிவமான விட்டலாவுக்கு இந்த கோயில் அர்ப்பணிக்கப்பட்டது. 

♦️கோயில் கிழக்குநோக்கியுள்ளது.
 சதுர வடிவத்தைக் கொண்டுள்ளது மற்றும் இரண்டு பக்க கோபுரங்களுடன் ஒரு நுழைவு கோபுரத்தைக் கொண்டுள்ளது. 

♦️பிரதான கோயில் நடைபாதை முற்றம் மற்றும் பல துணை ஆலயங்களுக்கு நடுவில் உள்ளது, இவை அனைத்தும் கிழக்கே சீரமைக்கப்பட்டுள்ளன.

♦️மூன்று வரிசை தூண்களால் சூழப்பட்ட 500 க்கு 300 அடி அளவிலான முற்றத்தில் கோயில் ஒரு ஒருங்கிணைந்த அமைப்பாகும். 

♦️இது சராசரியாக 25 உயரம் கொண்ட ஒரு மாடியின் தாழ்வான அமைப்பாகும். கோவிலில் மூன்று தனித்தனி மண்டபங்கள் உள்ளன: கர்ப்பகிரகம், அர்த்தமண்டபம் மற்றும் மகாமண்டபம் (அல்லது சபா மண்டபம்).

♦️விட்டல கோவிலின் முற்றத்தில் கல் தேர் வடிவில் கருடன் சன்னதி உள்ளது; இது ஹம்பியின் அடிக்கடி படம்பிடிக்கப்பட்ட சின்னமாகும். தேருக்கு மேலே ஒரு கோபுரம் உள்ளது, இது 1940 களில் அகற்றப்பட்டது என்று வரலாற்றாசிரியர் டாக்டர். எஸ்.ஷெட்டர் கூறுகிறார். 

♦️இசைத்தூண் மண்டபம்

♦️கல் தேர் முன் ஒரு பெரிய, சதுர, திறந்த தூண், அச்சு சபா மண்டபம், அல்லது சமூக கூடம். 

♦️மண்டபத்தில் நான்கு பிரிவுகள் உள்ளன, அவற்றில் இரண்டு கோயில் கருவறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தில் வெவ்வேறு விட்டம், வடிவம், நீளம் மற்றும் மேற்பரப்பு முடிவின் 56 செதுக்கப்பட்ட கல் கற்றைகள் உள்ளன, அவை தாக்கும் போது இசை ஒலிகளை உருவாக்குகின்றன; 

♦️உள்ளூர் பாரம்பரிய நம்பிக்கையின்படி, இந்த மண்டபம் இசை மற்றும் நடனத்தின் பொது கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. 

♦️இது காரக்கோயில் என வகைப்படுத்தப்பட்டுள்ளது, திருவிழாக்களில் கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் கோயில் தேர்களைப் போலவே வடிவமைக்கப்பட்ட கோயிலாகும்.

♦️மண்டபம் கருவறையைச் சுற்றி நடப்பதற்காக ஒரு மூடப்பட்ட பிரதக்ஷிண பாதையை இணைக்கிறது. இந்த அச்சு மண்டபத்தைச் சுற்றி (கிழக்கில் இருந்து கடிகார திசையில்); 

🔶கருடன் சன்னதி, 

🔶கல்யாண மண்டபம் (திருமண விழாக்கள்), 
🔶100- கால் மண்டபம், 
🔶அம்மன் சன்னதி மற்றும் 
🔶உற்சவர் மண்டபம் (திருவிழா மண்டபம்).
 சுவருடன் கூடிய சுற்றுச்சுவர் சுமார் 1.3 ஹெக்டேர் (3.2 ஏக்கர்) பரப்பளவைக் கொண்டுள்ளது. தென்கிழக்கு மூலையில் கூரை ஜன்னல் (கிளெஸ்டரி) கொண்ட மடப்பள்ளி எனப்படும் சமையலறை உள்ளது. 

🔶கோவில் வளாகத்திற்கு வெளியே, அதன் கிழக்கு-தென்-கிழக்கில், கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் (0.62 மைல்) நீளமுள்ள ஒரு நெடுவரிசை சந்தை வீதி உள்ளது; அவை அனைத்தும் இப்போது இடிந்து கிடக்கின்றன. 

🔶வடக்கே மற்றொரு சந்தையும், ராமாயணக் காட்சிகள், மகாபாரதக் காட்சிகள் மற்றும் வைணவத் துறவிகளின் உருவங்களுடன் தெற்கு நோக்கிய சன்னதியும் உள்ளது. இந்து தத்துவஞானி ராமானுஜரைக் கௌரவிக்கும் கோவிலில் வடக்கு வீதியில் உள்ளது.

🔶விட்டல கோயிலைச் சுற்றியுள்ள பகுதி விட்டலபுரா என்று அழைக்கப்பட்டது. இது ஆழ்வார் பாரம்பரியத்தை மையமாகக் கொண்ட ஒரு புனித யாத்திரை மையமாக வடிவமைக்கப்பட்ட வைஷ்ணவ மடத்தை (மடத்தை) நடத்தியது. 

🔶கிடைத்த கல்வெட்டுகளின்படி இது கைவினை உற்பத்திக்கான மையமாகவும் இருந்தது.

#விட்டல்ஆலயம் / பஜார் (சந்தை)

✴️விட்டலா கோவில் வளாகத்தில் நான்கு பக்கங்களிலும் பெரிய தெருக்கள் உள்ளன, நீண்ட மண்ட வரிசைகளால் விரிவடைகின்றன. 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கூறப்படலாம், அவை ஓய்வு இடங்களாகவும் கடைகளாகவும் பயன்படுத்தப்பட்டன, அதே நேரத்தில் கம்பீரமானவை. 

✴️சிறிய மற்றும் பெரிய நீர்நிலைகளுக்கும் நிலையான நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளது. நீர் சேகரிப்புத் தளங்களை கட்டிடக் கலைஞர்கள் கண்டறிந்து திட்டமிட்டுள்ளனர்.

✴️பெரிய செவ்வக வடிவத் தொட்டிகளுக்கும் சிறிய தொட்டிகளுக்கும் தொடர்ச்சியான நீர் விநியோகத்தை உறுதிசெய்தது. 
இந்த மண்டபங்களின் வரிசையானது எளிமையான கட்டிடக்கலையை வெளிப்படுத்துகிறது,

✴️ தென்கிழக்கு வாயில் உள்ள விட்டலா ஆலய வளாகத்திற்கு அருகில் இரண்டு அடுக்கு மண்டபங்கள் பல வைஷ்ணவ ஆலயங்கள் போலவே காணப்படுகின்றன. மற்றும் விட்டலா கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் மாடங்கள் இருந்தன. கோவில் வளாகத்தைச் சுற்றிலும் இதுபோன்ற ராஜ வீதிகள் உள்ளன.  

✴️பிரமாண்டமான கோவிலுக்கு முன்னால் அமைந்துள்ள ஆடம்பரமான கட்டிடங்கள் அரச குடும்பத்தின் சொத்தாக இருந்திருக்கலாம். மற்றும் ஓய்வெடுக்கும் இடமாகவும் கருதப்படுகிறது.  

நன்றி🙏🏻
⭐பயணங்கள் தொடரும்.....
நன்றி🙏🏼
15.11.2024 #சுப்ராம்
#சுப்ராம்ஆலயதரிசனம்.
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கர்னாடகா2024

கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - (குலசேகரமுடையார்) - பிரதோஷக்குழு யாத்ரா 17.8.2025

#கல்லிடைக்குறிச்சி -  குலசேகரமுடையார் ஆலயம் 17.8.25 #கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - குலசேகரமுடையார் அம்பாள் = தர்மசவர்த்தினி (அறம...