Wednesday, October 8, 2025

கோட்டையூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் 28.9.25

கோட்டையூர்
மீனாட்சிசுந்தரேஸ்வரர் ஆலயம்
#கோட்டையூர்
மீனாட்சிசுந்தரேஸ்வரர் ஆலயம்
🔰காரைக்குடி - அறந்தாங்கி பிரதான சாலையில் கோட்டையூரில் உள்ளது.

🛕கிழக்குப் பார்த்த ஆலயம்.
தெற்குவாசல் கோபுரம் வழியில் நுழைவு தென்புறம் பெரிய குளம் உள்ளது. படித்துறையில் ஒரு பிள்ளையார் ஆலயம்.
தரிசித்து கோபுரம் நுழைந்தால் ஆலய பிரகாரம். 
🛕சுவாமி சுந்தரேஸ்வரர் கிழக்குப் பார்த்தும், அம்பாள் மீனாட்சி தெற்குப் பார்த்தும் அமைப்பு

🛕கொடிமரம் , நந்தி வணங்கி சுவாமி கருவரை உள் மண்டபத்தில் நடராஜர் சன்னதி  நடராஜர், அம்பாள், மாணிக்கவாசகர் உள்ளனர்.

🛕கருவரை சுற்றுப் பிரகாரத்தில், சோமஸ்கந்தமூர்த்தி, லிங்கோத்பவர் எதிரில் வள்ளிதெய்வானையுடன் முருகர், மகாலெட்சுமி அடுத்து சரஸ்வதி சன்னதிகள். அலங்கரமண்டபம். முழுவதும் கற்றளி ஆலயம்.  ♻️தூய்மையாகவும், பத்தி உணர்வுடனும் அமைந்துள்ளது.

♻️பொதுவாக நகரத்தார் வசிக்கும் அல்லது, அவர்கள் அமைத்துப் பராமரிக்கும் 
எல்லாக் கோயில்களிலும் ஊருணி சுத்தமாக இருக்கும்.குளம் என்பதனை செட்டிநாட்டு வழக்கில் ஊருணி என்கிறார்கள். இதன் பொருள் ஊருக்கு உண்பதற்காக உள்ள நீர் தான் ஊருணி. அதில்யாரும் குளித்தோ, துவைத்தோ, கைகால் சுத்தம் செய்யவோ கூடாது. அதில் எல்லாரும் கட்டுப்படுகிறார்கள். அதனாலேயே அது சுத்தமாக உள்ளது ஒவ்வொரு கோவிலிலும், இதனை மற்ற எல்லா ஊர்களும் கடைப்பிடித்தால் எவ்வளவு நல்லது

♻️அடுத்து உற்சவ சிற்பங்கள் எல்லாமே புதுசு போல் பளபள என்று இருக்கும். ஊருணி மண் எடுத்து காயவைத்து சலித்து தேய்த்து பின் புளி கொண்டு தேய்த்து ஊருணி நீரில் அலம்பிவிடுவார்கள்.

♻️எல்லாக் கோயில்களிலும் கொடுங்கைகள், சிற்பங்கள் அன்றுதான் செதுக்கியது போல் புதுப் பொலிவுடன் இருக்கும்,  நல்ல பராமரிப்பு. விளக்குக் கூட கண்ட கண்ட இடங்களில் ஏற்றி எண்ணெய்ப்பிசுக்கு இல்லாமல் ஒரு பெரிய அலுமினிய டிரேயில் மண்நிரப்பி அதில் தீபம் ஏற்றுகின்றனர்.

♻️இவ்வூரானது கோட்டை போன்ற வீடுகள் நகரத்தார்களால் பாரம்பரியமான முறையில் கட்டப்பட்டுள்ளதால் இவ்வூர் கோட்டையூர் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரில் அமைந்துள்ள பெண் தெய்வமான கோட்டை நாச்சியம்மன் ஆலயம், மற்றும் ஒரு பைரவர் ஆலயமும்  சிவன் ஆலயம் அருகில் உள்ளது.

♻️கோட்டை நாச்சியம்மன் பெயரில் இவ்வூர் கோட்டையூர் என்று அழைக்கப்படுகிறது.

♻️கோட்டையூர் அருகில்
கல்லாங்குடியில் அமைந்துள்ள திருபாகதீஸ்வரர் திருகோவில் பிற்கால பாண்டியர்களால் கட்டப்பட்டதாகும், கோட்டையூர் பகுதியில் அமைந்துள்ள வயல்நாச்சியம்மன் கோவில் ஏழூர் செவ்வாய் திருவிழா இப்பகுதியில் நடைபெறும் முக்கிய திருவிழாவாகும் சித்திரை மாதம் நடைபெறும் இத்திருவிழாவிற்கு ஏழு கிராமங்களை உள்ளடங்கிய மக்கள் வழிபடுவர். 

♻️கல்வி தந்தை டாக்டர். ராம. அழகப்பச் செட்டியார் கோட்டையூரில் பிறந்தவர். அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் அழகப்பா கல்விநிலையங்கள் கோட்டையூர் அருகாமையில் அமைந்துள்ளது. 

♻️கோட்டை போன்ற வீடுகள் இங்கு மிக அதிகம்.  பாரம்பரிய செட்டிநாடு அரண்மனை வீடுகள் கோட்டையூர் அருகாமையில் அமைந்துள்ளது.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

💠பிரதான சாலை ஓரத்தில் ஆலயம் அமைந்துள்ளது. அருகே , கோட்டை நாச்சியம்மன் ஆலயமும் அதன் உள்ளே தனியாக  கற்பக விநாயகர் சன்னதியும் உள்ளது. இரண்டும் கிழக்கு நோக்கிய சன்னதிகள்.

💠அடுத்து ஒரு பைரவர் ஆலயம் ஒன்றும் அருகில் உள்ளது. கேரள ஆலயம் அமைப்பில் பெரிய உள் முற்றம் கொண்டது.  அதன் நடுவில் மண்டபமும், கருவரையுடன் கூடிய பைரவரும் உள்ளார்.

♻️நாங்கள் அனைத்து ஆலயங்களையும் தரிசித்தோம்.
♻️வாகனங்கள் சாலை அருகில் உள்ள திடலில் நிறுத்தலாம்.
♻️பெரிய கடைகள் எதுவும் அருகில் இல்லை.

நன்றி🙏
28.09.25 ஞாயிற்றுக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 28.09.2025


No comments:

Post a Comment

சின்ன ஆவுடையார் கோவில்(கொள்ளுக்காடு) ஆத்மநாதசுவாமி ஆலயம்மூலவர்: ஆத்மநாதசுவாமி, யோகாம்பாள் 12.04.26

சின்ன ஆவுடையார் கோவில் (கொள்ளுக்காடு) ஆத்மநாதசுவாமி ஆலயம் மூலவர்: ஆத்மநாதசுவாமி, யோகாம்பாள். அமைவிடம்⛳ தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்...