Wednesday, October 8, 2025

மயிலாடும்பாறைகுன்றக்குடி#ஞானசரஸ்வதி ஆலயம் மயிலாடும்பாறை குன்றக்குடி #ஞானசரஸ்வதி ஆலயம் 28.09.25

மயிலாடும்பாறைகுன்றக்குடி
#ஞானசரஸ்வதிஆலயம் 
மயிலாடும்பாறைகுன்றக்குடி
#ஞானசரஸ்வதிஆலயம் 

💠இது தென்னிந்தியாவிலேயே சரஸ்வதி தேவிக்கென தனியாக அமைக்கப்பட்ட கோயில்களில் ஒன்றாகும். 

💠ஞானசரஸ்வதிஆலயம் சிவகங்கை மாவட்டத்தில் குன்றக்குடி மற்றும் பிள்ளையார்பட்டிக்கு இடையில் அமைந்துள்ளது. 

💠வெகுஅருகிலேயே   குன்றக்குடி ஷண்முகநாதன் ஆலயம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயம் மற்றும் குபேரர் ஆலயம் ஆகியன அமைந்துள்ளன. 

💠குன்றக்குடியில்இருந்தோ,பிள்ளையார்பட்டியில் இருந்தோ ஆட்டோவில் இங்கு வரலாம்.

💠 மயிலாடும்பாறை பகுதியில் உள்ள மயிலாடும்பாறை ஞான சரஸ்வதி ஆலயம் என்று அறியப்படுகிறது.
 
💠இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில், அமைதியான சூழலில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.  

💠பிரதான சாலையை ஒட்டி
முழுதும்  கற்களால் கட்டப்பட்ட ஶ்ரீ ஞான சரஸ்வதி மற்றும் ஶ்ரீ ஜோதி சக்தி சொரூப வேல் கோவில்கள்.

💠நியூயார்க் வல்லப விநாயகர் ஆலயம், பிட்ஸ்பர்க் வெங்கடேஸ்வரா ஆலயம், ஹூஸ்டன் மீனாட்சி ஆலயம், சென்னை அறுபடை முருகன் ஆலயம் போன்ற ஆலயங்களை எழுப்பியவர் அமெரிக்காவில் வசிக்கும் டாக்டர் அழகப்பா அழகப்பன்.

💠 இவருக்கு முருகனுக்கு ஓர் ஆலயம் அமைக்குமாறு மீனாட்சி நாடியில் உத்தரவு வந்தது. அந்த ஆலயம் முருகனின் ஏழாம் படை வீடாக புகழ்பெற்று விளங்கும் என்றும் நாடி சொன்னது. அதன்படி ஆலயம் அமைக்க பிள்ளையார்பட்டி – குன்றக்குடி சாலையில் உள்ள மயிலாடும் பாறையைத் தேர்ந்தெடுத்தார் டாக்டர் அழகப்பா அழகப்பன். மயில்கள் அதிகம் வசித்ததாலும், அங்குள்ள ஓர் குன்றில் மயில்கள் வந்து ஆடுவதாலும் அப்பகுதிக்கு மயிலாடும் பாறை என்பது பெயர். 

⛳காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்கள், குன்றக்குடி வழியாக பழநிக்கு காவடி எடுத்து செல்லும்போது, மயிலாடும்பாறையில் காவடி ஆடிவிட்டு, ஓய்வெடுத்து செல்வது வழக்கம். 

💠ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் மண்டகப்படி விழாவில் பங்குனி உத்திரத்தன்று குன்றக்குடி ஸ்ரீ ஷண்முகநாதப் பெருமான் இந்தக் குன்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அப்படிப்பட்ட பெருமை மிக்க அந்தக் குன்றின் எதிரே உள்ள இடத்தை வாங்கிய அழகப்பன், அதற்கு ”விசாலாட்சி அழகப்பன் தோட்டம்” என்று பெயரிட்டதுடன் அங்கேயே நாடியில் வந்த உத்தரவுப்படி ”ஜோதி சக்தி சொரூப வேல் சன்னதி”யை நிர்மாணித்தார்.

💠அறுபடை வீடுகளும் நம் உடலில் உள்ள ஆறு சக்கரங்களைக் குறிக்கிறதாம். திருப்பரங்குன்றம் : மூலாதாரம், திருச்செந்தூர் : சுவாதிட்டானம், பழனி : மணிபூரகம், சுவாமிமலை : அநாகதம், திருத்தணி : விசுத்தி, ஆக்ஞை : பழமுதிர்ச்சோலை. ஏழாவதாக இருக்கும் சஹஸ்ராரத்தின் அமைவிடமே மயிலாடு ம்பாறை என நாடியில் வந்துள்ளது. ஆக, இங்கு வந்து வழிபட ஞானம் பெருகும் என்பது நாடியில் வந்திருக்கும் நல்வாக்கு. இங்கே முருகனின் ஆயுதமான வேல் தான் முருகனாக வழிபடப்படுகிறது. முருகனுக்கு ஆலயம் அமைத்தது போக எஞ்சியுள்ள இடத்தில் ஞான சரஸ்வதி க்கு ஆலயம் அமைக்க நாடியில் உத்தரவு வரவே அங்கு “ஞான சரஸ்வதி” எழுந்தருளினாள். (நன்றி: வளைதளம்)

🛕ஸ்ரீ ஞான சரஸ்வதி அறக்கட்டளை ஏற்படுத்தி காரைக்குடியை கல்வி நகரமாக்கிய வள்ளல் Dr. R.M. அழகப்பசெட்டியார் அவர்களைப் போற்றும் விதமாக இந்த ஆலயம் எழுப்பப்பட்டுள்ளதாக கல்வெட்டு ஒன்றில் காணப்படுகின்றது.

🛕 பத்மஸ்ரீ M முத்தையாஸ்தபதி அவர்கள் இந்த ஆலயத்தை நிர்மானித்துள்ளார்.

🛕ஞான சரஸ்வதி மற்றும் சக்தி சொரூப ஞான வேல் சன்னதிகள் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.

🛕சுமார் 15 அடி உயரத்தில், முழுவதும் கருங்கற்கள் கொண்டு சுற்றுப்பிரகாரத்துடன்  கூடிய ஒரு கருவரையும் அதில் வடக்கு நோக்கி மூலவராக ஸ்ரீ ஞானசரஸ்வதி உள்ளார்.
கருவரை 3 அடுக்கு கோபுரத்துடன் 5 கலசம் கொண்டு கம்பீரமாக தோற்றம் அளிக்கிறது.

🛕 கற்பகிரகத்தில் பெரிய உருவம் கொண்டு,  "ஞான சரஸ்வதி” இங்கே ஞான சொருபீணியாக, ஒரு கையில் ஞான கங்கையுடனும் மற்றொரு கையில் ஜபமாலையுடனும், கீழ்க்கரங்களில் சுவடியுடனும், ஞான முத்திரையும் காட்டி அருள்பாலிக்கிறாள். 

🔱வளாகத்தின் முன்புறம் மேற்கு பக்கம் 
'ஜோதி சக்தி சொரூப ஞான வேல்" தனி சன்னதி ஒன்றும் உள்ளது.

🔱 சுமார் 7 அடி உயரத்தில் சுற்றுப் பிரகாரத்துடன்கூடிய மண்டபத்துள் தனி கருவரையும் அதில் முழுவதும் கருங்கற்கள் கொண்டும் அமைக்கப்பட்டுள்ளது. 

💠இந்த ஆலயம் கல்வி, ஞானம் மற்றும் வளத்திற்காக வழிபடப்படுகிறது.

🧘அன்னை சரஸ்வதி இவளைப் போற்றி வணங்குவதால் கல்வி, வியாபாரத்தில் தடை, திக்குவாய் நீங்குதல், அறிவு மந்த நிலை மாறி பிரகாசித்தல் போன்ற பலன்கள் கிடைக்கின்றன. அதுமட்டுமல்ல; ஞானத்தை அள்ளித் தரும் ஞானாம்பிகையாகவும் இவள் விளங்குகிறாள். இவளை வணங்குவதன் மூலம் ஆன்மீக எண்ணங்கள் வலுப்பெறுவதுடன், நல்லுயர்வும் கிடைக்கிறது.

 🧘🏼இங்கு வந்து வழிபடும் குழந்தைகளுக்கு “அக்ஷராப்யாசம்” செய்யப்படுவதுடன் தேன் கொண்டு நாவில் சரஸ்வதி மந்திரமும் எழுதப்படுகிறது.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

💠பார்க்கப் பார்க்க பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் பேரழகுடன்  விளக்குகிறாள். பிரம்ம சொரூபிணியாக, சிவ ஞானத்தை அருளும் அம்பிகையாக இங்கு விளங்குகிறாள்.

💠இந்த பெரிய வளாகத்தில் ஒரு புறம் இந்த ஞான சரஸ்வதி ஆலயம் உள்ளது.

💠இந்த ஆலயத்தின் பின் பகுதியில் ஒரு மண்டபமும், அதில் நவராத்திரி கொலுவும் வைத்து பூசை செய்கிறார்கள்.

💠வளாகம் முழுவதும் ஏராளமான மரங்கள் அடர்ந்து நல்ல இயற்கையான சூழல் அமைத்துள்ளனர். 

🔰திறந்திருக்கும் நேரம் : காலை 7.00 மணி முதல் 12.00 வரை. மதியம் 4.30 முதல் 7.30 வரை.

🔰அருகில் வேறு எந்தவித கடைகள், கட்டிடங்கள் எதுவும் கிடையாது.

💠குருக்களுக்கு தகவல் தந்து ஆலயம் தரிசிக்கலாம்.

💠ஆலயம் நல்ல பராமரிப்பில் உள்ளது. 
💠பிரதான சாலையிலிருந்து ஆலயம் உள்ளே செல்ல இரண்டு நுழைவு வழிகள் உள்ளன. வாகனங்கள்  உள்ளே செல்லலாம்.

💠குன்றக்குடி பைபாஸ் சாலை துவக்கத்தில் இருப்பதால், சாலையில் கவனமாக சென்று ஆலயம் தரிசித்து பின் குன்றக்குடி செல்லும் பாதையில் நாங்கள் சென்றோம்.

🙏 அமைதியான இயற்கை சூழலில் ஆலய வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு முறையாவது  சென்று தரிசனம் செய்யுங்கள். ஞானம், அறிவு கிட்டும். வாழ்க்கையில் உயர்வு உண்டாகும்.

நன்றி🙏
28.09.25 ஞாயிற்றுக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 28.09.2025

No comments:

Post a Comment

வேலங்குடி பெருமாள் ஆலயம் 28.9.25

வேலங்குடி பெருமாள் ஆலயம் #வேலங்குடிபெருமாள் ஆலயம் 🛕  பெருமாள் ஆலயமும் அழகுற அமைந்துள்ளது. ராஜகோபுரம், பிரகாரம்,  உள்ளே பெரிய மண்டபம். கருடன...