Wednesday, October 8, 2025

புதுக்கோட்டை : அருள்மிகு சாந்தநாதர் உடனுறை வேதநாயகி ஆலயம் , 28.9.25

புதுக்கோட்டை : அருள்மிகு சாந்தநாதர் உடனுறை வேதநாயகி ஆலயம்
#புதுக்கோட்டை : அருள்மிகு சாந்தநாதர் உடனுறை வேதநாயகி ஆலயம்

⛳புதுக்கோட்டையின் வரலாறு தென்னகத்தின் வரலாற்றின் ஓர் அம்சமாக இருக்கிறது. மிகப் பழமையான வரலாற்றுப் பதிவுகள் கொண்ட பூமி இது ★ அதிக எண்ணிக்கையில் குகைக்கோயில்கள்,ஆயிரத்திற்க்கு மேற்பட்ட கல்வெட்டுகள், அதிகமான தொல்லியல் பழமைச் சின்னங்கள், அதிகமான ரோம பொன்நானயங்கள் கிடைத்துள்ள இடமென பல்வேறு சிறப்புகளை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை ★

🛕புதுக்கோட்டை நகரில் உள்ள சிவனாலயம்.
மூலவர்: சாந்தநாதர் அம்மன் : வேதநாயகி
தீர்த்தம்:பல்லவன் குளம்

💠திறந்திருக்கும் நேரம்: காலை 6:00 – மதியம் 12:00 மணி, மாலை 4:30– இரவு 8:30 மணி

💠புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,.

💠கோயில் பெருமைகள்:
பதினோராம் நுாற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி புரிந்த முதலாம் குலோத்துங்க சோழன் கட்டிய சிவன் கோயில் இது. ‘குலோத்துங்க சோழீஸ்வரம்’ என பெயர் பெற்ற இக்கோயில், பிற்காலத்தில் ‘சார்ந்தாரைக் காத்த நாயனார் கோயில்’ என மாறியது. இப்போது ‘சாந்தநாத சுவாமி’ என வழங்கப்படுகிறது. 
💠ஆலய ஆமைப்பு:
இக்கோவில் ஊரின் மத்தியில் பல்லவன் குளக்கரையில் கிழக்கு நோக்கி கருவறை, இடைநாழி, அர்த்தமண்டபம் மற்றும் முக மண்டபத்துடன் தென்னிந்திய கட்டிடக்கலையின் திராவிட விமான அமைப்பில் பாதபந்த அதிட்டானத்தின் மீது கட்டப்பட்டு உள்ளது. இருதள திராவிட விமானம் கருவறை மீது காணப்படுகின்றது. இறைவன் "சார்ந்தாரைக் காத்த நாயனார்" என்று அழைக்கப்பட்டு மறுவி தற்போது சாந்தநாதசுவாமி என்று அழைக்கப்படுகின்றார். இக்கோயிலின் சிறப்பாக சரபேஸ்வரர் முகமண்டபத்தில் அருள்புரிகின்றார். 

⚡இந்த கோயிலில் இருக்கக்கூடிய சுவாமிக்கு எதிரே ருத்திராட்சப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது அதன் கீழ் நந்தீஸ்வரர் காட்சி கொடுத்து வருகிறார்.

கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் இந்த சிவனை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி நிறைந்திருக்கும் என்பது ஐதீகம் சுவாமிக்கு எதிரில் ருத்ராட்ச பந்தலின் கீழ் நந்தீஸ்வரர் வீற்றிருக்கிறார். 

⚡நான்கு வேதங்களுக்கும் தலைவியாக விளங்கும் அம்பிகை ‘வேதநாயகி’ என்னும் பெயரில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். கல்விக்கடவுளாக திகழும் இந்த அம்மனை மாணவர்கள் வியாழக்கிழமை வழிபடுவது சிறப்பு.

⚡காசி ராமேஸ்வரம்: காசி விஸ்வநாதர் – விசாலாட்சி, ராமேஸ்வரம் ராமநாதர்– பர்வதவர்த்தினிக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.

⚡ இங்குள்ள பல்லவன் குளக்கரையில் அமாவாசையன்று முன்னோருக்கு தர்ப்பணம் செய்து தீபமேற்றி வழிபட்டால் பிதுர் தோஷம், முன்வினை பாவம் தீரும். கோயிலை அடுத்துள்ள பல்லவன் குளம் காசியில் பாயும் கங்கை தீர்த்தமாக கருதப்படுகிறது. இதனடிப்படையில் இங்கு வழிபடுவோருக்கு ஒருசேர காசி, ராமேஸ்வர யாத்திரை செய்த புண்ணியபலன் கிடைக்கும்.

⚡ராகுகால துர்க்கை: பிரகாரத்திலுள்ள துர்க்கை சன்னதியில் செவ்வாய், வெள்ளிக்கிழமையில் ராகு காலத்தில் விளக்கேற்றி குங்கும அர்ச்சனை செய்ய திருமணத்தடை நீங்கும். இங்குள்ள சர்க்கரை விநாயகருக்கு பக்தர்கள் தங்களின் கைகளால் சர்க்கரை அபிேஷகம் செய்ய கடன் பிரச்னை தீரும். தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு பூசணி தீபம் ஏற்ற கிரக தோஷம் நீங்கும். 

⚡அறுபத்து மூவர் சன்னதியில் சிவன் ‘காட்சி கொடுத்த நாயனார்’ என்னும் பெயரில் ரிஷபத்தின் மீது காட்சியளிக்கிறார்.

⚡திருச்சுற்றில் தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, சூரியன், சந்திரன், லட்சுமி, சரஸ்வதி, கன்னி மூல கணபதி, வள்ளி தெய்வானையுடன் முருகர், சரபேஸ்வரர், ஸ்வர்ன ஆகர்ஷண பைரவர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. கோயிலின் தீர்த்தம் பல்லவன் குளம் ஆகும்.

💠சிறப்பு
இக்கோயில் கி.பி.1071-1123இல் ஆண்ட முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மூலவர் சன்னதியின் மேல் விதானத்தில் காணப்படுகின்ற கல்வெட்டில் இக்கோயில் குலோத்துங்க சோழீச்சரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிற்காலத்தில் இக்கோயில் சார்ந்தாரைக் காத்த நாயனார் கோயில் என்றழைக்கப்பட்டது.

💠விழாக்கள்
ஆனி மாதம் பத்து நாள்கள், மாசி மகம், தெப்பத் திருவிழா ஆகியவை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஆனி பிரம்மோற்ஸவம், ஆடிப்பூரம், சம்பக சஷ்டி, தைப்பூசம், மாசிமகத்தன்று தெப்பம், மாசி வளர்பிறை திரயோதசி திதியன்று மகா பிரதோஷ விழா சிறப்பாக நடைபெறுகிறது.
ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிசேகம், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

💠 இக்கோயில் வழிபாட்டிற்காக காலை 6.00 முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 9.00 மணி வரையிலும் வழிபாட்டிற்காகத் திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

💠கோயிலை ஒட்டியுள்ள பல்லவன் குளத்தின் தென்கரையில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. பெரிய ஆஞ்சநேயர், சிறிய ஆஞ்சநேயர் என இரண்டு விக்ரஹங்கள் உள்ளன. தொடர்ந்து 12 சனிக்கிழமைகளில் துளசி மாலை சாத்தினால் நினைத்தது நிறைவேறும். வடைமாலை சாத்தி வழிபடுவோருக்கு சனி தோஷம் விலகும். 

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

⚡மிகப் பழமையான ஆலயம். 
ஊரின் நடுவில் உள்ளது. வாகனங்களில் வருவோர் மிகவும் கவனம்.
நெருக்கடியான பிரதான கடைத்தெருவில்  உள்ளது.
⚡ஆலயம் அருகில் குளம் உள்ளது.
 சீரமைக்கப்பட வேண்டியதுள்ளது. 
⚡பக்தர்கள் பிரார்த்தனையுடன் வந்து பரிகாரம், பூசைகள் செய்து கொள்ளுகிறார்கள்.
⚡ராகு கால மற்ற விஷேச நாட்களில் ஆலயம் பக்தர்கள் வருகையால், கூட்டமாக உள்ளது.

நன்றி🙏
28.09.25 ஞாயிற்றுக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 28.09.2025

No comments:

Post a Comment

வேலங்குடி பெருமாள் ஆலயம் 28.9.25

வேலங்குடி பெருமாள் ஆலயம் #வேலங்குடிபெருமாள் ஆலயம் 🛕  பெருமாள் ஆலயமும் அழகுற அமைந்துள்ளது. ராஜகோபுரம், பிரகாரம்,  உள்ளே பெரிய மண்டபம். கருடன...