அழகாபுரி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்
#அழகாபுரிமீனாட்சிசுந்தரேஸ்வரர்ஆலயம்.
⛳காரைக்குடி - அறந்தாங்கி பிரதான சாலையில், கோட்டையூரிலிருந்து கிழக்கில் 2 கி.மீ தூரத்தில் உள்ளது. சாலையில் உள்ள அழகிய நாச்சியம்மன் ஆலயம் பின்புறம் சிவன் ஆலயம் உள்ளது.
🛕ஆலயம் கிழக்கு நோக்கியது. 3 நிலை ராஜகோபுரம் அடுத்து, ஆலயம் உள்ளே
பலிபீடம், நந்தி அடுத்து பைரவர், அம்பாள் தெற்கு நோக்கியும், சுவாமி கிழக்கு நோக்கியும் தனித்தனி சன்னதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.
🛕ஒரே பிரகாரத்தில், அழகிய தெட்சினாமூர்த்தி, சேக்கிழாருடன் நால்வர், லிங்கோத்பவர், வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகனார் மயில்வாகனத்துடன், மகாலெட்சுமி, சண்டிகேஸ்வரர் உள்ளனர்.
🛕இவ்வாலயம், 1954 ல் அழகாபுரி பிள்ளையார்பட்டி கோவில், ராம. பி. அரு. அழகப்ப செட்டியார் அவர்களால், தமது சொந்தமாகத் தொடங்கப் பெற்று, அவரது மனைவி அழ. தெய்வானை ஆச்சியால் பூர்த்தி செய்யப்பட்டு, 7.5.1954 அன்று மகா கும்பாபிஷேகம் செய்யப்பெற்றது. மீண்டும் 2.07.2014 ல் அழ .தெய்வானை ஆச்சியின் பேரன் அவர்களாலும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.
🪷ஆலயம் தூய்மையாகவும், முறையான பூசைகளுடனும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
♻️பிரதானசாலையில் உள்ள அழகிய நாச்சியம்மன் ஆலயம் அருகில்
வாகனங்களை பிரதான சாலை ஒட்டி நிறுத்திவிட்டு நடந்து சென்று தரிசிக்கலாம்.
♻️அருகில் சில வீடுகள் மட்டுமே உள்ளன.
கடைகள் ஒன்றும் இல்லை
நன்றி🙏
28.09.25 ஞாயிற்றுக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 28.09.2025
No comments:
Post a Comment