#நச்சாந்துப்பட்டி சிதம்பரேஸ்வரர்ஆலயம்
💠#நற்சாந்துபட்டி (Nachandupatti) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர் ஆகும்.
புதுக்கோட்டை - பொன்னமராவதி சாலையில் உள்ள ஊர்.
💠சென்னைக்கு நேரடி பேருந்து வசதி உள்ளது. புதுக்கோட்டை மற்றும் பொன்னமராவதி ஊர்களிலிருந்து பேருந்து சேவை அரசு மற்றும் தனியாரால் இயக்கப்படுகிறது.
⛳இங்கு அதிகமாக நகரத்தார் இனமக்கள் வசிக்கின்றனர். பலவித திருவிழாக்களும், சமய சடங்குகள் பலவும் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும்.
⛳இந்த ஊரினைச் சுற்றி புதூர், கோட்டூர் போன்ற கிராமங்கள் உள்ளன.
⛳பல பிரபலமான வழிபாட்டு இடங்கள், கோயில்கள் நச்சாந்துபட்டியைச் சுற்றி உள்ளன. 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கருப்பர் கோவில் பிரசித்தி பெற்றது. மலைக் கோவில் குமரன் கோவில் பிரசித்தம்.
⛳நற்சாந்துபட்டியின் உண்மையான பெயர் திருமலை சாம் உத்திரம் என்பதாகும். ஊமத்துரை (கட்டபொம்மனின் இளைய சகோதரர்) குடியிருக்க திருமயத்தில் ஒரு கோட்டை கட்டினார். அக்கோட்டையினைக் கட்டுவதற்கு தேவையான சாந்து, நச்சாந்துபட்டியிலிருந்தே கொண்டு வரப்பட்டது. ஆதலால் நல்ல சாந்து பட்டி என்ற அழைக்கப்பட்டது. பின்னர் நற்சாந்துபட்டி என்று மருவியது.
⛳இங்குள்ள பிரபலமான பெரிய சிவன் ஆலயம் சிவகாமி உடனுறை சிதம்பரேஸ்வரர் ஆலயமாகும்.
🛕ஆலய அமைப்பு :
முழுவதும் கற்றளி அமைப்பு. கிழக்குப் பார்த்து கம்பீரமாக இருக்கும் 7 நிலை ராஜகோபுரம், இருபுறமும், கனபதி, முருகன் தனி தனி சிறு சன்னதிகளுடன் உள்ளன. தென்புறம் அழகிய பெரிய குளம் அமைக்கப்பட்டுள்ளது.
🛕ராஜகோபுரம், அடுத்து வரும் பிரகாரம் தாண்டினால், முன்மண்டபத்துடன் உள்ள 5 நிலை உடைய கோபுரம். ஆலயம் உள்ளே நுழைந்தால் பலிபீடம், கொடிமரம், நந்தி உண்டு. கிழக்குப் பார்த்து சுவாமியும், தெற்குப் பார்த்து அம்பாளும் அருள் தருகிறார்கள்.
🛕தெற்குப் பிரகாரத்தில் 63 நாயன்மார்களின் விக்ரஹங்கள் உள்ளன
அருட்பத்து மூவர் எதிரே உள்ள கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்க்கை உள்ளனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தி மிகஅழகாக வடிவமைக்கப்பட்டுள்ளார்.
🛕பிரகாரத்தை சுற்றி வரும்போது விநாயகர், சோமாஸ்கந்தர், முருகன், வள்ளி, தெய்வானையுடன் மற்றும் சரஸ்வதி, கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், ஆகிய சன்னதிகள் உள்ளன.
🔰ஆலயம் உருவான வரலாறு :
♻️தனவணிகர்களான நாட்டுக்கோட்டை நகரத்தார்கள், சோழப்பேரரசின் வணிகத் துறைமுக நகரமான காவிரி பூம்பட்டினத்தில் இருந்து கிபி 13 ஆம் நூற்றாண்டு வாக்கில் பாண்டிய நாட்டிற்கு புலம்பெயர்ந்தவர்கள்.
💐இந்த நகரத்தார்கள் சமூகம் தங்களுக்கென ஒரு தனி பாரம்பரியத்தைக் கொண்டது. சைவத்தை தழுவிய நகரத்தார்கள் ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமானை தலைவராக ஏற்று வணங்குபவர்கள். ஊன், உடம்பு, அநித்தியம் என்ற கருத்தில் வேரூன்றியவர்கள். தாங்கள் அறவழியில் ஈட்டிய பொருளை தெய்வத்தொண்டின் மூலம் மக்களின் மனங்களை செம்மைப்படுத்தும் நோக்குடன் சிவ ஆலயங்களை உருவாக்குவதிலும், நலிந்த ஆலயங்களை புனரமைப்பு செய்வதிலும், அதை நிர்வகிப்பதிலும் முழு மனதுடன் ஈடுபடுபவர்கள்.
🪷புலம் பெயர்ந்த நகரத்தார்களுக்கு பாண்டிய மன்னனால் 9 சிவன் கோயில்கள் நகரத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. நகரத்தார்கள் அந்த 9 கோயில், அதன்உட்பிரிவுகளை சார்ந்து அறப்பணிகளை செய்து வருகிறார்கள்.
🪷இதில் ஐந்து கோயிலைச் சார்ந்த நகரத்தார்கள் (இலுப்பக்குடி, வைரவன் கோயில், இளையாத்தாகுடி, பிள்ளையார்பட்டி மற்றும் மாத்தூர்) திருமலை சமுத்திரம் என்னும் நச்சாந்துபட்டியில் சுமார் 17 ஆம் நூற்றாண்டில் இருந்து வசித்து வருகிறார்கள்.
🪷நகரத்தார்கள் நச்சாந்துபட்டிக்கு புலம்பெயர்ந்து வந்த போது இங்கு அரச மரத்தடியில் அமர்ந்திருந்த பிள்ளையார் ஒன்றே வழிபாட்டு தெய்வமாக இருந்து வந்தது. இது இன்று சின்ன ஊரணி பிள்ளையார் என்று அனைத்து ஜாதி மக்களின் வழிபாட்டில் இருந்து வருகிறது.
🪷கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற முதுமொழிக்கு இணங்க திருமலை சமுத்திரம் என்ற நச்சாந்துபட்டி நகரத்தார்கள் 1903 ஆம் ஆண்டு வாகில் தாங்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு சிவன் கோயிலை கட்ட புதுக்கோட்டை மன்னரிடம் இருந்து இட ஒதுக்கீடு பெற்றார்கள். பின் அனைத்து நகரத்தார்களின் பங்களிப்புடன் பெரிய கற்கோயிலாக சிவகாமி அம்மாள் உடனுறை சிதம்பரேசுவரர் திருக்கோயிலை 1928 ஆம் வாக்கில் உருவாக்கி நகரத்தாரின் வழிபாட்டுக்கு கொண்டு வந்தார்கள்.
🪷நச்சாந்துபட்டியில் வசித்து வந்த இந்த 5 கோயில் நகரத்தார்கள், மேற்படி கோயிலை உருவாக்கி, தங்கள்
வாழ்வாதாரம் மேம்பட ஆரம்பித்த உடன், பெருகிவரும் பொது சொத்துகளை பாதுகாத்து, ஆக்கப்பூர்வமான வழியில் பெருக்கி, நிலையான தர்மங்களை தொடர்ந்து செய்ய, நகரத்தார் சங்கம் என்ற புது அமைப்பு 1978 ஆம் ஆண்டு வாகில் உருவாக்கம் செய்தும், கோயில் பூசைகள், விழாக்களைத் தொய்வின்றி நடத்த ஏற்பாடு செய்தார்கள்.
🪷இதன் மூலம் சிவன் கோயிலில் ஐந்து கால நித்திய பூஜை தங்கு தடை இன்றி நடத்திக் கொண்டும், ஆலயத்தை 12 வருடத்திற்கு ஒரு முறை திருக்குட நன்னீராட்டு செய்தும், ஆகம விதிகளை பாதுகாத்து வருகிறார்கள்.
🪷இதில் மேலும் ஒரு மகுடமாக நகரத்தாரின் சீரிய முயற்சியோடும், பங்களிப்போடும், சிவகாமி அம்மை உடனுறை சிதம்பரேசுவரருக்கு, எழில் மிகு கல் மண்டபத்துடன் கூடிய ராஜகோபுரம் எழுப்பி அத்துடன் திருக்குட நன்னீராட்டு (2021ஆம் ஆண்டு) செய்துள்ளனர்.
சிவன் கோயில் விழாக்கள் அனைத்தும் உள்ளுர் பெரியோர்களாலும் நகரத்தார் சங்கத்தின் வழிகாட்டுதலோடு மிகச் சிறப்பாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது .
🪷அரசர்கள் காலத்திற்குப்பின்பு ஆலயத் திருப்பணி செய்தவர்களில் முதன்மையானவர்கள் நகரத்தார்கள் என்று காஞ்சி மாமுனிவரால் பாராட்டப்பட்டவர்கள்.
💐நகரத்தார்கள் உலகில் எல்லா இடங்களுக்கும் சென்று தொழில் செய்து சிறப்புற்று வாழ்வதோடு மட்டுமல்லாது, சென்ற இடமெல்லாம் சிறப்பு சேர்த்து, சமய உணர்ச்சியை பரப்பி, புராதனக் கலைச்செல்வத்தைப் போற்றி தேசத்தின் பண்டையப் பெருமை, பண்பாடுகளை பாதுகாத்து மொழி, தேச அமைப்புகளை
வளர்ப்பவர்கள்; மனதில் கொண்ட காரியங்களை அற்புதமாக, சாமர்த்தியமாக சாதித்துக்காட்டிவரும் நகரத்தார்கள் சமூகம் போற்றத்தக்கது🙏
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
சிறிய ஊர். பெரிய கடைகள் ஏதும் இல்லை. நிறைய வீடுகள் உள்ளன.
ஆலயம் 12 மணிக்குள் நடை சாத்தி 4. மணிக்கு திறக்கிறார்கள்.
ஆலயம் மிகவும் தூய்மையான பராமரிப்பில் உள்ளது.
நன்றி🙏
28.09.25 ஞாயிற்றுக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 28.09.2025
No comments:
Post a Comment