#புதுக்கோட்டை : புவனேஸ்வரி அம்மன் திருக்கோயில்,
புதுக்கோட்டை ராஜாகுளக்கரையில் புவனேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
முன்பு இந்த இடம் ஜட்ஜ் சுவாமிகள் அவர்களின் ஆஸ்ரமமாக இருந்த இடத்தை சாந்தானந்தா சுவாமிகள் மேற்கொண்டு அதிஷ்டானமாக்கி இருக்கிறார்.
புவனேஸ்வரி கோவிலுக்கு அதிஷ்டானம் என்று பெயர். 1936-ஆம் ஆண்டு முதல் இந்தக்கோவில் இருக்கிறது.
நுழைந்ததும் ஜட்ஜ் சுவாமிகள் சமாதி இருக்கும். இடது பக்கத்தில் அஷ்டதச புஜ லட்சுமி எதிரே புவனேஸ்வரி. புவனேஸ்வரியின் எதிரில் ஸ்ரீ சக்கர மேரு வைத்து பூஜை நடைபெறும். கற்பூர ஆரத்தி நேரத்திலும் இருவருக்கும் ஒரே சமயத்தில் ஆரத்தி நடைபெறும். காலை மாலை மட்டும்தான் ஆரத்தி. நடுவில் தரிசனம் மட்டும்தான்.
இருவரின் திருஉருவத்தையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். நேர் எதிரில் சன்னிதி இருவருக்கும். ஐயர் வகுப்பினர் புடவை கட்டும் மடிசாரில் அஷ்டதச புஜ லட்சுமிக்கு அலங்காரம் செய்திருப்பார்கள். எதிரில் பெரிய யாக குண்டம் இருக்கும். இங்கே வருடத்திற்கு ஒரு முறை செய்யப்படும் யாகம் மிக பிரசித்தம். அது முடிந்த உடன் ஊரில் மழை நிச்சயம்.
சரஸ்வதி ஞான ரூபம், லட்சுமி க்ரியா ரூபம், மஹா காளி இச்சா ரூபம் - இந்த மூன்று சக்திகளும் சேர்ந்த சாமுண்டீஸ்வரி அஷ்டதச புஜ லட்சுமியாக அன்னை இங்கே வணங்கப்படுகிறாள்.
கோவில் விதிமுறைகள்
கோவில் வாசலிலேயே தாமரை மலர்கள் விற்றுக்கொண்டிருப்பார்கள். அர்ச்சனை எல்லாம் கிடையாது.
கோவில் சிறப்பு
கோவிலைச் சுற்றி வரும்பொழுது பஞ்சமுக பிள்ளையார், பஞ்சமுக ஆஞ்சநேயர், தன்வந்த்ரி, சாஸ்தா, நாமே அபிஷேகம் செய்யும் வகையில் லிங்கம், பொற்பனையான் ஆகிய மூர்த்திகள் இருக்கும். படு சுத்தமாக நிசப்தமாக இருப்பது சிறப்பு.
இந்த ஆலயத்தில் ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீ பால முருகன் அர்த்த மண்டபத்தில் அருள் பாலிக்கிறார்கள். மூலஸ்தானத்தில் கம்பீரமாக மிகவும் அழகாக சுமார் 4.5 அடியில் அமர்ந்த கோலத்தில் புன்னகை ததும்ப ஸ்ரீ சக்கர மகா மேரு உடன் அருள்புரிகின்றாள் தேவி ஸ்ரீ புவனேஸ்வரி. ஆலயத்தின் சிறப்பாக ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயமும், நவகிரகங்கள், காலபைரவர் சந்நிதி, விசேஷமாக யோகம் அருளும் சனீஸ்வரர் தனி சந்நிதி மற்றும் நாக தேவதைகள் உள்ளது. மூலஸ்தானத்தை சுற்றி பஞ்ச கோஷ்ட தெய்வங்களாக காயத்திரி தேவி, வைஷ்ணவி தேவி, பிராம்மகி, துர்க்கை, லட்சுமி தேவி, அங்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து நலன்களையும் அன்னையிடம் இருந்து பெற்றுத் தருகிறார்கள்
இங்கே கோவில் சுத்தமான தசாங்கம் கிடைக்கும். அதைக் கோனில் வைத்து ஏற்றுவது ஒருக்கலை. சுகந்தச்ச மனோஹரமாக வாசம் தூக்கும். புவனேஸ்வரி குங்குமம் எந்தக் கலப்பும் இல்லாத மஞ்சள் குங்குமம்.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் ஸ்கந்தாஸ்ரமம் இருக்கிறது. அதுவும் சாந்தானந்தா சுவாமிகளால் அமைக்கப்பட்டதுதான். சேலம் ஸ்கந்தாஸ்ரமமும் இந்த அமைப்பினருடையதுதான்.
1936ஆம் ஆண்டில் கட்டப் பட்டதாக அறியப்படும் இத்தலத்தில்,ஶ்ரீ புவனேஷ்வரி அம்மன் அமர்ந்தஅருட்கோலத்திலும்,ஶ்ரீ அஷ்டதச புஜ லக்ஷ்மி துர்கா தேவி நின்ற திருக் கோலத்திலும்திருஅருட்காட்சியளிக்கின்றனர்.
நமது தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில்,புதுக்கோட்டை, ராஜாகுளக்கரையில் அமைந்துள்ள இந்த புவனேஷ்வரி அம்மன் ஆலயமும் ஒன்று என்பது தலச்சிறப்பு.
'தெய்வத்திரு' சதாசிவ பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமி எனும் ஜட்ஜ் சுவாமிகளின் ஆஸ்ரமமாக இருந்த இத்தலத்தினை, சாந்தானந்தா சுவாமிகள் மேற்கொண்டுஅதிஷ்டானமாக்கி இருக்கிறார்.
( புவனேஷ்வரி அம்மன் ஆலயத்திற்கு அதிஷ்டானம் எனும் பெயராம்).
ஜட்ஜ் சுவாமிகளின்அதிஷ் டானமாக (ஜீவசமாதியாக) இருந்தாலும், அன்னை புவனேஷ்வரிஅருட்குடிகொண்டிருப்பதால், இத்தலம் புவனேஷ்வரி அம்மன் ஆலயம் என்றே பக்தர் களால்அழைக்கப்படுகிறது.
25-தலை கொண்ட
ஶ்ரீ விஸ்வரூப சதாசிவர்
சுதை சிற்பம் காண பரவசம்.
உடல் திறனும், உள்ளம் ஆற்றலும் மேன்மையுற நடைபெறும்பவுர்ணமி வழிபாடும், இல்லம் வளம் பெற நடைபெறும்
நவராத்திரி விழாவும்
இத்தலத்தின் சிறப்புமிகு விசேஷ காலங்களாகும்.
பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
⚡ நாங்கள் 2020ல் வந்த போது பழைய ஆலயம் புனரமைப்பில் இருந்தது.
(20.02.2020)
⚡தற்போது, புதிய ஆலயம் மிக பிரமாதமாகக் கட்டப்பட்டுள்ளது. இன்று 28.9.25 மீள் தரிசனம். அம்பாள் சரஸ்வதி அலங்காரம் ஹோமம். துர்க்கா பூசை இரவு 8.00 மணி அளவில் நடந்தது.
⚡ஊரின் நடுவில் உள்ளது. ⚡வாகனங்களில் வருவோர் மிகவும் கவனம்.
நெருக்கடியான பிரதான கடைத்தெருவில் உள்ளது. வாகனங்கள் நிறுத்த ஆலயம் எதிரில் இடம் உள்ளது.
⚡பக்தர்கள் பிரார்த்தனையுடன் வந்து பரிகாரம், பூசைகள் செய்து கொள்ளுகிறார்கள்.
நன்றி🙏
28.09.25 ஞாயிற்றுக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 28.09.2025
No comments:
Post a Comment