Tuesday, July 27, 2021

வினாவுரை - சம்பந்தர் அமுதம் - திருத்தெளிச்சேரி - பதிவு - 11 பாடல் 11

#சம்பந்தர்அமுதம்
#தலப்பெருமை #பேரருட்திறன்
#வினாவுரை
பதிவு : 11
🛐பக்தியால் தமிழும், தமிழால் பக்தியும் வளர்த்த தெய்வப்பிறவி, அருள் ஞானசம்பந்தரின் அற்புத பதிகங்களின் சிறப்புக்களின் சில துளிகள் பருகுவோம்.

⚜️வினாவுரை அமைப்பில் உள்ள பாடல்களைப் பற்றிய சிந்தனைகள்
    
🌈#அமுதப்பதிகங்கள்   
              அமைப்புச்சிறப்புகள்
பதிவு: 11
வினாவுரை அமைப்பு என்றால் என்ன?
♻️இறைவன் சிறப்புகளை வினவுதல் போல கேள்வி எழுப்பி அதன் விடையை உட்பொருளாக உணர்த்தும் அமைப்பில் பாடல் அமைந்து வருவது. 
🛐1️⃣1️⃣
-எட்டுத்திக்கிலும், பொழில் சூழ விளங்கும் பதி எது?
வினா?
_இப்பதிகச் சிறப்பு யாது?

விளக்கம்: 
இரண்டாம் திருமுறை 
பதிகம்.2.139
தலம் - திருத்தெளிச்சேரி 
பாடல் முதலடி:  'பூவலர்ந்தன
பண்: இந்தளம்
வினாவுரைப் பதிகம்
பாடல்: 11

திக்கு லாம்பொழில் சூழ்தெளிச் சேரி எம் செல்வனை
மிக்க காழியுண் ஞானசம் பந்தன் விளம்பிய
தக்க பாடல்கள் பத்தும் வல்லார்கள் தடமுடித்
தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே.

பொருள் :
எட்டுத்திக்கிலும், பொழில் சூழ விளங்கும் தெளிச்சேரியில் வீற்றிருக்கும் எமது செல்வமாகிய பரமனை, எக்காலத்திலும் மிக்கு விளங்கும் காழிப் பகுதியில் விளங்கும் ஞானசம்பந்தன் விளம்பிய தகைமை பொருந்திய இத்திருப் பதிகத்தை மனதார நாவினால் சொல்லினாலே, புகழ் மிக்க தேவர்கள் சூழ விளங்குவார்கள்.

சிறப்பு:
இப்பதிகத்தினை மனதார நாவினால் சொல்லுதலை உணர்த்தும் வகையில் சொல்லிலே என்று குறிப்பிட்டுள்மை.
🛐ஞானசம்பந்தரின் பதிகச் சிறப்பு
 ஒவ்வொரு பாடலும் 4 வரிகள், அதில் முதல் இரு வரிகளில், 
தலச்சிறப்பும், அடுத்த இரு வரிகளின் இறைவரின் அருட்சிறப்பும் வெளிப்படுத்தும் அற்புத பதிகம்.
முதல் இருவரிகளில் ......

1.திருத்தளிச்சேரி தலத்தின் இயற்கை வளம் பக்திச் சிறப்பும், மனிதர் மான்பும், குறிப்பிட்டு இப்பதியில் வசிப்பவரே - திருத்தெளிச்சேரியீர் என்ற இறைவரை விளித்தது.

அடுத்த இருவரிகளில்
2.இறைவரின் அருட்பேராற்றலை குறிப்பிட்டு, வியந்து வினவுகிறார்.
💥இதுகாறும், திருமுறையில் தமிழ் ஞானசம்பந்தர் அருளிய வினாவுரை அமைப்பு பதிகங்களை சிந்தித்தோம்.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர்; பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
     🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽
முன்பதிவு :
https://m.facebook.com/story.php?story_fbid=5936540046421203&id=100001957991710

Monday, July 26, 2021

வினாவுரை - சம்பந்தர் அமுதம் - திருத்தெளிச்சேரி - பகுதி - 10 - பாடல் 10

#சம்பந்தர்அமுதம்
#தலப்பெருமை #பேரருட்திறன்
#வினாவுரை
    
🌈#அமுதப்பதிகங்கள்   
              அமைப்புச்சிறப்புகள்
பதிவு: 10
வினாவுரை அமைப்பு என்றால் என்ன?
♻️இறைவன் சிறப்புகளை வினவுதல் போல கேள்வி எழுப்பி அதன் விடையை உட்பொருளாக உணர்த்தும் அமைப்பில் பாடல் அமைந்து வருவது. 

🛐🔟
10.வேத மந்திரங்களைக் கூறும் அந்தணர்கள், தவம் மிக்கவர்கள், செந்து என்னும் இசையின் வகையாய்ப் பத்தியின் வழிமொழி நவிலும் மாதர்கள் ஆகியோர் விளங்கும் பதி எது?

சாக்கியர், சமணர் நீக்கிவித்தது ஏன்?

விளக்கம்: 
இரண்டாம் திருமுறை 
பதிகம்.2.139
தலம் - திருத்தெளிச்சேரி 
பாடல் முதலடி: 'பூவலர்ந்தன
பண்: இந்தளம்
வினாவுரைப் பதிகம்
பாடல்: 10

மந்தி ரத்தரு மாமறை யோர்கள் தவத்தவர்
செந்தி லங்கு மொழியவர் சேர் தெளிச் சேரியீர்.

வெந்த லாகிய சாக்கிய ரோடு சமணர்கள்
தந்தி றத்தன நீக்குவித் தீர்ஓர் சதிரரே

பொருள் :
வேத மந்திரங்களைக் கூறும் அந்தணர்கள், தவம் மிக்கவர்கள், செந்து என்னும் இசையின் வகையாய்ப் பத்தியின் வழிமொழி நவிலும் மாதர்கள் ஆகியோர் விளங்கும் தெளிச்சேரியில் வீற்றிருக்கும் பெருமானே!

 பயனற்றனவாகிய சாக்கியர், சமணர் ஆகியோரின் செயலை நீக்குவித்த ஈசனே, நீரே வித்தகர்.

சிறப்பு:
 தலத்தில் வாழும் மாந்தர்களின் பக்திச் சிறப்பும், செயல்பாடும் விளக்கி, பயனற்றன பிற மதத்தவர் செயல்பாடுகளை நீக்கிய ஈசரின் சிறப்பும் குறிப்பிடத்தக்கது.
🛐ஞானசம்பந்தரின் பதிகச் சிறப்பு
 ஒவ்வொரு பாடலும் 4 வரிகள், அதில் முதல் இரு வரிகளில், 
தலச்சிறப்பும், அடுத்த இரு வரிகளின் இறைவரின் அருட்சிறப்பும் வெளிப்படுத்தும் அற்புத பதிகம்.
முதல் இருவரிகளில் ......

1.திருத்தளிச்சேரி தலத்தின் இயற்கை வளம் பக்திச் சிறப்பும், மனிதர் மான்பும், குறிப்பிட்டு இப்பதியில் வசிப்பவரே - திருத்தெளிச்சேரியீர் என்ற இறைவரை விளித்தது.

அடுத்த இருவரிகளில்
2.இறைவரின் அருட்பேராற்றலை குறிப்பிட்டு, வியந்து வினவுகிறார்.
💥இதுகாறும், திருமுறையில் தமிழ் ஞானசம்பந்தர் அருளிய வினாவுரை அமைப்பு பதிகங்களை சிந்தித்தோம்.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர்; பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙇‍♂️🙏🙇‍♂️🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽
முன்பதிவு:
https://m.facebook.com/story.php?story_fbid=5931695376905670&id=100001957991710

Sunday, July 25, 2021

வினாவுரை - சம்பந்தர் அமுதம் - திருத்தெளிச்சேரி- பகுதி 9 - பாடல் த

#சம்பந்தர்அமுதம்
#தலப்பெருமை #பேரருட்திறன்
#வினாவுரை
    
🌈#அமுதப்பதிகங்கள்   
              அமைப்புச்சிறப்புகள்
பதிவு: 9
வினாவுரை அமைப்பு என்றால் என்ன?
♻️இறைவன் சிறப்புகளை வினவுதல் போல கேள்வி எழுப்பி அதன் விடையை உட்பொருளாக உணர்த்தும் அமைப்பில் பாடல் அமைந்து வருவது. 

🛐9️⃣
9.கடற்காற்றானது அலைகளாகிய கைகளால் கரைக்கு நீரை அள்ளி வீச, கானலும் சேல் என்னும் மீன்கள் பாயும் வயல் வளமும் விளங்கும் பதி எது?

திருமாலும், பிரமனும் ஓலமிட்டு ஓடியது ஏன்?

விளக்கம்: 
இரண்டாம் திருமுறை 
பதிகம்.2.139
தலம் - திருத்தெளிச்சேரி 
பாடல் முதலடி:  'பூவலர்ந்தன
பண்: இந்தளம்
வினாவுரைப் பதிகம்
பாடல்:9.

காலெ டுத்த திரைக்கை கரைக்கெறி கானல்சூழ்
சேல டுத்த வயற்பழனத் தெளிச்சேரியீர்

மால டித்தல மாமல  ரான்முடி தேடியே
ஒல மிட்டிட எங்ஙனம் ஓருருக் கொண்டதே

பொருள் :
கடற்காற்றானது அலைகளாகிய கைகளால் கரைக்கு நீரை அள்ளி வீச, கானலும் சேல் என்னும் மீன்கள் பாயும் வயல் வளமும் விளங்கும் தெளிச்சேரியில் வீற்றிருக்கும் பெருமானே!
திருமால் உமது திருவடியும், பிரமன் உமது திருமுடியும் தேடியும் காணப்பெறாமல் ஓலம் இட்டு வருந்த, ஓர் உருவத்தைக் கொண்டு விளங்கியது எங்ஙனம்!

சிறப்பு:
கால்களால் திருக்கோயில் வலம் வருதலையும், கைகளால் கூப்பித் தொழுதலும் போன்று, கடல்காற்றையும் கடல் அலையையும், கரைக்கு நீரைத் தருவது உவமைக் கவிதை சிறப்பாகும். 
🛐ஞானசம்பந்தரின் பதிகச் சிறப்பு
 ஒவ்வொரு பாடலும் 4 வரிகள், அதில் முதல் இரு வரிகளில், 
தலச்சிறப்பும், அடுத்த இரு வரிகளின் இறைவரின் அருட்சிறப்பும் வெளிப்படுத்தும் அற்புத பதிகம்.
முதல் இருவரிகளில் ......

1.திருத்தளிச்சேரி தலத்தின் இயற்கை வளம் பக்திச் சிறப்பும், மனிதர் மான்பும், குறிப்பிட்டு இப்பதியில் வசிப்பவரே - திருத்தெளிச்சேரியீர் என்ற இறைவரை விளித்தது.

அடுத்த இருவரிகளில்
2.இறைவரின் அருட்பேராற்றலை குறிப்பிட்டு, வியந்து வினவுகிறார்.

🌺 *திருத் தெளிச்சேரி பார்வதீசுவரர் திருக்கோயில்* :  பற்றிய சில சிறப்புக் குறிப்புகள்:

🟪திருத் தெளிச்சேரி காரைக்கால் மாநகரின் வடபால், காரைக்கால் பெருவண்டி நிலையத்திற்கு மேற்கில் மிக அருகே உள்ளது.

✡️மேற்கு பார்த்த தலம்
சுவாமி : பார்வதீஸ்வரர்
அம்பாள் : சுயம்வர தபஸ்வினி அம்பாள்.

🕉️ஆலயம் முழுதும் கற்கோவில். சுவாமி மேற்கு பார்த்தும், அம்மன் தெற்கு பார்த்தும் தனித்தனி சன்னதியாக இருப்பினும் ஒரே பிரகாரத்தால்  இணைக்கப்பட்டது.

⚛️வெளிப் பிரகாரத்தில் நந்தவனம் அமைத்து அடியார்கள் பராமரிப்பில் உள்ளது.

✡️வேடுவ மூர்த்தி கோலத்துடன் சுவாமி அம்மன் தனி.

🔯தெற்கு புறம் 63 மூவர்.

🕉️திருமண தடை நீங்க வழிபட இவ்வாலயம் சிறப்பு. 

🔯பங்குனியில் 7 நாள்கள் சூரிய பூசை
- விதை தெளி உற்சவம் சிறப்பு.

☸️அடியார்களால் மாதம் ஒரு முறை 63 நாயன்மார்களுக்கும் அபிஷேக ஆராதனை மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

 🟩 *காரைக்கால் அம்மையார்  வழிபட்டுத் திருப்பணி செய்த கோயில்*.    

🛐புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 4 பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று.

✡️- புதுவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

- ☸️புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 4 பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று.

- 🛐மிகப் பழமையான ஆலயம் நகரத்தார்களால், புனரமைக்கப்பட்ட ஆலயம்.
💥இதுகாறும், திருமுறையில் தமிழ் ஞானசம்பந்தர் அருளிய வினாவுரை அமைப்பு பதிகங்களை சிந்தித்தோம்.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர்; பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்     🙇‍♂️🙏🙇‍♂️ 🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽
முன்பதிவு :
https://m.facebook.com/story.php?story_fbid=5920923011316240&id=100001957991710

Saturday, July 24, 2021

வினாவுரை - சம்பந்தர் அமுதம் - திருத்தெளிச்சேரி - பதிவு 8 பாடல் 8

#சம்பந்தர்அமுதம்
#தலப்பெருமை #பேரருட்திறன்
#வினாவுரை
    
🌈#அமுதப்பதிகங்கள்   
              அமைப்புச்சிறப்புகள்

பதிவு: 8
வினாவுரை அமைப்பு என்றால் என்ன?
♻️இறைவன் சிறப்புகளை வினவுதல் போல கேள்வி எழுப்பி அதன் விடையை உட்பொருளாக உணர்த்தும் அமைப்பில் பாடல் அமைந்து வருவது. 
🛐8️⃣
8.கொத்தாக உள்ள மலர்கள் இரைந்தது போன்ற அடர்ந்த மென்மையான கூந்தலும், குயில் போன்று இனிமையான இசைக் குரலும், சித்திரக்கொடி போன்ற நுண்மையான இடையும் கொண்ட மகளிர் விளங்கும், மாளிகைகள் கொண்ட தலம் எது?

இரவணனின்,  இருபது கரங்களையும் நெறித்தது ஏன்?

விளக்கம்: 
இரண்டாம் திருமுறை 
பதிகம்.2.139
தலம் - திருத்தெளிச்சேரி 
பாடல் முதலடி:  'பூவலர்ந்தன
பண்: இந்தளம்
வினாவுரைப் பதிகம்
பாடல் : 8
கொத்தி ரைத்த மலர்க்குழ லாள்குயில் கோலஞ்சேர்
சித்தி ரக்கொடி மாளிகை சூழ்தெளிச்சேரியீர்

வித்த கப்படை வல்ல அரக்கன் விறற்றலை
பத்தி ரட்டிக் கரநெரித் திட்டதும் பாதமே

பொருள் :
கொத்தாக உள்ள மலர்கள் இரைந்தது போன்ற அடர்ந்த மென்மையான கூந்தலும், குயில் போன்று இனிமையான இசைக் குரலும், சித்திரக்கொடி போன்ற நுண்மையான இடையும் கொண்ட மகளிர் விளங்கும், மாளிகைகள் கொண்ட தெளிச்சேரி பெருமானே!

பிரமதேவனால், வரம் பெற்று, உயர்ந்த படைகள் கொண்ட இராவணனின் வலிமை பொருந்திய தலைகள் பத்தும், இருபது கரங்களும் தெரியுமாறு செய்து, அருள் புரிந்தது உமது திருப்பாதமே.

சிறப்பு:
அழகும், வளமும் மிக்க பெண்கள் வசிக்கும் தலச்சிறப்பும்,
பத்து தலைகள், இருபது கரங்கள், கொண்ட இராவணனை நெரித்த ஆற்றலை வியந்தது.
🛐ஞானசம்பந்தரின் பதிகச் சிறப்பு
 ஒவ்வொரு பாடலும் 4 வரிகள், அதில் முதல் இரு வரிகளில், 
தலச்சிறப்பும், அடுத்த இரு வரிகளின் இறைவரின் அருட்சிறப்பும் வெளிப்படுத்தும் அற்புத பதிகம்.
முதல் இருவரிகளில் ......

1.திருத்தளிச்சேரி தலத்தின் இயற்கை வளம் பக்திச் சிறப்பும், மனிதர் மான்பும், குறிப்பிட்டு இப்பதியில் வசிப்பவரே - திருத்தெளிச்சேரியீர் என்ற இறைவரை விளித்தது.

அடுத்த இருவரிகளில்
2.இறைவரின் அருட்பேராற்றலை குறிப்பிட்டு, வியந்து வினவுகிறார்.

💥இதுகாறும், திருமுறையில் தமிழ் ஞானசம்பந்தர் அருளிய வினாவுரை அமைப்பு பதிகங்களை சிந்தித்தோம்.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர்; பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️

     🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽
முன்பதிவு:
https://m.facebook.com/story.php?story_fbid=5906357959439412&id=100001957991710

Tuesday, July 20, 2021

வினாவுரை - சம்பந்தர் அமுதம் - திருத்தெளிச்சேரி - பதிவு - 7 பாடல் 7

#சம்பந்தர்அமுதம்
#தலப்பெருமை #பேரருட்திறன்
#வினாவுரை
    
🌈#அமுதப்பதிகங்கள்   
              அமைப்புச்சிறப்புகள்
பதிவு: 7
வினாவுரை அமைப்பு என்றால் என்ன?
♻️இறைவன் சிறப்புகளை வினவுதல் போல கேள்வி எழுப்பி அதன் விடையை உட்பொருளாக உணர்த்தும் அமைப்பில் பாடல் அமைந்து வருவது. 
🛐7️⃣
7.மலர்க் கொம்புகள் மல்கும் பொழிலில் குயிலின் இசை பெருக, பெருமை மிக்க நாட்டு வளம் பெருக்கும் புறத்தொழிலும், அருள் வளம் பெருக்கும் புறத்தொழிலும், அருள் வளம் பெருக்கும் வேள்வி புரிதல், வேத கீதங்கள் பாடுதல், திருவிழாக்கள் நடத்துதல் போன்றனவும் மிகுந்து மேவும் தலம் எது? 
 - தலையில் கங்கையைத் தாங்கியது ஏன்? என்று வியந்தது.
விளக்கம்: 
இரண்டாம் திருமுறை 
பதிகம்.2.139
தலம் - திருத்தெளிச்சேரி 
பாடல் முதலடி:  'பூவலர்ந்தன
பண்: இந்தளம்
வினாவுரைப் பதிகம் 
பாடல்: 7

கோட டுத்த பொழிலின் மிசைக்குயில் கூவிடும்
சேட டுத்த தொழிலின் மிகுதெளிச்சேரியீர்

மாட டுத்தமலர்க் கண்ணினாள் கங்கை  நங்கையைத்
தோட டுத்த மலர்ச்சடை என்கொல்நீர் சூடிற்றே

பொருள்:
மலர்க் கொம்புகள் மல்கும் பொழிலில் குயிலின் இசை பெருக, பெருமை மிக்க நாட்டு வளம் பெருக்கும் புறத்தொழிலும், அருள் வளம் பெருக்கும் புறத்தொழிலும், அருள் வளம் பெருக்கும் வேள்வி புரிதல், வேத கீதங்கள் பாடுதல், திருவிழாக்கள் நடத்துதல் போன்றனவும் மிகுந்து மேவும் தெளிச்சேரியின்கண் விற்றிருக்கும் பெருமானே !
கங்கை என்னும் நங்கையை, இதழ் கொண்டு விளங்கும் கொன்றை தரித்த செஞ்சடையில் பொருந்துமாறு சூடியது என்கொல்?

சிறப்பு:
தலத்தின் வளம், அழகு, புறத்தொழிலும், அறத்தொழில்களான வேள்வியும், வேத கீதங்கள் பாடியும் அருளுடன் விளங்கிய தலம் என்ற சிறப்பும்,

கங்கையை தன் கொன்றைச் சடையில் அடக்கியருளிய சிறப்பும் விளக்கப்படுகிறது.

🛐ஞானசம்பந்தரின் பதிகச் சிறப்பு
 ஒவ்வொரு பாடலும் 4 வரிகள், அதில் முதல் இரு வரிகளில், 
தலச்சிறப்பும், அடுத்த இரு வரிகளின் இறைவரின் அருட்சிறப்பும் வெளிப்படுத்தும் அற்புத பதிகம்.
முதல் இருவரிகளில் ......

1.திருத்தளிச்சேரி தலத்தின் இயற்கை வளம் பக்திச் சிறப்பும், மனிதர் மான்பும், குறிப்பிட்டு இப்பதியில் வசிப்பவரே - திருத்தெளிச்சேரியீர் என்ற இறைவரை விளித்தது.

அடுத்த இருவரிகளில்
2.இறைவரின் அருட்பேராற்றலை குறிப்பிட்டு, வியந்து வினவுகிறார்.

🌺 *திருத் தெளிச்சேரி பார்வதீசுவரர் திருக்கோயில்* :  பற்றிய சில சிறப்புக் குறிப்புகள்:

🟪திருத் தெளிச்சேரி காரைக்கால் மாநகரின் வடபால், காரைக்கால் பெருவண்டி நிலையத்திற்கு மேற்கில் மிக அருகே உள்ளது.

✡️மேற்கு பார்த்த தலம்
சுவாமி : பார்வதீஸ்வரர்
அம்பாள் : சுயம்வர தபஸ்வினி அம்பாள்.

🕉️ஆலயம் முழுதும் கற்கோவில். சுவாமி மேற்கு பார்த்தும், அம்மன் தெற்கு பார்த்தும் தனித்தனி சன்னதியாக இருப்பினும் ஒரே பிரகாரத்தால்  இணைக்கப்பட்டது.

⚛️வெளிப் பிரகாரத்தில் நந்தவனம் அமைத்து அடியார்கள் பராமரிப்பில் உள்ளது.

✡️வேடுவ மூர்த்தி கோலத்துடன் சுவாமி அம்மன் தனி.

🔯தெற்கு புறம் 63 மூவர்.

🕉️திருமண தடை நீங்க வழிபட இவ்வாலயம் சிறப்பு. 

🔯பங்குனியில் 7 நாள்கள் சூரிய பூசை
- விதை தெளி உற்சவம் சிறப்பு.

☸️அடியார்களால் மாதம் ஒரு முறை 63 நாயன்மார்களுக்கும் அபிஷேக ஆராதனை மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

 🟩 *காரைக்கால் அம்மையார்  வழிபட்டுத் திருப்பணி செய்த கோயில்*.    

🛐புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 4 பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று.

✡️- புதுவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

- ☸️புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 4 பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று.

- 🛐மிகப் பழமையான ஆலயம் நகரத்தார்களால், புனரமைக்கப்பட்ட ஆலயம்.

💥இதுகாறும், திருமுறையில் தமிழ் ஞானசம்பந்தர் அருளிய வினாவுரை அமைப்பு பதிகங்களை சிந்தித்தோம்.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர்; பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
     🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽
முன்பதிவு :
https://m.facebook.com/story.php?story_fbid=5892856360789572&id=100001957991710

Saturday, July 17, 2021

வினாவுரை - சம்பந்தர் அமுதம் - திருத்தெளிச்சேரி - பதிவு - 6 பாடல் 6

#சம்பந்தர்அமுதம்
#தலப்பெருமை #பேரருட்திறன்
#வினாவுரை
 பதிவு: 6  
🌈#அமுதப்பதிகங்கள்   
              அமைப்புச்சிறப்புகள்
தமிழும், திருநெறியும், உலகம் முழுதும் விளங்க, தெய்வப் பதிகங்கள் அருளிச் செய்த தமிழாகரர், திருஞானசம்பந்தப் பெருமானின் தேவார பதிகப் பாடல்களை தொடர்ந்து சிந்திப்போம்.

வினாவுரை அமைப்பு என்றால் என்ன?
♻️இறைவன் சிறப்புகளை வினவுதல் போல கேள்வி எழுப்பி அதன் விடையை உட்பொருளாக உணர்த்தும் அமைப்பில் பாடல் அமைந்து வருவது. 

🛐6️⃣
6.சந்திரன் தோயும் பொழில்சூழ்ந்த மணிமாடங்கள் திகழும் தலம் எது?

யானையைத் திருக்கரத்தினால் மாய்த்தது எங்ஙனம் நிகழ்ந்தது?

விளக்கம்: 
இரண்டாம் திருமுறை 
பதிகம்.2.139
தலம் - திருத்தெளிச்சேரி 
பாடல் முதலடி:  'பூவலர்ந்தன
பண்: இந்தளம்
வினாவுரைப் பதிகம் 
பாடல்: 6
தவள  வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழநல்
திவள மாமணி மாடம் திகழ் தெளிச்சேரியீர்

குவளை போற்கண்ணி துண்ணென வந்து குறுகிய
கவள மால்கரி எங்ஙன நீர்கையிற் காய்ந்ததே

பொருள் :
சந்திரன் தோயும் பொழில்சூழ்ந்த மணிமாடங்கள் திகழும் தெளிச்சேரி பெருமானே. 
குவளைக் கண்ணியாகிய உமாதேவியார் திகைக்க, யானையைத் திருக்கரத்தினால் மாய்த்தது எங்ஙனம் நிகழ்ந்தது என்று வியந்தது.

சிறப்பு:
உமையவளின் குவளை கண் சிறப்பு.
 கவளமாய் உண்ணும் யானை, மதிமயக்கத்துடன் சினத்துடன் வந்ததும், ஈசன் ஆயுதமின்றி தன் வெறும் கையினால் யானையை அடர்த்த வீரம் வியந்தது.

🛐ஞானசம்பந்தரின் பதிகச் சிறப்பு
 ஒவ்வொரு பாடலும் 4 வரிகள், அதில் முதல் இரு வரிகளில், 
தலச்சிறப்பும், அடுத்த இரு வரிகளின் இறைவரின் அருட்சிறப்பும் வெளிப்படுத்தும் அற்புத பதிகம்.
முதல் இருவரிகளில் ......

1.திருத்தளிச்சேரி தலத்தின் இயற்கை வளம் பக்திச் சிறப்பும், மனிதர் மான்பும், குறிப்பிட்டு இப்பதியில் வசிப்பவரே - திருத்தெளிச்சேரியீர் என்ற இறைவரை விளித்தது.

அடுத்த இருவரிகளில்
2.இறைவரின் அருட்பேராற்றலை குறிப்பிட்டு, வியந்து வினவுகிறார்.

💥இதுகாறும், திருமுறையில் தமிழ் ஞானசம்பந்தர் அருளிய வினாவுரை அமைப்பு பதிகங்களை சிந்தித்தோம்.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர்; பொறுமையுடன் சென்று முன்பதிவுகளையும் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
     🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽
முன்பதிவு:
https://m.facebook.com/story.php?story_fbid=5886477541427454&id=100001957991710

Friday, July 16, 2021

வினாவுரை - சம்பந்தர் அமுதம் - திருத்தெளிச்சேரி - பதிவு - 5 பாடல் 5

#சம்பந்தர்அமுதம்
#தலப்பெருமை #பேரருட்திறன்
#வினாவுரை
 பதிவு: 5

🌈#அமுதப்பதிகங்கள்   
              அமைப்புச்சிறப்புகள்

🛐தமிழும், திருநெறியும், உலகம் முழுதும் விளங்க, தெய்வப் பதிகங்கள் அருளிச் செய்த தமிழாகரர், திருஞானசம்பந்தப் பெருமானின் தேவார பதிகப் பாடல்களை சிந்தித்து வருகிறோம்.

அவ்வகையில் இதோ ஒரு வினாவுரை அமைப்பு பாடல்.

பதிவு: 5
வினாவுரை அமைப்பு என்றால் என்ன?
♻️இறைவன் சிறப்புகளை வினவுதல் போல கேள்வி எழுப்பி அதன் விடையை உட்பொருளாக உணர்த்தும் அமைப்பில் பாடல் அமைந்து வருவது. 

🛐5️⃣
வினா?
பார்வதி பக்கத்தில் இருந்து பூசிக்கும், மதிதவழ் மதில் சூழ்ந்த தலம் எது?

உலகெங்கும் பிச்சையேந்து நடந்தது ஏன்?

விளக்கம்: 
இரண்டாம் திருமுறை 
பதிகம்.2.139
தலம் - திருத்தெளிச்சேரி 
பாடல் முதலடி:  'பூவலர்ந்தன
பண்: இந்தளம்
வினாவுரைப் பதிகம்
பாடல்: 5

பக்க நுந்தமைப் பார்பதி யேத்திமுன் பாவிக்கும்
செக்கர் மாமதி சேர்மதில்சூழ் தெளிச்சேரியீர்

மைக்கொள் கண்ணியர் கைவளை மால்செய்து வெளவவே
நக்க ராயுலகு எங்கும் பலிக்கு நடப்பதே

பொருள்:
பார்வதி பக்கத்தில் இருந்து பூசிக்க, மதிதவழ் மதில் சூழ்ந்த தெளிச்சேரிப் பெருமானே.
தாருகாவனத்து மாதர்கள் மயக்கம் கொண்டு கையில் அணிந்துள்ள வளையல்கள் கழன்று விழுமாறு மெலியச் செய்து, அவர்களைக் கவரும் வகையில் ஆடையற்றவராய் உலகெங்கும் பிச்சையேந்து நடந்தது.

சிறப்பு:
இத்தலத்து இறைவியை பார்வதி என்று ஏற்றி உணர்த்தியதும்,  உமாதேவியார் ஈசனோடு கூறாகி இருந்து விளங்குவதும், வேறாகிய 
தனித்துப் பக்கம் சார்ந்து பூசனை செய்வதும் ஒரு சேர உணர்த்துதல் சிறப்பு.
🛐ஞானசம்பந்தரின் பதிகச் சிறப்பு
 ஒவ்வொரு பாடலும் 4 வரிகள், அதில் முதல் இரு வரிகளில், 
தலச்சிறப்பும், அடுத்த இரு வரிகளின் இறைவரின் அருட்சிறப்பும் வெளிப்படுத்தும் அற்புத பதிகம்.
முதல் இருவரிகளில் ......

1.திருத்தளிச்சேரி தலத்தின் இயற்கை வளம் பக்திச் சிறப்பும், மனிதர் மான்பும், குறிப்பிட்டு இப்பதியில் வசிப்பவரே - திருத்தெளிச்சேரியீர் என்ற இறைவரை விளித்தது.

அடுத்த இருவரிகளில்
2.இறைவரின் அருட்பேராற்றலை குறிப்பிட்டு, வியந்து வினவுகிறார்

💥தலச்சிறப்பு:
🌺 *திருத் தெளிச்சேரி பார்வதீசுவரர் திருக்கோயில்* :  பற்றிய சில சிறப்புக் குறிப்புகள்:

🟪திருத் தெளிச்சேரி காரைக்கால் மாநகரின் வடபால், காரைக்கால் பெருவண்டி நிலையத்திற்கு மேற்கில் மிக அருகே உள்ளது.

✡️மேற்கு பார்த்த தலம்
சுவாமி : பார்வதீஸ்வரர்
அம்பாள் : சுயம்வர தபஸ்வினி அம்பாள்.

🕉️ஆலயம் முழுதும் கற்கோவில். சுவாமி மேற்கு பார்த்தும், அம்மன் தெற்கு பார்த்தும் தனித்தனி சன்னதியாக இருப்பினும் ஒரே பிரகாரத்தால்  இணைக்கப்பட்டது.

⚛️வெளிப் பிரகாரத்தில் நந்தவனம் அமைத்து அடியார்கள் பராமரிப்பில் உள்ளது.

✡️வேடுவ மூர்த்தி கோலத்துடன் சுவாமி அம்மன் தனி.

🔯தெற்கு புறம் 63 மூவர்.

🕉️திருமண தடை நீங்க வழிபட இவ்வாலயம் சிறப்பு. 

🔯பங்குனியில் 7 நாள்கள் சூரிய பூசை
- விதை தெளி உற்சவம் சிறப்பு.

☸️அடியார்களால் மாதம் ஒரு முறை 63 நாயன்மார்களுக்கும் அபிஷேக ஆராதனை மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

 🟩 *காரைக்கால் அம்மையார்  வழிபட்டுத் திருப்பணி செய்த கோயில்*.    

🛐புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 4 பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று.

✡️- புதுவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

- ☸️புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 4 பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று.

- 🛐மிகப் பழமையான ஆலயம் நகரத்தார்களால், புனரமைக்கப்பட்ட ஆலயம்.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. பருக விரும்புவோர்; பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
     🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽
முன்பதிவு :
https://m.facebook.com/story.php?story_fbid=5879828962092312&id=100001957991710

Thursday, July 15, 2021

வினாவுரை - சம்பந்தர் அமுதம் - திருத்தெளிச்சேரி - பதிவு - 4 பாடல் 4

#சம்பந்தர்அமுதம்
#தலப்பெருமை #பேரருட்திறன்
#வினாவுரை
 பதிவு: 4
🌈#அமுதப்பதிகங்கள்   
              அமைப்புச்சிறப்புகள்
🛐பக்தியால் தமிழும், தமிழால் பக்தியும் வளர்த்த தெய்வப்பிறவி, அருள் ஞானசம்பந்தரின் அற்புத பதிகங்களின் சிறப்புக்களின் சில துளிகள் பருகுவோம்.

வினாவுரை அமைப்பு என்றால் என்ன?
♻️இறைவன் சிறப்புகளை வினவுதல் போல கேள்வி எழுப்பி அதன் விடையை உட்பொருளாக உணர்த்தும் அமைப்பில் பாடல் அமைந்து வருவது. 

🛐4️⃣
வினா?
_மேகம் தவழும் கடலில் இருந்து சிப்பிகள் வெளிப்பட்டுக் கரையில் முத்துக்களைக் கொழிக்கவும், தேர் செல்லும் அகன்ற நெடிய வீதிகளையுடைய தலம் எது?

-உமாதேவியை ஒரு பாகத்தில் வைத்தது?

விளக்கம்:
இரண்டாம் திருமுறை 
பதிகம்.2.139
தலம் - திருத்தெளிச்சேரி 
பாடல் முதலடி: 'பூவலர்ந்தன
பண்: இந்தளம்
வினாவுரைப் பதிகம்:
பாடல் : 4

காரு லாம்கடல் இப்பிகண் முத்தம் கரைப் பெயும்
தேருலா நெடுவீதிய தார் தெளிச்சேரியிர்

ஏருலாம் பலிக்கே கிட வைப்பிடம் இன்றியே
வாரு லாமுலை யாளையொர் பாகத்து வைத்ததே.

பொருள் :
மேகம் தவழும் கடலில் இருந்து சிப்பிகள் வெளிப்பட்டுக் கரையில் முத்துக்களைக் கொழிக்கவும், தேர் செல்லும் அகன்ற நெடிய வீதிகளையுடைய தெளிச்சேரியில் விளங்கும் பெருமானே.
 
பலி ஏற்கும் போது, உமாதேவியைத் தாங்குமாறு செய்யத் தகுந்த இடமாக ஈசன் தனது இடது பாகத்தையேக் கொண்டு இருக்கச் செய்யும் சிறப்பு.

சிறப்பு:
நெடுவீதியும், தேரு உலாவும் தலம்
தேவியை ஒரு பாகத்தில் வைத்த சிறப்பும் விளக்கியது.
திருத்தெளிச்சேரி அக்காலத்தில் எத்துனை சிறப்பும், திருவிழா முதலிய ஆலய விழாக்கள் சிறப்புற நடைபெற்று வந்துள்ளதை அறிகிறோம்.

🛐ஞானசம்பந்தரின் பதிகச் சிறப்பு
 ஒவ்வொரு பாடலும் 4 வரிகள், அதில் முதல் இரு வரிகளில், 
தலச்சிறப்பும், அடுத்த இரு வரிகளின் இறைவரின் அருட்சிறப்பும் வெளிப்படுத்தும் அற்புத பதிகம்.
முதல் இருவரிகளில் ......

1.திருத்தளிச்சேரி தலத்தின் இயற்கை வளம் பக்திச் சிறப்பும், மனிதர் மான்பும், குறிப்பிட்டு இப்பதியில் வசிப்பவரே - திருத்தெளிச்சேரியீர் என்ற இறைவரை விளித்தது.

அடுத்த இருவரிகளில்
2.இறைவரின் அருட்பேராற்றலை குறிப்பிட்டு, வியந்து வினவுகிறார்
💥இதுகாறும், திருமுறையில் தமிழ் ஞானசம்பந்தர் அருளிய வினாவுரை அமைப்பு பதிகங்களை சிந்தித்தோம்.

🌺 *திருத் தெளிச்சேரி பார்வதீசுவரர் திருக்கோயில்* : பற்றிய சில சிறப்புக் குறிப்புகள்:

🟪திருத் தெளிச்சேரி காரைக்கால் மாநகரின் வடபால், காரைக்கால் பெருவண்டி நிலையத்திற்கு மேற்கில் மிக அருகே உள்ளது.

✡️மேற்கு பார்த்த தலம்
சுவாமி : பார்வதீஸ்வரர்
அம்பாள் : சுயம்வர தபஸ்வினி அம்பாள்.

🕉️ஆலயம் முழுதும் கற்கோவில். சுவாமி மேற்கு பார்த்தும், அம்மன் தெற்கு பார்த்தும் தனித்தனி சன்னதியாக இருப்பினும் ஒரே பிரகாரத்தால் இணைக்கப்பட்டது.

⚛️வெளிப் பிரகாரத்தில் நந்தவனம் அமைத்து அடியார்கள் பராமரிப்பில் உள்ளது.

✡️வேடுவ மூர்த்தி கோலத்துடன் சுவாமி அம்மன் தனி.

🔯தெற்கு புறம் 63 மூவர்.

🕉️திருமண தடை நீங்க வழிபட இவ்வாலயம் சிறப்பு. 

🔯பங்குனியில் 7 நாள்கள் சூரிய பூசை
- விதை தெளி உற்சவம் சிறப்பு.

☸️அடியார்களால் மாதம் ஒரு முறை 63 நாயன்மார்களுக்கும் அபிஷேக ஆராதனை மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

 🟩 *காரைக்கால் அம்மையார் வழிபட்டுத் திருப்பணி செய்த கோயில்*.    

🛐புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 4 பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று.

🛐புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 4 பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று.

✡️- புதுவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

- ☸️புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 4 பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று.

- 🛐மிகப் பழமையான ஆலயம் நகரத்தார்களால், புனரமைக்கப்பட்ட ஆலயம்.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர்; பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
     🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽
முன்பதிவு காண:
https://m.facebook.com/story.php?story_fbid=5874541299287745&id=100001957991710

Wednesday, July 14, 2021

வினாவுரை - சம்பந்தர் அமுதம் - திருத்தளிச்சேரி - பதிவு - 3.

#சம்பந்தர்அமுதம்
#தலப்பெருமை #பேரருட்திறன்
#வினாவுரை
 பதிவு: 3
       🌈#அமுதப்பதிகங்கள்   
              அமைப்புச்சிறப்புகள்

🛐பக்தியால் தமிழும், தமிழால் பக்தியும் வளர்த்த தெய்வப்பிறவி, அருள் ஞானசம்பந்தரின் அற்புத பதிகங்களின் சிறப்புக்களின் சில துளிகள் பருகுவோம்.

⚜️வினாவுரை அமைப்பில் உள்ள பாடல்களைப் பற்றிய சிந்தனைகள்.

🌟வினாவுரை அமைப்பு என்றால் என்ன?
♻️இறைவன் சிறப்புகளை வினவுதல் போல கேள்வி எழுப்பி அதன் விடையை உட்பொருளாக உணர்த்தும் அமைப்பில் பாடல் அமைந்து வருவது. 
🛐3️⃣
வினா?
- மணம் மிகும் மலர் சோலை சூழ்ந்தும், நிலவு தவழுமாறு உயர்ந்த செம்பு கலந்த மதில்கள் கொண்ட தலம் எது?

- அம்படுத்த கண்ணாளொடு விடைமேல் அமர்ந்தது காரணம்?

விளக்கம்:
இரண்டாம் திருமுறை 
பதிகம்.2.139
தலம் - திருத்தெளிச்சேரி 
பாடல் முதலடி: 'பூவலர்ந்தன
பண்: இந்தளம்
வினாவுரைப் பதிகம்
பாடல்-3
வம்படுத்த மலர்ப் பொழில் சூழ மதிதவழ்
செம்படுத்த செழும் புரிசைத் தெளிச்சேரியிர்

கொம்படுத்ததொர் கோல விடை மிசைக் கூர்மையோடு 
அம்படுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே.

பொருள் :
மணம் மிகும் மலர் சோலை சூழ்ந்தும், நிலவு தவழுமாறு உயர்ந்த செம்பு கலந்த மதில்கள் கொண்ட தெளிச்சேரியின் பெருமானே.

கூர்மையான விழிகளுடன், அருள் நோக்குடன் விளங்கும் உமாதேவியுடன், கொம்பு உடைய அழகிய இடபத்தின் மீது அமர்ந்து காட்சி தரும் அழகை கண்டு வியப்பது.

சிறப்பு.
அருள்விழி தரும் உமையாள் சிறப்பும், உயர் மதில் உள்ள தலமும் சிறப்பு தருகிறது.

🛐ஞானசம்பந்தரின் பதிகச் சிறப்பு
 ஒவ்வொரு பாடலும் 4 வரிகள், அதில் முதல் இரு வரிகளில், 
தலச்சிறப்பும், அடுத்த இரு வரிகளின் இறைவரின் அருட்சிறப்பும் வெளிப்படுத்தும் அற்புத பதிகம்.
முதல் இருவரிகளில் ......

1.திருத்தளிச்சேரி தலத்தின் இயற்கை வளம் பக்திச் சிறப்பும், மனிதர் மான்பும், குறிப்பிட்டு இப்பதியில் வசிப்பவரே - திருத்தெளிச்சேரியீர் என்ற இறைவரை விளித்தது.

அடுத்த இருவரிகளில்
2.இறைவரின் அருட்பேராற்றலை குறிப்பிட்டு, வியந்து வினவுகிறார்.

💥திருமுறையில் தமிழ் ஞானசம்பந்தர் அருளிய வினாவுரை அமைப்பு பதிகங்களைப் பற்றி தொடர்ந்து சிந்தித்தோம்.

🌺 *திருத் தெளிச்சேரி பார்வதீசுவரர் திருக்கோயில்* : பற்றிய சில சிறப்புக் குறிப்புகள்:

🟪திருத் தெளிச்சேரி காரைக்கால் மாநகரின் வடபால், காரைக்கால் பெருவண்டி நிலையத்திற்கு மேற்கில் மிக அருகே உள்ளது.

✡️மேற்கு பார்த்த தலம்
சுவாமி : பார்வதீஸ்வரர்
அம்பாள் : சுயம்வர தபஸ்வினி அம்பாள்.

🕉️ஆலயம் முழுதும் கற்கோவில். சுவாமி மேற்கு பார்த்தும், அம்மன் தெற்கு பார்த்தும் தனித்தனி சன்னதியாக இருப்பினும் ஒரே பிரகாரத்தால் இணைக்கப்பட்டது.

⚛️வெளிப் பிரகாரத்தில் நந்தவனம் அமைத்து அடியார்கள் பராமரிப்பில் உள்ளது.

✡️வேடுவ மூர்த்தி கோலத்துடன் சுவாமி அம்மன் தனி.

🔯தெற்கு புறம் 63 மூவர்.

🕉️திருமண தடை நீங்க வழிபட இவ்வாலயம் சிறப்பு. 

🔯பங்குனியில் 7 நாள்கள் சூரிய பூசை
- விதை தெளி உற்சவம் சிறப்பு.

☸️அடியார்களால் மாதம் ஒரு முறை 63 நாயன்மார்களுக்கும் அபிஷேக ஆராதனை மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

 🟩 *காரைக்கால் அம்மையார் வழிபட்டுத் திருப்பணி செய்த கோயில்*.    

🛐புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 4 பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர்; பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
     🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽
முன்பதிவு :
https://m.facebook.com/story.php?story_fbid=5864548653620343&id=100001957991710

Monday, July 12, 2021

வினாவுரை - சம்பந்தர் அமுதம் - திருத்தளிச்சேரி - பதிவு - 2 பாடல் - 2

#சம்பந்தர்அமுதம்
#தலப்பெருமை #பேரருட்திறன்
#வினாவுரை
🌈#அமுதப்பதிகங்கள்   
              அமைப்புச்சிறப்புகள்
பதிவு: 2
🛐2️⃣
வினா?
 பக்தியால், தேவரும், மாந்தரும் தொழுவதால், அவர்தம் குறைகளைத் தீர்த்து, வேண்டிய வரங்களை அருளி மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும், தலம் எது?

காமனை காய்ந்தது ஏன்?

⚜️திருமுறையில் தமிழ் ஞானசம்பந்தர் அருளிய வினாவுரை அமைப்பு பதிகங்களில் விடை தேடுவோம்.

🌟வினாவுரை அமைப்பு என்றால் என்ன?
♻️இறைவன் சிறப்புகளை வினவுதல் போல கேள்வி எழுப்பி அதன் விடையை உட்பொருளாக உணர்த்தும் அமைப்பில் பாடல் அமைந்து வருவது. 

விளக்கம்:
இரண்டாம் திருமுறை 
பதிகம்.2.139
தலம் - திருத்தெளிச்சேரி 
பாடல் முதலடி: 'பூவலர்ந்தன
பண்: இந்தளம்
வினாவுரைப் பதிகம்:
பாடல் : 2.
விளைக்கும் பக்திக்கு விண்ணவர் மண்ணவர் ஏத்தவே
திளைக்கும் தீர்த்தம் அறாத திகழ் தெளிச்சேரியீர்

வளைக்கும் திண்சிலை மேல்ஐந்து பாணமுந் தானெய்து
களிக்குங் காமனை எங்ஙன நீர் கண்ணிற் காய்ந்ததே.

பொருள்.
பக்தியால், தேவரும், மாந்தரும் தொழுவதால், அவர்தம் குறைகளைத் தீர்த்து, வேண்டிய வரங்களை அருளி மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும், தெளிச்சேரி பெருமானே!

உறுதியான வில்லை வளைத்து, ஐந்து வித மலர்க்கணைகளைக் கொண்டு, எய்து மகிழ்ந்த மன்மதனை, நெற்றிக் கண்ணால் எரித்தது வியந்தது.

சிறப்பு:
பிறர்பால் காம மலர்க்கணைகளைத் தொடுத்து, வெற்றிக் களிப்பால், மன்மதன் ஆணவம் கொண்டதால், அவனை எரித்தார்.
வழிபாடு செய்யும் தேவருக்கும், மாந்தருக்கும், குறைதீர்த்து, வேண்டிய அருள் தருவது.

🛐தமிழ் விரகனாராகிய, ஞானசம்பந்தரின் இப் பதிகச் சிறப்பு ஒவ்வொரு பாடலும் 4 வரிகள்; அதில் முதல் இரு வரிகளில், 
தலச்சிறப்பும், அடுத்த இரு வரிகளின் இறைவரின் அருட்சிறப்பும் வெளிப்படுத்தும் அற்புத பதிகம்.
முதல் இருவரிகளில் ......

1.திருத்தளிச்சேரி தலத்தின் இயற்கை வளம் பக்திச் சிறப்பும், மனிதர் மான்பும், குறிப்பிட்டு இப்பதியில் வசிப்பவரே - திருத்தெளிச்சேரியீர் என்ற இறைவரை விளித்தது.

அடுத்த இருவரிகளில்
2.இறைவரின் அருட்பேராற்றலை குறிப்பிட்டு, வியந்து வினவுகிறார்.

🌺 *திருத் தெளிச்சேரி பார்வதீசுவரர் திருக்கோயில்* : பற்றிய சில சிறப்புக் குறிப்புகள்:

🟪திருத் தெளிச்சேரி காரைக்கால் மாநகரின் வடபால், காரைக்கால் பெருவண்டி நிலையத்திற்கு மேற்கில் மிக அருகே உள்ளது.

✡️மேற்கு பார்த்த தலம்
சுவாமி : பார்வதீஸ்வரர்
அம்பாள் : சுயம்வர தபஸ்வினி அம்பாள்.

🕉️ஆலயம் முழுதும் கற்கோவில். சுவாமி மேற்கு பார்த்தும், அம்மன் தெற்கு பார்த்தும் தனித்தனி சன்னதியாக இருப்பினும் ஒரே பிரகாரத்தால் இணைக்கப்பட்டது.

⚛️வெளிப் பிரகாரத்தில் நந்தவனம் அமைத்து அடியார்கள் பராமரிப்பில் உள்ளது.

✡️வேடுவ மூர்த்தி கோலத்துடன் சுவாமி அம்மன் தனி.

🔯தெற்கு புறம் 63 மூவர்.

🕉️திருமண தடை நீங்க வழிபட இவ்வாலயம் சிறப்பு. 

🔯பங்குனியில் 7 நாள்கள் சூரிய பூசை
- விதை தெளி உற்சவம் சிறப்பு.

☸️அடியார்களால் மாதம் ஒரு முறை 63 நாயன்மார்களுக்கும் அபிஷேக ஆராதனை மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

 🟩 *காரைக்கால் அம்மையார் வழிபட்டுத் திருப்பணி செய்த கோயில்*.    

🛐புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 4 பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று.

🙏 இது ஒரு அறிமுக பதிவே.
 மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்ந்தறிவோம்.

☸️இத்தகைய சில பதிகங்களின் சிறப்பு பற்றித் சிலக் குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 

🕉️ஆன்மீக தமிழின் சிறப்பை, #சம்பந்தர்அமுதம் பருக விரும்புவோர்; பொறுமையுடன் சென்று முன்பதிவுகளையும் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
     🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽
முன்பதிவு:
https://m.facebook.com/story.php?story_fbid=5855753897833152&id=100001957991710

Saturday, July 10, 2021

வினாவுரை - சம்பந்தர் அமுதம் பதிவு 1. திருத்தெளிச்சேரி - 1.

#சம்பந்தர்அமுதம்
#தலப்பெருமை #பேரருட்திறன்
#வினாவுரை
              
🌈#அமுதப்பதிகங்கள்   
              அமைப்புச்சிறப்புகள்

 🔯திருஞானசம்பந்தரின் பதிக அமைப்பு முறை பற்றிய பொதுவான சில குறிப்புகள்:

🔱திருஞானசம்பந்தர் தம் திருப்பதிகப் பாடல்களில் ஒரு பக்கம் இறையருளின் அருட்செயல்பாடுகளை, அற்புதங்களை உணர்த்தியவர்; மறுபுறம், தமிழ் இலக்கியத்திற்கு பல்வேறு புதுமைகளையும் சிறப்புகளையும் கொண்ட புதுமையான பாடல்கள் அமைப்பையும் முதன்முதலில் கொண்டுவந்தார் என்பதும் வரலாறு.

🔱திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய பாடல்களில் தற்காலத்தில் நமக்குக் கிடைக்கப் பெற்றது 4146 பாடல்கள் மட்டுமே. 
🔱இவை 226 தலங்கள் பற்றியருளியது.
மொத்தம் 386 பதிகங்கள்.
ஒரு பதிகத்தில் 10, அல்லது 11 அல்லது 12 பாடல்கள் அமையப்பெற்றிருக்கின்றன.
🔱23 பண்களில் அமைக்கப் பெற்றுள்ளது.
 
#தலச்சிறப்பு _போற்றுதல்:

🌐ஞானசம்பந்தர், பாரதமெங்கும், குறிப்பாக தமிழகம் முழுதும் பல்லாயிரம் ஆலயங்களுக்கு சென்று பதிகங்கள் பாடி பல்வேறு அருட்செயல்களையும் புரிந்து, புற சமய நோய் நீக்கி, உண்மை இறையருளை உலகிற்கு நிலை நிறுத்தியவர்.

🏔️279 தலங்களில் அருளப் 
     பெற்றிருக்கின்றன. 

🛐7 பொது பதிகங்களாகும். 

இப்பதிகங்களை மொத்தம் முதல் மூன்று திருமுறைகளாகக் தொகுத்துள்ளர்கள்.

🥇முதல் திருமுறையில் 
135 தலப்பதிகங்கள் மற்றும் 
     1 பொதுப்பதிகம் மொத்தம் 136

🥈இரண்டாம் திருமுறையில்
120 தலப்பதிகங்கள் மற்றும் 
    2 பொதுப்பதிகங்கள் மொத்தம் 122

🥉மூன்றாம் திருமுறையில் 
121 தலப்பதிகங்கள் மற்றும் 
    4 பொதுப்பதிகங்கள் மொத்தம் 125

🌿கடைசியாகக் கிடைத்த 3 தல பதிகங்களும் ஆக 386 பதிகங்கள் அமைத்து மூன்று திருமுறைகளில் வழி. வைக்கப்பட்டுள்ளன.

💫⚡ ஒவ்வொரு பாடல்களிலும் தலத்தின் சிறப்பை, வளத்தை, பெருமையைக் குறித்து வருணனை செய்து போற்றுவது அற்புதமானது.

🙆‍♂️இது பற்றி மேலும், தனித் தனியாக தல ஆராய்ச்சிகள் பல செய்து தமிழ்நாட்டின் தலங்களின் தமிழரின் பெருமையை உயர்ந்த பன்பாட்டை, ஒப்பற்ற ஆன்மீக சிந்தனைகளை, அக்கால நாகரீக வாழ்வியல் முறைகளை, அற்புத மனித நேய செயல்பாடுகளைத் தம் பாடல்களில் நம் தமிழ் விரகனார் அருளியுள்ளதை, இவ் உலகம் முழுதும் விளங்குமாறு, வெளிவரச்செய்ய இன்னும் பல நூல்கள் வேண்டும்.

#வினாவுரை அமைப்பு என்றால் என்ன?
♻️இறைவன் சிறப்புகளை வினவுதல் போல கேள்வி எழுப்பி அதன் விடையை உட்பொருளாக உணர்த்தும் அமைப்பில் பாடல் அமைந்து வருவது. 
இது சம்பந்தப்பெருமானே தனது பாடலில் 'வினாவுரையாக' என்று அமைத்துள்ளார்.

🔱இந்த வினாவை அத்தலத்தில் உரையும் ஈசனை நோக்கியும்,
அத்தல ஈசனை வணங்கும் அடியார் நோக்கியும் வினவுதல் வழி ஈசன் சிறப்பை உரைத்ததும், அதை உணர்த்தும் பாங்கும் எண்ணினால் வியக்கவைக்கும்.

🔱இப்படி வரும் பாடல்களில் தலச்சிறப்பு, அடியார் பெருமை, இறைவன் அருட்பேராற்றல் வெளிப்படுத்தும் தமிழ் விரகனாரின் பாடல் பதிக அமைப்பு மிக அற்புதம்.

🔱பாடல் அமைப்பில் வினவுதல் போல முதலிருவரிகளில் தலச்சிறப்பு சுட்டி இறைவரை விளித்தும், அடுத்த இருவரிகளில் அவர்தம் அருட்பேராற்றலை வியந்து, வினாவுரைப்பாடல்களாக அருளிய அற்புத பதிகங்களைக் குறித்து சிந்திப்போம்.
1️⃣
வினா?
1. அலர்ந்த பூக்கள் கொண்டு தேவர்களால் முப்பொழுதும் வழிபடும் பதி எது?

வேடுவத்திருக்கோலம் கொண்டது ஏன்?
விளக்கம்:
இரண்டாம் திருமுறை 
பதிகம்.2.139
தலம் - திருத்தெளிச்சேரி 
பாடல் முதலடி: 'பூவலர்ந்தன
பண்: இந்தளம்
வினாவுரைப் பதிகம்
பாடல்: 1
பூவலர்ந்தன கொண்டு முப்பொதும் பொற்கழல் 
தேவர்வந்து வணங்குமிகு தெளிச்சேரியீர்

மேவருந் தொழிலாளொடு கேழற் பின் வேடனாம்
பாவ கங் கொடு நின்றது போலுநும் பான்மையே.

பொருள் :
முப்பொழுதும் தேவர் வந்து நின்கழல் வணங்கும் தெளிச்சேரிப்பெருமானே.
பன்றி வடிவ அரக்கனை அழித்து, வேடுவத்திருக்கோலம் பூண்டு உமாதேவியுடன் நின்ற பான்மை விந்தையதே.
(கேழல் = பன்றி)
சிறப்பு:
தேவர்களால் முப்பொழுதும் வழிபடும் சிறப்பு, அர்ச்சுருக்குப் பாசுபதம் அருள் புரிய பன்றி வடிவம் கொண்ட அசுரனை மாய்க்க எடுத்த எளிமைத் திருக்கோலம் வியந்தது.

🛐ஞானசம்பந்தரின் பதிகச் சிறப்பு
 ஒவ்வொரு பாடலும் 4 வரிகள், அதில் முதல் இரு வரிகளில், 
தலச்சிறப்பும், அடுத்த இரு வரிகளின் இறைவரின் அருட்சிறப்பும் வெளிப்படுத்தும் அற்புத பதிகம்.

🔯முதல் இருவரிகளில் ......

1.திருத்தளிச்சேரி தலத்தின் இயற்கை வளம் பக்திச் சிறப்பும், மனிதர் மான்பும், குறிப்பிட்டு இப்பதியில் வசிப்பவரே - திருத்தெளிச்சேரியீர் என்ற இறைவரை விளித்தது.

அடுத்த இருவரிகளில்
2.இறைவரின் அருட்பேராற்றலை குறிப்பிட்டு, வியந்து வினவுகிறார்

✡️இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர் ,பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙇‍♂️🙏🙇‍♂️🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽

Thursday, July 8, 2021

வழிமொழிதிருவிராகம் - சம்பந்தர் இசையமுதம் - பதிவு - 12 பாடல் 12

#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்இசைஅமுதம்
#வழிமொழிதிருவிராகம்
பதிவு : 12

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

🗣️வாய்பேச்சுக் கோளாறு இன்றி நல்ல உரையாடல், குரல் வளம் நிச்சயம் கிடைக்க இப்பதிகம் உதவும்.
👱குழந்தைகளுக்கு அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டிய பாடல்
📚தமிழ் மொழி வளம் உயர்வு உணர்ந்து அறிய உதவும் அற்புத பதிகம் இது.

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.

📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 

🛐🙏
🌀ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.
இத்தகைய பாடல்கள் தமிழரின் இசை பொக்கிஷம்:
#திருவிராகம், #வழிமொழிதிருவிராகம்,
#வண்ணகம் #முடுக்கியல் #அடுக்கியல் 
இவை பற்றி முன்பதிவுகளில் சிந்தித்தோம்.
#வழிமொழிதிருவிராகம் பதிகப் பாடலையும் அதன் விளக்கங்களயும், சிறப்புகளையும் தொடர்ந்து இப்பதிவில் பார்ப்போம்.

🅾️#வழிமொழிதிருவிராகம்:
⏺️இலக்கணம் :
⏏️குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத் தொடுப்பது இவ்வகையாம்.
(முடுகிய என்பது வேகமாக ஓடும் தாள அமைப்பு எனக் கொள்ளலாம்)

🔸இதன் ஓசை அமைப்பில் பாடல் 

தனனதன  தனனதன  தனனதன  
              தனனதன    தனனதனனா

என அமைகிறது.

 🧿இப்பதிகத்தின் திருக்கடைக்காப்பில் (இறுதிப் பாடலில்) திருஞானசம்பந்தர் 'வழிமொழிகள் மொழி தகையவே' என்று குறிப்பிட்டு சிறப்பிப்பதாலே இந்தப் பதிகம் வழிமொழி திருவிராகம் என்னும் பெயர் சூட்டப்பட்டது.
🔵
🌟ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.

🔹சம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை: தலம்: திருப்பிரமபுரம்:
பதிகம்: 325  (67) 
பாடல்: 1-12 (714-725)
இந்தப் பதிகம் 12 பாடல்கள் கொண்டது.

🌟சீர்காழிப்பதியின் 12 பெயர்கள் வந்த வழியை -  வரலாற்றிணை - விளக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.

🌀சாதாரி என்ற பண் வகையினது.
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
பாடல் 12.
💠கழுமலம்: உரோமச முனிவர் பூசித்து உலக உயிர்களின் மலங்களைக் கழுவும் (நீக்கும்) வரம் பெற்ற தலம்.

🎶மிக அற்புதமான பாடல். மிக மிக முக்கியமானது. இப்பாடலை திரும்பத் திரும்ப ஒதிக்கொண்டுவந்தால் நாவிற்கும் உள்ளத்திற்கும் அருமருந்து. வாய்பேச்சுக் கோளாறு இன்றி நல்ல உரையாடல், குரல் வளம் நிச்சயம் கிடைக்கும்.
👱குழந்தைகளுக்கு அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டிய பாடல்.

✳️தமிழின் சிறப்பு எழுத்தாகிய 'ழ' கரத்தைக் கொண்டு சீர் அமைத்துள்ளார்.

♦️இப்பாடலில் தான்  'வழிமொழிகள் மொழி தகையவே' என்று இப்பதிகத்தின் பண் இசை அமைப்புக்கு அவரே பெயர் சூட்டியருளிய பாடல்.

⏹️இதுவே வழிமொழி திருவிராகம் என்ற இசை அமைப்பு பாடல் முறைக்கு ஆதாரப் பாடல் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

⚜️பிற்கால தமிழ் இலக்கியத்தின் இவ்வகைப் பாடல்களுக்கு மிக முக்கியமான அடிப்படையாக அமைத்தருளிய திருக்கடைக்காப்பு பதிகம்.

🔹மூன்றாம் திருமுறை: பதிகம்: 325 
பாடல். 725:

ஒழுகலரிது   அழிகலியில்   உழியுலகு பழிபெருகு    வழியை       நினையா

முழுதுடலில்     எழுமயிர்கள்   தழுவுமுனி குழுவினொடு  கெழுவுசிவனைத்

தொழுதுலகில்  இழுகுமலம்  அழியும்வகை 
கழுவுமுரை  கழுமலரநகர்ப்

பழுதிலிறை  யெழுதுமொழி தமிழ்விரகன் 
வழிமொழிகள்   மொழி தகையவே.

பொருள்:

நல்லொழுக்கத்தில் நிற்றல் அரிதாகி அழிகின்ற கலிகாலத்தில் உலகில் பழிபெருகுதலை நினைந்து வருந்தி, உடல் முழுவதும் முடி முளைத்துள்ள உரோமச முனிவர் தம் குழுவினருடன் அங்குத் தங்கி, சிவபெருமானைத் தொழுது, உலக இச்சைக்கு இழுக்கின்ற மலங்கள் நீங்கிச் சிவஞான உபதேசம் பெற்றதால் கழுமலம் எனப் போற்றப்படும் திருத்தலத்தினை வணங்குவோரின் குற்றம் இல்லையாகச் செய்கின்ற தலைவனும், எழுதும் வேதமெனப் போற்றப்படும் தமிழ் வல்லவனுமாகிய ஞானசம்பந்தன் அருளிய இந்த வழிமொழித் திருவிராகப் பாசுரங்கள் பாடிப் பயன்பெறும் தன்மை உடையன.

விளக்கம்:
அழிகலியில் - அறம் அழிகின்ற கலியுகத்தில், 
உலகு உழி - உலகினிடத்தில், 
ஒழுகல் அரிது - அறவழியில் ஒழுகுவது அரியது ( என்றும் ) 
பழிபெருகு வழியை - பாவம் பெருகுகின்ற வழியையும், 
நினையா - நினைந்து. 

முழுது உடலின் - உடல் முழுவதும், 
எழும் மயிர்கள் - முளைத்த
உரோமங்களைக்கொண்ட, 
முனி - உரோமச முனிவர், 
குழுவினொடு - தமது கூட்டத்தொடு. ( வந்து ) 
கெழுவு - அங்கே தங்கிய. 
சிவனை - சிவபெருமானை 

தொழுது - வணங்கி, 
உலகில் - உலக இச்சையில், 
இழுகும் - வழுக்கச் செய்கின்ற. 
மலம் அழியும் வகை - பாசங்கள் நீங்கும் விதம். 
கழுவும் - போக்கிய, 
உரை - வார்த்தையை ( புகழை ) யுடைய. கழுமலநகர் - கழுமலமென்னும் பதியின்,

பழுதில் இறை - வணங்குவோரின் குற்றம் இல்லையாகச் செய்கின்ற தலைவனும், எழுதும் மொழி - எழுதக்கூடிய வேதமொழியாகிய 
தமிழ் விரகன் - தமிழில் வல்லவனுமாகிய திருஞான சம்பந்தனேன். 
வழி மொழிகள் - வழிமொழித் திருவிராகப் பாசுரங்கள். 
மொழி தகையவே - பாடிப்பயன்பெறும் தன்மை உடையனவாம்.

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐

💠பிற்கால தமிழ் இலக்கியத்தின் அடிப்படையாகவும்,
✳️திருப்புகழ் என்றும்அருள் நூல் தந்த அருணகிரியார் முதலிய ஞானிகள் போற்றிய 
♦️அருட் செல்வர் திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

🙏நன்றி
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙇‍♂️🙏🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
முன்பதிவு:
https://m.facebook.com/story.php?story_fbid=5839149982826877&id=100001957991710

Tuesday, July 6, 2021

வழிமொழிதிருவிராகம் - சம்பந்தர் இசையமுதம் - பதிவு - 11 பாடல் 11

#திருமுறைகளில்_தமிழமுதம்:
#சம்பந்தர்_அமுதம்
#தமிழரின்பொக்கிஷம்:
பதிவு : 11

#வழிமொழி_திருவிராகம், பற்றிய பதிவு.
மூன்றம் திருமுறை பதிகம்: 325
பாடல் 11 பாடல்

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.
📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 

🙇‍♂️நன்றி🙏

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.

#தமிழரின்பொக்கிஷம்:

#திருவிராகம்,# வழிமொழிதிருவிராகம்,
#வண்ணகம்,#முடுக்கியல்,#அடுக்கியல் 
இவை பற்றி முன்பதிவுகளில் சிந்தித்தோம்.
தொடர்ந்து
#வழிமொழிதிருவிராகம் பதிகப் பாடல் விளக்கங்களயும், சிறப்புகளையும்
தொடர்ந்து இப்பதிவில் பார்ப்போம்.

📕மூன்றாம் திருமுறையில் வரும்
பாடல்கள்: 714 - 725
பதிகம் 325 தலம் திருப்பிரமபுரம்.
'சுரர் உலகு நரர்கள்பயில் தரணிதல'
எனத் தொடங்கும் பதிகப் பாடல்கள்.

⚜️வழிமொழி திருவிராகம் என்னும் வகை சேர்ந்தது.

🅾️#வழிமொழிதிருவிராகம்:

⏺️இலக்கணம் :
⏏️குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத் தொடுப்பது இவ்வகையாம்.
(முடுகிய என்பது வேகமாக ஓடும் தாள அமைப்பு எனக் கொள்ளலாம்)

🔸இதன் ஓசை அமைப்பில் பாடல் 

தனனதன தனனதன தனனதன  
              தனனதன தனனதனனா

என அமைகிறது.

இப்பதிவில்,
இப்பதிகத்தின் 11 வது பாடல் விளக்கங்களையும் சிறப்புகளையும் பற்றி தொடர்ந்து சிந்திக்கலாம்.

🔵 இதில் திருஞானசம்பந்தர் 'வழிமொழிகள் மொழி தகையவே' என்று குறிப்பிட்டு சிறப்பிப்பதாலே இந்தப் பதிகம் வழிமொழி திருவிராகம் என்னும் பெயர் சூட்டப்பட்டது.

⏺️சந்தப்பாக்களின் சீர்களில் ஒவ்வொர் உயிரும் ஓரசை என்பதால் ஓசை நயமும் தாளமும் நிறைய அமைத்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.

🔹திருஞானசம்பந்தப்பிள்ளையாரை முருகனின் திரு அவதாரமாகக் கொண்டவர் அருணகிரிநாதர். இதைக் குறிப்பிட்டு பாடல்கள் செய்துள்ளார். 

✔️இராமலிங்கசுவாமிகளும் இக்கருத்தை ஏற்கிறார்.

🔷இது போன்ற சந்தப் பாடல்களை கற்றுணர்ந்து அருணகிரியார் தம்முடைய திருப்புகழ் பாடல்களை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

⏺️இந்தப் பதிகம் 12 பாடல்கள் கொண்டது.

⏹️சீர்காழிப்பதியின் 12 பெயர்கள் வந்த வழியை - வரலாற்றிணை - விளக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.

🔹சாதாரி என்ற பண் வகையினது.
பாடல். 11 
💠கொச்சை: பராசர முனிவர் தனது உடல் கொச்சையான துர்நாற்றமும், பழியும் போகும் பொருட்டு பூசித்த தலம்.

✳️'ச்' என்ற சீர் அமைப்புள்ளது.

பாடல் : 11

நச்சரவு கச்செனவ சைச்சுமதி உச்சியின்மி லைச்சொருகையான்

மெய்ச்சிரம் அணைச்சு உலகில் நிச்சமிடு பிச்சையமர் பிச்சன் இடமாம்

மச்சமத நச்சிமதம் அச்சிறுமி யைச்செய்தவ அச்சவிரதக்

கொச்சைமுர வச்சர்பணி யச்சுரர்கள் நச்சிமிடை கொச்சைநகரே.

                                         - 3:325:11 (724)
பொருள் :

நஞ்சையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டி, சந்திரனைத் தலையிலே சூடி, ஒரு கையில் பிரமகபாலத்தைத் தாங்கி, உலகிலே நாடோறும் இடுகின்ற பிச்சையை விரும்பும் பித்தனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், மீன் நாற்றத்தை விரும்பும் மச்சகந்தியை வசமிழந்து ஆற்றினிடையில் புணர்ந்த கொச்சைத் தன்மைக்குக் கதறி அது நீங்க பராசரமுனிவர் வணங்க, தேவர்களும் விரும்பி அணுகும் கொச்சைவயம் எனப்படும் திருத்தலமாகும்.

விளக்கம்:
நச்சு அரவு - நஞ்சு அரவு, நஞ்சையுடைய பாம்பை : 
கச்சென - கச்சாக. 
அசைச்சு - அசைத்து - கட்டி, 
மதி - சந்திரனை, 
உச்சியில் - தலையில், 
மிலைச்சு - மிலைத்து, மிலைந்து, 
ஒரு கையான் - ஒரு கையில் 

மெய் - ( பிரமன் ) உடம்பினின்றும் ( கிள்ளிய ) 
சிரம் - தலையை, 
அணைச்சு - தாங்கி, 
உலகில் - உலகிலே, 
நிச்சம் - நாடோறும், 
இடு - இடுகின்ற, 
பிச்சை - பிச்சையை, 
அமர் - விரும்பும், 
பிச்சன் இடமாம் - பித்தனாகிய பெருமானின் இடமாகும். 

மச்சம் - மீனின். 
மதம் - நாற்றத்தை, 
நச்சி - விரும்பி. 
மதமச்சிறுமியை - வலையர் சிறுமியை, அச்சவரதம் - ( அச்சத்ததைத் தரும், விரதம் ) அச்சத்தைத் தரும் கொள்கையின் பயனாக நேர்ந்த.

கொச்சை - கொச்சைத் தன்மைக்கு. 
முரவு - கதறிய . 
அச்சர் - பராசர முனிவர். 
பணிய - வணங்க ( அதுகண்டு ) 
சுரர்கள் - தேவர்களும். 
மிடை - நெருங்குகின்ற

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
💠பிற்கால தமிழ் இலக்கியத்தின் அடிப்படையாகவும்,
✳️திருப்புகழ் என்றும்அருள் நூல் தந்த அருணகிரியார் முதலிய ஞானிகள் போற்றிய 
♦️அருட் செல்வர் திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.
🙏நன்றி
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.🙇‍♂️🙏🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
முன்பதிவு :
https://m.facebook.com/story.php?story_fbid=5833277866747422&id=100001957991710

Monday, July 5, 2021

வழிமொழிதிருவிராகம் - சம்பந்தர் இசையமுதம் - பதிவு 10 பாடல் 10.

#வழிமொழிதிருவிராகம்
பதிவு : பத்து பாடல்: 10
🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.

📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 

🛐🙏
🌀ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.
இத்தகைய பாடல்கள் தமிழரின் இசை பொக்கிஷம்:
#திருவிராகம், #வழிமொழிதிருவிராகம்,
#வண்ணகம் #முடுக்கியல் #அடுக்கியல் 
இவை பற்றி முன்பதிவுகளில் சிந்தித்தோம்.
#வழிமொழிதிருவிராகம் பதிகப் பாடலையும் அதன் விளக்கங்களயும், சிறப்புகளையும் தொடர்ந்து இப்பதிவில் பார்ப்போம்.

🅾️#வழிமொழிதிருவிராகம்:
⏺️இலக்கணம் :
⏏️குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத் தொடுப்பது இவ்வகையாம்.
(முடுகிய என்பது வேகமாக ஓடும் தாள அமைப்பு எனக் கொள்ளலாம்)

🔸இதன் ஓசை அமைப்பில் பாடல் 

தனனதன தனனதன தனனதன  
              தனனதன தனனதனனா

என அமைகிறது.

 🧿இப்பதிகத்தின் திருக்கடைக்காப்பில் (இறுதிப் பாடலில்) திருஞானசம்பந்தர் 'வழிமொழிகள் மொழி தகையவே' என்று குறிப்பிட்டு சிறப்பிப்பதாலே இந்தப் பதிகம் வழிமொழி திருவிராகம் என்னும் பெயர் சூட்டப்பட்டது.
🔵
🌟ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.

🔹சம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை: தலம்: திருப்பிரமபுரம்:
பதிகம்: 325 (67) 
பாடல்: 1-12 (714-725)
இந்தப் பதிகம் 12 பாடல்கள் கொண்டது.

🌟சீர்காழிப்பதியின் 12 பெயர்கள் வந்த வழியை - வரலாற்றிணை - விளக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.

🌀சாதாரி என்ற பண் வகையினது.

🎶மிக அற்புதமான பாடல். மிக மிக முக்கியமானது. 

🌟இப்பாடலை திரும்பத் திரும்ப ஒதிக்கொண்டுவந்தால் நாவிற்கும் உள்ளத்திற்கும் அருமருந்து. 

🗣️வாய்பேச்சுக் கோளாறு இன்றி நல்ல உரையாடல், குரல் வளம் நிச்சயம் கிடைக்கும்.

👱குழந்தைகளுக்கு அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டிய பாடல்

⏺️சந்தப்பாக்களின் சீர்களில் ஒவ்வொர் உயிரும் ஓரசை என்பதால் ஓசை நயமும் தாளமும் நிறைய அமைத்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.
⏺️ ஒவ்வொறு பாடலிலும் சீர்காழி பதியின் பெயரில் வரும் ஒரு தமிழ் எழுத்தை பாடல் முழுதும் சிறப்புடன் சீர் அமைத்துள்ளது மிகவும் அற்புதமானது. 

🔷இது போன்ற சந்தப் பாடல்களை கற்றுணர்ந்து அருணகிரியார் தம்முடைய திருப்புகழ் பாடல்களை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

🔹திருஞானசம்பந்தப்பிள்ளையாரை முருகனின் திரு அவதாரமாகக் கொண்டவர் அருணகிரிநாதர். இதைக் குறிப்பிட்டு தம்பாடல்களில் சிறப்பு செய்துள்ளார். 

✔️இராமலிங்கசுவாமிகளும் இக்கருத்தை ஏற்கிறார்.

💠பிற்கால இசைத் தமிழ் இலக்கியத்தின் அடிப்படையாக அமைந்தப் பாடல்கள்

♦️அருட் செல்வர் தமிழ் விரகனார், திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற இப் பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

📚பாடல்,பொருள்,விளக்கம் பல நூல், தரவுகளிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
🛡️சிந்தனைக்கும் எட்டாத ஞானசம்பந்தரின் அற்புதத் தமிழின் இசைப்பாடல் சிறப்பை உணருவோம். இவையே, தமிழரின்பொக்கிஷம்.

பாடல். 10
♦️காழி: ஆடலில் தோற்ற காளிக்கும் அருளிய காழி நகர்.

✳️'ழ' கரசீர் அமைப்பு.

பாடல்: 723

பாழியுறை வேழநிகர் பாழமணர் 
சூழும் உடல் ஆளர்உணரா

ஏழினிஇசை யாழின்மொழி ஏழையவள் வாழும்இறை தாழும்இடமாம்.

கீழிசைகொள் மேலுலகில் வாழரசு சூழரசு வாழஅரனுக்கு

ஆழியசில் காழிசெய ஏழுலகில் ஊழிவளர் காழிநகரே.

                                   - 3:325:10 (723)
பொருள் :
சமணர்களும் சாக்கியர்களும் ஈசனை உணராதவர்கள். ஏழிசையும், யாழின் இனிமையும் போன்ற மொழி பகரும் உமாதேவியை உடனாகக் கொண்டு மேவும் சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாவது, கீழ் உலகில் பெருமையுடன் வாழ்பவர்களும், மேல் உலகத்தில் அரச போகத்தில் வாழ்பவர்களும் மற்றும் சூழ்ந்து விளங்குபவர்களும் வாழும் பொருட்டு நடனம் புரிந்த ஈசன்பால், ஆடலில் தோற்று அப்பெருமானைப் பூசித்துத் தன் குற்றமானது நீங்குமாறு ஏத்திய காளிதேவிக்கு அருளிய காழி நகரே.

விளக்கம்:
பாழி உறை - பாழியில் தங்கும், 
வேழம் நிகர் - யானையை யொத்த, 
பாழ் அமணர் - பாழ்த்த அமணர்களும். சூழும் - கூட்டமாக உள்ள, 
உடல் ஆளர் - உடலைப் பாதுகாப்போராகிய பௌத்தர்களும், உணரா - உணராத, 

ஏழின் இசை - ஏழு சுரங்களையுடைய, யாழின்மொழி - யாழ் போற் பேசுகின்ற, ஏழையவள் - பெண்ணாகிய அம்பிகையுடன், 
வாழும் இறை - வாழ்பவராகிய சிவபெருமான், 
தாழும் - தங்கும், ( இடம் ஆம் ) 

கீழ் ( உலகில் ) கீழ் உலகில், 
சூழ் - சூழ்ந்த அரசு - அரசர்களும், இசைகொள் - புகழ்கொண்ட, 
மேல் உலகில் மேல் உலகத்தில், 
வாழ் - வாழ்கின்ற, 
அரசு - அரசனாகிய இந்திரனும் ; 
வாழ - ( காளியின் துன்புறுத் தலினின்று ) வாழும் பொருட்டு ( நடனம் ஆடுதலில் ) அரனுக்கு சிவபெருமானுக்கு,

ஆழிய - ஆழ்ந்த, தோற்ற, 
சில்காழி - சிலகோவைகளையுடைய மேகலாபரணம் அணிந்தவளாகிய அக்காளி, 
செய - தன் குற்றம் நீங்கும்படி வந்துபோற்ற, அருள் பெற்ற செயல் ஏழுலகில் - சப்த லோகங்களிலும், 
ஊழி - பல ஊழி காலமாக, 
வளர் - பெருகும்

🙇‍♂️நன்றி🙏
🛐💚🕉️🧡☸️💜⚛️💙🔯💛🙏🙆🏼🙇🏼‍♂️
என்னமும் தகவல் ஆக்கமும், தொகுத்து வழங்குவது:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
முன்பதிவு :
https://m.facebook.com/story.php?story_fbid=5829633637111845&id=100001957991710

Sunday, July 4, 2021

வழிமொழி திருவிராகம் - சம்பந்தர் அமுதம் - பதிவு: 9 பாடல்: 9

#வழிமொழி_திருவிராகம், 
 பதிவு:9
மூன்றம் திருமுறை பதிகம்: 325
பாடல்:9.
 🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.
📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 

🙇‍♂️நன்றி🙏

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.

#தமிழரின்பொக்கிஷம்:

#திருவிராகம்,# வழிமொழிதிருவிராகம்,
#வண்ணகம்,#முடுக்கியல்,#அடுக்கியல் 
இவை பற்றி முன்பதிவுகளில் சிந்தித்தோம்.
தொடர்ந்து
#வழிமொழிதிருவிராகம் பதிகப் பாடல் விளக்கங்களயும், சிறப்புகளையும்
தொடர்ந்து இப்பதிவில் பார்ப்போம்.

📕மூன்றாம் திருமுறையில் வரும்
பாடல்கள்:  714 - 725
பதிகம் 325    தலம் திருப்பிரமபுரம்.
'சுரர் உலகு நரர்கள்பயில் தரணிதல'
எனத் தொடங்கும் பதிகப் பாடல்கள்.

⚜️வழிமொழி திருவிராகம் என்னும் வகை சேர்ந்தது.

🅾️#வழிமொழிதிருவிராகம்:

⏺️இலக்கணம் :
⏏️குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத் தொடுப்பது இவ்வகையாம்.
(முடுகிய என்பது வேகமாக ஓடும் தாள அமைப்பு எனக் கொள்ளலாம்)

🔸இதன் ஓசை அமைப்பில் பாடல் 

தனனதன  தனனதன  தனனதன  
              தனனதன    தனனதனனா

என அமைகிறது.

இப்பதிகத்தின் 1, 2, 3, 4 பாடல்கள் பற்றி நான்காவது முன்பதிவிலும்

இப்பதிகத்தின் 5, 6, 7, 8 பற்றி ஐந்தாவது பதிகத்திலும்  

இப்பதிவில்,
இப்பதிகத்தின் 9,  வது பாடல் விளக்கங்களையும் சிறப்புகளையும் பற்றி தொடர்ந்து சிந்திக்கலாம்.

🔵 இதில் திருஞானசம்பந்தர் 'வழிமொழிகள் மொழி தகையவே' என்று குறிப்பிட்டு சிறப்பிப்பதாலே இந்தப் பதிகம் வழிமொழி திருவிராகம் என்னும் பெயர் சூட்டப்பட்டது.

⏺️சந்தப்பாக்களின் சீர்களில் ஒவ்வொர் உயிரும் ஓரசை என்பதால் ஓசை நயமும் தாளமும் நிறைய அமைத்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.

🔹திருஞானசம்பந்தப்பிள்ளையாரை முருகனின் திரு அவதாரமாகக் கொண்டவர் அருணகிரிநாதர். இதைக் குறிப்பிட்டு பாடல்கள் செய்துள்ளார். 

✔️இராமலிங்கசுவாமிகளும் இக்கருத்தை ஏற்கிறார்.

🔷இது போன்ற சந்தப் பாடல்களை கற்றுணர்ந்து அருணகிரியார் தம்முடைய திருப்புகழ் பாடல்களை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

⏺️இந்தப் பதிகம் 12 பாடல்கள் கொண்டது.

⏹️சீர்காழிப்பதியின் 12 பெயர்கள் வந்த வழியை -  வரலாற்றிணை - விளக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.

🔹சாதாரி என்ற பண் வகையினது.

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐

பாடல். 9.
💠சண்பை:
சண்பை என்னும் கோரையால் உண்டான புண்கள் தீருமாறும் கண்ணபிரான் போற்றி வழிபட்டுச் சாபத்தை நீக்கியதால், சண்பை என்னும் பெயர் பெற்ற திருத்தலமாகும்.

✳️'ண' சீர் அமைப்புள்ளது.

பாடல். 722

விண்பயில  மண்பகிரி   வண்பிரமன் எண்பெரிய  பண்படைகொள்  மால்

கண்பரியும்  ஒண்பொழிய நுண்பொருள்கள் 
தண்புகழ்   கொள்  கண்டன் இடமாம்

மண்பரியும்  ஒண்பொழிய   நுண்புசகர் 
புண்பயில  விண்படரஅச்

சண்பைமொழி  பண்பமுனி கண்பழிசெய் 
பண்புகளை சண்பை நகரே.
         
                                               - 3:325:9 (722)
பொருள் :
பெருமை மிகுந்த பிரமன் விண்ணில் உயர்ந்து சென்றும், எண்ணுவதற்கு அரியதாகிய வலிமை மிகுந்த சக்கரப் படையுடடைய திருமால், மண்ணில் குடைந்து சென்றும், தேடியும், ஒளியின் தன்மையினையும் கரந்து நுண்ணிய பொருளாக விளங்கி, அத்தகைய இரு மூர்த்திகளாலும் காணப் பெறாது புகழ் கொண்டு மேவிய நீலகண்டர், சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, மண்ணுலகத்தில் தமது பெருமையை அழித்துக் கொள்ளும் தன்மையில், முனிவரை இழிவு  செய்து பழி கொண்ட தனது இனத்தவர்களுக்கு, நற்கதி உண்டாகுமாறும், சண்பை என்னும் கோரையால் உண்டான புண்கள் தீருமாறும், கண்ணபிரான் போற்றி ஏத்தப் பெயர் பெற்ற சண்பை நகரே.

 விளக்கம்:
மண்பகிரி - மண்ணைப்பிளக்கும் பன்றி ( யாகி ). 
எண் பெரிய - மிக்க மதிப்புடைய. 
பண் - தகுதியான, 
படைகொள் - சக்கராயுதத்தைக் கொண்ட. மால் - திருமால் ( பூமியிற் சென்றும் )

வண் பிரமன் - சிறந்த பிரமன். விண்பயில - ஆகாயத்தில் சென்றும்,

கண்புரியும் - கண்ணாற் பற்றக்கூடிய. 
ஒண்பு - ஒளி. 
ஒழிய - நீங்க. 
நுண் பொருள்கள் - அவற்றிற்கு எட்டாததாகிய நுண்ணிய பொருள்களாக. தண்புகழ்கொள் - இனிய கீர்த்தியைக்கொண்ட. 
கண்டன் இடமாம் - அகண்டனாகிய சிவபெருமானின் இடமாகும்.  

மண்பரியும் - உலகத்தைக் காக்கின்ற, ஒண்பு ஒழிய - ஆண்மை நீங்க. 
நுண்பு - அற்பர்களாகிய. 
சகர் - யாதவர்கள். 
புண்பயில - ஒருவரோடு ஒருவர் அடித்துக் கொண்டு செத்து. 
விண்படர - விண்ணுலகை அடைய. 

பண்பமுனி தவப்பண்பையுடைய துருவாசமுனிவர். 
கண்பழி செய் - கருதத்தக்க பழியைச் செய்த. 
பண்பு - சாபத்தை. 
களை - நீக்கியதனால். 
சண்பை மொழி - சண்பையென்று மொழியப்படும் சண்பைநகர்
🎶மிக அற்புதமான பாடல். மிக மிக முக்கியமானது. 

🌟இப்பாடலை திரும்பத் திரும்ப ஒதிக்கொண்டுவந்தால் நாவிற்கும் உள்ளத்திற்கும் அருமருந்து. 

⏺️சந்தப்பாக்களின் சீர்களில் ஒவ்வொர் உயிரும் ஓரசை என்பதால் ஓசை நயமும் தாளமும் நிறைய அமைத்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.
⏺️ ஒவ்வொறு பாடலிலும் சீர்காழி பதியின் பெயரில் வரும் ஒரு தமிழ் எழுத்தை  பாடல் முழுதும் சிறப்புடன் சீர்  அமைத்துள்ளது மிகவும் அற்புதமானது. 

🔷இது போன்ற சந்தப் பாடல்களை கற்றுணர்ந்து அருணகிரியார் தம்முடைய திருப்புகழ் பாடல்களை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

🔹திருஞானசம்பந்தப்பிள்ளையாரை முருகனின் திரு அவதாரமாகக் கொண்டவர் அருணகிரிநாதர். இதைக் குறிப்பிட்டு தம்பாடல்களில் சிறப்பு செய்துள்ளார். 

✔️இராமலிங்கசுவாமிகளும் இக்கருத்தை ஏற்கிறார்.

💠பிற்கால இசைத் தமிழ் இலக்கியத்தின் அடிப்படையாக அமைந்தப் பாடல்கள்

♦️அருட் செல்வர் தமிழ் விரகனார், திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற இப் பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

📚பாடல்,பொருள்,விளக்கம் பல நூல், தரவுகளிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

🛡️சிந்தனைக்கும் எட்டாத ஞானசம்பந்தரின் அற்புதத் தமிழின் இசைப்பாடல் சிறப்பை உணருவோம். இதுவே,  தமிழரின்பொக்கிஷம்.

🙇‍♂️நன்றி🙏
🛐💚🕉️🧡☸️💜⚛️💙🔯💛🙏🙆🏼🙇🏼‍♂️
என்னமும் தகவல் ஆக்கமும், தொகுத்து வழங்குவது:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

முன்பதிவு :
https://m.facebook.com/story.php?story_fbid=5825331274208748&id=100001957991710

Saturday, July 3, 2021

வழிமொழிதிருவிராகம் - சம்பந்தர் இசையமுதம் - பதிவு: 8 பாடல் 8

#வழிமொழிதிருவிராகம்
பதிவு : எட்டு. பாடல் 8

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

🗣️வாய்பேச்சுக் கோளாறு இன்றி நல்ல உரையாடல், குரல் வளம் நிச்சயம் கிடைக்க இப்பதிகம் உதவும்.
👱குழந்தைகளுக்கு அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டிய பாடல்
📚தமிழ் மொழி வளம் உயர்வு உணர்ந்து அறிய உதவும் அற்புத பதிகம் இது.

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.

📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 

🛐🙏
🌀ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.
இத்தகைய பாடல்கள் தமிழரின் இசை பொக்கிஷம்:
#திருவிராகம், #வழிமொழிதிருவிராகம்,
#வண்ணகம் #முடுக்கியல் #அடுக்கியல் 
இவை பற்றி முன்பதிவுகளில் சிந்தித்தோம்.
#வழிமொழிதிருவிராகம் பதிகப் பாடலையும் அதன் விளக்கங்களயும், சிறப்புகளையும் தொடர்ந்து இப்பதிவில் பார்ப்போம்.

🅾️#வழிமொழிதிருவிராகம்:
⏺️இலக்கணம் :
⏏️குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத் தொடுப்பது இவ்வகையாம்.
(முடுகிய என்பது வேகமாக ஓடும் தாள அமைப்பு எனக் கொள்ளலாம்)

🔸இதன் ஓசை அமைப்பில் பாடல் 

தனனதன தனனதன தனனதன  
              தனனதன தனனதனனா

என அமைகிறது.

 🧿இப்பதிகத்தின் திருக்கடைக்காப்பில் (இறுதிப் பாடலில்) திருஞானசம்பந்தர் 'வழிமொழிகள் மொழி தகையவே' என்று குறிப்பிட்டு சிறப்பிப்பதாலே இந்தப் பதிகம் வழிமொழி திருவிராகம் என்னும் பெயர் சூட்டப்பட்டது.
🔵
🌟ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.

🔹சம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை: தலம்: திருப்பிரமபுரம்:
பதிகம்: 325 (67) 
பாடல்: 1-12 (714-725)
இந்தப் பதிகம் 12 பாடல்கள் கொண்டது.

🌟சீர்காழிப்பதியின் 12 பெயர்கள் வந்த வழியை - வரலாற்றிணை - விளக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.

🌀சாதாரி என்ற பண் வகையினது.

பாடல் 8.
💠புறவம் : இந்திரன் பருந்தாகவும், அக்னி புறாவாகவும் சென்று சிபிச்சக்கரவர்த்தியிடம் சோதிக்க புறாவின் எடைக்காக உடல் அறுத்து ஈடு செய்தான். பாவம் நீங்க அக்னியான, புறா வழிபட்டதால் புறவம் எனப்பட்டது.

✳️ ' ற ' சீர் அமைப்புள்ளது.

பாடல் : 721.

அறமழிவு பெறவுலகு தெறுபுயவன் விறல்அழிய நிறுவிவிரல்மா

மறையின்ஒலி முறைமுரல்செய் பிறையெயிறன்   
உறஅருளும் இறைவன் இடமாம்

குறைவின்மிக நிறைதையுழி மறையமரர்    
நிறையருள முறையொடுவரும்

புறவன் எதிர் நிறைநிலவு பொறையன்உடல்    
பெறஅருளும் புறவம் அதுவே.
     
                                     - 03.325.08 (721)
பொருள் :
அறநெறிகள் அழியுமாறு உலகத்தைத் துன்புறுத்திய புயவலிமையுடைய இராவணனது ஆற்றல் அழியுமாறு, திருப்பாத விரலால் கயிலையை ஊன்றி நெரித்துச் சாமகானத்தால் ஏத்திப் போற்ற, அருள் புரிந்தவர், சிவபெருமான். அவர் வீற்றிருக்கும் இடமாவது, புறாவின் எடைக்குச் சரி நிகராகத் தனது சதையை வைத்து நிரம்பாது தன்னையே அதற்கு இணையாகக் கொள்ளுமாறு செய்த சிபிச்சக்கரவர்த்தியின் நீதியைப் புகழும் தேவர்கள் போற்றும் பெருமை உடைய புறவமே.
தலச்சிறப்பு:
புறாவின் எடைக்குச் சமமாகத் தன் சதையை அறுத்து வைத்த சிபிச்சக்கரவர்த்தி குறையில்லா உடம்பைப் பெற அருள் புரிந்ததும், தான் செய்த பழிபோக புறா உருவில் வந்த தீக்கடவுள், தவறு உணர்ந்த ராவணனுக்கு அருள்புரிந்த சிவபெருமானை, பூசித்து அருள் பெற்ற புறவம் என்னும் திருத்தலமாகும்.

பாடல் விளக்கம்:,
அறம் அழிவுபெற - தர்மம் அழியும் படியாக. 
உலகு - உலகத்தை, 
தெறு - அழித்த, 
புயவன் - தோள்களையுடைய இராவணனது. 
விறல் அழிய - வலிமை யொழியும்படி, விரல் நிறுவி - விரலை அழுத்தி ; ( பின் )

மாமறையின் ஒலி - சிறந்த சாமவேத கானத்தை, 
முறை - வரிசையாக, 
முரல் செய் - பாடிய, 
பிறை எயிறன் - பிறை போன்ற பற்களையுடைய அவ்விராவணன். 
உற - நாளும், வாளும் பெற. 
அருளும் இறைவன் இடமாம். 

மறை அமரர் - வேதங்களுக்கும் தேவர்களுக்கும் ஒத்ததாகிய, 
நிறை - நீதியை. 
அருள - வழங்கும்படி. 
முறையொடு வரும் - முறையிட்டு வந்த,

புறவன் - புறாவிற்குரியவனாகிய வேடன், எதிர் - எதிரே, 
குறைவில் - புறாவின் எடைக்குச் சரியாக இட்ட மாமிசத்தின் குறைவில். 
மிக - அதிகரிக்க, 
நிறைதை உழி - நிறைவுவேண்டியிருந்த பொழுது. 
நிறைதை - நிறைவு. 
பொறை - பாரம், எடை
நிறை நிலவு - அந்த எடையின் நிறை சரியாகப் பொருந்த இட்ட. 
பொறையன் - உடலின் அரிந்த மாமிசத்தை எடையாக்கினவனாகிய சிபி, உடல் பெற - தன் உடம்பைப்பெற, 
அருள் - அவன் வந்து பணிய அருள் புரிந்த 
புறவம் அது - புறவம் என்னும் பெயருடைய திருத்தலமாம். 
🎶மிக அற்புதமான பாடல். மிக மிக முக்கியமானது. 

🌟இப்பாடலை திரும்பத் திரும்ப ஒதிக்கொண்டுவந்தால் நாவிற்கும் உள்ளத்திற்கும் அருமருந்து. 

⏺️சந்தப்பாக்களின் சீர்களில் ஒவ்வொர் உயிரும் ஓரசை என்பதால் ஓசை நயமும் தாளமும் நிறைய அமைத்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.
⏺️ ஒவ்வொறு பாடலிலும் சீர்காழி பதியின் பெயரில் வரும் ஒரு தமிழ் எழுத்தை பாடல் முழுதும் சிறப்புடன் சீர் அமைத்துள்ளது மிகவும் அற்புதமானது. 

🔷இது போன்ற சந்தப் பாடல்களை கற்றுணர்ந்து அருணகிரியார் தம்முடைய திருப்புகழ் பாடல்களை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

🔹திருஞானசம்பந்தப்பிள்ளையாரை முருகனின் திரு அவதாரமாகக் கொண்டவர் அருணகிரிநாதர். இதைக் குறிப்பிட்டு தம்பாடல்களில் சிறப்பு செய்துள்ளார். 

✔️இராமலிங்கசுவாமிகளும் இக்கருத்தை ஏற்கிறார்.

💠பிற்கால இசைத் தமிழ் இலக்கியத்தின் அடிப்படையாக அமைந்தப் பாடல்கள்

♦️அருட் செல்வர் தமிழ் விரகனார், திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற இப் பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

📚பாடல்,பொருள்,விளக்கம் பல நூல், தரவுகளிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

🛡️சிந்தனைக்கும் எட்டாத ஞானசம்பந்தரின் அற்புதத் தமிழின் இசைப்பாடல் சிறப்பை உணருவோம். இதுவே, தமிழரின்பொக்கிஷம்.

🙇‍♂️நன்றி🙏
🛐💚🕉️🧡☸️💜⚛️💙🔯💛🙏🙆🏼🙇🏼‍♂️
என்னமும் தகவல் ஆக்கமும், தொகுத்து வழங்குவது:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
🛐💚🕉️🧡☸️💜⚛️💙🔯💛🙏🙆🏼🙇🏼‍♂️
முன்பதிவு :
https://m.facebook.com/story.php?story_fbid=5819885151420027&id=100001957991710

Friday, July 2, 2021

வழிமொழி திருவிராகம் - சம்பந்தர் இசையமுதம் - பதிவு 7 பாடல் 7

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

🗣️வாய்பேச்சுக் கோளாறு இன்றி நல்ல உரையாடல், குரல் வளம் நிச்சயம் கிடைக்க இப்பதிகம் உதவும்.
👱குழந்தைகளுக்கு அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டிய பாடல்
📚தமிழ் மொழி வளம் உயர்வு உணர்ந்து அறிய உதவும் அற்புத பதிகம் இது.

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.

📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 

🌀ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.
இத்தகைய பாடல்கள் தமிழரின் இசை பொக்கிஷம்:
#திருவிராகம், #வழிமொழிதிருவிராகம்,
#வண்ணகம் #முடுக்கியல் #அடுக்கியல் 
இவை பற்றி முன்பதிவுகளில் சிந்தித்தோம்.
#வழிமொழிதிருவிராகம் பதிகப் பாடலையும் அதன் விளக்கங்களயும், சிறப்புகளையும் தொடர்ந்து இப்பதிவில் பார்ப்போம்.

🅾️#வழிமொழிதிருவிராகம்:
⏺️இலக்கணம் :
⏏️குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத் தொடுப்பது இவ்வகையாம்.
(முடுகிய என்பது வேகமாக ஓடும் தாள அமைப்பு எனக் கொள்ளலாம்)

🔸இதன் ஓசை அமைப்பில் பாடல் 

தனனதன தனனதன தனனதன  
              தனனதன தனனதனனா

என அமைகிறது.

 🧿இப்பதிகத்தின் திருக்கடைக்காப்பில் (இறுதிப் பாடலில்) திருஞானசம்பந்தர் 'வழிமொழிகள் மொழி தகையவே' என்று குறிப்பிட்டு சிறப்பிப்பதாலே இந்தப் பதிகம் வழிமொழி திருவிராகம் என்னும் பெயர் சூட்டப்பட்டது.
🔵
🌟ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.

🔹சம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை: தலம்: திருப்பிரமபுரம்:
பதிகம்: 325 (67) 
பாடல்: 1-12 (714-725)
இந்தப் பதிகம் 12 பாடல்கள் கொண்டது.

🌟சீர்காழிப்பதியின் 12 பெயர்கள் வந்த வழியை - வரலாற்றிணை - விளக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.

🌀சாதாரி என்ற பண் வகையினது.

பாடல் 7.

💠சிரபுரம் : திருமால் சிலம்பன் என்ற அசுரனை சிரம் அறுக்க, அந்த சிரம் இரு கிரகமாக நின்று வழிபட்டு நின்று பூசித்த தலம்.

✳️'ர' சீரில் அமைத்துள்ளார்.

பாடல். 720.

அரணையுறும் முரணர்பலர் மரணம்வர  
இரணம்மதில் அரமலிபடைக்
கரம்விசிறு விரகன்அமர் கரணனுயர் பரனெறிகொள் கரனதிடமாம்
பரவமுது விரவவிடல் புரளமுறும் அரவை யரி சிரம் அரியஅச்
சிரம்அரன சரணம்அவை பரவஇரு கிரகம் அமர் சிரபுரமதே.

                                         -03.325:07 (720)
பொருள் :
மும்மதில்களை அரணாகக் கொண்ட அசுரர்கள், பலரும் மாண்டு அழியுமாறும், இரணங்கள் கொண்டு நலியுமாறும் துன்புறுத்தினர். அத்தகைய தீயோரை அழித்துத் தன்னை அடைந்தவர்களைக் காப்பவரும், வலிமையான அரண் படையைக் கொண்டுள்ளவரும் நற்கதி அருளுபவரும் சிவபெருமான் ஆவார். அவர் வீற்றிருக்கும் இடமாவது, எல்லாராலும் போற்றப்படுகின்ற அமுதத்தைப் பாற்கடலில் இருந்து கடைந்து தருவித்த காலத்தில், தனக்கும் வேண்டும் எனப்பந்தியில் வந்த பாம்பின் சிரத்தினைத் திருமால் அரிந்து வீச, அச்சிரமானது அரனைச் சரணம் அடைந்து இரண்டு கிரகங்களாகப் பொலியும் சிரபுரம் ஆகும்.

விளக்கம்:
அரணையுறும் - மதிலைப்பொருந்திய, முரணர் - திரிபுரத்தசுரர்களால். 
பலர் மரணம்வர - பலருக்கு மரணம் நேர. இரணம் - காயங்கள் முதலியன உண்டாக்கித் துன்புறுத்தும், 
மதில் - அம்மதிலின்மேல். 
அரமலி படை - அரத்தால் அராவப்பட்ட ஆயுதத்தை, 

கரம் - கையினால். 
விசிறு - ஏவிய, 
விரகன் - சமர்த்தனும், 
அமர் கரணன் தன்னை அடைந்தவருக்கு கரணங்களின் சேட்டையை அடக்குவிப்போனும். 
உயர்பரன் - யாவரினும் உயர்ந்த மேன்மை உடையவனும் ). 
நெறி கொள்கரன் அது - உபதேசிக்கும் முறையைக் கொண்ட திருக்கரத்தை உடையவனுமாகிய சிவபெருமானின், 
இடமாம் - தலமாகும். 

பரவு - துதிக்கத்தக்க. 
அமுது - அமிர்தம், 
விரவ - தனக்குக்கிடைக்கும்படி 
உறும் அரவை - பந்தியில் வந்த பாம்பை. விடல் - விடத்தோடு. 
புரளம் உறும் - புரளுதல் உறும், 
அரிசிரம் அரிய - திருமால் அதன்தலையை வெட்ட. 
அச்சிரம் - அந்தத் தலையானது, 
அரன் - சிவபெருமானது, 
சரணமவை - பாதங்களை, 
பரவ - துதித்ததினால் 
இருகிரகம் - இரண்டு கிரகங்களாக, 
அமர் - நவக்கிரக வரிசையில் அமரச்செய்த, 
சிரபுரம் - சிரபுரமாம். 

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
🎶மிக அற்புதமான பாடல். மிக மிக முக்கியமானது. 

🌟இப்பாடலை திரும்பத் திரும்ப ஒதிக்கொண்டுவந்தால் நாவிற்கும் உள்ளத்திற்கும் அருமருந்து. 

⏺️சந்தப்பாக்களின் சீர்களில் ஒவ்வொர் உயிரும் ஓரசை என்பதால் ஓசை நயமும் தாளமும் நிறைய அமைத்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.
⏺️ ஒவ்வொறு பாடலிலும் சீர்காழி பதியின் பெயரில் வரும் ஒரு தமிழ் எழுத்தை பாடல் முழுதும் சிறப்புடன் சீர் அமைத்துள்ளது மிகவும் அற்புதமானது. 

🔷இது போன்ற சந்தப் பாடல்களை கற்றுணர்ந்து அருணகிரியார் தம்முடைய திருப்புகழ் பாடல்களை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

🔹திருஞானசம்பந்தப்பிள்ளையாரை முருகனின் திரு அவதாரமாகக் கொண்டவர் அருணகிரிநாதர். இதைக் குறிப்பிட்டு தம்பாடல்களில் சிறப்பு செய்துள்ளார். 

✔️இராமலிங்கசுவாமிகளும் இக்கருத்தை ஏற்கிறார்.

💠பிற்கால இசைத் தமிழ் இலக்கியத்தின் அடிப்படையாக அமைந்தப் பாடல்கள்

♦️அருட் செல்வர் தமிழ் விரகனார், திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற இப் பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

📚பாடல்,பொருள்,விளக்கம் பல நூல், தரவுகளிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

🛡️சிந்தனைக்கும் எட்டாத ஞானசம்பந்தரின் அற்புதத் தமிழின் இசைப்பாடல் சிறப்பை உணருவோம். இதுவே, தமிழரின்பொக்கிஷம்.

🙇‍♂️நன்றி🙏
🛐💚🕉️🧡☸️💜⚛️💙🔯💛🙏🙆🏼🙇🏼‍♂️
என்னமும் தகவல் ஆக்கமும், தொகுத்து வழங்குவது:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
பதிவு: ஒன்று பாடல் 1
https://m.facebook.com/story.php?story_fbid=5787884447953431&id=100001957991710
பதிவு : இரண்டு : பாடல் 2
https://m.facebook.com/story.php?story_fbid=5795841430491066&id=100001957991710
பதிவு : மூன்று : பாடல் 3
https://m.facebook.com/story.php?story_fbid=5800911013317441&id=100001957991710
பதிவு : நான்கு: பாடல் 4
https://m.facebook.com/story.php?story_fbid=5805963462812196&id=100001957991710
பதிவு : ஐந்து: பாடல் 5
https://m.facebook.com/story.php?story_fbid=5810152739059935&id=100001957991710
பதிவு: ஆறு: பாடல் 6
https://m.facebook.com/story.php?story_fbid=5815070398568169&id=100001957991710