Wednesday, October 8, 2025

வேலங்குடி பெருமாள் ஆலயம் 28.9.25

வேலங்குடி பெருமாள் ஆலயம்

#வேலங்குடிபெருமாள் ஆலயம்
🛕  பெருமாள் ஆலயமும் அழகுற அமைந்துள்ளது. ராஜகோபுரம், பிரகாரம்,  உள்ளே பெரிய மண்டபம். கருடன் எதிரில்  பூமீ நீளா வரதராஜபெருமாள் கருவரை, பின்புறம் 4 தனி தனி சன்னதிகளில் மகாலெட்சுமி, சக்கரத்தாழ்வார், தன்வந்திரி, மற்றும் ஆண்டாள் சன்னதிகள் முதலிய ஆலய தெய்வங்கள். உள்ளது. பூசைகள், பராமரிப்பும் நன்றாக உள்ளது.
அருகில் உள்ள விநாயகர் ஆலயம்
சொக்கட்டான் விநாயகர் ஆலயம்
🛕இக்கோயிலுக்கு அருகிலேயே "சொக்கட்டான் விநாயகர்" என்ற கோயில் உள்ளது. அதாவது "சொல் கேட்டான் விநாயகர்" என்பதன் திரிபே சொக்கட்டான் விநாயகர் என்று மருவிவிட்டது. என்ன சொல் சொல்லி பிரார்த்தனை செய்தாலும் உடனே கேட்டு அதற்குல் பலனளித்து விடும் வரப்பிரசாதி. விநாயகரை வேண்டி பலன் கிடைத்ததும் 108 தேங்காய்கள் உடைக்கப்படுகின்றன. சிலர் அன்னதானம் செய்கின்றனர்.
அருகில் உள்ள சிவன் ஆலயம்:
வேலங்குடிகண்டீஸ்வரர்ஆலயம்
நகரத்தார் ஆலயம் ஒன்பதில் இதுவும் ஒன்று.
அ /மி. கண்டீஸ்வரர் - காமாட்சி அம்மன் ஆலயம், வேலங்குடி

⛳காரைக்குடியிலிருந்து பள்ளத்தூர் செல்லும் வழியில் 9 கி.மீ தொலைவில் வேலங்குடி உள்ளது.
⛳ பழங்காலத்தில் வேலமரங்கள் மிகுதியாக இருந்ததால் இவ்வூர் இப்பெயர் பெற்றது.

⛳கோட்டையூரின் ஒரு பகுதியில் இந்த ஊர் உள்ளது.
சுவாமியின் திருநாமம் : கண்டீசர்,
அம்பாள் :காமாட்சி

⛳இது ஒரு தேவார வைப்பு தலமாகும் , இது அப்பரின் பதிகங்களில் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது .

💠நன்றாகப் பராமரிக்கப்படும் கோவில்கள்..
பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

💠பள்ளத்தூர் அல்லது கோட்டையூர் வழியாக செல்வதே நல்லது
💠நன்றாக பராமரிக்கப்பட்டு வரும் சிவன் ஆலயம்.
💠கிழக்குவாசல் அடைத்து விட்டிருந்தாலும், தெற்குவாசல் வழியாக உள்ளே செல்ல வேண்டும்.
💠 ஏற்கனவே பள்ளமாக இருந்த இடத்தில் சிறிய ஆலயமாக இருந்தது, தற்போதுள்ள இடம் மேடாக்கி அதில் ஆலயம் விரிவாக்கி புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
💠சிறிய கிராமப்பகுதியில் தனியாக ஆலய வளாகம் உள்ளது.
💠சொற்கேட்டான் விநாயகர் ஆலயம், மற்றும் ஒரு பெருமாள் ஆலயங்களும் பொலிவுடன் விளங்குகின்றன. பெரிய குளம் ஒன்றும் உள்ளது. அருகில் வேறு 💠கடைகள் வீடுகள் அருகில் கிடையாது.

நன்றி🙏
28.09.25 ஞாயிற்றுக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 28.09.2025

புதுக்கோட்டை : புவனேஸ்வரி அம்மன் திருக்கோயில், 28.09.25

புதுக்கோட்டை : புவனேஸ்வரி அம்மன் திருக்கோயில், 
#புதுக்கோட்டை : புவனேஸ்வரி அம்மன் திருக்கோயில், 

புதுக்கோட்டை ராஜாகுளக்கரையில் புவனேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

முன்பு இந்த இடம் ஜட்ஜ் சுவாமிகள் அவர்களின் ஆஸ்ரமமாக இருந்த இடத்தை சாந்தானந்தா சுவாமிகள் மேற்கொண்டு அதிஷ்டானமாக்கி இருக்கிறார்.
 புவனேஸ்வரி கோவிலுக்கு அதிஷ்டானம் என்று பெயர். 1936-ஆம் ஆண்டு முதல் இந்தக்கோவில் இருக்கிறது.

நுழைந்ததும் ஜட்ஜ் சுவாமிகள் சமாதி இருக்கும். இடது பக்கத்தில் அஷ்டதச புஜ லட்சுமி எதிரே புவனேஸ்வரி. புவனேஸ்வரியின் எதிரில் ஸ்ரீ சக்கர மேரு வைத்து பூஜை நடைபெறும். கற்பூர ஆரத்தி நேரத்திலும் இருவருக்கும் ஒரே சமயத்தில் ஆரத்தி நடைபெறும். காலை மாலை மட்டும்தான் ஆரத்தி. நடுவில் தரிசனம் மட்டும்தான்.

இருவரின் திருஉருவத்தையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். நேர் எதிரில் சன்னிதி இருவருக்கும். ஐயர் வகுப்பினர் புடவை கட்டும் மடிசாரில் அஷ்டதச புஜ லட்சுமிக்கு அலங்காரம் செய்திருப்பார்கள். எதிரில் பெரிய யாக குண்டம் இருக்கும். இங்கே வருடத்திற்கு ஒரு முறை செய்யப்படும் யாகம் மிக பிரசித்தம். அது முடிந்த உடன் ஊரில் மழை நிச்சயம்.

சரஸ்வதி ஞான ரூபம், லட்சுமி க்ரியா ரூபம், மஹா காளி இச்சா ரூபம் - இந்த மூன்று சக்திகளும் சேர்ந்த சாமுண்டீஸ்வரி அஷ்டதச புஜ லட்சுமியாக அன்னை இங்கே வணங்கப்படுகிறாள்.

கோவில் விதிமுறைகள்

கோவில் வாசலிலேயே தாமரை மலர்கள் விற்றுக்கொண்டிருப்பார்கள். அர்ச்சனை எல்லாம் கிடையாது. 

கோவில் சிறப்பு
கோவிலைச் சுற்றி வரும்பொழுது பஞ்சமுக பிள்ளையார், பஞ்சமுக ஆஞ்சநேயர், தன்வந்த்ரி, சாஸ்தா, நாமே அபிஷேகம் செய்யும் வகையில் லிங்கம், பொற்பனையான் ஆகிய மூர்த்திகள் இருக்கும். படு சுத்தமாக நிசப்தமாக இருப்பது சிறப்பு.

இந்த ஆலயத்தில் ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீ பால முருகன் அர்த்த மண்டபத்தில் அருள் பாலிக்கிறார்கள். மூலஸ்தானத்தில் கம்பீரமாக மிகவும் அழகாக சுமார் 4.5 அடியில் அமர்ந்த கோலத்தில் புன்னகை ததும்ப ஸ்ரீ சக்கர மகா மேரு உடன் அருள்புரிகின்றாள் தேவி ஸ்ரீ புவனேஸ்வரி. ஆலயத்தின் சிறப்பாக ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயமும், நவகிரகங்கள், காலபைரவர் சந்நிதி, விசேஷமாக யோகம் அருளும் சனீஸ்வரர் தனி சந்நிதி மற்றும் நாக தேவதைகள் உள்ளது. மூலஸ்தானத்தை சுற்றி பஞ்ச கோஷ்ட தெய்வங்களாக காயத்திரி தேவி, வைஷ்ணவி தேவி, பிராம்மகி, துர்க்கை, லட்சுமி தேவி, அங்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து நலன்களையும் அன்னையிடம் இருந்து பெற்றுத் தருகிறார்கள்

இங்கே கோவில் சுத்தமான தசாங்கம் கிடைக்கும். அதைக் கோனில் வைத்து ஏற்றுவது ஒருக்கலை. சுகந்தச்ச மனோஹரமாக வாசம் தூக்கும். புவனேஸ்வரி குங்குமம் எந்தக் கலப்பும் இல்லாத மஞ்சள் குங்குமம்.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் ஸ்கந்தாஸ்ரமம் இருக்கிறது. அதுவும் சாந்தானந்தா சுவாமிகளால் அமைக்கப்பட்டதுதான். சேலம் ஸ்கந்தாஸ்ரமமும் இந்த அமைப்பினருடையதுதான்.

1936ஆம் ஆண்டில் கட்டப் பட்டதாக அறியப்படும் இத்தலத்தில்,ஶ்ரீ புவனேஷ்வரி அம்மன் அமர்ந்தஅருட்கோலத்திலும்,ஶ்ரீ அஷ்டதச புஜ லக்ஷ்மி துர்கா தேவி நின்ற திருக் கோலத்திலும்திருஅருட்காட்சியளிக்கின்றனர்.

நமது தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில்,புதுக்கோட்டை, ராஜாகுளக்கரையில் அமைந்துள்ள இந்த புவனேஷ்வரி அம்மன் ஆலயமும் ஒன்று என்பது தலச்சிறப்பு.

'தெய்வத்திரு' சதாசிவ பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமி எனும் ஜட்ஜ் சுவாமிகளின் ஆஸ்ரமமாக இருந்த இத்தலத்தினை, சாந்தானந்தா சுவாமிகள் மேற்கொண்டுஅதிஷ்டானமாக்கி இருக்கிறார்.
( புவனேஷ்வரி அம்மன் ஆலயத்திற்கு அதிஷ்டானம் எனும் பெயராம்).

ஜட்ஜ் சுவாமிகளின்அதிஷ் டானமாக (ஜீவசமாதியாக) இருந்தாலும், அன்னை புவனேஷ்வரிஅருட்குடிகொண்டிருப்பதால், இத்தலம் புவனேஷ்வரி அம்மன் ஆலயம் என்றே பக்தர் களால்அழைக்கப்படுகிறது.

25-தலை கொண்ட
ஶ்ரீ விஸ்வரூப சதாசிவர்
சுதை சிற்பம் காண பரவசம்.

உடல் திறனும், உள்ளம் ஆற்றலும் மேன்மையுற நடைபெறும்பவுர்ணமி வழிபாடும், இல்லம் வளம் பெற நடைபெறும்
நவராத்திரி விழாவும்
இத்தலத்தின் சிறப்புமிகு விசேஷ காலங்களாகும்.

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

⚡ நாங்கள் 2020ல் வந்த போது பழைய ஆலயம் புனரமைப்பில் இருந்தது.
(20.02.2020) 

⚡தற்போது, புதிய ஆலயம் மிக பிரமாதமாகக் கட்டப்பட்டுள்ளது. இன்று 28.9.25 மீள் தரிசனம். அம்பாள் சரஸ்வதி அலங்காரம் ஹோமம். துர்க்கா பூசை இரவு 8.00 மணி அளவில் நடந்தது.

⚡ஊரின் நடுவில் உள்ளது. ⚡வாகனங்களில் வருவோர் மிகவும் கவனம்.
நெருக்கடியான பிரதான கடைத்தெருவில் உள்ளது. வாகனங்கள் நிறுத்த ஆலயம் எதிரில் இடம் உள்ளது.
⚡பக்தர்கள் பிரார்த்தனையுடன் வந்து பரிகாரம், பூசைகள் செய்து கொள்ளுகிறார்கள்.

நன்றி🙏
28.09.25 ஞாயிற்றுக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 28.09.2025

புதுக்கோட்டை : அருள்மிகு சாந்தநாதர் உடனுறை வேதநாயகி ஆலயம் , 28.9.25

புதுக்கோட்டை : அருள்மிகு சாந்தநாதர் உடனுறை வேதநாயகி ஆலயம்
#புதுக்கோட்டை : அருள்மிகு சாந்தநாதர் உடனுறை வேதநாயகி ஆலயம்

⛳புதுக்கோட்டையின் வரலாறு தென்னகத்தின் வரலாற்றின் ஓர் அம்சமாக இருக்கிறது. மிகப் பழமையான வரலாற்றுப் பதிவுகள் கொண்ட பூமி இது ★ அதிக எண்ணிக்கையில் குகைக்கோயில்கள்,ஆயிரத்திற்க்கு மேற்பட்ட கல்வெட்டுகள், அதிகமான தொல்லியல் பழமைச் சின்னங்கள், அதிகமான ரோம பொன்நானயங்கள் கிடைத்துள்ள இடமென பல்வேறு சிறப்புகளை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை ★

🛕புதுக்கோட்டை நகரில் உள்ள சிவனாலயம்.
மூலவர்: சாந்தநாதர் அம்மன் : வேதநாயகி
தீர்த்தம்:பல்லவன் குளம்

💠திறந்திருக்கும் நேரம்: காலை 6:00 – மதியம் 12:00 மணி, மாலை 4:30– இரவு 8:30 மணி

💠புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,.

💠கோயில் பெருமைகள்:
பதினோராம் நுாற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி புரிந்த முதலாம் குலோத்துங்க சோழன் கட்டிய சிவன் கோயில் இது. ‘குலோத்துங்க சோழீஸ்வரம்’ என பெயர் பெற்ற இக்கோயில், பிற்காலத்தில் ‘சார்ந்தாரைக் காத்த நாயனார் கோயில்’ என மாறியது. இப்போது ‘சாந்தநாத சுவாமி’ என வழங்கப்படுகிறது. 
💠ஆலய ஆமைப்பு:
இக்கோவில் ஊரின் மத்தியில் பல்லவன் குளக்கரையில் கிழக்கு நோக்கி கருவறை, இடைநாழி, அர்த்தமண்டபம் மற்றும் முக மண்டபத்துடன் தென்னிந்திய கட்டிடக்கலையின் திராவிட விமான அமைப்பில் பாதபந்த அதிட்டானத்தின் மீது கட்டப்பட்டு உள்ளது. இருதள திராவிட விமானம் கருவறை மீது காணப்படுகின்றது. இறைவன் "சார்ந்தாரைக் காத்த நாயனார்" என்று அழைக்கப்பட்டு மறுவி தற்போது சாந்தநாதசுவாமி என்று அழைக்கப்படுகின்றார். இக்கோயிலின் சிறப்பாக சரபேஸ்வரர் முகமண்டபத்தில் அருள்புரிகின்றார். 

⚡இந்த கோயிலில் இருக்கக்கூடிய சுவாமிக்கு எதிரே ருத்திராட்சப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது அதன் கீழ் நந்தீஸ்வரர் காட்சி கொடுத்து வருகிறார்.

கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் இந்த சிவனை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி நிறைந்திருக்கும் என்பது ஐதீகம் சுவாமிக்கு எதிரில் ருத்ராட்ச பந்தலின் கீழ் நந்தீஸ்வரர் வீற்றிருக்கிறார். 

⚡நான்கு வேதங்களுக்கும் தலைவியாக விளங்கும் அம்பிகை ‘வேதநாயகி’ என்னும் பெயரில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். கல்விக்கடவுளாக திகழும் இந்த அம்மனை மாணவர்கள் வியாழக்கிழமை வழிபடுவது சிறப்பு.

⚡காசி ராமேஸ்வரம்: காசி விஸ்வநாதர் – விசாலாட்சி, ராமேஸ்வரம் ராமநாதர்– பர்வதவர்த்தினிக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.

⚡ இங்குள்ள பல்லவன் குளக்கரையில் அமாவாசையன்று முன்னோருக்கு தர்ப்பணம் செய்து தீபமேற்றி வழிபட்டால் பிதுர் தோஷம், முன்வினை பாவம் தீரும். கோயிலை அடுத்துள்ள பல்லவன் குளம் காசியில் பாயும் கங்கை தீர்த்தமாக கருதப்படுகிறது. இதனடிப்படையில் இங்கு வழிபடுவோருக்கு ஒருசேர காசி, ராமேஸ்வர யாத்திரை செய்த புண்ணியபலன் கிடைக்கும்.

⚡ராகுகால துர்க்கை: பிரகாரத்திலுள்ள துர்க்கை சன்னதியில் செவ்வாய், வெள்ளிக்கிழமையில் ராகு காலத்தில் விளக்கேற்றி குங்கும அர்ச்சனை செய்ய திருமணத்தடை நீங்கும். இங்குள்ள சர்க்கரை விநாயகருக்கு பக்தர்கள் தங்களின் கைகளால் சர்க்கரை அபிேஷகம் செய்ய கடன் பிரச்னை தீரும். தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு பூசணி தீபம் ஏற்ற கிரக தோஷம் நீங்கும். 

⚡அறுபத்து மூவர் சன்னதியில் சிவன் ‘காட்சி கொடுத்த நாயனார்’ என்னும் பெயரில் ரிஷபத்தின் மீது காட்சியளிக்கிறார்.

⚡திருச்சுற்றில் தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, சூரியன், சந்திரன், லட்சுமி, சரஸ்வதி, கன்னி மூல கணபதி, வள்ளி தெய்வானையுடன் முருகர், சரபேஸ்வரர், ஸ்வர்ன ஆகர்ஷண பைரவர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. கோயிலின் தீர்த்தம் பல்லவன் குளம் ஆகும்.

💠சிறப்பு
இக்கோயில் கி.பி.1071-1123இல் ஆண்ட முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மூலவர் சன்னதியின் மேல் விதானத்தில் காணப்படுகின்ற கல்வெட்டில் இக்கோயில் குலோத்துங்க சோழீச்சரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிற்காலத்தில் இக்கோயில் சார்ந்தாரைக் காத்த நாயனார் கோயில் என்றழைக்கப்பட்டது.

💠விழாக்கள்
ஆனி மாதம் பத்து நாள்கள், மாசி மகம், தெப்பத் திருவிழா ஆகியவை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஆனி பிரம்மோற்ஸவம், ஆடிப்பூரம், சம்பக சஷ்டி, தைப்பூசம், மாசிமகத்தன்று தெப்பம், மாசி வளர்பிறை திரயோதசி திதியன்று மகா பிரதோஷ விழா சிறப்பாக நடைபெறுகிறது.
ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிசேகம், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

💠 இக்கோயில் வழிபாட்டிற்காக காலை 6.00 முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 9.00 மணி வரையிலும் வழிபாட்டிற்காகத் திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

💠கோயிலை ஒட்டியுள்ள பல்லவன் குளத்தின் தென்கரையில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. பெரிய ஆஞ்சநேயர், சிறிய ஆஞ்சநேயர் என இரண்டு விக்ரஹங்கள் உள்ளன. தொடர்ந்து 12 சனிக்கிழமைகளில் துளசி மாலை சாத்தினால் நினைத்தது நிறைவேறும். வடைமாலை சாத்தி வழிபடுவோருக்கு சனி தோஷம் விலகும். 

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

⚡மிகப் பழமையான ஆலயம். 
ஊரின் நடுவில் உள்ளது. வாகனங்களில் வருவோர் மிகவும் கவனம்.
நெருக்கடியான பிரதான கடைத்தெருவில்  உள்ளது.
⚡ஆலயம் அருகில் குளம் உள்ளது.
 சீரமைக்கப்பட வேண்டியதுள்ளது. 
⚡பக்தர்கள் பிரார்த்தனையுடன் வந்து பரிகாரம், பூசைகள் செய்து கொள்ளுகிறார்கள்.
⚡ராகு கால மற்ற விஷேச நாட்களில் ஆலயம் பக்தர்கள் வருகையால், கூட்டமாக உள்ளது.

நன்றி🙏
28.09.25 ஞாயிற்றுக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 28.09.2025

திருவரங்குளம் -அருள்மிகு அரங்குளநாதர் திருக்கோயில் (ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்) - புதுக்கோட்டை மாவட்டம் 28.9.25

திருவரங்குளம் -அருள்மிகு அரங்குளநாதர் திருக்கோயில் 
#திருவரங்குளம் -அருள்மிகு அரங்குளநாதர் திருக்கோயில் 
 (ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்)
 - புதுக்கோட்டை மாவட்டம்

🔱பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ அவசியம் செல்ல வேண்டிய தலம் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் கோயிலாகும்.

💠இருப்பிடம் : புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி /பட்டுக்கோட்டை செல்லும் டவுன் பஸ்களில் சென்றால் 7 கி.மீ., தொலைவில் இவ்வூர் உள்ளது. பஸ் ஸ்டாப்பில் இருந்து சிறிது தூரம்வரை  சென்றால் கோயிலை அடையலாம். அடிக்கடி பஸ் உண்டு.

💠கோயில் காலை 7.00 மணி முதல்  12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் மாலை 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

🔱சுவாமி :ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் - 
                    .அரங்குளநாதர்
🔱அம்பாள்: பெரிய நாயகி

🛕பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட ராஜகோபுர தரிசனம் கோடி புண்ணியம் தரும். சுவாமி அரங்குளநாதர் சுயம்புவாக அருள் தருகிறார்.
அம்மன் பெரியநாயகி நான்கு திருக்கரத்துடன் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருளுகிறாள்.

 சிவனது மூலஸ்தானத்திற்கு பின், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரின் தனி சன்னதி உள்ளது. பிரகாரத்தில் பொற்பனை விநாயகர், அரங்குள விநாயகர், பிரகாரத்திலுள்ள தெட்சிணாமூர்த்தியின் கையில் வீணை இருக்கிறது - வீணாதர தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நந்தி, சதுர்த்தி விநாயகர், சப்த மாதர்கள், 63 நாயன்மார்கள், ஐயனார், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சரஸ்வதி, மகாலட்சுமி, ஜேஷ்டா தேவி, பாலமுருகன், நவகிரகம், பைரவர், சூரியன், சந்திரன், நால்வர் சன்னதிகள் உள்ளன க

🛕இக்கோயில் நடராஜர் சிலை சிறப்பு வாய்ந்த ஒன்று. இதன் படிமம் டில்லியிலுள்ள தேசிய மியூசியத்தில் உள்ளது.
🛕இங்குள்ள திருச்சிற்றம்பலம் உடையாரை தரிசித்தால் காசி விஸ்வநாதரை தரிசித்த பலன் கிடைக்கும். 12 ராசிகளும் அதற்குரிய அதிதேவதைகளுடன் மூலிகை ஓவியமாக வசந்த மண்டபத்தின் உச்சியில் வரையப்பட்டுள்ளது.

🛕பிரகாரத்தை நூற்றுக்கால் மண்டபம் என்கிறார்கள். ஒரு குதிரை வீரனின் சிற்பம் கல்பலகை ஒன்றில் வடிக்கப்பட்டுள்ளது. இது இப்பகுதியில்
வாழ்ந்த வீரனாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

🪷கிரக தோஷம், நாகதோஷம், மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அம்மனிடம் உள்ள ஸ்ரீசக்கரத்தை நினைத்து வழிபட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

தல வரலாறு : ஒரு முறை சோழ மன்னனாகிய கல்மாஷபாதன் என்பவனுக்கு நீண்ட காலமாகியும் குழந்தை பாக்கியம் இல்லை. சிறந்த சிவபக்தனான இவன், தனக்கு பின் சிவ சேவை செய்ய ஆளில்லை என்பதை நினைத்து வருந்தி, அகத்திய முனிவரிடம் முறையிட்டான். மன்னனின் குறைநீங்க திருவரங்குளம் சென்று சிவனை வணங்கும்படி அகத்தியர் கூறினார்.

⚡மன்னனும் இத்தலம் வந்து சிவலிங்கத்தை தேடி அலைந்தான்.
அத்துடன் அங்கேயே தங்கி சிவன் கோயிலை கட்ட முடிவெடுத்தான். 
ஆனால் சிவலிங்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை, மேய்ப்பர்களின் உதவியை நாடினான். அப்போது சிவன், அப்பகுதியில் தான் இருக்கும் இடத்தை அரசனுக்கு உணர்த்த திருவுளம் கொண்டார். இடையர்கள் கொண்டுவரும் பூஜைப்பொருள்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தினமும் கீழே இடறி விழுவதை அறிந்த மன்னவாளால்ன், அந்த இடத்திற்கு சென்று தன்  பூமியில் கீறிப்பார்த்தான். அப்போது பூமியிலிருந்த சிவலிங்கத்தின் தலையில் வாள்பட்டு ரத்தம் பீய்ச்சியடித்தது. இதைக்கண்டு பயந்த மன்னன், மாபெரும் தவறு செய்து விட்டேன் என புலம்பி தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றான். இறைவன் மன்னனை தடுத்தாட்கொண்டு பார்வதியுடன் திருமணக்கோலத்தில் தரிசனம் கொடுத்து, இந்த இடத்தில் தனக்கு கோயில் கட்டும்படி ஆணையிட்டார்.  ஒரு பூர நட்சத்திர நாளில் தான் இந்த நிகழ்ச்சி நடந்தது. இறைவனின் அருளால் மன்னன் கோயில் கட்டினான். அவனுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

⚡புனித நீரூற்று ஹரனின் தலையிலிருந்து வந்ததால் , இது ஹர தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடம் திரு ஹரன் குளம்-திருவரங்குளம் என்று அறியப்பட்டது.

🪷பூர நட்சத்திரத்தலம்: பூர தீர்த்தம் என்பது அக்னி லோகத்தில் உள்ள ஒரு புனித தீர்த்தமாகும்.  அம்மன் சிவனது தரிசனங்கள் அனைத்தையும் பெற பூராக்னியில் தவம் செய்தாள். இவளது தவத்தில் மகிழந்த இறைவன் இத்தலத்தில் ஆடிப்பூர நன்னாளில் சிவ தரிசனம் தந்தார். மேலும் பூர நட்சத்திர லோகத்தில் சிவ தீர்த்தம், நாக தீர்த்தம், ஞான பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஸ்ரீ தீர்த்தம், ஸ்கந்த தீர்த்தம், குரு தீர்த்தம் என ஏழு தீர்த்தங்கள் உண்டு. இதே ஏழு தீர்த்தங்கள் இத்தலத்திலும் இருப்பதால் இத்தலம் பூரம் நட்சத்திரத்திற்குரிய கோயிலானது. எனவே தான் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது பிறந்த நட்சத்திர நாள், பிறந்தநாள், மாதாந்திர நட்சத்திர நாள், திருமணநாள், ஆடிப்பூரம் ஆகிய முக்கிய நாட்களிலும், அடிக்கடி  சென்று வழிபாடு செய்ய வேண்டிய முக்கிய தலமானது.

🪷முக்காடு போட்டு வழிபாடு: 
இவ்வூரைச் சேர்ந்த பெண்மணியான பெரியநாயகி என்பவர் இறைவன் மீது அதீத அன்பு பூண்டிருந்தார். ஒருமுறை தன் பெற்றோருடன் கோயிலுக்கு வந்தார். சற்றுநேரத்தில் மறைந்து விட்டார். பின்பு அசரீரி தோன்றி, அப்பெண்மணி சிவனுடன் ஐக்கியமாகி விட்ட தகவலை தெரிவித்தது. நகரத்தார் சமுதாயத்தினர் அவரை அம்மனாகக் கருதி, "பிரகதாம்பாள்' என பெயர் சூட்டி தனி சன்னதி எழுப்பினர். இது காலத்தால் பிற்பட்ட சன்னதி என்பது பார்த்தாலே புரியவரும்.

🪷இப்பகுதியில் வாழ்ந்த கட்டுடையான் செட்டியார் வம்சத்தில் இத்தல அம்மன் பெண்குழந்தையாக பிறந்து வளர்ந்ததாக கூறப்படுகிறது. எனவே இப்போதும் கூட இந்த வம்சத்து பெண்கள் இக்கோயிலுக்கு வந்தால், தங்கள் வம்ச பெண்ணின் மாப்பிள்ளையாக சிவனை நினைத்து முக்காடு போட்டு வழிபாடு செய்யும் பழக்கம் உள்ளது.

🪷கோயில் வெளிப்பிரகாரத்தில் பொற்பனை மரம் இருந்துள்ளது. இதிலிருந்து கிடைக்கும் பொன் பழங்கள் மூலம் பணம் பெற்று இந்த கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அந்த இடத்தில் அதன் அடையாளமாக கல்ஸ்தூபி உள்ளது.

♻️கோயில் திருவிழாக்கள்:
ஆடிப்பூரம், அம்மன் திருக்கல்யாணம், மகா சிவராத்திரி, திருவாதிரை, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், ஆடிப்பூர விழாக்கள் பத்துநாள் கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூரத்தின் ஒன்பதாம் நாள் நடக்கும் தேரோட்டம் விசேஷமானது 

♻️இத்தலத்துக்கு வருவோர், சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது  வஸ்திரம் சாற்றி நேர்த்திக் கடன் செய்துவர பெரும் நன்மைகள் உண்டாகும். பிரசித்தி பெற்ற தலமாக விளங்குகிறது.

♻️இத்திருத்தலத்தினை சுற்றி சுமார் 150 கி.மீ தூரம் சுற்றளவில் உள்ள பெரும்பாலான மக்கள் இத்தல இறைவனை குலதெய்வமாகக் கொண்டு வழிபட்டு வருகின்றனர்.

தியானம் செய்ய விரும்புவோர் இங்குள்ள அமைதியான சூழலை மிகவும் விரும்புவர். குரங்குகள் அதிகமாக உள்ளன.

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

⚡மிகப் பழமையான, புராதன ஆலயம். தோஷ நிவர்த்தி தலம்.
⚡முன் ஒரு முறை சென்று தரிசித்துள்ளோம்.
⚡ஆலயம் புனரமைப்பு செய்து குடமுழுக்கு திருப்பணிகள் தொடங்கப்பட வேண்டும்.
⚡ஆலயம் முன்புள்ள பெரிய குளம்
 சீரமைக்கப்பட வேண்டியதுள்ளது. 
⚡பக்தர்கள் பிரார்த்தனையுடன் வந்து பரிகாரம், பூசைகள் செய்து கொள்ளுகிறார்கள்.
⚡ராகு கால மற்ற விஷேச நாட்களில் ஆலயம் பக்தர்கள் வருகையால், கூட்டமாக உள்ளது.  
⚡சுவாமி அம்பாள், சுப்பிரமணியர் சோமஸ்கந்தர் வடிவ அமைப்புக் கோவில்,
⚡ வாழ்வில் அவசியம் ஒரு முறையாவது சென்று தரிசித்து பலன் பெற வேண்டிய ஆலயம்

நன்றி🙏
28.09.25 ஞாயிற்றுக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 28.09.2025.

வேலங்குடி பெருமாள் ஆலயம் 28.9.25

வேலங்குடி பெருமாள் ஆலயம் #வேலங்குடிபெருமாள் ஆலயம் 🛕  பெருமாள் ஆலயமும் அழகுற அமைந்துள்ளது. ராஜகோபுரம், பிரகாரம்,  உள்ளே பெரிய மண்டபம். கருடன...