Saturday, January 17, 2026

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு.

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு.

⛳தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது;

 🏵️இங்கு முருகன், தந்தைக்கு பிரணவ மந்திரம் (ஓம்) உபதேசித்ததால் சுவாமிநாதன் எனப் பெயர் பெற்றார்; இது குரு அம்சமாகத் திகழ்வதாலும், தகப்பனுக்கே உபதேசம் செய்ததால் இத்தலம் சுவாமிமலை என அழைக்கப்படுகிறது. 
60 படிகள் கொண்டது.

🔱கீழ்க்கோவில் ஶ்ரீ மீனாட்சிசுந்தரேஸ்வரர் அம்மையும், அப்பனுமாக இருந்து அருள் புரிகிறார். தனி சிவன் ஆலய அமைப்பில உள்ளது.

🔱தந்தைக்கு உபதேசம் செய்த முருகன் மலைக்கோவிலில் தனி அமைப்பில் உள்ளார்.
கிழக்கு நோக்கிய தனி விநயகர் சிறப்பு அம்சம்.

🔱 வாழ்வில் தரிசிக்க வேண்டிய சிறப்பான அற்புத பலன் தரும் ஆலயம்.

🛕தல வரலாறு & சிறப்பு அம்சங்கள்:

🌟குரு-சிஷ்ய உறவு: சிவபெருமானுக்கு 'ஓம்' மந்திரத்தை உபதேசித்ததால், முருகன் 'சுவாமிநாதன்' (குரு) ஆனார்; சிவன் 'சுவாமி' ஆனார்.
அறுபடை வீடு: முருகனின் நான்காவது படைவீடு.

 🌟இங்குள்ள மலை, உண்மையில் மண் குன்றே, ஆனால் கட்டுமலையாக உருமாறியது.

🌟திருப்படி பூஜை: 60 தமிழ் ஆண்டுகளின் பெயரால் அமைந்த 60 படிகளைக் கடந்து செல்வது சிறப்பு.

🌟பிரம்மகத்தி தோஷ நிவர்த்தி: பதினாயிரம் பிரம்மகத்தி தோஷங்களை நீக்கும் வல்லமை கொண்டது.

🌟ஐராவதம்: தேவேந்திரன் வழங்கிய வெள்ளை யானையான ஐராவதத்தின் சிலை மூலவர் சன்னதி முன் உள்ளது. 

⛳அமைவிடம் & நேரம்:
இடம்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து சுமார் 6-8 கி.மீ தொலைவில் உள்ளது.

🍀பூஜைகள்:
விபூதி அபிஷேகத்தில் ஞானியாகவும், சந்தன அபிஷேகத்தில் பாலசுப்ரமணியனாகவும் காட்சி தருவார்.

🔰பல்வேறு அபிஷேகங்கள், அர்ச்சனைகள் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். 

பல தகவல்கள் வலை தளத்தில் வந்தது.

🛐எமக்கு எம் குலதெய்வமான சுவாமிநாதர் என்றும் துணையிருப்பார்🙆🏼

🛐வாய்ப்பு கிட்டும் போது எல்லாம் தரிசனம் செய்ய வேண்டிய ஆத்மார்த்த ஆலயம்🙇

5-01-2026
28.12.2025 தரிசனம்.
# சுப்ராம் அருணாசலம்.
#சுப்ராம் 
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

கத்தரிநத்தம் - காளஹஸ்தீஸ்வரர் ஆலயம்

கத்தரிநத்தம் - காளஹஸ்தீஸ்வரர் ஆலயம்

🔱கத்தரிநத்தம்

⛳தஞ்சை - அம்மப் பேட்டை பிரதான சாலையில், புன்னைநல்லூர் அடுத்து பிரதான சாலையிலிருந்து தென்புறம் பிரியும் சாலையில் ரயில்வேலையன் தாண்டினால் வரும் சிற்றூரில், கிழக்கில் ஆலயம் உள்ளது.
🛕ஆலயம் முன்பு குளம். கிழக்கு நோக்கிய ஆலயம். ராஜகோபுரம்
 ஏக பிரகாராம்.

🛕காளஹஸ்தீஸ்வர் - ஞானம்பிகை ஆலயம்

🍀புராதான பிரார்த்தனை தலம்.
🍀ராகுகேது பரிகார தலம்.
🍀பல முனிவர்களுக்கு சாபம் தீர்த்த இடம்.

🌼ஏராளமான பக்தர்கள் தோஷ நீக்கம் வேண்டி பிரார்த்தனைக்கு வருகிறார்கள்.

🌟சப்தரிஷிகள் வழிபட்ட ஆலயம்

🌟ஆலயம் புனருத்திரானம் செய்யப்பட்டு, வண்ணங்கள் தீட்டப்பட்டு குடமுழுக்கு நாளுக்காக தயாராக உள்ளது.

🌼அரசு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயம்.

28.12.2025 தரிசனம்.

#சுப்ராம் 
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
https://www.facebook.com/share/p/14TioCLsx58/

புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம், தஞ்சாவூர்:

புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம், தஞ்சாவூர்:

💥புராதானமும், பக்தியும் நிறைந்த வழிபாட்டு ஸ்தலம். தஞ்சை அரண்மனை தேவஸ்த்தானத்திற்கு சொந்தமான ஆலயம். தமிழ்நாட்டின் தலைசிறந்த, புகழ்வாய்ந்த, புராதானமான மாரியம்மன் ஆலயம் இது. சிறந்த பிரார்த்தனை தலம். தஞ்சாவூர் நகருக்கு கிழக்கில் 6 கி.மீ. தூரத்தில் உள்ளது.

💥கருவரையில், அம்மன் கிழக்குப் பார்த்து அமைந்து அருள் புரிகிறார்கள்.
3 பிரகாரங்கள் உள்ளன. ஏராளமான தமிழர்களுக்கு, குல தெய்வமாக இருப்பவர் இந்த மாரியம்மன்.
பல முறை தரிசனம் செய்யும் ஆலயம்.
புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம்
ஆகமபுரானமும், பக்தியும் நிறைந்த வழிபாட்டு ஸ்தலம்.

🌼தஞ்சை அரண்மனை தேவஸ்த்தானத்திற்கு சொந்தமான ஆலயம். தமிழ்நாட்டின் தலைசிறந்த, புகழ்வாய்ந்த, புராதானமான மாரியம்மன் ஆலயம் இது. சிறந்த பிரார்த்தனை தலம்.

28.12.25 மீள் தரிசனம்.
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மிகபாரதம்அகிலத்தின்சிகரம்
https://www.facebook.com/share/p/1aCmBMK2st/

கூடலூர் - தஞ்சை வெண்ணாற்றங்கரை வடகரையில் ..கூடலூர் - காசிவிஸ்வநாதர் விசாலாட்சி ஆலயம்.

🔰கூடலூர் - தஞ்சை வெண்ணாற்றங்கரை வடகரையில் ..
கூடலூர் - காசிவிஸ்வநாதர் விசாலாட்சி ஆலயம்.

⛳கூடலூர் சேர்ந்த பகுதியில்,  தனியார் பரமரிப்பில் கிழக்கு நோக்கிய காசி விசுவநாதர் ஆலயம் ஒன்றும், வெண்ணற்றங்கரை வட கரையில் உள்ளது. 

🔱ஆலயம் கிழக்கு நோக்கியது.
சுவாமி, கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் தனித்தனியாக கருவரை அமைப்பில், மிக சிறிய ஆலயமாக உள்ளது. ஆலய வளாகம் பெரியதாக வெற்று இடமாக உள்ளது.

வெளிப்புறம் சுற்று சுவர் ஒன்றும் உள்ளது.

🌼சிறிய ஆலயம் மிகவும் சீர்கெட்டு உள்ளது. முழுவதுமான திருப்பணிகளைத் தொடங்கி ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். 

🌼பழமையான ஆலயம், புனரமைப்பு செய்யப்பட வேண்டிய அவசியத்தில் / அவசரத்தில் உள்ளது.
கிழக்குப் பார்த்த சிவன் மற்றும் தெற்கு நோக்கிய அம்மனும் சிறிய கருவரை மண்டபத்துடன்  உள்ளது. 

⛳விநாயகர் மற்ற சில சிலைகள் கருவறைமுன் மண்டபத்திலேயே உள்ளது.

வேறு தனி சன்னதிகள் எதும்   இல்லை.

 கூடலூர் மீனாட்சி சொக்கநாதர் ஆலயக் குருக்கள்,  இந்த ஆலயம் வந்து பூசை செய்கிறார்.

வழி:  வெண்ணாற்றங்கரை வடகரையில் உள்ள பாதையில் ஓரத்தில்  ஒரு கால பைரவர் ஆலயம்  உள்ளது. அருகில்  கரை ஓரம் கிழக்கில்பிரிந்து செல்லும் மன் சாலையில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் ஆலயம் உள்ளது.

28.12.2025 #சுப்ராம்தரிசனம் 
#சுப்ராம் 
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

https://www.facebook.com/share/p/1JyQTQntdV/
கூடலூர் - விஸ்வநாதர் ஆலயம்

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு.

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு. ⛳தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காவிரி ...