Monday, November 24, 2025

உலகியநல்லூர் -அர்த்தநாரீஸ்வரர் கோயில் - சேலம் - பஞ்சபூத தலங்கள் அருகில் - பிரதோஷக் குழு யாத்ரா - 9.11.2025

உலகியநல்லூர்
அர்த்தநாரீஸ்வரர் கோயில்

 🛕தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உலகியநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும்.

🛕அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில்
அமைவிடம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், 
 கள்ளக்குறிச்சி வட்டம் , உலகியநல்லூர்.

கோயில் தகவல்
🛕மூலவர்: அர்த்தநாரீஸ்வரர்
இறைவன்:ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர்
இறைவி: ஸ்ரீபிரஹன்நாயகி, பெரிய நாயகி
பதினான்காம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டது.
🛕2003ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.
இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.

🛕கோயில் அமைப்பு

🙇முதலில் இந்த ஆலயம் மூன்றாம் குலோத்துங்கன்- வீரராஜேந்திர சோழ மன்னாரால் கி.பி.1184 லில் கட்டப்பட்டது. செழியத் தாரையர்கள் மரபில் வந்த அந்தால தீர்த்த செழியன் ராஜகோபுரம் கட்டினான்
🛕 அர்த்தநாரிஸ்வரர் ஆலயத்தின் கருவரை மற்றும் அர்த்த மண்டபம் கி.பி 1184-ல் மூன்றாம் குலோத்துங்கன் என்று பெயர் பெற்ற வீரராஜேந்திரன் சோழர் காலத்தில் கட்டப்பட்டது.

🛕 ஆலய ஏழு நிலைக் கோபுரம், மதில்கள் மற்றும் பிற பகுதிகள் சோழ மன்னர்கள் ஆட்சிப் பிறகு வந்த குறுநில மன்னன் அந்தாலந்தீர்த்த செழியன் காலத்தில் கட்டப்பட்டது..

⚡இக்கோயிலில் அர்த்தநாரீஸ்வரர், அம்பாள் சன்னதிகளும், விநாயகர், முருகர், நவகிரகம், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் உபசன்னதிகளும் உள்ளன. 

⚡இங்குக் கோயில் கல்வெட்டு உள்ளது. 

⚡இக்கோயிலில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மரபு சாராத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகின்றது.

🌟மிகப்பெரிய கற்றளி ஆலயம்.
🌟கிழக்குப் பார்த்த ஆலயங்கள்
🌟சுவாமி வலது புறம் அம்பாள் தனி சன்னதி 
🌟சிவாலயவிதிகள்படி மற்ற தெய்வ சிலைகளும் பிரகாரத்தில் அமைந்துள்ளன.
🌟அம்பாள் சன்னதி முன் ராகு கேது சன்னதி புதிதாக அமைக்கப்பட்டுள்ளது
🌟ஆலயவளாகத்தில் வடகிழக்கில் குளம் ஒன்றும் உள்ளது.

மக்களின் விழிப்பு
🛕சின்னசேலம் அருகே உலகியநல்லூர் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. 

🛕இந்த கோவிலில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 
அதன் பிறகு முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், இந்த கோவில் சிதிலமடைந்தது. இதனால் கோவிலில் அன்றாட பூஜைகள் கூட நடத்தப்படவில்லை. 
கல் வெட்டில் உள்ள கோயிலுக்குரிய 4 வேலி நிலம் முதலியவை இப்போது யாரிடம் உள்ளது என்று தெரியவில்லையாம்!

🍀இந்த நிலையில் கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி பக்தர்கள் முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்கள், திருப்பணி உபயதாரர்கள், பொதுமக்கள், நன்கொடையாளர்கள் ஒன்று சேர்ந்து கோவிலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
2023ல் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.

(வலைதள - தகவல்கள்)

⛳ #பயண அனுபவகுறிப்புகள்🕊️

🪴மிகப்பழமையான ஆலயம் மீட்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டு பராமரிப்பில் உள்ளது.
💦குருக்களுக்கு முன் தகவல் தந்து தரிசித்தோம்.
💦ஆலயம் வரை சாலைவசதிகளும் நல்ல நிலையில் உள்ளது.
💦சிறிய கிராமம் பெரிய கடைகள், வசதிகள் இல்லை. 
💦ஆலயம் நித்திய கால பூசையுடன், வழிபாட்டில் உள்ளது.

🙇நன்றி🙏
🛕#சுப்ராம்ஆலயதரிசனம் 9.11.2025🛐
# என்றும்அன்புடன்💟
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🙇🛕
#ஆன்மிகபரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🗻

⛳ #பிரதோஷேக்குழுயாத்ரா 
🛕#ஆன்மீகதலயாத்திரை: 
சேலம் 8, 9 நவம்பர், 2025.
நன்றி🙏 9.11.2025
🔱🧘🏼♻️😂⛳🙏🛕🏘️💐⛳🛐

கள்ளக்குறிச்சி மாவட்டம் ,சின்னசேலம் அடுத்த தென்பொன்பரப்பி கிராமத்தில் அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. - சேலம் - பஞ்சபூத தலங்கள் அருகில் - பிரதோஷக்குழு யாத்ரா - 9.11.2025

🪷கள்ளக்குறிச்சி மாவட்டம் ,சின்னசேலம் அடுத்த தென்பொன்பரப்பி கிராமத்தில் அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

🪷இச்சிவாலயத்தின் மூலவர் சொர்ணபுரீசுவரர் என்றும், அம்பிகை உமையாள் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலம் 1300 ஆண்டுகள் பழமையானதாகும்.

தல வரலாறு

🛐காகபுஜண்டர் 18 சித்தர்களின் தலைவராக கருதப்படுகிறார். அவர் இத்தலத்தில் 16 ஆண்டுகள் கடும்தவமிருந்து அதன் பயனாக 16 முகங்கள் கொண்ட சோடச லிங்கத்தின் தரிசனம் பெற்றார். அதைப் போன்ற சிவலிங்கத்தினை உருவாக்கி தென் பொன்பரப்பி பகுதியை ஆட்சி செய்த வானகோவராயன் எனும் மன்னனிடம் அளித்தார். மன்னர் இந்த லிங்கத்தினை வைத்து கோயில் அமைத்தார்.

தல சிறப்பு

⛳இச்சிவாலயத்தின் மூலவரான சொர்ணபுரீசுவரர் லிங்க வடிவில் காட்சிதருகிறார். இந்த லிங்கம் சோடச லிங்கம் எனப்படும் 16 பட்டைகளுடன் கூடியதாகும்.

⛳இங்கு 1300 ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களின் தலைமை குருவாக கருதப்படும் காகபுஜண்டர், 16 ஆண்டுகால தவத்தின் பலனாக 16 முகங்களுடன் கூடிய சிவலிங்கத்தை தரிசனம் செய்தார்.அதேபோல் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, எதிர்காலத்தில் பக்தர்கள் வணங்க வேண்டும் என கருதினார். அப்போது, தென்பொன்பரப்பி பகுதியை ஆட்சி செய்த, வானகோவராயன் என்ற மன்னன் மற்ற சிவாலயங்களில் இல்லாத சிறப்புகளுடன் இந்த லிங்கத்தை உருவாக்கினார் என்பது வரலாறு.இக்கோவிலில், சிவலிங்கம் 16 பட்டைகளுடன் அருள்பாலிக்கிறார்.

ஆலய அமைப்பு

🛕மிகப்பெரிய கற்றளி ஆலயமாக இருந்து காலவெள்ளத்தில் சிதைக்கப்பட்டு,  தற்போது மீட்கப்பட்டு வருகிறது.

🛕கிழக்குப் பார்த்த ஆலயம். கருவரை விமானம் தஞ்சாவூர் விமான அமைப்பை ஒத்து இருக்கிறது.

🛕ராஜகோபுரம் இல்லை. ரிஷபத்தில் சுவாமி அம்பாள் காட்சிக் கோபுரம் உள்ளது. ஆலயம் புதிய சுற்றுச் சுவற்றுடன் உள்ளது.

🌼மிக மிகப்பழமையான ஆலயம் சிதைந்து விட்டிருந்து தற்போது திருப்பணிகள் தொடங்கி நடை பெற்று  வருகின்றன.

🌼ஏகப்பிரகாரம், தனி விநாயகர் மற்றும் முருகன் மயில்மீதமர்ந்து, வள்ளிதெய்வானையுடன், 
விநாயகர், தட்சினாமூர்த்தி, விஷ்ணு, பிரும்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், கருவரைக் கோஷ்ட்டத்தில் அற்புதமான கல்சிலைகள்.

 ⛳கருவரை, அர்த்தமண்டபம், முன்மண்டபத்துடன் உள்ளது.  நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கம் இது. இந்த கல்லை கையால் தட்டிபார்த்தால், வெண்கலச் சத்தம் எழுவது பிரத்யேக சிறப்பிற்குச் சான்று.

🛕கருவறை வாசலில் துவாரபாலகர்களுக்கு பதிலாக, இரு லிங்கங்கள் ,. மூலஸ்தானத்தில் காகபுஜண்டரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

🌼சுமார் 5.5 அடி உயரத்திற்கு, பிரம்மா மற்றும் விஷ்ணு பீடங்கள் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. உலகையே கட்டியாளும் மும்மூர்த்திகளும் இவ்வாறு ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும்.

🌼அதேபோல், காகபுஜண்டர் இந்த கோவிலின் அருகில் சமாதி அடைந்ததை ஒட்டி சமாதி பீடம் அமைக்கப்பட்டு விளக்கு ஏற்றப்பட்டு வருகிறது.

 🍀எல்லா சிவாலயங்களிலும் நந்திதேவர் தனி மண்டபத்தில் உள்ளார். தன் தலையை ஒரு பக்கமாக சாய்த்திருப்பதைக் காணலாம். ஆனால், இக்கோவிலில் பால நந்தியாக வீற்றிருப்பதுதால், கொம்புகளின் இடையூறின்றி பிரதோஷ காலங்களில் நேரடியாக சிவதரிசனம் கிடைக்கிறது.
🌼சுவாமி இடது புறம் அம்பாள் தனி சன்னதி கிழக்கு நோக்கிய அமைப்பு. முன்புறம் தனி நந்தி.

🛕இத்தலத்து அம்பாள் மகாலட்சுமி அம்சத்துடன் சுவர்ணாம்பிகை என்ற பெயருடன் நின்ற கோலத்தில் அருளுகிறாள். இவள் கிழக்கு பார்த்து நின்றிருந்தாலும், இவளது முகம் சிவன் இருக்கும் திசைநோக்கி சற்று திரும்பியுள்ளது.

சூரிய பூசை

🏵️ஆவணி பவுர்ணமி மற்றும் பங்குனி உத்திரத்தில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் பாலநந்தியின் இரு இளம் கொம்புகளின் வழியே சூரிய ஒளி இரு கோடுகளாக இறங்கி கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தில் படிவதைக் காணலாம். (பாலநந்திக்கும் கருவறைக்கும் உள்ள தூரம் 70 அடியாகும்).
🌼இந்த லிங்கம் நவபாசாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை உடையது. மேலும் 5.5 அடி உயரம் கொண்டது.
🌼காகபுஜண்டரின் சமாதி இக்கோயிலின் வடகிழக்கில் உள்ளது. 
🌼மேலும், ராகு கால வேளையில் தேன், தயிர், பால் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடக்கிறது. சிவனுக்கு பின்னால் மகாவிஷ்ணு ருத்ராட்சம் அணிந்து காட்சி தருகிறார். சிவனும் தானும் ஒன்றே என்பதை காகபுஜண்டருக்கு உணர்த்துவதற்காக இவ்வாறு காட்சி தருகிறார்.

விழாக்கள்
 
🌼ஆவணி பவுர்ணமி, பங்குனி உத்திரம், பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டும் 

மகிமைகள்

🌼திருமணத்தடையின் காரணமாக நீண்ட காலமாக திருமணமாகாதவர்கள், 16 பிரதோஷ தினங்களில் தொடர்ந்து ஈசனை தரிசித்து வந்தால் திருமணத்தடை நீங்கும். ராகு, கேது, செவ்வாய் மற்றும் களத்திரதோஷம் உள்ளவர்கள் மற்றும் பலவித கிரக தோஷங்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், மனபாரம் உள்ளவர்கள், நிலத்தகராறு, பில்லிசூனியம் ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், சொர்ணபுரீஸ்வரரை தொடர்ந்து பிரதோஷ காலங்களில் வழிபட்டு வந்தால் பிரச்சனைகள் தீருவதோடு, கைவிட்டுப் போன சொத்துக்கள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். மேலே குறிப்பிட்ட  பிரச்சனைகளுக்கு தேன் அபிஷேகம் செய்தால் சுப பலன்கள் கிடைக்கும். 

🌼செவ்வாய், வெள்ளி ஞாயிறு, ராகு காலங்களும் மற்றும் திங்கட்கிழமை, பெளர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களும், தேன் அபிஷேகம் செய்ய உகந்த நாட்களாகும். தோஷமுடையவர்கள் தேன் அபிஷேகம் செய்த தேனை 16 தினங்களுக்கு காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சுப பலன்கள் கிடைக்கும்.
🏵️எல்லா சிவாலயங்களிலும் நந்திதேவர் தன் தலையை ஒருபக்கமாகசாய்த்திருப்பதைக் காணலாம். ஆனால், இக்கோயிலில் பால நந்தியாக வீற்றிருப்பதால், கொம்புகளின் இடையூறின்றி பிரதோஷ காலங்களில் நேரடியாக சிவதரிசனம் கிடைக்கிறது.

🛕இக்கோயிலானது வாயு ஸ்தலத்திற்கும், பஞ்சபூத ஸ்தலத்திற்கும் இணையாக இருப்பதால் இதன் கருவறையானது மிகவும் உக்கிரமானதாக இருக்கும். இதன் கருவறையில் ஏற்படும் தீபமானது துடித்துக்கொண்டே இருக்கும் என்று காகபுஜண்டர் நாடி சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

🌼இதனால் கருவறையின் மையத்தில் அமைந்த தீபம் மட்டும் இன்றும் துடிப்புடன் எரிந்து கொண்டிருப்பது நாடி சுவடியின் பூரணத்துவத்தை நமக்கு உணர்த்துவதாக உள்ளது.

🌼மேலும் ராகு கால வேளையில், தேன், பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், விபூதி, சந்தனம், திருமஞ்சனம், கரும்புச்சாறு, எலுமிச்சம்பழ சாறு, பஞ்சாமிர்தம், நெய், அரிசிமாவு, நல்லெண்ணெய், புண்ணிய நீர் தீர்த்தம் போன்ற 16 வகை அபிஷேகம் சிவலிங்கத்தின் உச்சியில் அபிஷேகம் ஆரம்பித்ததும் அவைகள் தானாகவே சிறிது பிசிறு கூட இல்லாமல் தனித்தனியாக 16 கோடுகளாக லிங்கத்தின் அடிபாகம் வரை வந்து லிங்கத்தின் பீடத்தில் ஐக்கியமாவதைக் காணலாம்.

🌟ராகு தோஷ நிவர்த்திக்காக இந்த நந்திக்கு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அப்போது அபிஷேகப்பால் நீல நிறமாக மாறுகிறது. சிவனுக்கு பின்னால் மகாவிஷ்ணு ருத்ராட்சம் அணிந்து காட்சி தருகிறார்.
🌼 சிவனும் தானும் ஒன்றே என்பதை காகபுஜண்டருக்கு உணர்த்துவதற்காக இவ்வாறு காட்சி தருகிறார்.காகபுஜண்டர் இந்த கோயிலின் அருகில் சமாதி அடைந்ததை ஒட்டி சமாதி பீடம் அமைக்கப்பட்டு திருவிளக்கு ஏற்றப்பட்டு வருகிறது.

⛳ #பயண அனுபவகுறிப்புகள்🕊️

🪴மிகப்பழமையான ஆலயம் மீட்கப்பட்டு வருகிறது.
💦ஆலயம் வரை சாலைவசதிகளும் நல்ல நிலையில் உள்ளது.
💦சிறிய கிராமம் பெரிய கடைகள், வசதிகள் இல்லை. 
💦ஆலயம் நித்திய கால பூசையுடன், வழிபாட்டில் உள்ளது.
💦திருப்பணி வேலைகளும் நடைபெற்று வருகின்றன.
💦காகபுஜண்டர் மற்றும் அனைத்து சன்னதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றது.
💦பிரதோஷம் மிகவும் விஷேசம்.
💦ஒரு முறையாவது இந்த பழமையான புராதான ஆலயம் சென்று தரிசிக்கலாம்.

🙇நன்றி🙏
🛕#சுப்ராம்ஆலயதரிசனம் 9.11.2025🛐
# என்றும்அன்புடன்💟
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🙇🛕
#ஆன்மிகபரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🗻

பாலசுப்பிரமணியர் கோயில், வடசென்னிமலை, காட்டுக்கோட்டை - சேலம் - பஞ்சபூத தலங்கள் அருகில் - பிரதோஷக்குழு யாத்ரா - 9.11.2025

பாலசுப்பிரமணியர் கோயில், வடசென்னிமலை, காட்டுக்கோட்டை - சேலம்

இருப்பிடம்
🌼சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் காட்டுக்கோட்டை அருகே வடசென்னி மலை முருகன் கோயில் அமைந்துள்ளது. குன்று அமைந்துள்ள இடங்கள் எல்லாம் குமரன் குடியிருக்கும் இடம். அந்தவகையில் வட சென்னி மலையும் இயற்கையாக அமைந்த மலையாகும்.

🌼 இம் மலை மீது அமைந்த கோவிலில் வர்ணஸ்ம தர்ம விதிகளைக் குறிக்கும் வகையில் முருகன் 3 வடிவங்களில் காட்சியளிக்கிறார்: 
முருகன் குழந்தை பருவத்துடனும் , திருமணக் கோலத்திலும் , முதிர்ந்த பருவ தண்டாயுதபாணியாகவும் மக்களுக்கு காட்சித் தருகிறார்.

🏵️மூலவர்: பாலசுப்ரமணியர் 
உற்சவர்: சுப்பிரமணியர் ,வள்ளி, தெய்வானை 
தீர்த்தம் (புனித நீர்): வசிஷ்ட தீர்த்தம்

தல வரலாறு
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, வடசென்னிமலை பகுதியைச் சுற்றிய கிராமங்களைச்சேர்ந்த சிறுவர்கள் மலை அடிவாரத்தில் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அழகு மிகுந்த ஒரு சிறுவன், அடிவாரத்தில் இருந்து மேல் நோக்கி ஓடுவதை அவர்கள் கண்டனர். அந்த சிறுவனை பின் தொடர்ந்து கிராமத்துச் சிறுவர்களும் சென்றனர். மலை உச்சியை அடைந்ததும் அந்தச் சிறுவன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று பேரொளிப் பிழம்புடன் மறைந்து விட்டான். இதைக் கண்ட கிராமத்து சிறுவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அவர்கள் இந்தக் காட்சியை ஊரில் உள்ள பெரியவர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து ஊர் மக்கள் அனைவரும், சிறுவர்கள் கூறிய இடத்திற்குச் சென்று பார்த்தனர். அங்கு வடிவமற்ற மூன்று சிலைகள் தோன்றி இருந்தன. அந்த இடத்தில் வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம் வைத்து வழிபட்டதற்கான அறிகுறியும் காணப்பட்டன. இதனால் ஊர் பெரியவர்கள் "முருகப்பெருமான் இந்த இடத்தில் கோவில் கொள்ள விரும்புகிறார். எனவே அவருக்கு இங்கு கோவில் கட்டி வழிபடுவோம்" என்று முடிவு செய்தனர்.
பின்னர் மூன்று சிலைகளில் பெரியது முருகன் என்றும், சிறியவை இரண்டும் வள்ளி, தெய்வானை என்றும் கருதி ஊர் மக்கள் வழிபட்டு வந்தனர். அந்த இடத்தை தூய்மைப் படுத்தி, சிலைகளைச் சுற்றி, கற்களை அடுக்கி வைத்து மறைவை ஏற்படுத்தினர். தொடர்ந்து சுற்று வட்டார கிராம மக்களின் முயற்சியால் அங்கு சிறு கோவில் கட்டப்பட்டது. தற்போது மகா மண்டபத்துடன் கோவில் அழகாக காட்சி அளிக்கிறது.

முருகன் சிலை
💦சுமார் 300 ஆண்டுகால பழமையான இக்கோயிலில் சுயம்பு வடிவமாக முருகன் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பிறகு வடகுமரை என்ற ஊரை சார்ந்த அப்பன்ன சுவாமிகள் வைணவ சமயத்தின் மீது அதிகம் பற்றுள்ளவர். இருப்பினும் வடசென்னிமலை சுயம்புவாக உள்ள முருகனிடத்தில் அதீத பக்தி கொண்டவர். இதனால் முருகனின் குழந்தை வடிவ சிலை ஒன்றை செய்வதற்காக காஞ்சிக்கு சென்று மாகாப்பெரியவரை நேரில் சந்தித்து வடசென்னிமலை முருகன் கோயிலுக்கு குழந்தை வடிவ சிலையை எந்த சிற்பியிடம் செய்தால் சிலை நன்றாக இருக்கும் என்று கேட்டார். அதற்கு மகாப்பெரியவர் திருவண்ணாமலையில் உள்ள இரமணர் ஆசிரமத்தில் வைத்தியநாத சிற்பி என்றொருவர் இருக்கிறார் அவரிடம் சிலையை செய்து பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். 

💦உடனே அப்பன்ன சுவாமிகள் திருவண்ணாமலைக்குச் சென்று இரமணர் ஆசிரமத்தில் இருக் கும் வைத்தியநாத சிற்பியை சந்தித்தார். ஆனால் வைத்தியநாத சிற்பிக்கு பார்வை தெரியாத குருடராகவும் , வாய்ப்பேச முடியாத ஊமை யாகவும் இருப்பதை கண்டு பயந்தார். பார்வையற்ற இந்த சிற்பியால் எப்படி சிலை செய்யமுடியும் என்ற சந்தேகத்தோடு இருந்தார். காஞ்சிப்பெரியவர் தம்மை சோதிப்பதாக நினைத்து வைத்தியநாத சிற்பியிடம் வடசென்னி மலை முருகன் கோயிலுக்கு குழந்தை வடிவ சிலை ஒன்றை வடித்து தருமாறு உரத்த குரலில் வேண்டினார். சைகையால் சம்மதம் தெரிவித்த வைத்தியநாத சிற்பி சில தினங்களிலேயே அற்புதமான அழகிய முருகனின் குழந்தை வடிவ சிலையை செய்து அப்பன்ன சுவாமியிடம் தந்தருளினார்.

ஆலயசிறப்பு

🛕மலை மீதுள்ள கோவிலுக்குச் செல்லும் வழியில், முதலில் மலை அடிவாரத்தில் வரசக்தி விநாயகர் வீற்றிருக்கிறார். இவரை வணங்கி விட்டுதான், நாம் மலை மீது ஏற வேண்டும். முன்னதாக நம்மை வரவேற்கும் விதமாக, மலையடிவாரத்தில் வடசென்னிமலை கோவிலுக்கான நுழைவு வாசல் வளைவு இருக்கிறது. இதன் பின்புறத்தில் வடசென்னிமலையின் அழகிய தோற்றத்தை காணலாம். 

🏵️வரசக்தி விநாயகரை தரிசித்து விட்டு, படிக்கட்டுகள் வழியாகவும், சாலை மார்க்கமாகவும் மலை மேல் உள்ள முருகன் கோவிலுக்குச் செல்லலாம். சாலைமார்க்கமாக செல்லும் போது 5-க்கும் மேற்பட்ட கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. படிக்கட்டு வழியாக செல்லும் போது அவ்வை சன்னிதி, உடும்பன் சன்னிதியைக் காணலாம்.

🏵️மலையை அடைந்ததும், கோவிலின் ராஜகோபுரத்தை தரிசிக்கலாம். இதைத்தொடர்ந்து 16 கால் மகா மண்டபம் உள்ளது. 50 அடி நீளம், 50 அடி அகலம் கொண்ட இந்த மகா மண்டபம், கடந்த 2001-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த மண்டபத்துக்குள் உற்சவர் பாலசுப்பிரமணியசாமி, வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். அருகில் பாலதண்டாயுதபாணி உள்ளார். அதையடுத்து குழந்தை வடிவில் மூலவர் பாலசுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

🌟இக்கோயில் மேற்கு நோக்கியவாறு அமைத்துள்ளது. மூன்று சன்னதிகளைக் கொண்ட இக்கோயிலில் முருகனின் குழந்தை பருவ முருகனானவும், முதிர்ந்த பருவ தண்டாயுதபாணியாகவும், வள்ளி , தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் காட்சியளிக்கிறார். குறிப்பாக முருகனின் மூன்று பருவத்தையும் ஒரேயிடத்தில் இக்கோயிலில் மட்டுமே காணமுடியும். 

🪷கருவறையில் சிரிக்கும் குழந்தையாகவும், அருகில் துறவியாக வள்ளி, குடும்பத்தலைவராகவும் தேவசேனா.

🪷இக்கோயிலில் உள்ள அபூர்வ சிலைகள் இவை அனைத்தும் சுயம்புவாகும்.

🌼கோவிலில் 5 அடுக்கு ராஜகோபுரம் கம்பீரமாக உள்ளது. ஆதிவாரவிநாயகராக கணபதி பகவான் அருள்பாலிக்கிறார்.  

பிரார்த்தனைகள்
🪷இந்த ஆலயம் குழந்தை வரம் அருளும் திருத்தலமாக விளங்குகிறது

🪷இங்குள்ள குழந்தை வடிவில் உள்ள முருகனை அம்மாவசை முடிந்து வளர்பிறை சஷ்ட்டியில் விரதம் இருந்து வழிபட்டு வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதாவது சஷ்ட்டி எனும் திதியில் விரதம் இருந்தால் அகம் என்னும் பையில் கருவளரும் என்பது ஐதீகம். 

🪷இங்கு குழந்தை வடிவில் முருகன் இருப்பதால்தான், இந்தக் கோவிலில் குழந்தை இல்லாத தம்பதிகள் வேண்டிக்கொண்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகமாக இருக்கிறது

🪷இங்குள்ள முருகனிடம் வேண்டிக்கொண்ட பின், குழந்தை பாக்கியம் கிடைத்த தம்பதிகள், தங்களது வேண்டுதல் நிறைவேறியதும், கரும்பில் தொட்டில் கட்டி அதில் குழந்தையை வைத்து கோவிலை வலம் வருவார்கள். இன்னும் சிலர் கோவில் தேரோட்டத்தின் போது, ஒருபுறம் குழந்தையின் பெற்றோர் நின்று கொண்டும், மறுபுறம் உறவினர்கள் நின்றும் குழந்தையை தேருக்கு முன்பாக தூக்கிப்போட்டு பிடித்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.

🍀கிரிவலம் - மலையைச் சுற்றி நடப்பது - தீய மற்றும் தீங்கு விளைவிக்கும் சக்திகளிடமிருந்து தங்களைப் பாதுகாக்கும் என்று பக்தர்கள் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளனர்.

🌟 பெரும்பாலான மக்களும் தங்கள் மன அமைதிக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். கட்டடம் /வீடு, அல்லது நிலம் வாங்க விரும்புவோர் கிரிவலத்தின் போது அவ்வையார் சிலைக்கு முன்னால் கையில் ஒரு கல்லை வைத்து பிரார்த்தனை செய்கிறார்கள். 

🏵️நன்றி செலுத்தும் விதமாக பக்தர்கள் வஸ்திரங்களைச் செலுத்துகிறார்கள், சிறப்பு பூஜைகளைச் செய்கிறார்கள் மற்றும் இறைவனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். 

விழாக்கள்

🌼பங்குனி உத்திரம் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. ஸ்கந்த சஷ்டி அக்டோபர் - நவம்பர் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. திருக்கார்த்திகை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கொண்டாடப்ப|டுகிறது. ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் பல்வேறு வழிபாடுகளை மேற்கொண்டு இந்த விழாக்களில் அதிகமாக பங்கேற்கிறார்கள்.
இந்த விழாக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. 

கோயில் நேரங்கள்:
 🔱காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை.

அமைவிடம்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்திலும், தலைவாசலில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், வடசென்னிமலை அமைந்திருக்கிறது. சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை என்ற இடத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் வடசென்னிமலை உள்ளது. ஆத்தூர், தலைவாசலில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆத்தூரில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் பஸ்கள் காட்டுக்கோட்டையில் நின்று செல்லும்.

⛳ #பயண அனுபவகுறிப்புகள்🕊️
⛳நங்கள் சிறிய பேருந்தை கொண்டிருந்ததால், வாகனப்பாதையை தேர்வு செய்து அதன் வழியில் மேலே சென்று தரிசித்தோம்..
⛳பக்தர்கள் அளவு வெகு சுமாராக இருந்ததால், எளிதான தரிசனம் கிடைத்தது.
⛳மலை மீது வேறு கடைகள், கட்டிடங்கள் ஏதும் கிடையாது.
⛳மிக மிக அமைதியான இடம் பக்திபூர்வமாக தரிசித்து வரலாம்.

🙇நன்றி🙏
🛕#சுப்ராம்ஆலயதரிசனம் 9.11.2025🛐
# என்றும்அன்புடன்💟
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🙇🛕
#ஆன்மிகபரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🗻

⛳ #பிரதோஷேக்குழுயாத்ரா 
🛕#ஆன்மீகதலயாத்திரை: 
சேலம் 8, 9 நவம்பர், 2025.
நன்றி🙏 9.11.2025
🕊️🔱🛐🙏🇮🇳🙇⛳🛕🌏🗻

முத்துமலை முருகன் கோவில், (சேலம், டு, சென்னை - தேனி Hwy, ) ஈத்தாப்பூர், - சேலம் - பஞ்சபூத தலங்கள் அருகில் - பிரதோஷ க்குழு யாத்ரா - 9.11.2025

முத்துமலை முருகன் கோவில் , சேலம்

முத்துமலை முருகன் கோவில், சேலம், டு, சென்னை - தேனி Hwy, ஈத்தாப்பூர், தமிழ்நாடு

🌟இந்த கோயில் ஏத்தாப்பூரில் உள்ள பழமையான சிவன் கோயிலுக்கு அருகில் உள்ளது.
🌟சமீபத்தில் (ஏப்ரல் 2022) முத்துமலையில் 146 அடி உயர முருகன் சிலை நிறுவப்பட்டுள்ளது, 
🌟இது உலகின் மிக உயரமான முருகன் சிலையாகும். இது மலேசியாவின் பத்து குகை முருகன் சிலையை விட (140 அடி) ஆறு அடி உயரம் கொண்டது. 
🌟திரு. ஸ்ரீதர் தனது தந்தையின் நினைவாக 2014 ஆம் ஆண்டு தனது நிலத்தில் ஒரு முருகன் சிலையை உருவாக்க முடிவு செய்தார். ஸ்ரீதர் திருவாரூர் தியாகராஜனிடம் (2006 ஆம் ஆண்டு மலேசியாவில் முருகன் சிலையை கட்டியவர்) சிலையை அமைக்கச் சொன்னார். 
🌼இது சேலத்தின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

🌼திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, பழனி, திருத்தணி போன்ற பிரசித்தி பெற்ற "ஆறுபடைவீடு முருகன் கோவில்களில்" மண் கலசத்தில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

⛳பயண அனுபவகுறிப்புகள்🕊️

⛳தனியார் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயம்.
⛳மிகப்பெரிய ஆன்மீக சுற்றுலா வளாகம்.
⛳ஏத்தாப்பூர் - ஆத்தூர் - NH பாதையில் வடபுறம் உள்ளது.
⛳தனி வழி Toll உண்டு. உள்ளே சென்று இலவச வாகன நிறுத்துமிடத்தில் வாகனம் நிறுத்திக் கொள்ளலாம்.
⛳ஆலய கடைகள் ஏராளமாக உள்ளது.
⛳தெற்குப் பார்த்த அளவில் 146 அடி உயர முருகன். Lift ல் சென்று பால் அபிஷேகம் செய்யலாம். தனிக் கட்டணம் வேல் பூசை எல்லாம் உண்டு.
⛳முருகன் காலடியை தொட்டு வணங்க தனி கட்டணம் 
⛳கீழ் புறத்தில் கிழக்குப் பார்த்த தனி பால முருகன் ஆறு பட்டை முக மண்டபத்தில் ஆறுபடை வீடு முருகன் சிலைகள் அமைப்புடன் உள்ள கருவரை.
⛳ முன்புறம் நீண்ட மண்டபம்.
⛳வடபுறம் தனி ஹோமம் பூசை செய்ய ஒரு மண்டபம்.
⛳தியான மண்படம் மற்றும் திருமணக்கூடம், அன்னதானக்கூடம்.உண்டு.
⛳ஆலயவளாகம் சுற்றி வரலாம்.
⛳வளாகம் வடபுறம் இயற்கையான குன்று ஒன்றும் அதன் மீது ஒரு வேல் மன்டபமும் உள்ளது. 
⛳மின்தூக்கி மூலம் உயரே சென்றால் தூரத்தில் மலைக்காட்சி முருகன் கிரிடத்துடன் சயனக் கோலக்காட்சி
⛳ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.
⛳அபிஷேகம், தனி பூசைக்கு மட்டும் கட்டணம் உண்டு. 
⛳சிறந்த ஆன்மீக சுற்றுலா இடமாக உள்ளது.
⛳தங்கும் வசதி, குளியல், கழிப்பிடம், வசதிகளும் உண்டு.

🙇நன்றி🙏
🛕#சுப்ராம்ஆலயதரிசனம் 9.11.2025🛐
# என்றும்அன்புடன்💟
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🙇🛕
#ஆன்மிகபரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🗻

⛳ #பிரதோஷேக்குழுயாத்ரா 
🛕#ஆன்மீகதலயாத்திரை: 
சேலம் 8, 9 நவம்பர், 2025.
நன்றி🙏 9.11.2025
🕊️🔱🛐🙏🇮🇳🙇⛳🛕🌏🗻

உலகியநல்லூர் -அர்த்தநாரீஸ்வரர் கோயில் - சேலம் - பஞ்சபூத தலங்கள் அருகில் - பிரதோஷக் குழு யாத்ரா - 9.11.2025

உலகியநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில்  🛕தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உலகியநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். 🛕அ...