Thursday, March 31, 2022

ஆலயதரிசனம் - இராதாநல்லூர் நீலப்பாடி

இராதாநல்லூர்:
கீவளுர் தாலுக்கா, அத்திப்புலியூர் ஊராட்சி. 

நாகப்பட்டினம் - திருவாரூர் சாலையில் வரும் நீலப்பாடி நிறுத்தம், வடக்கு நோக்கி செல்லும் சிறிய சாலையில் 500 மீ.தூரத்தில் உள்ள சிவன் ஆலயம். 

ஸ்ரீசௌந்தரேஸ்வரர், ஸ்ரீ செளந்தரநாயகி
அம்மன் ஆலயம். கிழக்கு நோக்கிய ஆலயம். 

27.03.2022 அன்று குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. 

மிகப்பழமையான ஆலயம். முழுவதும் புனரைமைக்கப்பட்டு பொலிவுடன் அமைந்துள்ளது;  

கிழக்கு வாசல் முன்புறம் வடகிழக்கு மூலையில் தனி விநாயகர் ஒரு பெரிய குளத்துடன் உள்ளது. 

ராஜகோபுரம் இல்லை, என்றாலும்,
கிழக்கு புறம் உள்நுழைவு உயர வாயிலில் சுதையால் சுவாமி சிலைகளும் அழகுடன் உள்ளன. 

அடுத்து நந்தி மண்டபத்துடன் பிரதோஷ நந்தி. 

சுவாமி முன்மண்டபத்தில் வடக்குப் பார்த்து நால்வர் சிலைகள். தெற்கு நோக்கிய அம்பாள் தனி கருவரை. அடுத்துள்ள முன் சுவாமி முன் மண்டபம்.
சிறிய விநாயகர், கிழக்கு நோக்கிய சதுர பீடத்தில் சுவாமி சுந்தரேஸ்வரர். 

வெளிபிரகாரத்தில், தட்சினாமூர்த்தி
தனி விநாயகர், சுப்ரமணியர், மகாலெட்சுமி மற்றும் சண்டிகேஸ்வரர், துர்க்கை உள்ளனர் 

கிழக்குப் பாகத்தில், பைரவர், சூரியன் உள்ளனர். 

பல வருடத்திற்கு முன் இந்த ஆலயத்தில் வழிபாடு செய்ய வந்த போது ஆலயம் மிகவும் சிதலமடைந்து கிடந்ததும்,
இன்று புதுப்பொலிவுடன் ஊர் மக்கள் திரளாக இருந்து வணங்குவது கண்டு, மனம் நெகிழ்வடைந்தது உண்மையே. 

29.03.2022 
#பிரதோஷம்
#ஆலயதரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

No comments:

Post a Comment

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு.

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு. ⛳தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காவிரி ...