Wednesday, March 30, 2022

ஆலயதரிசனம் 29.3.2022 நாயன்மார்கள் தண்டியடிகள் - ஆடூர்

https://m.facebook.com/story.php?story_fbid=7324119440996583&id=100001957991710
இன்று 29.03.2022

 பங்குனிமாதம் சதயம் நட்சத்திரம் தண்டியடிகள் நாயனார் குருபூஜை:

திருவாரூரில் அவதரித்த பார்வையற்றவராகிய தண்டியடிகள் திருவாரூர் குளத்தை தூர்வார அதை சமணர்கள் தடுத்து குருடன் என்று ஏளனம் செய்ய,

 தண்டியடிகள் நான் கண்பார்வை பெற்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்க அவர்கள் ஊரை விட்டு செல்வோம் என்று கூற, தண்டியார் இறைவனிடம் மன்றாட கனவில் ஈசன் தோன்றி நீ பார்வை பெற்று சமணர்கள் பார்வை இழப்பார் என்று கூற அதுபோல் சோழமன்னன் கனவிலும் கூறியதோடு திருக்குளப்பணியைச் செய்வாயாக என்றும் கூறினார்.

மறுநாள் அரசன் முன்னிலையில் தண்டியார் நான் பார்வை பெற்று இவர்கள் ஊரை விட்டு செல்லும் வரை பார்வை என்று கூறி திருமந்திரம் ஓதி மன்னன் முன்னிலையில் குளத்தில் மூழ்க தண்டியார் பார்வை பெற்று சமணர்கள் பார்வையிழந்தனர்.

இவ்வாறு பார்வையற்ற நிலையிலும் சிவத்தொண்டு செய்து வந்தவர்

""தண்டியடிகள் நாயனார்""

இன்று 29.3.2022 ஆருர் சென்று அடிகளார் தரிசனம்.

 #நாயன்மார்கள்
#ஆலயதரிசனம் 

#என்றும்_அன்புடன்_ 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

No comments:

Post a Comment

கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - (குலசேகரமுடையார்) - பிரதோஷக்குழு யாத்ரா 17.8.2025

#கல்லிடைக்குறிச்சி -  குலசேகரமுடையார் ஆலயம் 17.8.25 #கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - குலசேகரமுடையார் அம்பாள் = தர்மசவர்த்தினி (அறம...