Wednesday, August 31, 2022

UTTARAKANNT TOUR 2022 - HARIDWAR 13.04.2022

UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
13.04.2022
#UTTARAKANNT_TOUR_2022
#HARIDWAR

ஹரிதுவார்.

💥வட இந்தியாவில், உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள இந்துக்களுக்கு மிக முக்கிய, புராதானமான இடம் ஹரிதுவார் என்ற புனித இடமாகும்.

💥இமயமலையிலிருந்து உற்பத்தியாகி, பாய்ந்து ஒடி வரும் கங்கை, இமயத்தின்  அடிவாரமாகிய இந்த இடத்தை அடைகிறது.

💥சிவா, விஷ்ணு, பிர்மா என்ற மூன்று கடவுளர்களால், புனிதப்படுத்தப்பட்ட இடம்.

💥ஹரனும், ஹரியும், சேர்ந்து இருப்பதால், Haridwar என்கிறார்கள்.,

💥இயற்கை ஆர்வலர்களின் சொர்க்கபுரியாகவும், இந்துமத கலாச்சாரத்தின் முக்கிய கேந்திரமாகவும் இந்நகர் இருந்து வருகிறது.

💥தேவபூமி எனப்படும் இந்த மாநிலத்தில் உள்ள, சார்தாம் என்னும் நான்கு புனித இடங்கள், (பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி) செல்வதற்கு இந்த இடமே நுழைவுப்பாதையாகக் கருதப்படுகிறது.
💥பகீரதன் தன் மூதாதையர்களுக்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்து, அவரிடமிருந்து கங்கையை இமயத்திலிருந்து, பூமியில் இந்த இடத்திற்கு கொண்டுவந்தார்.

#பயணஅனுபவக்குறிப்புகள்

🍁12.04.2022 அன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையில் உள்ள புகழ்பெற்ற பாபா குகை பார்த்துவிட்டு மாலை, ராணி கட் என்ற நகரத்தில் தங்கியிருந்து, 13.04.2022 காலையில் புறப்பட்டு , இமயமலைப்பகுதியில் உற்பத்தியாகி வரும் சோன நதி, படுகை, காடுகளில்  உள்ள புகழ்பெற்ற ஜிம்கார்பெட் தேசிய பூங்கா பாதையில் உள்ள ராம்நகர் வழியாக, மாலை 4.00 மணி அளவில், ஹரிதுவார் வந்து அடைந்தோம்.

🌺இந்த நகரத்தில் உள்ள மிக முக்கிய இடங்களில் சிலவற்றை நாங்கள் சென்று தரிசனம் செய்வதற்காக ,ஹோட்டல் திருமூர்த்தியில் தங்கினோம்.

🌺13.04.2022 மாலையில் பாய்ந்து ஓடிவரும்  கங்கையில், அருகில் உள்ள  படித்துறையில் குறித்து விட்டு,
Auto மூலம் HARI KI PAURI GHAT என்ற முக்கிய இடத்திற்கு மாலை 'ஆர்த்தி, ' பார்க்க சென்றோம்.

ஹர்-கி-பவுரி

🍀கங்கை நதிக்கரையின் இரண்டு பக்கங்களிலும், பல்வேறு படித்துறைகள் உள்ளன.

🌼முதலாம் நூற்றாண்டின், விக்கிரமாதித்தர் தன் சகோதரர் பகீரதன், தவம் இருந்த இடத்தின் நினைவாக ஹரி - கி - பாவுரி கேட் (படித்துரை) அமைத்தார் என்பது வரலாற்றின் சான்று.

💫ஹரிதுவார், பிரயாகை, உஜ்ஜயினி, நாசிக்..இவ்விடங்களில்
கும்பமேளா சமயத்தில், சூரியன், சந்திரன், குரு முதலிய  கிரகங்களின் கால சூழல், இருப்பிடப் பெயர்ச்சியின் காரணமாக, இவ்விடங்களில் பாயும் நதிகளின் நதியின் நீரோட்டத்தில், ஒரு விதமான நல்ல- அதிர்வுகள் ஏற்பட்டு அதன் விளைவாக உயிர்களுக்கு, மக்களுக்கு மிகநல்ல பலன் ஏற்பட்டு வருகிறது என்ற நம்பிக்கை நிறுபிக்கப்பட்டுள்ளது. 

🌲ஹரிதுவாரில் 2003ல் நடைபெற்ற கும்பமேளாவில் சுமார் 10 மில்லியன் மக்கள் கலந்துகொண்டார்கள் என்று பதிவு செய்துள்ளார்கள்.

🍁இந்து மக்கள் இங்கே வந்து நீராடினால், தங்கள் பாவம் நீங்கிவிடும், புன்னிய பூமியை - சொர்க்கத்தை - அடையலாம் என்று நம்புகிறார்கள்.

🌴12 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 6 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் இங்கு கும்பமேளா நடைபெறுகிறது.

🌳பிரம்மகுண்டம் என்ற, ஹர்-கி-பவுரி என்ற இடத்தில், அமிர்தத்துளி விழுந்த இடமாக கருதப்படுகிறது.
எனவே, இங்கு கும்பமேளாவில் நீராடினால், புன்னியம் என்பதால், ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.
குரு கும்ப ராசியில் பிரவேசிக்கும் போது, இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

🍁1800களில், இந்த இடம் மிகவும் புனரமைப்பு செய்யப்பட்டு மிக அழகியதாய் வளப்படுத்தப்பட்டுள்ளது.
நவராத்திரி சமயங்களில், அருகில் உள்ள அணைக்கட்டுகளால், நீர் கட்டுப்பாடு செய்தும், தீபாவளிக்கு பிறகு நீர் மீண்டும் வெளியிடப்படுகிறது.

🍀இந்தக்காலக்கட்டத்தில் கங்கா மாதா தன் தகப்பனார் வீட்டிற்கு செல்வதாகக் கருதுகிறார்கள். மிகவும்  விழாக்கோலத்துடனும் விளங்கும்.

🌺இந்த இடத்தில் தான், தினமும், மாலையில் கங்கா நதியைப் போற்றும் பிரபலமான 'கங்கா ஆர்த்தி,' நடைபெற்று வருகிறது.

🎆மாலையில் கங்கை நதியின் படித்துறைகளில் நடத்தப்படும் 'கங்கா ஆர்த்தி' மிகப் பிரசித்தம். நதிக்கு விளக்கு ஒளியால், ஆர்த்தி பூசை செய்து,  சிறுசிறு விளக்குகள் ஏற்றப்பட்டு, ஒளி விளக்குகளால் மின்னும் அந்தக் காட்சி மிகவும் அற்புதமானது.
இந்த அழகிய ரம்யமான காட்சியைக் காணவரும் பக்தர்கள் ஏராளம்.

🍁இங்கு மாலையில் கங்கா ஆர்த்தி காண பெருங்கூட்டம் வருகிறது. கங்கையின் இருகரைகளிலும் படித்துறைக்கள், இணைப்பு பாலங்கள், ஒரு மணிக்கூண்டு, மற்றும் கங்கை மாதா ஆலயம், தவிர மேலும், சில ஆலயங்களும் இருக்கின்றன.
எல்லோரும் பாய்ந்து ஓடும் கங்கையில் மூழ்கி குளித்துவிட்டு, இங்குள்ள ஆலயத்தில் வழிபாடும் செய்கிறார்கள்.

🌲இந்த படித்துறையில் கூட்டம் அலைமோதும். மாலை 5.30 மணியில் கூட்டம் அதிகம் ஆகி, அங்கங்கே தடுத்து, கரையின் ஓரத்தில் காவல் துறையினரும்,எங்கு பார்த்தாலும் மக்களை ஒழுங்குபடுத்தி கொண்டிருக்கின்றனர்.

🍀கங்கா ஆர்த்தி Committee ஒன்றும் உள்ளது. இவர்கள் இந்த நிகழ்ச்சிகளை ஆன்மீக பக்குவத்தில் ஈடுபடச்செய்யவும், மக்களை ஒழுங்குபடுத்தி, அமைதியாக உட்காரச் செய்து நிகழ்ச்சியை காண வைக்கின்றனர்.

🌿7.00 மணி அளவில் ஆர்த்தி முடிந்ததும், கரையின் அருகில் உள்ள நீண்ட பாதையில், உள்ள ஏராளமான கடைகளில், மக்கள் கூட்டம்.

🌳மலைபிரதேசத்திற்கு செல்பவர்களுக்குரிய, குளிர் உடைகள், மேலும், ஏராளமான மலைப் பொருட்கள் விற்பனைக் கடைகள் உள்ளதால், மக்கள் கூட்டம் மிக அதிகம். குளிர் உடைகள் மிக மிக மலிவு என்கிறார்கள். உணவுப் பொருட்கள் கடைகளும் ஏராளம் உண்டு. 

🌿நாங்களும், சில பொருட்கள் வாங்கிக்கொண்டு, நடந்தது Hotel வந்து அடைந்தோம்.இரவு தங்கி விட்டு 14.04.2022 அன்று, ஹரிதுவாரிலிருந்து ரிஷிகேஷ் சென்று வந்தோம்.

பயணங்கள் தொடரும்.
நன்றி,

(13.4.2022)
🙏நன்றிகளும் வணக்கங்களும்🙇🏼‍♂️

#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#UTTARAKANNT_TOUR_2022
#HARIDWAR

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...