Sunday, September 4, 2022

UTTARAKANNT_TOUR_2022 தக்ஷேஸ்வரமகாதேவர்ஆலயம்,ஹரிதுவார் - பதிவு - 2.14.04.2022

#UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
14.04.2022
#UTTARAKANNT_TOUR_2022
#HARIDWAR 
தக்ஷேஸ்வரமகாதேவர்ஆலயம்
#ஹரிதுவார் - பதிவு - 2.
14.04.2022

🌵இமயத்திலிருந்து வரும் கங்கை நதி முதன் முதலாக சமவெளிக்கு வரும் நகரம் ஹரிதுவார் ஆகும்.
இதனால், இங்கு நீர் தூய்மையாகவும், புனிதமாகவும் போற்றப்படுகிறது. அடர்ந்த வனப்பகுதிகளும் உள்ளன.

🌳இத்தலம் ஹர்த்வார் என்றும் ஹரித்வார் என்றும் அழைக்கப்படும். ஹர்‌ஹர் மகாதேவ் என்று அர்ச்சிக்கப்படும் ஹரன்(சிவன்) உறையும் கேதார்நாத்திற்கு நுழைவாயிலாக இருப்பதால் ஹர்த்வார் எனப்படுகிறது. ஹரி(விஷ்ணு) உறையும் பத்ரிநாத்திற்கு நுழைவாயிலாக இருப்பதால் ஹரித்வார் என்றும் அறியப்படும். த்வார் என்பது நுழைவாயில் எனப் பொருள்படும். 

🌼கி.மு. 1700 - 1200 காலத்திய மன் சிற்பங்கள் கண்டு எடுக்கப்பட்ட இடம்.

🌺மயூரா வம்சத்தினரும், கௌஷான் வம்சத்தினரும் ஆண்ட இடம்.

📝ஹூவான் சுங் என்ற சீனர் தனது குறிப்புகளில், ஹரிதுவார் அருகில், அரசர் ஹர்ஷவர்தன் (590 -647) காலத்தில் ஆலயங்கள் கட்டப்பட்ட அரன்மனை மற்றும் மாயாபூர், பற்றிய குறிப்பும் உள்ளது.

🍀முகலாயர், சீக்கியர், ஆங்கிலேயர் வரை அனைவரின் காலத்திலும், மாயபுரி என்ற ஹரிதுவார் பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருந்தது.

#பயணஅனுபவக்குறிப்புகள்

💜நாங்கள் 14.04.2022 தமிழ் வருடப்பிறப்பு அன்று காலையில்,
 ஹரிதுவாரில் நாங்கள் தங்கியிருந்த Hotel Trimurthy அருகில் உள்ள கணபதி காட் என்ற கங்கை நதி பாய்ந்துவரும் இடத்தில் நீராடி, அருகில் உள்ள ஆலயங்கள் தரிசனம் செய்தோம்.
💥மாலையில் 
🛕தக்ஷேஸ்வர மகாதேவ் ஆலயம், 🛖ஹரிஹர் ஆஷ்ரமம் 
சென்று வந்தோம்.

#தக்ஷேஸ்வரமகாதேவர்ஆலயம்
தட்ச பிரஜாபதி ஆலயம் என்றும் கூறுவர்.

🛕தட்ச மகாதேவர் என்ற, தக்க்ஷேஸ்வரர் மகாதேவர் ஆலயம்.

🌳ஹரிதுவார் அருகில் KANKHAL -கன்கல்- என்ற இடத்தில் உள்ள இந்த ஆலயம் தட்ஷேஸ்வர மகாதேவ் ஆலயம் என்று குறிப்பிடுகிறார்கள்.

💥புராதானமுக்கியமான இடமாகக் கருதப்படுகிறது.
KARAMBH00MI (காரம்பூமி) என்றும், தபபூமி என்றும் அழைக்கப்படுகிறது.

🍁புராணப்படி, தட்ச பிரஜாபதி என்ற பேரரசனின் மகள் தாட்சாயினி பிறந்த இடம் இதுவாகும்.

🌿சதி என்ற தாட்சாயினி சிவபெருமானை வேண்டி திருமணம் செய்துகொள்கிறார்.

🌲தட்சன், சிவனை வெறுத்து, அவரை அழைக்காமல், யாகம் செய்கிறார். 

🌴தட்சன் மகளாகிய தாட்சாயினியாகிய, பார்வதிதேவி, சிவன் கட்டளை மீறி, தட்சன் யாகத்திற்கு வருகிறார். 

🍁தட்சன் மேலும் சிவனை அவமானப்படுத்திவிடுகிறார்.
இதனால் சதி வெறுப்புற்று, தன் தவறுக்கு சிவனிடம் மன்னிப்பு வேண்டிக் கொண்டு, யாககுண்டத்தில் வீழ்ந்து தன்னை மாய்த்துக் கொள்ள முயன்று, உயிர் இழந்து விடுகிறார். 

🌵சதியின் உடலை விஷ்ணு தன்னுடை சுதர்சன சக்கரத்தால் 51 பாகங்களாக துண்டாக்கி வீசிவிடுகிறார்.

💫இந்த 51 இடங்களும் சக்தி பீடம் என்று போற்றி வணங்கப்பட்டுவருகிறது.

💥சக்தியினுடைய ஆபரணங்கள் 56 பாகங்களாக விழுந்த இடங்கள் உப-சக்தி பீடங்கள் என்று வணங்கப்பட்டு வருகின்றன.

💥இந்த இடத்தில் சதியினுடை உடல் பாக துண்டு விழுந்ததால், இந்த இடம் சக்தி பீடமாக வணங்கப்படுகிறது.

💥சிவனின் வடிவமான, வீரபத்திரர் மூலம் தக்கன் அழிக்கப்பட்டு விடுகிறார். தக்கன் தவறு உணர்ந்து தவம் செய்ததால், சிவன் அருளால், உயிர்பெற்று ஆட்டுத்தலை பெற்றார்.

💥கன்கல் என்ற, இந்த இடத்தில், உள்ள தீர்த்த கட்டம் மிக புராதனமானது, மிகமிக உயர்வானது

💥சிவன் - சதி திருமணம் (பாணிக்கிரஹம்) செய்து வைக்கப்பட்டதால், உலகத்தின் முதல் திருமணம் நடைபெற்ற இடம் இது என்று குறிப்பிடுகிறார்கள்.

💥இந்த நிகழ்வுகள் நடைபெற்றது இந்த ஆலயம் இருக்கும் இடமே என்று அடையாளப்படுத்தப்படுகிறது.

#பயணஅனுபவக்குறிப்புகள் 

தக்ஷேஸ்வர மகாதேவர் ஆலயம், ஹரித்வாரின் தென் பகுதியில் உள்ள KANKHAL என்ற பகுதியில் உள்ளதால், நாங்கள் தங்கியிருந்த TRIMURTI Hotelலிலிருந்து 14.04.2022 மாலையில் வாகனம் மூலம் சென்றுவந்தோம்.

இவ்வாலயம் முக்கியமான இடமாக இருப்பதால், நல்லக் கூட்டம் உள்ளது.

வாகனங்கள் நிறுத்த இடவசதி உண்டு.

ஆலயத்தில் எந்தவித நுழைவுக் கட்டணமும் இல்லை.

ஆலயம் முன்பகுதியில் சிவபெருமான், யாககுண்டத்தில் வீழ்ந்து விட்ட தன் மனைவியை தூக்கி வரும் சிலை உள்ளது.

சிலையின் அமைப்பு மிக அற்புதமானது. அருமையாகவும், உணர்வுபூர்வமாகவும், உயிரோட்டமாகவும் உள்ளது. 

நுழைவு வாயிலில் இரண்டு சிங்கங்கள் அமைத்துள்ளனர்.

ஆலய வளாகம் மிகப்பெரிது
3, 4 கட்டிடங்கள்.

சுவாமிக்கு ஒரு பெரிய ஆலயம், 
சதி தேவிக்கு ஒன்று,
அற்புதமான அமைப்பில் உள்ளது . 
வட்டக் கருவரையின் உயர் கோபுர அமைப்புகள்.
நீண்ட பெரிய ஹால்கள் போன்ற அமைப்பில் தனி கருவறை.

கிழக்குப்புறம் கங்கை நதியின் ஒரு பாகம் ஓடி வருகிறது. அங்கே நீராட தனியாக ஒரு சிறிய படித்துறை உள்ளது.

புராதானமானது, புன்னியமானத் துறை என்பதால், நானும், என் நண்பர்களும் நீராடினோம்.

அருகில், சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. சுற்றி சில சன்னதிகள். யாக குண்டங்கள் உள்ளன.

எதிர்புறம் கங்கா மாத ஆலயம்.

பெரிய அகலமான கருவரை மன்டபத்தில் கங்கா மாதாவை உருஅமைத்து வணங்குகிறார்கள்.

அடுத்து தட்சன் யாககுண்டம் ஒரு பெரிய தனி கருவரை ஆலய அமைப்புடன் உள்ளது. யாக குண்டம் சுமார் 4 x 3 அமைப்பில் 2 அடி ஆழம் உடையதாக தோன்றியது.

இதற்குப் பின், சுவாமி ஆலயம் சென்றோம். பெரிய முன் மண்டபம், அழகிய பளிங்குக் கல் நந்தி உள்ளது.

சில புனரமைப்பு வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

பெரிய வட்ட வடிவக் கருவரையில், சுவாமி மிகச்சிறிய வடிவில் மகா தட்ஷேஸ்வரர் அமைந்துள்ளார் உள்ளார்.

தட்சன் ஆட்டுத் தலைபெற்றதும், , இங்கு வரும் பக்தர்களுக்கும் அனுகிரகம் புரிய வேண்டிக்கொண்டதால், சிவன் அவ்வாரே செய்கிறார் என்பது புராணம்.

பூசை அமர்ந்தே செய்கிறார்கள். 
அழகிய கட்டடி அமைப்புகள்.

அதன் பின், பார்வதி தேவியின் கருவரையும் பெரியதாகவும் பல தெய்வங்களையும் உள்ளடக்கி வைத்துள்ளார்கள்.

ஒரு தனி மண்டபக் கருவரையுடன்
லெட்சுமிநாராயணப்பெருமாள்.

மேலும், தனித்தனி வினாயகர், துர்க்கை, ஹனுமான், உள்ளார்கள்.

பொதுவாக அணைத்து இடங்களும் சென்று தரிசித்து வர 1 மணிநேரம் ஆகலாம்.

வருடத்தில் ஒரு முறை முக்கிய விழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.

மற்ற விழாக்கள் நாட்களிலும், பொதுவான நாட்களிலும் தரிசனம், பிரார்த்தனை, ஆன்மீக சுற்றுலா என்ற அளவில் பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் என்கிறார்கள்.

ஹரிதுவார் செல்பவர்கள் இந்த ஆலயம் அவசியம் தரிசியுங்கள்.

இதைத் தொடர்ந்து, சிறிய ரிக்க்ஷா மூலம் KANKHAL பகுதியில் உள்ள பிரிசித்திபெற்ற ஹரிஹரர் ஆஸ்ரமம் சென்றோம்.

பயணங்கள் தொடரும்.
நன்றி,

(14.4.2022)
🙏நன்றிகளும் வணக்கங்களும்🙇🏼‍♂️

#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#UTTARAKANNT_TOUR_2022
#HARIDWAR 
#தக்ஷேஸ்வரமகாதேவர்ஆலயம்


No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...