Saturday, November 26, 2022

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ #உஜ்ஜியினிஆலயங்கள்💫பதிவு - 3 #Bhartriharicaves - பர்த்திரிஹரிகுகைகள்

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 
#உஜ்ஜியினிஆலயங்கள்💫
பதிவு - 3

8. #Bhartriharicaves#பர்த்திரிஹரிகுகைகள் :
12.10.2022
✨BHATRIHARI CAVES: 'சிப்ராநதியின் ஓரத்தில் இரண்டு குகை ஆலயங்கள் உள்ளன.

✨விக்கிரமாதித்திய ராஜாவின் மூத்த சகோதரர். பர்த்திரிஹரி என்பவர். இவர் மகாராஜாவாக இருந்தவர். இவரின் குருநாதர் குருகோரக்ஷ்நாத் என்பவரால் ஞானம் பெற்றவர். 

 பர்த்திரிஹரி மகாராஜா தன் அரசு பதவியை துறந்து துறவியாகி இங்குள்ள குகையில் 12 ஆண்டுகள் இருந்து கொண்டு கடும் தவம் செய்து முனிவர் ஆனார். 

இவர் யோகம், மற்றும், அஷ்ட்டமாசித்து எனப்படும் முனிவர்களின் நிலை அடைந்தவர்.

இவர் பல சமஸ்கிருத நூல்களைப் படைத்துள்ளார்.
 
✨நுழைவுப்பகுதியின் முன்மன்டபத்தில் ஒரு ஆஞ்சனேயர் சன்னதி உள்ளது. அதை அடுத்து குகைக் கோவில்கள் செல்ல, ஒரு கோபுரநுழைவுவாயில், தமிழ்நாட்டு கோபுர அமைப்பில் உள்ளது.

இதை அடுத்து சிறு குகைகளின் மன்டபம், அடுத்துள்ளது. குகைப் பகுதிகள்.
 
✨இரண்டு தனித்தனி குகைகள்.
குகைக்குள் செல்ல மிக சிறிய பாதை
மிகவும் குனிந்து, செல்லவேண்டும்.

வயதானவர்கள் நிதானித்தும், கவனமாகவும் உள்ளே செல்வது நல்லது.

✨முதல் குகை நுழைவுப்பாதையில் உள்ளே சென்றால், ஒரு பெரிய மண்டபம் அதன் உட்பகுதிகளில் சிறு சிறு அறைகள் அவற்றில் காலபைரவர், சிவலிங்கங்கள் உள்ளன.

 ஒரு சிறிய குறுகிய பாதையில் சென்றால் இன்னும் குறுகிய நுழைவு படியில் இறங்க மிகவும் குனிந்து நுழைந்து செல்ல வேண்டியது உள்ளது. உள்ளே சென்றதும், உட்புறபகுதிகளிலும், ஒரு சிறிய மன்டபமும், அடுத்தடுத்து குகை அறைகளும் உள்ளன. 

ஒரு குகை அறையில் ஆதேஷ் என்ற முனிவர் என்றும், இன்னொரு குகை அறையில், மகாயோகி மத்ஸ்யேந்திரநாத் என்பவரின் திருவுருவசிலையும் உள்ளது.

மகாயோகி மத்ஸ்யேந்திரநாத் இவரே பர்த்திரிஹரி மகாராஜாவாகும்.

✨இரண்டாவது குகை கோபிசந்குகை:
எனப்படுகிறது இங்கும் முதல் குகை போல ஒரு மண்டபம், ஒரு நீண்ட வழிமுடிவில் குகை அறைகளில், மகாகாளி, சிவலிங்கம் உள்ளது.

✨ஒவ்வொரு குகைகளாக உள் சென்று வர வேண்டும். மிகவும் , வயதானவர்கள், உடல் முடியாதவர்கள், இந்த குகைப்பகுதிக்கு உள்ளே சென்று பார்க்க விரும்புவதில்லை. உள்ளே நுழைந்து உட்படிகளில் இறங்க அவர்கள் உடல்நிலை காரணமாக ஒத்துழைக்க முடிவதில்லை எனவே, வெளியில் நின்றுவிடுகிறார்கள். 

இந்த குகைப் பகுதிகளைக் கடந்துவந்தால், அடுத்து, மேல்புறத்தில் பெரிய வளாகம் உள்ளது.
 
✨இந்த வளாகத்தின் ஒரு பகுதியில்,
குரு கோரக்ஷ்நாத் கோவில் அமைந்துள்ளது.
12.10.2022

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫
குரு கோரக்ஷ்நாத் கோவில்:

✨பர்த்திரிஹரி முனிவரின் குருநாதரான குருகோரக்ஷ்நாத் அவர்களுக்கான ஆலயம். இது சற்று பெரிய ஆலயம் . பெரிய மண்டபத்துடன் கூடிய, உயர்கோபுர கருவரை அமைப்பில் உள்ளது. 

✨குரு கோரக்ஷ்நாத் கோவில் 12/02/2009 ல் இவ்வாலயம் புனரமைப்பு செய்து பிரதிஷ்டை செய்துள்ளனர்.

இதற்கு ஒரு அழகிய பெரிய முன்மண்டபமும் அதையடுத்து உள்பகுதியில், பல்வேறு முனிவர்கள், ரிஷிகள் பளிங்கு சிலைகளும் உள்ளனர், கருவரை மண்டபமும் உள்ளது. கருவரையில், முனிவர் கோரக்ஷநாதர் உள்ளார்.  

✨ஆலயம் வெளியில் ஒரு பெரிய கோசாலையும் உள்ளது. தனியார் Trust மூலம் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. 

✨உஜ்ஜியினியின் முக்கிய இடங்களில் இதுவும் ஒன்று.
தரிசனம் : ஏற்கனவே ஒரு முறையும் 10.03.2021 சிவராத்திரி அன்றும், மற்றும் 12.10.2022ல் தரிசனம் அமைந்தது.

12.10.2022
🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼‍♂️🙏

#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்_காரைக்கால் 

பதிவு : 2 - உஜ்ஜியின் ஆலயங்கள்: LINK
https://m.facebook.com/story.php?story_fbid=8455635961178253&id=100001957991710

#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாகாளேஸ்வரர் #உஜ்ஜியினிஆலயங்கள்
#ஜோதிர்லிங்கம்
#உஜ்ஜியினி , #மத்தியப்பிரதேசம்
🛕#மகாகாலேஸ்வரர்ஆலயம்

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள்பதிவு - 15.#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️11.08.2024 /குலசேகரபுரம்.18திருகுலசேகரபுரம் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில்,

#KERALAYATRA2024 பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள் பதிவு - 15. #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 11.08.2024 / குலசேகரபுரம். 18 திருக...