Wednesday, November 30, 2022

அம்பல்

அம்பல்:

திருமுறை பாடல் பெற்றத் திருத்தலம்


இது ஒரு மாடக்கோயிலாகும். இக்கோயிலின் நுழைவாயிலில் மூன்று நிலைகளையுடைய ராஜகோபுரம் உள்ளது. அடுத்து கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. அடுத்து சுதையால் ஆன பெரிய நந்தி உள்ளது. திருச்சுற்றில் படிக்காசு விநாயகர், சோமாசிமாறர், சுசீலா அம்பாள், நடராஜர், நவக்கிரகம், நந்தி, விநாயகர், பாலசுப்ரமணியம், கோச்செங்கட்சோழர், சம்பந்தர், அப்பர், பிரம்மா, சரஸ்வதி அம்மன், சனி, முருகன், பைரவர், சூரியன் ஆகியோர் உள்ளனர். கோயிலின் இடது புறத்தில் சுகந்த குந்தளாம்பிகை எனப்படும் பூங்குழலி அம்மன் சன்னதி உள்ளது. தரை தளத்தில் திருச்சுற்றில் ஸ்தல விநாயகர், சுப்ரமணியர், ஐயப்பன், மகாலட்சுமி ஆகியோர் உள்ளனர். கோஷ்டத்தில் விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. அடுத்து ஜம்புகேஸ்வரர் சன்னதி உள்ளது. அதற்கு முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன. வலம் முடித்து, படிகளேறி மேலே சென்றால் மாடக்கோயிலாக அமைந்துள்ள இக்கோயிலின் உயர்ந்த தளத்தில் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் உள்ளார். மூலவருக்கு முன்பாக நந்தியும் பலிபீடமும் உள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார்.

இக்கோயிலில் உள்ள இறைவன் பிரமபுரீசுவரர்,இறைவி சுகந்த குந்தளாம்பிகை.

இத்தலத்தில் பிரமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️#உஜ்ஜியினிஆலயங்கள்💫பதிவு - 5 - ஸ்ரீகாலபைரவர் கோயில்12.10.2022

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫
12.10.2022
பதிவு - 5

10.🛕ஸ்ரீகாலபைரவர் கோயில்12.10.2022

🔮உஜ்ஜியினின் மிக மிக முக்கிய ஆலயங்களில் இதுவும் ஒன்று.
🔮ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இம்முறையும், முதல்முறை சென்றபோதும், அதிக கூட்டம் இல்லை.

🔮நாங்கள் இரண்டாவது முறை, 10.3.2021ல் சிவராத்திரி சமயத்தில் சென்றபோது மிகவும்  அதிக கூட்டம் இருந்தது. 

🔮வெளிப்புறம் கோட்டை வாயில் போன்று நுழைவு வாயில் தாண்டினால் உள்ளே பெரிய உயரமான மாடக்கோவில் போன்ற மண்டபமும், கருவரையில் காலபைரவர் அருள்புரிகிறார்.

🔮 இவர் மது குடிப்பதாக ஐதீகம். எனவே, பலர் மது பாட்டில்களை தட்டில் அர்ச்சனை பொருள் போல் வைத்து வழிபடுகிறார்கள்.
( பாட்டிலை பிரித்து, ஒரு தட்டில் வைத்து சுவாமி வாயருகில் காண்பித்து ஆராதனை செய்தார்கள்).
🔮இதன்அருகில் ஒரு சிறிய சிவலிங்கமும், நந்தியும் கொண்ட ஒரு சிவ ஆலயமும் உள்ளது.

🔮இந்த ஆலய வளாகத்திலேயே தனியாக தத்தாத்ரேயர் ஆலயமும்  இணைந்து உள்ளது.

🔮உயரமான, பெரிய கல்விளக்குத்தூன் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மாலையில் இவ்விளக்குகள் ஏற்றப்படும்

🔮பொதுவாக இங்குள்ள எல்லா ஆலயங்களிலும், உயரமான கல்தூன் விளக்குகள் ஆலயம் நுழைந்தவுடன் வைத்துள்ளார்கள். மாலையில் பூசைக்கு முன் இவ்விளக்குகள் ஏற்றப்பட்டு அற்புதமாக உள்ளன.

🔮ஆலய வாசலில் ஏராளமான சிறு கடைகள் உண்டு. மூங்கிலில் சிறப்பாக பூன் போட்டு கருப்பு வண்ணத்துடன் (அல்லது காய்ச்சபட்டிருக்கலாம்) செய்யப்பட்ட அளவான கம்புவிற்கிறார்கள். (Rs.100). முன்புறம் ஏராளமான சிறு கடைகள். சிறு வியாபாரக் கூடங்கள் உள்ளன. 

🔮தனி வாகன நிறுத்தும் தனி வளாகம் உடையது.

மீள் தரிசனம்.
12.10.2022
🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼‍♂️🙏

#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்_காரைக்கால் 

#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாகாளேஸ்வரர் #உஜ்ஜியினிஆலயங்கள்
#ஜோதிர்லிங்கம்
#உஜ்ஜியினி , #மத்தியப்பிரதேசம்
🛕#மகாகாலேஸ்வரர்ஆலயம் 

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02tjAfyjWkUhuR3yQxjKSgkpUbmisfSo1MqHfpywoWKbE77gx4VgaidvUQ518FDkeHl&id=100001957991710



Monday, November 28, 2022

உஜ்ஜியினிஆலயங்கள்💫12.10.2022 பதிவு. 4 Shaktipeeth Shri Gadhkalika Mata Temple,

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫
12.10.2022
பதிவு. 4
9. Shaktipeeth Shri Gadhkalika Mata Temple, 

#GADHKALIKADEVIMANDIR
#காட்காளிகாமாதாஆலயம்.
 (பிரார்த்தனை ஸ்தலம்)

🛐ஸ்ரீ கட்கலிகா ஆலயம் என்று பாரம்பரியமாக அறியப்படுகிறது.

🛐காலத்தினால் அழியா காவியம் படைத்த கவிச்சக்கரவர்த்தி காளிதாசர். விக்ரமாதித்யனின் நவரத்தினத்தின் முக்கிய ரத்தினங்களில் ஒன்றான காவியமான  சகுந்தலம் படைத்தவர் மகாகவி காளிதாசர், இவர் வணங்கி அருள் பெற்றதலம். மிகவும் புராதானமான ஆலயம். 

🛐கவி காளிதாசர் விக்கிரமாதித்திய அரசவையில் பெரும் புலவராக இருந்தவர். சாகுந்தலம், மேகதூதம், முதலிய நூல்கள் இயற்றிய பாரதத்தின் புகழ் பெற்ற கவிஞர்.

🛐கருவரை மண்டபத்தையும், கருவரையையும் நோக்கி காளியின் வாகனமான அழகிய ஒரு சிங்கம் சிலை வைத்து சிறிய மண்டபத்துடன் உள்ளது.

🛐இவ்வாலயம் சிதைந்துவிட்டிருந்து மீட்டு புதிய அமைப்பில் கட்டி வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. சிறிய ஆலயம்.

 🔮ஒரு பெரிய உயரமான மண்டபமும், ஒரு கருவறையும் உள்ளது. கருவறையில் காளிமாதாவின் பெரிய முக உருவம் உள்ளது. உயரமான சற்றுப் பெரிய முன்மண்டபத்தில் இருந்து தரிசனம் செய்யலாம்.  

🔮ஒரே சுற்றுப் பிரகாரம். உயரமான  கல்விளக்குத் தூன் ஒன்றுள்ளது.

🛐செங்கற்கள் மற்றும் கிமு முதல் நூற்றாண்டின் ஏராளமான பகுதிகள். கோயிலின் அடித்தளத்தில் இருந்து மீட்கப்பட்டது. பேரரசர் ஹர்ஷவர்தன் இந்த கோவிலை புதுப்பித்துள்ளார்.

🛐சங்க (Shung)காலம், கிமு முதல் நூற்றாண்டு, குப்தர் காலம், நான்காம் நூற்றாண்டு மற்றும் பர்மர் காலம், பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் சிலைகள் மற்றும் அடித்தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 🛐ஏழாம் நூற்றாண்டில் பேரரசர் ஹர்ஷவர்தன் இந்த கோவிலை புதுப்பிக்கின்றார். பர்மர் ஆட்சி பத்தாம் நூற்றாண்டில் செய்யப்பட்ட கற்கோவில் பகுதிகள் மறுசீரமைப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

🛐20 ஆம் நூற்றாண்டில், பாரம்பரிய பூசாரி ஸ்ரீ சித்நாத்ஜி மகராஜ் விக்ரம் சம்வத் 1944 இல் புதுப்பித்தார்.

🛐ஆலயத்தினைப் பற்றிய குறிப்பு விபரங்களும் தனியே எழுதி வைத்துள்ளனர். ஏராளமான பக்தர்கள் வந்து வணங்கி அருள் பெற்று செல்கின்றனர். 

🛐உஜ்ஜியினில் தரிசிக்க வேண்டிய முக்கிய இடங்களில் இதுவும் ஒன்று.

இதன் அருகில் உள்ள மற்ற இரண்டு ஆலயங்கள்:
Shree Vaibhav Mahalakshmi mandir

🛐இந்த ஆலயம் மகாலெட்சுமியை மூலவராகக் கொண்டது. பெரிய உருவத்தில் அமைந்தது. இந்த ஆலயமும், காளி ஆலயம் மிக அருகில் உள்ளது.

Sri Sethiman Ganesh temple
🛐இது சீதா, ராமரால் பிரதிஸ்டை செய்யப்பட்ட கணபதி ஆலயம். ஷிப்ரா நதி அருகில் உள்ளது. காளி ஆலயம் அருகில் இருக்கிறது. சிறிய ஆலயம். கணபதி மூலவர்.

மீள் தரிசனம்.

12.10.2022
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫

🛐பயணங்கள் தொடரும்....

நன்றி🙇🏼‍♂️🙏

#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்_காரைக்கால் 

#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாகாளேஸ்வரர் #உஜ்ஜியினிஆலயங்கள்
#ஜோதிர்லிங்கம்
#உஜ்ஜியினி , #மத்தியப்பிரதேசம்
🛕#மகாகாலேஸ்வரர்ஆலயம்

Saturday, November 26, 2022

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ #உஜ்ஜியினிஆலயங்கள்💫பதிவு - 3 #Bhartriharicaves - பர்த்திரிஹரிகுகைகள்

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 
#உஜ்ஜியினிஆலயங்கள்💫
பதிவு - 3

8. #Bhartriharicaves#பர்த்திரிஹரிகுகைகள் :
12.10.2022
✨BHATRIHARI CAVES: 'சிப்ராநதியின் ஓரத்தில் இரண்டு குகை ஆலயங்கள் உள்ளன.

✨விக்கிரமாதித்திய ராஜாவின் மூத்த சகோதரர். பர்த்திரிஹரி என்பவர். இவர் மகாராஜாவாக இருந்தவர். இவரின் குருநாதர் குருகோரக்ஷ்நாத் என்பவரால் ஞானம் பெற்றவர். 

 பர்த்திரிஹரி மகாராஜா தன் அரசு பதவியை துறந்து துறவியாகி இங்குள்ள குகையில் 12 ஆண்டுகள் இருந்து கொண்டு கடும் தவம் செய்து முனிவர் ஆனார். 

இவர் யோகம், மற்றும், அஷ்ட்டமாசித்து எனப்படும் முனிவர்களின் நிலை அடைந்தவர்.

இவர் பல சமஸ்கிருத நூல்களைப் படைத்துள்ளார்.
 
✨நுழைவுப்பகுதியின் முன்மன்டபத்தில் ஒரு ஆஞ்சனேயர் சன்னதி உள்ளது. அதை அடுத்து குகைக் கோவில்கள் செல்ல, ஒரு கோபுரநுழைவுவாயில், தமிழ்நாட்டு கோபுர அமைப்பில் உள்ளது.

இதை அடுத்து சிறு குகைகளின் மன்டபம், அடுத்துள்ளது. குகைப் பகுதிகள்.
 
✨இரண்டு தனித்தனி குகைகள்.
குகைக்குள் செல்ல மிக சிறிய பாதை
மிகவும் குனிந்து, செல்லவேண்டும்.

வயதானவர்கள் நிதானித்தும், கவனமாகவும் உள்ளே செல்வது நல்லது.

✨முதல் குகை நுழைவுப்பாதையில் உள்ளே சென்றால், ஒரு பெரிய மண்டபம் அதன் உட்பகுதிகளில் சிறு சிறு அறைகள் அவற்றில் காலபைரவர், சிவலிங்கங்கள் உள்ளன.

 ஒரு சிறிய குறுகிய பாதையில் சென்றால் இன்னும் குறுகிய நுழைவு படியில் இறங்க மிகவும் குனிந்து நுழைந்து செல்ல வேண்டியது உள்ளது. உள்ளே சென்றதும், உட்புறபகுதிகளிலும், ஒரு சிறிய மன்டபமும், அடுத்தடுத்து குகை அறைகளும் உள்ளன. 

ஒரு குகை அறையில் ஆதேஷ் என்ற முனிவர் என்றும், இன்னொரு குகை அறையில், மகாயோகி மத்ஸ்யேந்திரநாத் என்பவரின் திருவுருவசிலையும் உள்ளது.

மகாயோகி மத்ஸ்யேந்திரநாத் இவரே பர்த்திரிஹரி மகாராஜாவாகும்.

✨இரண்டாவது குகை கோபிசந்குகை:
எனப்படுகிறது இங்கும் முதல் குகை போல ஒரு மண்டபம், ஒரு நீண்ட வழிமுடிவில் குகை அறைகளில், மகாகாளி, சிவலிங்கம் உள்ளது.

✨ஒவ்வொரு குகைகளாக உள் சென்று வர வேண்டும். மிகவும் , வயதானவர்கள், உடல் முடியாதவர்கள், இந்த குகைப்பகுதிக்கு உள்ளே சென்று பார்க்க விரும்புவதில்லை. உள்ளே நுழைந்து உட்படிகளில் இறங்க அவர்கள் உடல்நிலை காரணமாக ஒத்துழைக்க முடிவதில்லை எனவே, வெளியில் நின்றுவிடுகிறார்கள். 

இந்த குகைப் பகுதிகளைக் கடந்துவந்தால், அடுத்து, மேல்புறத்தில் பெரிய வளாகம் உள்ளது.
 
✨இந்த வளாகத்தின் ஒரு பகுதியில்,
குரு கோரக்ஷ்நாத் கோவில் அமைந்துள்ளது.
12.10.2022

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫
குரு கோரக்ஷ்நாத் கோவில்:

✨பர்த்திரிஹரி முனிவரின் குருநாதரான குருகோரக்ஷ்நாத் அவர்களுக்கான ஆலயம். இது சற்று பெரிய ஆலயம் . பெரிய மண்டபத்துடன் கூடிய, உயர்கோபுர கருவரை அமைப்பில் உள்ளது. 

✨குரு கோரக்ஷ்நாத் கோவில் 12/02/2009 ல் இவ்வாலயம் புனரமைப்பு செய்து பிரதிஷ்டை செய்துள்ளனர்.

இதற்கு ஒரு அழகிய பெரிய முன்மண்டபமும் அதையடுத்து உள்பகுதியில், பல்வேறு முனிவர்கள், ரிஷிகள் பளிங்கு சிலைகளும் உள்ளனர், கருவரை மண்டபமும் உள்ளது. கருவரையில், முனிவர் கோரக்ஷநாதர் உள்ளார்.  

✨ஆலயம் வெளியில் ஒரு பெரிய கோசாலையும் உள்ளது. தனியார் Trust மூலம் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. 

✨உஜ்ஜியினியின் முக்கிய இடங்களில் இதுவும் ஒன்று.
தரிசனம் : ஏற்கனவே ஒரு முறையும் 10.03.2021 சிவராத்திரி அன்றும், மற்றும் 12.10.2022ல் தரிசனம் அமைந்தது.

12.10.2022
🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼‍♂️🙏

#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்_காரைக்கால் 

பதிவு : 2 - உஜ்ஜியின் ஆலயங்கள்: LINK
https://m.facebook.com/story.php?story_fbid=8455635961178253&id=100001957991710

#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாகாளேஸ்வரர் #உஜ்ஜியினிஆலயங்கள்
#ஜோதிர்லிங்கம்
#உஜ்ஜியினி , #மத்தியப்பிரதேசம்
🛕#மகாகாலேஸ்வரர்ஆலயம்

Friday, November 25, 2022

உஜ்ஜியின் ஆலயங்கள் - பதிவு - 2 - ஹர்சித்தி மாதா, ராம் Temple, விக்கிரமாதித்தியர் ஆலயம்

உஜ்ஜியின் ஆலயங்கள் - பதிவு - 2

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 
#உஜ்ஜியினிஆலயங்கள்💫
பதிவு - 2

5. ஹரஸித்தி மாதா கோயில் (உச்சினி மாகாளி):
12.10.2022

🌺மகாகாளேஸ்வரர் ஆலயத்திலிருந்து சுமார் 1 கிமீ. மேற்குப் புறத்தில் உள்ளது. பிரதான ஆலயம் தரிசித்து விட்டு நடந்தே வரலாம், சாலை நடுவில்  ஒரு சிங்கம் உருவ பெரிய சிலை வைக்கப்பட்டுள்ளது.

 அதிலிருந்து வடக்கில் பிரியும் சாலையில் 50 அடி தொலைவில் கிழக்குப் பார்த்து அமைந்துள்ள ஆலயம். இது ஒரு முக்கிய ஆலயம். 

சக்தி பீடத்தில் ஒன்று. பார்வதிதேவியின் முழங்கை வீழ்ந்த இடம். 

இராஜகோபுரம் இல்லாவிட்டாலும், உள்நுழைவுப் பகுதி வாசல் பகுதியில் அழகிய சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

சாலையிலிருந்து, சுமார் 10 படிகள் ஏறினால் பெரிய வெளி மன்டபம்.
இரண்டு கல்தூன்கள். ஆலய வளாக உள் முன் பகுதியில்,  அமைந்துள்ள. 

 ஹரசித்தி மாதா ஆலயம் 6 அடி உயரம் உடையது.  ஒரு சிறியமுன்மண்டபம், அடுத்துள்ள கருவரையில் அம்பாள் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் வகையில் அமைப்புள்ளது. முன்புறம் அழகிய ஒரு சிங்கம் உள்ளது. கருவரை உயரக் கோபுர அமைப்பில் உள்ளது. கருவரை மண்டபம்  சுற்றி வரலாம்.

🛕கார்கோடேஸ்வரர் ஆலயம் :

💥ஒரு கார்கோடேஸ்வரர் சிவன் ஆலயம் தனியே அம்பாள் ஆலய சன்னதியை, ஒட்டியவாறு இடது புறத்தில் இணைந்து உள்ளது. இது ஒரு முன்மண்டபம் அதில் ஒரு அழகிய சிறிய நந்தி. கிழக்குப் பார்த்த கருவரையில் சிவன் உள்ளார். 

🛕பாதாள காளி / பைரவி சன்னதி:

🌟விக்கிரமாதித்தன் தலையை வெட்டி பலி கொடுக்க முற்பட்ட இடம் என்கிறார்கள். பாதாள பைரவி சன்னதி, இவ்வாலய ஈசான பகுதியில் உள்ளது.  
பாதாள காளியை /பைரைவியை பக்தர்கள் தரிசனம் செய்ய மேல்பகுதியில் உள்ள  சிறிய மன்டபத்தின்  3 சிறு துளைகள் மூலம் மட்டுமே வணங்க முடியும்.  கீழே சென்று பூசை செய்ய தனிபடிகள் அமைப்பு உள்ளது. பக்தர்கள் உள்ளே இறங்க அனுமதி கிடையாது.
 விக்கிரமாதித்த மகாராஜா வணங்கி அருள் பெற்ற இடம்.

💥மேலும் ஈசானத்தில் தனியாக ஒரு சிறிய விநாயகர் மேற்கு நோக்கிய சன்னதியும் உள்ளது. 

💥ஆலய வளாகத்தின் முன் பகுதியில், சுமார் 30 அடி உயரத்திற்கு கல்தூண்கள் இரண்டு அமைந்துள்ளது.  மாலையில் இரண்டு கல்விளக்குத் தூண்களிலும்  விளக்குகள் ஏற்றப்படும் காட்சி அற்புதம்.

💥சிறிய ஆலயமாக இருந்தாலும் தூய்மையாகப் பராமரிக்கின்றனர்.
முன்பதிவு 
https://m.facebook.com/story.php?story_fbid=5428428250565721&id=100001957991710

💥உஜ்ஜியினியின் மிக முக்கியமான ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும்.
12.10.2022
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫

6. Shri Ram Mandir, Patidar Samaj
Shree Rudreshwar Mahadev
12.10.2022

🍀உஜ்ஜினியின் முக்கிய ஆலயங்களில் ஒன்றான, ஹர்சித்தி மாதா ஆலயம் அருகில் வடக்குப்புறத்தில் பெரிய ஒரு ராம் மந்தீர்  உள்ளது.  அதன் அருகில் சிறிய ருத்திரேஸ்வரர் ஆலயம் உள்ளதும் சிறப்பு.

SRI RAM TEMPLE

🍀ஷிப்ரா நதி செல்லும் வழியில் அருகில் உள்ள ராம் மந்திர். மிகப் பெரிய கட்டிடத்தில் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் ராம லெட்சுமண சீதா பளிங்கு உருவங்கள், மற்றும்  பல் வேறு சுவாமி உருவங்கள் வைக்கப்பட்டு Patidar Samaj என்பவர்களால் பராமரிப்பில் உள்ளது.
🍀ஹரிசித்தி மந்திர், விக்கிரமாதித்யர், ஆலயங்கள் வரிசையில் மிக அருகில் உள்ளது.

🌺வீதி முனையில் மிகப்பழமையான சிறிய லிங்க வடிவத்தில் ஸ்ரீ ருத்ரேஸ்வர மகாதேவர் மிகச்சிறு ஆலயம் ஒன்றும் அமைந்துள்ளது.

12.10.2022
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫

7. #விக்ரமாதித்யர்ஆலயம்

🌸பாரதம் மறக்கமுடியாத இந்து அரசர்களில் இவரும் ஒருவர், வீரம், தயாளம், மதிநுட்பம் உடைய அரசர்.
உஜ்ஜயினியை மிகச்சிறப்பாக ஆண்ட புகழ் பெற்ற அரசர் விக்கிரமாதித்தியர்.

 🔥தன் தலையை பக்தியால் வெட்டிக்கொண்டவர். விக்ரமாதித்தியர் அரசர் சிலைகள் உள்ள ஆலயங்கள் இரண்டு உள்ளன. ஒன்று, மிகப்பழைய ஆலயம். 

🌼ஸ்ரீ ஹரிசித்தி மாதாவை பிரதானமாக வழிபட்ட விக்ரமாதித்தியருக்காக
ஹரிசித்தி மாதா ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் பிரியும் நேர் பாதையில் செல்ல வேண்டும்.  

🌼ஒரு பெரிய கட்டிடத்தில் (ஆலய அமைப்பில்) மிகப்பெரிய விக்கிரமாதித்த அரசர் அரசவையில் உள்ளது போல் அமைத்துள்ளார்கள். அரச சபையில் இருந்த அனைத்து பட்டி, மந்திரிகள், 32 பதுமைகள், எல்லோரும் அவர் கீழ் அமர்ந்து சபை நடத்துவது போல உள்ளது. நாம் அச்சிறிய சாலையில் நின்றே தரிசிக்க வேண்டும். வேதாளம், விக்கிரமாதித்தன் கதை, 32 பதுமைகள் எல்லாம் நினைவுக்கு வந்தது.

🌼நவீனமான மற்றொரு ஆலயம்;
ருத்ர சாகர ஏரியில் ஒன்று புதியதாக அமைக்கப்பட்டுள்ளது.  பிரம்மாண்டமான சிம்மாசனத்தில் அமர்ந்த பெரிய விக்கிரமாதித்திய அரசர் சிலை அற்புதமாக காட்சியளிக்கிறது. 
ஆன்மீக  சுற்றுலா வருகையை அதிகப்படுத்தும் விதமாக இந்த ஏரியினை அழகுபடுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

12.10.2022
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫
பதிவு - 1 LINK.
https://m.facebook.com/story.php?story_fbid=8444319635643219&id=100001957991710

🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼‍♂️🙏

என்றும் அன்புடன்
சுப்ராம்.அருணாசலம்_காரைக்கால்

#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாகாளேஸ்வரர் #உஜ்ஜியினிஆலயங்கள்
#ஜோதிர்லிங்கம்
#உஜ்ஜியினி , #மத்தியப்பிரதேசம்
🛕#மகாகாலேஸ்வரர்ஆலயம்

Tuesday, November 22, 2022

உஜ்ஜியினி ஆலயங்கள். 1 பயன அனுபவக்குறிப்புகள் 12.10.2022

#உஜ்ஜியினிஆலயங்கள்💫
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

#உஜ்ஜியினிஆலயங்கள்
♻️ உஜ்ஜியினி பெருநகரம் சார்ந்துள்ள கோயில்கள்: 

💥உஜ்ஜியினி,  பாரதத்தின் முக்கிய ஆன்மீக பெருநகரம்; ஏராளமான  புராதானமான ஆலயங்கள் நிறைந்த அற்புத தலம்.  ஜோதிர்லிங்கம் உள்ள மகாகாளேஸ்வரர் ஆலயம் பெரிய வளாகப் பகுதி, ருத்தர சாகர் ஏரிக்கரையில் உள்ளது. சுற்றிலும் சில முக்கிய புராதான ஆலயங்களும், புதிய ஆன்மீக ஆலயக் கட்டிடங்களும்,  கட்டப்பட்டுள்ளது.
மூன்று முறை உஜ்ஜயினி சென்றுள்ளோம்.
ஒவ்வொரு முறையும் பல பல மாறுதல்கள் காணுகிறோம்.

⛳சுற்றுப்புறத்திலும், ஷிப்ரா நதிக்கரையிலும், உஜ்ஜியினியின் புறநகர் பகுதிகளிலும் நிறைய ஆன்மீக ஆலயங்கள் மற்றும் புராதான இடங்கள் உள்ளன. இவற்றில் சில குறிப்பிட்ட ஆலயங்கள், ஆன்மீக இடங்களை 12.10.2022 அன்று சென்று தரிசித்து வந்தோம். 

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫

1🛐ஸ்ரீ பாத கணபதி ஆலயம்:
12.10.2022
🌟மகாகாளேஸ்வரர் புனித ஆலயத்தின் வடக்குப்புறம் உள்ள ஸ்ரீபாத கணபதி என்ற படா கணபதி ஆலயம், புராதானமானது. பிரதான சாலையின் ஓரத்தில் உள்ளது. நுழைவில் சிறிய மன்டபம் உள்ளது. இதன் உள் நுழைந்ததும் மிகப் பெரிய உருவத்தில் கணபதி உள்ளார்.

🌟ஆலயத்தின் உட்பகுதியில் பஞ்சமுக ஹனுமான் உலோகத்தால் அமைக்கப்பட்டு நடுநாயகமாக ஒரு சிறிய மண்டபத்தில் உள்ளார்.

🌟இடைவெளியில் ஒரு தொட்டில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள அம்மன் வைத்து அதை அசைத்தும், தொட்டும் வழிபாடு நடைபெறுகிறது. 

🌟இவ்வாலயம், மகாகாளேஸ்வரர் ஆலயம் அருகில் உள்ளது. இதுவும் பிரார்த்தனை ஆலயம் போன்று வழிபடுகிறார்கள்.
முதலில், இவரை  தரிசித்து விட்டே, மகாகாளேஸ்வரர் தரிசிக்க வேண்டும் என்று சிலர் கூறுவார்கள்.

(10.3.2021 ல் தரிசித்த அனுபவக் குறிப்புகள்:
https://m.facebook.com/story.php?story_fbid=5409904815751398&id=100001957991710)

12.10.2022
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫

2.🛕பாரதமாத ஆலயம்:
12.10.2022

🌟மகாகாளேஸ்வரர் ஆலய முன்புறம், தென்கிழக்குப்பகுதியில் ஒரு பாரதமாத ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இது சுமார் 20 படிகள் உயரத்தில் மிகப்பெரிய முன்மண்டபம் மற்றும், உள்மன்டபம் கொண்டது. அடுத்துள்ள கருவரையில் பிரமிக்க வைக்கும் பாரதமாத சிலை கையில் கொடியுடன் பின்புறம் சீறிப் பாயும் சிங்கம் ஒன்றுடன், மிக அற்புதமாக உள்ளது.

🌟இதன் புறச்சுற்றுப் பாதை, பால்கனி அமைப்பில்உள்ள பகுதியும் உள்ளது.
இதிலிருந்து ருத்ரசாகர் எரியின் அழகிய அமைப்பும், ஏரி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆன்மீக பூங்கா பகுதிகளையும், உஜ்ஜியினி நகரம், ஆலய வளாகம் அனைத்தையும் காணலாம்.
 
🌟முன்புறம் ஆலய நுழைவுப்படிகளின் நடுவில் பாரததேசம் இயற்கையான நில அமைப்புடன் (3Dயில்) வடிவமைக்கப்பட்டு, அதில் பாரத நதிகளை வடிவமைத்தும் அனைவரையும் கவரும் வகையில், கருத்துடன் நல்ல அமைப்பில் உள்ளது. 

🌟பாரதமாதா ஆலயம் மிகப்பெரிய வளாகத்தில் அமைந்துள்ளது, அருகில் தங்கும் இடங்கள், Car Parking வசதிகளும் உள்ளன.
10.3.2021 ல் தரிசித்த அனுபவக் குறிப்புகள்:
https://m.facebook.com/story.php?story_fbid=5419530171455529&id=100001957991710


12.10.2022
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫

3. 🏞️ருத்திர சாகர் ஏரி வளாகம்-ஆன்மீக பூங்கா:
12.10.2022

⚛️ஆலய மேற்குப் பகுதியில் உள்ள உஜ்ஜியின் ஏரி, அல்லது மகாகாளேஸ்வரர் ஏரி என்ற ருத்திர சாகர் ஏரி,  மற்றும் ஏரி வளாகம், பகுதிகளைச் சிறந்த ஆன்மீகப் பூங்காவாக தற்போது மாற்றப்பட்டுள்ளது. 

 ⚛️ஏரியின் கரைப்பகுதிகளை மிக சிறந்த ஆன்மீக பூங்காவாக மாற்றி, நமது பெருமைக்கு உரிய பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடிஜி அவர்களால் நாங்கள் உஜ்ஜியின் சென்ற 10.10.2022 அன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. 

☸️இதில், மிகப்பெரிய சிவன், விநாயகர், சுப்பிரமணியர், முதலிய  பல்வேறு  கடவுளர்களின் மற்றும் சப்தரிஷிகளின் பிரமாண்டமான சிலைகள், மற்றும் பல்வேறு இறை உணர்வு கட்டிடங்களும், சிவபுராண காட்சி சிற்பங்களும் அமைக்கப்பட்டு மிக அற்புத ஆன்மீக பூங்காவாகவடிவமைக்கப்பட்டு உள்ளது. அனைவரும் கான வேண்டிய அற்புத பூங்கா. 

☸️ஏரியின் நடுவில் விக்கிரமாதித்திய மகாராஜா சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும், மிகப்பெரிய சிலையும் உள்ளது.

12.10.2022
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫

4.ராம்தீர்த்தக் கட்டம் (RAM GHAT), 
ஷிப்ரா நதிக்கரை: 
12.10.2022🌼மகாகாளேஸ்வரர் ஆலயப்பகுதியை அடுத்து இருக்கும்  மிகப்பெரிய ருத்ரசாகார் என்ற ஏரி பகுதி உள்ளது. இதை அடுத்து சுமார் 1 கி.மீ. தூரத்தில்தான் ஷிப்ரா நதி உள்ளது.

🌼பொதுவாக  உஜ்ஜியினியின் பெரும்பகுதியில் ஷிப்ரா நதி உள்ளது.

🌼ஷிப்ரா நதிக்கரையில் உள்ள ஸ்தான கட்டடங்கள் பல உண்டு.  

🌼சிப்ரா நதி புண்ணிய தீர்த்தங்களில் ஒன்று.புராதானமானது. 

🌼தேவாமிர்தம் சிந்திய இடங்களில் இதுவும் ஒன்று.

🌼பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்  கும்பமேளா விழாவின் போது ஏராளமான லட்சக்கணக்காண பக்தர்கள் பாரதம் முழுதும் இருந்து இங்கு வந்து நீராடுகிறார்கள். 

🌼பக்தர்கள் நீராடுவதற்கு வசதியாக நீளமான படித்துறைகள் இருபுறமும் உள்ளன.  பெரிய சிறிய ஆலயங்கள் இருகரைகளிலும் உள்ளது. 

🌼தினம்  மாலையில் ஆர்த்தி வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. பக்தர்கள் பிரார்த்தனைகள் செய்யவும், பூசை செய்யவும் பண்டாக்கள் உதவுகிறார்கள். 
🌼எல்லா பொழுதிலும் மனிதர்கள் நடமாட்டம் உள்ளது. இங்கு நீராடி வழிபடுதல் மிகவும் புனிதமானது. 
( ஏற்கனவே ஒரு முறையும், மற்றும் 10.3.2021 அன்றுசென்ற போதும், காலையில் சென்று நீராடி வந்தோம்.)

10.3.2021 ல் தரிசித்த அனுபவக் குறிப்புகள்:
https://m.facebook.com/story.php?story_fbid=5404498276292052&id=100001957991710

🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼‍♂️🙏
12.10.2022
என்றும் அன்புடன்
சுப்ராம்.அருணாசலம்_காரைக்கால்

#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாகாளேஸ்வரர் #உஜ்ஜியினிஆலயங்கள்
#ஜோதிர்லிங்கம்
#உஜ்ஜியினி , #மத்தியப்பிரதேசம்
🛕#மகாகாலேஸ்வரர்ஆலயம்


Thursday, November 17, 2022

ஜோதிர்லிங்கதரிசனம்#மகாகாளேஸ்வரர் #ஜோதிர்லிங்கம் #உஜ்ஜியினி #மத்தியப்பிரதேசம்

#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாகாளேஸ்வரர்  #ஜோதிர்லிங்கம் #உஜ்ஜியினி #மத்தியப்பிரதேசம்

🛕#மகாகாலேஸ்வரர்ஆலயம் 
#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️
12.10.2022 
⛳ #உஜ்ஜைன்

🌟மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாரதத்தின் மிக முக்கியமான தலம்.

🌟புனிதமான ஷிப்ரா நதி இவ்வூரில் உள்ளது. கரையெல்லாம் பல பல கோவில்கள் உண்டு.  

🌟பல புராண, புராதான ஆலயங்கள் நிறைந்த ஊர். 

🌟சுமார் 84 புராதான லிங்கங்கள் உஜ்ஜியினியில் உள்ளதாக புரான வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அடையாளம் செய்துள்ளனர்.

🌟ஏழு மோட்ச நகரங்களுள் இதுவும் ஒன்று. அயோத்தி, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சி, அவந்திகை, துவாரகை. தலங்கள்.

🌟சுதார்வா என்ற ஜைன அரசன் தான் அவந்திகை என்ற இந்த நகருக்கு உஜ்ஜயினி என்று பெயர் வைத்தார்.

🌟முக்கிய தீர்த்தமாகிய சிப்ரா நதியில் மூழ்கி நீராடி மகாகாளரை வணங்க வேண்டும். 

🌟காளிமாதா தரிசனம் செய்ய வேண்டும்.

🌟தேவாமிர்தம் சிந்திய இடங்களில் இதுவும் ஒன்று.

🌟12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளவிழா நடைபெறுவது.

🌟இங்குதான் கிருஷ்ணர், பலராமர், சுதாமர் சாந்தீப முனிவரிடம் கல்வி பயின்றனர்.

🌟இது ஒரு தேவார வைப்புத்தலமாகவும் உள்ளது.

🌟சிவனைக் குறிக்கும் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கத்தைக் கொண்டுள்ள புகழ் பெற்ற சிவன் கோயில் உள்ள இடம் ஆகும்.

💥#மகாகாளேஸ்வரர் - ஜோதிர்லிங்கம்
🔱ஜோதிர்லிங்கம் தோன்றியது குறித்த தகவல். 
💥புராண காலத்தில் அவந்தியின் அருகில் இருந்த இரத்தின மாலை என்ற மலைக்காட்டில் ஒரு சாபத்தால் வேதாளமாக மாறிய தூசனன் என்பவன் இருந்தான். அவன் அவ்வப்போது நகருக்கு வந்து சூறையாடி மக்களுக்கு பெரும் துன்பத்தை இழைத்துவந்தான். 

அப்போது அவந்தி நகரில் வாழ்ந்துவந்த அந்தணரான விலாசனை நகர மக்கள் அணுகி வேதாளத்திடம் இருந்து தங்களைக் காக்குமாறு வேண்டினர். அவரும் அதற்கு சம்மதித்து வேதவிற்பன்னர்களையும்,  துறவிகளையும் அழைத்து வந்து பெரும் வேள்வி ஒன்றை செய்தனர். 

வேள்வியின் முடிவில் வேள்வி குண்டத் தரைவெடித்து அதிலிருந்து  ஒரு சிவலிங்கம்  தோன்றியது. அந்த லிங்கத்தை இரண்டாக பிளந்துகொண்டு ஆவேசத்துடன் மாகாளர் தோன்றி வேதாளத்தை அழித்தார். அதன்பிறகு மக்கள் மாகாளரை அங்கேயே தங்கி தங்களைக் காக்குமாறு வேண்டினர். மாகாளரும் ஆவேசம் தணிந்தார்.

பிளந்த லிங்கம் ஒன்றுசேர மாகாளர் ஜோதிவடிவில் அதில் கலந்து ஜோதிர்லிங்கமானார். 
⚛️ ஆலய வரலாறு:
1234-5ல் உஜ்ஜைனைத் தாக்கியபோது இக் கோயில் வளாகம் சுல்தான் ஷம்ஸ்-உத்-தின் இலுட்மிஷ் அவர்களால் அழிக்கப்பட்டது. படையெடுப்பின் போது திருடப்பட்ட ஜலதரியுடன் (லிங்கத்தின் கீழ் இருக்கும் ஒரு அமைப்பு) கூடிய ஜோதிர்லிங்கம் அகற்றப்பட்டு அருகிலுள்ள ‘கோட்டீர்த்த குந்தா’ என்கிற இக் கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு குளத்தில் வீசப்பட்டதாக நம்பப்படுகிறது.
தற்போதைய கட்டமைப்பு மராட்டிய ஜெனரல் ரனோஜி ஷிண்டே என்பவரால் 1734 இல் கட்டப்பட்டது. மகாத்ஜி ஷிண்டே (1730–12 பிப்ரவரி 1794) மற்றும் தௌலத் ராவ் ஷிண்டேவின் மனைவி பைசா பாய் உள்ளிட்ட அவரது வம்சத்தின் மற்ற உறுப்பினர்களால் இக்கோயிலுக்கு புனரமைப்பு வசதிகள் மற்றும் மேலாண்மை செய்யப்பட்டது. (1827-1863).

 ஜெயாஜிராவ் ஷிண்டேவின் காலத்தில் (1886 வரை), அப்போதைய குவாலியர் மாநிலத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் இந்த கோவிலில் நடத்தப்பட்டன.

உஜ்ஜைனின் நிர்வாகப் பொறுப்பு, முதலாம் பேஷ்வா பாஜிராவிடமிருந்து  அவரின் உண்மையுள்ள தளபதி ரனோஜி ஷிண்டேவுக்கு சென்றது. ரனோஜியின் திவான் சுகதானகர் ராம்சந்திர பாபா ஷெனாவி ஆவார். அவர் மிகவும் செல்வந்தராக இருந்தார், அவர் தனது செல்வத்தை மத நோக்கங்களுக்காக முதலீடு செய்ய முடிவு செய்தார். இதுதொடர்பாக, அவர் பதினெட்டாம் நூற்றாண்டின் 4 முதல் 5 தசாப்தங்களில் உஜ்ஜைனில் உள்ள புகழ்பெற்ற மகாகாலேஸ்வரர் கோயிலை மீண்டும் கட்டினார்.
சுதந்திரத்திற்குப் பிறகு இக்கோயிலின் தேவஸ்தான அமைப்பு, உஜ்ஜைன் நகராட்சி நிறுவனத்தால் மாற்றப்பட்டது. தற்போது, இந்த அமைப்பு, உஜ்ஜைன் மாகாணத்தின் ஆட்சியாளர் அலுவலகத்தின் கீழ் உள்ளது.

⛳ஆலயஅமைப்பு :

🛕இது இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனில் உள்ள சிப்ரா ஆற்றங்கரையில் அமைந்துள்ள மூன்று அடுக்குகள் கொண்ட கோயிலாகும்.

🛕 சடங்குகள் மூலம் சக்தி கொடுக்கப்பட்டு நிறுவப்படும் படிமங்கள் போலன்றி, இங்குள்ள முதன்மைக் கடவுளான, சிவனின் லிங்க வடிவம் தன்னுள்ளேயே சக்தியோட்டத்தை உள்வாங்கித் தானாகத் தோன்றியதாகக் நம்பப்படுகிறது.

 🛕மகாகாலேஸ்வரருடைய சிலை தெற்குப் பார்த்தபடி இருக்கும் தட்சிணாமூர்த்தி வடிவம் ஆகும். தந்திர மரபுகளில் கூறப்பட்டிருக்கும் இந்தத் தனித்துவமான அம்சம் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இங்கு மட்டுமே காணப்படுகின்றது.
🛕மாகாளர் கோயிலானது உயர்ந்த மதிலால் சூழப்பட்ட பெரிய இடத்தில் அமைந்துள்ளது. ஆலயம் மிகப்பெரிய வளாகம்.  கருவறைக்கு மேல் அமைந்துள்ள சிகரம் அல்லது விமானம் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
🛕 இக்கோயிலின் மூலத்தானமானது மூன்று அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது. தரைமட்டத்துக்கு கீழேயும் ஒரு கருவறை அமைந்துள்ளது. அதற்கு படிக்கட்டுகள்வழியாக சென்று தரிசிக்கவேண்டும். முதன்மைக் கருவறையானது பெரிதாக வட்டவடிவில் உள்ளது. அதில் மாகாளர் பெரிய லிங்க வடிவில் காட்சியளிக்கிறார்.
🛕மகாகாலேஸ்வரர் கருவறைக்கு மேலுள்ள அடுத்த கருவறையில் ஓங்காரேஸ்வரர் லிங்கம் நிறுவப்பட்டுள்ளது. மேலே செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கடுத்த மூன்றாவது தளத்தில் நாகசந்திரேஸ்வரர் சிலை உள்ளது. அங்கு வணங்குவதற்கு நாகபஞ்சமியன்று மட்டுமே அடியார்கள் அநுமதிக்கப்படுகிறார்கள்.
🛕 கருவறைக்கு மேற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய திசைகளில் பரிவார தெய்வங்களாக பிள்ளையார், பார்வதி, கார்த்திகேயன் பைரவர் மற்றும் நவகிரகங்கள், ஆகிய கடவுளர் உள்ளனர். தென்புறம் ஒரு  அழகிய பளிங்குக்கல் நந்தி சிலையும் உண்டு.

#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️
12.10.2022 
🛕இன்று காலையில் உஜ்ஜியின் சென்று மகாகாலேஸ்வரர் ஆலயம் தரிசனம் செய்தோம்.
🛕ஏற்கனவே இரண்டு முறை  2021ல் சிவராத்திரி அன்றும்,  இவ்வாலயம் உட்பட உஜ்ஜியினியில் உள்ள சில முக்கிய ஆலயங்களை தரிசித்து இருந்தோம்.  ஒவ்வொரு முறையும் நிறைய முன்னேற்றங்கள், பராமரிப்புகள் ஏற்பட்டு வருதையும், பல்வேறு மாற்றங்களையும் காணுகிறோம். 
🛕 பொதுவாக, மத்திய பிரதேச மாநிலத்தின் மிகவும் புகழ் பெற்ற முக்கிய ஆலயமாகவும், பக்தர்கள் பெரும் அளவில் கூடும் ஆலயமாகவும், உள்ளது.

🛕மகாகாளேஸ்வரருக்கு மிகவும் சிறப்பான முறையில் பூசைகளும் வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது. இவ்வாலயத்தில், இரவில் நடத்தப்படும் விபூதி அபிஷேக பூசை மிகவும் விஷேசமானது.  ஆலயமும் புதிய பொலிவுடன் உள்ளது.

🛕 மகாகாளேஸ்வரர் ஆலயம் 3 அடுக்கு ஆலயம். கீழ்பகுதியில், மகாகாளேஸ்வரர், நடு பகுதியில் ஒங்காளேஸ்வரர், மேல் பகுதியில் நாகநாதர் என்ற  நாகசந்திரேஸ்வரர்  உள்ளார்கள்.
🛕மகாகாளேஸ்வரர் தரிசிக்க மிக நீண்ட Q வரிசை உண்டு, ஆலயம் பக்தர்களால் பெருங்கூட்டமாக நிறைந்திருந்தாலும், தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
🛕பாதுகாப்பிற்காக இரும்பு குழாய்களால் கொண்டு, அமைக்கப்பட்ட வரிசைமுறை, உள்ளதால் உள்நுழைந்து மகாகாளேஸ்வரர் தரிசனம் செய்து வெளிவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
🛕முதலில், ஆலய வளாக தென்புறம் சென்று அங்குள்ள ஆலயம் உள்நுழைவு பாதைப்பகுதிக்கு சென்றால் சாய்தளப்பாதை இருக்கும். அதன்  வழியே  சற்று அடிப்பகுதிக் சென்று, மகாகாளேஸ்வரர் தரிசனம் செய்ய வேண்டிய தனி வழியில் செல்லவேண்டும். 
🛕 இது கருவரைப் பகுதியின் தென்புறம் உள்ள பெரிய உள் மண்பத்திற்குள் செல்லும். பக்தர்கள் இந்த மண்டபத்திலிருந்து கொண்டு, ஸ்ரீ மகாகாளேஸ்வரரை நன்றாக தரிசிக்கலாம்.
🛕சுவாமியின் கருவரை தென்புறம் பார்த்து அமைந்துள்ளது, சிவலிங்கம் மிகப்பெரியது வழுவழுவழுப்பாக உள்ளது. அபிஷேகம் செய்வதும், விதவிதமான அலங்காரங்கள் செய்யப்படுவதும் பிரமிப்பாய் உள்ளது.

🛕  முன்புறம் அழகிய வெள்ளைக் கருங்கல்லால் ஆன நந்தி ஒன்றும் சுவாமி கருவரை நோக்கிய வண்ணம் உள்ளார்.
🛕சில ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் எல்லோரும் மண்டபத்தில் அமர்ந்து நெடு நேரம் அபிஷேக பூசை அலங்காரங்கள் செய்வதை கண்டுவிட்டு, பிறகு, சுவாமியை கருவரையில் சென்று அருகில் இருந்து தொட்டு அபிஷேகம் செய்ய வாய்ப்புக் கிடைத்தது.  
🛕தற்காலத்தில், பல்வேறு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு நெறிப்படுத்தப்படுவதால், தரிசிக்கச் செல்லும் அனைத்து பக்தர்களையும் கருவரை உள்ளே சென்று வழிபாடு செய்ய அனுமதிப்பதில்லை. தனி பூசை வழிபாட்டுக்  கட்டணம் வசூலிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது.
🛕முக்கியமான ஆலயமாக இருப்பதால் மிகப்பெரிய பாதுகாப்பு வசதிகள்  கட்டிடத்தில் உள்ளது. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து மக்கள் கூட்டம், சாரி சாரியாக வந்து வழிபடுகிறார்கள். 

🛕இவருக்கு பால் அபிஷேகம், செய்தும், விதவிதமான அலங்காரங்கள் செய்தும் ஆர்த்தி வழிபாடு நடைபெறுகிறது.  சிறப்பு வழிபாடு செய்பவர்கள் தனி பணம் கட்டி கருவரை உள்ளே சென்று தொட்டும் வணங்குகிறார்கள்.
 
🛕பல நிமிடங்கள் தொடர்ந்து பூசை செய்தும், ஆர்த்தி செய்கிறார்கள்.
மக்கள் குரல் ஒலி எழுப்பியும், கைகளைத் தட்டியும் ஒலி எழுப்புவது வித்தியாசமான வழிபாடு.  கைப்பேசி அனுமதிக்கப்படுவதால் எல்லோரும் கைப்பேசியில் புகைப்படம் எடுப்பதும் மற்ற ஆலய தரிசனங்களிலிருந்து, வித்தியாசமாகத் தோன்றுகிறது.

🛕ஆலயம் உள் செல்லவும், வெளியில் வரவும் தனித்தனி பாதைகள்.

🛕இருப்பினும், நாம் வரிசையில் செல்லும்போது கருவறையை நேரடியாகப் பார்க்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
🛕இது மட்டுமல்லாமல், பல இடங்களில் கருவரையை CCT மூலம் நேரடியாகவே புகைப்படம் எடுத்து, பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி பெட்டிகளின் மூலம் நேரடி யாகக் காணும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது' மிகச்சிறப்பு.
சிவராத்திரியில் பிரமிக்கவைக்கும் வகையில், மிகப்பெருங்கூட்டமும், மிகுந்த பாதுகாப்பும், மற்ற வசதிகளும்  செய்யப்பட்டிருந்தது. 

🛕ஆலயம் வளாகம் சுற்றிலும், தொலைக்காட்சிகள் பல இடங்களில் வைக்கப்பட்டு இருந்தன. அதன் முன் விடியவிடிய பக்தர்கள் கூட்டம்.
ஆலயம் வளாகம் முழுதும் சிறப்பு அலங்காரங்கள்.

🛕ஆலய தரிசனம் சிவராத்திரி சமயத்தில் பல லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவதால், உஜ்ஜியினியின் பாதைகளில் போக்குவரத்து மாற்றங்கள். கடும் நெருக்கடி. எல்லா இடங்களிலும், மக்கள் கூட்டம் மிக மிக அதிகம், 10.03.2021ல் நாங்கள் அனுபவத்தோம்.

🛕இம்முறை, பாரத பிரதமர் வருகை தந்திருந்ததால், ஆலயமும், உஜ்ஜியினியும் மிகச்சிறப்பான முறையில் மலர் அலங்காரம், மின் அலங்காரம் மிக அருமையாக இருந்திருந்தது.
🛕கருவரை கீழ்பகுதியில் உள்ள  ஜோதிர்லிங்கமான  ஸ்ரீ மகாகாளேஸ்வரர் தரிசனம் முடிந்ததும், ஆலயம் மேல்புறம் வந்து நடு கருவறையில் உள்ள ஸ்ரீ ஓம்காரேஸ்வர் தரிசனம் செய்தோம்.
இந்தக் கருவரையின் முன் ஒரு பெரிய கற்றுன்களால் கட்டப்பெற்றுள்ள முன்மண்டபமும், முன் மண்டபத்தில் ஒரு அழகிய நந்தியும் உள்ளது.

🛕மகாகாளேஸ்வரர், பாதாள கருவரையில் உள்ளார்; இவரை தரிசித்தபின் கருவரை மேல் பகுதி வந்து, கூட்டம் நெரிசல் இல்லாமல் ஆலய வளாகத்தில் உள்ள மற்ற சன்னதிகளை தரிசித்தோம்.

🛕 இந்த மூலவர் கருவறையை உள்ளிட்டு வலம் வந்தோம், இந்த மூலக்கருவரைப் பகுதியின் பின்புறத்தில், ஒரு 'பாதாள ' லிங்கம், ஸ்ரீ த்ரிவிஷ்டப்ரஸ்வர் மஹாதேவ் ஆலயம் என்ற மிகப் புராதானமான சிறு சன்னதி உள்ளது.  தவிர, மூலவர் புறப்பகுதிகளிலும், புராதானமான சில சிவலிங்கமூர்த்திகளும், விநாயகர், பெருமாள்,  பைரவர், ஹனுமார், முதலிய தெய்வ சன்னதிகளும் உள்ளன.

🛕இந்த வளாகத்தில்  வடபுறம் சில புராதான சன்னதிகளும், தலவிருட்சமும், ஆலய அலுவலகக் கட்டிடங்களும் உள்ளன. ஆலய வளாகத்தில், ஆலயம் சம்பந்தமான, அர்ச்சனை, பூசைக் கட்டண  அறைகள் உண்டு.  பிரசாதப் பொருட்கள் விற்பனைகளும் நடைபெறுகின்றன.

🛕மூலவர் ஆலயத்தின் முன்புறம் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்.

🛕தென் பகுதியில் தனியாக அஷ்ட்டலிங்கள், வைத்தும், நவகிரக பரிகாரலிங்கங்களும்  அமைத்து, பூசைகளும், நடைபெறுகின்றன.

🛕இது அல்லாமல், ஆலய வளாக உட்பகுதியிலே, தென் மேற்குப் பகுதியில்  இரண்டு ஆலயங்கள் ஸ்ரீஅனாதி கல்பேஷ்வரர், ஸ்ரீ காலேஸ்வரர்,  உள்ளன.
இவைகளும், கற்றளிகளால் முன்மண்டபத்துடன் கூடிய உயர அமைப்புக் கோபுர அமைப்புடன் உள்ளது.
மேலும், சிறு சிறு சன்னதிகளில் பல்வேறு ரிஷிகள், முனிவர்கள் வழிபட்ட லிங்கங்களும் உள்ளன.

🛕ஆலய வளாக உட்புறம் பக்தர்கள் அதிகமாக பரவலாக  வழிபாட்டில் இருக்கிறார்கள்.  இருப்பினும், ஆலயம் தூய்மையான பராமரிப்பும், பாதுகாப்பும் கொண்டதாக  விளங்குகிறது.

🛕ஆலயம் முழுதும் தரிசனம் செய்துவிட்டு, ஆலயமேல்புறம் வழியாக வெளியேறும் வழி அமைக்கப்பட்டு உள்ளது. ஆலயப் பகுதி உயரம் இதிலிருந்து இறங்க சாய்தளம் அமைத்துள்ளனர். அதன் வழியாக வெளியே வந்தோம்.

🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼‍♂️🙏

#என்றும்அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#பயண_அனுபவக்_குறிப்புகள் 

#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 

#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாகாளேஸ்வரர் #உஜ்ஜியினிஆலயங்கள்
#ஜோதிர்லிங்கம்
#உஜ்ஜியினி , #மத்தியப்பிரதேசம்
🛕#மகாகாலேஸ்வரர்ஆலயம்



Wednesday, November 9, 2022

ஜோதிர்லிங்க_தரிசனம்#பயண_அனுபவக்_குறிப்புகள்பதிவு - 2 மத்தியப்பிரதேசம்#ஒம்காரேஸ்வரர்11.10.2022

#ஜோதிர்லிங்க_தரிசனம்
#பயண_அனுபவக்_குறிப்புகள்
பதிவு - 2
#மத்தியப்பிரதேசம்
#ஒம்காரேஸ்வரர்
11.10.2022

🛕 இந்தியாவில் உள்ள மத்திய பிரதேச மாநிலத்தில் உஜ்ஜியினியில் உள்ள ஸ்ரீ மகாகாளேஸ்வரர்,  ஸ்ரீ ஓம்காரேஸ்வரர் மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள 5 ஜோதிர்லிங்கங்கள், அஷ்ட்ட கணபதி ஆலயங்கள், மற்றும் புராண சிறப்புவாய்ந்த சில புன்னிய தலங்களை சென்று தரிசனம் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு மீண்டும் இவ்வருடம்  கிடைத்தது. 
 
🛕 இந்த தலங்களுக்குச் சென்று வந்த அனுபவக் குறிப்புகளை பகிர்ந்து கொள்கிறேன். தாங்கள் இத்தலங்களுக்கு செல்லும் போது இவை  உதவலாம்.

#மத்தியப்பிரதேசம்:
#ஜோதிர்லிங்கம் 
#ஓம்காரேஸ்வரர்

🛕 பாரத தேசம் பழம்பெரும் தேசம். தேசத்தின் பல பாகங்களில் உள்ள இந்த ஜோதிர்லிங்களை தரிசித்து வழிபடுவது, பாரதத்தில் வசிக்கும் ஏராளமான இந்துக்களின் கடமையாக உள்ளது.
🛕 ஓம்காரேஷ்வர்: என்பது சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்துக் கோயிலாகும்.

🛕 இது இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் கந்த்வா மாவட்டத்தில், இந்தூர் அருகில், உள்ள மந்தாதா என்ற தீவு நகரில்  அமைந்துள்ளது. தீவின் வடிவம் தேவநாகரி ॐ சின்னம் போல் இருப்பதாக கூறப்படுகிறது.

🛕 மத்தியப் பிரதேசத்தில் உள்ள பர்வாஹாவில் இருந்து சுமார் 16 கி.மீ. ஓம்காரேஷ்வர்.  இந்தியாவின் மிகவும் புனிதமான நதியான நர்மதையால் உருவானது. இப்போது இங்கு உலகின் மிகப்பெரிய அணை திட்டங்களில் ஒன்று செயல்படுகிறது. 

🛕நர்மதை மற்றும் காவேரி (நர்மதையின் துணை நதி)  நதிக்கரையில் மந்தாதா அல்லது ஷிவ்புரி தீவில் இக்கோயில் அமைந்துள்ளது . தீவு 4 கிமீ நீளமும், 2.6 கிமீ பரப்பளவும் கொண்டது  படகுகள் மற்றும் பாலம் மூலம் அணுகலாம்.

🛕 சிவனின் 12 போற்றப்படும் ஜோதிர்லிங்கத் தலங்களில் இதுவும் ஒன்று . பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பில் பழங்குடி மக்கள் இந்த இடத்தில் குடியேறினர், இப்போது இந்த இடம் அதன் புராணத்திற்கும், வரலாற்றிற்கும் பிரபலமானது.

🛕இங்கு இரண்டு முக்கிய சிவன் கோவில்கள் உள்ளன, ஒன்று ஓம்காரேஷ்வர்.  (இதன் பெயர் “ஓம்காரத்தின் இறைவன் அல்லது ஓம் ஒலியின் இறைவன்”) தீவில் அமைந்துள்ளது.

 🛕, மம்லேஷ்வர் (அமலேஷ்வர்) (இதன் பெயர் “அழியாத இறைவன்”) “அழியாதவர்கள் அல்லது தேவர்களின் இறைவன்” எனப்படுகிறது. இது, நர்மதை ஆற்றின் தென்கரையில் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. 

புராண கதைகள்:

🛕இந்து புராணத்தின் படி, விந்தியா, விந்தியாச்சல மலைத்தொடரைக் கட்டுப்படுத்தும் தெய்வம், செய்த பாவங்களைப் போக்க சிவனை வழிபட்டது. அவர் ஒரு புனித வடிவியல் வரைபடத்தையும் மணல் மற்றும் களிமண்ணால் செய்யப்பட்ட லிங்கத்தையும் உருவாக்கினார். சிவன் வழிபாட்டில் மகிழ்ந்தார் மற்றும் ஓம்காரேஷ்வர் மற்றும் அமலேஸ்வரா என இரண்டு வடிவங்களில் தோன்றியதாக நம்பப்படுகிறது. அந்த மண் மேடு ஓம் வடிவில் தோன்றியதால் இத்தீவு ஓம்காரேஸ்வர் என்று அழைக்கப்பட்டது. கோயிலில் பார்வதி மற்றும் கணபதி சன்னதி உள்ளது.

🛕இரண்டாவது மாந்தாதா மற்றும் அவரது மகனின் தவம் தொடர்பானது. இக்ஷ்வாகு குலத்தின் மன்னன் ( ராமரின் மூதாதையர்) சிவபெருமான் ஜோதிர்லிங்கமாக காட்சியளிக்கும் வரை இங்கு சிவனை வழிபட்டார். மாந்தாதாவின் மகன்கள்-அம்பரீஷ் மற்றும் முச்சுகுந்தா அவர்கள் இங்கு கடுமையான தவம் மற்றும் துறவுகளை கடைப்பிடித்து சிவபெருமானை மகிழ்வித்தனர். அதனால்தான் இந்த மலைக்கு மாந்தாதா என்று பெயர்.

🛕இந்து மத நூல்களின் மூன்றாவது கதை:  ஒரு காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும். இடையே ஒரு பெரிய போர் நடந்தது, அதில் அசுரர்கள் வெற்றி பெற்றார். இது தேவர்களுக்கு பெரும் பின்னடைவாக இருந்தது, எனவே தேவர்கள் சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தனர். அவர்களின் பிரார்த்தனையால் மகிழ்ந்த சிவபெருமான், ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்க வடிவில் தோன்றி  அசுரார்களை வென்றார்.

🕉️ஓம்காரத்தின் தத்துவம் :– ஓம்கார் ஓம் (ஒலி) மற்றும் அகார் (சிருஷ்டி) ஆகிய இரண்டு வார்த்தைகளால் ஆனது. அத்வைத் என்றால் “இரண்டு அல்ல” என்பதால் இரண்டும் ஒன்று அல்ல. சிருஷ்டியின் ஓம் பீஜே மந்திரம் , ஸ்ருஷ்டியை உருவாக்கியவர்.

#பயண_அனுபவக்_குறிப்புகள்🕊️

🛕முதலில், சென்னையிலிருந்து உஜ்ஜயினி செல்வதற்கு JAIPUR Expressல் ரயில் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. 

🛕9.10.2022 மாலை 5.40 மணிக்கு சென்னை Central Railway Jn. புறப்பட்டு அடுத்த நாள் 10.10.2022 இரவு 9.15 க்கு செல்ல 3 AC கட்டணம் இருவருக்கு கட்டணம் ரூ 3650/-

🛕போக்குவரத்து, உணவு, தங்கும் வசதி பயண ஏற்பாட்டளர் மூலம்  ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

🛕10.10.22 அன்று இரவு உஜ்ஜயினி சென்றதும், அங்கிருந்து ஷேர் Auto மூலம் 8 பேர்களுக்கு ரூ 250 கட்டணம் செலுத்தி நாங்கள் தங்க வேண்டிய, Hotel Ganga என்ற இடத்திற்கு சென்றுதங்கினோம். இந்த இடம் உஜ்ஜயினி நகரிலிருந்து சற்று தள்ளி புறநகர் பகுதியில் இருந்தது. இதன் அருகில் தனியார் பேருந்து நிலையம் உள்ளது. 

🛕11.10.2022  செவ்வாய்க்கிழமை அன்று காலை உணவு முடித்து விட்டு, காலை 7.00 மணி அளவில் உஜ்ஜயினியிலிருந்து 190 கி.மீ. தூரம் உள்ள ஓம்காரேஸ்வரர் ஆலயம் சென்று தரிசித்து வர தனிப் பேருந்து வசதி செய்யப்பட்டு இருந்தது.

🛕காலையில் புறப்பட்டு  மதியம் சென்று அடைந்தோம். வழியில் ஒரு DABA என்னும் பயணவழி உணவகத்தில் Tea சாப்பிட்டோம்.  Highway ஆக இருந்தாலும், சாலைகள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாலும், போக்குவரத்து அதிகம் உள்ள சாலை என்பதாலும் கவனமாகச் செல்ல வேண்டியிருந்தது. 

🛕 11.30 மணி அளவில் ஓம்காரேஸ்வரர் இடம் அடைந்தோம்.

🕉️ஆலய தரிசனம்

🔱ஓம்காரேஸ்வரர் ஆலயம்

🛕 இந்த ஊர் சென்றவுடன் பேருந்து நிறுத்தும் இடத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் நர்மதை நதியின் பாலம் சென்று அங்கிருந்து இவ்வாலயம் செல்லலாம்.

🛕நர்மதை நதியின் கிழக்குப் புறத்தில் ஒரு பெரிய நீர்த் தேக்கம் உள்ளது. இங்கிருந்து வெளியேறும் நீர்வழி இரண்டாகப் பிரிந்து, மந்தாதா மலைப் பிரதேசத்தைச் சுற்றி மீண்டும் சங்கமம் ஆகி செல்லுகிறது. இந்த பிரதேசம் ஓம் வடிவில் உள்ளது.

🛕தென் பகுதியில் செல்லும் நர்மதை ஆற்றின் மலைக்கரையில் ஓம்காரேஸ்வரர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. தென்புறக் கரையில் மம்லேஸ்வரர் ஆலயம் உள்ளது.

🛕 வாகன நிறுத்தத்திலிருந்து, நர்மதை நதி கரை அருகில் செல்லும்போது, 3 வழிகள் உள்ளது.

🌟1வது மேற்கில் செல்லும் சாலையில் 200 மீ.தூரத்தில் மம்லேஸ்வர் ஆலயம் செல்லலாம்.

🌟2வது நேராக தொங்குபாலம் கீழ் பகுதியில் சென்றால், நர்மதை நதிக்கரையை அடையலாம்.

🌟3வது தொங்குபாலம் வழியாக நடந்து சென்றால் ஓம்காரேஸ்வரர் ஜோதிர்லிங்க ஆலயம் அடையலாம்.

🛕 முதலில், இந்த தொங்கு பாலத்திற்கு சென்று, பாலத்திலிருந்து ஒரு புறம் நர்மதை ஆற்றில் கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தையும், மறுபுறத்தில் நர்மதை நதியின் நீரோட்டம், மற்றும், மலைக்கரையில் உள்ள ஓம்காரேஸ்வரர் ஆலயம், தென் பகுதியில் உள்ள மம்லேஸ்வரர், மற்றும் அருகில் உள்ள ஆலயங்கள். படகுத்துறைகள் இவற்றைப் பார்த்துக்கொண்டு, தீவுப்பகுதியை அடைந்து ஓம்காரேஸ்வரர் ஆலயம் சென்றோம். பாலத்திலிருந்து இவ்விடங்களைப் பார்ப்பது நல்ல அனுபவமாக இருந்தது.

🛕ஆலயம் அடைந்ததும், ஆலயத்தின் அருகிலிருந்து கீழ்பகுதியில், சுமார் 50 படிகள் கீழே இறங்கி, பளிங்குபோன்ற நல்ல நீரால் படிகளைத் தொட்டு செல்லும் நர்மதையில் நீராடினோம். அருகில் திதி, தர்ப்பணம் செய்ய பண்டாக்களும் (பூசை செய்பவர்கள்) உள்ளனர். 

🛕நீராடிய பின், சில படிகள் மேல் ஏறினால், ஒரு குகைக் கோவில் இருந்தது.இதை ஆதிசங்கரர் குகை என்கிறார்கள்..

🛐ஆதி சங்கரரின் குகை –

🛕 சங்கரர் தனது குருவான கோவிந்த பகவத்பாதாவை ஒரு குகையில் சந்தித்த இடம் என்று கூறப்படுகிறது. ஆதி சங்கரரின் திருவுருவம் நிறுவப்பட்டுள்ளது.  சிவன் கோவிலுக்கு சற்று கீழே இந்த குகை இன்றும் காணப்படுகிறது. 

🛕 அருகில் உள்ள இந்தியில் உள்ள கல்வெட்டு சுருக்கம். தமிழில் ...

'காமகோடி பீட சேவா அறக்கட்டளை மற்றும் ஜகத்குரு ஆதி பகவத்பாத் ஸ்ரீ சங்கராச்சார்யா ஸ்ரீமத் கோவிந்த் பகவத்பாதாச்சார்யாவின் குகைக் கோயில் ஆகியவை ஸ்ரீ மத் ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மற்றும் ஸ்ரீமத் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி மஹானால் புனரமைக்கப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேச முதல்வர் மாண்புமிகு ஸ்ரீ அர்ஜுன் சிங் அவர்களின் சிறப்பு முன்னிலையில், இது ஸ்ரீ சங்கராச்சாரியார் ஜெயந்தி விழா புனித நிகழ்வில் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.'

🛕இந்தக் குகை கோயில் உட்புறம் ஸ்ரீஆதிசங்கரர் சிலை மற்றும் புடை சிற்பமாக, ஓம்காரேஸ்வரரை வழிபட்டது, உள்ளது.

🛕உட்புறம் சில கல்தூண்களும், குகை போன்ற அமைப்பில் சில அருமையான பழமையான சிலைகளும் உள்ளன. மிகவும் புராதானமான ஆலயம் என்பதாலும் சிதைந்தும் உள்ளது. இருப்பினும் வடிவமைப்பு நுட்பங்கள் வியக்கவைக்கின்றது.

🛕குகையைவிட்டு வெளியில் வந்து மேலும், சில படிகள் ஏறி, ஜோதிர்லிங்க ஆலயம் அடைந்தோம்.

🛕ஆலயம் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால், மலைப்பகுதிகள் பலவற்றை சரி செய்து ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. 

🛕கருவரையின் மீது உயரக் கோபுரம் அமைந்துள்ளது. நில அமைப்பில் உள்ளது போல மிக தாராளமான இடவமைப்பு இல்லை. சுற்றுப் பிரகாரம் மற்றும் பல சன்னதிகள் மலை இடுக்குகளாக உள்ளன. 

 🛕முதலில், சுமார்,.3 அடி அமைப்பில் விநாயகர் புடை சிற்பமாக ஒரு சன்னதி போல அமைத்துள்ளனர்.

🛕இந்தப் பகுதியில் ஆலய அலுவலகம், கடைகளும், Cheppal Stand உட்பட வைத்துள்ளனர்.

🛕ஆலயம் தென்புறமாக உட்செல்ல வழி உள்ளது. முன் வெளி மண்டபம் அகலமாக இருந்தாலும், வரிசை இரும்புக்குழாய்த் தடுப்புகள் உள்ளன.

🛕தற்போது, இங்கிருந்து ஆலயம் உள்ளே சென்று சுவாமி தரிசித்து வெளியில் வரும் வரை இரும்புக்குழாய் வரிசை அமைக்கப்பட்டுள்ளது. (முதன்முறை நாங்கள் வந்த போது இப்படி இல்லை). இந்த வரிசை ஏற்பாடுகள் மூலம் ஆலயம் உள்ளே சென்று, சுவாமியைத் தரிசித்து வரலாம். Cellphone எடுத்துச் செல்வதில் கட்டுப்பாடுகள் இல்லாவிட்டாலும், கருவரைப் பகுதிகளில் மட்டும் புகைப்படம் எடுப்பதை நெறிப்படுத்த முயலுகிறார்கள்.

🛕முன் வெளி மண்டபத்தில், ஒரு அழகிய வெள்ளை பளிங்குக் கல்லால் ஆன நந்தியும், அதற்கு ஒரு சிறப்பான அழகிய வடிவமைப்பில் ஒரு கல் மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.

🛕இதற்கு அடுத்தபடியாக, ஆலய முன்மண்டபம் பிரமாண்டமான அளவில் பல்வேறு துண்கள் கொண்ட அமைப்பில் உள்ளது. மிக அழகிய, அற்புத கல் சிலைகள், தூண்கள், மற்றும், மண்டபத்தின் விதானங்களும். அமைந்துள்ளது மிக சிறப்பு.

🛕இதை அடுத்து கல்லால் செய்யப்பட்டுள்ள அழகிய முறையில் வடிவமைப்பில் உள்ள பெரிய நிலைப்படியைத் தாண்டினால், ஒரு குறுகிய அளவில் உள்ள நீள்சதுர வடிவில் உள்ள உள் மண்டபத்தில் கருவறை அமைந்துள்ளது.  சுவாமி மேற்கு நோக்கிய சன்னதியும், நடுவில் பார்வதியின் சிலையும், உள்ளது.

🛕ஜோதிர்லிங்கமாகிய, ஓம்காரேஸ்வரர் சிறிய அளவில் உள்ளார். தரைப்பகுதியை ஒட்டி உள்ளார். லிங்கத்தின் மீது நீரைக் கொண்டு அபிஷேகம் செய்து கொண்டுள்ளார்கள். சுவாமிக்கு, நாகாபரணம் அமைத்துள்னர்.

🛕நாமே தனியாக நீர், பால், புஷ்பங்கள் கொண்டும் சுவாமி மீது ஊற்றி அபிஷேகம் செய்யலாம்.  அல்லது, பண்டாக்கள் மூலம், சிறப்பு வழி முறையில் (ரூ.50 முதல் கொடுத்து) சென்றும், நாமே அபிஷேகம் செய்யவும் அனுமதிக்கின்றனர்.

🛕கருவரை அகலம் மிகவும் குறுகியதாகவும், பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதாலும், வரிசையாக சென்றுதான் தரிசனம் செய்ய வேண்டும். அங்குள்ளவர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்வதாலும், தள்ளுமுள்ளுகள் உண்டு.

🛕நாம் கவனமாக, பொறுமையாக நின்று  கருவரை மாடத்தின் நடுவில் நன்றாகத் தெரியும், பார்வதி  அம்மனையும், கீழ்புறத்தில் அமைந்துள்ள சுவாமியையும் பார்த்து தரிசிக்க வேண்டும்.

🛕சுவாமி தரிசித்து வெளியில் வந்ததும், மீண்டும் படிகள் கீழே இறங்கி, நதிக்கரைக்கு வந்தோம்.

🛕இங்கு படகுத்துறை உள்ளது. இந்தப் படகுகள் மூலம் நதியின் தென்புறம் உள்ள ஆலயங்கள் செல்ல முடிவு செய்தோம்.

🛕ஒரு படகில் சுமார் 20 பேர் அனுமதிக்கப்பட்டு அமரவைக்கப்பட்டு எதிர்கரை செல்லலாம். கட்டணம் நபருக்கு ரூ 20 மட்டும். 

🛕 எதிர் கரையில், (தென்கரையில்) சில புராதானமான ஆலயங்களும், புதிதாக கட்டப்பட்டுள்ள ஆலயங்களும் உள்ளன. எதிர் கரையில் உள்ள படகுத்துரைக்கு 5-10 நிமிடங்களில் வந்து சேர்ந்துவிடலாம்.வழியில், Boat லிருந்து நர்மதை ஆற்றின் தெளிவான நீரோட்டம், தூரத்தில் உள்ள அணைப்பகுதி முதல், தொங்குபாலம், மற்றும், மேற்கில் உள்ள நடைபாலம் வரை உள்ள கட்டிடங்கள், ஆலயங்கள் முதலியவைகள் கண் கொள்ளாக்காட்சியாக அமைந்துள்ளன.

🛕இதற்குப் பிறகு பலபடிகள் ஏறி நடந்து சென்றால், இந்தப் பகுதியில் உள்ள ஆலயங்களை தரிசிக்கலாம்.

🛕இந்தப்பகுதியில், ஏராளமான கடைகள் உள்ளன.

🛕வழியில், புராதானமான ஆலயங்கள் பல உள்ளன. 

🛕🔱 ஸ்ரீமம்லேஸ்வரர் ஆலயம்

🛕நர்மதை நதியின் தென்கரையிலிருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் ஒரு மிக புராதானமான ஆலயமான ஸ்ரீமம்லேஸ்வரர் ஆலயம் உள்ளது. 

🛕ஆலயம் ASI எனப்படும், இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

🛕கி.பி.10ம் நூற்றாண்டில், இவ்வாலயம் கட்டப்பட்டுள்ளதாகவும்,இவ்வாலயங்களை இந்தூர் ரானி அவர்களால் புனரமைக்கப்பட்டதாகவும் குறிப்பு உண்டு.

🛕ஆலயம் அமைப்பு :

சுவாமி மூலவர் மம்லேஸ்வரர் மேற்கு பார்த்த சன்னதி, சிறிய அமைப்பு நாம் கருவரை உள்ளே சென்று அபிஷேகம் செய்து தொட்டு வணங்கலாம். கருவரையில் உள்ள நடு மாடத்தில், ஓங்காரேஸ்வரர் கருவரை மாடம் போலவே பார்வதி சிலையும் உள்ளது.

 🛕ஆலயத்தில் உள கருவரை உயர் கோபுர அமைப்பு. தனி முன்மண்டபம் வடக்கிலும், தெற்கிலும் நுழைவுப்பகுதி, கருவரை மேல்புறம் நந்தியம் பெருமாள் கருவரையை நோக்கி தனியே சிறிய மண்டபத்தில் உள்ளார்.

 🛕ஆலயம் கருவரை சுற்றில் வடபுறம் ஒரு லிங்கமும், நந்தியும், வெட்டவெளியில், கருவறை கோமுகத்தை ஒட்டியுள்ளது.

🛕ஆலய கருவரைக் கோபுரம் மிகக் கம்பீரமான உயரம் உடையது.  அற்புத சிலை அமைப்புகள் அமைந்துள்ளது.

 🛕இதை அடுத்து தனியாக கிழக்குப் பார்த்த கருவரை கொண்ட சிவன் சன்னதியும் உள்ளது. இக்கருவரை யினுள் பலவிதமான சுவாமி சிலைகள், பழமையானதாகவும், சிதைந்தும் உள்ளது. மிகப்பழமையான கலை வடிவத்துடன் சிறிய நந்தியும் உள்ளே உள்ளது. இந்த சன்னதியும் உயர் கருவரைக் கோபுரம் உடையது.

 🛕மிகப்பெரிய வளாகமாக, ஆலயம் இருந்து, பிறகு சிதைந்து அல்லது சிதைக்கப்பட்டு, பிறகு புனரமைக்கப்பட்டுள்ளது. 

🛕இதையடுத்துள்ள சுற்றுப் பிரகாரத்தில், மூலவர் முன்பு இரண்டு மூன்று சிறிய சன்னதிகளும் உள்ளன.

#பயண_அனுபவக்_குறிப்புகள்🕊️

💥இங்கெல்லாம் Cellphone எடுத்துச் செல்வதில் கட்டுப்பாடுகள் இல்லாவிட்டாலும், கருவரைப் பகுதிகளில் மட்டும் புகைப்படம் எடுப்பதை நெறிப்படுத்த முயலுகிறார்கள்.

🛐மிக பிரமாண்டமாகவும், அழகிய நுட்பத்துடன் முழுவதும், கற்றளியால் ஆன ஆலயம், சிதைக்கப்பட்டும், மீண்டும் புனரமைக்கப்பட்டும் உள்ள நிலைமையைக் காணுகிறோம்.

 🕉️இதுபோன்றே இந்துக்களின் ஆலயங்கள் பாரத தேசமெங்கும் பல இடங்களில் உள்ளது என்பதையும் நாம் எண்ணவேண்டியுள்ளது.

🛐இவ்வாலயங்களை தரிசித்துவிட்டு, நாங்கள் எங்கள் பேருந்து நின்ற இடத்திற்கு நடந்துவந்தடைந்தோம். சிலர் Auto மூலமும் வந்தார்கள்.

🔯இங்கிருந்து புறப்பட்டு, சற்று தூரம் சென்று, ஒரு பூங்காவில், பயண ஏற்பாட்டாளரால் தயாரிக்கப்பட்டு கொண்டு வந்த மதிய உணவை முடித்துக்கொண்டு, உஜ்ஜியினி புறப்பட்டோம்.

🛕11.10.2022 அன்று நம்முடைய பாரத பிரதமர் அவர்கள், உஜ்ஜியினி வந்திருந்து, ஆலய வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஆன்மீக பூங்கவை திறந்துவைக்கும் பெருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது.இதனால், உஜ்ஜியினி நகர் முழுதும் அழகான மின் அலங்காரம் செய்யப்பட்டு, மிக பிரமாண்ட அளவில் ஜொலித்துக் கொண்டிருந்தது.

🛕நாங்கள் ஓங்காரேஸ்வரர் சென்று  விட்டு உஜ்ஜியின் வரும் போது போக்குவரத்துக்கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்ததால், இரவு 12.00 மணி அளவில் உஜ்ஜியினியில் நாங்கள் தங்கியிருந்த Hotel GANGA வந்து அடைந்தோம்.

🛐பயணங்கள் தொடரும்....
11.10.2022
நன்றி🙇🏼‍♂️🙏

#என்றும்அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஜோதிர்லிங்கதரிசனம் 

#ஜோதிர்லிங்கம் 
#மத்தியப்பிரதேசம்
#ஓங்காரேஸ்வரர்

ஜோதிர்லிங்கங்கள் மற்றும் #அஷ்ட்டகணபதி_ஆலயங்கள் தரிசனம் 9.10.2022 முதல் 12.10.2022 வரை💫

#ஜோதிர்லிங்கங்கள் மற்றும் #அஷ்ட்டகணபதி_ஆலயங்கள் தரிசனம் 
9.10.2022 முதல் 12.10.2022 வரை💫

#பயண_அனுபவக்_குறிப்புகள்🕊️
பதிவு - 1

#ஜோதிர்லிங்கதரிசனம்

🛕#ஜோதிர்லிங்கங்கள்

சோதிலிங்கம் (Jyotirlinga) என்பது இந்துக் கடவுளான சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள் ஒன்று. இது ஒளிமயமான லிங்கம் என்னும் பொருள் தருவது. 

இந்தியாவில் 12 சோதிலிங்கத் திருத்தலங்கள் உள்ளன. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை சோதிலிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் திருவாதிரை நாள் சோதிலிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. 

🛕ஜோதிர்லிங்கங்களில் சிவன் ஜோதிமயமாக உள்ளார். இதனால் சிவன் ஒளியின் வடிவமாகிய நெருப்பாக தோன்றிய இடங்கள் ஜோதிர்லிங்க சிவாலயங்கள் எனப்படுகின்றன.  

🛕இந்து புராணங்களின்படி, சிவபெருமானிற்கு 64 வடிவங்கள் உள்ளன. அவற்றை ஜோதிர்லிங்கங்களுடன் ஒப்பிட்டு குழப்பமடையக்கூடாது. பன்னிரண்டு ஜோதிர்லிங்க தலங்கள் ஒவ்வொன்றும் தலைமை தெய்வத்தின் பெயரை எடுத்துக்கொள்கின்றன. ஒவ்வொன்றும் சிவனின் வெவ்வேறு வெளிப்பாடாக கருதப்படுகின்றன. இந்த எல்லா தலங்களிலும், முதன்மை உருவம் சிவனின் எல்லையற்ற தன்மையைக் குறிக்கும். தொடக்கமற்ற மற்றும் முடிவில்லாத ஸ்தம்ப தூணைக் குறிக்கும் லிங்க வடிவம் ஆகும்.

🛕 சிவ மஹாபுரானத்தின் கூற்றுப்படி , ஒரு காலத்தில் பிரம்மாவும், விஷ்ணுவும், படைப்பின் மேலாதிக்கத்தின் அடிப்படையில் ஒரு வாதத்தை கொண்டிருந்தனர். அவர்களைச் சோதிக்க, சிவன் மூன்று உலகங்களையும் ஒரு பெரிய முடிவற்ற ஒளித் தூணாக, ஜோதிர்லிங்கமாகத் துளைத்தார் . இரு திசைகளிலும் ஒளியின் முடிவைக் கண்டறிய விஷ்ணுவும் பிரம்மாவும் முறையே கீழ்நோக்கி மற்றும் மேல்நோக்கி தங்கள் வழிகளைப் பிரித்தனர். பிரம்மா தான் முடிவை கண்டுபிடித்ததாக பொய் சொன்னார், விஷ்ணு தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். சிவன் ஒளியின் இரண்டாவது தூணாகத் தோன்றி, பிரம்மாவுக்கு விழாக்களில் இடமில்லை என்று சபித்தார், அதே நேரத்தில் விஷ்ணு நித்தியத்தின் இறுதி வரை வணங்கப்படுவார். 

 🛕 இவ்வாறு சிவன் தீபமாகத் தோன்றிய இடங்கள். முதலில் 64 ஜோதிர்லிங்கங்கள் இருப்பதாக நம்பப்பட்டது, அவற்றில் 12 மிகவும் மங்களகரமானதாகவும் புனிதமானதாகவும் கருதப்படுகிறது. பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒவ்வொன்றும் முதன்மைக் கடவுளின் பெயரைப் பெறுகின்றன – ஒவ்வொன்றும் சிவனின் வெவ்வேறு வெளிப்பாடாகக் கருதப்படுகின்றன. இந்தத் தலங்கள் அனைத்திலும் , சிவனின் எல்லையற்ற தன்மையைக் குறிக்கும்.

🛕 பொதுவாக சோதிலிங்கத்துக்கும், பிற லிங்கங்களுக்கும் இடையே எவ்வித தோற்ற வேறுபாடுகளும் தெரிவதில்லை. எனினும், உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தவர்கள் புவியைத் துளைத்துக் கிளம்பும் தீப்பிழம்பாக சோதிலிங்கத்தைக் காண்பார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

🛕இந்தியாவில் உள்ள சோதிர்லிங்கங்கள்..
1. கேதாரீஸ்வரர், இமயமலைக்கோவில், கேதர்நாத், உத்ராஞ்சல்.

2. விஸ்வேஸ்வரர், நதிக்கரைக் கோவில் (கங்கை நதிக்கரை) வாரணாசி உத்திரபிரதேசம்

3. சோமநாதேஸ்வரர் கடற்கரைத்தலம் (அரபிக் கடற்கரை) சோமநாதம் குஜராத்

4. மகா காளேஸ்வரர் நதிக்கரைக் கோவில் (சிப்ரா நதிக்கரை), உஜ்ஜயினி மத்திய பிரதேசம்

5. ஓங்காரேஸ்வரர் நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள மலைக்கோவில் இந்தூர் மத்திய பிரதேசம்

6. திரியம்பகேஸ்வரர் நதிக்கரைக் கோவில் (கோதாவரி நதிக்கரை) நாசிக் மகாராஷ்டிரம்

7. குஸ்ருணேஸ்வரர் ஊரின் நடுவே அமைந்த தலம் ஓளரங்கபாத் மகாராஷ்டிரம்

8. நாகநாதேஸ்வரர் தாருகாவனம் காட்டுத்தலம் ஓளண்டா மகாராஷ்டிரம்

9. வைத்தியநாதேஸ்வரர் ஊரின் நடுவே அமைந்த தலம் பரளி மகாராஷ்டிரம்

10. பீமசங்கரர், பீமா நதி உற்பத்தியாகும் இடம், மலைக்கோவில், பூனா, மகாராஷ்டிரம்

11. மல்லிகார்ஜுனர், கிருஷ்ணா நதி, மலைக்கோவில் ஸ்ரீ சைலம் ஆந்திர பிரதேசம்.

12. இராமேஸ்வரர், கடற்கரைத்தலம் (வங்காள விரிகுடா) தமிழகம்.

🛕 இந்தியாவில் உள்ள மத்திய பிரதேச மாநிலத்தில் உஜ்ஜியினியில் உள்ள ஸ்ரீ மகாகாளேஸ்வரர், ஸ்ரீ ஓம்காரேஸ்வரர் மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள 5 ஜோதிர்லிங்கங்கள், அஷ்ட்ட கணபதி ஆலயங்கள், மற்றும் புராண சிறப்புவாய்ந்த சில புன்னிய தலங்களை சென்று தரிசனம் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு மீண்டும் இவ்வருடம் கிடைத்தது. 
 
🛕 இந்த தலங்களுக்குச் சென்று வந்த அனுபவக் குறிப்புகளை பகிர்ந்து கொள்கிறேன். தாங்கள் இத்தலங்களுக்கு செல்லும் போது இவை உதவலாம்.

🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼‍♂️🙏

#ஜோதிர்லிங்கதரிசனம்

#என்றும்அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஜோதிர்லிங்கம் 
#மத்தியப்பிரதேசம்