Wednesday, August 31, 2022

UTTARAKANNT TOUR 2022 - HARIDWAR 13.04.2022

UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
13.04.2022
#UTTARAKANNT_TOUR_2022
#HARIDWAR

ஹரிதுவார்.

💥வட இந்தியாவில், உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள இந்துக்களுக்கு மிக முக்கிய, புராதானமான இடம் ஹரிதுவார் என்ற புனித இடமாகும்.

💥இமயமலையிலிருந்து உற்பத்தியாகி, பாய்ந்து ஒடி வரும் கங்கை, இமயத்தின்  அடிவாரமாகிய இந்த இடத்தை அடைகிறது.

💥சிவா, விஷ்ணு, பிர்மா என்ற மூன்று கடவுளர்களால், புனிதப்படுத்தப்பட்ட இடம்.

💥ஹரனும், ஹரியும், சேர்ந்து இருப்பதால், Haridwar என்கிறார்கள்.,

💥இயற்கை ஆர்வலர்களின் சொர்க்கபுரியாகவும், இந்துமத கலாச்சாரத்தின் முக்கிய கேந்திரமாகவும் இந்நகர் இருந்து வருகிறது.

💥தேவபூமி எனப்படும் இந்த மாநிலத்தில் உள்ள, சார்தாம் என்னும் நான்கு புனித இடங்கள், (பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி) செல்வதற்கு இந்த இடமே நுழைவுப்பாதையாகக் கருதப்படுகிறது.
💥பகீரதன் தன் மூதாதையர்களுக்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்து, அவரிடமிருந்து கங்கையை இமயத்திலிருந்து, பூமியில் இந்த இடத்திற்கு கொண்டுவந்தார்.

#பயணஅனுபவக்குறிப்புகள்

🍁12.04.2022 அன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையில் உள்ள புகழ்பெற்ற பாபா குகை பார்த்துவிட்டு மாலை, ராணி கட் என்ற நகரத்தில் தங்கியிருந்து, 13.04.2022 காலையில் புறப்பட்டு , இமயமலைப்பகுதியில் உற்பத்தியாகி வரும் சோன நதி, படுகை, காடுகளில்  உள்ள புகழ்பெற்ற ஜிம்கார்பெட் தேசிய பூங்கா பாதையில் உள்ள ராம்நகர் வழியாக, மாலை 4.00 மணி அளவில், ஹரிதுவார் வந்து அடைந்தோம்.

🌺இந்த நகரத்தில் உள்ள மிக முக்கிய இடங்களில் சிலவற்றை நாங்கள் சென்று தரிசனம் செய்வதற்காக ,ஹோட்டல் திருமூர்த்தியில் தங்கினோம்.

🌺13.04.2022 மாலையில் பாய்ந்து ஓடிவரும்  கங்கையில், அருகில் உள்ள  படித்துறையில் குறித்து விட்டு,
Auto மூலம் HARI KI PAURI GHAT என்ற முக்கிய இடத்திற்கு மாலை 'ஆர்த்தி, ' பார்க்க சென்றோம்.

ஹர்-கி-பவுரி

🍀கங்கை நதிக்கரையின் இரண்டு பக்கங்களிலும், பல்வேறு படித்துறைகள் உள்ளன.

🌼முதலாம் நூற்றாண்டின், விக்கிரமாதித்தர் தன் சகோதரர் பகீரதன், தவம் இருந்த இடத்தின் நினைவாக ஹரி - கி - பாவுரி கேட் (படித்துரை) அமைத்தார் என்பது வரலாற்றின் சான்று.

💫ஹரிதுவார், பிரயாகை, உஜ்ஜயினி, நாசிக்..இவ்விடங்களில்
கும்பமேளா சமயத்தில், சூரியன், சந்திரன், குரு முதலிய  கிரகங்களின் கால சூழல், இருப்பிடப் பெயர்ச்சியின் காரணமாக, இவ்விடங்களில் பாயும் நதிகளின் நதியின் நீரோட்டத்தில், ஒரு விதமான நல்ல- அதிர்வுகள் ஏற்பட்டு அதன் விளைவாக உயிர்களுக்கு, மக்களுக்கு மிகநல்ல பலன் ஏற்பட்டு வருகிறது என்ற நம்பிக்கை நிறுபிக்கப்பட்டுள்ளது. 

🌲ஹரிதுவாரில் 2003ல் நடைபெற்ற கும்பமேளாவில் சுமார் 10 மில்லியன் மக்கள் கலந்துகொண்டார்கள் என்று பதிவு செய்துள்ளார்கள்.

🍁இந்து மக்கள் இங்கே வந்து நீராடினால், தங்கள் பாவம் நீங்கிவிடும், புன்னிய பூமியை - சொர்க்கத்தை - அடையலாம் என்று நம்புகிறார்கள்.

🌴12 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 6 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் இங்கு கும்பமேளா நடைபெறுகிறது.

🌳பிரம்மகுண்டம் என்ற, ஹர்-கி-பவுரி என்ற இடத்தில், அமிர்தத்துளி விழுந்த இடமாக கருதப்படுகிறது.
எனவே, இங்கு கும்பமேளாவில் நீராடினால், புன்னியம் என்பதால், ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.
குரு கும்ப ராசியில் பிரவேசிக்கும் போது, இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

🍁1800களில், இந்த இடம் மிகவும் புனரமைப்பு செய்யப்பட்டு மிக அழகியதாய் வளப்படுத்தப்பட்டுள்ளது.
நவராத்திரி சமயங்களில், அருகில் உள்ள அணைக்கட்டுகளால், நீர் கட்டுப்பாடு செய்தும், தீபாவளிக்கு பிறகு நீர் மீண்டும் வெளியிடப்படுகிறது.

🍀இந்தக்காலக்கட்டத்தில் கங்கா மாதா தன் தகப்பனார் வீட்டிற்கு செல்வதாகக் கருதுகிறார்கள். மிகவும்  விழாக்கோலத்துடனும் விளங்கும்.

🌺இந்த இடத்தில் தான், தினமும், மாலையில் கங்கா நதியைப் போற்றும் பிரபலமான 'கங்கா ஆர்த்தி,' நடைபெற்று வருகிறது.

🎆மாலையில் கங்கை நதியின் படித்துறைகளில் நடத்தப்படும் 'கங்கா ஆர்த்தி' மிகப் பிரசித்தம். நதிக்கு விளக்கு ஒளியால், ஆர்த்தி பூசை செய்து,  சிறுசிறு விளக்குகள் ஏற்றப்பட்டு, ஒளி விளக்குகளால் மின்னும் அந்தக் காட்சி மிகவும் அற்புதமானது.
இந்த அழகிய ரம்யமான காட்சியைக் காணவரும் பக்தர்கள் ஏராளம்.

🍁இங்கு மாலையில் கங்கா ஆர்த்தி காண பெருங்கூட்டம் வருகிறது. கங்கையின் இருகரைகளிலும் படித்துறைக்கள், இணைப்பு பாலங்கள், ஒரு மணிக்கூண்டு, மற்றும் கங்கை மாதா ஆலயம், தவிர மேலும், சில ஆலயங்களும் இருக்கின்றன.
எல்லோரும் பாய்ந்து ஓடும் கங்கையில் மூழ்கி குளித்துவிட்டு, இங்குள்ள ஆலயத்தில் வழிபாடும் செய்கிறார்கள்.

🌲இந்த படித்துறையில் கூட்டம் அலைமோதும். மாலை 5.30 மணியில் கூட்டம் அதிகம் ஆகி, அங்கங்கே தடுத்து, கரையின் ஓரத்தில் காவல் துறையினரும்,எங்கு பார்த்தாலும் மக்களை ஒழுங்குபடுத்தி கொண்டிருக்கின்றனர்.

🍀கங்கா ஆர்த்தி Committee ஒன்றும் உள்ளது. இவர்கள் இந்த நிகழ்ச்சிகளை ஆன்மீக பக்குவத்தில் ஈடுபடச்செய்யவும், மக்களை ஒழுங்குபடுத்தி, அமைதியாக உட்காரச் செய்து நிகழ்ச்சியை காண வைக்கின்றனர்.

🌿7.00 மணி அளவில் ஆர்த்தி முடிந்ததும், கரையின் அருகில் உள்ள நீண்ட பாதையில், உள்ள ஏராளமான கடைகளில், மக்கள் கூட்டம்.

🌳மலைபிரதேசத்திற்கு செல்பவர்களுக்குரிய, குளிர் உடைகள், மேலும், ஏராளமான மலைப் பொருட்கள் விற்பனைக் கடைகள் உள்ளதால், மக்கள் கூட்டம் மிக அதிகம். குளிர் உடைகள் மிக மிக மலிவு என்கிறார்கள். உணவுப் பொருட்கள் கடைகளும் ஏராளம் உண்டு. 

🌿நாங்களும், சில பொருட்கள் வாங்கிக்கொண்டு, நடந்தது Hotel வந்து அடைந்தோம்.இரவு தங்கி விட்டு 14.04.2022 அன்று, ஹரிதுவாரிலிருந்து ரிஷிகேஷ் சென்று வந்தோம்.

பயணங்கள் தொடரும்.
நன்றி,

(13.4.2022)
🙏நன்றிகளும் வணக்கங்களும்🙇🏼‍♂️

#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#UTTARAKANNT_TOUR_2022
#HARIDWAR

Thursday, August 18, 2022

UTTARAKANNT TOUR 2022 - RANKHET 12, and 13.04.2022

#UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள் 
12.04.2022
#ராணிகட் - #RANIKHET

#ராணிகட் - #RANIKHET

#ராணிகட் : இந்தியாவின் உத்திரகாண்ட் மாநிலத்தில், அல்மோரா மாவட்டத்தில்  உள்ள மிக முக்கிய நகர்.

💥அருமையான இமயமலைப் பிரதேசமாகும். சுமார் 6,132 அடி 
(1869 மீட்டர்)  உயரத்தில் உள்ளது.

💥பாரத ராணுவத்தின் இரண்டு முக்கிய பிரிவுகளான, குமான் மற்றும் நாகா ரெஜிமென்ட்கள்  இந்தப் பகுதியில் உள்ளது.

💥இந்த இடத்தில், பாரத ராணுவத்தின் முக்கிய மருத்துவ முகாம் உள்ளது. 

💥ராணிகட்  அல்மோராவிலிருந்து சுமார் 50 கி.மீ.தூரத்திலும், நைனிட்டாலிலிருந்து 60 கி.மீ.தூரத்திலும், புதுடெல்லியிலிருந்து சுமார் 270 கி.மீ.தூரத்திலும், உள்ளது. 
💥பைன், ஓக் மரங்கள் அடர்ந்துள்ள பகுதி.

💥மார்ச் முதல் அக்டோபர் வரை இந்தப் பகுதியில் பயணம் செய்யலாம். டிசம்பர் முதல் பிப்ரவரி வரை உறைபனி அதிகம்.

💥கட்யூரி அரச வம்சத்தின் மன்னர் சுதர்தேவ் தன் பாசத்திற்குரிய மனைவி ராணி பத்மனி வசித்ததால் இந்த ஊருக்கு ராணிகட் என்ற பெயர் அமைத்ததாக வரலாறு.  ஆனால், ஊரில் எந்த அரண்மனை கட்டிடங்களும் இல்லை.

💥மிக முக்கிய நகரான ராணிகட்,   முன்பு நேப்பாளியர்கள் ஆளுமையில் இருந்து, அதை  குமானியர்கள்,  காசிநாத் அதிகாரி என்ற தளபதியின் தலைமையில், வென்றார்கள்.  (காசிப்பூர் என்ற பெயர் இந்த வெற்றி தளபதியின் பெயரில் பின்னாளில் அமைக்கப்பட்டது)

💥பிறகு பிரிட்டன் ஆளுமையில் இருந்து வந்தது.  இந்திய- நேப்பாள் எல்லைக்கு முக்கிய இடம் என்பதால், கூர்க்கா படை இங்கேயே இருந்தது. 

💥பிரிட்டன் ஆளுமையில், இப்பகுதிகளில், தேயிலை தோட்டங்கள் அமைக்கப்பட்டன.

💥பிரிட்டன் அரசில் பெரும் ராணுவ அனுப்புக்களை இங்கேயே வைத்திருந்தார்கள். 

💥இந்தியாவின் கோடை காலத் தலைநகராக, சிம்லாவுக்கு பதிலாக, ராணிகட்டை வைக்க பிரிட்டானிய அரசில் கருத்துரு வைக்கப்பட்டது. 

💥ராணிகட் சுற்றுப் பகுதிகளில், காடுகள் அதிகம் இருந்தது. இதனால், இந்த காடுகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. 

💥சுதந்திர பாரதத்தில், ராணிகட் பகுதிகள் விரிவடைந்து தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரிக்கைகள், போராட்டங்கள் நடந்து வருகின்றன, அரசாங்கங்கள் மேல் நடவடிக்கைகள் எடுத்துவருகிறது என்று தெரிய வருகிறது. 

💥ஒரு கோல்ஃப் விளையாட்டரங்கமும் உள்ளது.  இது ஆசியாவில் உள்ள மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள இடமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

#பயணஅனுபவக்குறிப்புகள்

💥காலையில் பாபாஜி குகை தரிசித்து விட்டு, 12.04.2022 மாலை ராணிகட் சென்று சேர்ந்தோம். Hotel Rajdeep என்ற Hotel லில் தங்கினோம்.
இந்த ஊரின் எல்லாப் பகுதிகளிலும், பாரத ராணுவத்தினரைப் காணமுடிந்தது.
நீண்ட ஊர் ஒரு புறம் சற்று உயரமாகவும், இன்னொருபுறம் குறுகிய பாதைகள் உள்ள மலைப் பிரதேசமாகவும் காணப்பட்டது.

💚ஊரில், சில முக்கிய இடங்களில் View Point அமைத்துள்ளார்கள்.  இங்கிருந்து பார்த்தால், இமயத்தின், பனி மலைப்பகுதிகள், சிகரங்கள், மிக ரம்ய காட்சிகளைக் காணலாம்.

❤️ஊரின் முக்கிய இடங்கள் எல்லாமே பாரத ராணுவம் சம்பந்தப்பட்ட இடங்கள் தான் அதிகம் இருக்கிறது. Trainning School, Musume முதலிய பல இடங்களும், சில ஆலயங்கள் உட்பட எல்லாம் ராணுவக் கட்டுப்பாட்டிலும், பராமரிப்பிலும் உள்ளன.

🛕நாங்கள் இங்கிருந்து 500 மீ.தூரத்தில், ஊருக்கு நடுவில், முக்கிய இடத்தில் உள்ள மன்மகேஸ்வரர் ஆலயம் சென்றோம். அங்கிருந்து ஒரு வாடகைக் கார் பிடித்து ஜூலா தேவி ஆலயம் தரிசித்துவந்தோம்.  

நாங்கள் சென்றுவந்த இடங்கள்..

மன் காமேஸ்வரர் ஆலயம்..

🛕குமான் ராணுவ ரெஜிமெண்ட் பராமரிப்பில், மன்காமேஷ்வர் என்று ஒரு ஆலயம் கட்டி, பராமரித்து வருகிறது.

🛕இது, ராணிகட் நகரின் முக்கியப்பகுதியில் பாதுகாப்புடன் உள்ளது. இந்தக் கோவில் 1978  கண்டோன்மன்ட்டால் கட்டப்பட்டது.  இதன் எதிர்புறத்தில் ஒரு குருதுவாரா என்னும் சீக்கியர் மத வழிபாட்டுக் கூடமும் அமைத்துள்ளனர். 

🛕இங்கு, விநாயகர், லெட்சுமி நாரயணர், துர்காதேவி, அழகிய சிறிய சிவலிங்கம், தனித்தனியாக உள்ளது. ஆலயம் முழுவதும் தூய்மையாகவும், அழகாகவும் உள்ளது. ராணுவத்தினரால் பராமரிக்கப்படுகிறது. இங்குள்ளோர் வந்து பிரார்த்தனை செய்ய குருக்கள் என்ற பண்டாக்கள் இவ்வாலயத்தில் உள்ளனர்.

ஜூலா தேவி ஆலயம் :

🛕மிகவும் புகழ் பெற்ற ஜூலா தேவி ஆலயம் ராணிகட் நகரத்திலிருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது.  இங்கு வசித்து வந்த கிராம மக்களின் கால்நடைகளையும், வாழ்வாதராங்களையும்,  அருகில் உள்ள அடர்ந்த காடுகளிலிருந்த கொடிய விலங்குகள் அழித்து வந்ததால், மக்கள் தங்களைப் பாதுகாக்க வேண்டி, துர்க்கா மாதாவை வேண்டினார்கள்.  அன்னையும்,
ஒரு நாள் இடையர் ஒருவர் கனவில் வந்து தன்னுடைய சிலை இருக்கும் இடத்தை அறிவித்தார்.  இடையர், கிராம மக்கள் அனைவரையும் அழைத்து சிலை இருக்கும் இடத்தை கண்டு எடுத்து வைத்து அங்கேயே வழிபாடுகள் செய்ய ஆரம்பத்தினர்.  

🛕அந்த இடத்தில், புதிய ஆலயம்  கட்டி வழிபாடுகளை செய்து வருகின்றனர். 
மேலும், தங்களைக் காத்து வரும் கடவுளாக அன்னை துர்க்காதேவியைப் போற்றி வணங்குகிறார்கள். 
தங்களின் கோரிக்கைகளை இவ்வாலத்திற்கு வந்து மணிகட்டி வழிபாடு செய்து, பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

🛕அருகில் உள்ள ராமர் ஆலயத்தில் மாணவர்களும் இளைஞர்களும் வேதபாடம் பயின்று வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. 

13.04.2022  காலையில்
நாங்கள் தங்கியிருந்து ஹோட்டலுக்கு வெகு அருகில் இருந்த மற்றொரு சிவன் ஆலயம் சென்று வழிபட்டு வந்தோம்.

சிவன் ஆலயம் - ராணிகட்

இந்த ஆலயம் மிக அழகிய அமைப்பில் வடிவமைப்பில் இருக்கிறது. ஆலயத்தின் மையத்தில், சற்று உயரமான கருவரை மன்டபத்தின் உள்ளே, அழகிய 
சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
கருவறை முன்புறம். சிறிய அழகிய நந்தி..

மேலும், இரண்டு தனித்தனி கருவறைகளில் லெட்சுமிநாராயணர் துர்க்கா தேவி, ஹனுமான் உள்ளார்கள்.

ராணுவ கண்காட்சிக் கூடம்:

💒பாரத ராணுவம், ஒரு கண்காட்சிக்கூடம் அமைந்துள்ளனர்.

⚔️பாரத ராணுவத்தினரின் அருமையான கண்காட்சிக் கூடம் என்கிறார்கள். அதில் ராணுவத்தில் பயன்படும் ஆயுதங்கள் மற்ற பொருட்களையும் வைத்துள்ளர்.  மேலும், இதுவரை,ராணுவப் போரில் பங்குகொண்ட தியாகிகளைப் போற்றும் விதமாக அவர்களை நினைவுக் கூறும் விதமாக, அவர்கள் செய்த சாதனைகளை விளக்கி வைத்து உள்ளர்கள். அனைவரும் காண வேண்டிய இடம். 

எங்களுக்கு போதிய கால அவகாசம் இல்லாமல், காலதாமதமாக சென்றதால். இதைப் பார்க்கும் வாய்ப்பு இல்லாமல் போயிற்று.

13.04.2022 புதன் காலை உணவு தயார் செய்துகொண்டு, காலையில் ராணிகட்டை விட்டுப்புறப்பட்டு, புகழ்பெற்ற ஜிம்கார்பெட் தேசிய பூங்கா, மற்றும் ராம்நகர் வழியாக, ஹரிதுவார்  மாலை  வந்துசேர்ந்தோம்.

பயணங்கள் தொடரும்...

நன்றி,

(12.4.2022)
🙏நன்றிகளும் வணக்கங்களும்🙇🏼‍♂️

#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#UTTARAKANNT_TOUR_2022
#Ranikhet

Tuesday, August 16, 2022

UTTARAKANNT_TOUR_2022#பயண அனுபவக்குறிப்புகள் மகாவதார் _ பாபாஜி குகை 12.04.2022

#uttarakannt_tour_2022 
#பயணஅனுபவக்குறிப்புகள் 
#மகாவதார்பாபாஜி_குகை
12.04.2022
பகுதி - 1 
#மகாஅவதார்பாபாஜி:

'திரு.ரஜினிகாந்த் அவர்கள் நடித்த “பாபா” திரைப்படத்தின் மூலம் பெரும்பாலானோர்களால் அறிந்து கொள்ளப்பட்டவர் “மஹாவதார் ஸ்ரீ பாபா”. 

தன் தவத்தால் அற்புத ஆற்றல்களைப் பெற்ற இம்மகான் தன் ஊணுடலைத் துறந்து, “ஒளிஉடம்பைப்” பெற்று “2000” ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருவதாக இவரை வழிபடுபவர்கள் கூறுகிறார்கள்.

இம் மகா அவதார் பாபா அவர்கள் தன்னை உண்மையாக வழிபடுபவர்கள் சிலருக்கு கனவின் மூலம் காட்சி தருவதாக கூறப்படுகிறது. 

வேறு சில பக்தர்களுக்கோ அவர்களின் இல்லத்திற்கே பாபா அவர்கள் மிகப் பிரகாசமான “ஒளி உடம்புடன்” வருவதாகவும், அவர் வந்ததற்கு அடையாளமாக மிகச் சிறந்த நறுமணம் இல்லம் முழுக்க வீசுவதாகவும் அவ்வனுபவத்தைப் பெற்றவர்கள் மெய்சிலிர்க்கின்றனர். 

தன் மீது அன்புடன் இருக்கும் பக்தர்களுக்குக்காக மகான்கள் எத்தகைய அற்புதத்தையும்  நிகழ்த்துவார்கள் என்ற தகவலுக்கு வலுசேர்க்கிறது இந்த நிகழ்வு.

#மகாவதார்பாபாஜி வரலாறு :

இவரின் வரலாறு பற்றி தெளிவான வரையறைகள் ஏதுமில்லை. 

இவரைப்பற்றிய நூல்களின்படி இவரின் இயற்பெயர் நாகராஜ். 

மகாவதார பாபா என்ற பெயர் இவரது சீடரான லாகிரி மகரிஷி என்றவரால் சூட்டப்பட்டது.

மகா அவதார் பாபாஜி - பூர்வீகம்

நாகராஜ் என்கிற பாபாஜி
பாபாஜியின் சிறப்புகளை அறிந்து தேடத்தொடங்கியவர்களுக்கு பதிலாகக் கிடைத்தது அவரின் பூர்விகம்.

பாபாஜி தமிழகத்தின் ஒரு கடலோர கிராமத்தில் - பரங்கிப்பேட்டையில் - பிறந்தார். கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திர நாளில் அவரின் ஜனனம் நிகழ்ந்தது. பெற்றோர் அவருக்கு நாகராஜ் என்று பெயர் சூட்டினர். நாகராஜ் சிறுவயது முதலே இறைச் சிந்தனையோடு வாழ்ந்துவந்தார். ஒரு கட்டத்தில் சாதுக்களின் கூட்டத்தோடு சேர்ந்துகொண்டு யோகம் பயில ஆரம்பித்தார்.

தமிழக சித்தர் மரபின் ஆதி குருவான அகஸ்தியரை தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அவரை தரிசிக்க இலங்கை கதிர்காமத்துக்குச் சென்று தவம் செய்தார். அங்கே அவருக்கு அகஸ்தியரின் சீடரான போகநாதரின் தரிசனம் கிடைத்தது.

போகரிடம் யோகம் பயின்று அங்கேயே தவம் செய்து கதிர்காம முருகனைக் கண்ணாறக் கண்டார் பாபா என்கிறார்கள் ஞானிகள். 

பின்பு அகஸ்தியரை தரிசனம் செய்யும் தன் ஆவலை போகரிடம் தெரிவிக்க அவர் பொதிகை மலைக்குச் சென்று தவம் செய்யச் சொன்னார். அவ்வாறே பாபாஜியும் செய்ய அகத்தியர் மனம் மகிழ்ந்து பாபாஜிக்குக் காட்சி கொடுத்து க்ரியாயோகாவினை உபதேசம் செய்தார். 

அதன்பின் பாபாஜி இமயமலை சென்று கடும் யோகப் பயிற்சிகள் செய்து சிரஞ்சிவி ஆகும் வல்லமை பெற்றார். தாம் கற்ற யோகம் இந்த உலக நன்மைக்குப் பயன்பட வேண்டும் என்று காலம்தோறும் ஞானிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அதைக் கற்றுக்கொடுத்து வருகிறார் பாபாஜி என்கின்றனர்; க்ரியா யோகா பயிலும் யோகிகள். (Source: Wikipedia)

இந்த பாபா போகர் என்ற சித்தரின் சீடர் என்று கூறப்படுகிறது. இவரே கிருஷ்ணர் என்னும் அவதாரம் எடுத்தாக சிலரால் கூறப்படுகிறது.

மகா அவதார் பாபாஜி லாஹிரி மஹாசாயருக்கு க்ரியா யோகம் கற்றுக்கொடுத்தார். லாஹிரி மகராஜ் பல்வேறு மகான்களுக்கு அதைப் பயிற்றுவித்தார். 

அவர்களில் ஒருவர் யுக்தேஸ்வர். ஸ்ரீ யுக்தேஸ்வரின் சீடர்தான் பரமஹம்ஸ யோகானந்தர்.

 யுக்தேஸ்வரின் மூலம் மகாஅவதார் பாபாஜி முதலிய க்ரியா யோகா குருமார்கள் பற்றி அறிந்து கொள்கிறார் பரமஹம்ஸர். 

அந்த நூலில் அவர் பாபாஜியைப் பற்றிக்குறிப்பிடும்போது, “பாபாஜி கிறிஸ்துவுடன் தொடர்புள்ளவர். அவர்களிருவரும் சேர்ந்து மீட்பளிக்கும் எண்ண அதிர்வுகளை அனுப்பிய வண்ணம் உள்ளனர்” என்று குறிப்பிடுகிறார்.  

#க்ரியாயோகா

பாபாஜி உபதேசித்த க்ரியா யோகாவின் 5 கிளைகள்  க்ரியா யோகம் என்பது முழு விழிப்புணர்வோடு செய்யப்படும் செயல் என்கிறார்கள். 

இது நம்மை அறியும் வழி. ஆசனங்கள், பிராணாயாமம், தியானம், மற்றும் மந்திரம் என மொத்தம் 144 வகைப் பயிற்சியின் கலவையே பாபாஜியின் க்ரியா யோகம். 

இந்தப் பயிற்சிகளை முழு விழிப்புணர்வுடன் செய்யும்போது அனைத்தும் ஒருங்கிணைக்கப் படுகின்றன. 

முறையான இந்தப் பயிற்சியின் மூலம் மனிதர்கள் விழிப்படைந்த அதாவது தம்மை உணர்ந்த விழிப்படைந்த மனிதர்களாக மாறிவிடுவர். 

க்ரியா யோகாவின் 5 விதமான பயிற்சிகளை பாபாஜி தன் சீடர்களுக்கு உபதேசித்தார். இவை உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை.

இந்த பயிற்சிகளை க்ரியா ஹத யோகம், க்ரியா குண்டலினி பிராணாயாமம், க்ரியா தியான யோகம், க்ரியா மந்திர யோகம், க்ரியா பக்தி யோகம் என 5 கிளைகளாகப் பிரித்துப் போதிக்கிறார்கள் யோகாசிரியர்கள்.

குருவின் மகாமந்திரம்:

க்ரியாபாபாஜியின் பக்தர்கள், ‘ஓம் க்ரியா பாபாஜி நம ஔம்’ என்னும் அவரின் மகாமந்திரத்தைச் சொல்லி தியானிக்கிறார்கள்.

 இதில் ஓம் - பிரணவம். க்ரியா என்றால் முழு விழிப்புணர்வோடு செய்யப்படும் செயல். பாபாஜி என்பது குருவின் திருநாமம், நம என்றால் வணங்குதல். ஔம் என்பது நம் அகத்தினுள் ஒலித்ததிடும் பிரணவ ஒலி.

இம்மந்திரத்தைத் தொடர்ந்து ஜபிப்பதன் மூலம் நமது சஹஸ்ர சக்கரத்தில் அமைந்துள்ள பேரறிவாற்றலைத் தொடர்பு கொள்ளலாம். 

ஆற்றல் வாய்ந்த இம்மந்திரத்தினை குரு மூலம் பெரும் சீடன் அந்த சக்தியைப் பெறுகிறான்.

 - (Source: விகடன் கட்டுரை 30.11.20) &
(Source: Wikipedia)

#பாபாஜி பெருமைகள்:

மகாவதார பாபாஜி என்ற பெயரை சூட்டியவர், யோகிராஜ் லாஹிரி மஹாசாய என்ற மிகப் பெரிய யோகியாவார்.  இவரும், இவரின், சீடர்கள், ஸ்ரீ யுத்தேஸ்வர் கிரி, பாபா நாசிப் சிங்ஜி, ராம்கோபால் முசும்தார், சுவாமி கபலனந்தா, சுவாமி பிரபானந்தா கிரி இவர்கள், 1861 முதல் 1935 ஆண்டுகளில் பாபாஜியை தரிசனம் செய்துள்ளார்கள் என்று நம்புகிறார்கள்.

1946 ல் பரமஹன்ச யோகனந்தா வெளியிட்ட சுயசரிதை நூலில் யோகி / பாபாஜி ஐ சந்தித்த விபரம் உள்ளது.

ஸ்ரீ யுக்தேஸ்வரர் 1894 ல் வெளியிட்ட  THE HOLY SCIENCE என்ற நூலிலும், காணப்படுகிறது. 

சிவபெருமானின் அவதாரம் பாபாஜி என்றும் அவர் பல்வேறு இடங்களில், பல்வேறு வடிவங்களில் காட்சி தந்திருப்பதாக,  யோகியின் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இதை பல்வேறு யோகிகளின் சுயசரிதைகளில் காணலாம்.

 சுமார் 100 வருடங்களாக, மகா பாபாஜி, இமாலயத்தின் பல பகுதிகளில், பல்வேறு சீடர்களுக்கும், மற்றவர்களுக்கும், காட்சியளித்துள்ளார்  என்பதை 
ஸ்ரீ யோகானந்தரின், சுயசரிதையில், குறிப்பிட்டுள்ளார்கள்.

யோகி லஹரி மகாசயா அவர்களுக்கு, 1861ல் கிரியா யோக பயிற்சியை இந்த குகைகளில், இருந்து தான், கற்றுக் கொண்டனர் என்று என்று பரமஹன்ச யோகானந்தா தமது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளர்.

#பாபாஜி_குகை :

உலகத்தின் மிக முக்கிய யோகிகளில், யோகானந்தா யோகி அவர்கள்,  தன்  சுயசரிதையில், பாபாஜி பற்றிக் குறிப்பிடுகையில்,  மகா அவதார் பாபாஜி அவர்கள்,  லாஹிரி மஹாசாயருக்கு க்ரியா யோகம் கற்றுக்கொடுத்தார். 

பாபாஜியிடமிருந்து நேரடியாக கிரியா யோக முறையை 1861ல் இமாலயத்தில் உள்ள இந்த இடத்தில் தான் பெற்றதாக தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார் .

மகா அவதார் பாபாஜி இமாலய பகுதிகளில் என்றும் ஜீவித்து வருகிறார் என்றும்,  ஒரு சிலரே அவரை உணரமுடிகிறது என்றும் கூறுகிறார்; பரமஹம்ச யோகானந்தர்.

பாபாஜியின் குகை என்று அடையாளம் காணப்பட்ட இந்த இடத்திற்கு  உலகின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இப்போது இந்த இடம், உலகின் மிக முக்கிய ஆன்மீக இடமாக மாறிக் கொண்டு உள்ளது. 

நன்றி 🙏
- (விகடன் கட்டுரை 30.11.20)
(Source: Wikipedia)

இந்த இடம் எங்குள்ளது?

இந்திய இமயமலைப்பகுதியில், உத்திர காண்ட் மாநிலத்தில், பாண்டுகோலி (#PANDUKHOLI) மலைப்பகுதியில் குக்குச்சினா Kukuchina) என்ற இடத்தில் உள்ளது. 

இது #DWARHHAT என்ற நகருக்கு 25 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

மகாவதார் பாபாஜி குகை உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள ராணிகட் (RANIKHET) என்ற நகரிலிருந்து 55 கி.மீ. தூரத்தில் பாபாஜி குகை அமைந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில், த்வரஹட் (#DWARAHAT) என்ற நகரின் அருகில்,  பத்ரிநாத் முதலிய இடங்கள்  உட்பட சுமார் 1000 -2000 நூற்றாண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட நூற்றுக் கணக்கான ஆலயங்கள் அமைந்துள்ளன. 

#ராணிஹட்  (#Ranikhet )  சென்று  த்வரஹட் வழியாக, குகுசினா என்ற இடம் 20 கி.மீ. அங்கிருந்து மலைப்பாதையில் 3 - 4 கி.மீ சென்று பாபாஜி குகையை அடையலாம்.

மேலும்,  உயரமான மலைப் பகுதியான, துனகிரி என்ற புராதான அம்பாள் தலம் பாபாஜி ஆலயம் செல்லும் பாதையில் உள்ளது. மலைப்பதையில் வரும் ஒரு ஹனுமான் ஆலயம் அருகில் பாதை பிரியும். 

இமயமலையில் உள்ள இந்த குகைக்குச் செல்ல பாதை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


#UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#மகாவதார் _ பாபாஜி
12.04.2022

மகாவதார் பாபாஜி குகை தரிசனம்
பகுதி - 2.
#பயணஅனுபவக்குறிப்புகள் 
12.04.2022:

மலை எங்கும் இமயக் காட்சிகள், இயற்கை காட்சிகளில் மனதை பறிகொடுக்கலாம். பனிமலையின் பரவசத்தை உணரலாம்.

குகைக்குள் சென்று தியானம் செய்ய விரும்புகிறார்கள். 

மகாவதார பாபாஜி தரிசனம் தந்த, இந்த குகைப்பகுதியை மிகுந்த மரியாதையும், புனிதமான இடமாகக் கருதி வழிபாடு செய்கிறார்கள்.

வாகனப் போக்குவரத்து, குகுசினா அடைந்ததும், நின்று விடுகிறது.

இங்கிருந்து நடந்து செல்லலாம். சுமார் 3 - 4 கி.மீ தூரம் வரை. 

அங்கிருந்து சில கி.மீ.தூரத்திற்கு மன், கல்பாதையாக உள்ளது. 
இந்த 3-4 கிமீ தூரத்திற்கு நடக்க முடியாதவர்கள்செல்ல சிறு ரக மோட்டார் கார் வண்டிகள் வசதிகளும் உள்ளன.

அதற்கு பிறகு மலை ஏற்றம் 1 கி.மீ. பின் மலைப்பாதையில், 3 கி.மீ சென்றால் 
ஆசிரம கட்டிடம் (SAMIRTI BAWAN) உள்ளது.

இது யோகா சத்சங்க சொசைட்டியால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 
இந்தக் கட்டிடத்திற்கு சற்று மேலே சுமார் 200 மீட்டர் தூரத்தில் பாபாஜி குகை அமைந்துள்ளது.

பாபாஜி குகை ஒரு பெரிய மலைக்குன்றின் ஒரு பக்கத்தில், சுமார் 10 அடி உயரத்தில் சில படிக்கட்டுக்களுடன் அமைந்துள்ளது. 

நுழைவுப்பாதையில் 4x 3க்கு இரும்புக் கதவு போடப்பட்டுள்ளது. உட்புறம்
சுமார் 6x10 அடி அளவில் இயற்கையான அமைப்பில் உள்ளது. பாறைகளால் உருவாகி இருக்கும் இயற்கையான குகை.

குகையின் உட்புறத்தில் எந்த சிலை அல்லது படம் எதுவும் கிடையாது. 

உட்புறத்தில் தரையின் மீது சில விரிப்புகள் போடப்பட்டுள்ளது. அதில், அமர்ந்து தியானம் செய்கிறார்கள்.

நாங்கள் சென்றபோது தனியாகவே வந்த ஒருவர் பாபாவின் சிறிய படம் மற்றும் சில பழங்கள் அதன் முன் வைத்து அமைதியான முறையில் வழிபட்டு தியானம் செய்தார்.

பெண்மனி ஒருவர் டோலியில் வந்தவர், அவரும் உள்ளே சென்று வழிபட்டு சென்றர்.

நுழைவுப்படி, உட்புறங்கள், சீரமைக்கப்பட்டு, பராமரிப்பில் உள்ளது.

இரும்புக் கதவு திறந்து வைத்திருந்ததால் நாங்கள் உட்புறம் சென்று தியான குகையில் அமர்ந்து வழிபட்டோம். சிலர் தியானம் செய்து கொண்டிருந்தார்கள்.

பகல் பொழுது, நல்ல வெய்யில் சூழல் இருந்தது. வெளிச்சம் காற்றோட்டம், இருந்தது. மலைக்குகையில் அமைதியாகவும், அற்புத இடமாகவும் இருக்கிறது.

சுற்றிலும் மரங்கள், நல்ல நிழல்.

மலைக் குகைப் பகுதியை சுற்றிவர சிறிய பாதை உள்ளது. மரங்கள் அடர்ந்து காட்டு மலைப்பாதையாகவும், உள்ளது. உள்ளூர் இளைஞர்கள் மட்டும் சிலர் குகை அமைந்துள்ள மலைக்குன்றை சுற்றி வலம் வந்தார்கள்.
மலை அடிவாரத்திலிருந்து மலைக்குகைக்கு வந்த ஒரு பெண்மணி, அவர்கள் டோலி (நாற்காலியில் உட்கார வைத்து அதை 4 பேர் மூலம் தூக்கிக் கொண்டு செல்லும் முறை)
மூலம் வந்து தரிசனம் பெற்று திரும்பி சென்றார்கள். 
வேறு குதிரை முதலிய, மலையேற்ற வசதிகள் கிடையாது.
நடந்து தான் செல்லமுடியும்.
குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே குகை உட்பகுதி திறந்திருக்கும். 
யோகா Trust மூலம் பராமரிப்பில் உள்ளது.

நாங்கள் சிலர் மலைக்குகை தரிசனம் முடிந்து சற்றுக் கீழே உள்ள ஆசிரமப்பகுதிக்கு வந்துசேர்ந்தோம். 

எங்கள் சுற்றுலா Admin. அன்பு திரு பாலசுப்ரமணியன் அய்யா அவர்கள் வந்து, மலைக்குகையின் இன்னொருபுறத்தில் உள்ள குகைப் பகுதியை பார்த்தீர்களா என்றவுடன், மீண்டும் மலை சென்று, அந்த குகையும் தரிசித்தோம்.

அது சுமார் 6 அடி உயரத்தில், எந்த பாதையும், படிகளும் இல்லாமல் அமைந்துள்ளது, அதன் மேல் ஏறி உள்ளே செல்ல முயற்சி செய்தோம்.

மலைக்குகையின் இன்னொரு புறத்தில், மேலும் ஒரு குகை உள்ளது. ஒரு ஆள் உள்ளே முயன்று சென்று விடலாம். உட்புறம் சற்று அகலமாகவும், உயரமாகவும் இருந்தாலும், ஆழமான பகுதியாகவும் உள்ளே நுழைவது மிகவும் ஆபத்தானது. இதனால், இதன் வழியை முழுவதுமாக அங்கு சரிந்துள்ள மலைப்பகுதி பாறைகளை வைத்து நன்றாக அடைத்துவிட்டார்கள். யாரும் உள்ளே சென்றுவிட முடியாது. மிக ஆபத்தான பகுதி, என்பதால், அதன் வாசலில் சற்று அமர்ந்து இருந்து விட்டு வெளியேறினோம்.

குகைக்கு நாங்கள் அனைவரும் நடந்துவந்து சென்றோம்.
ஒரு சிலர், முடியாதவர்கள் வந்து செல்ல டோலி பயன்படுத்தி வருகிறார்கள்.

தனி நபர்கள் தனியாக வந்தும், குகையில் அமர்ந்து தியானம் செய்து செல்கிறார்கள்.

ஆந்திராவில் இருந்து சிலர் குழுவாக சுற்றுலா பயணிகள், இந்த குகைக்கு வருவதைப் பார்த்தோம்.

குகை தரிசனங்கள் முடிந்ததும், மலைப் பாதையில் மீண்டும் இறங்கி நடந்துவந்தோம்.

இந்த மலைப்பகுதியில் எந்தவித கடைகள், வேறு கட்டிடங்கள் கிடையாது.

எல்லாவற்றிற்கும், நாம் துவாராகண்ட் தான் செல்ல முடியும்.  

பல இடங்கள், நல்ல மலைப்பாதைகள் இருக்கின்றன. பாதையில் ஒரு இடத்தில் சுமார் 500 மீ.தூரம் செங்குத்தாக இருந்தாலும், சரிவாக பாதை அமைத்துள்ளதால், நடந்து வந்துவிடலாம்.

ஒரு இடத்தில் சிறிய அருவிப் பாதை உள்ளது. நாங்கள் சென்றபோது, நீர் இல்லாததால், அருவிப் பக்கம் செல்லவில்லை.

பாபாஜி மலையின் எதிர்புறத்தில், தூரத்தில், துனகிரி என்ற பிரசித்திப் பெற்ற மலைக் கோவில் உள்ள மலை தெரிகிறது. 

மலைப்பாதை முடிவில் அல்லது ஆரம்பத்தில், ஒரு வீட்டில் மூலிகை தேனீர் கடை உள்ளது. வயதான அம்மா ஒருவர் , தேனீர் போட்டுக் கொடுத்தார். 

திரு ரஜினிகாந் உதவியதாக கூறுகிறார்கள்...
அவர் படம் போட்ட கொடி ஒன்று அந்த இடத்தில் பறந்து கொண்டிருந்தது.

இந்த இடம் மலை அடிவாரம் என்பதால், எல்லோரும் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு மலை இறங்கினோம்.

மேலும் 2 கி.மீ. மலைப்பாதையில் நடந்துவந்து, குக்குச்சினா என்ற இடத்தை வந்து அடைந்தோம்.

இந்த இடத்தில்தான், அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுவிடுகின்றன.
நாங்கள் வரும் போதே, மலைப்பாதையில் ஓரிடத்தில் நல்ல நீர் கிடைத்ததால்,
Admin. அவர்கள், நண்பர் திரு மணி அவர்களை உணவுக்கு ஏற்பாடு செய்ய வழி செய்திருந்ததால், அவ்விடம் வந்து மதிய உணவை முடித்துக் கொண்டு அன்று மாலை, ராணிகட் வந்து சேர்ந்தோம்.

பொதுவாக, இப்படிப்பட்ட பரபரப்பு இல்லாத அமைதியான, இயற்கை சூழல் நிறைந்த இடங்களைத் தேர்வு செய்து சென்றால் /செல்ல வேண்டுமானால், 
முதலில்,
நல்ல ஆரோக்கியமான உடல்பலம், 
நல்ல கால சூழல்,
நல்ல சிந்தனைகள் நிறைந்த மனம்.
சூழல் குறித்து எவ்விதத்திலும் சலனம் இன்றி, எதையும் ரசிக்கக்கூடிய பக்குவம் உள்ள, மனவலிமை,
இவைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
அப்போதுதான் இவ்விடங்களில் உள்ள உண்மையான, இயற்கை நமக்குத் தரும் அளவற்ற பொக்கிஷ மன உணர்வுகள் அல்லது அங்கு கிடைக்கும் Vibrations அவற்றை நுகரக்கூடிய தூய்மையான எண்ண உணர்வுகளைப் பெற முடியும்.

மனம், உடல் பக்குவம் பெறுவது நிச்சயம். 

ஆன்மீகத்தின் அடிப்படையே இதுதான்.

 உடல், மனம், அனுபவத்தால், பக்குவம் பெற இது ஒரு நல்ல முயற்சி.

முயன்று பாருங்களேன்....

பயணங்கள் தொடரும்...
12.4.2022
நன்றி,

🙏தகவல்கள் உதவி :
 Wikepedia மற்றும் பல வலைதளங்கள்
🙏நன்றிகளும் வணக்கங்களும்🙇🏼‍♂️

#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

#UTTARAKANNT_TOUR_2022
#பயண அனுபவக் குறிப்புகள்
#மகாவதார் _ பாபாஜி
12.04.2022

முதல் பகுதி:
இரண்டாவது பகுதி :

Tuesday, August 9, 2022

#அமர்நாத்யாத்ரா 20225-07-2022 to 10-07-2022 #KHEER_BHAWANI

10.
அமர்நாத்பனிலிங்கதரிசனம் 
#காஷ்மீர்
#அமர்நாத்யாத்ரா 2022
5-07-2022 to 10-07-2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#KHEER_BHAWANI

அருள்தரும் #கீர்_பவானி அம்மன் ஆலயம்

9.07.2022 சனிக்கிழமை

காலையில் 6 மணிக்கு போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட பிறகு, Nilgrith லிருந்து புறப்பட்டு, வழியில் உள்ள DABA வில் காலை உணவு எடுத்துக்கொண்டு,
SRINAGAR அருகில் உள்ள #KHEER_BHAVANI என்ற புகழ்பெற்ற புராதானமான, சக்தி ஆலயம் சென்று அம்மனை தரிசித்தோம்.

#கீர்பவானி (#KheerBhawani) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள இந்து கோவில் ஆகும்.

இக்கோவில் #கீர்_பவானி எனும் இந்துக் கடவுளுக்கான கோவிலாகும்.

இது Srinagar நகருக்கு வட கிழக்கே 25 கி.மீ தொலைவில் குல்முல் என்ற பகுதியில் அமைந்துள்ளது.

 Kashmir இந்துகளின் வழிபாட்டிடம் ஆகும். கீர் எனும் சொல்லுக்கு கூழ் என்று பொருள்.

இக்கோவிலில் கடவுளுக்கு அரிசிக் கூழ் படைக்கப்படுவதால் கீர் எனும் சொல் கோவிலின் பெயருடன் இணைந்துகொண்டது. 

பால் ஊற்றியும் வழிபாடு செய்கிறார்கள்.

இந்துக்களின் நம்பிக்கையின்படி இக்கோவிலின் கடவுளுக்கு மஹாரக்ஞ தேவி, ரங்ஞ தேவி, ராஞ்சி, பகவதி என மேலும் பல பெயர்கள் உண்டு.

ராஜதாரங்கனியாக இவரை சில நூல்களில் குறிப்பிடுகிறார்கள்.

இலங்கையின் மன்னன் ரவணன், இந்த தேவியை கடும் தவம் செய்து வணங்கியதால், இந்த தேவி, ராவணனுக்கு முன் தோன்றி அனுகிரகம் செய்தார்.

இந்த தேவியின் உருவத்தை இலங்கையில் வடிவமைத்து துர்காவாக (ஷியாமா தேவியாக) வழிபடலானார்.

ஆனாலும், ராவணனின் கொடுங்குனத்தினால், தேவி, ஹனுமன் உதவியால், துல்முல் (இவ்விடம்) வந்தடைந்தர். அவ்வாறு வந்த இரவை ரக்ஞா இரவு என்று விழா அமைத்துள்ளனர். 

ராவணன் துர்க்காவாக (ஷியாமாக) இவரை வழிபட்டாலும், வைஷ்ணவியின் ஒரு அங்கமாகவே திரிபுரசுந்தரியாக இவரை வழிபட வேண்டும் என்பது புராணம். 

இவர் நமக்கு அன்பும் கருணையும் தரக்கூடியவர்.

மேலும்,

காஷ்மீர் மக்கள் இவரை குலதெய்வமாக வழிபடுவதால், உலகின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து வழிபடுகிறார்கள்.

ஒரு சிறிய குளத்தினுள், இந்த தெய்வ சன்னதி மண்டபம் உள்ளது. இக்குளம் நீள் சதுர வடிவத்தில் இருப்பினும் 7 கோணங்களில் அமைந்துள்ளது.

 இவ்வாலயத்தில் உள்ள குளம் சிவப்பு, ஆரஞ்சு, பிங், பச்சை, நீலம், வெள்ளை என நிறத்தில் மாறும். ஆனால், கருமை யாக மாறும் பட்சத்தில், தூர் சகுனம் ஏற்படும் என்கிறார்கள். மற்ற வண்ணங்கள் இருக்கும்போது, நிகழ்வுகள் ஒன்றும் இல்லை. 

1886 ல் வால்டர் லாரன்ஸ் என்ற ஆங்கில அதிகாரியின் குறிப்பில், இந்த குளநீர் Violet கலர் இருந்தது என்று உள்ளது. 

மகாராஜா பிரதாப் சிங், மற்றும் ஹரிசிங் இக்கோவிலை 1910 ம் ஆண்டுகளில், புனரமைத்துக் கட்டியுள்ளனர்.

கீர் பவானி மேளா / விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. பக்தர்கள் கூட்டம் மிகப்பெரிய அளவில் வந்து தரிசனம் செய்வார்கள். ஜேஷ்டா அஷ்டமியின் போது இவ்விழா நடைபெறுகிறது.

1990 ல் தீவிரவாதிகளால், மிரட்டல் விடப்பட்டபோது, பாரத ராணுவ ஜவன்களால் எதிர்கொள்ளப்பட்டு, துணை நின்றதும் குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரில் இந்துக்கள், துராக்கிரமாக, விரட்டப்பட்டபோதும், இவ்வாலயம் பாதுகாக்கப்பட்டு, பூசைகள் செய்து, தொடர்ந்து இந்துகளின், வழிபாட்டில் இருக்கும் முக்கிய ஆயங்களில் இதுவும் ஒன்று.

ஒரு முறை, துல்முலா பகுதி முழுவதும் சேரும் மனலுமாய் மூழ்கி உறைந்தபோது, இவ்வாலயம், குளம் எங்குள்ளது என்பதை தேவி, காஷ்மீர் யோகி கிருஷ்ணா பண்டிட் என்பர் கனவில் தோன்றி, சரியான இடத்தை காட்டினார் என்பதாக ப்ரகு சமிக்தா என்ற நூலில் உள்ளது.

சுவாமி விவேகானந்தர் இவ்வாலயத்திற்கு வந்து தரிசனம் செய்து தங்கியிருந்தார், அவரிடம்,
தாம் சிதலமடைந்த இடத்தில் இருப்பதாகவும், 'இதை நான் விரும்பியவாறு எழு அடுக்கு ஆலயமாக மாற்ற வேண்டும் என்றும், நான் என்ன செய்ய வேண்டும், என்னை நான் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமா? அல்லது நான் தங்களை பாதுகாக்க வேண்டுமா? " என்று தேவி கேட்டதாக குறிப்பிடுகிறார்.

சுவாமி ராம தீர்த்தர் இவ்வாலயம் வந்து வழிபட்டதாக குறிப்புள்ளது.

குழந்தை வரம் அருளும் தாய்:

காஷ்மீரில் வாழ்ந்த பண்டிட் பிரசாத் என்பவர், இந்த தேவியை வழிபட்டு குழந்தை செல்வம் பெற்றார் என்றும். தேவியின் அருளால் அவருக்கு மகள் கிடைத்தார் என்பதும், அந்த மகள் ஒரு பண்டிதரை மணந்து 1898ல் ஒரு குழந்தை பெற்றெடுக்க, அக்குழந்தை காஷ்மீரின் மிகப்பெரிய மகான்களில் ஒருவரான பகவான் கோபிநாத் என்பவராவார் என்பதும் வரலாறு.

ஆலய அமைப்பு :

ஆலயம் முன்புறம் சிறிய கார் / வேன் பார்க்கிங் வசதி உள்ளது.

ஆலயம் பாரத ராணுவ ஜவான்கள் பாதுகாப்பில் உள்ளது.
பாதுகாப்புக்காரணங்களால், உள் நுழையும் போது பதிவு செய்து அனுமதிக்கின்றார்கள். 

சினார் மரங்கள் அடர்ந்த தோட்டத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. அமைதியும், தெய்வீகமும் இணைந்து காணப்படுகிறது.

முன்புறம் வாசல் தாண்டியவுடன், இரண்டு புறங்களிலும் அழகிய நீள் சதுரத்தில் இரட்டைக் குளங்கள், அதைக் கடந்து உள் செல்ல வேண்டும்.  

காலனிகள், வைக்க தனி இடம் உள்ளது.

ஆலயத்தின் இடது உள் நுழை பகுதியில் ஒரு பெரிய சினார் மரத்தின் அருகில் ஒரு சிறிய சன்னதியில் கிழக்கு நோக்கிய சிவலிங்கம் அமைந்துள்ளதும், அதன் நேர் பின் பகுதியில் சிறிய தனி சன்னதியில், ஹனுமார் சன்னதியும் சிறிய விநாயகர் உருவம் தனியாகவும் வழிபாட்டில் உள்ளது.

முக்கிய ஆலயம், ஒரு நீள்சதுர வடிவம் உள்ள நீர்த் தொட்டியின் நடுவில் உள்ள சிறிய மண்டபத்தில், மேற்கு நோக்கி கீர்பவானி அம்மன் மற்றும் ஒரு சிவலிங்கமும் இணைந்து உள்ளது. 

எதிர்புறம் பெரிய மண்டபம் ஹோமம் செய்யவும் கீர் பவானியை அங்கு இருந்தபடி கண்டு வழிபடவும் வசதியாக உள்ளது.

சிறிய அளவில், பால், அரிசியில் செய்யப்பட்ட பொருளும் இனிப்பு கலந்த பண்டங்கள் சிலவும் சுவாமிக்கு விளக்கு ஏற்றி வைத்து, பஜனை அல்லது ஸ்தோத்திரங்கள் பாடி வழிபாடு செய்கிறர்கள்.

பால் ஊற்றி வழிபடுவதால், பால் பவானி எனலாம்.

ஆலயத்தின் பின்புறம், பக்தர்கள் வந்து தங்கி வழிபட Hall, Rooms உள்ளன. அன்னதானக் கூடம் ஒன்றும் உள்ளது.

மிகப்பெரிய வளாகம். அடர்ந்த, பெரிய சினார் மரங்கள். அற்புதமான ஆலயம்.
 அமைதியான சூழல். 

விழாக்கால கூட்டம் இல்லையென்றாலும், சாதாரண நாட்களிலும், பக்தர்கள் தொடர்ந்து வந்து வழிபட்டு செல்கிறார்கள்.

காஷ்மீர் செல்லும் பக்தர்கள் அவசியம் செல்லலாம். செல்ல முயலுங்கள். தரிசியுங்கள். பலன் பெறுவீர. நிச்சயம்.

இவ்வாலய பயன அனுபவங்கள்:

முதலில், அங்கு செல்ல பல தடைகள். பல சிரமங்கள். 
பொதுவாக, ராணுவம், CRPF, காஷ்மீர் காவல் இவர்கள் காஷ்மீர் முழுவதும் எங்கும் இருக்கிறார்கள்.

போக்குவரத்து முழுவதும் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. எங்கும் நிறுத்தவோ செல்லவோ, நல்லத்திட்டமிடல் வேண்டும். வழியில் அடிக்கடி போக்குவரத்து, நிறுத்தம் செய்ய முடியாது.
 
இவ்வாலயம், Srinagarலிருந்து சற்று தள்ளி உள்ளது தனி ஊரில் உள்ளது. அங்கு செல்லமுடியாது என்று கட்டுப்பாடுகள். எங்கள் VAN ஓட்டுநர்கள் மிகவும் உதவினார்கள்.

இறையருளும், குழு உறுப்பினர்களின் ஆர்வமும், எடுத்துக் கொண்ட நீண்ட முயற்சிகளும் , குறிப்பாக திருவாளர்கள் ராஜு, சந்திரசேகர் முதலியோர்கள், Admin SR. பாலசுப்பிரமணியன் அவர்களின் வழிகாட்டலில், பெரும் முயற்சி செய்து, Special Police Permission பெற்று தரிசிக்க சென்றது அணைவருக்கும் மிகப்பெரிய நல்ல அனுபவம். 

நன்றி🙏

கீர்பவானிஆலயம் ஆலயம் தரிசனம் முடிந்து, சுமார் 2.30 மணி அளவில் SRINAGAR ல் உள்ள நாங்கள் தங்கியிருந்த Hotel TAJ சென்று அடைந்தோம்.

மாலையில், சிலர் மீண்டும் Srinagar Shopping சென்றுவந்தனர். அன்று இரவு உணவு உண்டு தங்கினோம்.

2.

இனிய பயணம் நிறைந்த தரிசனம்

10.09.2022 ஞாயிறு
விடியற்காலையில் Hotel TAJ லிருந்து புறப்பட்டு, SRINAGAR Airport சென்று அங்கிருந்து NEWDELHI சென்றோம்.

ஒரு Hotel லில் தங்கி மதிய உணவுக்குப்பின், சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு, இரவு 9.00 மணி க்குப் புறப்படும் TAMILNADU EXPRESS மூலம் சென்னைப் புறப்பட்டோம்.

11.09.2022 திங்கள்: ரயில் பயணம்

12.09.2022 செவ்வாய்
காலையில், சென்னை வந்தடைந்தோம். பிறகு பஸ் பயணம் மூலம் நான் காரைக்கால் வீடு வந்து சேர்ந்தேன்.

இனிய பக்தி பயணம் அருமையாக நிறைவடைந்தது.

இந்த யாத்ராவில், நான் கண்டு வியந்த மனிதர்கள், இடங்கள், ஏற்பட்ட பல அனுபவங்கள் வாழ்வில் மறக்க இயலாது.

இந்த யாத்ரா முழுவதும் ஏற்பாடு செய்து, நிர்வாகம் செய்து, அனைத்து வசதிகளையும் ஒருங்கிணைத்தும், அனைவரையும் திருப்தி செய்ய அயராத பாடுபட்டு, சிறப்பாக அமைத்துக் கொடுத்தும், எல்லோரிடமும் உள்அன்புடன் பழகி தன் இனிய குணத்தினால் அமைதியான சுபாவம் கொண்ட, திரு S.R.பாலசுப்பிரமணியன், Administrator, SUJANA TOURS, West Mambalam, Chennai அவர்களுக்கு என்றென்றும் என் பணிவான நமஸ்காரங்கள். இதயபூர்வ வணக்கங்களும், நன்றிகளும்.

எப்போதுமே, என்னுடைய எல்ல யாத்திரைகளிலும் தூண்டுதலாகவும், பக்கபலமாகவும், ஆர்வத்துடனும் இருக்கும், உன்மையான உள்ள உணர்வுகளுடனும், பாசத்துடனும் பழகும் அன்பு சகோதரர் திரு பரணிதரன் அவர்களையும் நான் வணங்கி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த யாத்ரா மிகச் சிறப்பாக அமைய பல்வேறு உபகாரங்கள் செய்த, திருவாளர்கள், ஸ்ரீதர், ராஜு , சந்திரசேகர், மணி, அவர்களுக்கும், மற்றும் என் உடன் உதவியாகவும், இருந்து, அன்புடனும் பழகி யாத்திரை சிறப்பாக அமைய உடன் பயணித்த திருவாளர்கள் ரவிக்குமார், Dr.சுமதி, ஜெயராமன், கண்ணன். முதலியோருக்கும்,

இந்த யாத்திரையில் மீண்டும் பங்குபெற வேண்டும் என்ற குறிக்கோளுடன், இலங்கையிலிருந்து வந்து கலந்துகொண்ட Dr.பவானி அவர்கள், எங்களிடம் தங்கள் வாழ்வியல் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். மிகவும் வியப்பான, அனுபவங்கள். சமூகத் தொண்டுகளில் ஆன்மீகக் கடமையாற்றும் அவர் நாம் சந்தித்த அற்புத மனிதரில் ஒருவர்.  

மேலும், யாத்திரையில் பங்குகொண்டு, தங்களின் பல்வேறு அனுபவங்களையும் பகிர்ந்து, உதவியாய், சகோதர பாசத்துடனும், நட்புடனும் பழகிய ஒவ்வொருவருக்கும் என் பணிவார்ந்த நமஸ்காரங்கள்.

அவர்கள் அனைவருக்கும் என் இதயபூர்வ நன்றியும், வணக்கங்களும்.

மீண்டும் அடுத்த பயணங்களில் தொடருவோம்...

தொலைவில் இருந்தாலும் தொடர்பில் இருப்போம்...

நல்லவர்கள் மனங்களில் என்றும் நம்பிக்கையும் நன்றியும் இருக்கும் அல்லவா? 

இறையருள் என்றும் துணையிருக்கும்.

🙏நன்றி, நமஸ்காரம்🙇🏼‍♂️

#என்றும்அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்


https://m.facebook.com/story.php?story_fbid=pfbid034VU5NQQChz4gbXD3mTzavQswCZtc4Lqd6niG4pbEUuaEKfqT6aSbZWXRmme8zrUel&id=100001957991710

Friday, August 5, 2022

அமர்நாத்யாத்ரா 20225-07-2022 to 10-07-2022#பயணஅனுபவக்குறிப்புகள்தொடர்ச்சியில்....


9
#அமர்நாத்யாத்ரா 
#அமர்நாத்_பனிலிங்கம் 
#காஷ்மீர்
#அமர்நாத்யாத்ரா 2022
5-07-2022 to 10-07-2022
#பயணஅனுபவக்குறிப்புகள்

தொடர்ச்சியில்....

எங்களின் ... ...
அனுபவக்குறிப்புக்கள்:

7 & 8.07.2022
அமரநாதரின்  அருள் 
" அவனருளாளே அவன் தாள் வணங்கும்' பாக்கியம் அடைந்தோமே.

அமர்நாத் பனிலிங்கம்

அமர்நாத் புறப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பே, ரயில் Ticket, அமர்நாத் யாத்ரா பர்மிட் முதலியவைகள் பெற்றிருந்தோம்.

Helicopter ticket ம் எடுத்து வைத்துக்கொண்டோம். 
 குளிர் - பனி - மழைக்குத் -தேவையான ஆடைகள், உள்ளன் உடைகள், Shoe, சாக்ஸ், மழைக்கோட்டு, மற்றும் மருந்து மாத்திரைகள் முன்பே தயார் நிலையில்  எடுத்துக் கொண்டோம். 

Shrine Board வெளியிடும் தகவல்கள்  குறித்து எமது மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய,   திரு S.R. பாலசுப்பிரமணியன், அய்யா, Admin., SUJANA TOURS, WEST MAMBALAM,   அவர்கள் எங்கள் அனைவருக்கும் உடனுக்குடன் தெரிவித்துக்கொண்டிருந்தது; பயண ஆர்வத்திற்கும்,  விழிப்புணர்வுக்கும், தூண்டுகோளாகவும் இருந்து வந்தது.

2.
07.07.2022 வியாழன்

விடியற்காலையில் #SRINAGAR லிருந்து TEMPO TRAVELER ல் புறப்பட்டு #Nilgrith என்ற இடத்தை அடைந்தோம்.

 இங்கிருந்துதான் Helicoptor மூலம் #PANJTARANI என்ற இடம் செல்லமுடியும்.

NILGRITH : என்ற இடம் Srinagarலிருந்து, Sonamarg கடந்து, BALTAL என்ற இடத்திற்கு சுமார் 10 கி.மீ. முன்பாக  உள்ள இடம். இங்குதான், அமர்நாத் செல்வதற்கான Helicopter Service உள்ளது.

இங்கு சென்று, முதலில், Registration செய்துகொண்டோம்.

முன்கூட்டியே Helicopter Ticket Reservation செய்து இருந்ததால், அந்த Ticket மற்றும் Aadhaar Card காண்பித்து Register செய்துகொண்டோம். 
ஒரு ID Card Tagவுடன் கொடுத்தார்கள். அதை Yatra முடியும் வரை வைத்துக் கொள்ள அறிவுரை கூறப்படுகிறது.

#panchatarni 

#Nilgrith சென்று, Helicopter மூலம் PANCHATARNI என்ற இடத்திற்கு மாலையில் இறங்கினோம். 

நல்ல இதமான வெய்யில் இரவு வானம் நல்ல நிலவுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.  

 இரவில் குளிர் சற்று அதிகமாக இருந்தது. 

அங்குள்ள #LANKAR ல் இலவச உணவு உண்டு.  இரவு #TENT  ல் தங்கினோம். 

இங்கு பாரத ராணுவமும், BSF ம் செய்துவரும் சேவைகள் போற்றத்தக்கது.

Panchatarni ஒரு மிக முக்கிய இடம். பால்டால் வழியாக, வருபவர்கள் அதுவும் குறிப்பாக Helicopter மூலம் வருபவர்கள் இங்கு வந்து தங்கிக் கொள்கிறார்கள்.

அது போலவே, பகல்காம் மூலம் வருபவர்களும் இங்கு வந்து தங்கி, இங்கிருந்துதான், குதிரை / டோலி மற்றும்  நடந்தும் அமர்நாத் மலைக் குகைக்கு செல்லமுடியும். 

அது போல, தரிசனம் முடித்தவர்கள் இங்கு திரும்பிவந்துதான்,  தங்கள் பயணத்தை தொடர்கிறார்கள்.

Panchatarni யிலிருந்து செல்லும் பாதையும், பால்டால் லிலிருந்து வரும் பாதையும், Sangam என்ற இடத்தில் ஒன்று சேருகிறது.

நடந்து / குதிரை / டோலியில் செல்பவர்கள் , அமர்நாதரை தரிசித்து விட்டு  பால்டால் பகுதிக்கு நேரடியாகவும் சென்று விடலாம்.

Helicopter மூலம் வந்து செல்பவர்கள் மட்டும் தரிசனம் முடிந்து Panchatarni வந்து Baltal அல்லது, பகல்காம் செல்கிறார்கள்.

இது ஒரு centre Point என்பதால், இங்கு தங்குவதற்கு ஏராளமான tent எற்பாடுகளும் LANKAR என்னும் இலவச உணவு விடுதிகளும் ஏற்பாடு செய்துள்ளனர்.  

 இங்கு வரும் பக்தர்களுக்கு உதவி செய்யவே, வருடம் முழுவதும், பொருள் சேர்த்து, இந்த சமயத்தில் பக்தர்களுக்கு உதவுகிறார்கள்.

இந்தப் பகுதிகள் முழுவதும், பனிப்பாறைகளாக மாறிவிடுவதால், ஜூன் - முதல் - ஆகஸ்ட் வரை மட்டுமே இங்கு மனித நடமாட்டம். பிறகு அடுத்த ஆண்டுதான். 

எந்தவிதமான permanent கட்டிடங்களும் கிடையாது.

மேலும், மருத்துவ வசதிகள், கழிப்பறை வசதிகளும் செய்து வைத்திருக்கின்றனர்.

3.
08.07.2022 வெள்ளி

விடியற்காலையில் மழை இருந்ததால், PANCHATRNIயிலிருந்து   சுமார் காலை 10.00 மணி அளவில் அமர்நாத் குகை சென்று வர அனுமதிக்கப்பட்டோம்.

PANCHATARNI யிலிருந்து குகை சுமார் 6 கி.மீ. மலைப்பாதை.

 நடந்து, குதிரைமீது அல்லது, டோலியில் தான் செல்ல முடியும்.

டோலிவாடகை ரூ 6000/- போய் வர என்றும். 

குதிரையில் சென்று வர ரூ3000/- என்றும் வாடகை.

நாங்கள் 8ம் தேதி தரிசனம் செய்ய 7ம் தேதி Panchatarni வந்தோம். 

அதற்கு முன்பாக 4, 5ல் தரிசனம் கால சூழலால் நிறுத்தம் செய்யப்பட்டிருந்து, 

பின் 6ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டதால், மிகுந்த கூட்டம் இருந்தது. 

மேலும், மழையினால் கரடுமுரடான, சேறும், சகதியுமான அந்தப் பாறை பாதையில் நடக்க எங்களால் முடியாது என்று அறிந்ததும்,
நாங்கள் குதிரையில் ஏறி அமர்நாத் குகை அடிவாரம் சென்று திரும்பிவர முடிவு செய்து இருந்தோம். 

தரிசனம் செய்து சென்று திரும்ப வர ஒரு குதிரைக்கு,  ரூ 3000 (1500x2) + Tips. வாடகை  நிர்ணயம் செய்து கொண்டோம்.

நாங்கள் PANCHATARANI யிலிருந்து குதிரை மீது ஏறி அமர்நாத் குகை அருகில் சென்று சுமார் பகல் 10.20 மணி அளவில் இறங்கினோம்.

வழியில் பஞ்சதரணி வழிப்பாதை ஒருபக்க மலையிலும், எதிர்புறம், பால்டெல் பாதையும் உள்ளது.

இரண்டுக்கும் இடையில் மலை உயரத்திலிருந்து வரும் நீர் உரைந்த ஆற்றில் இறங்கி, கடுமையான கட்டுப்பாடுகளையும்  மீறி  ஆங்காங்கே பக்தர்கள் குளிக்கின்றார்கள்!!.   

இது மிகவும் Risk. கடுமையான விளைவுகளைத்தரும் என்பதை மறந்து செயல்படுகிறர்கள்.

இரண்டு பாதைகளும் இணையும் இடத்தில் ஆற்றின் ஒரு புறத்தில்  ஏராளமான தற்காலிக கடைகள் இருக்கின்றன.

LANKERS எனப்படும் இலவச உணவுவிடுதிகளும் உண்டு.

குதிரைக்காரர்கள் இந்த இடத்தில் நம்மை இறக்கிவிட்டுவிடுகிறார்கள்.

திரும்பவும் குதிரை பயணம் செய்யவேண்டியிருந்ததால்,
வாடகை பணம் எங்களிடம், திரும்ப Panchatarani சென்று வாங்கிக் கொண்டார்கள்.

அங்கிருந்த சிறு தற்காலிக கடையில் பை, மொபைல் எல்லாம் வைத்துவிட்டோம்.

பூசை சாமான்கள் என்று விற்கிறார்கள். 

ஒரு தட்டில்  பொரி, இனிப்புகள், ஒரு காவி கலர் துணி எல்லாவற்றையும் அழகிய முறையில் Pack செய்து ரூ 300 க்கு விற்கிறார்கள்.

சில பக்தர்கள், சிறு பைகளில், வில்வம், முந்திரி, திராட்சை முதலிய பொருட்களை ஊரிலிருந்தே கொண்டு வந்திருந்தார்கள்.

டோலியில் வந்திருந்தவர்கள் மட்டும் குகை மிக அருகில் கொண்டு சென்று தரிசிக்க வைத்து திரும்ப டோலியில் வைத்து அழைத்துச் செல்கிறார்கள்.

நாங்கள் சுமார் 1 கி.மீ தூரம், மலைப்பாதை, மற்றும் படிகளில் ஏறி குகை அடைந்தோம். 

அப்பகுதி முழுவதுமே, குகைவாசல் வரையிலும்,  பாரத ராணுவ வீரர்கள் சூழ்ந்து நமக்கு எல்லா வகையிலும் இருந்து பாதுகாத்து, உதவி செய்கிறார்கள்.

குகையின் படிப்பகுதியை அடைந்ததும், காலனிகள் வைக்க தனி இடம் உள்ளது. 

ஏராளமான சிறு சிறு தற்காலிக கடைகளில் பல் வேறு பொருட்கள் விற்பனை செய்கிறார்கள்.

குகை படிகள் இரண்டு பிரிவாகப் பிரிந்து ஒரு புறம் checking செய்து மேலே தரிசனத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.

குகையில், சுவாமியை தரிசனம் செய்த பின் மறுபுறம் இறங்கி வந்து இதே பாதையில் இணைந்து கொள்ளலாம்.

4.
#அமர்நாத்குகை:

இயற்கையான இந்தப் பகுதியை தரிசிக்க இறையருள்,  காலம், சூழல், வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதை நாங்கள் அனைவரும் நன்றாக உணர்ந்தோம்.

காலநிலை, வானிலையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. 

இந்தப் பகுதியில் Cloud Brust என்ற மேகவெடிப்பு ஏற்பட்டு, பெரும் மழை, வெள்ளம், சேதம் ஏற்படும் சூழல் அதிகம்.

எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் மலை ஏற தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. பாரத ராணுவ வீரர்கள் பெரிதும் உதவுகிறார்கள்.

 ஒவ்வொரு வருடமும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் 40 நாட்கள் வரை அனுமதிக்கப்படுகிறது.

30 X 15x 20அடி நீளம், அகலம் , உட்புற உயரம் அளவுள்ள ஒரு இயற்கையான மலை குகையில் பனியால் ஏற்படும் சுயம்பு லிங்கம் தோன்றுகிறது.  குகையின் ஒரு மூலையில் பகுதியில் ஸ்ரீ அமர்நாத் சுவாமி பனிலிங்க வடிவில், காட்சித்தருகிறார்.

சுயம்பு பனியால் ஏற்பட்ட இயற்கையான லிங்கத்தை சுமார் 7 அடி உயரத்தில் 2 அடி அகலத்தில் 8.07.2022 அன்று பகலில் சென்று கண்டு தரிசனம் கிடைக்கப் பெற்றோம்.

சற்று தள்ளி, இதன் அருகில்  இன்னும், சிறிய வடிவில் மற்றொரு  பனிலிங்க வடிவத்தில் ஸ்ரீபார்வதிதேவியும், இதன் அருகில் இன்னும், சற்று குறுகிய அளவில் ஸ்ரீவிநாயகர் பனிலிங்க வடிவத்திலும், காட்சி தருகிறார்கள்.

அடிப்பகுதி மேடை போன்று பனியால் அமைந்துள்ளது. அதன்
முன்புறம் தனியாக இரும்பு Grill வைத்து, பிரிக்கப்பட்டு பண்டா அல்லது பூசாரிகள் நின்று கொண்டு பூசை செய்கிறார்கள்.  

நாம் கொடுக்கும் பூசை பொருட்கள் அந்த பூசாரிகள் வாங்கி சுவாமியிடம் வைத்துவிட்டு பின் நம்மிடமே கொடுத்து விடுகின்றனர்.

இங்கு பூசை பொருட்களாக, இனிப்பு வகைகள், பொறி, மற்றும் சிறிய காவி துணி, மலர், இவற்றை வைத்துவிட்டு மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

நாங்கள் சுவாமியை வரிசையில் நின்று வணங்கிவிட்டு,  பக்கத்தில் சற்று உயரமான மேடை அமைப்பில் உள்ள பகுதியில் ஏறி நின்று மேலும் சிறிது நேரம் சுவாமியை நன்றாக தரிசித்தோம். பிறகு, குகையை விட்டு மெல்ல நகர்ந்தோம். 

ஒரு வயதான பண்டா ஒருவர், சுவாமியை தரிசித்து வருபவர்களை ஆசீர்வதித்து, இரண்டு சிறு pockets பிரசாதமாகக் கொடுக்கிறார்கள்.

ஒன்றில் சிறிய வெள்ளி டாலரும், மற்றொன்றில் இனிப்பும் இருக்கிறது.

மலைக்குகையில், உச்சிப் பகுதியில் இருக்கும், சிறுசிறு பொந்துகளில் புறாக்கள் உள்ளது. 

இவர்கள், சுகரிஷி முனிவர்களாக கருதி வழிபடுகிறார்கள்.

இவற்றையும் தரிசித்தோம். 
அதிலும், வெள்ளை நிறத்தில் சிறு புறாக்கள் இரண்டு கண்டு வியந்து வழிபட்டோம்.

குகை மிகப்பெரிய அகன்ற வாசல் பகுதி. வெளிப்பகுதியிலிருந்து வரும் அற்புதமான இதமான குளிர்ந்த காற்று, 

எதிரில் மிக அற்புதமாக தெரியும் வெள்ளி பனிமலைகள் , சிகரங்கள் ஒரு புறம்;

இன்னொரு பக்கம், கீழ்பகுதியிலிருந்து சுவாமியை ஆர்வத்துடன்  தரிசிக்க வரும் யாத்திரீர்கள் கூட்டம்;

சுவாமியை தரிசித்துவிட்டு செல்லும்  பக்தர்கள் கூட்டம்;

டோலியை துக்கிவரும் ஆட்கள்,  டோலியில் இருந்து மெல்ல இறங்கி வரும் பக்தர்கள்,

 பக்தி கோஷங்கள், 

இவர்கள் அனைவர்களையும் அமைதியாக வரிசைப்படுத்தி பாதுகாக்கும், பாரத ராணுவ வீரர்கள்.  

இன்னும் கீழே, வியாபாரக் கடைகள் அதன் சத்தங்கள்;

இன்னும் பலவிதமான பக்தி கலந்த 
வழிபாட்டு முறைகள்; பெரும் ஒலிகள்.

குகையின் வெளியிலிருந்து வரும்  குளிர்ந்த காற்றை உடல் அனுபவித்துக் கொண்டதும்;

உடல் களைப்பு, பரபரப்பு, ஆர்வம்,  எல்லாம் மனதால் சற்று ஒதுக்கி,  இந்த இயற்கை சூழலில், 

மனம் அமைதியாக குகையில் உள்ள சுயம்பு பனி லிங்கத்தை நினைத்து  சில விநாடிகள், மனம் உருகி வழிபட முயன்றேன்.... 

அந்த பிரமாண்டமான அற்புதமான.... அகன்ற ... குகை;
ஏன் உலக மக்களை இப்படி வசீகரிக்கின்றது.

எதற்காக இவ்வளவு சிரமங்களையும் மீண்டும் மீண்டும், அனுபவத்துக் கொண்டு  இந்த பக்தர்களின் கூட்டம் இங்கே வருகிறது; 

நாளுக்கு நாள் ஏன் அதிகரித்துக் கொண்டே  வருகிறது.

விடைகாண முடியாத ஆன்மீக ஈர்ப்பு.

முயன்றால் விளங்கும் 
முயற்சியே அனுபவம் 
அனுபவமே ஆனந்தம்.

அது ஒரு அற்புத ஆனந்த அனுபவங்கள்...
சிந்தனைக்கு எட்டாத அதிசயங்கள் ...
விளக்க முடியாத உணர்வுகள்...

ஆழ்ந்த நம்பிக்கையும் பயிற்சியும் இருந்தால் கூடலாம்...  அவன் அருளாலே....

ஓம் நமச்சிவாய.....

5.

இன்னும் சில செய்திகள் .....

குகையில்,  சுயம்பு பனிலிங்கமாக இருந்த அமரநாதர்,  நாங்கள் தரிசித்த அன்று,   சுமார் 7 அடி உயரமாகவும், 2 .அடியில் அகலமும் கொண்டு மெல்லியதாகவே இருந்தார்.

இந்த பனி லிங்கம்  இன்னும் குகை முழுதும் பரவி, அதிக அளவில் முன்பு இருந்து தினம் தினம் அளவு குறைந்து கொண்டே வருகிறது என்றனர்.

இதனால் தான் ஒவ்வொரு வருடமும் யாத்ரா தொடங்கிய நாட்களில் மிக அதிக கூட்டம் பக்தர்கள் தரிசனத்திற்கு வந்துவிடுகிறார்கள்.

நாட்கள் செல்ல செல்ல சுயம்பு பணிலிங்கம் அளவு குறைந்துவிடுவதால், பக்தர்கள் அளவு குறையும் என்கிறார்கள். 

எப்படியிருப்பினும், வருடாவருடம் தரிசனம் செய்பவரும் பக்தர்கள் எண்ணிக்கை மட்டும் அதிகரித்துக் கொண்டே உள்ளது என்கிறார்கள்.

இந்த மிகப்பெரிய மலைக்குகையின் உச்சியின் வலது புறம் பெரிய அருவியிலிருந்து நீர் விழுந்து,  ஒரு சிற்றாராக மலைப்பாதையில் விருந்து ஒடுகிறது.

நாங்கள் 8.07.2022 அன்று காலையில் தரிசித்து வந்த பிறகு, அன்று மாலை சுமார் 5.30 மணி அளவில், இந்த இடங்களில்  அருகில் Cloud Brust உருவாகி பெருவெள்ளம் ஏற்பட்டு பெரும் சேதங்களை உருவாக்கியது.
இந்த விபரங்கள் நாங்கள் பிறகு அறிந்து கொண்டோம்.

இதனால்,
இரண்டு நாட்கள் ஜூலை 9, 10ம் தேதிகள் தரிசனம் தடை செய்யப்பட்டது. பாதை சரி செய்யப்பட்டதும், 11ம் தேதி முதல் தரிசனம் நடைபெற்று வருகிறது.

சுமார், மாலை 3.00 மணி அளவில் குதிரையில் மீண்டும், PANCHATARNI Helicopter Service இடம் வந்து சேர்ந்தோம்.

அங்கிருந்து Helicopter மூலம் புறப்பட்டு,  மாலை 4.00 மணி அளவில் Nilgrith சென்று அடைந்தோம்.  மாலை, 3 மணிக்கு மேல், SRINAGAR உள்ளே நுழைய அனுமதி இல்லாததால், Nilgrith என்ற இடத்தில் உள்ள தனியார் Restaurant ல் தங்கி இரவு உணவு உண்டோம். அங்கு  உள்ள tentல் தங்கினோம்.

9.07.2022 காலையில், புறப்பட்டு Srinagar அருகில் உள்ள கீர் பவானி என்ற முக்கியமான அம்மன் கோவில் சென்றோம்.

பயணங்கள் தொடரும்.....

நன்றி.
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

முன்பதிவுகள்..

பதிவு : 7
https://m.facebook.com/story.php?story_fbid=7910103329064855&id=100001957991710

பதிவு: 8

https://m.facebook.com/story.php?story_fbid=7913499262058595&id=100001957991710

Wednesday, August 3, 2022

அமர்நாத்பனிலிங்கதரிசனம் #காஷ்மீர்#அமர்நாத்யாத்ரா 20225-07-2022 to 10-07-2022#பயணஅனுபவக்குறிப்புகள்#அமர்நாத்_பனிலிங்கம்

8
அமர்நாத்பனிலிங்கதரிசனம் 
#காஷ்மீர்
#அமர்நாத்யாத்ரா 2022
5-07-2022 to 10-07-2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#அமர்நாத்_பனிலிங்கம்

அமர்நாத் பனிலிங்க குகை:
தரிசனம் கானும் முன் அறிந்து கொள்ள வேண்டிய சில அனுபவக் குறிப்புகள்.

முக்கிய தகவல்கள்

அமர்நாத் குகை 3888 மீட்டர் உயரத்தில் உள்ளது. பகல்காம் என்ற இடத்திலிருந்து 46 கி.மீட்டர் தூரத்திலும், பால்டால் என்ற இடத்திலிருந்து 14 கி.மீட்டர் தூரத்திலும் உள்ளது.

ஸ்ரீநகரிலிருந்து முறையான பயணம் துவங்குகிறார்கள்.
இருப்பினும், சந்தன்வாடியிலிருந்து சென்று வர  5 நாட்கள் தேவைப்படுகிறது.
ஸ்ரீநகரிலிருந்து பகல்காம் 96 கி.மீ. தூரத்தில் உள்ளது

இந்த ஆலயம்  ஜம்மு காஷ்மீர் UT யின்  ஆளுநர் தலைமையில், இயங்கும் தனி அமைப்பின் - (Shri Amarnathji Shrine Board (SASB) - கட்டுப்பாடுகளில் உள்ளது.

இவர்களே இந்த யாத்திரையின் முழு பொறுப்பேற்று, வழிகாட்டி நடத்திட பல்வேறு நிலைகளில் உயர் IAS அதிகாரிகளையும் நியமித்து செயலாற்றி வருகின்றனர்.

எப்படிப் போகவேண்டும்?

முதலில் தம்மை மனதளவிலும், உடலளவிலும் தயார் செய்துகொள்ள வேண்டும்.

மார்ச் - ஏப்ரல் மாதத்தில் Shrine Board அறிவிப்பை கவனித்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Shrine Boardல் அங்கிகரிக்கப்பட்ட  /
குறிப்பிடப்பட்ட, தகுந்த மருத்துவர் மூலம் பெற்ற சான்றிதழுடன், Shrine Board ல் குறிப்பிடும் வங்கிக் கிளையில் சென்று முறையான விண்ணப்பப்படிவம் பூர்த்தி செய்து Shrine Board மூலம், online ல் யாத்ரா பர்மிட் பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு ரூ 300 அளவில் செலவு மட்டுமே. இந்த யாத்ரா அனுமதி சீட்டை யாத்திரை முழுதும் வைத்திருக்க அறிவுருத்தப்படுகிறார்கள்.  இத்துடன்,
ஆதார் அட்டை Copy எப்போதும் கையில் வைத்துக் கொள்வது மிக மிக அவசியம்.

போக்குவரத்து :
ரயில் :
சென்னை- ஜம்மு வரை சென்று அங்கிருந்து FLIGHT or Road மூலம் Srinagar செல்லவேண்டும்.

விமானம்.
சென்னை - Srinagar விமானம் உள்ளது.
பிறகு Road வழி: Srinagar -பகல்காம் 95 கி.மீ. அல்லது பால்டல் 60 கி.மீ. வழியில் சென்று அமர்நாத் செல்ல முடியும்.

வழி - 1.
Srinagarலிருந்து பகல்காம் 95 கி.மீ. கார் | வேன் / பஸ் மூலம்  சென்று, அமர்நாத் குகை 45 கி.மீ குதிரை  / நடந்து மூலம் செல்லலாம். மொத்தம் 5 நாட்கள் பயணம். 3 இரவு மலையில் Tentல் தங்கி செல்ல வேண்டும்.

வழி - 2. 
Srinagarலிருந்து பால்டல் 60 கி.மீ  பஸ் |கார்/வேன் மூலம் சென்று, அங்கிருந்து 14 கி.மீ. குகை அடையலாம்.
பால்டால் சென்று குதிரை / டோலி /நடந்து மூலம் ஒரே நாளில் சென்று தரிசித்து வந்துவிடலாம்.

பால்டல் வழியில் செல்வதால்,  
தூரம் 14 கி.மீ.  காலம் குறைவு என்பதால், சற்று ஏற்றமாக இருப்பினும்,  பெரும்பாலோனர் இவ்வழியில் செல்ல முயல்கின்றனர்.

பகல்காம் வழி கடினமானது 47 கி.மீ தூரம்,  2 இரவுகள் தங்கி செல்ல வேண்டியிருக்கிறது. ஆனாலும், பாரம்பரியம், இயற்கை காட்சிகள் கண்டு செல்ல இவ்வழியை தேர்வு செய்கின்றனர். 

Helicopter மூலம்  செல்ல வேண்டுமானால்,
Shrine Board மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 
Shrine Board மூலம் மட்டுமே  Helicopter Book online ல் செய்து கொள்ள முடியும்.

1. பகல்காம் சென்று அங்கிருந்து
 Panchatarni வரை Helicopter வசதி உண்டு.

2. . பால்டால் என்ற இடத்திற்கு 10 கி.மீ. முன்பாக உள்ள Nilgrith    என்ற இடத்திலிருந்து, Panchatarni என்ற இடம் வரை Helicoptor ல் சென்று பின்  9 கி.மீ மலை ஏற்றம் இருப்பதால்,  குதிரை / டோலி / நடந்து செய்தும் Sangam என்ற இடத்திலிருந்து நடந்தும், படிகள் ஏறியும் சென்று தரிசித்து வரலாம். டோலியில் செல்பவர்கள். குகைப் படிகளின் மிக மிக அருகில் கொண்டு சென்று தரிசனம் செய்விக்கின்றனர். 

HELICOPTER பயணம் செய்பவர்கள் முக்கிய கவனம்கொள்ள வேண்டிய விஷயங்கள்:

பிரயாணம் புறப்படுவது முதல் தரிசனம் முடிந்து திரும்பும் வரை நாட்களை நன்கு திட்டமிட்டு பயண ஏற்பாடுகள் செய்து கொள்வது மிக அவசியம்.

1.Shrine Board அறிவிப்பில் கவனம் செலுத்தி, ஆலயம் தரிசனத்திற்காக திறக்கப்படும் முதல் வாரத்திலேயே தரிசனம் செய்ய முயற்சி செய்வதே மிக நன்று.  பிறகு, வரும் நாட்களில், பனிலிங்கம் வெகு விரைவில் கரைந்துவிடுவதால், நாட்கள் தள்ளிப் போக, போக பனிலிங்கத்தின் அளவு வேகமாக குறைந்துவிடுகிறது என்பதை கவனம் வைத்துக்கொள்ளுங்கள்.

2. Shrine Board Website மூலம் ticket ஒருவர் 6 ticket மட்டும் பதிவு செய்து கொள்ள முடியும்.

3. குறிப்பிட்ட நாளில் இதற்கென time open செய்யும் போது உள் நுழைந்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

4. ஒரு Helicopter ticket கட்டாயம் அச்சுப்பதிவு கையில் கண்டிப்பாக ஒவ்வொரு நபரிடமும்  இருக்க வேண்டும். Group ஆக இருப்பினும் தனியாக ticket Copy வைத்துக் கொள்வது நன்று. Group உடன் சேர்ந்து பயணித்தால் சேர்ந்தே Check செய்வார்கள். எனவே, Grop நபர்கள் Helicopter ல் ஏறும் வரை இணைந்து இருக்கவும்.
5.  தனிநபர், மற்றும் உடமைகள், Weight Check செய்து Helicopter ல் அனுமதி செய்யப்படுவதால். Grop ticket எடுத்தால் சேர்ந்து Check செய்யப்பட வேண்டியதிருக்கிறது.

6.உடமைகள் Bags தனியாக Helicopter ல் பயணம் செய்வதால் Bags பூட்டி பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

7. ஒரு Helicopter ல் 6 பேர் மட்டும் பயணம் செய்யலாம். கூட்டம் அதிகமாக இருந்தால், தாமதம் ஆகின்றது.

8. காலநிலைக்கு ஏற்ப Helicopter சேவை அனுமதிப்பார்கள். எப்போது வேண்டுமானாலும், ரத்து செய்யவும் வாய்ப்பு உண்டு. 

9. ரீபண்டு செய்து பணம் பெற வழிமுறைகள் உண்டு. பயணம் செய்யும் நாட்களுக்கு சில நாட்கள் கழித்து mail செய்து பெற்றுக் கொள்ள வேண்டும். மிக கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் சில பொது தகவல்கள்:

ஜம்மு காஷ்மீர் முழுவதும் பொதுவாக எல்லா இடங்களிலும் நமது பாரத ஜவான்களின் சேவை மிக மிக உண்ணதமானது. இதை நேரில் அனுபவபூர்வமாக உணரலாம். சிவகணங்கள் போல நம்மை எப்போதும், எங்கும் காத்து நிற்பார்கள்.

யாத்ராவின் எல்லாப் பகுதிகளும் பாரத ராணுவ சேவை மூலமே பாதுகாப்புடன் நடைபெறுகிறதை அனைவரும் நன்றியுடன் உணருவார்கள்.

ஜவான்கள் அணைவரும் மிக மிக மென்மையாகவும், பண்புடனும் பழகுவதை கண்டு மனம் நெகிழ்ச்சி அடைகிறோம்.

காஷ்மீரில் போக்குவரத்துகள் முழுவதும் அனைத்தும் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு வாகனமும் கண்காணிப்பில் தான் செல்ல முடியும்.

ஒவ்வொரு இடங்களுக்கும் முன் அனுமதியுடன் தான் செல்கிறார்கள்.

Srinagar Cityக்கு மாலை 3 மணி முதல், மறுநாள் காலை 6 மணி வரை  உள்ளே செல்ல வாகனங்கள் அனுமதி இல்லை.
Srinagar Cityயிலிருந்து வெளியே வரலாம்.
Srinagar City க்குள் செல்ல எந்த வாகனத்திற்கும் அனுமதி கண்டிப்பாகக் கிடையாது.
இதை மிக மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதிக குளிர், மழை எப்போதும் வரும் சூழல் உள்ளதால், அவரவர் உடல் தகுதிக்கு ஏற்றவாறு, கம்பளி உடைகள், கால், கை உரைகள், காலனிகள் Shoe, மழைக்கோட்டு, மற்றும் தேவையான மாத்திரைகள் கையில் கொண்டு வைத்திருக்கவேண்டியது மிக அவசியம்.

பஞ்சதரனி 12900 அடி உயரத்தில் உள்ளது. அதற்கு மேல் அமர்நாத் குகை உள்ளதால்,
முறையான உடல் தகுதிக்கு தயார் செய்து கொள்வது நல்லது. High altitude ல், oxygen குறைவதால், அதற்குத் தகுந்தவாறு பயிற்சிகளும், மருந்துகளும் கட்டாயம் தேவை.
பெரும்பாலும், பாதைகள், மிகவும், சேறும் சகதியும், கரடு முறடாகவும் உள்ளது. oxygen வேறு குறைவாக உள்ளதால், மிக நல்ல வலிமையான உடல் நிலையும், நல்ல கால சூழல் நிலைகளும் அமைந்தால் மட்டுமே நடப்பது நன்று.

அல்லது, குதிரை, டோலி மூலம் சென்று, தரிசனம் செய்து வருவது மிக நன்று.

குறைவான சுமை;  நிறைவான பயணம்  என்பதால், அவசிய தேவைக்கு ஏற்ப உடைகள் போதும்.
பால்டால் சென்று தரிசனம் முடிந்து வரும் வரை ஒரே வெளி உடையே நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். 

இயற்கை உபாதைகள் சரி செய்துகொள்ள  Tent இருக்கும் இடங்களில், பல்வேறு தற்காலிக இடங்களை அமைத்துள்ளனர்.

பால்டால், பகல்காம் முதலிய இடங்களிலிருந்து குகைப் பகுதி வரை  அனத்து இடங்களிலிலும் LANKAR என்ற இலவச உணவுக்கூடங்கள் ஏராளமாக உள்ளதால், விதவிதமான உணவுப் பொருட்கள் தாராளமாகவும், சேவை மனப்பான்மையுடனும் தருகிறார்கள்.

அளவுடன் உட்கொண்டு, பயணத்தை பக்தியுடனும், உடல் நலத்துடனும் வைத்துக் கொள்ள வேண்டும்.

இறையருள் என்றும் துணையிருக்கும் என்ற நம்பிக்கையுடன் சென்று தரிசித்து வருவோம். 

பயண அனுபவங்கள்... தொடரும்

நன்றி.
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

முன்பதிவு ....

Tuesday, August 2, 2022

அமர்நாத் பனிலிங்க தரிசனம் -5-07-2022 - 10-7-2022 பயண அனுபவக்குறிப்புக்கள்

7
அமர்நாத்பனிலிங்கதரிசனம் 
#காஷ்மீர்
#அமர்நாத்யாத்ரா 2022
5-07-2022 to 10-07-2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#அமர்நாத்_பனிலிங்கம்
7.
அமரநாதரின்  அருள் 

" அவனருளாளே அவன் தாள் வணங்கும்' 
பாக்கியம் அடைந்தோமே.

இந்துக்கள்மட்டுமன்றி, உலகத்தில் உள்ள எல்லோருக்கும், இறைவனாக விளங்கும், சிவபெருமான், உலகத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டும், இயற்கையான பனிலிங்க வடிவத்தில் தோன்றுகிறார்.  இது இமயமலையில், பாரத தேசத்தில் உள்ள தெற்கு காஷ்மீரப் பகுதியில் உள்ள ஒரு மலையில் உள்ள இயற்கையான குகையில் உள்ளது. 

ஒவ்வொரு வருடத்திலும் வரும் கோடை காலத்தில், இந்த இயற்கையான பனிலிங்கத்தை தரிசிக்க  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்,  உலகத்தின் பல இடங்களிலிருந்து புறப்பட்டு, கடும் மலைப்பாதைகளை கடந்து வந்து, இந்தக் குகையை அடைந்து, தங்கள் ஆன்மீக கடமையை நிறைவேற்றி செல்லுகிறார்கள். 

ஒரு முறை, அன்னை பார்வதிதேவி, சிவபெருமானிடம், 'தாங்கள் மண்டை ஓட்டை மாலையாக ஏன் அணிந்து உள்ளீர்கள்' என்று கேட்க, 

 அதற்கு அப்பெருமான், 'ஒவ்வொரு உயிரும் இறந்து இறந்து பிறக்கும்போதும் நான் ஒவ்வொரு மண்டை ஓட்டு தலையையும் மாலையாக அனிந்து கொள்ள வேண்டியது இருக்கிறது'. என்று கூற,

அன்னையும், ' நாங்கள் மட்டும் இறந்து இறந்து பிறக்கும் போது, நீங்கள் அழியாத பிறவியாய் வீற்றிருப்பது எப்படி? அந்த ரகசியத்தை எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன்,' என்று கெஞ்சிக் கேட்க, 

பெருமான், ' நீ அந்த அமர்கதையை உற்று உணர்ந்து  கேட்டால், நீ புரிந்து கொள்ளலாம் என்று கூறி,  அதை உனக்கு சொல்கிறேன், கேள். ஆனால் அந்த சிவரகசியத்தைச் சொல்லவும், கேட்கவும், தனி இடம் தேவை,  எந்த உயிரினமும் இல்லாத இடத்தில்தான் உனக்குக் கூற முடியும். அதை நீ கேட்கும் போது, வேறு எந்த உயிரினங்களும் அதைக் கேட்க அனுமதி இல்லை,''. என்றார்.

அன்னைக்கு சிவரகசியத்தை  உணர்த்த, எந்த ஜீவராசியும் இல்லாத இடத்தைத் தேடி அமர்நாத் குகை உள்ள இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார். 

இந்தக்குகை வருவதற்கு முன்பு, தன்னுடை வாகனமாகிய காளையை பகல்காம் என்ற இடத்திலும், சந்திரனை சந்தன் வாடி என்ற இடத்திலும், சடாமுடியை ஜாட்டான் என்ற இடத்திலும், நாகத்தை ஷேசநாக் என்ற இடத்திலும், விட்டுச்சென்றார்.

 மகன் கனேசரை மகாகுனபர்வதத்திலும், பஞ்சதரணி என்ற இடத்தில், பூமி, நீர், காற்று, தீ, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களையும் விட்டுச் செல்கிறார்.

இவைகளை விட்டுவிட்டு, அமர்நாத் குகையை அடைகிறார்.  குகைக்குச் சென்றதும், காளக்கினி யைத் தோற்றுவித்து குகையின் அருகில், யாரும் வாராதவாறு, தீயை உண்டாக்கச் செய்தார். 

இதன் பிறகு அமர்கதையை பார்வதிதேவியிடம் கூறத்தொடங்கினார்.

ஆனாலும், அந்த குகையில் வசித்து வந்த இரண்டு புறாக்கள் மட்டும் அமர் கதையை கேட்டுவிடுகிற காரணத்தால், அவைகள் இறப்பு இல்லா நிலை அடைகிறது. அவைகளே  சுகபிரம்மரிஷி முனிகள் என்பார்கள். 

இன்றைக்கும் கூட, வரும் பக்தர்களுக்கு,  அந்தப்புறாக்களின்  தரிசனம் கிட்டுகிறது. 
இவைகள் எப்படி இந்த இயற்கை கால சூழலில் - கடும் உறை பணியில் - பல்லாயிரம் அடி உயரத்தில் வாழுகின்றன என்ற வியப்பு உள்ளது.

அமர்நாத் குகை  இந்துக்களின் மிக முக்கியமான புனித இடங்களில் ஒன்று. இது பரம்பொருளான, பரமேஸ்வரரின் இருப்பிடம் என்பதால், வருடாவருடம் இயற்கையாக உருவாகும், பனி  லிங்க தரிசனம் காண்பது வாழ்வின் புண்ணியம் என்ற நம்பிக்கை ஆழமாக உள்ளது.
🙏🏻🙇🏼‍♂️

ஒரு புராணப்படி, காஷ்மீர் முழுதுமே நீர் நிறைந்த பனியால் முடி கிடக்க, அங்கு வந்த காசிப முனிவர், அங்கு உரைந்திருந்த நீரை ஆதாரமாக்கி, பல்வேறு ஆறுகளை உருவாக்கி, அங்கு  உள்ள நீரை ஒழுங்குபடுத்தி நலம்  செய்வித்தார்.  

இந்த சமயத்தில், இமாலய பிரதேசத்தில் வலம் வந்த பிருகு முனிவர், இந்த அமர்நாத் குகையைக் கண்டுபிடித்தார். அவர் மூலமே, இந்த இடம் பத்தர்களால், வணங்கிப் போற்றத்தக்கதாக மாறியது என்பதும் ஒரு புராண வரலாறு.
 🙏🏻🙇🏼‍♂️

புராணங்களின் கூறியபடி இக்குகை சிவன் தேடி அடைந்தது என்று கூறப்பட்டிருந்தாலும்,  இக்குகையைப் பற்றிய செவிவழிக்கதை ஒன்றும் உள்ளது.

ஒரு காலத்தில்  இடையர் ஒருவருக்கு சாது ஒருவர்,  ஒரு பை நிறைய கரியை கொடுத்து அனுப்ப அதை வீட்டில் வந்து கொட்டி பார்க்கிறார். 

அவ்வளவும் தங்கப் பொற்காசுகளாக மாறி உள்ளது கண்டு மகிழ்வுடன் அந்த சாதுவை சந்தித்து நன்றி தெரிவிக்க  ஆவலுடன் செல்கிறார்; 

ஆனால், சாது - முனிவரைக் காணவில்லை  ஆனால், அந்த இடத்தில்  இந்தக் குகையும், பனிலிங்கத்தையும் கண்டு வியந்து, ஊரில் வந்து தெரிவிக்கிறார். எல்லோரும் கேள்விபட்டு வியந்து வந்து வணங்கிச் செல்ல ஆரம்பித்தனர், என்பதும் ஒரு வரலாறு. 
 🙏🏻🙇🏼‍♂️

பொதுவாக, ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் இயற்கையாகவே இந்த குகையில், பனிலிங்கம் தோன்றி மறைகிறது என்பதே மறுக்க இயலாத உண்மை.

இந்த குகையின் உள்புறம், பெரிய லிங்கம் தோன்றும் இடத்திற்கு  மிக அருகில் மேலும் இரண்டு லிங்கங்கள் தோன்றுகிறது.  ஒரு பணி லிங்கம் அன்னை பார்வதி தேவியாகவும், மற்றொன்று சிறிய வடிவில் உள்ளது. கணபதியாகவும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

மேலும், அவ்விடத்தில் வாழும் கிளிகளையும் கண்டு வணங்கிச் செல்கிறார்கள்.

பயண அனுபவங்கள்... தொடரும்   
 
நன்றி.

#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#அமர்நாத்யாத்ரா 2022
#அமர்நாத்_பனிலிங்கம்

முன்பதிவுகளில் :
#LalChowk
#Sankarachaiyar_temple
#ஜேஷ்ட்டாதேவி_ஆலயம்
#Nisht_mohal_garden
#Dallake #மிதக்கும்_சந்தை

LINKS:
முன்பதிவு ..
பதிவு: 1 - #LalChowk
https://m.facebook.com/story.php?story_fbid=7861532467255275&id=100001957991710
பதிவு : 2 - #Shankarachariartemple
https://m.facebook.com/story.php?story_fbid=7870068123068376&id=100001957991710
பதிவு: 3 #ஜேஷ்ட்டாதேவி ஆலயம்
https://m.facebook.com/story.php?story_fbid=7875067092568479&id=100001957991710
பதிவு : 4: #nishat_mohal_garden 
https://m.facebook.com/story.php?story_fbid=7889040434504478&id=100001957991710
#LalChowk
#shankarachariartemple 
#ஜேஷ்ட்டாதேவி
#nishat_mohal_garden
பதிவு:5 - #DalLake 
பதிவு: 6- #nilgrith