Monday, August 31, 2020

கோமூத்திரி_அந்தாதி பதிகம்

 
#திருமுறைகளில்தமிழமுதம்:
#சம்பந்தர்அமுதம்
#கோமூத்திரி_அந்தாதி

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.
📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 
🙏நன்றி🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
 
1.  #திருஞானசம்பந்தர்.
பிற மதங்களின் பொய்யுரைகளும், போலி வாதங்களையும் கேட்டு அதற்கு கட்டுண்டு கிடந்த மன்னர்களின் அறிவற்ற  அரச நெறிகளையும் நமது பாரம்பரிய தமிழரின் கலாச்சாரங்களும் பண்பாடுகளும் சிதைந்து இருந்ததை மீட்டு சீர்திருத்தியவர், 

இவர் நம் ஒப்பற்ற தெய்வத் தமிழ்ப் பதிகங்கள் பல இயற்றி, பிறமத ஆதிக்கங்களை வெளிப்படையாக எதிர்த்து, அற்புதங்கள் பல நிகழ்த்தி சைவத் திருவருட் செயலாக்கத்தின் மேன்மையை, உலகத்தாருக்கு அழகு தமிழில் புதிய பண், பாடல் வகையில், இசை அமைப்பில் பதிகங்கள் இயற்றி பாடிஉணர்த்தி சைவை சமயத்தை அமுதத் தமிழால் போற்றியவர்.

பல பக்தி இலக்கிய பாடல்களில் தமிழின் இலக்கிய சிறப்பை வெளிப்படுத்தி புதுமைகளைப் புகுத்தியவர். திருஞானசம்பந்தப் பெருமான்,  தமிழில் புதுமையான பாவகைகள் பல உருவாக்கம் செய்து,  தமிழ் இலக்கியங்களுக்கும்,  பல புதிய பண்கள் அமைத்து, இசைத் தமிழ் பாடல்களை  இயற்றியவர், இவரே. தமிழ் இலக்கியத்திற்கு பல சிறப்பு செய்தவர்.  இவரின் பாடல்கள்தான் ஆதாரமாக இருந்து வருகிறது.
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

2. #ஆதிவிகற்பம்

தனது நான்காவது மற்றும் ஐந்தாவது தல யாத்திரைகளுக்கு இடையே பல நாட்கள் சீர்காழி நகரில் தங்கிய திருஞானசம்பந்தர், சீர்காழி தலத்தின் மீது பல வகையான பாடல்களை பாடுகின்றார். 

அத்தகைய பதிகங்களில் பல தமிழ் இலக்கியத்திற்கு முன்னோடியாக விளங்கின என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். இந்த பதிகத்தினை மற்ற #மிறைக்கவி களுடன் சேர்த்து #ஆதிவிகற்பம் என்று சேக்கிழார் கூறுகின்றார்.  விகற்பம் என்றால் மாறுபட்டது என்று பொருள். பெரும்பான்மையான பதிகங்களின் அமைப்பிலிருந்து மாறுபட்டதால் சேக்கிழார் இவ்வாறு அழைத்தார் போலும். 

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

3.#திருக்கோமூத்திரி -அந்தாதி:

தேவாரம் இரண்டாம் திருமுறை
பதிகம்: 74
தலம்: திருப்பிரமபுரம் :

#ஆதிவிகற்பங்கள் என்று சேக்கிழார் கருதும் பதிகங்களில் இத்திருப்பதிகம் அடங்கியவை என்று அறிஞர்கள் கூறுகின்றனர். 

இந்த பதிகமும் பன்னிரண்டு திருப் பாடல்களை உடையது. 

சீர்காழி தலத்தின் பன்னிரு பெயர்களையும் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

'இந்த பாடலில் சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களும் சொல்லப்பட்டுள்ள வரிசை, 
'விளங்கிய சீர்' என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடல் (2.73.1)
 'பிரமனூர்' என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடல் (2.70.1) 
மற்றும் 'எரியார் மழு' என்று தொடங்கும் பதிகத்தின் பாடல்கள் (1.63)   உள்ள வரிசையில் அமைந்திருப்பதை நாம் காணலாம். 
இதே பதிகத்தின் மற்ற பாடல்களில் அந்த வரிசை பின்பற்றப்படவில்லை'. 

தேவாரப் பதிகங்களில் அந்தாதி வகையைச் சார்ந்த பாடல் தொகுப்பு ஏதும் இல்லை.  ஞானசம்பந்தர் அருளிய இந்த பதிகம், கோமூத்திரி அந்தாதி வகையில் அமைந்துள்ளது. 

இந்த பதிகம் #கோமூத்திரி என்ற சித்திரக்கவி வகையைச் சார்ந்தது என்று கூறுவார்கள். 
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

4.#கோமூத்திரி:
இலக்கண ஆசிரியர்களின் விளக்கம்- 1

'நடந்து செல்லும் பசு, சிறுநீர் கழித்தால், வளைந்து வளைந்து பாம்பு ஊர்ந்து செல்வது போன்ற அடையாளத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் பாடலின் அடிகளை ஒன்று ஒன்று விட்டு ஒன்று சேர்த்து பொருள் காணும் வகையில் அமைந்திருப்பது கோமூத்திரி வகையைச் சார்ந்தது' என்று கூறுவார்கள்.

அதாவது நான்கு அடிகள் கொண்ட பாடலாக இருந்தால், முதல் அடியையும் மூன்றாம் அடியையும் சேர்த்து பொருள் கொண்டபின்னர், இரண்டாவதுஅடியையும் நான்காவது அடியையும் சேர்த்து பொருள் கொள்ள வேண்டும்.

விளக்கம் - 2

'#கோமூத்திரி எனப்படும் #சித்திரக்கவி வகைக்கு வேறு விதமாகவும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. முதல் அடியினை மேல் வரியாகவும் அதற்கு அடுத்த அடியினை கீழ் வரியாகவும் வரைந்து, அவ்விரண்டு அடிகளில் உள்ள எழுத்துக்களை மேலும் கீழுமாக ஒன்றிடையிட்டு வாசித்தாலும் அதே செய்யுளாக அமையும் #சித்திரக்கவி பாடல்கள் என்று விளக்கம் அளிக்கப்படுகின்றது'.

விளக்கம்: 3.

'#கோமூத்திரியாவது , ஒரு செய்யுளின் முன்னிரண்டடிகளை மேல்வரியாகவும், பின்னிரண்டடி களைக் கீழ்வரியாகவும் வரைந்து அவ்விரண்டு வரிகளின் எழுத்துகளை மேலும் கீழுமாக ஒன்றிடையிட்டுப் படித் தாலும் அதே செய்யுளால் அமையும் சித்திர கவியாகும்.
 இதன்கண் மேலும் கீழும் உள்ள அடிகளில் அமைந்த எழுத்துகள் #கோமூத்திரி ரேகைபோல் ஒன்றிடையிட்டுப் படிக்கப் பெறுதலின் #கோமூத்திரி எனப்பட்டது.'

விளக்கம்:3:

'#சித்திரகவிகளில் இன்னொரு விதம் #கோமூத்திரி ஆகும். இதை பரிதிமால் கலைஞர் விளக்குகிறார் இப்படி:-

பசு மாடு நடந்து கொண்டே மூத்திரம் பெய்ய உண்டாகும் சுவட்டின் வடிவாக அமைக்கப்பட்ட ரேகையிலே எழுத்துக்கள் அமையப் பாடிய பாட்டு கோமூத்திரியாகும்.'

விளக்கம் 4:

'பசுமாடு ஒன்று     சாலையில் நடந்து செல்வதைப்
பார்த்திருக்கிறீர்களா; இனிமேல் அதனைக் கூர்ந்து கவனியுங்கள்.
அப்பசுமாடு நடந்து போகும் போது கோமயம் விடுவதாக,
அதாவது இயற்கைக் கழிவான சிறுநீர் கழிப்பதாக இருந்தால்
அந்நீர் வளைவு வளைவாக தரையில் பட்டிருக்கும். அதாவது
மேல் மேடு ஒன்று - கீழ்ப்பள்ளம் ஒன்று என அவ்வளைவு
அமையும். அதுவே இரண்டு மாடுகள் கழிப்பதாக இருந்தால் இரு
எதிர் எதிர் வளைவுகள் கிடைக்கும். அவ்வமைப்பைச் செய்யுளில்
அமைப்பது #கோமூத்திரி என்னும் #சித்திரகவியாகும். (கோ =
பசுமாடு ; மூத்ரி = மூத்திரம்)

'ஒரு செய்யுளின் முதலடியில் உள்ள
எழுத்துகளும், இரண்டாம் அடியில்
உள்ள எழுத்துகளும் ஒன்று இடையிட்டு
ஒன்று நேர் எதிர் இணைப்பினவாக
அமையும் முறை கோமூத்திரி என்னும்
சித்திர கவியாகும்'
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

5.#வழிமுடக்கு_மாவின்_பாய்ச்சல்:

மேலே குறிப்பிட்ட வகையில் ஞானசம்பந்தர் அருளிய இந்த பதிகத்தின் பாடல்கள் #கோமூத்திரி_அந்தாதி என்ற அமைப்பில் அமையவில்லை. எனினும் இந்த பாடலை #கோமூத்திரி_அந்தாதி என்று அறிஞர்கள் அழைக்கின்றனர்.  ஆனால் ஞானசம்பந்தர் இந்த பாடலுக்கு #வழிமுடக்கு_மாவின்_பாய்ச்சல் என்ற பெயரினையே அளித்துள்ளார்.

ஒரு பாடலின் இறுதியில் வைத்தெண்ணப்பெற்ற பெயர் அடுத்த பாடற்கு முதலாக மீண்டும் மடித்தெண்னப் பெறும் நிலையில் அமைந்த இப்பதிகம், முடக்காக வளைந்த வழியிலே சென்ற மாடானது மீண்டும் வந்த வழியே மடங்கிச் சென்றாற்போலும் நடை அமைப்பினை உடையது ஆகும் .

'அதாவது அந்தாதி போன்று முந்திய பாடலின் கடைச் சொல்லினை அடுத்த பாடலின் முதற் சொல்லாக கொள்ளாது, முந்திய பாடலில் கடைச் சொல்லுக்கு முன்னர் அமைந்துள்ள சொல்லினை அடுத்த பாடலின் முதற் சொல்லாக கொண்டு அமைந்துள்ள தொகுப்பு.   இப்படி ஒரு வித்தியாசமான தொகுப்பினை ஞானசம்பந்தர் அருளியிருப்பது அவரது தமிழ்ப் புலமையை நமக்கு உணர்த்துகின்றது'. 

'#வழிமுடக்கு_மாவின்_பாய்ச்சல் என்று பெயரிட்டு இந்த பதிகத்தின் தன்மையை மிகவும் அழகாக உணர்த்துகின்றார்.  ஒரு மாடு பாய்ந்து செல்லும் போது அதன் காற்தடங்கள் வளைந்து செல்லும் பாதையைத் தானே காட்டும்.  அந்த தன்மையே இங்கே கூறப்படுகின்றது'. 

'#கோமூத்திரி என்ற சொல்லினை விடவும் #வழிமுடக்கு_மாவின்_பாய்ச்சல் என்ற தொடர் சொல்வதற்கும் கேட்பதற்கும் இனிமையாக உள்ளது அல்லவா.'*
 
'விளக்கம்:
இப்பதிகப் பாடல் ஒவ்வொன்றிலும் பிரமபுரத்திற்குரிய பன்னிரு திருப்பெயர்களும் எண்ணப்பெற்றுள்ளன. ஒரு பாடலின் இறுதியில் வைத்தெண்ணப்பெற்ற பெயர் அடுத்த பாடற்கு முதலாக மீண்டும் மடித்தெண்னப் பெறும் நிலையில் அமைந்த இப்பதிகம்,

முடக்காக வளைந்த வழியிலே சென்ற மாவானது மீண்டும் வந்த வழியே மடங்கிச் சென்ருற்போலும் நடை அமைப்பினேயுடையதாதல் இங்கு நோக்கத் தகுவதாகும்.'
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
6.இனி பதிகப் பாடல்  காண்போம்.

தேவராம் :இரண்டாம் திருமுறை
பதிகம்: 74 திருக்கோமூத்திரி அந்தாதி
தலம்: திருப்பிரமபுரம் பண் : காந்தாரம் :

பாடல் 1:
பூமகனூர் புத்தேளுக் கிறைவனூர் குறைவிலாப் புகலிபூமேன்
மாமகளூர் வெங்குருநற் றோணிபுரம் பூந்தராய் வாய்ந்தவிஞ்சிச்
சேமமிகு சிரபுரஞ்சீர்ப் புறவநிறை புகழ்ச்சண்பை காழிகொச்சை
காமனைமுன் காய்ந்தநுதற் கண்ணவனூர் கழுமலநாங் கருதுமூரே.

பாடல் - 2
கருத்துடைய மறையவர்சேர் கழுமலமெய்த் தோணிபுரங் கனகமாட
உருத்திகழ்வெங் குருப்புகலி யோங்குதரா யுலகாருங் கொச்சைகாழி
திருத்திகழுஞ் சிரபுரந்தே வேந்திரனூர் செங்கமலத் தயனூர்தெய்வத்
தருத்திகழும் பொழிற்புறவஞ் சண்பைசடை முடியண்ணல் தங்குமூரே.

பாடல் 3
ஊர்மதியைக் கதுவவுயர் மதிற்சண்பை யொளிமருவு காழிகொச்சை
கார்மலியும் பொழில்புடைசூழ் கழுமலமெய்த் தோணிபுரங் கற்றோரேத்துஞ்
சீர்மருவு பூந்தராய் சிரபுரமெய்ப் புறவமய னூர்பூங்கற்பத்
தார்மருவு மிந்திரனூர் புகலிவெங் குருக்கங்கை தரித்தோனூரே

பாடல் 4.
தரித்தமறை யாளர்மிகு வெங்குருச்சீர்த் தோணிபுரந் தரியாரிஞ்சி
எரித்தவன்சேர் கழுமலமே கொச்சைபூந் தராய்புகலி யிமையோர்கோனூர்
தெரித்தபுகழ்ச் சிரபுரஞ்சீர் திகழ்காழி சண்பைசெழு மறைகளெல்லாம்
விரித்தபுகழ்ப் புறவம்விரைக் கமலத்தோ னூருலகில் விளங்குமூரே

பாடல் 5

விளங்கயனூர் பூந்தராய் மிகுசண்பை வேணுபுர மேகமேய்க்கும்
இளங்கமுகம் பொழிற்றோணி புரங்காழி யெழிற்புகலி புறவமேரார்
வளங்கவரும் வயற்கொச்சை வெங்குருமாச் சிரபுரம்வன் னஞ்சமுண்டு
களங்கமலி களத்தவன்சீர்க் கழுமலங்கா மன்னுடலங் காய்ந்தோனூரே.

பாடல் 6

காய்ந்துவரு காலனையன் றுதைத்தவனூர் கழுமலமாத் தோணிபுரஞ்சீர்
ஏய்ந்தவெங் குருப்புகலி யிந்திரனூ ரிருங்கமலத் தயனூரின்பம்
வாய்ந்தபுற வந்திகழுஞ் சிரபுரம்பூந் தராய்கொச்சை காழிசண்பை
சேந்தனைமுன் பயந்துலகிற் றேவர்கடம் பகைகெடுத்தோன் றிகழுமூரே.

பாடல் 7

திகழ்மாட மலிசண்பை பூந்தராய் பிரமனூர் காழிதேசார்
மிகுதோணி புரந்திகழும் வேணுபுரம் வயங்கொச்சை புறவம்விண்ணோர்
புகழ்புகலி கழுமலஞ்சீர்ச் சிரபுரம்வெங் குருவெம்போர் மகிடற்செற்று
நிகழ்நீலி நின்மலன்றன் னடியிணைகள் பணிந்துலகி னின்றவூரே.

பாடல் 8
நின்றமதில் சூழ்தருவெங் குருத்தோணி புரநிகழும் வேணுமன்றில்
ஒன்றுகழு மலங்கொச்சை யுயர்காழி சண்பைவளர் புறவமோடி
சென்றுபுறங் காக்குமூர் சிரபுரம்பூந் தராய்புகலி தேவர்கோனூர்
வென்றிமலி பிரமபுரம் பூதங்க டாங்காக்க மிக்கவூரே.

பாடல் 9

மிக்ககம லத்தயனூர் விளங்குபுற வஞ்சண்பை காழிகொச்சை
தொக்கபொழிற் கழுமலந்தூத் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன்சேரூர்
மைக்கொள்பொழில் வேணுபுர மதிற்புகலி வெங்குருவல் லரக்கன் றிண்டோள்
ஒக்கவிரு பதுமுடிக ளொருபதுமீ டழித்துகந்த வெம்மானூரே.

பாடல் 10.

எம்மான்சேர் வெங்குருச்சீர்ச் சிலம்பனூர் கழுமலநற் புகலியென்றும்
பொய்ம்மாண்பி லோர்புறவங் கொச்சைபுரந் தரனூர்நற் றோணிபுரம்போர்க்
கைம்மாவை யுரிசெய்தோன் காழியய னூர்தராய் சண்பைகாரின்
மெய்ம்மால்பூ மகனுணரா வகைதழலாய் விளங்கியவெம் மிறைவனூரே.

பாடல் 11

இறைவனமர் சண்பையெழிற் புறவமய னூரிமையோர்க் கதிபன்சேரூர்
குறைவில்புகழ்ப் புகலிவெங் குருத்தோணி புரங்குணமார் பூந்தராய்நீர்ச்
சிறைமலிநற் சிரபுரஞ்சீர்க் காழிவளர் கொச்சைகழு மலந்தேசின்றிப்
பறிதலையோ டமண்கையர் சாக்கியர்கள் பரிசறியா வம்மானூரே.

பாடல் 12
அம்மான்சேர் கழுமலமாச் சிரபுரம்வெங் குருக்கொச்சை புறவமஞ்சீர்
மெய்ம்மானத் தொண்புகலி மிகுகாழி தோணிபுரந் தேவர்கோனூர்
அம்மான்மன் னுயர்சண்பை தராயயனூர் வழிமுடக்கு மாவின்பாச்சல்
தம்மானொன் றியஞான சம்பந்தன் றமிழ்கற்போர் தக்கோர்தாமே.
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
7. முடிவுரை:

✳️திருப்புகழ் என்றும்அருள் நூல் தந்த அருணகிரியார், அருட்பிரகாச வள்ளலார் முதலிய ஞானிகள் முருகனின் அவதாரமாய்  போற்றிய  அருட் செல்வர் திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
8.🙏இப்பதிவிற்கு உதவிய நூல்கள்:

1. நால்வர் வரலாறு : பேராசிரியர் கா.சுப்ரமணியம் பிள்ளை.
2. பன்னிரு திருமுறைகள்: பேராசிரியர் வ.த.இராமசுப்பிரமணியம்.
3. வித்வான் முத்து. ச. மாணிக்கவாசக முதலியார், வி.ச.குருசாமி தேசிகன்.
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?Song_idField=20740&limitPerPage=1&padhi=074&sortBy=&sortOrder=DESC&startLimit=0&thiru=2

http://thevaaram.org/ta/index.php
4. தமிழ் விந்தை கோமுத்திரி: சா.நாகராஜன்.
5. என். வெங்கடேஸ்வரன்
(damalvenkateswaran@gmail.com
https://vaaramorupathigam.wordpress.com/vaaramorupathigam/2nd-thirumurai/2-074-poomaganoor-puththelukku/)
6.http://www.tamilvu.org/courses/diploma/a021/a0214/html/a02146l3.htm
7. ஒரே கருத்துக்களை கொண்டு
பல்வேறு வலைதளங்களில், இணைப்பில் உள்ள செயலிகள் பல்வேறு இலக்கிய ஆசிரியர்கள் தொகுத்த இலக்கிய நூல்கள், கட்டுரைகளில் காணப்பெற்றவைகளின் தகவல் சுருக்கம் இப்பதிவு.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி நூல்களையும் தொடர் கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

🙏நன்றி🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

Monday, August 17, 2020

சம்பந்தர்அமுதம் - அகக்குருடர்களுக்கு எச்சரிக்கை பதிகம். 3.297

அகக் குருடர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் தமிழ் விரகன்:
🙏🙇‍♂️🙏🔱🔯🕉️🛐⚛️🎪🙏🙇‍♂️🙏
சந்துசேனனும் இந்துசேனனும் 
தருமசேனனும் கருமைசேர்
கந்துசேனனும் கனகசேனனும்
முதலதாகிய பெயர்கொளா

மந்திபோல்திரிந்து ஆரியத்தொடு
செந்தமிழ்ப்பயன் அறிகிலா
அந்தகர்க்கு எளியேன் அலேன்திரு
ஆலவாய்அரன் நிற்கவே.
                            (414)
பொருள் :
சந்து சேனன், இந்துசேனன், தருமசேனன், கந்துசேனன், கனகசேனன் முதலாகிய பெயர்களைச் சிறப்பாகத் தாங்கி, எல்லா இடங்களிலும் திரிந்து அலைந்தவர்களாகி வடமொழியும், செந்தமிழும் நவில்கின்ற சிவப்பரம்பொருளையும் அதன் பயனையும் அறியாது, உலகியலில் அகக்குருடர்களாய் விளங்குபவர்களுக்கு, நான் எளியவன் அல்ல. திரு ஆலவாயின் ஈசன் என் முன்னிருந்து நடத்திச் செல்கின்றார். எனவே அச்சத்தை விடுக.
🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏

கூட்டின்ஆர்கிளி யின்விருத்தம்
உரைத்ததோர்ஒலி யின் தொழில்
பாட்டுமெய் சொலிப் பக்கமே செலும்
எக்கர் தங்களைப் பல்லறம்

காட்டியேவரு  மாடெலாங்கவர்
கையரைக்கசி வொன்றிலாச்
சேட்டைகட்கெளி யேனலேன்திரு
ஆலவாய்அரன்  நிற்கவே. 
                    (415)

பொருள் : கூண்டில் இருக்கும் கிளிவிருத்தம் முதலானவைகளை உரைத்து, அக்கிளியினது ஒலித்தன்மையை மெய்யெனக் கூறி

 அறங்களைச் சொல்லுகின்றவர்கள் போல் பேசி, இரக்கம் அற்றவராகி, குற்றங்களைப் புரிபவர்களுக்கு நான் எளிபவன் அல்ல. 
ஆலவாயின்கண் உறையும் ஈசன் என் முன்னின்று நன்று அருள்புரிபவர்.

- தமிழ்நாதன்   ஞானசம்பந்தன்

மூன்றாம் திருமுறை
பதிகம்: 297 தலம் திருஆலவாய்
பாடல். 4, 5
🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏
பகிர்வு:
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.

மாலைமாற்று பதிவு - நான்கு

#திருமுறைகளில்_தமிழமுதம்:
#சம்பந்தர்_அமுதம்
#தமிழரின்பொக்கிஷம்:
#மாலைமாற்று (பாடல் 9, 10, 11 )
பதிவு : நான்கு

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.
📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 
🙏நன்றி🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
 
📚சைவத் திருமுறைகள் தமிழின் பல இலக்கிய வகைகளை உள்ளடக்கியது.
சித்திரக்கவி என்னும் வகையில் சம்பந்தப்பெருமான் அருளிய 
#மாலைமாற்று பதிகம் பற்றி தொடர்ந்து சிந்திக்கும் பதிவு.

☣️ சம்பந்தர் அருளிய  மிக மிக அரியவகை  தமிழ் இலக்கியப் பாடல்களாகும்.

❇️சித்திரக்கவி வரிசையில்  திருஞானசம்பந்தரின்
  #மாலைமாற்று வகை என்பது..

சித்திரக்கவி வரிசையில்  திருஞானசம்பந்தரின்
#மாலைமாற்று வகை என்பது..

⏺️ஒரு மாலைக்கு அமைந்த இரு தலைப்புக்களுள் எதனை முதலாகக் கொண்டு நோக்கினாலும், அம்மாலை ஒரே தன்மையதாய் தோன்றுவது போல, ஒரு செய்யுளை முதலிலிருந்தோ, இறுதியிலிருந்தோ எவ்வகையில், வாசித்தாலும் அதே செய்யுளாக அமையுமாறு ஒத்த எழுத்துக்களை நிரவப் பெற்றிருப்பதே மாலைமாற்று செய்யுள் என்று இலக்கணவியலார் விளக்கியுள்ளார்கள்.

⏺️ஒரு பாடலில் உள்ள இரண்டு அடிகளை முன்னிருந்து பாடினாலும், பின்னிருந்து பாடினாலும், சொல்லும்  பொருளும் மறுபடாமல் இருப்பது.

⏺️ மாலை போல முதலும் முடிவும் மாறி மாறி சுற்றிவருவதால் இதை மாலைமாற்று பாடல் என்று அழைக்கப்படுகிறது.

⏺️இவ்வகைக் கவிகளை மிக முயன்று அமைத்துள்ளமையால் இவை மிகைக்கவி என்னும் கூறுவர். எளிதில் பொருள் காணமுடியாத பாடல் என்பது அதன் பொருள்.

🔱தமிழில் இது பற்றிய சில வார்த்தைகள்:

சிவயவசி, விகடகவி, திகதி, குடகு, தாத்தா, காக்கா, பாப்பா, மாமா, கைரேகை, தேருவருதே, மாடுஓடுமா, மோருதாருமோ, தோடுஆடுதோ, மேகராகமே, மேளதாளமே, வைபூவை, மாலாபோலாமா,

❇️இவ்வகையில் ஒரு பாடலில் இரண்டு வரிகளை அமைத்து 11 பாடல்களைக் கொண்ட ஒரு பதிகம் அற்புதமாக இயற்றி அருளிச் செய்துள்ள தமிழ் ஞானசம்பந்தர் சிறப்பு போற்றத்தக்கது. 

✳️ஒரு மெய்யெழுத்து கூட இப் பதினோறு பாடல்களிலும் இல்லை என்பது இன்னும் சிறப்பு.

❇️மூன்றாம் திருமுறையில் அமைந்துள்ள
(117) 375வது சீர்காழி தலத்தில் அருளிய பதிகம்

✳️ #மாலைமாற்றுப் பதிகம் பற்றி மேலும் தொடர்ந்து சிந்திப்போம்.

❇️கெளசிகப் பண் அமைந்த பதிகம்.

📖 முதல்பதிவில் 1, 2, பாடல்களும்
இரண்டாம் பதிவில், 3, 4, 5, பாடல்களையும் பார்த்தோம்
மூன்றாம் பதிவில்
பாடல்கள் 6,7,8 மற்றும்
இந்த நான்காவது பதிவில் 9, 10, 11 ஆகியவற்றின் பாடல் பொருள் உரை பற்றி சிந்திப்போம். (நிறைவு பகுதி).
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
9.
பாடல்: 1265:

காலேமேலே  காணீகா  ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா  லேகாழீ   காணீகாலே மேலேகா .

பொருள் :
🏵️முதல்வரி:

காலே - காற்றாகி யெங்கும் கலந்தவனே. மாலே - எவற்றிற்கும் மாயம் செய்பவனே. மால்    - மயக்கம். 
மாயம் - மாயனென்னும் திருமாலுக்கும்
மே       - சிறந்த. 
பூ         - மலர்ந்த. 

🏵️இரண்டாம் வரி:

பூ மேல் ஏ(ய்) - பிரமனும். 
மாலே             - மாலும். 
காலே             - திருவடியையும். |
மேலே            - திருமுடியையும். 

காண்           - காணலை. 
நீ                   - ஒழித்த. 
காழீ              - வைரத்தன்மையனே. 
காழீ! காண் - கடைக்கணி. 
கால் ஈ          - திருவடியைத் தருக.

🔱பொருளுரை:

⏺️காற்றாகி எங்கும் கலந்தருள்பவனே. மறைப் பாற்றலின் வழி எவ்வுயிர்க்கும் மயக்கம் செய்து பின் அருள் புரிபவனே.

⏺️பூக்களில் சிறந்த தாமரைப்பூவில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும், முறையே திருமுடியையும், திருவடியையும் காணுதலை ஒழித்த வைரத் தன்மையுடையவனே! 
சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே.
எங்களைக் கடைக்கணித்தருள்வாயாக. உன் திருவடியைத் தந்தருளுவாயாக!

🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
10.
பாடல்: 1266:

வேரியுமேணவ  காழியொயே யேனைநிணேமடளோ  காதே

தேரக  ளோடம  ணேநினையே 
யேயொழி காவண  மேயுரிவே.

பொருள் :
🏵️முதல்வரி:

வேரியுமேணவ= 
வேரி + ஏண் + நவம் +
வேரி - மணம். 
ஏண் - பெருமை. 
நவம் - புதுமை. 

காழியாயே = காழியில் வீற்றிருப்பவர்

யேனைநிணேமடளோ =
ஏனை+நீள் நேம் + அடு + அள் 

ஏனை     - துன்பத்தையும். 
நீள்நேம் - மிக்க அன்பையும். 
அடு         - முறையே ஒழி(த்தலும்) 
அள்         - அள்ளிக்கொள்ளுதலுமாகிய 
                   செய்கை. 
ஓகரது ஏ - யோகிகளுடைய செய்கையே

🏵️இண்டாம் வரி:
தேரகளோடம னேறினையே யேயொழி =
தேர்களோடு + அமனே + நினை + ஏய்

தேர்களோடு - தேரர்களின்    
                            உபதேசங்களோடு. 
அமணே         - அமணர்களின் 
                           உபதேசங்களையும். 
நினை - நினைத்தலையும். 
ஏய் - அவரோடு பொருந்துதலையும்.
ஒழி - ஒழிப்பீராக. 

காவண மேயுரிவே = காவணமே + உரிவே

காவணமே - அந்நெறிகளிற் 
                         சேராமற்காக்கும் திறம். 
உரிவே - உமக்கு உரியவேயாகும். 

🔱பொருளுரை :

⏺️நறுமணமும், தெய்விக மணமும், பெருமையும், புதுமையும் கலந்து விளங்கும் சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே! துன்பங்களை நீக்கி அருள்பவனே. பேரருள் உடையவனே. அதனை அள்ளிக்கொள்ளல் அகத்தவத்தாராகிய சிவயோகிகளின் செய்கையே. 

⏺️புத்தர், சமணர்களின் மொழிகளை எண்ணுதலையும், நண்ணுதலையும் ஒழித்தருள்வாயாக! இப்புறச் சமயத்தார் பன்னெறிகளில் புகாமல் காத்தருளும் திறம் நின் திருவடிக்கே உரியதாகும்.

🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
11.
பாடல் : 1267:

நேரகழாமித  யாசழிதா  யேனனியேனனி ளாயுழிகா

காழியுளானின யேனினயே தாழிசயாதமி  ழாகரனே .

பொருள் :
🏵️முதல்வரி :

நேரகழாமித= நேர் + அகழ் + ஆம்
நேர்               = நேர்மையை. 
அகழ் ஆம்    = கல்லியெறிவதாகிய. 

யாசழிதா = 
இதய ஆசு - மனத்துக் கண் எழும் (காம 
                      வெகுளி மயக்கம் என்னும்)    
                      முக் குற்றங்களையும். 

அழி            - அழிக்கவல்லவனே. 
                      
தா  யேனனியேனனி = 
தாய் ஏல் நன் நீயே = உலகுக்கெல்லாம் தாயாந் தன்மையை யேற்கத்தக்கவன் நீ ஒருவனே. 

வாழ் + ந் + அன் = வாணன் என்றாகியதுபோல ஏல் + ந + அன் = ஏனன் என்றாகியது. 

நல் - நன்மை புரிவதில். 

நீள் - மிக்கோனே. 

ஆ(ளா)யுழிகா = ஆய் + உழிகா
ஆய் உழிகா - தளர்ந்த இடத்துக் 
                          காப்பாயாக.

🏵️இரண்டாம் வரி:

காழியுளானின யேனினயே தாழிசயாதமி  ழாகரனே

காழி + உள்ளானின்+நையை + நினையே
தாழ்வு + இசையா + தமிழகரனே.

காழியுளானின் - சீகாழிப் பதியானைப்
                                பற்றிய. 
நையே      - கேட்டோர் மனம் குழைப்பதாகி         
                      இப்பாடல்களை. 
நினையே - நினைத்துப் பாடவே. 

தாழிசயா (தமி)= தாழ்வு + இசையா
தாழ்(வு)  = குறைவும் 
இசையா = உண்டாகா

தமிழாகரன் - தமிழே உடம்பாக உடைய 
                         திருஞானசம்பந்தனே. 

🔱பொருளுரை:

⏺️நேர்மையை அகழ்ந்து எறிவதாகிய, நெஞ்சத்தில் நிலைத்து எவரையும் துன்புறுத்தும் காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களையும் அழித்தருள வல்லவனே. உலகுக்கெல்லாம் தாயாம் தன்மையை ஏற்றருளத் தக்கவன், ஒப்பில்லாத நீ ஒருவனே. நன்மை புரிந்தருளுவதில் உயர்ந்தவனே! நாங்கள் தளர்ந்த இடத்து எங்களைக் காத்தருள்வாயாக!

 ⏺️நற்றமிழுக்கு உறைவிடமாகவுள்ள காழிப்பதியில் வீற்றிருக்கும் பெருமானை நினத்துப் போற்றும்  திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இத்திருப்பதிகத்தை சிவபெருமானைப் போற்றி அருளிய, உள்ளம் குழையச் செய்யும் இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்கு எந்தக் குறைவும் உண்டாகாது.

🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
🙏இத்துடன் #மாலைமாற்று பதிகம் பற்றிய விளக்கம் நிறைவு.

🙏திருஞானசம்பந்தர் தம் திருப்பதிகப் பாடல்களில் ஒரு பக்கம் இறையருளின் அருட்செயல்பாடுகளை உணர்த்தியதும்,மறுபுறம் தமிழ் இலக்கியத்திற்கு பல்வேறு புதுமைகளையும் சிறப்புகளையும் கொண்ட பா அமைப்பை முதன்முதலில் கொண்டுவந்தார் என்பதும் வரலாறு.

🙏திருப்புகழ் என்றும்அருள் நூல் தந்த அருணகிரியார், அருட்பிரகாச வள்ளலார் முதலிய ஞானிகள் முருகனின் அவதாரமாய்  போற்றிய  அருட் செல்வர் திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

🙏பல்வேறு வலைதளத்தில் உள்ள இணைப்பில் உள்ள செயலிகள்
(http://thevaaram.org/ta/index.php)
மற்றும் பல்வேறு நூல்களின் அடிப்படையில் இப்பதிவில் குறிப்புக்கள் கொண்டும்.

🙏மேலும், பேரறிஞர்களாகிய, வ. த. இராமசுப்பிரமணியம்,  முதலிய ஒப்பற்ற பல பேராசிரியர்கள் நூல்களிலிருந்தும் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டு வழங்கப்பெற்றது.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி நூல்களையும் தொடர் கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

🙏நன்றி🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
#மாலைமாற்று 
பதிவு : ஒன்று : பாடல். 1, 2
https://m.facebook.com/story.php?story_fbid=4261517207256837&id=100001957991710
பதிவு : இரண்டு : பாடல், 3, 4, 5.
https://m.facebook.com/story.php?story_fbid=4261528527255705&id=100001957991710
பதிவு : மூன்று: பாடல், 6, 7, 8
https://m.facebook.com/story.php?story_fbid=4281187108623180&id=100001957991710
🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏

மாலைமாற்று பதிவு: மூன்று

#திருமுறைகளில்_தமிழமுதம்:
#சம்பந்தர்_அமுதம்
#தமிழரின்பொக்கிஷம்:
#மாலைமாற்று (பாடல் 6,7, 8 )
பதிவு : மூன்று

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.
📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 
🙏நன்றி🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
 
📚சைவத் திருமுறைகள் தமிழின் பல இலக்கிய வகைகளை உள்ளடக்கியது.
சித்திரக்கவி என்னும் வகையில் சம்பந்தப்பெருமான் அருளிய 
#மாலைமாற்று பதிகம் பற்றி தொடர்ந்து சிந்திக்கும் பதிவு.

☣️ சம்பந்தர் அருளிய  மிக மிக அரியவகை  தமிழ் இலக்கியப் பாடல்களாகும்.

❇️சித்திரக்கவி வரிசையில்  திருஞானசம்பந்தரின்
  #மாலைமாற்று வகை என்பது..

⏺️ஒரு பாடலில் உள்ள இரண்டு அடிகளை முன்னிருந்து பாடினாலும், பின்னிருந்து பாடினாலும், சொல்லும்  பொருளும் மறுபடாமல் இருப்பது.

⏺️மலர்களை கொண்டு மாலை கட்டி முடிக்கும் போது ஆரம்பமும் முடிவும் ஒன்றாக முடியும் அது போல வார்த்தைகளை அடுக்கி வரிகளை முடிக்கும்போது அதே வரிசையில் திரும்ப வாசிக்க அதற்கும் பொருள் வரும்.  மாலை போல முதலும் முடிவும் மாறி மாறி சுற்றிவருவதால் இதை மாலைமாற்று பாடல் என்று அழைக்கப்படுகிறது.

⏺️இவ்வகைக் கவிகளை மிக முயன்று அமைத்துள்ளமையால் இவை மிகைக்கவி என்னும் கூறுவர். எளிதில் பொருள் காணமுடியாத பாடல் என்பது அதன் பொருள்.

🔱தமிழில் இது பற்றிய சில வார்த்தைகள்:

சிவயவசி, விகடகவி, திகதி, குடகு, தாத்தா, காக்கா, பாப்பா, மாமா, கைரேகை, தேருவருதே, மாடுஓடுமா, மோருதாருமோ, தோடுஆடுதோ, மேகராகமே, மேளதாளமே, வைபூவை, மாலாபோலாமா,

❇️இவ்வகையில் ஒரு பாடலில் இரண்டு வரிகளை அமைத்து 11 பாடல்களைக் கொண்ட ஒரு பதிகம் அற்புதமாக இயற்றி அருளிச் செய்துள்ள தமிழ் ஞானசம்பந்தர் சிறப்பு போற்றத்தக்கது. 

✳️ஒரு மெய்யெழுத்து கூட இப் பதினோறு பாடல்களிலும் இல்லை என்பது இன்னும் சிறப்பு.

❇️மூன்றாம் திருமுறையில் அமைந்துள்ள
(117) 375வது சீர்காழி தலத்தில் அருளிய பதிகம்

✳️ #மாலைமாற்றுப் பதிகம் பற்றி மேலும் தொடர்ந்து சிந்திப்போம்.

❇️கெளசிகப் பண் அமைந்த பதிகம்.

📖 முதல்பதிவில் 1, 2, பாடல்களும்
இரண்டாம் பதிவில், 3, 4, 5, பாடல்களையும் பார்த்தோம்
இந்த மூன்றாம் பதிவில்
பாடல்கள் 6,7,8 ஆகியவற்றின்
பாடல் பொருள் உரை பற்றி சிந்திப்போம்.

தொடர்ந்து  அடுத்தடுத்த பதிவுகளிலும் தொடர்ந்தும் சிந்திக்கலாம்).
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
6
பாடல்: 1262
மேலேபோகா  மேதேழீ  காலாலேகா லானாயே
யேனாலாகா  லேலாகா  ழீதேமேகா  போலேமே.

பொருள் :
🏵️முதல் வரி:

மேலேபோகாமே - மார்க்கண்டேயர் மீது எமன் போகாமல். 

தேழீ - கடுங்குரலால் உரப்பினவனாய். 

காலாலே - காலினாலே. 

கால் ஆனாயே - (அவ்வெமனுக்கு) காலன் ஆனவனே. 

🏵️இரண்டாம் வரி:
யேனாலாகா லேலாகா ழீதேமேகா= 
எல் + நால் + ஆகி + ஆல்+ஏலா +காழி + மேகா.

ஏல் - பொருந்திய. 
நால் - சனகர் முதலிய நால்வருக்கும். 
ஆகி - குருவாகிய. 
ஆல் - கல்லால மரத்தில். 
ஏலா - ஏற்றவனே. 
காழீதே - சீகாழியிலுள்ள தெய்வமே. 
மேகா - (திருமால் மேகவடிவங்கொண்டு வாகனமாகி நிற்க) அந்த மேகத்தை வாகனமாகக் கொண்டருளியவனே.

போலேமே - யாங்கள் உமது பல்கணத்தில் ஒருவராக எண்ணப்படுதற்கு அத்திருமாலை ஒத்திலோமோ?

🔱பொருளுரை:

⏺️மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த காலனைக் கடுங்குரலால் கண்டித்தவரே.  உம் திருவடியால் அவனை உதைத்து அக்காலனுக்குக் காலன் ஆகியவரே.

⏺️சனகர் முதலிய நால்வர்க்கும்  சிவகுருவாகிக் கல்லால மரத்தின் கீழ் மெய்ப்பொருள் உபதேசித்து மெய்யுணர்வு பெறச் செய்தவரே.  சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பரம்பொருளே. மேகத்தைப் போல் குளிர்ச்சியாக விளங்கி உயிர்களுக்கு இனிமை செய்பவர். உம் திருக்கூட்டத்தில் ஒருவர் போல் நாம் ஆவோம்.

🙏
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
7
பாடல் 1263

நீயாமாநீ  யேயாமா  தாவேழீகா நீதானே
நேதாநீகா  ழீவேதா  மாயாயேநீ  மாயாநீ .

பொருள் :
🏵️முதல் வரி:

நீயா    மாநீ   ஏயா   மாதா  ஏழீ  கா நீதானே

நீயா - (உம்மை) நீங்குதல் அறியாத 

மான் - மானைப்போன்றவர். 
மாநீ - மானை உடையவன். 
மாநீ (மானீ) - உமா தேவியை உடையவனே. 

ஏயா - ஒப்பற்ற. 

மாதா - தாயே. 

ஏழீ - ஏழிசை வடிவாய் உள்ளவனே. 
ஏழீ - ஏழ்தொகைக் குறிப்பாக இசையை உணர்த்தியது. 

காநீதானே - `அழையாமே அருள் நல்குமே
காநீதானே - நீயே வலியவந்து என்னைக் காப்பாயாக. 
தாநீ - தானத்தை (இடத்தை உடையவனே) எங்களைக் கொல்லும் துன்பத்தை நீ கொல்லமாட்டாயா? என்பது ஓர் நயம்

🏵️இரண்டாம் வரி:

நே   தாநீ  காழிவேதா மாய் ஆநீ  மாயாயே

நே - அன்பார்ந்த இடத்தை.

தாநீ - இடமாக உடையவனே. 

காழிவேதா - சீகாழியில் எழுந்தருளியுள்ள வேத சொரூபியே. 

மாய் - எம்மைக்கொல்லும். 

ஆநீ - துன்பங்களை. 

நீ மாயாயே - நீ கொல்ல மாட்டாயா? 

🔱பொருளுரை:

⏺️மானைக் கரத்தில் வைத்துள்ள ஈசனே, உன்னைவிட்டு நீங்குதலில்லாத உமாதேவியை உடையவனே.  ஒப்பற்ற தாயானவனே. ஏழிசை வடிவானவனே. நீயே வலிய எழுந்தருளி எங்களைக் காத்தருள்வாயாக! 

⏺️பேரன்பு வாய்ந்த நெஞ்சத்தை இடமாகஉடையவனே.  சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுபவர். வேதங்களைஅருளிச்செய்து வேதங்களின் உட்பொருளாக விளங்குபவனே.  எங்களைக் கொல்லவரும் துன்பங்களை நீகொன்று அருள்செய்யாயோ?
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
8
பாடல் : 1264

நேணவராவிழ  யாசைழியே வேகதளேரிய   ளாயுழிகா

காழியுளாயரி  ளேதகவே 
யேழிசை  யாழவி   ராவணனே.

 பொருள் :

🏵️முதல்வரி:

நேணவராவிழயாசைழியே, =
நே +அணவர் +ஆ + விழ  + யா  +ஆசை  + இழியே. 

நே அணவர் - (உமது திருவடியில்) நேயம் பொருந்தும் அடியவராம், 

ஆ - பசுக்கள். 

விழ - தன் வயமற்றுக் கிடக்க. 

யா - (யாத்த) கட்டிய, 

ஆசை - ஆசையாகிய கயிற்றை. 

இழியே - அவிழ்த்து விடுபவனே.

(அடியவரைப் பசுவென்று, ஆசையைக் கயிறென்னாமையால் ஏகதேச உருவகம்.
நேணவர் - நே + அணவர் எனவும், யாசைழியே - யா, அசை, இழியே எனவும் பதம் பிரித்துக் கொள்க. 
யா + ஆசை = வினைத்தொகை.
நேணவர் - யாசைழியே இல்விரு தொடரும் மரூஉ முடிபின)

அன்பான அடியவர்கள் ஈசன் திருவடியின் மீது இருந்து ஆசை முதலிய குற்றங்களைத் துறந்து விளங்குகின்றனர்.

வேகதளேரியளாயுழிகா =
வேக(ம்) + அதரி + ஏரி +அளாய + உழி + கா

வேகம் - விலங்குகளில் வேகமாய் 
                ஓடவல்ல மானின், அதன்
                தோலையணிந்த, 

ஏரி - அழகனே. (ஏர் - அழகு)

அளாய உழி - துன்பங்கள் எம்மைச் 
                          சூழ்ந்தவிடத்து. 

கா - காப்பாற்றுவாயாக.

🏵️இரண்டாம் வரி:

காழியு(ள்)ளாய் = காழியில் உள்ளவரே

அரிளேதகவே =
அரு + இளவு + ஏது + அகவே. 

அருஏதம் = மன்னித்தற்கரிய குற்றங்கள்.
இளவு      = (எமது) சிறுமைத் தன்மையால் 
                    செய்தனவாதலின், 
அஃகவே = அவை மன்னிக்கத்தக்கன  
                    ஆகுக.

ஏழிசை இராவணனே = ஏழிசை பாடிய 
               இராவணனுமல்லவா பெரும் 
               பிழையும் மன்னிக்கப் பெற்றுத் 
               திருவருளுக்குப் 
               பாத்திரமாயினான். 

⏏️செருக்கினால் செய்த பெரும் பிழையை மன்னித்த கருணை, சிறுமையாற் செய்த பிழைகளை மன்னிக்கவும் தகும் என மன்றாடியவாறு.

🔱பொருளுரை:

⏺️இறைவரின் திருவடிகளில் பேரன்பு செலுத்தும் அடியவர் கட்டிய ஆசை என்று சொல்லப்படும் -பெருங்கயிற்றைத்- குற்றங்களைத் துறந்து அவிழ்த்தருள்பவரே. 
   மிக வேகமாக ஓடும் மானின் தோலை   
   அணிந்துள்ள பேரழகு வாய்ந்தவரே. 
   பொறுக்கலாகாத் தீவினைத்   
   துன்பங்கள்  தாக்க வரும்போது  
   காத்தருள்வீராக!

⏺️காழிப்பதியில் வீற்றிருக்கும் நாதனே
   மன்னித்தற்கரிய குற்றங்கள் எங்களின்   
   சிறுமைத் தன்மையால் 
   செய்தனவாகலின் அவற்றைப்  
   பெரியவாகக் கொள்ளாது சிறியவாகக் 
   கொண்டு பொறுத்தருள்வீராக!
   ஏழிசைவல்ல இராவணன்   
   செருக்கினால் செய்த பெரும்பிழையை 
   மன்னித்து அருளியது போல எமக்கும் 
   அருள் புரிவீராக.

🙏
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
இதன் தொடர்பதிவில் அடுத்தடுத்த பாடல்களின் பொருளும் உரையும் பற்றி சிந்திக்கலாம்.

⏺️திருஞானசம்பந்தர் தம் திருப்பதிகப் பாடல்களில் ஒரு பக்கம் இறையருளின் அருட்செயல்பாடுகளை உணர்த்தியதும்,மறுபுறம் தமிழ் இலக்கியத்திற்கு பல்வேறு புதுமைகளையும் சிறப்புகளையும் கொண்ட பா அமைப்பை முதன்முதலில் கொண்டுவந்தார் என்பதும் வரலாறு.

🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏

✳️திருப்புகழ் என்றும்அருள் நூல் தந்த அருணகிரியார், அருட்பிரகாச வள்ளலார் முதலிய ஞானிகள் முருகனின் அவதாரமாய்  போற்றிய  அருட் செல்வர் திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

🙏பல்வேறு வலைதளத்தில் உள்ள இணைப்பில் உள்ள செயலிகள்
(http://thevaaram.org/ta/index.php)
மற்றும் பல்வேறு நூல்களின் அடிப்படையில் இப்பதிவில் குறிப்புக்கள் கொண்டும் தொகுக்கப்பட்டது.

🙏 இது ஒரு அறிமுக பதிவே.
மேற்படி நூல்களையும் அறிஞர்கள் கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை  பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

🙏நன்றி🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
பதிவு : ஒன்று : பாடல். 1, 2
https://m.facebook.com/story.php?story_fbid=4261517207256837&id=100001957991710

பதிவு : இரண்டு : பாடல், 3, 4, 5.
https://m.facebook.com/story.php?story_fbid=4261528527255705&id=100001957991710
🙏🙇‍♂️🎪🙇‍♂️🙏🙇‍♂️🎪🙇‍♂️🙏🙇‍♂️🎪🙇‍♂️🙏

மாலைமாற்று பதிவு : இரண்டு

#திருமுறைகளில்_தமிழமுதம்:
#சம்பந்தர்_அமுதம்
#தமிழரின்பொக்கிஷம்:
#மாலைமாற்று (பாடல் 3, 4, 5 )
பதிவு : இரண்டு

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.
📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 
🙏நன்றி🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
 நமது பாரம்பரிய தமிழரின் கலாச்சாரங்களும் பண்பாடுகளும் சிதைந்து இருந்ததை மீட்டு சீர்திருத்தியவர், திருஞானசம்பந்தர்.

📚சைவத் திருமுறைகள் தமிழின் பல இலக்கிய வகைகளை உள்ளடக்கியது.
சித்திரக்கவி என்னும் வகையில் சம்பந்தப்பெருமான் அருளிய 
#மாலைமாற்று பதிகம் பற்றி தொடர்ந்து சிந்திக்கும் பதிவு.

☣️ சம்பந்தர் அருளிய  மிக மிக அரியவகை  தமிழ் இலக்கியப் பாடல்களாகும்.

❇️#சித்திரக்கவி வரிசையில்  திருஞானசம்பந்தரின்
  #மாலைமாற்று வகை என்பது..

⏺️ஒரு பாடலில் உள்ள இரண்டு அடிகளை முன்னிருந்து பாடினாலும், பின்னிருந்து பாடினாலும், சொல்லும்  பொருளும் மறுபடாமல் இருப்பது.

⏺️மலர்களை கொண்டு மாலை கட்டி முடிக்கும் போது ஆரம்பமும் முடிவும் ஒன்றாக முடியும் அது போல வார்த்தைகளை அடுக்கி வரிகளை முடிக்கும்போது அதே வரிசையில் திரும்ப வாசிக்க அதற்கும் பொருள் வரும்.  மாலை போல முதலும் முடிவும் மாறி மாறி சுற்றிவருவதால் இதை மாலைமாற்று பாடல் என்று அழைக்கப்படுகிறது.

⏺️இவ்வகைக் கவிகளை மிக முயன்று அமைத்துள்ளமையால் இவை #மிகைக்கவி என்னும் கூறுவர். எளிதில் பொருள் காணமுடியாத பாடல் என்பது அதன் பொருள்.

⏺️சொல்லணியில் இது #வண்ணகம் என்ற அமைப்பு  வகையில்   நெட்டெழுத்து மிகுதியும் பெற்று வரும்
 'நெடுஞ்சீர் வண்ணம்"  என்றும் வகைப்படுத்துகின்றனர்: 

🔱தமிழில் இது பற்றிய சில வார்த்தைகள்:

சிவயவசி, விகடகவி, திகதி, குடகு, தாத்தா, காக்கா, பாப்பா, மாமா, கைரேகை, தேருவருதே, மாடுஓடுமா, மோருதாருமோ, தோடுஆடுதோ, மேகராகமே, மேளதாளமே, வைபூவை, மாலாபோலாமா,

"பூவாளை நாறு நீ பூ மேக லோகமே
பூநீறு நாளை வா பூ"
இதன் பொருள் :
= பூச்சூடி, திருநீறு கொண்டு, நாளை வா'

❇️இவ்வகையில் ஒரு பாடலில் இரண்டு வரிகளை அமைத்து 11 பாடல்களைக் கொண்ட ஒரு பதிகம் அற்புதமாக இயற்றி அருளிச் செய்துள்ள தமிழ் ஞானசம்பந்தர் சிறப்பு போற்றத்தக்கது. 

✳️ஒரு மெய்யெழுத்து கூட இப் பதினோறு பாடல்களிலும் இல்லை என்பது இன்னும் சிறப்பு.

❇️மூன்றாம் திருமுறையில் அமைந்துள்ள
(117) 375வது சீர்காழி தலத்தில் அருளிய பதிகம்

✳️ #மாலைமாற்றுப் பதிகம் பற்றி மேலும் சற்று விரிவாக சிந்திப்போம்.

❇️கெளசிகப் பண் அமைந்த பதிகம்.

📖 முதல்பதிவில் முதலிரண்டு பாடலைப் பற்றி பார்த்தோம். இந்த பதிவில் 3 முதல் 5 வரை உள்ள  பாடல் பொருள் உரை பற்றியும் சிந்திப்போம்.

தொடர்ந்து  அடுத்தடுத்த பதிவுகளிலும் தொடர்ந்தும் சிந்திக்கலாம்).
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
3
பாடல் 1259:

தாவரமூவா   தாசாகா  ழீநாதாநீ  யாமாமா
மாமாயாநீ  தாநாழீ  காசாதாவா  மூவாதா.

🏵️முதல்வரி:

தாவா - அழியாத. 
தாவம் - நெருப்பு

மூவா - மூப்பில்லாத (என்றும் 
              இளமையாய் உள்ள) 

தாசா - தசகாரியத்தால் அடையும் 
             பொருளாக உள்ளவனே.
             ஆசானாகத் திகழ்பவர்
          
காழீநாதா - சீகாழிக்குத்தலைவனே! 

நீ - எவரும் சஞ்சரிப்பதற்கு அஞ்சி 
      நீக்குகின்ற, 

யாமா - நள்ளிரவில் நட்டம் பயின்றாடும் 
              நாதனே. 

மா - பெருமை வாய்ந்தவனே

🏵️இரண்டாவது வரி:

மா = பெரிய
மா - ஐராவணமாகிய பெரிய 
         யானையின்மேல்,

யா நீ - ஏறி வருபவனே! 

தானாழி - (தான + ஆழி) = கொடையில் 
                    கடல் போன்றவனே. 

சா - சாவதினின்றும். 
கா - காப்பாற்றுவாயாக. 

காசா - இரத்தினம் போன்ற ஒளியை உடையனே!  
காசு = (குற்றம்) குற்றம் இல்லாதவன்

தா - கேட்டவரங்களை எல்லாம் தருவாயாக. 

வா - என் முன் எழுந்தருள்வாயாக. 

மூ - எவற்றினும் முன்னே தோன்றிய.

வாதா - காற்று முதலாக உள்ள ஐம்பூத வடிவாய் உள்ள. 

🔱பொருளுரை:

⏺️அழியாத நெருப்பாகவும், மூப்பிலாத தசகாரியத்தால் அடையும் பொருளாகவும், குருவாகவும் உள்ளவனே. சீகாழி என்னும் திருத்தலத்து முதல்வனே. 
   எல்லோரும் அஞ்சி நீங்குகின்ற   
   சுடுகாட்டில் நள்ளிரவில் நடனமாடும் 
   நாதனே. 

⏺️மாண்புமிக்கவனே. ஐராவணம் என்னும் யானையின் மேல் ஏறி வருபவனே. 
   கொடையில் கடல் போன்றவனே.     
   சாவினின்றும் எங்களைக்    
   காத்தருள்வாயாக. குற்றம் இல்லாத    
   ஒளியுடைய மாணிக்கம் போன்றவனே.
   வேண்டும் வரங்களைத்    
   தந்தருள்வாயாக. எங்கள்முன் 
   எழுந்தருள்வாயாக.
   முன்னைப் பழம்பொருளே. 
   காற்று முதலான ஐம்பூதங்களின்   
   வடிவானவனே!
🙏
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
4
பாடல் 1260 :

நீவாவாயா  காயாழீ  காவாவானோ வாராமே
மேராவானோ  வாவாகா  ழீயாகாயா
வாவாநீ

பொருள் :
🏵️முதல்வரி:

நீவா - என்றும் மாறாத. 

வாயா - உண்மைப் பொருளானவனே. 

கா - தாங்கிய. 

யாழீ - வீணையினையுடையவனே.

காவா - (காகா) வந்து காத்தருள்வாயாக, 

வான் - தேவர்கள். 

நோவாவா - துன்பமடையாவாறு.

வான்நோவாராமே - கொடிய பிறவித் துயரம் எம்மை எய்தாமல், 

🏵️இரண்டாம் வரி:

மேரா - மேரு மலையை ஏந்தியவனே. 

காழீயா - சீகாழிப் பதியுள் எழுந்தருளியுள்ளவனே. 

காயா - ஆகாய சொரூபியே. 

வாவா நீ - நீ விரைந்து வருவாயாக. 

வாய் - உண்மை. 

🔱பொருளுரை :

⏺️என்றும் மாறுதலில்லாத நீக்கப் பெறாத மெய்ப்பொருளானவனே.  தாங்கிய வீணையை உடையவனே. கொடிய பிறவித் துன்பம் எங்களை அடையாவண்ணம் வந்து காத்தருள்வாயாக. 

⏺️விண்ணிலுள்ள தேவர்கள் துன்பம் அடையாதவாறு மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களை அழித்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே,  ஆகாய சொரூபியே! நீ விரைந்து வருவாயாக! அருள் புரிவாயாக.
🙏
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
5
பாடல்: 1261

யாகாலாமே யாகாழீ  யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ  தாமேயா ழீகாயாமே லாகாயா

பொருள் :
🏵️முதல்வரி:

யா - எவையும் வணங்கத்தக்க. 
யா - எவற்றிற்கும். 

காலா - கால வடிவமாக உள்ளவனே. 

மேயா - எவற்றினுள்ளும் எள்ளில் 
               எண்ணெய் போல் வியாபித்து 
               இருப்பவனே. 

மேதாவீ - அறிவில் மேம்பட்டவனே. 

தாய் ஆவி - எவ்வுயிருக்கும் தாயாகவும் உயிராகவும் உள்ளவனே. 

🏵️இரண்டாம் வரி

வீயாதா - என்றும் அழிவில்லாதவனே. 

வீ - கின்னரம் முதலிய பறவைகள் (தாம் - அசை) 

மே - தன்னருகில் வந்து விழும்படியாக. 

யாழீ - வீணைவாசிப்பவனே. 

யாம் - நாங்கள் மேல் - மேற்கொண்டு. 

ஆகு - ஆவனவற்றிற்கு.

ஆயா - ஆயாதவாறு. 

கா - எம்மைக் காப்பாயாக.

⚜️பொருளுரை:

⏺️யாவற்றுக்கும் கால கர்த்தாவாக விளங்குபவனே. எப்பொருளிலும் எள்ளில் எண்ணெய் போன்று உள்ளும், புறம்பும் ஒத்து நிறைந்திருப்பவனே! சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே!  அறிவில் மேம்பாடு உடைய ஞான பூரணமானவனே!
   அனைத் துயிர்கட்கும் தாயாகவும், 
   உயிராகவும் உள்ளவனே! 

⏺️என்றும் அழிவில்லாதவனே! இன்குரல் எழுப்பும் கின்னரம் முதலிய பறவைகள் தன்னருகின் வந்து விழும்படி வீணைவாசிப்பவனே. 
   பிறவா நிலை அடைய, யாங்கள்      
   மேற்கொண்டு ஆவனவற்றிற்கு   
   ஆராயாதவாறு எங்களைக் காத்தருள் 
   வாயாக.
🙏
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
இதன் தொடர்பதிவில் அடுத்தடுத்த பாடல்களின் பொருளும் உரையும் பற்றி சிந்திக்கலாம்.

⏺️திருஞானசம்பந்தர் தம் திருப்பதிகப் பாடல்களில் ஒரு பக்கம் இறையருளின் அருட்செயல்பாடுகளை உணர்த்தியதும்,மறுபுறம் தமிழ் இலக்கியத்திற்கு பல்வேறு புதுமைகளையும் சிறப்புகளையும் கொண்ட பா அமைப்பை முதன்முதலில் கொண்டுவந்தார் என்பதும் வரலாறு.

🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏

✳️திருப்புகழ் என்றும்அருள் நூல் தந்த அருணகிரியார், அருட்பிரகாச வள்ளலார் முதலிய ஞானிகள் முருகனின் அவதாரமாய்  போற்றிய  அருட் செல்வர் திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

🙏பல்வேறு வலைதளத்தில் உள்ள இணைப்பில் உள்ள செயலிகள்
(http://thevaaram.org/ta/index.php)
மற்றும் பல்வேறு நூல்களின் அடிப்படையில் இப்பதிவில் குறிப்புக்கள் கொண்டும், பேரறிஞர்  வ. த. இராமசுப்பிரமணியம்,  முதலிய ஒப்பற்ற பல பேராசிரியர்கள் நூல்களிலிருந்தும் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டு வழங்கப்பெறுகிறது.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி நூல்களையும் தொடர் கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

🙏நன்றி🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
முதல் பதிவு: பாடல் 1, 2:
https://m.facebook.com/story.php?story_fbid=4247201255355099&id=100001957991710

மாலைமாற்று பதிவு : ஒன்று

#திருமுறைகளில்_தமிழமுதம்:
#சம்பந்தர்_அமுதம்
#தமிழரின்பொக்கிஷம்:
#மாலைமாற்று (பாடல் 1, 2 )
பதிவு : ஒன்று

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.
📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 
🙏நன்றி🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
முதலில் திருஞானசம்பந்தர் பற்றிய சிறு குறிப்பு:

திருஞானசம்பந்தர் :

⚛️கி.பி.6 ம் நூற்றாண்டு இறுதியில் திருஞானசம்பந்தர் அவதரித்தார். இவரின் வருகைக்கு முன்புவரை,  பிற மதங்கள் குறிப்பாக சாக்கியம், சமணம் போன்ற  இறையுணர்வை மறுத்தும், வேறுபட்ட  இறைக் கொள்கைகளையும் கொண்ட, வட ஆதிக்க கலாச்சார பண்புகள் பரவி, சீர்கேடுகள் நிறைந்தும் இருந்து வந்தன.

 🔯இந்த  பிற மதங்களின் பொய்யுரைகளும், போலி வாதங்களையும் கேட்டு அதற்கு கட்டுண்டு கிடந்த மன்னர்களின் அறிவற்ற  அரச நெறிகளையும் நமது பாரம்பரிய தமிழரின் கலாச்சாரங்களும் பண்பாடுகளும் சிதைந்து இருந்ததை மீட்டு சீர்திருத்தியவர், திருஞானசம்பந்தர்.

📝"மூவரருளிய தேவாரக் காலம் பிறகே சிற்றிலக்கியங்கள் எழுந்தன" - பேராசிரியர் மா.ச. அறிவுடை நம்பி.

📚சைவத் திருமுறைகள் தமிழின் பல இலக்கிய வகைகளை உள்ளடக்கியது.
ஏற்கனவே, சம்பந்தர் பாடல்களில் #ஏகபாதம், #எண்ணலங்காரம், 
#மொழிமாற்று, #மடக்கணி, #திருவிராகம், #வழிமொழிதிருவிராகம்,
மற்றும் #திருவெழுக்கூற்றிருக்கை இவை பற்றி ஏற்கனவே சிந்தித்து இருந்தோம் அந்த வகையில் இப்பதிவு #மாலைமாற்று பற்றியது.

'📦தேவாரத்தினை பொக்கிசம் என்று சொல்ல காரணம், அந்த பாடல்களில் தவழும் பக்தி மனம் மட்டுமல்ல படைப்பின் நயமும் தான்'. 

📓'தமிழில் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட அதிசயதக்க செய்யுள் முறைகள் காணப்படுகின்றன. அந்த வகையில்  #சித்திரக்கவி எனப்படும் செய்யுள் வகை மிகச்சிறப்பு'.

📿#மாலைமாற்று 

☣️திருஞானசம்பந்தர் பாடல்களின் அமைப்பு பல்வேறு சிறப்புகள் உண்டு. அதில் சிலவற்றை சித்திரக்கவிகளாக வகைப்படுத்தியிருக்கின்றனர்.   

   #திருவெழுக்கூற்றிருக்கை,
   #மாலைமாற்று, #சக்கரமாற்று.
   #கோமூத்திரி, #கூடச்சதுக்கம், மற்றும்
    இதன் எழுச்சியாக 
    எழுத்து வருத்தனம்(வளருதல்), 
    நாகபந்தம்,  முரசுபந்தம் என்று பல 
    வகைகள் தமிழில் #சித்திரக்கவிகள் 
    இலக்கியத்தில் உண்டு.

⚜️இந்த #சித்திரக்கவி அமைப்பில்,
#திருவெழுக்கூற்றிருக்கை, #சக்கரமாற்று 
#மாலைமாற்று முதலியவை சம்பந்தர் அருளிய  மிக மிக அரியவகை  தமிழ் இலக்கியப் பாடல்களாகும்.

❇️சித்திரக்கவி வரிசையில்  திருஞானசம்பந்தரின்
  #மாலைமாற்று வகை என்பது..

⏺️ஒரு பாடலில் உள்ள இரண்டு அடிகளை முன்னிருந்து பாடினாலும், பின்னிருந்து பாடினாலும், சொல்லும்  பொருளும் மறுபடாமல் இருப்பது.

⏺️மலர்களை கொண்டு மாலை கட்டி முடிக்கும் போது ஆரம்பமும் முடிவும் ஒன்றாக முடியும் அது போல வார்த்தைகளை அடுக்கி வரிகளை முடிக்கும்போது அதே வரிசையில் திரும்ப வாசிக்க அதற்கும் பொருள் வரும்.  மாலை போல முதலும் முடிவும் மாறி மாறி சுற்றிவருவதால் இதை மாலைமாற்று பாடல் என்று அழைக்கப்படுகிறது.

⏺️இவ்வகைக் கவிகளை மிக முயன்று அமைத்துள்ளமையால் இவை மிகைக்கவி என்னும் கூறுவர்.

⏺️சொல்லணியில், #கூடசதுக்கம், #கோமூத்திரி, #மாலைமாற்று இவைகளை மிறைக்கவி என்பர். எளிதில் பொருள் காணமுடியாத பாடல் என்பது அதன் பொருள்.

⏺️இது #வண்ணகம் என்ற அமைப்பு  வகையில்   நெட்டெழுத்து மிகுதியும் பெற்று வரும் 'நெடுஞ்சீர் வண்ணம்"  என்றும் வகைப்படுத்துகின்றனர்: "யாமாமா  நீ  யாமாமா யாழீகா" என்று நெட்டெழுத்து மிகுந்து வருவதை கவணிக்கவேண்டும். 

🔱தமிழில் இது பற்றிய சில வார்த்தைகள்:

சிவயவசி, விகடகவி, திகதி, குடகு, தாத்தா, காக்கா, பாப்பா, மாமா, கைரேகை, தேருவருதே, மாடுஓடுமா, மோருதாருமோ, தோடுஆடுதோ, மேகராகமே, மேளதாளமே, வைபூவை, மாலாபோலாமா,

"பூவாளை நாறு நீ பூ மேக லோகமே
பூநீறு நாளை வா பூ"
இதன் பொருள் :
= பூச்சூடி, திருநீறு கொண்டு, நாளை வா'

🔰ஆங்கிலத்தில் இவ்வகையை PALINDROME என்பர்.
Civic, Radar, Level, Madam, pop, Noon, Refer, Malayalam, Tattarrattat, Anna. Ada, bob, Eve, MAHAMAHAM.
சில வகை சொல்லாடல்களையும் கூட இவ்வகைப் படுத்த முயலுகின்றனர்.
- I am Adam
- A nut for jar  of tuna,
- A Toyota's a Toyota
- Do gees see God, 
- was it a cat I saw

🔱திருஞானசம்பந்தர் அருளிய #மாலைமாற்று பதிகத்தின் எழுச்சியால், பிற்கால அருட்செல்வர்கள் மாதவச்சிவஞானயோகிகள் காஞ்சிப் புராணத்திலும், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை திருநாகைக் காரோணப் புராணத்திலும் இவை போன்ற கவிதைகளை இயற்றி அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

❇️இவ்வகையில் ஒரு பாடலில் இரண்டு வரிகளை அமைத்து 11 பாடல்களைக் கொண்ட ஒரு பதிகம் அற்புதமாக இயற்றி அருளிச் செய்துள்ள தமிழ் ஞானசம்பந்தர் சிறப்பு போற்றத்தக்கது. 

✳️ஒரு மெய்யெழுத்து கூட இப் பதினோறு பாடல்களிலும் இல்லை என்பது இன்னும் சிறப்பு.

❇️மூன்றாம் திருமுறையில் அமைந்துள்ள
(117) 375வது சீர்காழி தலத்தில் அருளிய பதிகம்

✳️ #மாலைமாற்றுப் பதிகம் பற்றி மேலும் சற்று விரிவாக சிந்திப்போம்.

❇️கெளசிகப் பண் அமைந்த பதிகம்.

📖(இந்தப் பதிவில் முதல் இரண்டு பாடல் பொருள் உரை பற்றியும் இந்த பதிவிலும், அடுத்தடுத்த தொடர்ந்தும் சிந்திக்கலாம்).

முழு பதிகம்:
1
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா
2
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா
3
தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா
4
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ
5
யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா
6
மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா பொலேமே
7
நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ
8
நேணவரா விழயாசைழியே வேகதளோய ளாயுழிகா
காழியுளாய ளேதகவே யேழிசையாழவி ராவணனே
9
காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா
10
வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே

தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுவே
11
நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயா தமிழாகரனே

திருச்சிற்றம்பலம்.

❇️இப்பாடல்களின் பொருளும் உரையும் பற்றி சிந்திப்போம்

✳️*திருநாவுக்கரசரொடு திருக்காழியில் வழிபட்டிருந்து, பிரியாத நண்பொடும் அவர் பலதலங்களைத் தரிசிக்கப் போந்த பின் செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுட்களை அருளினார் சண்பைவேந்தர். அவற்றுள் ஒன்றாக வந்த சொற்சீர் மாலைமாற்று இத்திருப்பதிகம்.*
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
1
முதல் பாடல்: 1257
முதல் வரி - 1-2.

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

பொருள்:
🏵️முதல்வரி:
யாமாமாநீ   யாமா..
= யாம் ஆமா  நீ ஆம் ஆம்

யாம்  -   ஆன்மாக்களாகிய நாங்கள்         
              கடவுளென்றால். 
ஆமா -  அதுபொருந்துமா? 
நீ        -   நீயே கடவுளென்றால். 
ஆம் ஆம் - முற்றிலும் தகுவதாகும்.  

⏺️ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால் அது பொருந்துமா? நீயே ஒப்பில்லாத கடவுளென்றால் அது முற்றிலும் தகும்

மாயாழீகாமா
= மா+ யாழ்   காமா

மாயாழீ - பேரியாழ் என்னும் வீணையை     
                  வாசிப்பவனே. 
காமா - யாவரும் விரும்பத்தக்க     
              கட்டழகனே. 

⏺️பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே! யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே!

காணாகா
= காண்  +  நாகா

காண் -     (தீயவும் நல்லவாம் சிவனைச் 
                  சேரின் என்பதை யாவரும்) 
                  காணுமாறு பூண்ட. 
நாகா -     பாம்புகளை யுடையவனே.

⏺️(பகைப்பொருள்களும் சிவனைச் சாரின் பகை தீர்ந்து நட்பாகும் என்ற உண்மையினை) யாவரும் காணுமாறு பாம்புகளை உடையவனே.

🔯இதன் பிறகு கடைசி எழுத்திலிருந்து மாற்றி வார்த்தைகளைக் கோத்து  இரண்டாவது வரியாக  அமைத்துள்ளார்.

🔱இது போன்றே எல்லா பாடல்களும் அமைந்துள்ளதை கவணிக்க வேண்டும்.

வரி : 2.

காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

காணாகாமா
= காண (மல்) + காமா =காமன்)

காணாகாமா - கை, கால் முதலிய 
                           அவயவங்கள்     
                           காணாதனவாச் 
                           செய்தகாமனை 
                           உடையவனே. (மன்மதனை
                           அழித்தவனே)

காழீயா - சீகாழிப்பதியில் 
                எழுந்தருளியிருப்பவனே. 

மாமாயா = மா + மாயா
மாமாயா - உயிர்களுக்கு யாவும் 
                    மெய்யென்று தோன்றுமாறு    
                    மாயத்தை புரிபவர்
நீ -     எம்மை விடுவிப்பாயாக.  
மா -       அரியதாகிய. 
மாயா - மாயைமுதலிய 
              மலங்களினின்றும். 

🔱இரண்டாவது வரியின் முழுப் பொருள் :

⏺️மன்மதனை அழித்தவரே
   காழிப்பதியில் விளங்குபவரே
   உயிர்களுக்கு யாவும் மெய்யென்று 
   தோன்றுமாறு மாயத்தை புரிபவரே.
   மாயமலத்திலிருந்து எம்மை  
   விடுவிப்பீராக.
🙏
முழு பொருள் : 1-2 :

⏺️யாம் உயிர்கள். நீவிர் தலைவர்
   யாழ் கொண்டு எம்மை வசீகரிப்பீர்
   
⏺️மன்மதனை காணாமல் செய்தீர்.
   நாகத்தை அணிந்திருப்பவர்.
   காழிப்பதியில் விளங்குவீர்.
   மாயத்தைப் புரிபவர்.
   எம்மை மாயயை மலத்திலிருந்து    
   வீடுவிப்பீராக.

🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
2
பாடல். 1258
🔱இரண்டாம் பாடல்:

யாகாயாழீ  காயாகா  தாயாராரா தாயாயா
யாயாதாரா  ராயாதா காயாகாழீ  யாகாயா

⚜️முதல்வரி.
யாகாயாழீ  காயாகா  தாயாராரா தாயாயா

யாகா + யாழி
யாகா - யாகசொரூபியே. 
யாழீ   - யாழ்வாசிப்பவனே. 

காயா (கா)
காயா - அடியாருக்கு அருள வருகையில் உருவத்திருமேனி கொள்பவனே.

(கா)தாயாராரா = கா+தா+ யார் + ஆர் + ஆ
(கா)தா - துன்பத்தை கொல்பவர்
 (அடியார் துன்பம் நீக்குபவர்).
 (காதுதல் -     கொல்லுதல். வடசொல்)
யார் ஆர் - எவரெவருக்கும். 
ஆ - (பெற்றவள்) ஆகும்.

தாயாயா   = தாய் + ஆயாய் 
தாய் ஆயாய் - தாயானவனே.

🔰முதல் வரி பொருள் :

⏺️வேள்வி வடிவினனே. யாழ் வாசிப்பவனே. அடியார்கட்கு அருள வரும்பொழுது உருவத்திருமேனி கொள்பவனே. துன்பத்தை நீக்கும் கருத்தாவே. அனைத்துயிர்க்கும் தாயானவனே

🔰இரண்டாவது வரி:
யாயாதாரா  ராயாதா காயாகாழீ  யாகாயா

யாயா தாரா = உயிர்களுக்கு ஆதாயம் 
            செய்து நற்கதிக்கு உரித்தாக 
             செய்பவர்
(ஆ) ராயாதா = ஆய்ந்து அறிவதற்கு 
              அப்பற்பட்ட உயர் பொருளாய் 
              விளங்குபவர்.
ஆயா - ஆராய முடியாத. 
தார்    -  மாலை. 
ஆர் ஆயா - ஆத்திப்பூவாகக் 
               கொண்டவனே. (சிவனுக்குரிய 
                மாலைகளில் திருவாத்தியும்       
                 ஒன்று) 
காயா = எல்லா வடிவங்களிலும் விளங்குபவர்
காழீயா = காழியில் வீற்றிருப்பவனே
காயா =கா + ஆய் =-எம்மைக் காப்பாயாக.

🔱இரண்டவது வரிபொருள் :

⏺️ஆத்திப்பூ மாலைஅணிந்துள்ளவனே.
   உயிர்களுக்கு ஆதாயம் தரும் நற்கதி   
   செய்பவர்.  சீகாழி என்னும்      
   திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே.    
   துன்பங்கள் எவற்றினின்றும் எம்மைக் 
   காப்பாயாக.
🙏
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
இதன் தொடர்பதிவில் அடுத்தடுத்த பாடல்களின் பொருளும் உரையும் பற்றி சிந்திக்கலாம்.

⏺️திருஞானசம்பந்தர் தம் திருப்பதிகப் பாடல்களில் ஒரு பக்கம் இறையருளின் அருட்செயல்பாடுகளை உணர்த்தியதும்,மறுபுறம் தமிழ் இலக்கியத்திற்கு பல்வேறு புதுமைகளையும் சிறப்புகளையும் கொண்ட பா அமைப்பை முதன்முதலில் கொண்டுவந்தார் என்பதும் வரலாறு.

🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏

✳️திருப்புகழ் என்றும்அருள் நூல் தந்த அருணகிரியார், அருட்பிரகாச வள்ளலார் முதலிய ஞானிகள் முருகனின் அவதாரமாய்  போற்றிய  அருட் செல்வர் திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

🙏பல்வேறு வலைதளத்தில் உள்ள இணைப்பில் உள்ள செயலிகள்
(http://thevaaram.org/ta/index.php)
மற்றும் பல்வேறு நூல்களின் அடிப்படையில்  குறிப்புக்கள் கொண்டும்
மற்றும் பேரறிஞர்களாகிய, வ. த. இராமசுப்பிரமணியம்,  முதலிய ஒப்பற்ற பல பேராசிரியர்கள் நூல்களிலிருந்தும் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டு வழங்கப்பெறுகிறது.

🙏 இது ஒரு அறிமுக பதிவே ; மேற்படி நூல்களையும் தொடர் கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

🙏நன்றி🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

திருத்தாளச்சதி பதிவு

#திருமுறைகளில்_தமிழமுதம்:
#சம்பந்தர்_அமுதம் 3.126

#தமிழரின்பொக்கிஷம்
பதிவு : ஆறு 

#திருத்தாளச்சதி பற்றிய பதிவு.

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.
📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 
🙏நன்றி🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
#திருவிராகம்,# வழிமொழிதிருவிராகம்,
#வண்ணகம்,#முடுக்கியல்,#அடுக்கியல் 
இவை பற்றி முன்பதிவுகளில் சிந்தித்தோம். தொடர்ந்து

💠#திருத்தாளச்சதி என்ற இசை வகை பதிகப் பாடல் விளக்கங்களயும், சிறப்புகளையும் இப்பதிவில் பார்ப்போம்.

🔹திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய தேவாரப்பதிகங்கள் பலவகையில் சிறப்புற்றவை.

🌀ஒப்பற்ற பக்தி இலக்கியமாக மட்டும் அமையவில்லை.
🥀வடிவ அமைப்பு, இசைப்பாடல் அமைப்பு, பொருள் அமைப்பு என்று தமிழ் இலக்கியத்தின் ஆதாரமான பல படிகளில் உயர்ந்து தமிழின் பொக்கிஷமாக நிற்கிறது.

🍃இசையமைப்பு முறையில் அமைந்த #திருவிராகம், #வழிமொழிதிருவிராகம், #யாழ்முறி, என்ற வகையில் 

🌹#திருத்தாளச்சதி என்னும் வகைப் பற்றி இப்பதிவில் சிந்திக்கலாம்.
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
மூன்றாம் திருமுறையில் 126 வது பதிகம் திருக்கழுமலம் என்ற சீர்காழிப்பதியில் அருளியது. 

🌺வியாழக்குறிஞ்சி என்ற பண் அமைப்பில் உள்ளது.

🌸இப்பதிகம் 11 பாடல்களைக் கொண்டது.

🏵️21 பண்கள் செறியும் இசையியல்பு கொண்டது.

🌼இசைநயம், தாள அமைப்பிலும், சந்த அமைப்பிலும் மிகச்சிறந்தது.

🌷#வண்ணம் என்ற இலக்கிய வகையில்
இப்பாடலை #அகைப்புவண்ணம் என்று வகைப் படுத்துகிறார்கள்.

🍁#அகைப்புவண்ணம் : ஒரு பக்கம் நெடில் மற்றொரு பக்கம் குறில் பயின்று வந்து ஓசை அறுத்து அறுத்து ஓடுவது என்பதாகும்.
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
பாடல் : 1359
பந்தத்தால் வந்தெப்பால்  பயின்று நின்ற வும்பரப் 
பாலே சேர்வாய் யேனோர்கான்   பயில் கண முனிவர்களும்

சிந்தித்தே  வந்திப்பச்  சிலம்பின்மங்கை  தன்னொடும்
சேர்வார்நானா  ணீள்கயிலைத் திகழ்தரு
பரிசதெலாம்

சந்தித்தே  யிந்தப்பார்  சனங்கள்நின்று  தங்கணால்
தாமேகாணா  வாழ்வாரத் தகவு செய்த வனதுஇடம்

கந்தத்தால்  எண்திக்கும்  கமழ்ந்திலங்கு  சந்தனக் 
காடார்பூவார்  சீர்மேவும்  கழுமல வளநகரே.
                                           - 3.126.1
அமைப்பு விளக்கம்:

இந்தப் பாடலில் முதல் பகுதியில்

பந்தத்தால் வந்தெப்பால் = நெடில் மிகுதியாகவும்

அடுத்த பகுதி
பயின்று நின்ற வும்பரப் = குறில் பெற்றும்

மீண்டும்
பாலே சேர்வாய் யேனோர்கான் = நெடில் மிகுதியாகவும்

பிறகு
பயில் கண முனிவர்களும் = (மீண்டும்) குறில் பெற்றும் வருகிறது

🌟இந்நிலையில் ஓசை விடுபட்டு விடுபட்டு வரும் சந்தவகையும் உணர்ந்து சிந்திக்க வேண்டும்.

💫இவ்வகைப் பாடல்கள் நாட்டிய பாடலுக்குரியன என்றும் பிரிப்பர்.
சதிச் சொற்கட்டுகள் நிறைந்தது.

✨இதையே #அகைப்புவண்ணப் பாடல் என்கிறார்கள் இசை இலக்கிய ஆராய்ச்சியாளர்கள்.

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
🌳இப்பதிகத்தின் அணைத்து பாடல்களும் இவ்வகை தாளச் சிறப்பு பெற்று விளங்குகிறது. இதற்கு மகுடம் வைத்து இந்த இசைப்பாட்டு 21 இசையில்பில் வேறுபட்டுள்ளதை தமிழ் ஞானசம்பந்தர்
பெருமான் இதன் திருக்கடைக் காப்பு - 11வது - பாடலில் குறிப்பிடுகிறார்.

அப்பாடல்: 1369
கஞ்சத்தேன் உண்டிட்டே  களித்துவண்டு
சண்பகக்
கானே தேனே போறாரும்  கழுமல நகரிறையைத்

தஞ்சைச்சார்  சண்பைக்கோன்  
சமைத்தநற் கலைத்துறை
தாமேபோல்வார்  தேனேரார்  தமிழ்விர
கனமொழிகள்

எஞ்சத்தேய்  வின்றிக்கே  யிமைத்திசைத்த  மைத்தகொண்டு
ஏழேழே  நாலேமூன்று  இயலிசை இசையியல்பா

வஞ்சத்தேய் வின்றிக்கே  மனம்கொளப்
பயிற்றுவோர்
மார்பே சேர்வாள்  வானோர் சீர் மதிநுதர் மடவரலே.
            
                                          - 03.126.11
💠இப்பாடலின் பொருள் விளக்கம்:

🌿தாமரை மலரில் உள்ள தேனை உண்டு களித்த வண்டானது, சண்பகச் சோலையில் தேன் பருகும் வண்டுடன் பெரும் தன்மை உடைய கழுமல நகர்.
🌿  இங்குள்ள இறைவனை, நன்மை ஆர்ந்த தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் மொழிகள், தேன் போன்று விளங்கி குறைவில்லாது இசையமைத்ததாகிய
🌿இச் சொற்கள் கொண்டு 21 பண் செறியும் இசையின் இயல்பால் வேறுபாடு இன்றி மன விருப்பத்துடன் உரைப்பவர்கள் இதயத்தில் திருமகள் உறைவாள்.

கஞ்சம் = தாமரை
எஞ்ச= விஞ்சி நிற்றல்
வஞ்சம் = வேறுபாடு
இமைத்து = விளங்கும்படி
ஏழேயேழே நாலே மூன்று = 7+7+4+3 = 21.

💠பிற்கால தமிழ் இலக்கியத்தின் சந்த வகை பாடல்களுக்கு அடிப்படையாகவும்,

✳️திருப்புகழ் என்றும்அருள் நூல் தந்த அருணகிரியார் முதலிய ஞானிகள் போற்றிய 

♦️அருட் செல்வர் திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

🙏நன்றி🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
இசைராகப் பதிகம் பற்றி முன்பதிவுகள்:
https://m.facebook.com/story.php?story_fbid=4188662247875667&id=100001957991710

வழிமொழி திருவிராகம் - பதிவு : 5

#திருமுறைகளில்_தமிழமுதம்:
#சம்பந்தர்_அமுதம்

#தமிழரின்பொக்கிஷம்:
பதிவு : ஐந்து

#வழிமொழி_திருவிராகம், பற்றிய பதிவு.
மூன்றம் திருமுறை பதிகம்: 325
பாடல்கள் 9, 10, 11 மற்றும் 12 பாடல்கள்.

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.
📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 

🙇‍♂️நன்றி🙏

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.

#தமிழரின்பொக்கிஷம்:

#திருவிராகம்,# வழிமொழிதிருவிராகம்,
#வண்ணகம்,#முடுக்கியல்,#அடுக்கியல் 
இவை பற்றி முன்பதிவுகளில் சிந்தித்தோம்.
தொடர்ந்து
#வழிமொழிதிருவிராகம் பதிகப் பாடல் விளக்கங்களயும், சிறப்புகளையும்
தொடர்ந்து இப்பதிவில் பார்ப்போம்.

📕மூன்றாம் திருமுறையில் வரும்
பாடல்கள்:  714 - 725
பதிகம் 325    தலம் திருப்பிரமபுரம்.
'சுரர் உலகு நரர்கள்பயில் தரணிதல'
எனத் தொடங்கும் பதிகப் பாடல்கள்.

⚜️வழிமொழி திருவிராகம் என்னும் வகை சேர்ந்தது.

🅾️#வழிமொழிதிருவிராகம்:
⏺️இலக்கணம் :

⏏️குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத் தொடுப்பது இவ்வகையாம்.
(முடுகிய என்பது வேகமாக ஓடும் தாள அமைப்பு எனக் கொள்ளலாம்)

🔸இதன் ஓசை அமைப்பில் பாடல் 

தனனதன  தனனதன  தனனதன  
              தனனதன    தனனதனனா

என அமைகிறது.

இப்பதிகத்தின் 1, 2, 3, 4 பாடல்கள் பற்றி நான்காவது முன்பதிவிலும்

இப்பதிகத்தின் 5, 6, 7, 8 பற்றி ஐந்தாவது பதிகத்திலும்  

இப்பதிவில்,
இப்பதிகத்தின் 9, 10, 11 மற்றும் 12 வது பாடல்களின் விளக்கங்களையும் சிறப்புகளையும் பற்றி தொடர்ந்து சிந்திக்கலாம்.

🔵 இதில் திருஞானசம்பந்தர் 'வழிமொழிகள் மொழி தகையவே' என்று குறிப்பிட்டு சிறப்பிப்பதாலே இந்தப் பதிகம் வழிமொழி திருவிராகம் என்னும் பெயர் சூட்டப்பட்டது.

⏺️சந்தப்பாக்களின் சீர்களில் ஒவ்வொர் உயிரும் ஓரசை என்பதால் ஓசை நயமும் தாளமும் நிறைய அமைத்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.

🔹திருஞானசம்பந்தப்பிள்ளையாரை முருகனின் திரு அவதாரமாகக் கொண்டவர் அருணகிரிநாதர். இதைக் குறிப்பிட்டு பாடல்கள் செய்துள்ளார். 

✔️இராமலிங்கசுவாமிகளும் இக்கருத்தை ஏற்கிறார்.

🔷இது போன்ற சந்தப் பாடல்களை கற்றுணர்ந்து அருணகிரியார் தம்முடைய திருப்புகழ் பாடல்களை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

⏺️இந்தப் பதிகம் 12 பாடல்கள் கொண்டது.

⏹️சீர்காழிப்பதியின் 12 பெயர்கள் வந்த வழியை -  வரலாற்றிணை - விளக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.

🔹சாதாரி என்ற பண் வகையினது.

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐

பாடல். 9.
💠சண்பை:
சண்பை என்னும் கோரையால் உண்டான புண்கள் தீருமாறும் கண்ணபிரான் போற்றி வழிபட்டுச் சாபத்தை நீக்கியதால், சண்பை என்னும் பெயர் பெற்ற திருத்தலமாகும்.

✳️'ண' சீர் அமைப்புள்ளது.

பாடல். 722

விண்பயில  மண்பகிரி   வண்பிரமன் எண்பெரிய  பண்படைகொண்  மால்

கண்பரியும்  ஒண்பொழிய நுண்பொருள்கள் 
தண்புகழ்   கொள்  கண்டனிடமாம்

மண்பரியும்  ஒண்பொழிய   நுண்புசகர் புண்பயில    விண்படரஅச்

சண்பைமொழி  பண்பமுனி கண்பழிசெய் பண்புகளை சண்பைநகரே.
         
                                               - 3:325:9 (722)
பொருள் :

மண்பகிரி - மண்ணைப்பிளக்கும் பன்றி ( யாகி ). 
எண் பெரிய - மிக்க மதிப்புடைய. 
பண் - தகுதியான, 
படைகொள் - சக்கராயுதத்தைக் கொண்ட. மால் - திருமால் ( பூமியிற் சென்றும் )

வண் பிரமன் - சிறந்த பிரமன். விண்பயில - ஆகாயத்தில் சென்றும்,

கண்புரியும் - கண்ணாற் பற்றக்கூடிய. 
ஒண்பு - ஒளி. 
ஒழிய - நீங்க. 
நுண் பொருள்கள் - அவற்றிற்கு எட்டாததாகிய நுண்ணிய பொருள்களாக. தண்புகழ்கொள் - இனிய கீர்த்தியைக்கொண்ட. 
கண்டன் இடமாம் - அகண்டனாகிய சிவபெருமானின் இடமாகும்.  

மண்பரியும் - உலகத்தைக் காக்கின்ற, ஒண்பு ஒழிய - ஆண்மை நீங்க. 
நுண்பு - அற்பர்களாகிய. 
சகர் - யாதவர்கள். 
புண்பயில - ஒருவரோடு ஒருவர் அடித்துக் கொண்டு செத்து. 
விண்படர - விண்ணுலகை அடைய. 

பண்பமுனி தவப்பண்பையுடைய துருவாசமுனிவர். 
கண்பழி செய் - கருதத்தக்க பழியைச் செய்த. 
பண்பு - சாபத்தை. 
களை - நீக்கியதனால். 
சண்பை மொழி - சண்பையென்று மொழியப்படும் சண்பைநகர்.
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
பாடல். 10
♦️காழி: ஆடலில் தோற்ற காளிக்கும் அருளிய காழி நகர்.

✳️'ழ' கரசீர் அமைப்பு.

பாடல்: 723

பாழியுறை   வேழநிகர்    பாழமணர் 
சூழுமுடல்     ஆளர்உணரா

ஏழினிஇசை    யாழின்மொழி  ஏழையவள் வாழும்இறை   தாழுமிடமாங்

கீழிசைகொள்   மேலுலகில்   வாழரசு சூழரசு    வாழஅரனுக்கு

ஆழியசில்  காழிசெய   ஏழுலகில் ஊழிவளர்  காழிநகரே.

                                   - 3:325:10 (723)
பொருள் :

பாழி உறை - பாழியில் தங்கும், 
வேழம் நிகர் - யானையை யொத்த, 
பாழ் அமணர் - பாழ்த்த அமணர்களும். சூழும் - கூட்டமாக உள்ள, 
உடல் ஆளர் - உடலைப் பாதுகாப்போராகிய பௌத்தர்களும், உணரா - உணராத, 

ஏழின் இசை - ஏழு சுரங்களையுடைய, யாழின்மொழி - யாழ் போற் பேசுகின்ற, ஏழையவள் - பெண்ணாகிய அம்பிகையுடன், 
வாழும் இறை - வாழ்பவராகிய சிவபெருமான், 
தாழும் - தங்கும், ( இடம் ஆம் ) 

கீழ் ( உலகில் ) கீழ் உலகில், 
சூழ் - சூழ்ந்த அரசு - அரசர்களும், இசைகொள் - புகழ்கொண்ட, 
மேல் உலகில் மேல் உலகத்தில், 
வாழ் - வாழ்கின்ற, 
அரசு - அரசனாகிய இந்திரனும் ; 
வாழ - ( காளியின் துன்புறுத் தலினின்று ) வாழும் பொருட்டு ( நடனம் ஆடுதலில் ) அரனுக்கு சிவபெருமானுக்கு,

ஆழிய - ஆழ்ந்த, தோற்ற, 
சில்காழி - சிலகோவைகளையுடைய மேகலாபரணம் அணிந்தவளாகிய அக்காளி, 
செய - தன் குற்றம் நீங்கும்படி வந்துபோற்ற, அருள் பெற்ற செயல் ஏழுலகில் - சப்த லோகங்களிலும், 
ஊழி - பல ஊழி காலமாக, 
வளர் - பெருகும்
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
பாடல். 11 
💠கொச்சை: பராசர முனிவர் தனதுடல் கொச்சையான துர்நாற்றமும், பழியும் போகும் பொருட்டு பூசித்த தலம்.

✳️'ச்' என்ற சீர் அமைப்புள்ளது.

பாடல் : 11

நச்சரவு  கச்செனவ    சைச்சுமதி  உச்சியின்மி   லைச்சொருகையான்

மெய்ச்சிரம்  அணைச்சு உலகில் நிச்சமிடு பிச்சையமர்  பிச்சன் இடமாம்

மச்சமத  நச்சிமதம்  அச்சிறுமி யைச்செய்தவ   அச்சவிரதக்

கொச்சைமுர   வச்சர்பணி   யச்சுரர்கள்  நச்சிமிடை கொச்சைநகரே.

                                         - 3:325:11 (724)
பொருள் :

நஞ்சையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டி, சந்திரனைத் தலையிலே சூடி, ஒரு கையில் பிரமகபாலத்தைத் தாங்கி, உலகிலே நாடோறும் இடுகின்ற பிச்சையை விரும்பும் பித்தனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், மீன் நாற்றத்தை விரும்பும் மச்சகந்தியை வசமிழந்து ஆற்றினிடையில் புணர்ந்த கொச்சைத் தன்மைக்குக் கதறி அது நீங்க பராசரமுனிவர் வணங்க, தேவர்களும் விரும்பி அணுகும் கொச்சைவயம் எனப்படும் திருத்தலமாகும்.

குறிப்புரை:

நச்சு அரவு - நஞ்சு அரவு, நஞ்சையுடைய பாம்பை : 
கச்சென - கச்சாக. 
அசைச்சு - அசைத்து - கட்டி, 
மதி - சந்திரனை, 
உச்சியில் - தலையில், 
மிலைச்சு - மிலைத்து, மிலைந்து, 
ஒரு கையான் - ஒரு கையில் 

மெய் - ( பிரமன் ) உடம்பினின்றும் ( கிள்ளிய ) 
சிரம் - தலையை, 
அணைச்சு - தாங்கி, 
உலகில் - உலகிலே, 
நிச்சம் - நாடோறும், 
இடு - இடுகின்ற, 
பிச்சை - பிச்சையை, 
அமர் - விரும்பும், 
பிச்சன் இடமாம் - பித்தனாகிய பெருமானின் இடமாகும். 

மச்சம் - மீனின். 
மதம் - நாற்றத்தை, 
நச்சி - விரும்பி. 
மதமச்சிறுமியை - வலையர் சிறுமியை, அச்சவரதம் - ( அச்சத்ததைத் தரும், விரதம் ) அச்சத்தைத் தரும் கொள்கையின் பயனாக நேர்ந்த.

கொச்சை - கொச்சைத் தன்மைக்கு. 
முரவு - கதறிய . 
அச்சர் - பராசர முனிவர். 
பணிய - வணங்க ( அதுகண்டு ) 
சுரர்கள் - தேவர்களும். 
மிடை - நெருங்குகின்ற

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
பாடல் 12.
💠கழுமலம்: உரோமச முனிவர் பூசித்து உலக உயிர்களின் மலங்களைக் கழுவும் (நீக்கும்) வரம் பெற்ற தலம்.

🎶மிக அற்புதமான பாடல். மிக மிக முக்கியமானது. இப்பாடலை திரும்பத் திரும்ப ஒதிக்கொண்டுவந்தால் நாவிற்கும் உள்ளத்திற்கும் அருமருந்து. வாய்பேச்சுக் கோளாறு இன்றி நல்ல உரையாடல், குரல் வளம் நிச்சயம் கிடைக்கும்.
👱குழந்தைகளுக்கு அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டிய பாடல்.

✳️தமிழின் சிறப்பு எழுத்தாகிய 'ழ' கரத்தைக் கொண்டு சீர் அமைத்துள்ளார்.

♦️இப்பாடலில் தான்  'வழிமொழிகள் மொழி தகையவே' என்று இப்பதிகத்தின் பண் இசை அமைப்புக்கு அவரே பெயர் சூட்டியருளிய பாடல்.

⏹️இதுவே வழிமொழி திருவிராகம் என்ற இசை அமைப்பு பாடல் முறைக்கு ஆதாரப் பாடல் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

⚜️பிற்கால தமிழ் இலக்கியத்தின் இவ்வகைப் பாடல்களுக்கு மிக முக்கியமான அடிப்படையாக அமைத்தருளிய திருக்கடைக்காப்பு பதிகம்.

🔹மூன்றாம் திருமுறை: பதிகம்: 325 
பாடல். 725:

ஒழுகலரிது   அழிகலியில்   உழியுலகு பழிபெருகு    வழியை       நினையா

முழுதுடலில்     எழுமயிர்கள்   தழுவுமுனி குழுவினொடு  கெழுவுசிவனைத்

தொழுதுலகில்  இழுகுமலம்  அழியும்வகை 
கழுவுமுரை        கழுமலநகர்ப்

பழுதிலிறை       யெழுதுமொழி தமிழ்விரகன் 
வழிமொழிகள்   மொழி தகையவே.

பொருள்:

நல்லொழுக்கத்தில் நிற்றல் அரிதாகி அழிகின்ற கலிகாலத்தில் உலகில் பழிபெருகுதலை நினைந்து வருந்தி, உடல் முழுவதும் முடி முளைத்துள்ள உரோமச முனிவர் தம் குழுவினருடன் அங்குத் தங்கி, சிவபெருமானைத் தொழுது, உலக இச்சைக்கு இழுக்கின்ற மலங்கள் நீங்கிச் சிவஞான உபதேசம் பெற்றதால் கழுமலம் எனப் போற்றப்படும் திருத்தலத்தினை வணங்குவோரின் குற்றம் இல்லையாகச் செய்கின்ற தலைவனும், எழுதும் வேதமெனப் போற்றப்படும் தமிழ் வல்லவனுமாகிய ஞானசம்பந்தன் அருளிய இந்த வழிமொழித் திருவிராகப் பாசுரங்கள் பாடிப் பயன்பெறும் தன்மை உடையன.

அழிகலியில் - அறம் அழிகின்ற கலியுகத்தில், 
உலகு உழி - உலகினிடத்தில், 
ஒழுகல் அரிது - அறவழியில் ஒழுகுவது அரியது ( என்றும் ) 
பழிபெருகு வழியை - பாவம் பெருகுகின்ற வழியையும், 
நினையா - நினைந்து. 

முழுது உடலின் - உடல் முழுவதும், 
எழும் மயிர்கள் - முளைத்த
உரோமங்களைக்கொண்ட, 
முனி - உரோமச முனிவர், 
குழுவினொடு - தமது கூட்டத்தொடு. ( வந்து ) 
கெழுவு - அங்கே தங்கிய. 
சிவனை - சிவபெருமானை 

தொழுது - வணங்கி, 
உலகில் - உலக இச்சையில், 
இழுகும் - வழுக்கச் செய்கின்ற. 
மலம் அழியும் வகை - பாசங்கள் நீங்கும் விதம். 
கழுவும் - போக்கிய, 
உரை - வார்த்தையை ( புகழை ) யுடைய. கழுமலநகர் - கழுமலமென்னும் பதியின்,

பழுதில் இறை - வணங்குவோரின் குற்றம் இல்லையாகச் செய்கின்ற தலைவனும், எழுதும் மொழி - எழுதக்கூடிய வேதமொழியாகிய 
தமிழ் விரகன் - தமிழில் வல்லவனுமாகிய திருஞான சம்பந்தனேன். 
வழி மொழிகள் - வழிமொழித் திருவிராகப் பாசுரங்கள். 
மொழி தகையவே - பாடிப்பயன்பெறும் தன்மை உடையனவாம்.

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐

💠பிற்கால தமிழ் இலக்கியத்தின் அடிப்படையாகவும்,
✳️திருப்புகழ் என்றும்அருள் நூல் தந்த அருணகிரியார் முதலிய ஞானிகள் போற்றிய 
♦️அருட் செல்வர் திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

🙏நன்றி
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.🙇‍♂️🙏🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
மூன்றாம் பதிவின் #வழிமொழிதிருவிராக பாடல்கள்: 1 முதல் 4 வரை விளக்கம் காண:
https://m.facebook.com/story.php?story_fbid=4176651552410070&id=100001957991710
நான்காம் பதிவின் #வழிமொழிதிருவிராக பாடல்கள்: 5 முதல் 8வரை விளக்கம் காண:
https://m.facebook.com/story.php?story_fbid=4181360875272471&id=100001957991710