Monday, October 25, 2021

ஜெய்ப்பூர் - SPLENDORS OF INDIA - Part 1

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#JAIPUR
4.9.2021 
பகுதி - 1

ஜெய்ப்பூர்💥* 

செய்ப்பூர் அல்லது ஜெய்ப்பூர் (Jaipur) இந்திய நாட்டின் மேற்கிந்தியப் பகுதியில் அமைந்த இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமாகும். இது சிவப்பு நகரம் என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகிறது. மேலும் ஜெய்ப்பூர் மாவட்டத்தின் தலைமையிட நகரமாகும். ஜெய்ப்பூர் மாநகராட்சி, இந்நகரத்தை நிர்வகிக்கிறது. 

முகலாயப் பேரரசு வீழ்ச்சியடைந்த காலத்தில் ஆம்பர் இராச்சிய மன்னர் இரண்டாம் மான் சிங் ஆட்சிக் காலத்தில், 1727ல் ஜெய்ப்பூர் நகரம் நிறுவப்பட்டது. 

ஜெய்பூர் இராச்சியம் (Jaipur State) 1128ல் நிறுவப்பட்டது. பிரித்தானிய இந்தியா ஆட்சியில் சுதேச சமஸ்தானமாக விளங்கியது. பின்னர் இந்திய விடுதலைக்குப் பின்னர் 1948ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஜெய்பூர் இராச்சியத்தை ஆம்பர் இராச்சியம், தூந்தர் இராச்சியம் மற்றும் கச்வாகா இராச்சியம் என்றும் அழைப்பர். 

ஜெய்பூர் இராச்சிய மன்னர்கள் முதலில் ஆம்பர் கோட்டையைக் கட்டி இராச்சியத்தை நிர்வகித்தனர். இராச்சியத்தின் பாதுகாப்பிற்காக, பின்னர் தலைநகரத்தை செய்ப்பூர் 
நகரத்திற்கு மாற்றி ஜெய்ப்பூர் அரண்மனை, ஜெய்கர் கோட்டை மற்றும் நாகர்கர் கோட்டைகளை கட்டினர். மேலும் ஹவாமஹால், ஜல்மகால் மற்றும் ஜந்தர் மந்தர் (ஜெய்ப்பூர்) முதலிய அழகிய கட்டிடங்கள் நிறுவினர்.
மேற்கு இந்தியாவில் பெரும்பான்மையானவர்கள் இந்து மதத்தைப் பின்பற்றுகிறார்கள். 

#பயணஅனுபவக்குறிப்புகள் 

4.09.2021 2.30.AM.
DURGAPURA Railway Station
#GEETHABHAWAN
3.09.2021 அன்று ஜோத்பூரிலிருந்து புறப்பட்டு 4-09-2021 அன்று விடியர்காலை 2.30 மணி அளவில் ஜெய்பூர் மிக அருகில் உள்ள DURGAPURA Railway Station வந்து சேர்ந்தோம். 

இங்கிருந்து #கீதாபவன் GEETHA BHAWAN என்ற இடத்திற்கு பஸ்ஸில் வந்தோம். 

இது ஒரு Trust க்கு சொந்தமான இடம். இங்கு வந்து தங்கினோம். 
இங்கு சுமார் 3 பெரிய Hall கள் உள்ளன. 
இங்குதான் அனைவரும் தங்கவைக்கப்பட்டனர். 

10 தனி அறைகளும் இருக்கின்றன.
அதில் ரூ 1500 கொடுத்து 4 பேர் தங்கிக்கொண்டோம். 

காலையில் எழுந்து குளித்து 8.30 மணி அளவில் ஜெய்ப்பூரில் உள்ள சுற்றுலா இடங்களான,
1. #அமர்கோட்டை/ஆம்பர்கோட்டை💥*
2. #ஜல்மகால்
முதலிய இடங்களைப் பார்த்துவிட்டு நகர் பகுதியில் உள்ள Handicrafts வளாகத்தில் மதிய உணவு முடித்துவிட்டு மீண்டும் மதியம் முதல் மாலை வரை
3. #ஜந்தர்மந்தர்
4. #ஹவாமஹால்
5. #நகரஅரண்மனை
முதலிய இடங்களைப் பார்த்துவிட்டு
மீண்டும் Geethamahal வந்து இரவு தங்கி 5.09.2021 காலை 8.30 அளவில் புறப்பட்டு ஜெய்ப்பூரில் உள்ள
#பிர்லா மந்திர்,
#கணேஷ்மந்திர் , #துர்க்காமந்திர்
முதலிய இடங்களைப் பார்த்துவிட்டு,
DURGAPURA Railway Station வந்து மதியம் #உதயப்பூர் புறப்பட்டோம். 

பொதுவாக ஜெய்பூர் நகரத்தில் காணப்படும் பெரும்பாலான கட்டிடங்கள் வீடுகள், வணிகக் கட்டிடங்கள் அப்பகுதியில் கிடைக்கும் சிவப்பு மார்பிள் கற்களால் கட்டப்பட்டுள்ளது. எங்கு சென்றாலும், சிவப்பு மார்பிள் கற்களால் இருப்பதால், இவ்வூரை Pink City என்று கூறிப்பிடுவது பொருந்தும்.
இந்து வழிபாட்டு ஆலயங்கள் சிறிய பெரிய அளவில் ஏராளமாக இருக்கின்றன.
பிரதான மற்றும் குறுகிய சிறிய சாலைகளிலும் சிறிய சிறிய இந்து வழிபாட்டு ஆலயங்கள் இருப்பதையும், மக்கள் வழிபாடு செய்து வருவதையும் கண்டோம்.

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...