Wednesday, October 13, 2021

ஜோத்பூர் சுற்றுலா- பதிவு - 4 உமைத்பவன் அரண்மனை

ஜோத்பூர் சுற்றுலா 
பதிவு: 4
03.09.2021 FRIDAY
#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#Rajasthan
#JODHPUR

பயண அனுபவ குறிப்புகள்:

மெஹ்ரென்கார்ஹ் கோட்டை சுற்றிப் பார்த்த பின் அருகாமையில் உள்ள ஜஸ்வந்த்தாடா என்ற இடங்களையும் பார்த்தோம் அன்று மதியம்:
3.9.2021 மாலை: 3.00 - 5.30
மதிய உணவிற்குப் பிறகு அடுத்து சென்ற இடம்:
*⚛️
#உமைத்பவன் அரண்மனை:

🏢இந்தியாவின் அதிக கம்பீரமான அரண்மனைகளில் ஒன்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அரண்மனைகள் பலவற்றுள் மிகவும் அண்மைகாலத்ததாகவும் இருக்கிறது. இதன் ஏராளமான கலை வேலைப்பாடு நினைவுச்சின்னமானது.

💒தற்போதும் அங்கு ஒரு அரசர் வாழ்ந்து வருவது போன்ற கற்பனையை நமக்கு ஏற்படுத்துகிறது.

⛪ஒரு நீண்ட பஞ்ச காலத்தின் போது பொது நிவாரணம் மற்றும் பணியாளர் செயல்திட்டமாக இந்த அரண்மனைக் கட்டப்பட்டது.

🏢அரண்மனையின் கட்டுமானப் பணியின் போது ஒரு மில்லியன் சதுர அடிக்கு (90,000 m²) மேலான தரமான சலவைக்கற்கள் பயன்படுத்தப்பட்டன. சிட்டார் மணற்கல் என அழைக்கப்படும் ஒரு சிறப்புவகை மணற்கல் அரண்மனைக் கட்டுமானப் பணியில் பயன்படுத்தப்பட்டதன் மூலம் அது ஒரு சிறப்பான விளைவைக் கொடுத்தது. இந்தக் காரணத்திற்காக உள்ளூர் மக்களால் இது சிட்டார் அரண்மனை எனவும் அழைக்கப்படுகிறது.

💒இதன் கட்டமைப்பின் பாணியானது அழகான மேல்மாடம், கவர்ச்சிமிக்க முற்றங்கள், பசுமைத் தோட்டங்கள் மற்றும் மதிப்புவாய்ந்த அறைகளுடன், இந்தோ-சாராசெனிக் கட்டடக்கலைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது.

🏬இந்தச் செயல்திட்டத்திற்கு 15 ஆண்டு காலங்களுக்கு மேல் (1929-1943) 3,000 கலைஞர்கள் பணியமர்த்தப்பட்டனர். இந்த அரண்மனையைக் கட்டிய மகாராஜா உமைத் சிங்கின் (1876-1947) பெயரே பிறகு இதற்கு இடப்பட்டது.

⛪இவர் கட்டடக் கலைஞர்களுக்கான பிரிட்டிஷ் ராயல் கல்வி நிறுவனத்தின் அவைத்தலைவராகவும் இருந்தார். 1977 ஆம் ஆண்டில் இந்த அரண்மனையானது அரசக் குடியிருப்பு, பாரம்பரியமானத் தங்கும் விடுதி மற்றும் அருங்காட்சியகம் எனப் பிரிக்கப்பட்டது. இது மொத்தமாக 347 அறைகளைக் கொண்டுள்ளது. இது உலகத்தின் மிகப்பெரிய தனியாளர் குடியிருப்பாகும். பழங்கால அறைக்கலனுடன் இங்குள்ள 98 குளிர்சாதன அறைகளும் நேர்த்தியாக அழகுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் ஐந்து நட்சத்திரத் தங்கும் விடுதியில் உள்ளதைப் போன்று அனைத்து வசதிகளும் இக்குடியிருப்பில் உள்ளன.

#பயணஅனுபவக்குறிப்புகள்

♻️ரயில்வே நிலையத்திலிருந்து இந்த அரண்மனைக்கு Bus ல் சென்றோம்.
🔆சாலையிலிருந்து உயரமானப் பகுதியில் இந்த அரண்மனைக் கட்டிடம் உள்ளது.
🔆இங்கிருந்து ஜோத்பூர் நகர் மிக அழகியதாக தெரிகிறது.
🔆அரண்மனையின் ஒரு சிறுபகுதி மட்டும் Museum ஆக மாற்றப்பட்டுள்ளது.

நுழைவுக் கட்டணம் ரூ 30 சிறுவர்களுக்கு ரூ 10ம் வசூலிக்கப்படுகிறது.

🔆அரண்மனையில் ஒரு பெரிய Hall மற்றும் ஒரு பகுதியில், அரசர்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்தி வைத்துள்ளார்கள்.
🔆அரண்மனையின் பெரும்பாலான பகுதிகள், முக்கியமான நடுவாயில் உட்பட TAJ COROMANDEL HOTEL நிறுவனத்திடம் உள்ளது.
🔆சுற்றிக் காண்பிக்க Guideகளும் இருக்கிறார்கள். Guide charges தனி.
🔆வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள 🔆பெரிய புல் தரை அழகியாய் பராமரிக்கப்படுகிறது.
🔆அரசர்கள் உபயோகித்த பல்வேறு, பழமையான கார்களை அணிவகுத்து வைத்துள்ளார்கள்.
🔆ஒரு சிறிய உணவுக் கடையும் உள்ளது.

💥இதைப் பார்த்தபின்பு ரயில்வே நிலையம் வந்து அன்று மாலை ஜெய்ப்பூர் புறப்பட்டோம்.

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்.

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
JODHPUR

*⚛️தகவல்கள்:
wikipedia, மற்றும் பல வலை தள பதிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.

https://m.facebook.com/story.php?story_fbid=6352697404805463&id=100001957991710


No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...