Wednesday, September 28, 2022

காரைக்கால் கொலு 2022 நவராத்திரி 2022

காரைக்கால் கொலு 2022

🌟நவராத்திரியை முன்னிட்டு,
14வது ஆண்டாக  ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம் மற்றும் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளையின் சார்பில்,
காரைக்கால் அம்மையார் ஆலய வளாகத்தில்,  ஆன்மீக கொலு வைக்கப்பட்டுள்ளது.

🌟இன்று 26.09.2022 மாலை 6.30 மணி அளவில், கும்பாபிஷேக சாம்ராட், தமிழகத்தின் மூத்த ஆன்மீக பெரியவர், திருக்கண்ணங்குடி சிவஸ்ரீ  T.K. பாலாமணி சிவாச்சாரியார் அவர்களால் விஷேச பூசையுடன் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

🌟26.09.2022 திங்கள் முதல் உள்ள 5.10.2022 புதன் வரை நடைபெறும் இக்கொலுவின் கானும் சில சிறப்பு அம்சங்கள்:

1. முகப்பு அலங்காரம்:

ஆலய நுழைவு அமைப்பில் முகப்பு அலங்காரம், மேல்மாடத்தில், விநாயகர், வள்ளிதெய்வானையுடன் சுப்பிரமணியர், கைலாச காட்சியில் சிவன், பார்வதி, அம்பாள், மற்றும் சண்டிகேஸ்வரர்.
இவர்களை ஆலய  நுழைவு கோபுர வாசல் மேல் மாடம் போல அமைக்கப்பட்டுள்ள சிறப்பு.

2. அற்புத தட்சினாமூர்த்தி:

ஆலய கோபுர வாசல் நுழைவு அமைப்புத்தாண்டி, உட்புறம் நுழைந்தால்,  தட்சினாமூர்த்தி சுமார் 12 அடி உயரத்தில், மிகப்பிரம்மாண்ட  அருள்தரும் ஞான உருவம். மிகவும் அழகிய முறையில் உருவாக்கியுள்ளனர்.  புதுமையான முறையில் உருவாக்கம் செய்யப்பட்ட  கருவரை மண்டத்தின் உள் அமைப்பில் உள்ளார். இதன், அமைப்பும், ஒளி அமைப்பும் வித்தியாசமாக இருக்கிறது.

3. தட்சிணா மூர்த்தியின் பக்தி  தரிசனம் பெற்று  படி இறங்கினால், மூன்று காந்திகள்  பொம்மை நமக்கு வாழ்வியல் உண்மைப் பக்குவத்தை உணர்த்துகிறது.

4. அடுத்து, மகாபாரத அர்ச்சுணன் பெற்ற   விசுவரூப பெருமாள் காட்சி.

6. ஈசனமூலையில், தனி உஞ்சலில், ஆனந்த வட பத்திரக் காளியம்மன்.

இவர் நாங்கூர் மதங்கீஸ்வரர் ஆலயத்தில் வழிபாட்டில் உள்ளவர்.  பொதுவாக, சிவன் ஆலயத்தில் உள்ள காளி மிகச்சிறப்பும் அரியதுமானதும் என்றும் கூறுவார்கள். இவ்வாலத்தின், தென் பிரகாரத்தில், தனி சன்னதியில், வடக்கு நோக்கி அருளும் ஆனந்த ஊஞ்சல் காளி.

உஞ்சலில் உள்ள காளி. 5 வருடத்திற்கு ஒரு முறை குடமுழுக்கு செய்யப்பட்டு, வீதி ஊர்வலம் வருவது கண்கொள்ளாக் காட்சி. அடுத்த வருடம் 2023 ஆண்டில் நடைபெற உள்ளது என்பதால், தற்போது, காரைக்கால் கொலுவில் காட்சித் தருகிறார்.  மிகவும் அதிசயகாளி. தத்ரூபமாகவும், அருளும் ஆனந்தமும் தரும் சிறப்புடன் உள்ளது.

7. அடுத்து, பெருமாளின் முக்கோலம். மற்றும் யோகநரசிம்மர் அருட் கோலம்.

8. தொடர்ந்து, சதுரங்க வல்லபர்.
நீடாமங்கலம் அருகில் உள்ள திருமுறை பாடல் பெற்ற தலத்தில் திருப்பூவனத்தில் உள்ள பூவனநாதர் சதுரங்கம் ஆடும் காட்சி.
2022 தமிழ்நாட்டு தலைநகரில் நடைபெற்ற  உலக சதுரங்கப் போட்டியைத் துவக்கிவைத்த பாரதப் பிரதமர்  பெருமையுடன் குறிப்பிட்ட நமது இறைவன்.  இங்கு காரைக்காலில் காட்சியில் உள்ளார்.

9. அடுத்து, குற்றாலநாதர் காட்சி:

மேற்கு மலைத் தொடரின் முக்கிய மூலிகை வனமான விளங்குவது குற்றாலம். அதன் அருவி நீரில் அன்றாடும் அபிஷேகம் கொள்ளும் குற்றாலநாதர், இங்கே,  காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, மலையிலிருந்து நீர் விழுந்து குற்றாலநாதரை நேரடியாக அபிஷேகம் காணும் காட்சி நமக்குப் பெருமை.

10. கொலுவின் நடுமண்டபத்தில் சிறப்பாகவும், முக்கிய காட்சிகளாகவும் சிறப்பு அமைப்புகள்.

1. திருமுறைநாதர் :
கொலுமண்டபத்தின் வலதுபுறத்தில்,
திருமுறைநாதருக்கு, சுவாமி, அம்பாளாக  அலங்காரம் செய்து ரிஷபத்தில் வைக்கப்பட்டு, ரிஷபாரூடராகக் காட்சித் தருகிறார்.

2. திருமெய்ச்சூர் லலித்தாம்பிகை
நடுநாயகமாக, அம்மனின், அழகுடன் அருள்தரும் காட்சி கொலுவின் பிரதானம். சிறப்பு அலங்காரத்தில் லலித்தாம்பிகை அம்பாள் அமைக்கப்பட்டுள்ளார். கண்கொள்ளக் காட்சி.

3. திருவாரூர் தியாகராசர் :
இடதுபுறம், உலகில் வேறு எங்கும் இல்லாத  தோற்றத்தில் விசித்திர காட்சிக்கோலமாக, ஆரூர் தியாகராசர்  அம்பல் திருமாளத்திற்கு எழுந்தருளி, சோமாஜி மாறனார் யாகத்தில் பங்கு கொண்டு அவிர்பாகம் பெற வரும் அற்புதக் காட்சி.

சுவாமி,
ரிஷபத்தைத் தன்  தோளில் தூக்கிக்கொண்டும்,  புலையர் வேடத்தில், பறை அடித்துக்கொண்டு, நான்கு வேதங்களையும் நாய்கள் போலமாற்றி, உடன் கொண்டு வரவும்,

அம்பாள்,
கள் குடத்தை தலையில் வைத்துக்கொண்டும், விநாயகர், மற்றும் முருகரை, பாலகர்களாக, துணைக்கு அழைத்துக் கொண்டும், வரும் வேடம்.

இம்மூன்று காட்சிகளையும் இவ்வருடத்தின் பிரதான கொலுக்காட்சிகளாக அமைத்துள்ளார்கள்.

11. அடுத்து நாம் காண்பது,
சாகம்பரி பூசை :

காரைக்கால் நகர சிறப்புக்கும் பெருமைக்கும் காரணமான புராதான சிறப்பு வாய்ந்த நிகழ்வு:
ஸ்ரீ சுந்தராம்பாள், ஸ்ரீ கைலாசநாதருக்கு சாகாம்பரியாக வந்து பூசை செய்யும் காட்சி.
உலகம்,  நீர் வற்றி, பஞ்சம் ஏற்பட்டபோது, உயிர்கள் பிணி நீங்கி, உணவு பெறவேண்டி, கைலாயத்தில் உள்ள, ஸ்ரீ சுந்தராம்பாள், ஸ்ரீ சாகாம்பரி வேடம் கொண்டு காரைக்கால் ஸ்ரீகைலாசநாதரை சிறப்பு வழிபாடுகளும், பூசைகளும் செய்து, உலகத்திற்கு  பசி, பிணி, பஞ்சம் நீக்கிய புராண தலவரலாற்றுக் காட்சி.

ஆவணி மாதம் முதல் நாளில் வருடம்தோறும் காரைக்காலில் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் நடைபெறும் விஷேச பூசை இங்கு எல்லோருக்கும் நவராத்திரியில் தரிசனக் காட்சியாக உள்ளது.

12. பொம்மைகள் காட்சி:
சோமாஜி மாற நாயனார் அருள் பெற்ற வரலாறு.
அம்பல் நகரில் வசித்த சோமாஜிநாயனர். சுந்தரமூர்த்தி நாயனார் மீது மிக்க அன்பு கொண்டு, தினம் அவருக்கு பிடித்த தூதுவளைக்  கீரை எடுத்துக்கொண்டு, அவர் வீட்டில் கொடுப்பது, சுந்தரர் தன் துணைவியான பரவையாரிடம்  தினம் கீரை தரும் அன்பர் பற்றி விசாரித்தல்.
சோமாஜி மாறனாரைப்பற்றி தெரிந்துகொண்டபின்  அவருக்கு எப்படி உதவலாம் என்று  அறிந்து கொள்ளுதல்.
சோமாஜி மாறனாரும், திருவாரூர் தியாகேசப்பெருமான் வந்து தான் செய்யும் யாகத்தில் அவிர்பாகம் பெற வேண்டும் என வேண்டிக்கொள்ளுதல்.
சுவாமியும்,  எவ்வுருவில் வந்தாலும், தங்களுக்கு அவிர்பாகம் தரவேண்டும் எனக் கட்டளையிடுதல்.
அவ்வாறே, புலையர் வேடத்தில் வந்து இறைவரைக் கண்டு உணர்ந்து, வணங்கி அவிர்பாகம் கொடுத்து இறையருள் பெற்ற நிகழ்வு.

சோமாஜிநாயனார்.
இவர்  வரலாற்றின் சில பகுதிகளை  பொம்மைகளில் வடித்து காட்சிப்படுத்தியுள்ளார்கள்.

🌟மேலும், தவழும் கண்ணன், பாண்டுரங்கர், கோதண்டராமர், சீதை, லெட்சுமணர், அனுமார் பொம்மை உருவங்களும் அலங்கரிப்பில் உள்ளன.

இத்துடன் முதன்மை காட்சிக்கொலு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

13. பொது பொம்மைகள் காட்சிக்கொலு :

உட்புறம், மண்டபத்தில்,  11 படிகளில் ஏராளமான பொம்மைகளை வைத்து  அலங்கரிக்கப்பட்ட  வழக்கமான இறையுருக்களுடன்,  மனிதர்கள்  உருவங்கள், வாழ்க்கை முறையில் ஏற்படும் பல்வேறு செயல்பாடுகள், பொம்மைகள் காட்சிக் கொலுவும்  அமைக்கப்பட்டுள்ளது.

தினமும், கலை /பாட்டு / நிகழ்வுகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

காரைக்காலில் அமைக்கப்பட்டுள்ள கொலுவின் தனித்தன்மை வாய்ந்த சிறப்புகள்:

💥புராண நிகழ்வுகள், தல வரலாறுகள், நாயன்மார் வரலாறுகள் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்ட, இதுபோன்ற ஆன்மீக நிகழ்வுகள் அடிப்படையில் பொம்மைக்காட்சி வேறு எங்கும் உருவாக்கப்பட்டு காட்சிபடுத்தும் முறைகளில் காணுவது அரிது.

💥பொம்மைக் காட்சிகள் அனைத்தும் பல்வேறு பொருட்கள் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாகவே பொம்மைகளை  உருவாக்கம் செய்யப்படுகிறது என்பதே மிகச்சிறப்பு.

💥வேறு எங்கும் ஒவ்வொரு வருடமும், புதிய முறையில் உருவாக்கம் செய்யப்படுவதில்லை.

💥ஒவ்வொரு முறை கொலு முடிந்ததும், முற்றிலும், பிரிக்கப்பட்டுவிடுகிறது.

💥அருகில் உள்ள தமிழ் மாநிலத்தில் வேறு எந்த மாவட்டங்களில் உள்ள வேறு எந்த ஆலயங்களிலும், இப்படிப்பட்ட ஆன்மீக தகவல் நுணுக்கங்களுடன் கொலு உருவாக்கம், அமைப்புக் கிடையாது என்பதால், அருகில் உள்ள நாகப்பட்டினம், திருவாரூர், கும்பகோணம், மயிலாடுதுறை மாவட்டங்களிலிருந்து, ஆன்மீக உணர்வுடையோர் ஏராளமானோர் வந்து  கண்டு வியந்து, பேரானந்தம் அடைந்து வியப்பை வெளியிட்டு செல்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு.

💥துவக்க விழாவில் பங்குபெற்ற ஆன்மீக சான்றோர், கும்பாபிஷேக மூத்த முதன்மை , திருக்கண்ணங்குடி சிவஸ்ரீ  T.K. பாலாமணி சிவாச்சாரியார் அவர்கள்,திறந்து வைத்து, பூசைகள் செய்து 26.09.2022 மாலை 7 மணி அளவில், திறந்து வைத்துள்ளார்.
அவர் துவக்கிவைத்து நெகிழ்ந்து பாராட்டினார்கள்.

🧡கொலுவின் சிறப்புகள், கொலு வைப்பதின் நோக்கம் குறித்து ஆன்மீக விளக்கம் கொடுத்தார்.

💙கொலு பொம்மைகள் மன்னிலிருந்து உருவாக்கம் செய்யப்படுவதால், பூமியின் சக்தியும், ஆற்றலும் உணரப்படுதலும், வழிபடப்படுவதும் வழக்கமாயிற்று என்றார்.
 
💚நவராத்திரியின் போது, சக்தியின் ஆற்றல் மிகவும் அதிகரித்து இருக்கும். எனவே, நவராத்திரியில் பூசை செய்து  வழிபடுவதால், பொம்மைகள் அனைத்திற்கும், ஆன்மீக சக்தி ஆற்றல் உருவாக்கம் பெற்று, சக்தியின் ஆற்றல் பெருகும். 

💜ஆன்மீக சிறப்பு வாய்ந்த பல தலங்களில் உள்ள புராண வரலாறுகள், ஆலய தெய்வ வழிபாடுகள், நாயன்மார் வரலாறுகள் காட்சிப்படுத்தப்படும்போது, அவற்றையெல்லாம், அந்தந்த ஊர் மக்கள், தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே அவற்றின் சிறப்பை எளிதாக உணர்ந்து கொள்ள முடிகிறது.

🛕மேலும், ஆண்டுகள் தோரும், ஆன்மீக காட்சிகளைப் புதுமையான முறையில் அமைத்து  காரைக்காலில், சிறப்பாகக் கொலு கொண்டாடப்படுவது மிகச்சிறப்பும், பெருமையும் நிறைந்தது.

🛕இதை ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு, ஒவ்வொரு ஆலயத்திலும், குறைந்தபட்சம், மாவட்ட அளவில் ஒரு சில ஆலயங்களிலாவது இது போன்ற சிறப்பு கவனமும், முயற்சியும் செய்யப்பட வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

🛕இவ்வாறு, மிகச்சிறப்பான முறையில் நடைபெற்று வரும் காரைக்கால் கொலுவில் தாம் தம் குடும்பத்தினருடன் வந்து ஆர்வத்துடன் கலந்து கொள்வதில், மிக மகிழ்வும், மனநிறைவும் ஏற்படுவதாக, நெகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் கூறினார்கள்.

🌟காரைக்கால், கைலாசநாதர் ஆலயத்தில், சிறப்பு வழிபாடுகளும் பூசைகளும், உழவாரப்பணி, மற்றும்  சமய ஆன்மீக தொண்டுகளிலும் பல்லாண்டுகளாக மிகச்சிறப்பான முறையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு,  தன்னலம் இல்லாமல் சிவத்தொண்டுகள் பலவும் செய்துவரும் காரைக்கால் சிவனடியார் திருக்கூட்டத்தின் பொறுப்பாளார்கள், அடியார்கள் அணைவருக்கும் பாராட்டுகள். வாழ்த்துக்கள்.

🎉 🙏குறிப்பாக, மிக முக்கிய பொறுப்பில் இருந்து செயலாற்றும்  இக்கொலுவின் தலைமை சிற்பி திரு T.மரகதவேல் அவர்களின் அர்பணிப்புடன் கூடிய ஆற்றல்மிகு சேவையும், அவர்கள் ஆற்றும் தொண்டும், அவருக்கு உறுதுணையாக செயல்பட்டுவரும், இளைஞர்கள் கூட்டமைப்பும் என்றென்றும் பாரட்டுக்குரியவர்கள்.

🙏கைலாசநாதர் அருளால், வளர்ந்திடும்
இளைஞர்களை வணங்கிடுகிறேன்.

🙏இறை உணர்வு வற்றாத ஆர்வம், விடாமுயற்சி, கடும் உழைப்பு,
கைலாசநாதர் அருள் பெற்ற இளைஞர்களின் தூய்மையான அர்ப்பணிப்பு. வாழ்த்திடுவோம் வாருங்கள்.

🙏சமூகத்தில் பல்வேறு பணிகளில், ஈடுபட்டு தங்கள் குடும்பம், வாழ்வாதாரத்தையும், பொறுப்புடன் கவனித்துக் கொண்டு, ஆன்மீகத் தொண்டில் தன்னலம் இல்லாமல், ஒன்றுபட்டு அயராது பாடுபடும் இவர்கள்
🙏காரைக்காலின் ஆன்மீக காவலர்கள்.
காரைக்காலின் பெருமைக்கு மேலும் உயர்வு தந்து வையம் போற்ற வைக்கும்  இவர்கள் சேவைகளைப் போற்றுவோம். வளரட்டும் ஆன்மீகத் தொண்டு.
வாழ்க வளத்துடன். வணங்கிடுவோம்.
என்றும் இறையருள் துணையிருக்கும்.

பாராட்டுக்கள்.
வணக்கங்கள்
நன்றிகள்
26.09.2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்


Tuesday, September 20, 2022

UTTARAKANNT_TOUR_2022 #HARIDWAR #RISHIKESH#சன்டிதேவிஆலயம். நிறைவு பயணம்

UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#HARIDWAR  #RISHIKESH
#சன்டிதேவிஆலயம். 
நிறைவு பயணம்
#HARDWAR பதிவு - 5 - 1
15.04.2022

💚14.04.2022 ஹரிதுவாரில், காலை உணவுக்குப் பிறகு, சிற்றுந்து மூலம், 45 கி.மீ. தூரத்தில் உள்ள ரிஷிகேஷ் சென்று அங்குள்ள ஆலயங்கள், மடங்கள் தரிசித்து  விட்டு, கங்கையின் முக்கிய இடத்தில் குளித்தோம்

மதியம், ரிஷிகேசிலிருந்து புறப்பட்டு, 
(முன்பே இதன் அனுபவங்களின் பதிவுகள் எழுதியுள்ளேன்)

14.04.2022 மாலை  மீண்டும் ஹரிதுவார் வந்து ஓய்வு எடுத்துக் கொண்டோம். மாலையில் ஹரிதுவாரில் உள்ள ஆலயங்கள் தரிசனம். இரவு தங்கினோம்.
(முன்பே இதன் அனுபவங்களையும், பதிவுகள் எழுதியுள்ளேன்)

மீண்டும் 15.04.2022 காலையில் ஹரிதுவாரிலிருந்து புறப்பட்டு, மலைக்குன்றின் மீதுள்ள சண்டி தேவி ஆலயம் தரிசித்தோம். 

🛕#சன்டிதேவிஆலயம்.

🍁ஸ்கந்த புராணத்தின்படி,  ஷூம்பா, நிஷும்பா ,சந்தா - முன்டா என்ற அரக்கர்கள் கொல்லப்பட்ட இடம் .

🛕நீல் பர்வத் என்ற மலையின் மீது உள்ளது. கங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ளது.

🌴1929 ல் காஷ்மீரரசர் சுச்சட் சிங் என்பவரால், புரைமைப்பு செய்து கட்டப்பட்டது. 

🛖8ம் நூற்றாண்டில், ஆதிசங்கரர் 
சன்டி தேவி சிலையுடன் ஆலயம் ஏற்படுத்தினார் என்ற வரலாற்று சான்று உள்ளது

🌴இவ்வாலயத்திற்கு சென்று வர ரோப்கார் வசதி உள்ளது.

#பயணஅனுபவக்குறிப்புகள் 

15.04.22 அன்று ஹரிதுவாரில், நாங்கள் தங்கியிருந்த TRIMOORTI HOTEL அருகில் இருந்த Ganesh Ghat சென்று, கங்கையில் நீராடினோம். பிறகு, வழியில் உள்ள ஆலயங்களை தரிசித்து விட்டு வந்தோம்.

காலை உணவு முடித்துக் கொண்டு, ஹரிதுவாரிலிருந்து புறப்பட்டோம். வரும் வழியில் அகன்ற கங்கைக் கரையின் கிழக்குப் புறம் உள்ள உயரமான மலைத்தொடரில் உச்சியில் ஒரு ஆலயம் கண்டோம்.

மலை உச்சியில் இருந்த முக்கியமான ஆலயம் சன்டிதேவி ஆலயம்.

இதன் அருகில், சற்று உயரத்தில் ஹனுமானின் தாயார் இருந்த இடம் ஒன்றும்  உள்ளது.

சன்டி தேவிஆலயம், ஹரிதுவாரின் நுழைவுப் பகுதியில் மலைக்குன்றில் உள்ளது.

இரண்டு வழிகளில் இவ்வாலயம் அமைந்துள்ள மலைக்குன்றிற்குச் செல்லலாம்.  

மலைப்படிக்கட்டுப் பாதைகள் மூலம் நடந்தும் செல்லலாம்.

அல்லது Winch / Cable Car மூலமும் செல்லலாம். 

பெரிய வாகனங்கள் நேரடியாக மேலே செல்ல முடியாது.

Ropeway Car : இது ஒரு தனியார் நிறுவனம். பல மலைக்கோவில்களில் இவர்கள் இந்த பணி செய்து வருகிறார்கள்.

ஹரிதுவாரில், மலைக்குன்றின் மீது உள்ள மானச தேவி ஆலயம் மற்றும் சன்டி தேவி ஆலயம்  இரண்டுக்கும் இவர்கள்தான் ஏற்பாடு செய்துள்ளனர்.
கட்டணம் இரண்டு ஆலயங்களையும் சென்று தரிசித்து வர மொத்தமாக ஒரே கட்டண வசதிகள் செய்துள்ளார்கள்.  நாம் சரியானபடி திட்டமிட்டால் இதன் கட்டண சலுகைகளை அனுபவிக்க முடியும்.

ஒரு முறை சண்டி தேவி ஆலயம் சென்று திரும்ப. ரூ.220ம், இரண்டு  ஆலயங்களையும் தரிசிக்க 365ம்,
Transport கட்டணம் Rs.80ம் வசூல் செய்யப்படுகிறது.

ஒருமுறை மட்டும் கீழ இறங்கிவர ரூ165 கட்டணம் அமைக்கப்பட்டு உள்ளது. 

ஒவ்வொரு ஆலயம் செல்லும் போது கட்டனம் செலுத்தி Ticket பெறுவதற்கு, வரிசையில் நிற்க வேண்டியிருக்கிறது.

Ticket ஒரு முறை எடுத்தால், 3 நாட்கள் செல்லும் என்கிறார்கள்.

மலைமீது ஏறுவதற்கும், இறங்குவதற்கும் சேர்த்துதான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இரண்டு ஆலயங்களுக்கும் தரிசித்து வர தனி வாகன வசதியும் செய்து தருவதாகக் கூறப்படுகிறது.

சில நேரங்களில், சன்டி தேவி அல்லது மானச தேவி ஆலயத்தில் கூட்டம் மிகவும் அதிகம் இருக்கும். நாம் Token வாங்கி காத்திருக்கவேண்டும். 

சிலர் முதலில் சன்டி தேவி ஆலயம் சென்று தரிசித்து விட்டு இங்கு வருவது நலம் என்று பதிவிடுகிறார்கள்.

அருகில் வசிப்பவர்கள், ஆலய விஷேச நாட்களில், ஒரே சமயத்தில் தரிசிக்க இந்த Compound ticket முறை நல்ல ஏற்பாடு எனத் தெரிகிறது

நாங்கள், தனித்தனியாக வெவ்வேறு நாட்களில் சென்று தனி தனி Ticket பெற்று தரிசித்தோம். பெரும்பாலான Tourist operators இதைத்தான் செய்கிறார்கள். இதுவே நமக்கு வசதியாகப்படுகிறது

Winch / Cable Car Station செல்ல தனி இடம் உள்ளது. 

கட்டணம் உண்டு Ticket வாங்கும் இடத்தில் Waiting Hall உள்ளது. 
முதலில் ஒரு Tocken கொடுத்து விடுகிறார்கள். ஒரு Winch | cable காரில் 6 பேர் செல்லலாம் என்பதால் அதற்கு தகுந்தார்போல் சிறிய சிறிய குழுக்களாக உள்ளே நுழைய வைக்கிறார்கள். Disply Board Announcement ல் நம் Token அழைப்பில் நாம் சென்று  வரிசைக்குச் செல்ல வேண்டும். அதன் பிறகு Ticket வாங்கி
நாம் Cable Car ல் ஏறும் இடம் செல்ல வேண்டும்.

நிறைய ஆட்கள் உள்ளனர். நமக்குப் போதுமான எச்சரிக்கை தந்து பாதுகாப்புடன் ஏற்றுகிறார்கள்.

மலைமீது போகும்போதும், வரும்போதும், மலைக்காட்சிகள் மிகவும் அற்புதமாக உள்ளது.

Cable Car பாதி Auto போல உள்ளதால், தொங்கிக் கொண்டும், ஆடிக் கொண்டும் மெதுவாகச் ஆடிச் செல்கிறது. இறங்கும் போதும் அவ்வாறே பாதுகாப்புடன் வந்து இறக்கி விடுகிறார்கள்.

இறங்கிய பிறகு கோவில் வளாகம் மிக அருகிலேயே இருக்கிறது. ஆலயம் நுழை வாயில் ஒரு வளைவும் அதைத் தொடரந்து நீண்ட பாதையும், அதன் முடிவில் ஒரு மண்டபம், அதிலிருந்து சில படிகள் ஏறி அங்குள்ள கருவரை யில் சுவாமி தரிசனம் செய்தோம். 

நாங்கள் காலையில் சென்றதால் சற்று கூட்டம் இருந்து கொண்டே இருந்தது.

தனி வழி, கட்டண தரிசனம் இவைகள் கிடையாது.
நாங்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தோம்.
சிறிய சன்னதியில் சிறிய அளவில் அம்மன் உருவம். தீப ஆராதனை காட்டப்பட்டது.  ஆலய கருவரை மண்டபத்தை உள்ளடக்கிய  ஏகபிரகாரம். 

சுற்று பிரகாரத்தில் மேலும் சிறுசிறு சன்னதிகள் உள்ளன.

பிரார்த்தனைத்தலமாக உள்ளதால்,
ஏராளமான மக்கள் வந்த வண்ணம் உள்ளார்கள். 

வெளியில் வந்தால், ஆலய பூசைப் பொருட்கள், மற்ற பொருட்கள் விற்பனைக் கடைகள் இரண்டு  வரிசையிலும் உள்ளன.

பிரதான கோயில் சாலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் பல்லக்குகள் முறையான ஏற்பாடுகள் உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு இரண்டு பிரிவுகள் பாதைகளில் ஒன்று கீழிறங்கும் பாதையும், மற்றொன்று சற்று உயரே செல்லும் பாதை, அதன் வழியில் சென்றால் ஸ்ரீ அஞ்சனி தேவி ஆலயம் செல்லலாம்.

நாங்கள் ஸ்ரீ அஞ்சனி மதா ஆலயம் சென்று தரிசித்தோம்.

பாதை சற்று தூரம் சென்றதும், மலையின் உயரத்தில், மேலும் ஒரு ஆலயம் செல்ல ஒரு பாதை உள்ளது.  அங்கு சில படிகள் உயரத்தில் பெரிய மண்டபமும் இரண்டு பெரிய கருவரைகள் அமைப்பில் ஆலயம் உள்ளது.  

ஸ்ரீ ஜெய் ஹனுமானின் தாயாரின் தாயார் ஸ்ரீ ஜெய்மா அஞ்சனி தேவி ஒரு கருவரையிலும், ஸ்ரீ ஹனுமான் மற்றும் ஸ்ரீ சந்தோஷிமாதா  தேவி  சன்னதியும் உள்ளன. இணைத்து பெரிய மண்டபமாகவும்  அமைத்துள்ளார்கள். 

மேலும், சற்று தூரத்தில் ஒரு சன்னதியும் அதில் ஒரு காலபைரவர் மற்றும் ஒரு சிவலிங்கம் உள்ளது.
ஸ்ரீஹனுமான் தாயார் வழிபட்டது என்றும் கூறுகிறார்கள்.

மலைமீது ஒரு பகுதி அடர்ந்த மரங்களும், காடுகள் போல நிறைந்தும் உள்ளன.
இங்கிருந்து, ஹரிதுவார் நகர் முழுதும் மற்றும் கங்கையும்   அற்புதமாக காட்சியளிக்கின்றது.

சற்று அருகிலேயே பாதைஇறங்கி செல்ல படிகள் / வழி அமைத்துள்ளார்கள்.
இயற்கை காட்சிகள், ஆன்மீக உணர்வுகளுடன் மிக அருமையான இடமாக உள்ளது.

ஹரிதுவார் வருபவர்கள், சற்று நேரம் ஒதுக்கி, இந்த ஆலயங்களை
தரிசித்து செல்லவேண்டும். நல்ல அனுபவங்கள். பகலில் வந்தால், முழுமையாக ரசித்து செல்லலாம்.

அருகில் ஆலய Shopping  complex. Cable Car வழியில் கீழ செல்ல ஒரு தனி இடம். அங்கும் வரிசையில் நின்று இறங்கினோம்.

நான் 2011ம் வருடம் சார்தாம் யாத்ரா வந்தபோது, ஹரிதுவாரில் உள்ள இந்த ஆலயம் வந்திருந்தேன். அப்போது இருந்ததைவிட அதிக வளர்ச்சியும், மக்கள் நெருக்கமும் வசதிகளும் பல்வேறு நிலைகளில் பெருகி உள்ளதைப் பார்க்க முடிகிறது.

ஆலய தரிசனம்  முடித்து கீழே இறங்கியபிறகு மீண்டும் பேருந்தில் புறப்பட்டோம்.

ஹரிதுவாரில் இருக்கும் மிக சிறப்பு வாய்ந்த மேலும் சில
ஆலயங்கள் /ஆசிரமங்கள் பற்றிய சில குறிப்புகள்:

🛕மாயாதேவி ஆலயம் :

சித்தர் பீடம் என்ற, ஆதிசக்திதேவி என்னும் ஆலயம். பார்வதிதேவியின்  இதயம் விழுந்து இருந்த இடமாகும்.
சக்தி பீடம் என்றும் போற்றப்படுகிறது.
இதை மாயாதேவி ஆலயம் என்றும் கூறுகின்றனர்.

🛕 சதி அல்லது சத்திகுன்ட் இந்த இடத்தில்தான், தட்சன் யாகத்தில் கலந்து கொள்ள சென்ற சதி தன்னை இங்குள்ள யாகக் குண்டத்தில் தன்னை மாய்த்துக் கொண்டதாக கருதுகிறார்கள். இந்த இடம் கான்கால் (Kankhal) அருகில் உள்ளது.

🛕11ம் நூற்றாண்டுகளில் புணரமைப்பு செய்யப்பட்டது.

🛕நாராயணி ஷிலா ஆலயமும், பைரவர் ஆலயமும் இணைந்துள்ளது.

🌊பிமாகோடா குளம்:

ஹர்கி பாவுரி நீர்த்துறையிலிருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ளது.
🌳பாண்டவர்கள் இமயத்திற்கு ஹரிதுவார் வழியாக சென்ற போது, பீமர், தன் முஷ்டியால் மலையை மோதி பாறையை பிளந்து நீரை வரவைத்த இடம்.

🛕ராம்மந்தீர். 
சிறப்பான முறையில் மிகப்பெரிய அளவில் ராமர் ஆலயம்  ஒன்று அமைக்கப்படவுள்ளது.

🛕மகரவாகினி ஆலயம்:

பிர்லா காட் அருகில் உள்ளது.'கங்கா' மாத ஆலயம். 
ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் அவர்களால் சில நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளது. தமிழகக் கோவில் அமைப்பில் உள்ள ஆலயம்.

🛕பாரதமாத ஆலயம் :

கங்கையின் கரையில், பல்லடுக்கு 8 அடுக்கு மாடி கட்டிடமாக இவ்வாலயம் உள்ளது. ஒவ்வொரு மாடியிலும், ராமாயணக் காலத்திலிருந்து பாரதத்தின் வரலாறுகள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதம மந்திரி திருமதி இந்திராகாந்தி அம்மையார், 15.05.1983ல், இந்த ஆலயத்தை திறந்து வைத்துள்ளார்கள். 
முதல் மாடியில் பாரதமாதா, இரண்டாவது மாடியில் ஷூர் மந்தீர், 3வது மாத்திரி ஆலயம்,
4வது மாடியில், முனிவர்கள் 
5வது மாடியில், அனைத்து மத வழிபாடுகள் பற்றிய ஓவியங்கள்.
6 வது மாடியில், சக்தியின் வடிவங்கள்.
7வது மாடியில், விஷ்ணுவின் வடிவங்கள். 
8வது மாடியில், சிவன் வடிவங்கள், மற்றும், இமயமலையின் புராதான ஆலயங்கள்,காட்சிப்படுத்தப்பட்டு வருகிது

🛕திருப்பதி பாலாஜி ஆலயம் :

தென்னக ஆலய அமைப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆலயம். 
இங்கு சிவன், விஷ்ணுவின் சிலைகள் வழிபாட்டில் உள்ளது.

🛖சப்தரிஷி ஆஷ்ரமம் / சப்த சரோவர் :
🍁சப்தரிஷிகளான, 
காசிபர், வசிஷ்ட்டர், அத்ரி, விஷ்வாமித்ரார், ஜமதக்கனி, பரத்வாஜர், கௌதமர் ஆகியோர்
தவம் செய்த இடம். கங்கை 7 பிரிவாக பிரிந்து செல்லும் இடம்.

🌺ஏழு முனிவர்கள் வழிபட்ட இந்த இடத்தில், கங்கை பொங்கிப் பாயும். இந்த இடத்தில் நதியின் வேகம், சப்தம் மிகவும்  அதிகம்.  இதனால், முனிவர்களின் தவம் செய்வதற்கு இடராக இருந்தது.
இதை உணர்ந்ததால், கங்கை தன்னை 7 பிரிவுகளாக பிரித்துக் கொண்டு பாய்ந்தார். இந்த இடத்திற்கு சப்த சாரோவர் என்று பெயர். இங்குள்ள ஆசிரமமே சப்தரிஷி ஆசிரமம்.

🌺7 முனிவர்களின் தவம் கலையாமல் இருக்க,
கங்கை 7 பிரிவுகளாக பிரிந்து பாயும் இடம்.

🌺யுதிராஷ்ட்ரர், இந்த இடத்தில் பாயும் கங்கை தீர்த்தத்தின் சிறப்பை மகாபாரதத்தில் விவரித்துள்ளார்.

🌺கங்கையில் சப்தசாரோவர் அருகில் உள்ள இந்த சப்தரிஷி ஆஷ்ரமத்தில் 1943ல் குருகோஸ்வாமிடட் என்பவர் இலவசக் கல்வி,  உணவு, தங்குமிடம் வசதிகளை ஏற்படுத்தியுள்ளார்.

🛖கபிலர் ஆசிரமம்:

தன் முன்னோர்களுக்காக சூரிய வம்ச அரசரான பகீரதன் தவம் இருந்து கங்கை நீரை சிவபெருமானிடமிருந்து பெற்று, கங்கை நதியாக பூமிக்கு வந்து பாயும் இடம் இது.

🛖அகஸ்தியர் ஆசிரமம்:

🌴அகஸ்திய முனிவரும் தன் மனைவி லோபமுத்தராவுடன் இருந்து தவம் செய்த இடம் என்பது புராணம்.

இது போன்று, புராதான புரான சிறப்புவாய்ந்த ஆலயங்கள்
புகழ்பெற்ற... பல்வேறு ஆஷ்ரமங்கள், மடங்கள்
ஹரிதுவாரில் ஏராளமாக உள்ளன.

🌲ஹரிதுவார், ஆன்மீக புன்னிய பூமி மட்டுமல்ல, புராதான, குருகுலக்கல்விக் கேந்திரமாகவும், ஆயூர்வேதம், மூலிகைகள், பற்றிய ஆராய்ச்சிகளிலும், அதன் மருந்து உற்பத்தியிலிலும் சிறந்து  விளங்குகிறது. 

🌼இன்று ஹரிதுவாரில் BHEL, Integrated Industrial Estate(IIE), IIT Roorkee  முதலியவைகள் அமைக்கப்பட்டு, தொழில் முன்னேற்றமும்  ஏற்பட்டுள்ளது.

ஹரிதுவாரிலிருந்து
புறப்பட்டு புது டெல்லி தனிப் பேருந்தில் வந்தோம். 
வரும் வழியில் ஒரு கிராமத்தில்
கரும்புவெட்டி எடுத்து வந்து சார் எடுத்து, பிழிந்து அதை காய்ச்சி வெல்லம் எடுத்து Pack செய்யும் இயற்கையான திறந்தவெளி சர்க்கரை ஆலைகளை ப் பார்த்தோம்.

இறையருள் தந்த இனிய பயணம்:

இறையருளால் 3-04-2022 முதல் 15.04.2022 வரை இந்த உத்தரகாண்ட் மாநிலத்தின் சில புனித இடங்களைக் கண்டு வந்து என் இனிய பயணங்களின்
நினைவுகளை தங்களுடன் பகிர்ந்துகொண்டேன். 
நிறைவான பயணம்.
எல்லோருக்கும் நன்றிகளும் வணக்கங்களும்.🙏🙇🏼‍♂️

✈️15.04.2022 பகல் ஹரிதுவாரிலிருந்து புறப்பட்டு 
புது டெல்லி விமான நிலையம்  வந்து, விமானத்தில் அன்று மாலை புறப்பட்டு 15.04.2022 இரவு 11.00 அளவில் சென்னை வந்தடைந்தோம்.🛩️

🚍நான், அங்கிருந்து பேருந்தில் புறப்பட்டு 16.04.2022 காலையில் காரைக்கால் வீடு வந்து  நலமுடன் சேர்ந்தேன்.

💚இறையருள் துணையால், மேலும் ஒரு இனிய பயணமாக அணைவருக்கும்,  இந்த பயணம் அமைந்து இருந்தது.
இறைவனுக்கு நன்றி.

💜இந்த யாத்ரா முழுவதும் ஏற்பாடு செய்து, நிர்வாகம் செய்து, அனைத்து வசதிகளையும் ஒருங்கிணைத்தும்,  அனைவரையும் திருப்தி செய்ய அயராத பாடுபட்டு, சிறப்பாக அமைத்துக் கொடுத்தும், எல்லோரிடமும் உண்மையான உள்ளன்புடன் பழகி தன் இனிய குணத்தினால் அமைதியான சுபாவம் கொண்ட, திரு S.R.பாலசுப்பிரமணியன், Administrator, SUJANA TOURS, West Mambalam,  Chennai அவர்களுக்கு என்றென்றும் என் பணிவான நமஸ்காரங்கள். 
இதயபூர்வ வணக்கங்களும், நன்றிகளும்🙏🙇🏼‍♂️

🧡எப்போதுமே, என்னுடைய எல்லா  யாத்திரைகளிலும் பங்குபெறுவதுடன், நல்ல  துணையாகவும், உதவியாகவும், தூண்டுதலாகவும், உன்மையான ஆர்வத்துடனும்,  இதய உணர்வுகளுடனும், பண்பு,பாசத்துடனும் இருந்து, நட்புடன் பழகும், அன்பு சகோதரர் திரு பரணிதரன் அவர்களையும் நான் வணங்கி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.🙇🏼‍♂️🙏
மேலும்,
இந்த யாத்ராவில் பங்குகொண்டு, மிகச் சிறப்பாக அமைய, ஆழ்ந்த நட்புடனும், பாசத்துடனும்  எம் மீது தனி  அன்புகாட்டி உயர்ந்த பண்புடன் பழகி வரும் சகோதரர் திரு ராஜேந்தின் அவர்களையும் பணிந்து வணங்கி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.🙏🙇🏼‍♂️

💙பல இடங்களும் புதியவையாக இருந்தாலும்,  அதைப் பற்றிய, புராண பெருமைகளை அவ்வப்போது, உணர்த்தியும், 
உயர் உள்ளம் கொண்டு, யாத்திரையில் எம்முடன் உண்மையான  நட்புடனும், சகோதரத்துவத்துடனும்,  அன்பு உள்ளத்துடன், பழகிய  அத்துணை அன்பு பெரியோர்கள், நன்பர்களுக்கும் ஒவ்வொருவருக்கும் என் பணிவார்ந்த நமஸ்காரங்கள்.🙇🏼‍♂️🙏

❤️யாத்திரை சிறப்பாக அமைய உதவிய எல்லோருக்கும் என் இதயபூர்வ நன்றியும், வணக்கங்களும்.🙇🏼‍♂️🙏

🧡தொலைவில் இருந்தாலும் தொடர்பில் இருப்போம்.💚

🌟நல்லவர்கள் மனங்களில் என்றும் நம்பிக்கையும் நன்றியும்  இருக்கும் அல்லவா? 

💫மீண்டும் வேறு ஒரு பயண அனுபவங்களை சந்திப்போமோ?
 வணக்கம்🙏

🙏நன்றி🙇🏼‍♂️
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
CHANDI DEVI - 2
#UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#HARIDWAR #RISHIKESH
#சன்டிதேவிஆலயம்.
#HARDWAR பதிவு - 5 - 2
15.04.2022

https://m.facebook.com/story.php?story_fbid=8141002619308257&id=100001957991710


ஹரிதுவாரிலிருந்து புதுடெல்லி வரும் வழியில் ஒரு சிற்றூரில் (LIBBERHIDI ) உள்ள சர்க்கரை / வெல்லம் தயாரிக்கும் தொழிற்சாலை.

#UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#HARIDWAR #RISHIKESH
#HARDWAR பதிவு - 5 - 4
15.04.2022

https://m.facebook.com/story.php?story_fbid=8141002619308257&id=100001957991710




HARIDWAR to NEW DELHI - CHENNAI - RETURN -
15.04.2022
இனிய ஆன்மீக பயணம் என்றும் எம் 
நினைவில் நிற்கும் நிறைவு பயணம்.

#UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#HARIDWAR #RISHIKESH
#HARDWAR 
15.04.2022

https://m.facebook.com/story.php?story_fbid=8141002619308257&id=100001957991710

UTTARAKANNT_TOUR_2022 RISHIKESH#ரிஷிகேஷ் - 14.04.2022

UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#RISHIKESH
#ரிஷிகேஷ் - பதிவு - 
#HARIDWARபதிவு - 
14.04.2022
#ரிஷிகேஷ்

உத்தரகாண்ட் மாநிலத்தில், இமயத்தின் அடிவாரத்தில் இருக்கும் இந்நகர், ஹரிதுவாருக்கு வடக்கில் 20 கி.மீ.தூரத்திலும், டேராடூன் நகருக்கு 45 கி.மீ. தென்கிழக்கிலும் உள்ளது.

இமயமலையிலிருந்து, கங்கை நதி பாய்ந்து ஓடி வரும் வழியில், வடக்கு கிழக்காக, 5 கிலோமீட்டர் அளவில் ரிஷிகேஷ் நகரம் அமைந்துள்ளது.

தவ முனிவர் யாகத்தின் பலனாய், கடவுள் ஹரிஷிகேஷ் தோன்றினார் என்றும், இதனால் இந்த இடத்தை ரிஷிகேஷ் என்றும் வழங்கப்படுகிறது.

ராமன் ராவணனை வதம் செய்த பாவத்திற்காக யாகம் செய்த இடம்.
லெட்சுமணன், கங்கை நதியை தாண்டுவதற்காக இங்கு ஒரு கயிற்றுப் பாலம் அமைத்து அதன் மூலம் எதிர் கரை அடைந்ததிருக்கிறார் என்பது புராணம்,

இந்தக் கயிற்றுப்பாலம், 1889ல் மாற்றி அமைக்கப்பட்டது.
1924 ல் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்தப் பாலம் அழிந்ததும், 1927 ல், புனரமைக்கப்பட்டது.

மிகப்பழமையான இந்நகர், ஞானிகளும், யோகிகளுக்கும், இந்து ஆன்மீகவாதிகளுக்கும், முக்கிய ஷேத்திரமாக விளங்குகிறது.

இந்த இடத்திலிருந்து தான், சார்தாம் யாத்திரை துவங்கும்.

இமயமலையில் உள்ள, புராதானமான இடங்களான, 

யமுனோத்திரி,- யமுனை நதி உற்பத்தியாகும் இடம்,

கங்கோத்திரி - கங்கை நதி உற்பத்தியாகும் இடம்,

கேதாநாத் - சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க தலங்களில்,
இமயத்தில் உள்ள இடம்.

பத்திரிநாத் - விஷ்ணு பகவானின் 108 தலங்களில் சிறப்புவாய்ந்த தலம்.

இந்த நான்கு மலைத்தலங்களுக்கும் பக்திப் பயணம் செல்வதை சார்தாம் (சார் = நான்கு; தாம்=மலை) நான்கு மலை யாத்திரை என்று கூறுவார்கள்.

ரிஷிகேஷ்தான் முதன்மைத் தலம். இமயமலையின் நுழைவுப் பகுதியாகவும் உள்ளது.

பக்தர்கள் ஹரிதுவார், வந்து பிறகு ரிஷிகேஷ் வழியாகத்தான் இந்த தலங்களைத் தரிசித்து வருகிறார்கள்.

நான்கு மலை யாத்ரா சென்று வருபவர்களுக்கு ஓய்வு எடுக்க ரிஷிகேஷ் நகரைத் தேர்வு செய்கிறார்கள்.

2015 செப்டம்பர் மாதம்,
பாரத இந்தியாவின் தேசிய புராதான - புனித - நகர்களாக ஹரிதுவார் மற்றும் ரிஷிகேஷ் நகரங்கள் அறிவிக்கப்பட்டது.
இந்த மிகப் புனித நகரில், அசைவ உணவுகள் விற்பனை செய்யக்கூடாது என்று சட்டம் கொண்டுவந்தார்கள்.

ரிஷிகேஷில் ஏராளமான புராதான
ஆலயங்களும், யோகா மடங்களும் அமைந்துள்ளது. 

தற்போது, இங்கு வியாபாரத்தலமாகவும் மாறி வருகின்றது. கைவினைப் பொருட்கள், பக்தி ஆன்மீக பூசை பொருட்கள் விற்பனைக் கேந்திரமாகவும் உள்ளது.

உலகத்தின் யோகாகலையின் தலைநகராக தற்போது விளக்குகிறது.
யோகா பயிற்சியிற்காக, உலகம் முழுவதிலிருந்தும் இங்கு வருகிறார்கள்.

லெட்சுமணன் ஜூலா என்ற இடத்தின் அருகில் புராதானமான லெட்சுமணன் ஆலயமும், ராம்ஜுலா அருகில் சத்ருக்கன் ஆலயமும் அமைந்துள்ளது.

லெட்சுமன் ஜூலா :
ராமன் ராவணனை வதம் செய்த பாவத்திற்காக யாகம் செய்த இடம்.

லெட்சுமணன், கங்கை நதியை தாண்டுவதற்காக, கயிற்றுப் பாலம் அமைத்திருக்கிறார் என்பது புராணம்,

இந்தக் கயிற்றுப்பாலம், 1889ல் மாற்றி அமைக்கப்பட்டது.

1924 ல் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்தப் பாலம் அழிந்ததும், 1927 ல் ஆரம்பித்து 1923 ல் கட்டி முடித்து புனரமைக்கப்பட்டது.

கங்கை நதியின் கிழக்குக்கரையில், உள்ள ஜோன்க் எந்த இடத்திற்கும், மேற்குக் கரையில் உள்ள தபபோவன் என்ற இடத்திற்கும் இடையில் இந்த தொங்கு பாலம் அமைந்துள்ளது.

சுமார் 450 அடி நீளம் கொண்டது.
இது பாதசாரிகளுக்கு மட்டும் உரியது; என்றாலும், இருசக்கர வாகன ஓட்டிகளும் பயன்படுத்துகிறார்கள். 

லெட்சுமணன் பாலம் என்பது, ரிஷிகேஷ் நகரின் வடக்கு புறத்தில் கங்கை நதியின் மீதுள்ள ஒரு தொங்கும் பாலம். 

ரிஷிகேஷ் நகரின் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ளது.

ராம் ஜூலா என்ற மற்றும் ஒரு பாலம், லெட்சுமன் ஜுலாவிற்கு 2 கி.மீ. தெற்கில் அமைந்துள்ளது.

பயண அனுபவக் குறிப்புகள்:
14.04.2022:
இன்று நாங்கள், ஹரிதுவாரில் தங்கியிருந்தோம். சித்திரை தமிழ்ப்புத்தாண்டு, ஸ்ரீ சுபகிருது வருடம் பூசை கொண்டாடினோம்.

விடியற்காலையில் கங்கையில் குளித்து , காலை உணவை 8.30 மணி அளவில் முடித்துக்கொண்டு ரிஷிகேஷ் புறப்பட்டோம்.

2015 ல் ஏற்கனவே ரிஷிகேஷ் வந்தபோது இருந்த சாலை நினைவுகள் வந்தது.

இப்போது மிகவும் அகலமான, அருமையான சாலையாக உள்ளது.
போக்குவரத்தும் மிகவும் அதிகம். சுமார் 30 கி.மீ. தூரத்திற்கும் அதிக கூட்டம்.
 Sona நதிக்கு மேல் ஒரு மேம்பாலம் சிறப்பாக போடப்பட்டுள்ளது. 

அது மட்டுமல்ல, புலிகள் வாழும் காடுகள் அருகில் உள்ளதால், காட்டு விலங்குகளுக்கு எவ்வித துயர் இல்லாமல், மிக உயரமான அளவில் மேம்பாலம் காடுகளுக்கு மேல் கட்டப்பட்டுள்ளது.  
மிக கடுமையான எதிர்ப்பு, போராட்டம், அரசியல்கள், தாண்டி, நீதிமன்ற உத்தரவுகள்படி, பல முயற்சிகளுக்குப் பிறகு, இந்தப் பாலங்கள், பாதைகள் அமைத்துள்ளனர்.

இப்போது, ஹரிதுவார் தாண்டி, ரிஷிகேஷ், அருகே ஒரு ரயில்வே ஸ்டேஷன் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

ரிஷிகேஷ் நகரம் போக்குவரத்திற்கு மிகவும் நெருக்கடியானது.
நாங்கள் முதலில் ரிஷிகேஷ் வடக்கு புறத்தில் உள்ள தபோவனம் என்ற பகுதிக்கு சென்றோம்.

புராதானமான லெட்சுமணன் ஆலயம் (ANCIENT LAKSHMANAN TEMPLE)
லெட்சுமணன் ஜூலா பாலம் செல்வதற்கு முன்பாக உள்ள சாலையில் சென்று கங்கையின் அருகில் உள்ள
மிகப்புராதானமான லெட்சுமணன் ஆலயம் (ANCIENT LAKSHMANAN TEMPLE)
சென்று தரிசித்தோம்.
ஆலயம் முகப்பில் பழமையான ஒரு வளைவுடன் இருந்தது.
உட்புறம் 3 பகுதிகள். ஒரு பகுதியில்

விநாயகர், லெட்சுமணன், பொம்மை சிலைகள் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு ஒரு அறையிலும்,
 மற்றும் ராமர், சீதை, 
தனியாகவும், ஹனுமான் சிலை, மற்றும் 
ஸ்ரீ நாரத், ஸ்ரீ பத்ரி நாத், ஸ்ரீ லக்ஷ்மி, சிலைகளும் உள்ளன.
தனி மண்டபத்தில் ஸ்ரீ லெட்சுமி மகராஜ் அவர்கள் சிலையும் இருந்தது.

பளிங்கு சிலையில் வடிக்கப்பட்ட
(வர்ணி வேஷ ரமணீய தரிசனம்) ஸ்ரீ ஸ்வாமிநாராயண பகவான்
அதி அற்புதமாக இருந்தது.

யோகா அல்லது meditation செய்யும் வகையில் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மிகப்பழமையான தலவிருஷ்டம் கங்கையை ஒட்டிய பகுதியில் இருந்தது.
மிகப் புராதானமான லெட்சுமணன் ஆலயம் என்று எழுதிவைத்திருந்தார்கள்.

இவற்றையெல்லாம், பார்த்து தரிசனம் செய்துவந்தோம்.

அகிலேஸ்வர் மகாதேவர் ஆலயம். 

இது ஒரு தனி ஆலயம், ரிஷிகேஷில் அமைந்துள்ள இன்னொரு பழமையான ஆலயம். இது புதுப்பிக்கப்பட்டு புதிய கட்டிட அமைப்பில் உள்ளது.

கருவரை மன்டபத்தில் சுமார் 12 அடி உயரமான லிங்கம் உள்ளது.
இது தனி உள் மண்டபத்தில் உள்ளது. 
ஒரு நந்தியும் இணைத்து,
அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும், சிறுசிறு அறைகள்/ மாடங்களில், விநாயகர், ராதா, கிருஷ்ணர், பார்வதி, லெட்சுமி, துர்க்கை, மற்றும் மாடியில் ஒரு தனி ஹனுமான் சன்னதி. உள்ளது.

அடுத்து தனியாக ஒரு பாதரச சிவலிங்கம் சன்னதியும் உள்ளது.

இதை அடுத்து வழியில் ஆதிபத்திரி ஆலயம், மடங்கள், Hotel ல்கள் நிறைய இருக்கின்றன.

லெட்சுமணன் ஜூலா 

ரிஷிகேஷ் வந்தவுடன், ஒரு பேருந்து நிலையம் அருகில் பேருந்தை
 நிறுத்தி விட்டு, நாங்கள் நடந்துகொண்டே அங்கிருந்த ஆலயங்களை தரிசித்து
விட்டு, லெட்சுமணன் ஜூலா என்ற தொங்கு பாலத்தை அடைந்தோம்.

இது கங்கையின் மீது தபோவனம் பகுதிக்கும், எதிரில் உள்ள ஜோன்க் என்ற பகுதிக்கும் இடையில் உள்ளது.

இந்த இடம், லட்சுமணன் கயிற்றால் அமைத்தது என்பது புராணம். 
1889 ல் மாற்றி அமைக்கப்பட்டுவிட்டது.
284 அடி உடைய தொங்குபாலம் ராஜ்பகதூர் சுராஜ்மல் என்பவரால் முதலில் கட்டப்பட்டு, அக்டோபர் 1924 ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அடித்துப் செல்லப்பட்டதும், அவரது மகனார், ராஜ்பகதூர் ஷிவ் பிரசாத் துல்ஷன் என்பவரால் 1927 - 29 PWD துறையின் மூலமாக மறுகட்டமைப்பில் 450 அடிக்கு உருவாக்கப்பட்டு, 1930 முதல் பயன்பாட்டில் உள்ளது. 

இந்தப் பாலம் தற்போது சுற்றுலாப் பயணிகளின் கவனத்தில் அதிகம் வந்துள்ளது.

இந்தப் பாலம் வழியாக சென்று வருவதற்கு எந்தக் கட்டணமும் வசூல் செய்யப்படவில்லை. கட்டியவர் தன் பெற்றோரின் ஞாபகார்த்தமாக சீரமைப்பும் செய்தும் உள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இது ஒரு மிக முக்கிய இடமாக ரிஷிகேஷில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
நாங்கள் இதன் வழியாக நடந்து சென்று அக்கரைப்பகுதியை அடைந்தோம்.

த்ரயம்பகேஷ்வர் மகாதேவ் ஆலயம்
இந்தக் கட்டிடம் ரிஷிகேஷ் நகரின் அடையாளக் கட்டிடமாக மாறி வருகிறது.

பிரமிக்கதக்க வகையில் அமைந்துள்ளது.
கங்கையின் கிழக்குப் பகுதியில், நதியின் ஓரத்தில் இந்த 13 மாடி கட்டிடம் உள்ளது.

கங்கையின் கரையில் மிக உயரக் கட்டிடமாக உள்ளது.

முதல் இரண்டு அடுக்குகளில் ஏராளமான கடைகள் இருந்தாலும், மற்ற அடுக்குகளில் தனித்தனியாக அறைகள் ஏற்படுத்தப்பட்டு, அவற்றில், சிவன், விஷ்னு, ராதாகிருஷ்ணன், லெட்சுமிநாராயணர், விநாயகர், ஹனுமன் முதலிய ஏராளமான சுவாமிகளின் திரு உருவங்கள், சேர்த்தும், தனித்தனியாகவும், வைக்கப்பட்டுள்ளது. 

 பல அறைகளில் வியாபார கடைகளும்,. பூசை பொருட்கள் முதலிய ஆன்மீகப் பொருட்களும் விற்பனைக்கு உள்ளன.
சில அறைகள் காலியாகவும் உள்ளது.

எந்தவித மின்தூக்கி அமைப்பும் இல்லை
ஒவ்வொரு மாடியாக படிகளில் ஏறித்தான் செல்ல முடியும்.

மேல்மாடியில் த்ரயம்பகேஷ்வர் மகாதேவ் லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

மேல்புறம் செல்ல செல்ல, ரிஷிகேஷ் நகரும், ஆர்பரித்து வரும் கங்கையாரும் காண்பதற்கு, உண்மையில் ஓர் அற்புதக் காட்சி.

உச்சி மாடி வரை ஏறி சுற்றிப் பார்த்து விட்டு வரலாம். எந்தவிதக் கட்டனமும் இல்லை.

முழுவதும் பார்க்க முடியாதவர்கள் முடிந்தவரை சென்று கண்டு களித்து வரலாம். கட்டாயம் இல்லை.

அருகில் சிறு சிறு ஆலயங்கள், Hotel கள், சத்திரங்கள், மடங்கள், ஆஸ்ரம்கள் வரிசையாக உள்ளன.

ராம் ஜூலா
அடுத்து அந்தப் பகுதியில் இருந்து 2 கி.மீ.தூரத்தில், தென்புறம் ராம் ஜூலா என்ற தொங்குபாலம் இருக்கும் இடம் செல்ல ஒரு Auto மூலம் வந்தோம். (முயன்றால், நடந்தும் வரலாம்)

தெற்குப் பகுதியில் உள்ள ராம் ஜூலா தொங்கு பாலம் மிகவும் Busy யானது. இதன் இரு புறங்களும் ஏராளமான ஆஸ்ரமங்கள், மடங்கள், Hotel கள் உள்ளன.

ராமேஸ்வரர் ஆலயம் :
பாலம் கிழக்குப்புறம் மிகப்பழமையான சிறப்பான ராமேஸ்வரர் ஆலயம் உள்ளது. வட்ட வடிவமாக கட்டிட அமைப்பு இருந்தாலும், நடுவில் உள்ள கருவரையில், பெரிய லிங்கம், உடன் சிறிய விநாயகர், கலையமைப்புடன் உள்ள வெள்ளை பளிங்கு நந்தியும் மிக அழகிய முறையில் உள்ளது.  
அழகிய முறையில், தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. 
இதை தரிசித்து விட்டு, சற்று தூரம் சென்று, அமைக்கப்பட்டுள்ள நீண்ட படித்துறையில் பெருகி ஓடிவரும்
கங்கை நதியில் நீராடினோம். 
 
கீதாபவன்,:
கீதாபவன் ஒரு முக்கியமான ஆஸ்ரமங்களில் ஒன்று. மிகப் பெரியது. உட்புறம் மரங்களும், செடி மலர்களும் ஒரு தோட்டம் போல அமைத்து நடுவில், 
ஸ்ரீ லெட்சுமிநாராயண மந்தீர் அமைந்துள்ளது. மாடியிலும், கீழ்ப்பகுதிகளிலும் சுமார் 1000 அறைகள், சாது, சன்னியாசிகளுக்கு விடப்பட்டுள்ளது. உணவுடன் தங்குமிடமும் இலவசம் என்று கூறுகிறார்கள்

ஆலயம் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. நடுவில் நீள் சதுர வடிவில் ஒரு மண்டபம் கட்டப்பட்டு அதன் உத்திரப் பகுதியில், மிக அழகிய முறையில் ஸ்ரீகிருஷ்ணரின், வாழ்க்கையை சித்தரிக்கும் ஓவியங்கள் உள்ளன.
ஆலயமும், ஆஸ்ரமத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

இங்கு இயங்கிவந்த கீதாபிரஸ் ஆன்மீகப் புத்தக நிலையம் இந்தியா முழுவதுமே, புகழ்பெற்றது. சென்ற முறை ரிஷிகேஷ் வந்தபோது, சில புத்தகங்கள் வாங்கியது நினைவுக்கு வந்தது. தற்போது N மூடப்பட்டுள்ளது 

மேலும், சீதாராம் மந்தீர், முதலிய ஆலயங்கள் தரிசித்தோம்.

பிறகு அங்கிருந்து படகில் மேற்கு கரையை அடைந்தோம். படகில் ஒரு முறை செல்ல ரூ 10/- ம் இருமுறை இருகரைக்கும் சென்று வர ரூ 18/- கட்டணம் உண்டு. 

நாம் நடந்து செல்ல விரும்பினால், அருகில் உள்ள ராம் ஜூலா தொங்கு பாலம் வழியாகவும் சென்று வரலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கு கரையை அடையும் இடத்தில் சத்ருக்கன் ஆலயம் உள்ளது. உலகில் சத்ருக்கனுக்கான இரண்டு ஆலயங்கள் மட்டும் உள்ளதாகவும், ஒன்று கேரளா (108 - திவ்யதேசத்தில் வருகிறது) விலும், மற்றொன்று ரிஷிகேஷத்திலும் உள்ளதாக குறிப்பு உள்ளது.

ரிஷிகேஷ் குறுகிய நெருக்கமான, போக்குவரத்து மிகுந்த இடம் என்பதால், பஸ் முதலிய பெரிய வாகனங்களுக்கு ஒரு வழிப்பாதையும், கட்டுப்பாடுகளும் நிறைய உண்டு என்பதால் மேல்கரையை அடைந்ததும், தனி Auto பிடித்து, எங்கள் சுற்றுலா பஸ் உள்ள இடத்திற்குச் சென்றோம். 

அங்கிருந்து மதியம் ஹரிதுவார் Hotel வந்துசேர்ந்தோம்.
மாலையில், சில ஆலயங்கள் ஹரிதுவாரில் தரிசனம் செய்தோம்.

(இவற்றின் அனுபவ விபரங்கள் பற்றி ஏற்கனேவே பதிவிட்டு உள்ளேன்)

அன்று இரவு Haridwar வந்து Hotel லில் தங்கினோம்.

பயணங்கள் தொடரும்.
நன்றி,

(14.4.2022)
🙏நன்றிகளும் வணக்கங்களும்🙇🏼‍♂️

#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#UTTARAKANNT_TOUR_2022
#RISHIKESH

பதிவு -2 லெட்சுமணன் ஆலயம்


பதிவு - 3. ரிஷிகேஷ் -
அகிலேஷ்வர் மகாராஜ் ஆலயம், மற்றும் சில ஆலயங்கள்.
லெட்சுமன் ஜூலா அருகில்
14.04.2022
#UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#RISHIKESH
#ரிஷிகேஷ் - 
#HARIDWARபதிவு - 
14.04.2022
#ரிஷிகேஷ்

https://m.facebook.com/story.php?story_fbid=8139119682829884&id=100001957991710

#ரிஷிகேஷ் - பதிவு - 4 - : லெட்சுமணன் ஜூலா மற்றும்
த்ரயம்பகேஷ்வர் ஆலயம் - 13 மாடிக் கட்டிடத்தில் உள்ள ஆலயங்கள்

#UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#RISHIKESH
#ரிஷிகேஷ் - 
#HARIDWARபதிவு - 
14.04.2022
#ரிஷிகேஷ்

https://m.facebook.com/story.php?story_fbid=8139119682829884&id=100001957991710
#ரிஷிகேஷ் பதிவு - 5
கிழக்கு கரை ஆலயங்கள்.
ராமேஷ்வரர், மற்றும் அப்பகுதி மடவிளாகம்
#UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#RISHIKESH
#ரிஷிகேஷ் - 
#HARIDWARபதிவு - 
14.04.2022
#ரிஷிகேஷ்

https://m.facebook.com/story.php?story_fbid=8139119682829884&id=100001957991710


#ரிஷிகேஷ் - பதிவு 6
கங்கை கிழக்குப் பகுதி - கங்கை நதி - நீராட்டு துறைகள் - கீதாபவன் - மற்ற இடங்கள்
#UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#RISHIKESH
#ரிஷிகேஷ் - 
#HARIDWARபதிவு - 
14.04.2022
#ரிஷிகேஷ்

https://m.facebook.com/story.php?story_fbid=8139119682829884&id=100001957991710


#ரிஷிகேஷ் - பதிவு - 7
மேற்கு கங்கைகரைகள், சத்துருக்கன் ஆலயம்.
ரிஷிகேஷ் நகரம் - ஹரிதுவார் வரை.
#UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#RISHIKESH
#ரிஷிகேஷ் - 
#HARIDWARபதிவு - 
14.04.2022
#ரிஷிகேஷ்

https://m.facebook.com/story.php?story_fbid=8139119682829884&id=100001957991710


Wednesday, September 7, 2022

UTTARAKANNT_TOUR_2022#HARIDWAR ஹரிஹரர் ஆஸ்ரமம் #மானசா தேவி ஆலயம் 14.04.2022

#UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#HARIDWAR 
#ஹரிஹரர் ஆஸ்ரமம் 
#மானசா தேவி ஆலயம்:
ஹரிதுவார் - பதிவு - 3
14.04.2022

14.04.2022 அன்று மாலையில்,
KANKHAL பகுதியில் உள்ள பிரிசித்திபெற்ற தட்ச மகாதேவர் என்ற, தக்க்ஷேஸ்வரர் மகாதேவர் ஆலயம் தரிசித்து விட்டு, சற்று அருகில் உள்ள ஹரிஹரர் ஆஸ்ரமம் சென்றோம்.

ஹரிஹரர் ஆஸ்ரமம்

🛖ஹரி ஹார் ஆசிரமம், கன்கால் Kankhal என்ற இடத்தில் உள்ளது. இங்குள்ள மெற்குரி சிவலிங்கம் எடை 150 கிலோவாகும். மேலும், ஒரு ருத்ராஷா மரமும் அமைந்துள்ளது. 

இந்த இடம், ஸ்ரீ குரு தேவ் பகவான், 
தத்தாத்தேரயர் தவம்புரிந்த இடம்.
கணக்கற்ற சாதுக்கள் வந்து வழிபட்ட இடம்.
இந்த இடத்தில் உள்ள ருத்ராஷமரம் மிகவும் புராணமானதும், புனிதம் பெற்றதாகும்.
இங்குள்ள மெர்க்குரி லிங்கம் ஸ்ரீபரதேஷ்வர். 
உலகத்திலேயே முதன்முதலாக அமைக்கப்பட்டதாகும். 
மகா மிருதுஞ்சயர் மக்களுக்கு அனைத்து நலன்களையும் வழங்குபவர்.

இங்கு வந்து தரிசிப்பவர்களுக்கு, இந்த இடம் முழுதும் நிறைந்து இருந்தவாறு உள்ள, பகவான் ஸ்ரீ தத்தேத்தரயர் அவர்களின் அருள் ஆசிகள் கலியுகவாசிகள் அனைவருக்கும் என்றும் உண்டு என்கிறார்கள்.

பயண அனுபவக் குறிப்புகள்:

ஹரிஹரர் ஆஸ்ரமம் / ஆலயம்
இது பெரிய வளாகம். அழகிய கட்டிட அமைப்பில் உள்ளது. 

நுழைவுக்கட்டணம் எதும் இல்லை.

பெரிய மண்டபத்துடன் ஆலயக் கட்டிடம், அழகிய பூங்காவுடன் அமைந்துள்ளது.
பொதுவில், அமைதியான இடம்.

சுவாமி கருவரை மிகப்பெரிய Hall போன்ற இடத்தின் நடுவில் உள்ளது. அழகிய பளிங்கு நந்தி உள்ளது. சுவாமி பளபளப்பான கல்லில் அமைத்துள்ளனர்.

அழகிய பிரம்மாண்டமான கட்டிட
அமைப்பு.

பெரிய ருத்ராஷமரம் சிறப்புடன் அமைந்துள்ளது. தனி கவனத்துடன் கட்டிடத்தில் உள்ளது.

ஆஷ்ரமம் என்பதால், தலைமை குருவின் வழிகாட்டலில், ஆலயம் சிறப்பாக உள்ளது.

ஹரிதுவாயில், தரிசிக்க வேண்டிய இடங்களில் ஒன்று


ஹரிஹரர் ஆஸ்ரமம் தரிசித்தபின், Auto மூலம், மானசதேவி ஆலயம் சென்றோம்.

🛕மானசா தேவி ஆலயம்:

 ஆலயம் ஒரு குன்றில் மீது இருப்பதால், தரிசனத்திற்கு, வின்ச் மூலம் மானசதேவி ஆலயம் சென்று தரிசித்துவந்தோம்.

🌺இவ்வாலயம் சக்தியின் வடிவமான மானசா தேவிக்கான ஆலயம். மலைக்குன்றின் மீது உள்ளது. இங்கு செல்வதற்கு, ரோப்கார் வசதியும் மலையேற்றப்பாதையும் உள்ளது.

🍀மானச தேவி ஆலயம், பில்வ பர்வத் என்ற மலைக் குன்றின்மேல் உள்ளது. மனதின் எண்ணங்களை நிறைவுசெய்யும் ஆலயம்.

பயண அனுபவக் குறிப்புகள்:

14.04.2022 மாலை,
தக்ஷேஸ்வர மகாதேவர் ஆலயம் மற்றும் ஹரிஹரர் ஆஸ்ரமம் / ஆலயம் தரிசித்துவிட்டு, அங்கிருந்து ரிக்க்ஷா மூலம் மானச தேவி ஆலயம் இருக்கும் அடிவாரத்திற்கு வந்தோம்.

இந்த ஆலயம், ஹரிதுவாரின் மையப் பகுதியில் மலைக்குன்றில் உள்ளதால், நெருக்கடியான கட்டிடங்கள், தெருக்கள் பாதைகள். 

இரண்டு வழிகளில் இவ்வாலயம் அமைந்துள்ள குன்றிற்குச் செல்லலாம். 

மலைப்படிக்கட்டுப் பாதைகள் மூலம் நடந்தும் செல்லலாம்.

அல்லது Winch / Cable Car மூலமும் செல்லலாம். 

பெரிய வாகனங்கள் நேரடியாக செல்ல முடியாது.

Ropeway Car : இது ஒரு தனியார் நிறுவனம். பல மலைக்கோவில்களில் இவர்கள் இந்த பணி செய்து வருகிறார்கள்.

ஹரிதுவாரில், மலைக்குன்றின் மீது உள்ள மானச தேவி ஆலயம் மற்றும் சன்டி தேவி ஆலயம் இரண்டுக்கும் இவர்கள்தான் ஏற்பாடு செய்துள்ளனர்.
கட்டணம் இரண்டு ஆலயங்களையும் சென்று தரிசித்து வர மொத்தமாக ஒரே கட்டண வசதிகள் செய்துள்ளார்கள். நாம் சரியானபடி திட்டமிட்டால் இதன் கட்டண சலுகைகளை அனுபவிக்க முடியும்.

ஒவ்வொரு ஆலயம் செல்லும்போது கட்டனம் செலுத்தி Ticket பெறுவதற்கு, வரிசையில் நிற்க வேண்டியிருக்கிறது.

Ticket ஒரு முறை எடுத்தால், 3 நாட்கள் செல்லும் என்கிறார்கள்.
மலைமீது ஏறுவதற்கும், இறங்குவதற்கும் சேர்த்துதான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இரண்டு ஆலயங்களுக்கும் தரிசித்து வர தனி வாகன வசதியும் செய்து தருவதாகக் கூறப்படுகிறது.

சில நேரங்களில், சன்டி தேவி அல்லது மானச தேவி ஆலயத்தில் கூட்டம் மிகவும் அதிகம் இருக்கும். நாம் Token வாங்கி காத்திருக்கவேண்டும். 

சிலர் முதலில் சன்டி தேவி ஆலயம் சென்று தரிசித்து விட்டு இங்கு வருவது நலம் என்று பதிவிடுகிறார்கள்.

அருகில் வசிப்பவர்கள், ஆலய விஷேச நாட்களில், ஒரே சமயத்தில் தரிசிக்க இந்த Compound ticket முறை நல்ல ஏற்பாடு எனத் தெரிகிறது

நாங்கள், தனித்தனியாக வெவ்வேறு நாட்களில் சென்று தனி தனி Ticket பெற்று தரிசித்தோம். பெரும்பாலான Tourist operators இதைத்தான் செய்கிறார்கள். இதுவே நமக்கு வசதியாகப்படுகிறது

Winch / Cable Car Station செல்ல தனி இடம் உள்ளது. 

கட்டணம் உண்டு Ticket வாங்கும் இடத்தில் Waiting Hall உள்ளது. 
 முதலில் ஒரு Tocken கொடுத்துவிடுகிறார்கள். ஒரு Winch | cable காரில் 6 பேர் செல்லலாம் என்பதால் அதற்கு தகுந்தார்போல் சிறிய சிறிய குழுக்கலாக உள்ளே நுழைய வைக்கிறார்கள். Disply Board Announcement ல் நம் Token அழைப்பில் நாம் சென்று வரிசைக்கு செல்ல வேண்டும். அதன் பிறகு Ticket வாங்கி
நாம் Cable Car ல் ஏறும் இடம் செல்ல வேண்டும்.

நிறைய ஆட்கள் உள்ளனர். நமக்குப் போதுமான எச்சரிக்கை தந்து பாதுகாப்புடன் ஏற்றுகிறார்கள்.

Cable Car பாதி Auto போல உள்ளதால், தொங்கிக் கொண்டும், ஆடிக் கொண்டும் மெதுவாகச் ஆடிச் செல்கிறது. இறங்கும் போதும் அவ்வாறே பாதுகாப்புடன் வந்து இறக்கி விடுகிறார்கள்.

இறங்கியபிறகு கோவில் வளாகம் மிக அருகிலேயே இருப்பதால், ஆலயம் நுழைந்து சுவாமி தரிசனம்.

சிறிய அலுவலகம் இருக்கிறது. Cheppal Stand உள்ளது.

நாங்கள் மாலையில் சென்றதால்,
நடை சாத்திவிடும் அவரம் இருந்தது.
தனி வழி, கட்டண தரிசனம் இவைகள் கிடையாது.
ஆலய பூசை 7 மணி அளவில் நடந்ததால், அந்த நேரத்தில் நெருக்கடியாகவும், பரபரப்பாகவும் இருந்தது. நாங்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தோம்.
சிறிய சன்னதியில் சிறிய அளவில் அம்மன் உருவம். தீப ஆராதனை காட்டப்பட்டது. 
ஆலய கருவரை மண்டபத்தை உள்ளடக்கி ஏகபிரகாரம். பிரகாரத்தில் மேலும் சிறுசிறு சன்னதிகள் உள்ளன.

சற்று அருகில் கீழ இறங்கி செல்ல படிகள் அமைத்துள்ளார்கள்.

 அருகில் ஆலய Shopping complex. Cable Car வழியில் கீழ செல்ல ஒரு தனி இடம். அங்கும் வரிசையில் நின்று இறங்கினோம்.

மலைக்குன்றின் உயரத்திலிருந்து, கங்கையும், ஹரிதுவாரும் கண்கொள்ளாக்காட்சிகள்.
பகலில் சென்றால், இன்னும் அற்புதக் காட்சிகள் காண இயலும்.

நான் 2011ம் வருடம் சார்தாம் யாத்ரா வந்தபோது, ஹரிதுவாரில் உள்ள இந்த ஆலயம் வந்திருந்தேன். அப்போது இருந்ததைவிட அதிக வளர்ச்சியும், மக்கள் நெருக்கமும் வசதிகளும் பல்நிலைகளில் பெருகி உள்ளதைப் பார்க்க முடிகிறது.

ஆலய தரிசனம் முடித்து Cable Car மூலம் கீழே இறங்கினோம். அங்கிருந்து வாடகை Auto பேசி main Road வந்து பிறகு Hotel வந்து சேர்ந்தோம்.

 இரவு ஹரிதுவார் Hotel லில் வந்து தங்கிவிட்டோம்.

பயணங்கள் தொடரும்.
நன்றி,

(14.4.2022)
🙏நன்றிகளும் வணக்கங்களும்🙇🏼‍♂️

#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#UTTARAKANNT_TOUR_2022
#HARIDWAR 
ஹரிஹரர் ஆஸ்ரமம் 
#மானசா தேவி ஆலயம்:



Sunday, September 4, 2022

UTTARAKANNT_TOUR_2022 தக்ஷேஸ்வரமகாதேவர்ஆலயம்,ஹரிதுவார் - பதிவு - 2.14.04.2022

#UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
14.04.2022
#UTTARAKANNT_TOUR_2022
#HARIDWAR 
தக்ஷேஸ்வரமகாதேவர்ஆலயம்
#ஹரிதுவார் - பதிவு - 2.
14.04.2022

🌵இமயத்திலிருந்து வரும் கங்கை நதி முதன் முதலாக சமவெளிக்கு வரும் நகரம் ஹரிதுவார் ஆகும்.
இதனால், இங்கு நீர் தூய்மையாகவும், புனிதமாகவும் போற்றப்படுகிறது. அடர்ந்த வனப்பகுதிகளும் உள்ளன.

🌳இத்தலம் ஹர்த்வார் என்றும் ஹரித்வார் என்றும் அழைக்கப்படும். ஹர்‌ஹர் மகாதேவ் என்று அர்ச்சிக்கப்படும் ஹரன்(சிவன்) உறையும் கேதார்நாத்திற்கு நுழைவாயிலாக இருப்பதால் ஹர்த்வார் எனப்படுகிறது. ஹரி(விஷ்ணு) உறையும் பத்ரிநாத்திற்கு நுழைவாயிலாக இருப்பதால் ஹரித்வார் என்றும் அறியப்படும். த்வார் என்பது நுழைவாயில் எனப் பொருள்படும். 

🌼கி.மு. 1700 - 1200 காலத்திய மன் சிற்பங்கள் கண்டு எடுக்கப்பட்ட இடம்.

🌺மயூரா வம்சத்தினரும், கௌஷான் வம்சத்தினரும் ஆண்ட இடம்.

📝ஹூவான் சுங் என்ற சீனர் தனது குறிப்புகளில், ஹரிதுவார் அருகில், அரசர் ஹர்ஷவர்தன் (590 -647) காலத்தில் ஆலயங்கள் கட்டப்பட்ட அரன்மனை மற்றும் மாயாபூர், பற்றிய குறிப்பும் உள்ளது.

🍀முகலாயர், சீக்கியர், ஆங்கிலேயர் வரை அனைவரின் காலத்திலும், மாயபுரி என்ற ஹரிதுவார் பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருந்தது.

#பயணஅனுபவக்குறிப்புகள்

💜நாங்கள் 14.04.2022 தமிழ் வருடப்பிறப்பு அன்று காலையில்,
 ஹரிதுவாரில் நாங்கள் தங்கியிருந்த Hotel Trimurthy அருகில் உள்ள கணபதி காட் என்ற கங்கை நதி பாய்ந்துவரும் இடத்தில் நீராடி, அருகில் உள்ள ஆலயங்கள் தரிசனம் செய்தோம்.
💥மாலையில் 
🛕தக்ஷேஸ்வர மகாதேவ் ஆலயம், 🛖ஹரிஹர் ஆஷ்ரமம் 
சென்று வந்தோம்.

#தக்ஷேஸ்வரமகாதேவர்ஆலயம்
தட்ச பிரஜாபதி ஆலயம் என்றும் கூறுவர்.

🛕தட்ச மகாதேவர் என்ற, தக்க்ஷேஸ்வரர் மகாதேவர் ஆலயம்.

🌳ஹரிதுவார் அருகில் KANKHAL -கன்கல்- என்ற இடத்தில் உள்ள இந்த ஆலயம் தட்ஷேஸ்வர மகாதேவ் ஆலயம் என்று குறிப்பிடுகிறார்கள்.

💥புராதானமுக்கியமான இடமாகக் கருதப்படுகிறது.
KARAMBH00MI (காரம்பூமி) என்றும், தபபூமி என்றும் அழைக்கப்படுகிறது.

🍁புராணப்படி, தட்ச பிரஜாபதி என்ற பேரரசனின் மகள் தாட்சாயினி பிறந்த இடம் இதுவாகும்.

🌿சதி என்ற தாட்சாயினி சிவபெருமானை வேண்டி திருமணம் செய்துகொள்கிறார்.

🌲தட்சன், சிவனை வெறுத்து, அவரை அழைக்காமல், யாகம் செய்கிறார். 

🌴தட்சன் மகளாகிய தாட்சாயினியாகிய, பார்வதிதேவி, சிவன் கட்டளை மீறி, தட்சன் யாகத்திற்கு வருகிறார். 

🍁தட்சன் மேலும் சிவனை அவமானப்படுத்திவிடுகிறார்.
இதனால் சதி வெறுப்புற்று, தன் தவறுக்கு சிவனிடம் மன்னிப்பு வேண்டிக் கொண்டு, யாககுண்டத்தில் வீழ்ந்து தன்னை மாய்த்துக் கொள்ள முயன்று, உயிர் இழந்து விடுகிறார். 

🌵சதியின் உடலை விஷ்ணு தன்னுடை சுதர்சன சக்கரத்தால் 51 பாகங்களாக துண்டாக்கி வீசிவிடுகிறார்.

💫இந்த 51 இடங்களும் சக்தி பீடம் என்று போற்றி வணங்கப்பட்டுவருகிறது.

💥சக்தியினுடைய ஆபரணங்கள் 56 பாகங்களாக விழுந்த இடங்கள் உப-சக்தி பீடங்கள் என்று வணங்கப்பட்டு வருகின்றன.

💥இந்த இடத்தில் சதியினுடை உடல் பாக துண்டு விழுந்ததால், இந்த இடம் சக்தி பீடமாக வணங்கப்படுகிறது.

💥சிவனின் வடிவமான, வீரபத்திரர் மூலம் தக்கன் அழிக்கப்பட்டு விடுகிறார். தக்கன் தவறு உணர்ந்து தவம் செய்ததால், சிவன் அருளால், உயிர்பெற்று ஆட்டுத்தலை பெற்றார்.

💥கன்கல் என்ற, இந்த இடத்தில், உள்ள தீர்த்த கட்டம் மிக புராதனமானது, மிகமிக உயர்வானது

💥சிவன் - சதி திருமணம் (பாணிக்கிரஹம்) செய்து வைக்கப்பட்டதால், உலகத்தின் முதல் திருமணம் நடைபெற்ற இடம் இது என்று குறிப்பிடுகிறார்கள்.

💥இந்த நிகழ்வுகள் நடைபெற்றது இந்த ஆலயம் இருக்கும் இடமே என்று அடையாளப்படுத்தப்படுகிறது.

#பயணஅனுபவக்குறிப்புகள் 

தக்ஷேஸ்வர மகாதேவர் ஆலயம், ஹரித்வாரின் தென் பகுதியில் உள்ள KANKHAL என்ற பகுதியில் உள்ளதால், நாங்கள் தங்கியிருந்த TRIMURTI Hotelலிலிருந்து 14.04.2022 மாலையில் வாகனம் மூலம் சென்றுவந்தோம்.

இவ்வாலயம் முக்கியமான இடமாக இருப்பதால், நல்லக் கூட்டம் உள்ளது.

வாகனங்கள் நிறுத்த இடவசதி உண்டு.

ஆலயத்தில் எந்தவித நுழைவுக் கட்டணமும் இல்லை.

ஆலயம் முன்பகுதியில் சிவபெருமான், யாககுண்டத்தில் வீழ்ந்து விட்ட தன் மனைவியை தூக்கி வரும் சிலை உள்ளது.

சிலையின் அமைப்பு மிக அற்புதமானது. அருமையாகவும், உணர்வுபூர்வமாகவும், உயிரோட்டமாகவும் உள்ளது. 

நுழைவு வாயிலில் இரண்டு சிங்கங்கள் அமைத்துள்ளனர்.

ஆலய வளாகம் மிகப்பெரிது
3, 4 கட்டிடங்கள்.

சுவாமிக்கு ஒரு பெரிய ஆலயம், 
சதி தேவிக்கு ஒன்று,
அற்புதமான அமைப்பில் உள்ளது . 
வட்டக் கருவரையின் உயர் கோபுர அமைப்புகள்.
நீண்ட பெரிய ஹால்கள் போன்ற அமைப்பில் தனி கருவறை.

கிழக்குப்புறம் கங்கை நதியின் ஒரு பாகம் ஓடி வருகிறது. அங்கே நீராட தனியாக ஒரு சிறிய படித்துறை உள்ளது.

புராதானமானது, புன்னியமானத் துறை என்பதால், நானும், என் நண்பர்களும் நீராடினோம்.

அருகில், சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. சுற்றி சில சன்னதிகள். யாக குண்டங்கள் உள்ளன.

எதிர்புறம் கங்கா மாத ஆலயம்.

பெரிய அகலமான கருவரை மன்டபத்தில் கங்கா மாதாவை உருஅமைத்து வணங்குகிறார்கள்.

அடுத்து தட்சன் யாககுண்டம் ஒரு பெரிய தனி கருவரை ஆலய அமைப்புடன் உள்ளது. யாக குண்டம் சுமார் 4 x 3 அமைப்பில் 2 அடி ஆழம் உடையதாக தோன்றியது.

இதற்குப் பின், சுவாமி ஆலயம் சென்றோம். பெரிய முன் மண்டபம், அழகிய பளிங்குக் கல் நந்தி உள்ளது.

சில புனரமைப்பு வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

பெரிய வட்ட வடிவக் கருவரையில், சுவாமி மிகச்சிறிய வடிவில் மகா தட்ஷேஸ்வரர் அமைந்துள்ளார் உள்ளார்.

தட்சன் ஆட்டுத் தலைபெற்றதும், , இங்கு வரும் பக்தர்களுக்கும் அனுகிரகம் புரிய வேண்டிக்கொண்டதால், சிவன் அவ்வாரே செய்கிறார் என்பது புராணம்.

பூசை அமர்ந்தே செய்கிறார்கள். 
அழகிய கட்டடி அமைப்புகள்.

அதன் பின், பார்வதி தேவியின் கருவரையும் பெரியதாகவும் பல தெய்வங்களையும் உள்ளடக்கி வைத்துள்ளார்கள்.

ஒரு தனி மண்டபக் கருவரையுடன்
லெட்சுமிநாராயணப்பெருமாள்.

மேலும், தனித்தனி வினாயகர், துர்க்கை, ஹனுமான், உள்ளார்கள்.

பொதுவாக அணைத்து இடங்களும் சென்று தரிசித்து வர 1 மணிநேரம் ஆகலாம்.

வருடத்தில் ஒரு முறை முக்கிய விழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.

மற்ற விழாக்கள் நாட்களிலும், பொதுவான நாட்களிலும் தரிசனம், பிரார்த்தனை, ஆன்மீக சுற்றுலா என்ற அளவில் பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் என்கிறார்கள்.

ஹரிதுவார் செல்பவர்கள் இந்த ஆலயம் அவசியம் தரிசியுங்கள்.

இதைத் தொடர்ந்து, சிறிய ரிக்க்ஷா மூலம் KANKHAL பகுதியில் உள்ள பிரிசித்திபெற்ற ஹரிஹரர் ஆஸ்ரமம் சென்றோம்.

பயணங்கள் தொடரும்.
நன்றி,

(14.4.2022)
🙏நன்றிகளும் வணக்கங்களும்🙇🏼‍♂️

#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#UTTARAKANNT_TOUR_2022
#HARIDWAR 
#தக்ஷேஸ்வரமகாதேவர்ஆலயம்