Sunday, November 21, 2021

உதயப்பூர் - MAHARANA PRATAP SMARK SAMITI பதிவு - 4 SPLENDORS OF INDIA

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#UDAYAPUR
6-09-2021 
பதிவு - 5 - 4
உதயப்பூர்:
#MAHARANA PRATAP SMARAK SAMITI
MOTI NAGAR, UDAIPUR 

மகாராணா பிரதாப் நினைவுச் சின்னம்💥* 

#மஹாராணா பிரதாப் சிங் வரலாறு சில குறிப்புகள் தொடர்ச்சி....

பகுதி - 5
❄️
⚜️🏹யுத்தத்தின் விளைவுகள்:

மொகலாய ராணுவத்தில் குறிப்பிடத்தக்க முறையில் பாதித்தது. எண்ணற்ற முகலாய போர் வீரர்கள் மாண்டனர். பிரதாப் பக்கம் நின்ற சுற்றுப்புற குன்றுகளில் வாழும் பில் பூர்வீக மக்கள் பலமாக அம்புகள் ஏவியதால் மொகலாயப் படையினர் அதிகம் பாதிப்படைந்தனர். அவர்களது பங்களிப்புக்கு மதிப்பளிக்கும் வகையில், ஒரு பில் போர்வீரன் மேவாரில் உள்ள அரசகுடும்ப அணிகல வரிசையில் பிரதாபிற்கு அடுத்ததாக அமர்த்தப்பட்டார். 

⚜️போரின் பின்விளைவுகள் 

👑பிரதாப் ஆரவல்லி மலைத்தொடர் வனப்பகுதிகளில் பின்வாங்கிக் கொண்டு தனது போராட்டத்தைத் தொடர்ந்தார். அவரது ஒரு முயற்சியான நேருக்குநேர் மோதல் தோல்வி கண்டமையால், பிரதாப் கொரில்லாச் சண்டை யுக்திகளை மேற்கொண்டார். தனது குன்றுகளைத் தளமாகப் பயன்படுத்தி, பிரதாப் முகாமிட்டிருந்த மொகலாயப் படையினரை பெருமளவில் அலைக்கழிக்கத் தொடங்கினார்.
அவர் மேவாரில் உள்ள மொகலாயப் படையினர்கள் ஒருபோதும் சமாதானம் காணக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்தார்: அக்பர் மூன்று படைஎழுச்சிகள் நடத்தி பிரதாப்பை மலையில் மறைவிடங்களில் தேடிப்பார்த்துக் கண்டுபிடிக்க முயற்சிகள் செய்தும் பலனளிக்கவில்லை. 

⚜️ஆரவல்லி குன்றுகளில் வாழும் பில் பூர்வீகக் குடிகள் பிரதாப்பிற்கு சண்டைக்காலத்தில் ஆதரவும் மற்றும் சமாதான நாட்களில் காடுகளில் வசிக்க உரிய வழிமுறைகள் கூறியும் உதவி செய்தனர். இவ்விதமாக பல்லாண்டுகள் கழிந்தன. 

பகுதி - 6
⚜️மகாராணாவிடம் அக்பரின் தோல்விகள் 

⚜️அக்பரோ மஹாராணா பிரதாப்பை எதிர்த்து படையெடுப்பு ஒன்றன்பின் ஒன்றாக நடத்திக்கொண்டே இருந்தார், ஆனாலும் ஒருபோதும் அவர் வெற்றி பெறவில்லை. ஏராளமான அளவில் அவர் பணச்செலவு செய்தும் மஹாராணா பிரதாபைத் தோற்கடிக்க முடியவில்லை. முப்பது ஆண்டுகள் மேலாக பிரதாப் அக்பரை விஞ்சியே இருந்தார் மற்றும் அவரது வாழ்க்கையில் கடைசி பத்தாண்டுகள் தனது ராஜ்யத்தின் பெரும்பகுதியை விடுவித்திருந்தார். அவரால் பிடிக்க முடியாதவைகள் சித்தூர் மற்றும் மண்டல் கர்ஷ் இரண்டுமேதான் அவரை அவைகள் அதிகம் வருத்தம் அடையச் செய்தது. 

பகுதி - 7
⚜️மகாராணாவின் இறுதி நாட்கள் 

மஹா ராணா பிரதாப் வேட்டையாடும் பொழுது ஏற்பட்ட விபத்தால் மரணம் அடைந்தார். அவர் சாவண்டில் ஜனவரி 29, 1597, நாளன்று மரணம் அடைந்தார், அப்பொழுது அவருக்கு வயது ஐம்பத்து-ஆறாகும். 

⚜️மரணம் அடையும் தருவாயில் தனது மகன், அமர்சிங்கை அவருக்கு அடுத்த வாரிசாக்கி தொடர்ந்து நிரந்தரமாக மொகலாயர்களுடன் போரிட்டுக்கொண்டே இருக்கும்படி பிரமாணம் எடுத்துக்கொள்ளச் செய்தார். இவ்வாறாக, அவரது சிரமமான சூழ்நிலைகள் அவரது சரிவடைந்த வருடங்களில் அதிகவலுப்பெற வைக்கவில்லை; 
இறுதிவரை துணிச்சலாகவே நிமிர்ந்து இருந்தார். அவர் படுக்கையில் தூங்காமலேயே வாழ்ந்து வந்தார், அக்பரிடம் இருந்து மொத்த ராஜ்ஜியம் மீட்டு கைவரப் பெற்றும் அவரது சபதம் சித்தூரைக் கைப்பற்றும் வரை தரையில்தான் தூங்குவது மற்றும் ஒரு குடிலில் தான் வாழ்வது என்பதைக் காத்து வந்தார். 

⚜️மஹாராணா பிரதாப்பின் மகன், அமர்சிங், மொகலாயர்களுடன் பதினேழு முறைகள் யுத்தங்கள் செய்தார் ஆனாலும் அவர் நிபந்தனையின் பேரில் அவர்களை ஆட்சி யாளர்கள் என்று ஒப்புக்கொண்டிருந்தார். 

⚜️அந்த நேரத்தில், மகாராணா பிரதாப்பின் நம்பகத்துக்குரிய ராஜபுத்திரர்கள் சரணடைதல் என்ற மாயையில் இருந்து விடுபட்டு ராஜஸ்தானில் இருந்தே வெளியேறினர். அவர்கள் "ரோர்கள்" என்று அழைக்கப்படுவர் ஹரியானாவில் குடியமர்ந்தனர், ஒருசிலர் மட்டுமே உத்திர பிரதேசத்தில் இடம்பெயர்ந்தனர். இன்றைய தினம் கூட, அவர்கள் பிற ராஜபுத்திரர்களுடன் மணம்புரிந்து கொள்வது கிடையாது. 

பகுதி- 8 

இந்திய சுதந்திரத்திற்குப் பின்... 

⚜️இந்தியாவின் சுதந்திரம் 1947இல், பெற்றதைத் தொடர்ந்து, மகாராணா பூபால்சிங் (பதவிக் காலம் 1930-1955) என்பவர் மகாராஜ் பிரமுக் ராஜஸ்தான் மாநில (~ ஆளுநர் ) 1952-1955 –அந்த பதவி இந்தியக் குடியரசு மேவாருக்காக ஏற்படுத்தியுள்ளது. 

⚜️மகாராணா பூபால்சிங் தான் முதன்முதல் தனது மாநிலத்தை சுதந்திர இந்தியாவுடன் (18 ஏப்ரல், 1948)இணைத்துக் கொண்ட மன்னராவார். 

⚜️இந்தியாவின் முதல் யூனியன் உள்துறை அமைச்சர் (லோஹ் புருஷ் - இரும்பு மனிதர்) சர்தார் வல்லபாய் படேல் யூனியனில் சேரத் தயங்கிய ஹைதராபாத் மற்றும் பிற மாகாணங்களை வன்மையாகக் கடிந்துரைக்கும் கண்டனம் தெரிவித்துக் கூறினார்,:
"இந்தியாவில் எந்த ஒரு சுதேச சமஸ்தானம் சுதந்திரம் கோரும் உரிமை பெற்று உள்ளது என்றால் அது மேவார் ஒன்றுதான், ஆனால் அதுவோ சந்தோஷமாகவும், சம்மதமாகவும் இந்திய தேச யூனியனுடன் சேர்ந்து கொள்ள விரும்புகின்றது, அதன் கூற்றுப்படி, அவர்களின் பதிமூன்று நூற்றாண்டுகள் மேற்கொண்ட தூதுக்குழுவின் முயற்சிகள் முழுப்பலன் தந்துள்ளது...மேவாரைத் தவிர்த்து மற்ற எந்த ஒரு சுதேச சமஸ்தான மன்னர்களுக்கு உரிமையேதும் கிடையாது..." 

⚜️சுதந்திரம் பெற்ற பிற்காலத்தில் கூட, இந்தியாவின் பொதுமக்கள், இந்தியாவின் ஜனாதிபதிகள், பிரதம மந்திரிகள், மற்றும் அரசியல் வாதிகள் யாவரும், எவ்வகையிலும் பிரதிபலன் எதிர்பாராமல் மேவாருக்கு மதிப்பும், மரியாதையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே வந்தனர். 

⚜️மேலும் குறிப்பிடத்தக்க இந்திய சுதந்திரப் போராளியும், யூனியன் அமைச்சரும் மற்றும் பாரதிய வித்யா பவன் நிறுவனரும், நவீன காலத்து இந்தியாவின் பெருமைக்குரிய மனிதர்களில் ஒருவருமான, கே.எம். முன்ஷி (1887-1971) எழுதியுள்ளதாவது, "மேவாரின் மகாராணாக்கள் ஹிந்துப் பண்பாடு மற்றும் ஆட்சிஅமைப்பு ஒழுங்கு இரண்டையும் சிறப்பாகவும், உயர்குடிப்பிறப்பாகவும் வெளிப்படுத்திக் காட்டினார்கள். ராம்ராஜ்ஜியம் என்பதன் புராணியக் கோட்பாட்டை நடைமுறையில் அமுல்படுத்தி வைத்தார்கள். 

பகுதி - 9
மகாராணாவின் சிறப்புகள் 

👑மஹாராணா பிரதாப் ஒருபெரும் நாயகனாக இந்தியர்களின் பார்வையில் விளங்குகிறார், அவர்தன் மக்களால் அதிகம் மதிப்பும் மற்றும் அன்பும் செலுத்தப் படுகின்றவராகவே விளங்குகிறார். இந்து வரலாற்றில் ஒரு இருளான அத்தியாயத்தில், பிரதாப் மட்டுமே தன் கெளரவம் மற்றும் கண்ணியம் கருதி தன்னந்தனியானாக உறுதிபட நின்றார்; தனது கௌரவத்தை சுயபாதுகாப்பிற்காக ஒருபோதும் அவர் விட்டுக்கொடுத்ததே இல்லை. அவர் ஒரு பெருமைக்குரிய மற்றும் சுதந்திரமான மனிதராகவே இறந்தார். 

⚜️மஹாராண பிரதாப் இந்தியாவில் மிகுந்த உயர்வான மதிப்பு கொண்டவராகவும் மற்றும் தேசப்பற்று மற்றும் சுதந்திரப்போர் மொகலாய ஆட்சியைத் துணிந்து எதிர்த்து நிகழ்த்தியதில் ஒரு முன்மாதிரியாகவும் சித்திரிக்கப்பட்டுக் கொண்டு வரப்படுகின்றார். 

⚜️பிரதாப் மற்றும் சேடக் பெயர்கள், அப்பொலிகுதிரை, யாவுமே பிரசித்திப் பெற்றதாகும் மற்றும் இந்தியக் குடியரசு அரசாங்கம் அவைகளின் நினைவாக தபால் தலைகள் (1967, 1998) மற்றும் நாணயங்கள் (2003) வெளியிட்டு இந்தியாவின் மிகப்பெரும் மகனாரை கௌரவப்படுத்தியது. 

⚜️நன்றியோடு நாடானது, சேடக் மீது ஏறி உள்ள பிரதாப்பின் சிலையை அவரது கூட்டுப் பணியாளர்களான-ஜ்ஹல மான், பிலு ராஜா (மலைவாழ் மக்கள் முதல்வன்), பாமா ஷா, ஹக்கீம் கான் சூர், மற்றும் ஒரு காலாட்படை-வீர-சேவகன் அனைவரது சிலைகளுடன் புது டெல்லியில் பாராளுமன்ற இல்லத்தின் முன்னால் ஆகஸ்ட் 21, 2007இல் நிறுவி அஞ்சலிசெலுத்தி வருகின்றது 

பகுதி - 10.

#மோடிமக்ரி | #மோடிமகால் | #முத்துமலை 

⚜️மஹாராணா பிரதாப்பின் வெண்கலச் சிலை மற்றும் அவரது விருப்பமான, உண்மையான புரவி, வீரமாகப் போராடி தனது எஜமானைக் காத்து வந்ததாலும் உயிர்பிரியும் வரை உடன் இருந்ததாலும், மோடி மக்ரியின் உச்சியில் (முத்து மலை) பதெஹ் சாகரில் கம்பீரமான குதிரைச் சிலையும் உள்ளது. 

⚜️உள்ளூர் மக்கள் அந்தக் குன்றின்மீது ஏறிச் சென்று மஹா ராணா பிரதாபிற்கும் மற்றும் அவரது உண்மையான புரவி 'சேடக்'கிற்கும் அது ஹல்டிகாடி யுத்தத்தில் கொல்லப் பட்டதால் அதற்கும் சேர்த்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

⚜️அங்கே மேலும் முதல் உதய்புரின் அமைதியான அரண்மனையின் சிதலங்கள் காணலாம். 

⚜️மற்றும் ஓர் அழகான ஜப்பானிய பாறைத் தோட்டம் ஒன்று அதிக தூரம் இல்லாமல் அமைந்துள்ளது. 

⚜️அந்த நினைவகமானது முதல்ஒளி மற்றும் ஓலிஅமைப்பு ஏற்படுத்தப்பட்டு ராஜஸ்தானில், மேவாரின் 1400 வருடங்களான கீர்த்திமிகு வரலாற்றை பறைசாற்றிக் கொண்டு வருகின்றது. 

நன்றி:🙏
⚛️தகவல்கள் உதவி:✍️📚📝🇳🇪
wikipedia, மற்றும் பல வலை தள பதிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது) 

🌼#பயணஅனுபவக்குறிப்புகள் 2. 

❄️மலைக்கு செல்லுமுன், உதயப்பூர் ஏரி மற்றும் படகுத்துறையும் அமைந்துள்ளது. 

❄️படகுத்துறைக்கு எதிரில் நினைவகம் செல்லும் முன்வாசல் உள்ளது. தனி நுழைவுக் கட்டணம் செலுத்தி மேலே செல்ல வேண்டும். வாகனத்திற்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும். 

❄️நடந்தோ Auto விலோ, செல்லலாம். 

❄️நினைவிடம் முன் பகுதியில்
சேடக் மீது ஏறி உள்ள பிரதாப்பின் சிலையை அவரது கூட்டுப் பணியாளர்களான-ஜ்ஹல மான், பிலு ராஜா (மலைவாழ் மக்கள் முதல்வன்), பாமாஷா, ஹக்கீம் கான் சூர், மற்றும் ஒரு காலாட்படை-வீர-சேவகன் அனைவரது சிலைகளுடன் அமைத்துள்ளது மிக அருமையாக உள்ளது. 

❄️நினைவிடம் மிக அருமையாக அமைத்துள்ளார்கள்.
நினைவகத்தில் மஹாராணா பிரதாப் வரலாறு, மற்றும், புகழ்பெற்ற ராஜபுத்ர அரசர்கள் பற்றிய குறிப்புகள் படங்களுடன், விளக்கத்துடன், அழகாக, அமைத்துள்ளனர். 

❄️அரசர் காலத்தில் இருந்தவாறு, அளவில் மேவார் ராஜ்யப்பிரதேசம் முழுமையாக, ராணவின் ஆளுமைக்குட்பட்ட கோட்டைகள், மலைகள் வடிவமைப்பு செய்து வைத்திருக்கின்றார்கள். 

❄️சன்டை நடந்தஹல்டிகாடி போர் காட்சிகள் மிக அருமையாக, நுனுக்கமாக அமைத்துள்ளது சிறப்பு. 

❄️சித்தூர் கோட்டை, உதயப்பூர் அரண்மனை இவைகளையும் மிக அற்புதமாக அமைத்துள்ளார்கள். 

❄️அக்கால ஆயுதங்கள், கவசஉடைகள், வரலாற்று படங்கள் பொக்கிஷம் போல பாதுகாப்புடனும், விளக்க உரைகளுடனும் வைத்துள்ளனர். 

❄️உதயப்பூரில் மலைமீது உள்ள மஹாராணா பிரதாப் நிணைவிடத்திருந்து சற்று உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. Auto, Car, bus ல் செல்லலாம், நடந்தும் செல்ல முடியும். 

❄️சிறிய பாதையும் உள்ளது. உச்சியில் சிதலமடைந்த அரன்மனையின் மிச்சங்கள் உள்ளன. வந்து வழிபட்டு செல்கிறார்கள். 

❄️சிறிய தோட்டம் தனியாக உள்ளது. 

❄️மஹாராணாவின் வெற்றிக்குத் துணை செய்தவர்களுக்கும் தனித்தனி சிலைகளும் வைத்து சிறப்பு செய்துள்ளார்கள். 

❄️தற்போது ஒலி ஒளி காட்சி நடத்தப்படுவதில்லை.

❄️இந்த இடம் பார்த்து விட்டு மலையிலிருந்து கீழே இறங்கி, எதிரில் உள்ள போட்House சென்று பார்த்தோம். சிலர் போட்டில் ஏறி அந்தப் பெரிய ஏரியில் சற்று நேரம் உலா வந்தார்கள். 

❄️இதன் பின் நாங்கள் ரயில்வே ஸ்டேஷன் சென்றோம் குஜராத்தில் உள்ள படேல் சிலை பார்க்க, KEVADIA செல்ல ஆயத்தமானோம்😀

நன்றி🙏🏻
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

பதிவு : 1
https://m.facebook.com/story.php?story_fbid=6563865670355301&id=100001957991710
பதிவு : 2
https://m.facebook.com/story.php?story_fbid=6563885047020030&id=100001957991710
பதிவு : 3
https://m.facebook.com/story.php?story_fbid=6569184126490122&id=100001957991710

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...