Tuesday, April 9, 2024

அயோத்திபுனிதப்பயணம்பதிவு - 1.பயண அனுபவக் குறிப்புகள்(29.02.2024 - 5.3.2024)

#அயோத்திபுனிதப்பயணம்
பதிவு - 1.
பயண அனுபவக் குறிப்புகள்
(29.02.2024 - 5.3.2024) 

சுப்ராம். அருணாசலம்

வணக்கம்🙏🏻 

🕉️ஆலயங்கள் சென்று தொழ இறைவன் அருள் புரிய வேண்டும்.
நாம் எந்த ஒரு தலத்திற்கு செல்வதாக இருந்தாலும், இறைவனின் அருள் இல்லாமல் எதுவும் நடைபெறாது என்பதை நாம் பலமுறை அனுபவத்தில் உணர்ந்து இருக்கின்றோம். 

🛐 பெருமாளின் 108 திவ்யதேசங்களில் 106 மட்டுமே நிலவுலகில் நாம் நேரில் சென்று தரிசனம் செய்ய முடியும். 

🌟பாரதத்தின் பெருமைமிகு புராதன புண்ணிய திவ்யதேசம். 

அயோத்தி மாநகரம்: 

🛕அயோத்தி, மதுரா, ஹரிதுவார், காசி, காஞ்சிபுரம், உஜ்ஜியினி, துவாரகை இந்த ஏழு தலங்களும் முக்தியை அளிக்கும். 

🛕அயோத்தி என்பது பிரம்மாவின் வடிவம், யா - என்பது விஷ்ணுவின் வடிவம் மற்றும் தா - என்பது ருத்திரன் வடிவம். 

🛕ராமாயணம், ராமசரிதமானஸ், என்ற இந்து புராணங்களிலும், ஜெயின, பௌத்த நூல்களிலும், முக்கியத்துவம் பெற்றது.
24 சமன தீர்த்தங்காரர்களில், ஐந்து பேர்கள் பிறந்த இடம். ஜெயின நூல்களில் இக்ஷ்வாகு பூமி என்று குறிப்பிடுகின்றனர். இக்ஷ்வாகு வம்சத்தின், சூரியன்வன்ஷி மன்னர்கள் முதல், மௌரியர், நந்தா மற்றும் குப்தர்கள் வரை பேரரசர்கள் பலர் கண்ட பூமி. 

🛕சனாதான தர்மத்தைப் பின்பற்றுபவர்களுக்கு இந்த இடம் மிக முக்கியமான புண்ணியஷேத்திரமாக விளங்குகிறது. 
 

⭐இங்கு வந்து இப்புண்ணிய நகரை தரிசனம் செய்வதையே பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள். 

⭐அகிலத்தின் நாயகரான இராமர் பிறந்து வளர்ந்த இப்புண்ணிய பூமி, பாரதத்தின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சராயு என்ற நதிக்கரையில் உள்ளது.

பயண அனுபவக் குறிப்புகள். 

🛐அயோத்தி மாநகர் ஶ்ரீராமஜென்மபூமி ஆலயம் பல வருடங்களுக்கு முன்பு சென்று தரிசனம் செய்து இருந்தோம். 

🛐இறைவன் ஆலய தரிசனங்களில் வித்தியாசமான அனுபவம். சுமார் 2 கி.மீ. நீளத்திற்கு பல்வேறு கடும் சோதனைகளுக்குப் பிறகு, கடுமையான இரும்பு கூண்டுகளால் ஏற்படுத்தப்பட்ட வரிசையில் சென்று இரும்பு கூண்டுக்குள் நாம் இருந்தவாறு இந்த ஆலயம் வழிபாடு செய்தோம். 

🛐பாரத மன்னிற்கு பெருமை தரும் ஸ்ரீராமர் ஆலயத்தை இரும்புக் கூண்டில் இருந்தவாறு தரிசனம் செய்து வந்த அவலநிலையில் அன்று இந்த ஆலயத்தின் நிலை இருந்தது. இந்து மக்களின் புண்ணிய பூமியில் புராண இந்து ஆலயத்தின் நிலை அன்று அவ்வாறு இருந்து.

🕉️நம் பூமி நமது இறைவனை தரிசிக்க கடும் போராட்டம் அன்று இருந்தது. 

🛐தற்போது, பல்வேறு கடும் முயற்சிகளுக்குப் பிறகு, பாரத மக்களுக்கு, தங்கள் சனாதன தருமத்தின் பெருமை போற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

🛐பலவித கடும் முயற்சிகளுக்குப் பிறகு 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த பூமியை நாட்டின் தலைவரான ஸ்ரீ ராமரின் ஜன்ம பூமியாக ஏற்கப்பட்டு, பிரம்மாண்டமான ஆலயம் கட்டப்படத் துவங்கியது. 

🛐நமது இறைவனின் ஆலயம் புனரமைப்பு செய்து வழிபடும் காலம் மீண்டும் வந்துள்ளது. 

🛐2024 பிப்ரவரி 22 அன்று பாரத மன்னிற்கு பெருமை தரும் நாள்.
நமது பாரத புன்னிய பூமியின் பெருமைக்கு பெருமை சேர்க்கும் நம் பாரத பிரதமர் ஶ்ரீமான் நரேந்திர மோடி அவர்களின் முன்னிலையில், ஏராளமான புன்னிய புருஷர்களின் தியாகத்தாலும், பெருமுயற்சியாலும், மீண்டும் ஸ்ரீராமர் ஆலயம் புனருத்தாரனம் செய்து, ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். 

🕉️ வாழ்வில் ஒரு முறையாவது இராமர் அவதரித்த இந்த இடத்தில் அமைந்துள்ள ஆலயத்திற்கு வந்து, இங்கு பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ள பாலராமரை கண்டு தரிசிப்பதுவே ஆன்மீக லட்சியம் என்று ஒவ்வொரு இந்து மக்களும் நம்புகிறார்கள்.
🕉️பொதுவாக ஒரு ஆலயம் புனரமைப்பு / கும்பாபிஷேகம் செய்யப்பட்டு 48 நாட்களுக்குள் சென்று தரிசனம் செய்வது சிறப்பு என்று கூறுவார்கள். 

🕉️ மீண்டும் அயோத்தி பயணம் செல்ல வேண்டும் என்று விரும்பிய போது பல முயற்சிகளும் தொடர்ந்து எடுத்து வந்தோம். பல முறை முயற்சி செய்தும் அயோத்திக்கு செல்ல உரிய நேரத்தில் ரயில் பயணச்சீட்டு கிடைக்கவில்லை. 

🕉️அதிர்ஷ்டவசமாக எம்முடைய நண்பர் மூலமாக இந்த பயணத்திற்கு எமக்கு அனுமதி கிடைத்தது. விழுப்புரத்தைச் சார்ந்த திரு சந்திரசேகர் ஐயா அவர்கள் இந்த சிறப்பு ஏற்பாட்டினை செய்து எமக்கும் வாய்ப்பு வழங்கினார். 

🌟🚞 நாங்கள், ASTHA SPECIAL TRAIN ல், 29.02.2024 அன்று புறப்பட்டு அயோத்திக்குப் புனித பயணம் செய்து பாலராமர் ஆலயம் தரிசனம் செய்து வந்த அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்ளுகிறேன். 

🌟தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த
சுமார் 1300 பக்தர்களை ஒரே குழுவாக முன் பணம் கட்டி Registration செய்து, தனி ரயில் மூலமாக பக்தர்களை ஒருங்கிணைத்து 
Mobile செயலிகள் மூலம் முறைப்படுத்தி அறிப்புகள் செய்து செயல்படுத்தி அழைத்துச் சென்றார்கள். .

🌟புறப்படும் போது ஒரு ID Card ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டது. அதை சரிபார்த்தும் Train ல் Check செய்யப்பட்டு அவரவருக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த இருக்கைகளில் பயணம் செய்தோம்.  

🌟ID Card பயணம் நிறைவுவரை கட்டாயம் உடன் வைத்திருக்க அறிவுருத்தப்படுகின்றனர். 

🌟🍱☕ரயில் பயணிகளுக்கு ஒவ்வொரு நாளும் 3 வேளைகளும் நல்ல உணவு, இருவேளை காபி, Tea, Biscuits மற்றும் குடி தண்ணீர் 1Bottle வழங்கப்பட்டது. 

🌟🛏️Train ல் Non-A/C Coach ஆக இருந்தாலும், A/C Coach ல் வழங்கப்படுவது போல, அனைவருக்கும் கம்பளி போர்வை, மற்றும் போர்வை விரிப்புடன் ஒரு தலையணையும் தரப்பட்டது. 

🌟மாவட்ட வாரியாக, ஒவ்வொரு Coach ற்கும், தனித்தனி Team Managers, Guides, Security, Coordinators, & Catering Staff முதலியவர்களைத் தேர்வு செய்து, முறையான முன் ஏற்பாடுகள் செய்து நல்ல திட்டமிட்டு, செயல்பாடுகளை ஒருங்கிணைந்து செய்தார்கள். மிகவும் நன்றி🙏🏼.

🌟🚄அனுமதிக்கப்பட்ட பயணிகளைத் தவிர புறப்பட்ட இடம் தொடங்கி திரும்ப வந்து சேரும் வரை, வேறு யாரும் ரயில் பயணத்தில் அனுமதி கிடையாது. குறிப்பிட்ட Station ல், Railway வசதிக்காக மட்டுமே நிறுத்தப்படுகிறது. மேலும், எந்த Station சென்று நிறுத்தப்பட்டாலும், முழு பாதுகாப்பு உள்ளது. தேவையில்லாமல் யாரும் காரணமின்றி எங்கும் ஏறவோ இறங்கவோ அனுமதி கிடையாது. Police கண்காணிப்புடன் உடன் இருந்தனர். 🦸

🌟1.03.2024 ரயில் பயணம் புறப்பாடு 

🌟2.03.2024 அன்று மதியம் 1.00 மணி அளவில் அயோத்திதாம் என்ற ரயில்வே நிலையம் சென்றடைந்தோம். 

Ayodhya Dham ரயில் நிலையம் 

💥மிகவும் நவீன வசதிகள் கொண்டு, புதுமையாக பொலிவுடன் இருந்தது.
ரயில் நிலையம் முழுவதும் பொதுமக்கள் 'ஜெய் ஸ்ரீராம்' என்ற உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.
ரயில்வே காவல் துறை அதிகாரிகள் கூட உணர்வுபூர்வமாக பூரிப்புடன் வரவேற்பில் கலந்து கொண்டனர். 💐

💥சிறப்பு ரயில் மூலம் செல்பவர்களுக்கு, ரயில் நிலையத்தின் ஒரு பகுதியில், வெளிப்புறத்தில், பல வசதிகள் கொண்ட பெரிய தனி கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது; ஒரு தனி போக்குவரத்து சிறப்பு அலுவலம், (Transport Managent Cell) உருவாக்கப்பட்டிருந்தது. 🚍

இலவச E Buses 🚍

💥ரயில்வே நிலையம், மற்றும், சுமார் 5 கி.மீ. தூரத்தில் யாத்ரீகர்கள் இலவசமாக தங்குவதற்காகவே, உருவாக்கப்பட்டிருக்கும் TENT CITY என்ற தற்காலிக கூடம்; அங்கிருந்து LAL CHOWK என்ற இடத்திற்கும் சென்றுவர இலவசமாகவே நூற்றுக்கணக்கான E Bus ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 🚍

அடுத்தப் பதிவு ......
#அயோத்திபுனிதப்பயணம் 
#சுப்ராம்ஆலயதரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
🛕🛐🔱🙏🏼🇮🇳🕊️🧘🌏🏔️–

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...