Friday, July 29, 2022

#அமர்நாத்யாத்ரா 2022 6.07.2022 ஏரி (யில்)யால் வாழ்வு#FLOOTING_MARKET - #மிதக்கும்_சந்தை#DAL_LAKE #BOATING

5.
#அமர்நாத்பனிலிங்கதரிசனம் 
#காஷ்மீர்
#DalLake 
#அமர்நாத்யாத்ரா 2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
6.07.2022
ஏரி (யில்)யால்  வாழ்வு
#FLOOTING_MARKET  - #மிதக்கும்_சந்தை
#DAL_LAKE  #BOATING

6.07.2022 மாலையில் DAL ஏரியில் சென்று சுற்றிப் பார்த்தோம்.

புராதான காலத்தில்,  காஷ்மீரின்  ஒரு பகுதியில், டால் ஏரியின் கிழக்குப்பகுதியில் சிறிய கிராமத்தில் துர்கா வழிபாடு இருந்ததாகவும், டால் ஏரியின் கிழக்குப் புறத்தின் ஒரு சிறிய கிராமப்பகுதியே துர்க்கையின் இருப்பிடம் என்று காஷ்மீர் புராணத்தில் உள்ளது என்றும் கூறுவர்.  

முகலாயர் காலத்தில் பல்வேறு வளர்ச்சிகளும்,  குறிப்பாக பூந்தோட்டங்கள் அமைப்பும், அதைத் தொடர்ந்து ஆண்ட, ஆப்கானியர்கள் மற்றும் சீக்கிய மகாராஜா ரன்ஜித் சிங் அவர்கள் காலத்திலும், பிறகு வந்த டோக்ரா மகா ராஜாக்கள் ஆண்டபோதிலும்,  ஆங்கிலேயர்கள் வசம் வந்த போதிலும், பல்வேறு மாற்றங்களும், வளர்ச்சிகளும் டால் ஏரியில்  ஏற்பட்டுள்ளன. 

டோக்ரா மகாராஜா, கட்டிடங்களுக்குத் தடை விதித்தாலும், பின்னாள் வந்த ஆங்கிலேயர்கள் காலத்தில், பல்வேறு படகு வீடுகளும், பல்வேறு கட்டிடங்களும் ஏற்படுத்தப்பட்டன.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு ஹன்ஜி என்ற சமூகத்தினர் நிறைய, மிதக்கும் படகுவீடுகள் ஏற்படுத்தி சரியாகப் பராமரித்தனர்.   

Dal ஏரி சுமார் 316 Sq.கி.மீ பரப்பளவு உடையது. 
ஆழம் சுமார் 5 முதல் 20 அடி அளவு உள்ளது.

இதனுள் இரண்டு சிறிய தீவுகள் உள்ளன.

கரையின் பகுதி சுமார் 15.5 கி.மீயில், ஹோட்டல்கள், வீடுகள், படகுவீடுகள்,  ஷிகார் என அழைக்கப்படும் சுற்றுலா படகுகள்,  உள்ளன. 

கரையில் புகழ்பெற்ற முகலாயர் தோட்டங்களும் உள்ளன.

ஏரி 18 Square கி.மீ தூரம் பரவியுள்ளது. 

மிதக்கும், தோட்டங்கள், கடைகள், வீடுகள், விடுதிகள் அனைத்தும் நிறைந்துள்ளன.

ஏரியின் முழுமையான புரைமைப்புத் திட்டத்திற்கு, மத்திய அரசு கிட்டத்தட்ட ரூ 11 பில்லியன் அளவிற்கு,  நிதி உதவியுள்ளது.

#FLOOTNG_MARKET - #மிதக்கும்_சந்தை
காய்கறிகள் மற்றும் அனைத்துவிதமான பொருட்களையும் விளைவித்து, மிதக்கும் சந்தையாக, ஏரியின் ஒரு புறத்தை மேம்படுத்தியுள்ளனர்.  இதனால், இவர்களின் வாழ்வாதாரமும்,  பொருளாதார முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது என்பது உண்மையே.

இந்த வளர்ச்சியினால், காஷ்மீரின் கிரீடத்தின்  ஒளி வீசும் வைரமாகத் DAL ஏரி திகழ்கிறது. 

கடும் குளிர்காலத்தில் இவ்வேரி குளிர்ந்தும் உறைந்தும் காணப்படும்.

ஏரியின் ஒரு பகுதியில், நீண்ட சாலை வசதி செய்யப்பட்டுள்ளது.  மேலும், புகழ்பெற்ற  ஷாலிமர் தோட்டம், நிஷாத் தோட்டம் உள்ளது. 

சுற்றுலா பயணிகள் விரும்பும் அளவிற்கு படகுத்துறைகள்  சுமார் 15 நீண்டு உள்ளன.
ஒவ்வொரு துறைகளிலும், படகுக்குழாம் அமைக்கப்பட்டுள்ளன.

 பயணிகள் உரிய கட்டணத்தில் படகு அல்லது ஷிகார் என அழைக்கப்படும் படகில் நம்மை அழைத்து, வசதியாக அமர வைக்கப்பட்டு சுற்றி வருகிறார்கள். 

வசதி, காலம், சூழல்  தகுந்தார்போல வாடகை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

முதல் இரு படகுத் துறைகளில் பல்வேறு வீடுகளும், கடைகளும் ஏராளமாக உள்ளன.   

சற்று அமைதியையும், தனிமையும் வேண்டுபவர்கள். 7,8 படகுக்குழாம் அடுத்து பயணிக்கலாம்.

நாங்கள் 6.07.2022 மாலை, தங்கியிருந்த Hotel அருகில் சற்று தள்ளி உள்ள இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஒரு படகுக்கு, 4 முதல் 6 வரை நபர்கள் ஏற்றிச் செல்லப்பட்டோம்.

நாங்கள் படகு ஏரிய இடம் ஒரு தனியான நீர்வழிப்பாதை. அங்கிருந்து, அந்நீர்வழி பாதையில் சென்று,  தால் ஏரியின் ஒரு புறத்திற்கு சென்றோம்.

ஏராளமான மக்கள் DAL ஏரியை நம்பி வாழுகிறார்கள் என்பது கண்கூடு.

செல்லும் வழியில் அந்நகர் மக்களின் படகு வீடுகள், கரையில் உள்ள சிறிய எளிமையான வீடுகள், தெரு போன்ற அமைப்புகள், அவர்களின் வாழ்வியல் முறைகள்,  அவர்களின் வாழ்வாதரம் அமைந்துள்ள விதம்  முழுதும் அந்த ஏரியின் வழிப்பாதையில்,  கண்டோம்.

சுமார் 1700 படகுகளும், படகு வீடுகளும், கடைகளும், நிறைந்துள்ளன. 

 சிறிய பெரிய படகு கடைகளில் எல்லாவிதமான பொருட்களும் கிடைக்கின்றன. 

 நாங்கள் படகில் ஏறி டால் ஏரியை  அடைந்து பின் சிறிய நீர் வழிபாதையில் சென்றோம். கடைத்தெரு போல, இருபுறமும் படகுக்கடைகள் நிறைந்துள்ளன.

நாம் விரும்பும் படகுக்கடைகளுக்கு சென்று விரும்பிய பொருட்களை வாங்கலாம். அதிகமாக Textiles shops உள்ளன, ஷால்வைகள், காதணிகள், பழங்கள், கைவினைப்பொருட்கள், இன்னும் அனைத்து வித காஷ்மீரிய பொருட்கள் கிடைக்கின்றன.

எல்லாப் பொருட்களும் அதிக விலையில் உள்ளது என்று கூறுகிறார்கள்.

இது மட்டுமல்ல, சிறிய சிறிய படகுகளில் பல்வேறு பொருட்களையும் படகில் மிக அருகில் கொண்டு வந்து நேரடி வியாபாரம் செய்தும் வருகிறார்கள்.

ஒரு இடத்தில் படகு Tea shop  இருந்தது. Tea பொருட்கள் வாங்கிக் குடித்தோம்.

டால் ஏரியிலிருந்து மலைப்பகுதிகள், நீர்ப் பகுதிகள் மிக ரம்யமாக தெரிகிறது. 

SANKARACHARYAR TEMPLE, முதலிய கரையில் உள்ள முக்கிய இடங்களையும் கண்டோம்.

ஒவ்வொரு படகுத்துரைப் பகுதிகளுக்கும், படகுகள் ஏரிக்குள் சென்று வரும் வழிப்பாதைகளும், தனித்தனியே அளவீடு செய்பட்டிருக்கிறது. எல்லா  பகுதிகளிலிருந்தும், குறிப்பிட்ட பகுதியில் உள்ள படகு கடைகள்  உள்ள சந்தைப் பகுதிக்கு வந்து செல்கின்றன.

படகுவீடுகளில் தனித்தனியாகவும், குழுவோடும் தங்கவும் Meeting முதலியன நடத்தும், வசதிகளும் உள்ளன.

இடம், வசதி, காலம் பொறுத்து கட்டணங்கள் அமையும்.

தூய்மைப் பணிகள்..

மிகப்பெரிய நன்னீர் ஏரியான  DAL ஏரியில் மனிதர்களாலும் வாழ்வியல் முறைகளாலும், இயற்கையாலும், ஏராளமாக மாசுபட்டு,  கட்டுப்படுத்த முடியாத அளவில் மாசடைந்துவிட்டதாலும், மேலும் மேலும்,  பெருகிவருவதாலும்,  பல்வேறு அமைப்பினர் போராடியும், வழக்கு முறையீடுகள் செய்தும், தூய்மைப்பணி வேலைகளும் நடைபெற்று வருகின்றன.

சமீபகாலத்தில், ஒரு புரட்சி ஏற்பாடாக பல ஆயிரம் முதலீட்டில், புதிய தூய்மைப் பணிகள் திட்டமிடப்பட்டு, வேலைகள் நடைபெற்று வருகின்றன. அரசின் நல்லத் திட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம் தேவை என்பதை உணருகிறோம்.

காஷ்மீர் சுற்றுலாவின் மிக முக்கிய அங்கமாக DAL ஏரியில் படகு சவாரி செய்வது சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் வழக்கமாக கைக்கொள்கிறார்கள்.

அமைதியும், அழகும் கொட்டிக்கிடக்கும் அந்த கடல் போன்ற ஏரியில் பயணம் செய்யும் போது, அவரவருக்கும் பல்வேறு அனுபவங்கள் கிடைக்கின்றன  என்பதை நிச்சயம்  உணருகிறோம். 

படகுசவாரி சுற்றுலா முடிந்ததும், Hotel  சென்றோம்.  இரவு உண்டு ஓய்வு எடுத்துக்கொண்டோம்.

பயணங்கள் தொடரும்.....
6.07.2022
#என்றும்__அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#பயணஅனுபவக்குறிப்புகள் 
#காஷ்மீர் 
#FLOOTING_MARKET  - #மிதக்கும்_சந்தை
#DAL_LAKE  #BOATING

LINKS:
முன்பதிவு ..
பதிவு: 1 - #LalChowk
https://m.facebook.com/story.php?story_fbid=7861532467255275&id=100001957991710

பதிவு : 2 - 
#Shankarachariartemple
https://m.facebook.com/story.php?story_fbid=7870068123068376&id=100001957991710
பதிவு: 3 
#ஜேஷ்ட்டாதேவி ஆலயம்
https://m.facebook.com/story.php?story_fbid=7875067092568479&id=100001957991710
பதிவு : 4: 
#nishat_mohal_garden 
https://m.facebook.com/story.php?story_fbid=7889040434504478&id=100001957991710
பதிவு : 5

Thursday, July 28, 2022

அமர்நாத்யாத்ரா 2022 NISHAT_MOHAL_GARDEN - 6.07.2022

4.
#அமர்நாத்பனிலிங்கதரிசனம் 
#காஷ்மீர்
#அமர்நாத்யாத்ரா
#பயணஅனுபவக்குறிப்புகள்
#NISHAT_MOHAL_GARDEN

ராசிக்கட்ட தோட்டம்
6.07.2022

 #DALLAKE  அருகில் உள்ள மிகப்பெரிய பிரசித்தப்பெற்ற
 #NISHAT_MOHAL_GARDEN சென்று பார்த்தோம்.
DAL LAKE எதிர்புறத்தில் ஏரியை நோக்கி அமைக்கப்பட்டுள்ள பெரிய மலர்த் தோட்டம் முகலாயர்களால்  அமைக்கப்பட்டுள்ளது.

46 ஏக்கர் அளவில், ஷாஜகான் மனைவி நூர்ஜகான்  அவர்களின் மூத்த  சகோதரர் அசீப் கான் என்பவரால் 1633 ல் இந்தப் பூங்கா வடிவமைக்கப்பட்டது. இதன் அமைப்பைக் கண்டு, ஷாஜகான் பொறாமை கொண்டு, இதன் மீது கவனம் செலுத்தி ஆளுமை செய்ய முயன்றதும்,  இந்த பூங்காவை சிதைக்க முற்பட்டார் என்பதும், பிறகு சமாதானமாகி பூங்காவை பாரமரிக்க அனுமதி தந்தார் என்றும் குறிப்பிடப்படுகிறது.

பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு உள்ளது.

12 ராசிகட்டங்கள் இருப்பது போல, 12 அடுக்குகள் கொண்டது, இப்பூங்கா, DAL ஏரியிலிருந்து படிப்படியாக, உயர அடுக்காக அமைந்துள்ளது. நடுப்பகுதியில் மேலிருந்து நீர் பெருகி ஓடிவரும் வகையிலும்,  ஒவ்வொரு கட்டத்திலும் கருங்கற்களால் அழகிய நீர்வீழ்ச்சி அமைப்பும், நீரேற்று  குழாய்களும், அழகுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேல் அடுக்குகளில், குளியல் தொட்டி போல இருப்பதால், சிறுவர்களும், இளைஞர்களும் குளித்து மகிழ்கிறார்கள்.

நீர் மேலிருந்து ஒவ்வொரு அடுக்குத் தோட்டத்திற்கும் வருமாறு குழாய் அமைப்பு உள்ளது.  முதலில்  சதுரமான அமைப்பில் உருவாக்கப்பட்டிருந்தாலும், பிற்காலத்தில், நீள்சதுரமாகவும், இருபுறமும் மிக நீண்ட பகுதிகளாகவும் வடிவமைப்பு மாற்றி அமைக்கப்பட்டு மிகப் பெரியத்தோட்டமாக மாற்றியமைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பழமை வாய்ந்த சினார், மரங்கள் அடர்ந்த பகுதிகள் உள்ளது. அதை தொடர்ந்து பராமரித்தும் வருகிறார்கள்.

அழகிய நடைபாதை பூங்காக்கள் உள்ளன.

முதல் இரண்டு கட்டங்கள் மிக அழகாகவும் விசாலமானதாகவும் உள்ளதால், பொதுமக்கள் இங்குதான் அதிகம்.

பொதுமக்கள், காஷ்மீர் உடை அணிந்தும் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.

நுழைவுக்கட்டனம் பெரியவர்களுக்கு Rs.24 சிறுவர்களுக்கு Rs.12 ம் வசூல் செய்யப்படுகிறது.

முக்கிய சுற்றுலா இடமாக உள்ளது.
Srinagar City யிலிருந்து 11 கிமீ.யில் வடக்கில, டால் ஏரி பக்கம், இந்தப் பூங்கா  அமைந்துள்ளது.

மதிய உணவுக்கு பின், ஹோட்டல் வந்து ரூமில் ஓய்வு எடுத்துக்கொண்டோம்.

6.07.2022
நன்றி
#என்றும்__அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#அமர்நாத்பனிலிங்கதரிசனம் 
#காஷ்மீர்
#அமர்நாத்யாத்ரா
#பயணஅனுபவக்குறிப்புகள்
#NISHAT_MOHAL_GARDEN

முன்பதிவு ..
பதிவு: 1 - #LalChowk
பதிவு : 2 - 

#Shankarachariartemple
https://m.facebook.com/story.php?story_fbid=7870068123068376&id=100001957991710
பதிவு: 3

 #ஜேஷ்ட்டாதேவி ஆலயம்
https://m.facebook.com/story.php?story_fbid=7875067092568479&id=100001957991710

Monday, July 25, 2022

#அமர்நாத்யாத்ரா 2022 ஜேஷ்ட்டாதேவி_ஆலயம் 6.07.2022

3.
#அமர்நாத்பனிலிங்கதரிசனம் 
#காஷ்மீர்
#அமர்நாத்யாத்ரா 2022
#பயணஅனுபவக்குறிப்புகள்

ஆன்மீக குன்றில் ஆலய வழிபாடு
#ஜேஷ்ட்டாதேவி_ஆலயம்

Srinagar பகுதியில் உள்ளது.

இது 5600 அடி உயரத்தில் ஒரு மலைப்பகுதியில் உள்ளது.

காஷ்மீர் மக்களின் புரான தெய்வமாக 
ஜேஷ்ட்டாதேவி வணங்கப்படுகிறார்.

இங்குள்ள ஆலயம் சிறிய சரிவான மலைப்பகுதியில், அடுத்து அடுத்து  4 பகுதிகளாக  அமைந்துள்ளது. 

ஒவ்வொரு பகுதிகளையும், ஏறி சென்று வழிபட நல்ல படிகட்டுக்கள் அமைத்துள்ளனர். 

இயற்கையான சூழலில் அமைதியான, அழகாக அமைத்துள்ளனர்.  முழுவதும், தனியார் Trust மூலம்  நிர்வாகம், மற்றும் பராமரிப்பில் உள்ளது.

சுமார் 50 படிகள் ஏறினால், முதலில் விநாயகர், மற்றும், Hanuman  தனித்தனி சன்னதிகள் பிறகு, ஷேஸ்ட்டா தேவி தனி சன்னதி.

ஜேஷ்ட்டாதேவி ஒரு நீள் சதுர நீர்த்தொட்டியில் ஒரு மூலையில் அமைக்கப்பட்டுள்ள தனிக்கருவரை மண்டபம்,  அதனுள் அமர்ந்த கோலத்தில் அழகு வெள்ளை பளிங்கு சிலையில் 4 கரத்துடன் தேவி, கிழக்கு முகமாக இருந்து அருள் செய்கிறார்.

நீர்த் தொட்டியின் இன்னொருபுறத்தில், 'தேவியைப் போற்றி வணங்குவதற்காக தனி மண்டபத்தில் Prayer Hall , இங்கிருந்து தேவியை  வணங்குகிறார்கள். இடையில் நீர்த்தொட்டி உள்ளது.

இந்தப் பகுதி ஆலயத்திற்கு சற்று மேல்புறம் சில படிகள் ஏறிச்சென்றால், தனி சிவன் ஆலயம் உள்ளது.

தனி கருவறை மண்டத்துடன், மேற்கு நோக்கியவாறு லிங்க வடிவில் உள்ளார். சுமார் 3 அடி லிங்கம் பளபளவென்ற கருங்கல்லில் உள்ளது. 

ஆவுடையின்  வடக்குப் புறம் சிறிய வெள்ளை பளிங்கு நந்தி  ஆதிசங்கரர் படம்/ இன்னொரு புறத்தில் சிறிய சாய் படம் மற்றும் விநாயகர் அமைத்துள்ளனர். லிங்கம் உள்ள கட்டிடம் உட்புறம் வட்டவடிவமாக உள்ளது.

நாமே சென்று, அபிஷேகம் செய்து வணங்கலாம். 

இதை அடுத்து இன்னும் சற்று மேல்புறம்  ஒரு பெரிய மண்டபத்தில் இயற்கையான தோற்றத்தில் ஒரு மிகப்பெரிய பாறை சுயம்புவாக அமைந்துள்ளது.  இந்த லிங்கத்தை படியேறி சுற்றி வரலாம். பாறையை இயற்கையான சுயம்பு லிங்கமாக வழிபடுகிறார்கள். இதன் மீது சிவப்பு சூர்ணம் தடவப்பட்டுள்ளதால், சிவந்த நிறத்துடன் உள்ளது. அருகில் அம்மன் சிலையும், விநாயகர் சிலையும் வைத்து வணங்கப்படுகிறது.

இதன் அடுத்த மேல்புறத்தில் பெரிய யாக மண்டபம், மற்றும் சமையல் கூடம் அமைக்கப்பட்டு, முறையான யாக ஹோமம் செய்து வழிபாடு நடைபெற்று வருகிறது. நாங்கள் சென்றபோது யாகத்தில்/ஹோமத்தில் கலந்துகொண்டு அனைவரும் பிரசாதங்கள் பெற்றுக் கொண்டோம்.

இதன் மேற்புறம் இன்னும் சற்று உயரத்தில், ருத்திர லிங்கம் சன்னதி உள்ளது. சில மீட்டர் உயரம் படிகள் ஏறி வழிபட்டு வர வேண்டும்.

இவ்வாலய பகுதிகளின் ஒரு பகுதியில், பக்தர்கள் வந்து தங்கி, ஹோமம் செய்து செல்வதற்காக, தனித்தனிப்பெரிய அறைகளும்,. இதன் நிர்வாகக் கட்டிடங்களும் உள்ளன.  

இவ்வாலய பகுதியின் அனைத்துப்பகுதிகளும், பூஞ்செடிகள், மலர்த்தோடங்கள், புல்வெளிகள், பளிங்குப்படிகளுடன் மிக அற்புதமாக உள்ளது. மலைப் பிரதேசத்தில், மிக மிக அமைதியான இயற்கை சூழல். 

6.07.2022
#ஆலயதரிசனம் 
#காஷ்மீர்
#அமர்நாத்யாத்ரா 2022
#ஜேஷ்ட்டாதேவி_ஆலயம்

#என்றும்அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
ஜேஷ்ட்டாதேவி_ஆலயம்

Sunday, July 24, 2022

AMARNATHYATHRA 2022 - Shankarachariar Temple - 6.07.2022


#அமர்நாத்பனிலிங்கதரிசனம் 
#காஷ்மீர்
#அமர்நாத்யாத்ரா
#பயணஅனுபவக்குறிப்புகள்
2.
#Shankaracharyar Temple

பாரதத்தின் உச்சியில் ஒரு மாகானின் ஆலயம்

6.07.2022 புதன்:

காலை:
நாங்கள் SRINAGAR Hotel லிருந்து
புறப்பட்டு, அருகில் உள்ள
ஆதிசங்கரரால் ஸ்தாபிதம் செய்யப்பட்ட #Shankaracharyar Temple சென்று தரிசித்தோம்.

ஜம்மு & காஷ்மீர் Union Territory பகுதியில் Srinagar City யின் ஒரு பகுதியாக உள்ளது,
சங்கராச்சாரியார் மலை எனப்படும் பகுதி.

இது GOPADRI HILL என்று அழைக்கப்படும் மலைக்குன்றுப் பகுதியில் உள்ளது. 

 சுமார் 6170 அடி உயரத்தில் ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட ஆலயம். முதலில் Tempo Traveller மூலம் இம்மலை அடிவாரம் சென்றாலும், குன்றின் மிக அருகில் ஆலய நுழைவு பகுதி செல்ல Auto, மற்றும் Car கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது..

சுமார் 5.6 கி.மீ Border Roads organisation மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த சாலையில், செல்லும் வழியில் Sringar Cityயின் அழகை ரசிக்க View Point கள் உள்ளன.

எல்லா இடங்களும், பாரத ராணுவத் தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் நம் ராணுவ வீரர்கள், ஏராளமான அளவில், மக்கள் சேவை செய்து வருவதை காண்கிறோம்.

அதன்பின், Security Checkup செய்யப்பட்டதும், சுமார் 300 மீட்டர் உயரத்தில் உள்ள படிகள் மேல் ஏறி சென்று, ஆலயம் தரிசிக்க வேண்டும்.

கீழ் நுழைப்பகுதியில், ராணுவத்தில் இன்னுயிர் நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தனியாக அவர்கள் பற்றிய விபரக் குறிப்புகளும் உள்ளன. 

பழமையான ஆலயம் கி.பி 371ல் கட்டப்பட்டிருந்தாலும் 1792 - 1857 ஆண்டுகளில் இது மறுவடிவம் பூண்டுள்ளது என்று சரித்திர ஆசிரியர்கள் கருதுகிறார்கள். மீண்டும், மீண்டும் புணரமைக்கப்பட்டும் உள்ளது. சுமார் 1000 அடி உயரத்தில் இவ்வாலையம் உள்ளது.
 
உச்சியில், சுமார் 240 படிகள் ஏறி தான், ஆலயம் தரிசிக்க முடியும். 
அரவிந்தர், மைசூர் மகாராஜா, வினோபா பாஜி, முதலியோர் இங்கு வந்து வழிபட்டு சென்ற குறிப்புகளும் அவர்களால் பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

எட்டு பட்டை வடிவில் கற்றளியாக இந்த ஆலய அமைப்பு உள்ளது. உச்சியில் கலசம் உள்ளது. ஆலயம், மேல்புறம் கருவரை சுற்றுப் பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து #SRINAGAR முழுவதும் மற்றும், ஜீலம் நதி, DAL ஏரி முதலிய அனைத்து இடங்களையும் பார்த்து ரசிக்கலாம்.

ஆலயம் உள் நுழைய சிறிய வாயில் கிழக்குப் புறம் அமைந்துள்ளது. உட்புறம் வட்ட வடிவம். நான்கு சிறிய அளவில் உள்ள தூண்கள் நடுவில் சுமார் 2.5 அடி உயரம் உள்ள பளபளப்பான கருமையான கல்லில் உருவாக்கப்பட்ட லிங்கம்.
செம்பால் ஆன நாகாபரணத்துடன் அமைந்துள்ளார் ஈசன்.
கண்குளிர கண்டு தரிசித்து வணங்கினோம்.

ஆலயத்தின் சுற்றுப் பிரகாரத்தின் கீழ் தென் பகுதியில் சிறிய சுனை நீர் ஊற்றும் அமைந்துள்ளது. 

வடபுறத்தில், சிறிய குகை அமைப்பில், ஸ்ரீ ஆதிசங்கரர் தபம் செய்த இடம் உள்ளது. இங்குதான் சௌந்தர்யலகரி பூர்த்தி செய்யப்பட்டது என்பர்.

இதனுள், ஒரு மூலையில் ஆதிசங்கர் படம் வைத்துள்ளனர். உள்ளே தபம் | பூசை செய்வதற்கேற்றவாறு சிறிய அளவில், கருங்கல்லால், குகை அமைக்கப்பட்டுள்ளது. நுழைவுவாயில், கிழக்குப்புறம் சிறிய தலைவாயில் கொண்டது.

குன்றின் ஒரு புறம் உயரமான படிகளுடன் இவ்வாலயப் பகுதிகள் இருந்தாலும், எதிர்புறத்தில், Trust அலுவலகம், சிறிய தோட்டம், viewpoints முதலிய இடங்களும் உள்ளன.

அனைத்து இடங்களும் தொல்பொருள் துறையின் ஆளுமையில் உள்ளது.

ஆலயத்தின் அன்றாட பூசை நடவடிக்கைகளுக்கும், மற்ற அனைத்துக்கும் தர்ம டிரஸ்ட் ஏற்படுத்தப்பட்டு நல்ல முறையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இங்கு, அமர்நாத் யாத்திரை காலத்திலும், சிவராத்திரி சமயத்திலும், பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்கிறார்கள்.

இதை தரிசித்துவிட்டு, மலையிலிருந்து கீழிறங்கினோம். அதன்பின், ஷேஸ்ட்டாதேவி ஆலயம் சென்று தரிசித்தோம். 

தொடரும்.... பயணங்கள்

6.07.2022
#அமர்நாத்பனிலிங்கதரிசனம் 
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

#Shankaracharyar Temple

#காஷ்மீர்
#அமர்நாத்யாத்ரா
பதிவு : 1
https://m.facebook.com/story.php?story_fbid=7861532467255275&id=100001957991710


Friday, July 22, 2022

AMARNATH YATRA-2022 SRINAGAR LALCHOWK 5.07.2022

#அமர்நாத்பனிலிங்கதரிசனம் 
#காஷ்மீர்
#அமர்நாத்யாத்ரா
#பயணஅனுபவக்குறிப்புகள்
#AMARNATH_YATRA_2022
#SRINAGAR
#LALCHOWK

ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீ சுந்தராம்பாள் பேரருளாலும்,  குல தெய்வ, முன்னோர்கள் ஆசீர்வாதத்தாலும், இந்த வருடம் 2022 ஜூலை மாதம் 8ம் தேதி வெள்ளிக்கிழமை  அமர்நாத் பனிலிங்க தரிசனம் கிடைத்தது.

பயண விபரம்...

3.07.2022 ஞாயிறு 
காரைக்காலிலிருந்து, ஜூலை மாதம் 3ம் தேதி ஞாயிறு காலையில், புறப்பட்டு சென்னை சென்று, மாலை, GT Express ல் Chennai யிலிருந்து Delhi புறப்பட்டோம். 

04.07.2022 திங்கள்   ரயில் பயணம்
5.07.2022 செவ்வாய் 
காலை New Delhi, Nizamudeen Station இறங்கி, அங்கிருந்து ஒரு Hotel  சென்று, சற்று Relax ஆகி பிறகு,  Airline மூலமாக #SRINAGAR அடைந்தோம்.  
TAJ RESIDENCY என்ற Hotel லில் தங்கினோம்.

1
காசுமீர கடைத்தெருக்கள்:

மாலையில் #SRINAGAR ல் உள்ள 
#LALCHOWK என்ற இடத்திற்கு சென்று Shopping செய்தோம். இந்த இடத்தில் புகழ்பெற்ற Clock Tower உள்ளது.

#GHANTA_GHAR  என்று இந்த இடத்தை அழைக்கிறார்கள். 1980ம் ஆண்டில், BAJAJ ELECTRICALS என்ற Company இந்த Towerஐக் கட்டியதாக குறிப்பு உள்ளது.

இந்த இடம் Srinagar ன் ஒரு Landmark ஆக உள்ளது. ஒரு பூங்கா அமைத்துள்ளார்கள்.  Parking வசதி மிகவும் கடினம். நெருக்கடியான இடம்.  #Srinagar  Cityக்கு கிட்டத்தட்ட Central point ஆன இடமாகவும் உள்ளது. உள்ளூர் மக்கள் மட்டும் இன்றி சுற்றுலா வருபவர்களும் இந்த இடத்தில் காஷ்மீர் பொருட்கள் வாங்க குவிகின்றனர்.

Clock Tower மேலும் சிறப்பு என்ன வென்றால், பாரதத்தின் சுதந்திரத்திற்குப் பிறகு பிரதமர் மோடி அவர்கள் ஆட்சியில்தான் இந்த இடத்தில் முதன்முதலாக, மூவர்ண கொடியும்,  இரவில் மூவர்ண Colorful ஆக illumination செய்தும்  உள்ளார்கள் என்று கூறுகிறர்கள்.  மாலை / இரவு  நேரங்களில் மக்கள் கூட்டம் மிக அதிகம் வருகிறார்கள்.  மிகப்பழமையான 100 வருட கட்டிடங்கள் இந்தப் பகுதி முழுவதும் ஏராளமாக உள்ளன.  இப்பகுதி முழுவதும் ராணுவ வீரர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ராணுவ வாகனங்களும் நிறைந்துள்ளன.

Clock tower பகுதியிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் ஒரு Bridge உள்ளது. அதை ஒட்டி மிக புராதானமான Hanuman Temple  ஒன்றும் இருந்தது. நாங்கள் விரும்பி சென்று தரிசனம் செய்ய முயன்றோம். ஆனால் சில Security காரணங்களால், உள்நுழைய அனுமதி கிடையாது என்று ராணுவ அதிகாரிகள் மென்மையாக மறுத்துவிட்டார்கள்.

அனுமார் ஆலயத்தின் அருகிலும், மிக அதிக கடைகள். அது ஒரு பெரிய நெருக்கடி நிறைந்த சந்தைப் பகுதி போல உள்ளது. போக்குவரத்தும் மிகுந்துள்ளது. உள்ளுர் போக்குவரத்து வாகனங்கள்  வந்து நிறுத்தி மக்களை ஏற்றி இறக்கி செல்கிறது. ஒரு mini bus stop போன்றது.
குறுகிய தெருக்கள், ஏராளமான கடைகள், மக்கள் நெருக்கம் மிகுந்து காணப்படும் இடம். 

இந்த Shopping Area வில் நமது குழுவில் பயணித்தவர்கள், தங்களுக்கு விருப்பமான சில காஷ்மீர் பொருட்களை மகிழ்வுடன்  வாங்கிக் குவித்தனர்.

இரவில்,  Srinagar முழுதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிடும் அபாயம் உள்ளதால்,  உடன் மாலை (?) 7.00 மணி அளவில்  புறப்பட்டு Hotel வந்துசேர்ந்தோம். இந்த மாநிலப் பகுதிகள் இரவு 7.40 மணிவரை வெய்யில் வெளிச்சம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மாலையில், எங்கள் மதிப்புமிக்க, SUJANA TOURS Administrator, திரு S.R. பாலசுப்பிரமணியன் அவர்கள், எங்கள் அமர்நாத் யாத்ராவின் பயண முழு விபரங்களையும் விளக்கி,  எப்படி செயல்படுத்தப்படும் என்பது பற்றியும், யாத்ரா பயணிகள் மேற்கொள்ள  வேண்டிய முக்கிய  நெறிமுறைகளையும் தெளிவாக விளக்கினார். மிகவும் உபயோகமாக இருந்தது.
உணவு முடிந்து இரவு தங்கினோம்.

பயணம் தொடரும்

நன்றி
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#AMARNATH_YATRA_2022
#SRINAGAR
#LALCHOWK