Monday, March 29, 2021

ஆலய விழாக்கள் தரிசனம் 2021 பங்குனி

திருவலங்காடு : மயிலாடுதுறை - ஆடுதுறை வழியில் ஸ்ரீவடஆரண்யேஸ்வரர் 
ஸ்ரீவண்டார் பூங்குழலி
ஸ்ரீபுத்ரகாமேஸ்வரர் சிறப்பு பெற்ற 
ஆலயம்.
பங்குனி பிரம்மோற்சவத்தில்
நடராஜர் தீர்த்தவாரி சென்று திரும்புதல். மற்றும்
பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரிக்குப்
புறப்பாடு
28.03.2021
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

Thursday, March 25, 2021

திருத்தலங்கள் தரிசனம் 2021 (மார்ச்) ஆனந்தக்குடி, மாத்தூர், மருதுவாஞ்சேரி, கம்பங்குடி, நீலக்குடி, வட குடி

ஆனந்தக்குடி:
 மயிலாடுதுறை - மாப்படுகை - பொன்னூர் மற்றும் காளி செல்லும் சாலையில் உள்ள சிறிய கிராமத்தில் பிரதான சாலையை ஓட்டி உள்ள மிகப்பெரிய குளத்தின் கரையில் உள்ள 
ஸ்ரீ ஆனந்தபுரீஸ்வரர், ஸ்ரீ ஆனந்தவல்லியம்மன், ஆலய குடமுழுக்கு 24.03.2021.
சிறிய ஆலயம் சுவாமி சன்னதி முன்புறம் விநாயகர் மற்றும் முருகன் சிறிய சன்னதிகளும், அம்பாள் தெற்கு பார்த்து தனி கருவறை மண்டபமும், சுவாமி உள் மண்டபம், கருவறையுடன் கிழக்குப் பார்த்தும் ஏக மண்டபத்தால் ஒருங்கிணைக்கப்பட்டுள்து. மிகப் பழமையான காலத்தில் பெரிய ஆலயமாக இருந்திருக்கவேண்டும். தற்போது கிராமவாசிகளால் மீட்க்கப்பட்டு சிறிய நூதனமாக மாற்றி குடமுழுக்கு செய்வித்திருக்கின்றனர். குடமுழுக்கு 24.03.2021ல் செய்துள்ளனர்.
ஆலயம் முன்பு மிகப்பெரிய குளம் உண்டு.
24.03.2021
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

மாத்தூர்: 
1.செம்பொன்னார்கோவில் - நல்லாடை - மேல்மாத்தூர் - கீழ்மாத்தூர் வழி.
2. செம்பொன்னார்கோவில் - காளஹஸ்தினாபுரம் தெற்கில் 3 கி.மி.
ஸ்ரீ கைலாசநாதர் ஸ்ரீ ஆனந்தவள்ளியம்மன் ஆலயம்
குடமுழுக்கு 24.03.2021.

மருதவஞ்சேரி : 
பூந்தோட்டம் - நாச்சியார் கோவில் வழியில் வரும் சிற்றுர். ஊர் தெற்கில் பிரியும் சாலையில் 500 மீ.  தூரம் செல்ல வேண்டும்.  
சாலையின் இடதுபுறத்தில் அமைந்த ஆலயம். 
ஸ்ரீ மநுநீதிஸ்வரர்,   ஸ்ரீ மாணிக்க சிவகாமியம்மன் ஆலயம்.

சிறிய  ராஜகோபுரம், முன்மண்டபத்துடன் சுவாமி மேற்கு பார்த்த ஆலயம். அம்பாள் தென்புறம் நோக்கியும், அம்பாள் அருகில் பாலசுப்ரமணியர் சன்னதியுடன், அமைந்த ஆலயம்.
நந்திக்கு தனியாக சிறு மண்டபத்துடன் அமைப்பு.
கருவறையில் சுவாமி மேற்கு பார்த்தும்,
நடராஜர் கருவறை முன்மண்டபத்தில் தெற்கு பார்த்தும் உள்ளது.
ஒரே பிரகாரம்:  துர்க்கை சன்னிதி மேல் சுமார் 6 அடி உயரத்தில் தனியாக ஒரு பெரிய சுதையினால் ஒரு துர்க்கையும் அமைத்துள்ளார்கள். 
ஆலயம் உள்நுழைவில் தென்மேற்கு மூலையில் விநாயகர் தனி சன்னதி.
அழகான சிறிய ஆலயம்.
மிகத் தூய்மையான பராமரிப்பு. தனியார் ஆலயம் போன்று பராமரிக்கப்படும் அ.நி.து. ஆலயம் 
1948, 2001, 2014 ல் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றுள்ளதாகக்
குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊர் மக்களுக்கும், குருக்களும் பாராட்டப் பட வேண்டியவர்களே.
❤️🙏🙏🙏
26.03.2021
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்.
https://m.facebook.com/story.php?story_fbid=5333010480107499&id=100001957991710

கம்மங்குடி: 
பூந்தோட்டம் - நாச்சியார்கோவில் செல்லும் வழியில் வரும் மருதுவாஞ்சேரி கடைத்தெரு தெற்கில் பிரியும் சாலை உள்நுழைந்து 3 கி.மீ. சென்றால் கம்மங்குடி என்னும் சிற்றூர். இவ்வூரில் கிழக்குப் பார்த்த ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி ஆலயம். ஆலயத்தின் வலதுபுறத்தில் ஒரு பெரியகுளம், கிழக்கு கரையில் மாரியம்மன் ஆலயமும் உள்ளது.
சிவன் ஆலயம், குளத்தின் வடகரையில் இருந்தாலும்,
ஆலயம் முழுதும் மதில் சுவர் இருப்பதால், ஆலயத்தின் மேற்குப் புறத்தில் உள்ள சிறிய வழியாகத்தான் செல்ல முடியும். அருகில் விசாரித்தால், ஆலயத்தின் சாவி பெற்று தரிசிக்கலாம்.
கிழக்குப் பார்த்த ஆலயம். சுவாமி ஸ்ரீ கைலாசநாதர் கிழக்குப் பார்த்தும், தெற்கு நோக்கியபடி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியும் அமைந்துள்ளனர். ஏக மண்டபம். முன்புறம் சிறிய நந்தியும் தனி மண்டபத்தில் உள்ளார். சுற்று பிரகாரத்தில், தட்சினாமூர்த்தி, தனிவிநாயகர், முருகர், மகாலட்சுமி தனிதனி சன்னதிகள். உள் நுழைவு பாதை மிகக் சிறியதாக உள்ளன. துர்க்கை சுதையிலும், சண்டிகேஸ்வரும் உள்ளனர். சுற்றிலும் மதில் சுவர், வேலியும் போட்டு காத்து வருகின்றனர். 

சுவாமி அடிபகுதி மட்டும் கருங்கற்கள் மேல்பகுதி முழுதும் செங்கல் காங்கிரீட் சுவர். சுவர் பகுதிகள் மிகவும் பழுதடைந்து தெரித்து சிதலமடைந்து உள்ளது. அவசியம் ஊர்மக்கள் ஒன்றுகூடி புனரமைத்து வழிபட வேண்டிய சூழலில் உள்ளது.

ஒரு காலம் மட்டும் நடைபெற்று வருகிறது.
கிராமம் முழுதும் வயல்வெளி சூழலில் உள்ள எளிமையான சிற்றூர். 

 ஊர்மக்கள் மேலும் பலர் சேர்ந்து தொடர்ந்து ஒன்று பட்டு
வணங்கி வழிபட ஆலயம் மிகவும் சிறப்படையும். ஆலய வழிபாடே இவ்வுரை சிறப்புறச் செய்யும். சாலை வசதிகள் மேம்பட வேண்டும்.
26.03.2021
#சிற்றூர்_ஆலய_தரிசனம்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்.

நீலக்குடி
வண்டாம் பாளயம் - வடகண்டம் சாலை திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக Main Entrance க்கு முன்பாக வரும் ஊர். பிரதான சாலையில் திருப்பத்தில் உள்ள சிறிய சிவ ஆலயம்.
ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீ விசாலாட்சி அம்மன்.
சுவாமி சிறிய உருவம், கிழக்குப் பார்த்தும், அம்பாள் தெற்குப் பார்த்தும், சிறிய இணைப்பு முன் மண்டபம் அமைந்துள்ளது.
பிரகாரத்தில் தட்சினாமூர்த்தி, விநாயகர், சிவலிங்கம் முருகன், சன்னதிகளும், சண்டிகேஸ்வரர், துர்க்கையும் உள்ளது. 
கிராமப் பொதுமக்கள் தனியார் நிதி உதவியுடன் இவ்வாலயத்தை கட்டிமுடித்து குடமுழுக்கு செய்வித்திருக்கிறார்கள்.
26.03.2021
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்


வடகுடி
நன்னிலம் நாச்சியார்கோவில் வழியில் நன்னிலத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் வடகுடி சென்று வடக்கில் பிரியும் சாலையில் 2 கி.மீ.
சிறிய ஊர் சிறிய சிவன் ஆலயம் ஊரின் பெரியகுளத்தை ஒட்டி உள்ளது. ஒரு காலம் மட்டும். விசேஷ பூசை சமயத்தில் மட்டும் அர்ச்சகர் வருகிறார்.
அருகில் ஸ்ரீவரதராஜ பெருமாள்,
ஸ்ரீ விஜயபஞ்சமுக அனுமார் வித்தியாசமாக உள்ளர்.
சிறப்பு பூசைகள் சனிக்கிழமைதோறும் உண்டு.
நல்ல பராமரிப்பில் உள்ள சிறிய ஆலயம்.
கிழக்குப் பார்த்து பெருமாள் சன்னதியும்,
தனியே ஆஞ்சேனேயர், தெற்கு பார்த்து ஐந்துமுகங்களும் ஒரு சேர தரிக்கும் வகையில் அமைப்பு சிறப்பு.
26.03.2021
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
https://m.facebook.com/story.php?story_fbid=5337247243017156&id=100001957991710

வடகுடி :  சிவன் ஆலயம்: நன்னிலம் நாச்சியார்கோவில் வழியில் நன்னிலத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் வடகுடி சென்று வடக்கில் பிரியும் சாலையில் 2 கி.மீ.
சிறிய ஊர் சிறிய சிவன் ஆலயம் ஊரின் பெரியகுளத்தை ஒட்டி உள்ளது. ஒரு காலம் மட்டும். 
கிழக்குப் பார்த்த ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர், தெற்கு பார்த்து அம்மன் ஒரு சேர நீண்ட மண்டபம்.
கருவறை முன்பு 3 சிவலிங்கங்கள். கருவறை நிலைப் பகுதியில் ஒரு புறம் விநாயகர், மறுபுறம் முருகன் சிறிய உருவங்கள். ஒரு சுற்றுப் பிரகாரம். ராஜகோபுரம் இல்லை என்றாலும் நுழைவு மண்டபத்தில் சிறிய நந்தி சற்று உயர மேடையில் உள்ளார்.
பிரகாரத்தில் விநாயகர், தட்சினாமூர்த்தி முருகர். துர்க்கை.
ஆலயத்தின் அடுத்த புறம் நடராஜர் சபை ஊர் மக்கள் சார்பாக வைத்துள்ளனர். அடுத்து திருவள்ளுவர் மன்றமும் தனியாக உள்ளது. அருகில் பெரியகுளமும் உள்ளது.
பங்குனி உத்திர விழாவில்
28.03.2021ல் சுப்பிரமணியருக்கு வள்ளித் திருமணம் ஊர்மக்களால் கொண்டாடப்படுகிறது.

28.03.2021
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

Saturday, March 6, 2021

திருத்தல தரிசனம் 2019 சிவராத்திரி அரியலூர் மாவட்டம்: 1. செந்துறை, 2.ராயபுரம், 3.பொன்பரப்பி, 4.உடையார்பாளையம், 5.வானதிராயன்பட்டினம், 6.நாயகனை பிரியாள்

1.செந்துறை: சிவதாண்டேஸ்வரர் பெரியநாயகி அம்மன் அருள் தரும் தலம். திருப்புகழ் தலம். மிகப் பழமையான ஆலயம் சமீபத்தில் புதிய ராஜகோபுரம் பொலிவுற அமைக்கப்பட்டு மிக அற்புதமாக உள்ள தலம். ஊரின் நடுவில் உள்ள தலம்.
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
2.ராயபுரம் : இராஜகம்பீஸ்வரர் பர்வதவர்த்தினி அம்மன் அருள் தரும் ஆலயம். செந்துரை - அரியலூர் NH சாலையில் இவ்வூர் உள்ளது. ஊரிலிருந்து கிழக்கில் செல்லும் சாலையில் 1 கி.மீ அளவில் ஒரு மேல்நிலைப் பள்ளியின் பின்புறம் இக்கோவில் உள்ளது. ஒரு சிறிய அனுகு சாலை வழியாவே செல்ல முடியும் வழியில் உள்ள பெரிய தோப்பு தாண்டி செல்ல முடியும். வழியில் சிறிய கட்டிடத்தில் பெருமாள் ஆலயமும் உள்ளது. கோவில் அர்ச்கர் செந்துரையிலிருந்து தான் வருகிறார். ஒரு காலம் மட்டுமே. பிரதோஷம் உண்டு. இரவில் செல்ல இயலாது. பாதைகள் சரி செய்யப்பட்டால் தான் நல்லது. நிறைய சொத்து நிலங்கள் கோவிலுக்கு உள்ளது என்று கூறுகிறார்கள். ஆலயம் அமைப்பு: நந்திக்கு தனி மண்டபம் சுவாமி இராஜகம்பீஸ்வரர் அருமையாக உள்ளார். கருவறை யுடன் உள்மண்டபம் உள்ளது. மற்றும் ஒரு பெரிய வெளி மண்டபத்தில் பைரவர் சூரியன் அமைந்துள்ளது. ஒற்றை வெளி பிரகாரத்தில் தனி விநாயகர் சன்னதி சுப்பிரமணியர் மற்றும் இரண்டு தனி சிவன் சன்னதிகளும் சன்டிகேஸ்வரர் துர்க்கை தனியாகஅமைந்துள்ளது. தனி சன்னதி கொண்டு தெற்கு நோக்கி பர்வத வர்த்தினி அம்பாள் அருள் புரிகிறார். முழுவதுமாக உழவாரம் செய்யப்பட்டாலும். இராயபுரம் கிராம மக்கள் தொடர்ந்து வந்து தரிசித்தால் மட்டுமே சிறப்பு. நாங்கள் சிவராத்திரி (04.03.2019) என்பதால் குருக்கள் ( பட்டாச்சாரியார்) ஒருவர் வந்து இருந்தார். அபிஷேக பொருட்களை கொடுத்தோம். அன்றய உபயதார் கொடுத்திருந்த அபிஷேக பொருட்களைக் கொண்டு கடமையே கண்னாக பணிபுரிந்தார். தனி ஆளாக அவர் மட்டுமே கோவிலுக்கு வந்து தன் கடமையை செய்து வருகிறார். பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் குறைவு . இக்கோவிவில் வந்து வேண்டி சென்று பலன் பெற்ற பலர் இக்கோவிலுக்கு தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறார்கள். ஏகப்பட்ட நிலம் சொத்து இருந்தும், தொடர் பராமரிப்பு இல்லை என்பது வருத்தமாக இருந்தது. புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்து மக்கள் வந்து வழிபடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் திரும்பினோம்.
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்


3.பொன்பரப்பி : சொர்னபுரிஸ்வரர் பெரியநாயகி அம்மன் அருள் தரும் அற்புத ஆலயம். ஜெயங்கொண்டத்திலிருந்து செந்துறை வழியாக அரியலூர் செல்லும் SH சாலையில் உள்ள ஊரின் நடுவில் உள்ள ஆலயம். நன்றாக பராமரிப்பும் விழாக்களும் நடைபெற்று வரும் நல்ல ஆலயம் சில ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளதாலும், கோவில் பராமரிப்பில் உள்ளதாலும் நன்றாக உள்ளது.
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

4.உடையார்பாளையம்: மிகப் பெரிய ஆலயம் கோவிலும் குளமும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. பயரனீஸ்வரர் குகமசுந்தரி அம்பாள் சுவாமிக்கு இடதுபுறம் கிழக்கு நோக்கியதனி சன்னதி சுவாமியும் கிழக்கு நோக்கி உள்ள ஆலயம் மிகப் பெரிய கற்கோவில் . ஜமீன்தாரின் கட்டுப்பாட்டில் உள்ள மிகப் பெரிய கோவில் இரண்டு காலம் மட்டும். முன்கூட்டி சொல்லி தரிசனம் செய்ய வேண்டும். பல முறை முயற்சி செய்தும் இன்று (04.03.2019) சிவராத்திரி அன்று தரிசனம் கிடைத்தது. காஞ்சி காமாட்சி அம்மன் சிலை ஆங்கிலேயர்கள் காலத்தில் இங்கு வைத்து பூசை நடந்துள்ளது. ஒரு காலத்தில் மிக மிக சிறப்பான விழாக்களும் பூசைகளும் நடந்த கொண்டிருந்த அற்புத ஆலயமாக உள்ளது. பிரமிப்பான ஆலயம்.
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

5.வானதி ராயன்பட்டினம்: உடையார்பாளையத்திற்கு கிழக்கில் உள்ள சிறிய ஊரின் நடுவே அமைந்துள்ள சிவன் ஸ்தலம். சென்னீஸ்வரர் பெரியநாயகி அம்மன் . மிகப் பெரிய கற்கோவில் . கற்கள் வித்தியாசமான அமைப்பு கொண்டது. அனைத்து சிலைகளும் மிகவும் அற்புதமாக ஜொலிக்கின்றது. ஊர் மக்கள் ஒத்துழைப்பில் சிவராத்திரி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

6. நாயகனைப் பிரியாள் : ஊடயார்பாளயம் தெற்கு அனைக் குடம் மேற்கில் உள்ள சிறிய கிராமத்தில் உள்ள ஒரு சிவன் ஆலயம். மார்க்கசகாயேஸ்வரர் மரகதவல்லி அம்மன் அற்புத தலம். சிவராத்திரி நாளை மிகச் சிறப்புடன் பொதுமக்கள் கொண்டாடுகிறார்கள்.
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

திருத்தலங்கள் தரிசனம் 3.3.2021: செட்டிப்புலம், நாகக்குடையான், கத்திரிப்புலம்

செட்டிப்புலம் :
வேதாரண்யம் கள்ளிமேடு அருகில்
உள்ளது.
 அவரிக்காடு, கத்தரிப்புலம், காரியாப்பட்டிணம் இவ்வூர்களின் நடுவில் உள்ள எளிமையான சிற்றூரில் அமைந்துள்ள ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர், ஸ்ரீ காமாட்சியம்மன் ஆலயம், ஊர்மக்கள் ஒன்று கூடி சிறப்புடன் 3.3.2021 அன்று குடமுழுக்கு செய்வித்தனர்.
ஆலயம் கிழக்குப் பார்த்தது. ராஜகோபுர நுழைவுவாயில், நந்திக்கு தனி மண்டபம். அம்பாள் தெற்கு நோக்கியும், சுவாமி கிழக்கு ப் பார்த்தும், தனித்தனி சன்னதிகளை இணைத்து ஓர் மண்டபம்.
வினாயகர், பூமிநாதர், வள்ளிதெய்வானை சுப்ரமணியர், மகாலெட்சுமி, சண்டிகேஸ்வரர், தனித்தனி சன்னதிகள், கிழக்கு புறம், நவகிரகம், பைரவர், சூரியன், சந்திரன் சன்னதிகள்.
சிறிய ஆலயமாக இருந்தாலும், சிறப்புடன் வழிபாடு நடைபெறுகிறது.
3.3.2021.
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

நாகக்குடையான் :
வேதாரண்யம், கத்தரிப்புலம் அருகில் உள்ள சிற்றூர்.
ஸ்ரீனிவாசப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மற்றும் பள்ளிகொண்டு காட்சியளிக்கும் ஸ்ரீரெங்கநாதர்.
தனி ஆஞ்சனேயர், தனி கெருடர்,
ஏகத்திற்கும் சேர்த்துஒரே பெரிய மண்டபம்.
3.3.2021
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

கத்தரிப்புலம் : வேதாரண்யம் அருகில் உள்ள சிற்றூர்.
வேதாரண்யம் - காரியாப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி வழியில் கோவில் குத்தகை என்ற இடத்திலிருந்து சுமார் 500 மீ.தூரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காசிநாதர், ஸ்ரீவேதநாயகியம்மன் சிவன் ஆலயம். 
சாலையின் முக்கியசந்திப்பில் ஒரு விநாயகர் ஆலயம் நன்கு பராமரிப்பில் உள்ளது.
அடுத்து ஆலயம் முன்பு பெரியகுளம் உள்ளது.
ஆலயம் கிழக்கு நோக்கியது.
ராஜ கோபுரம் இல்லாவிட்டாலும். ஆலயம் சுற்றி Compound உள்ளது.
உள் அமைப்புகள் அத்தனையும் தெரியும் அளவில் ஆலயம் நடுத்தர பரப்பில் விரிந்துள்ளது.
சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன்,
நவகிரகம், பெருமாள் தனி தனி மண்டபம், சன்னதிகள்.
சுற்றி வர நல்ல சிமென்ட் கல்பாதை உள்ளது.
ஒரு கால பூசை .
சற்று தூரத்தில் வீடுகள் இருப்பதால் அவ்வப்போது சிலர் மட்டும் ஆலயம் வருகிறார்கள் என்று தோன்றுகிறது. ஆனாலும், பராமரிப்பில் உள்ள ஆலயமாக இருக்கிறது.
3.03.2021
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்