Thursday, February 18, 2021

நாக தோஷ பரிகார தலங்கள்: காத்திருப்பு,செம்மங்குடி, கோடங்குடி, திருக்களாச்சேரி

நாக தோஷ பரிகார தலங்கள் : காத்திருப்பு:
 சொர்ணபுரீஸ்வரர் சொர்ணபுரீஸ்வரி அம்பாள் திருத்தலம். காரைக்கால் - சீர்காழி வழித்தடத்தில் உள்ள தலம். சுந்தரர் பொருள் கேட்பார் என்று சிவன் ஒளிந்தது போல இருக்க அம்பாள் அருளால் சுந்தரர் பொருள் பெற்ற தலம். வைப்புத் தலம். வாசுகி நாகம் வணங்கி பேறு பெற்ற தலம் சில ஆண்டுகளுக்கு முன் ஆலய பராமரிப்பு பணி செய்த போது கிடைத்த ராகு கேது ஒரே வடிவத்தில் சிலாரூபமாக அமைந்தது. ராகு கேது பெயற்சி குருக்கள் மற்றும் ஊர் பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாங்கூர் 11 சிவாலயங்களில் ஒன்று.

2
நாக தோஷ பரிகார தலங்கள் : செம்மங்குடி:
சீர்காழியிலிருந்து கிழக்கில் திருக்குருகாவூர் வெள்ளடை மற்றும் திருமுல்லைவாயில் செல்லும் வழியில் உள்ள சிறிய கிராமம் செம்மங்குடி நாகநாதர் ஆலயம் வைப்புத் தலம் சிவாலயம். ஒரு காலம் பூசை. அருகில் உள்ள ஒரு வீட்டில் சாவி கேட்டு பெற்று தரிசிக்கலாம்.


3
நாக தோஷ பரிகாரத் தலங்கள் : கோடங்குடி:
  கார்கோடகநாதர் மயிலாடுதுறை - நல்லத்துக்குடி வழி கோடங்குடி. 2. பொறையார் - மங்கநல்லூர் பாதையில் பெரம்பூர் (ஸ்ரீ சுப்பிரமணியர் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் - வைப்புத் தலம் அருணகிரிநாதர் திருப்புகழ் தலம்) தரிசித்துப் பின் வடக்கில் கடகம் சென்று கோடங்குடி செல்லலாம். மிகவும் புராதான ஆலயம்.

4நாக தோஷ பரிகாரத் தலங்கள் :
திருக்களாச்சேரி:
பொறையாறு க்கு மேற்கில் 5 கி.மீ நாகநாதர் ஆலயம். அம்பாள் குறா மரமாக இருந்து சுயம்பு நாகநாதரை வழிபட்டதாக புராணம்